என் நாதன் தேவிக்கு அன்று இன்பப் பூ ஈயாதாள்
தன் நாதன் காணவே தண் பூ மரத்தினை
வன்னாத புள்ளால் வலியப் பறித்திட்ட
என் நாதன் வன்மையை பாடிப் பற
எம்பிரான் வன்மையை பாடிப் பற -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி- 3-9-1-
என் நாதன் தேவிக்கு–ஸ்ரீ மா முனிகள் வியாக்யான ஸ்ரீ ஸூ க்திகள் –
என் நாதன் தேவிக்கு
என்னுடைய நாதனாவனுடைய தேவிக்கு நாதன் -என்கிறது –
சேஷி என்றபடி
ஸ்வரூபத்தை உணர்ந்தால் எல்லார்க்கும் தனித் தனியே -என் நாதன் என் நாதன் –
என்னலாம் படி இறே வஸ்துவோட்டை ப்ராப்தி இருக்கும் படி –
இவ் வாத்மாவினுடைய சேஷத்வம் தான் -கேவலம் அவன் அளவு அன்றிக்கே
மிதுன விஷயமாய் இறே இருப்பது
ஆகையால் இறே -என்னாதன் தேவிக்கு -என்றது –
விஷ்ணு பத்நீம் -என்கிறபடியே
இவளுக்கு நிரூபகம் -அவனுடைய தேவி -என்னும் அது இறே
தேவி-என்கையாலே
சத்ய பாமை பிராட்டி உடைய வால்லப்யம் சொல்லுகிறது-
———
என் நாதன் தேவிக்கு –ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை ஸ்வாபதேச வியாக்யான ஸ்ரீ ஸூ க்திகள்
பிராட்டிமாருடன் உண்டான சம பாவத்தாலும்
மிதுனச் சேர்த்தி ப்ராதான்யத்தாலும்
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன் -என்னுமா போலே
என் நாதன் -என்று
அவன் தனக்கு சேதன விசேஷண நிரூபகமான பின்பு இறே
நாதன் தேவிக்கு -என்றது
(பிரணவம் போல்-அகாரத்துக்கே மகாரம் – நாதனுக்கு அடியேன் என்னாமல் –
என் என்று முன்னே சொல்லி
அவனுக்கு சேதனன் சேஷபூதன் என்று நிரூபகம் என்கிறார் )
உன் திரு (மார்பத்து மாலை நங்கை -10-10-நாதன் தேவி )என்னுமா போலே
ஆகிய அன்பே -என்று
ஆஸ்ரயம் தோற்றியும் தோற்றாததுமாய் இரா நின்றது இறே
(கோல மலர் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ –
அன்பன் -என்றால் அன்பு வேறே அன்பு உடையவன் வேறே
என்றாகும் அன்பே வடிவாக உடையவன் என்று காட்ட வேண்டுமே )
————
‘என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்;‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நில மகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய் மகள் அன்பனே!’ என்னும்;
தென் திரு அரங்கம் கோயில் கொண்டானே! தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–ஸ்ரீ திருவாய் மொழி -7-2-9-
என் திரு மகள் சேர் மார்பனே என்னும் –ஸ்ரீ ஈட்டு ஸ்ரீ ஸூக்திகள்
என் பேற்றுக்குப் புருஷகாரம் இல்லாமல் இழக்கிறேனோ?’ என்னும்.
‘என்’ என்பது -விசேஷ அம்சத்தில் -திரு மகளுக்கு அடைமொழி.
விசிஷ்டத்தில் -மார்பனுக்கு அடைமொழி ஆக்கலாகாது.
அனந்தாழ்வான் தன் பெண் பிள்ளையை‘என் திருமகள்’ என்று திரு நாமம் சாத்தினான்.
பட்டர், பெருமாளிடத்தில், ‘அடியேனை ‘ஸ்திரீதனமாகப் பிராட்டிக்கு வந்தவன்’ என்று திரு வுள்ளம் பற்றவும்;
நானும், ‘இவர் எங்கள் நாய்ச்சியார்க்கு நல்லர்’ என்று அவ் வழியே
‘அழகிய மணவாளப் பெருமாள்’ என்று நினைத்திருக்கவுமாக வேணும்,’ என்று வேண்டிக் கொண்டார்,
‘சேர் மார்பன்’
என்பது, நிகழ் கால வினைத் தொகையாலே ரஹஸ்யத்தில் நித்ய யோகத்தைச் சொல்லுகிறது: என்றது,
அவள் ஒரு ஷணம் பிரிய இருக்கில் அன்றோ எனக்குப் பேறு தாழ்க்க வேண்டுவது?’ என்கிறாள் என்றபடி.
பெருமாளுக்கு விண்ணப்பம் செய்யுமவை கேட்கைக்காக நஞ்சீயரை அழைத்தருளித் தாம் அமுது செய்யா நிற்கச் செய்தே
இத் திருவாய் மொழி இயலைக் கேட்டருளா நிற்க, இப் பாட்டளவில் வந்தவாறே
‘என் திருமகள் சேர் மார்பனே! என்னும்; என்னுடைய ஆவியே என்னும்’ என்று இயலைச் சேர்த்து அருளிச் செய்ய,
அதனைக் கேட்டுக் கையை உதறி, ‘ஸ்ரீரங்க நாத’ என்று அணையிலே சாய்ந்தருளினார் பட்டர்’ என்று அருளிச் செய்வர்.
அப்போது திருமேனியிலே பிறந்த விக்ருதியை -வேறுபாட்டினைக் கண்டு,
‘இவர்க்குப் பகவானை அடைவது -பிராப்தி -அணித்தாகிறதோ?’ என்று அஞ்சி யிருந்தேன்,’ என்று ஜீயர் அருளிச் செய்வார்.
இவர்க்குப் பிரமாணம் ஒரு வாயு -காற்று விசேஷம் அன்று: ஒரு மிதுநமாயிற்று.
‘திரு மகள் சேர் மார்பனாய்க்கொண்டு எனக்குத் தாரகனானவனே!’ என்னும்.
—————
மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –10-10-2-
உன் திரு மார்வத்து மாலை நங்கை–ஸ்ரீ ஈட்டு ஸ்ரீ ஸூக்திகள்
நித்யைவ ஏஷா ஜகத்மாதா விஷ்ணோ ஸ்ரீ அநபாயிநீ
யதா சர்வகதா விஷ்ணு ததைவ இயம் த்வ்ஜோத்தம -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-17
விஷ்ணுவுக்கும் செல்வமாய் இருப்பவள் -என்கிறபடியே
உலகத்துக்கு எல்லாம் சம்பத் -செல்வம் அவன் -அவனுக்கும் சம்பத் செல்வம் இவள் –
அன்றிக்கே
விஷ்ணுவுடைய திரு -என்றபடி
உன்னுடைய செல்வம் -என்னுதல்
திருவுக்கும் திருவாகிய செல்வா -பெரிய திருமொழி -7-7-1-என்றும்
ஸ்ரிய ஸ்ரீயம் பக்த ஜனைக ஜீவிதம்
சமர்த்ததம் ஆபத்சகம் அர்த்தி கல்பகம் -ஸ்தோத்ர ரத்னம் -45-
தாம் ஸ்ரீ இதி த்வத் உபசம்ஸ்ரயநாத நிராஹூ-ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -29
திருமகளாலே சர்வேஸ்வரன் தெய்வத் தன்மையை அடைகிறான் –
யாவர் ஒருவனுக்கு அந்த ஜனக ராஜன் குலத்தில் பிறந்த பிராட்டி மனைவியாய் இருக்கின்றாளோ
அவருடைய ஆற்றல் அளவிட்டு அறியக் கூடாததாய் இருக்கிறது -என்கிறபடியே
ஆதாரப் பிரதானமாய் இருத்தல்
ஆதேயப் பிரதானமாய் இருத்தல் –
ஆதேயத்துக்கு ஆதாரத்தை ஒழிய உளதாம் தன்மையும் இல்லை
நிரூப்யத்துக்கு நிரூபகத்தை ஒழிய ஸ்வரூபத்தின் நிலை இல்லை –
ஒன்றை ஓன்று ஒழியில் ஸ்வரூபம் நிலை பெறுதல் இல்லை –
தன் ஆகத் திரு மங்கை தங்கிய திரு மார்வன் -நாச்சியார் திருமொழி -8-4-
தான் உளன் ஆகைக்காக -தன் சத்தை பெறுகைக்காக
நித்ய யுவதியான பெரிய பிராட்டியார் நித்ய வாசம் செய்யும் வீறு உடைய திரு மார்பு –
சிரஞ்ஜீவதி வைதேஹி யதி மாசம் தரிஷ்யதி
ந ஜீவேயம் ஷணம் அபி விநாதாம் அஸி தேஷணா-யுத்தம் -66-10-
பிராட்டியைப் பிரிந்தால் ஒரு ஷண நேரமும் உய்யேன் -உளேன் என்கிறபடியே –
மார்வத்து மாலை –
கேவலம் சம்பத்தாய் -செல்வமாய் இருக்கை அன்றிக்கே திரு மார்புக்கு அலங்காரமாய் இருக்கை –
மார்புக்கு அலங்காரம் அவள்
அவளுக்கு அலங்காரம் மார்பு –
ந தே ரூபம் நா ஆகார ஆயுதானி நச ஆஸ்பதம்
ததாபி புருஷாகார பக்தாநாம் த்வம் பிரகாசசே -ஜிதந்தே -5
அடியார்களுக்காகவே தேவரீர் உடைய ஸ்வரூபம் திரு மேனி
அடியார்களுக்காகவே பிரகாசித்துக் கொண்டு இருக்கிறீர் -என்றபடி –
நங்கை-
வடிவு ஒழிய-மற்றை ஸ்வரூபம் குண விபூதிகளும் -அவளாலே என்கை-
பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம் சாஸ்வதம் சிவம் அச்யுதம் –
உலகங்கள் எல்லாவற்றுக்கும் தலைவன் -என்கிறவனுக்கும் இவள் நினைவால்
பொறி புறம் தடவ வேண்டும்படி இருக்கை –
பிரமன் சிவன் மற்றையோரைக் காட்டிலும் வ்யாவ்ருத்தி -வேறுபாடு இத்தனையுமே அன்றோ
ஸ்ரீ மானுக்கு -திருவாளனுக்கு -நஸ் ஸ்ஸ்ரீகர் -திரு இல்லாதவர் -சத்ருசர் -ஒப்பு ஆகார் அன்றோ –
ஜ்ஞானமே வடிவாக இருத்தலில் ஒற்றுமை
நரநாரீ மயோ ஹரி -பெருமானும் பிராட்டியும் சேர்ந்த உருவமே ஹரி என்னும் பொழுது
உன்னுடைய திரு -என்பது ஆதார பிரதானமாக இருத்தலால் –
வாசம் செய் பூங்குழலாள் –
நாற்றத்துக்கும் நாற்றம் கொடுக்கும் குழல்
சர்வகந்த -என்பவனுக்கும் பரிமளம் -நாற்றம் கொடுக்கும் குழல்
சர்வ கந்த -என்னும் ஏற்றம் அவனுக்கு இத் தலையாலே காணும் அவனுக்கு வந்தது
இத் தலை மயிராலே ரசோக்தியாக அருளிச் செய்கிறார்
பூங்குழல்
பூவை உடைத்தான குழல் -என்னுதல்
அழகிய குழல் -என்னுதல்
——————
கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7–
கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ –ஸ்ரீ ஈட்டு ஸ்ரீ ஸூக்திகள்
பிராட்டி பக்கல் உள்ள ஸ்நேஹ அதிசயத்தாலே -அன்பின் மிகுதியாலே
அந்த ஸ்நேஹமே -அன்பே காரணமாக அவளால் அங்கீ கரிக்கப் பட்ட-அவள் பரிக்ரஹமான –
என் பக்கலிலே மிக்க அன்புள்ளவன் ஆனவனே
பட்டர் தம்முடைய அந்திம தசையில் அருளிச் செய்த வார்த்தை
பெரிய பிராட்டியார்க்கு அன்பன் ஆகையாலே
அவளால் அங்கீ கரிக்கப் பட்ட நமக்கும் அன்பனாம் என்று
இப்பாட்டினை-நம்முடையார் த்வயத்தின் அர்த்தத்தோடு அனுசந்திப்பார்கள் -என்பது
திரு மால் என்னை ஆளும் மால் -10-7-6-என்னும்படியே
தம்முடைய அன்புக்கு அடி சொல்லுகிறார் –
அந்தப்புரத்தைச் சார்ந்தவன் அன்றோ – என் அன்புக்கு அடி இல்லையோ –
————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply