சதுர் யுகங்களில்”-கிருத யுகம்-தவம்; திரேதா யுகம்-யாகம்; துவாபர யுகம்-பாத சேவை; கலி யுகம்-நாம சங்கீர்த்தனம்
“ஸ்ரீ ராம” என்று நினைக்க, சொல்ல, எழுத புண்ணியம் பல செய்து இருக்க வேண்டும்
நாமத்திற்காகவே படைக்கப்பட்டுள்ளோம்-நாமம் “சொல்லல், கேட்டல், நினைத்தல்” மூன்றும் ஒன்றே.
கலியுகத்திற்கு உகந்தது நாம தர்மமே.
கலியுகத்தில் நாம தர்மமே தர்மங்களுக்கு ராஜா.
பகவான் நாமம் சொல்ல குரு கூட தேவை இல்லை, பகவான் நாமமே குரு.
பகவான் நாமங்களுக்குள் வேறுபாடு இல்லை, பகவானும் பகவான் நாமமும் ஒன்றே. நாமத்தை ஆஸ்ரயிப்பவன் வீணாகமாட்டான்.
நாமம், பாதை “மீறிவர்க்கும்-தவறிவர்க்கும்” மருந்து, சரியான பாதையில் செல்பவருக்கு விருந்து.
நாமம், “பாதை மீறிவர்க்கும் தவறிவர்க்கும்” வழி காட்டும்
எல்லா நாமமும் பர பிரும்மத்தின் நாமமே, நாமம் சரியான நேரத்தில் ஞானத்தை அளித்து விடும்.
பகவானின் மிக சமீபத்தில் இருப்பது நாமம்.
நாமத்துடன் எழுவீர், பணியின் “தொடக்க-இடை-இறுதியில்” நாமத்துடன் இணைவீர்.
நாமத்துக்கு விலக்கு இல்லை.
நாம் ஆராதனை செய்யும் பகவான் நாமம், நம்மை ஆதரிக்கும்
நாம நிதி பெருக, நம் நிதியும் பெருகும்.
நாமம் தாய்-தந்தை போன்றது.
நாமம் தாய் குலத்தையும் தந்தை குலத்தையும் கரை சேர்க்கும்.
பவரோக அருமருந்து நாமம்.
சாஸ்திரங்களின் முடிவு நாமம்.
நான்கு லஷம் கோடி ஜன்மாக்கள் எடுத்து வேத-அத்யானம், யோகம், யாகம், தீர்த்தாடனம், பூஜை,
ஸ்வ தர்ம அனுஷ்டானம் என செய்து இருந்தால் தான் வாயில் ஒரு “ராம” நாமம் வரு்ம்.
நாம தர்மம் பயத்தை போக்கி மோஷத்தை தரும்.
காமதேனு, சிந்தாமணி, கல்பக விருட்சம் எதையும் கொடுக்கும், ஆனால் நாம-தர்மம், நல்லதையே தரும்.
நாமம் சொன்னால் பகவானே வந்து விடுவார்
சொல்பவரின், “ஜாதி, மதம், தரம், இடம், காலம்”, பேதமற்றது நாமம்.
நாமமே சரணாகதி, உலகுக்கு ஜீவன் வரும் போதும் போகும் போதும், நாமம் சொல்லலாம்.
நாமத்தால், புத்தி, மனம், தெளிவு பெற்று திருப்தி அடையும்.
நாமத்தால் தீர்க்க முடியாத பாவங்கள் இல்லை.
நாமத்தை எந்த அசுத்தமும் தீட்டும் பாதிக்காது.
நாமம் துன்பத்தை விலக்கும், நல்லதை தரும், அமைதி பிரேமை வளர்க்கும்
நாமத்தை, எண்ணுவதை விட, எண்ணுவது சிறப்பு.
நாமத்தால் அடைய நாமமே சாதனம்.
நாமம்,நிந்திப்பவனையும்-நாத்திககனையும் காப்பாற்றும்.
ஸ்ரீ ராம நாமம்; தாரகம் மந்திரம்.
‘ஸ்ரீ ராம’ என்று கடலைக் கடந்த ஸ்ரீ அநுமான்
சிரஞ்சீவி வாயு புத்திரன் ஸ்ரீ அநுமான். ஸ்ரீ இராமனின் அடிமையான சேவகன். ஸ்ரீ ராம நாமமே அவரின் உயிர் மூச்சு.
ஸ்ரீ ராம நாமம், ஸ்ரீ ராம பாணத்தைவிடச் சிறந்தது என்று நிரூபித்தார்.
‘ராம’ என்று ஸ்ரீ சேது அணை கட்டிய வானரங்கள்
ஸ்ரீராமஜெயம்: அநுமான்-சீதைக்கு, இராமனின் வெற்றியை சுருக்கமாக தெரிவித்தது
“மரா” என்று உச்சரித்து “ராமா” என்று ராமாயணம் இயற்றிய ஸ்ரீ வால்மிகி.
ஸ்ரீ வால்மீகியை ஸ்ரீ ராமாயண காவியம் எழுத அவருக்கு ஞானத்தை கொடுத்ததும், “ஸ்ரீ ராம” நாமம்.
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே
ஸ்ரீ ராம நாம வரானன ஓம் நம இதி…..ஸ்ரீ ராம:3 Times=1000”
ஸ்ரீ ராம = (ரா=2; ம=5) இரண்டை ஐந்தால் பெருக்கினால் பத்து (2 x 5 = 10); ஸ்ரீ ராம என்ற சொல்லுக்குரிய எண் 10,
ஸ்ரீ ராம, ஸ்ரீ ராம, ஸ்ரீ ராம என்று மும்முறைகள் சொன்னால், அதற்குரிய எண் 10 x 10 x 10 அதாவது ஆயிரம்.
ஸ்ரீ ராம= 2 × 5 = 10; ராம என்ற வார்த்தையை மூன்று முறை சொன்னால் ஆயிரத்திற்குச் சமமாகும்.
மூன்று முறை 1000 x1000 x1000=1000000000 =10 லட்சம்
“ஸ்ரீ ராம” நாமத்தை ஒரு லட்சத்து எண்ணூறு (1,00,800) முறை சொன்னால் (மேலும் எழுதினால் One Book)
என்ன கணக்கு என்பதை நினைத்து பார்க்க வேண்டும்
“ஸ்ரீ விஷ்ணு காயத்ரி”-ஸ்ரீ நாராயணா, வாசுதேவ, விஷ்ணு
ஓம் நாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத்
‘ஸ்ரீ நாராயண‘ என்ற வாக்கியத்தில் “ரா”வை நீக்கினால் ‘நாயணா’ அதாவது நா+அயணா என்று மாறும்.
அயணம்=மோக்ஷம், கதி . நா=இல்லை எனவே மோக்ஷம் இல்லை என்று பொருள் கிடைக்கும்.
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்,
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் – அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே–பால காண்டம்-29(கம்பர்)-ஸ்ரீ கம்பராமாயணம் (கடவுள் வாழ்த்து)
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும பாவமும் சிதைந்து தேயுமே
ஜன்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே
‘ராம’ என்ற இரண்டு எழுத்தினால்
மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை ராமன் என்னும்
செம்மை சேர் நாமம் தன்னை கண்களில் தெரியக் கண்டான்
சிவனோ அல்லன் ,நான்முகனோ அல்லன் ,திருமாலாம்
அவனோ அல்லன் ,செய்தவம் எல்லாம் அடுகின்றான்
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன்,
இவனோ அவ்வேத முதல் காரணன்–ஸ்ரீ இராமனைக் கண்டு வியந்த இராவணன்
நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீ டியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை
சூடிய சிலை ராமன் தோள்வலி கூறுவார்க்கே.–ஸ்ரீ ராம நாம பலன்
ஸ்ரீ ராமன் எத்தனை ஸ்ரீ ராமன்:
ராமன்; அனந்தராமன், பரசுராமன்; ரகுராமன்; தசரதராமன்; கோசலராமன்; கோதண்டராமன்;
கல்யாணராமன்; சீதாராமன்; ஜானகிராமன்; வைதேகிராமன்; ஸ்ரீராமன்; சேதுராமன்; ஜெயராமன்;
சிவராமன்; முத்துராமலிங்கம், முத்துராமன், அயோத்திராமன்; பட்டாபிராமன்; ராஜாராமன், ராமசந்திரன்,
ராமகிருஷ்ணன், ராமநாதன், ராமலிங்கன்; சுந்தரராமன், சாய்ராம்; பலராமன், வெங்கட்ராமன்; சாந்தாராமன்
ஸ்ரீ ராம குல பரம்பரை
ஸ்ரீ திருமால்–பிரம்மா—மரீசி—-காஸ்யபர்—சூரியன்—மனு—இக்ஷ்வகு—குக்ஷி—விகுக்ஷி—பாணு–அரண்யகன்—விருது—
திரிசங்கு—துந்துமாரன்—மாந்தாதா—சுசந்தி—துருவசந்தி—பரதன்—ஆஷிதன்—சாகரன்—அசமஞ்சன்—அம்சமந்தன்—திலீபன்—
பகீரதன்—காகுஸ்தன்—ரகு—பிரவருத்தனன்—சங்கன்—சுதர்மனன்—அக்நிவர்ணனன்—சீக்ரவேது—மருவு—பிரஷீக்யன்—
அம்பரீஷன்—நகுஷன்—யயாதி—நாபாகு—அஜன்—தசரதன்—ராமன்.
அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த,
பரதன் வெண் குடை கவிக்க, இருவரும் கவரி பற்ற,
விரை செறி குழலி ஓங்க, வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான், மௌலி
—————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply