ஸ்ரீ நம் ஆழ்வார் அனுபவிக்கும் ஸ்ரீ நம் ஆழ்வார் -திருவாய் மொழி முதல் பத்து —
பல சுருதி பாசுரங்களைப் பார்த்து அறிகிறோம் –
பரன் அடி மேற் குருகூர்ச் சடகோபன் –1-1-11-
வால் மீகிர்ப் பகவான் ருஷி:என்பது போன்று ஆப்திக்கு உடலாக அருளிச் செய்கிறார்.
சேர்த் தடத் தென் குருகூர்ச் சடகோபன் –1-2-11-
ஹிதம் -நன்மை சொல்ல என்று இழிந்து அஹிதத்தை -தீமையைச் சொல்லுவான் ஒருவன் வார்த்தை அன்று;
ஆப்த தமரானவர் வார்த்தை என்கை.
அமர் பொழில் வளங் குருகூர்ச் சடகோபன்-1-3-11-
சேர்ந்த பொழில்.–வளப்பத்தை யுடைத்தான திருநகரி
எல்லாம் நிறைந்த இறைவன் விஷயத்தில் -பூர்ண விஷயத்தில் வாசிகமான விருத்திக்கு –சொற்களைக் கொண்டு
செய்யும் அடிமைக்கு மேற்படச் செய்யலாவன இல்லையே!
வள வயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன்-1-4-11-
அகால பலிநோ வ்ருஷ ( ‘மரங்கள் காலம் அல்லாத காலங்களிலும் பலத்தையுடையனவாய் இருந்தன,’ )என்கிறபடியே,
ஸ்ரீ திரு நகரியும் தளிரும் மொட்டுமாகவே எப்பொழுதும் இருக்குமாயிற்று.
மாலே ! மாயப் பெருமானே! மா மாயவனே ! என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்-1-5-11-
மாலே-ஸ்வரூபத்தால் வந்த விபுத்வம் உயர்வு.
மாயப் பெருமானே –குணத்தால் வந்த விபுத்வம் – உயர்வு.
மா மாயவனே –சேஷ்டிதங்களால் -செயல்களால் வந்த -ஆதிக்யம் -மேன்மை.
என்று என்று மாலே ஏறி – ஏவம் விதமான -இவ்விதமான வைலக்ஷண்யத்தை நினைத்து,
‘நான் அயோக்கியன்’ என்று அகலும்படி பிச்சு ஏறி,
தன்னை முடித்துக் கொள்வதாகக் கழுத்திலே கயிற்றை இட்டுக் கொண்டவனை அறுத்து விழ விடுவாரைப் போன்று,
அகன்று முடியப் புக்க இவரைப் பொருந்த விட்டுக் கொள்ள, அவன் அருளாலே பொருந்தின ஸ்ரீ ஆழ்வார்
பிடி தோறும் நெய் ஒழியச் செல்லாத ஸூகுமாரரைப் போன்று, நின்ற நின்ற நிலைகள் தோறும் இறைவன் திருவருள் ஒழிய
நடக்க மாட்டாதவர் ஆதலின், ‘மால் அருளால் மன்னு சடகோபன்’ என்கிறார்.
மாதவன் பால் சட கோபன் தீ தவம் இன்றி உரைத்த
ஏதமில் ஆயிரத்து இப் பத்து ஓத வல்லார் பிறவாரே–1-6-11-
மாதவன் பால் சடகோபன் தீது அவம் இன்றி உரைத்த ஏதம் இல் ஆயிரத்து இப் பத்து-
தீது -அவம் -ஏதம் –
இதனை, ‘தீது இல் மாதவன் பால், அவம் இன்றி இருக்கின்ற சடகோபன் உரைத்த, ஏதம் இல் ஆயிரம்’
என்று சொற்களைக் கொண்டு கூட்டி,
பிரபந்தத் தலைவன் குற்றம் இல்லாதவன் என்றும்,
பிரபந்தத்தை அருளிச் செய்தவர் குற்றம் இல்லாதவர் என்றும்,
பிரபந்தம் குற்றம் இல்லாதது என்று பொருள் அருளிச் செய்தனர் முன்னைய பெரியோர்.
ஸ்ரீ பட்டர், அவ்வாறு அன்றி, ‘ஏதம் இல் ஆயிரம்’ என்று பிரபந்த லக்ஷணம் கூறிய போதே,-
த்ரிவித தோஷ ராஹித்யம் – முக்குற்றங்கள் இல்லாமையும் சொல்லியதாம்;
இனி, தீதும் அவமும் என்பன செய்வன என்?’ என்னில்,
‘சடகோபன் மாதவன் பால் தீது அவம் இன்றி உரைத்த’ என்று கூட்டிப் பொருள் கொள்க,’ என்று அருளிச் செய்தார்.
அதாவது, தீதாவது, ‘நான்-ஸ்ரீ யப்பதி திருமகள் கேள்வன் அல்லனோ!’ என்று தன் மேன்மையைப் பார்த்துக் கடக்க இருக்குமது.
அவமாவது, ‘ஆஸ்ரயிக்கிறவன் அடைகின்றவன் நித்திய சம்சாரி அல்லனோ!’ என்று இவன் சிறுமையைப் பார்த்துக் கை விடுமது.
இவை இல்லாமையைச் சொன்ன இப் பத்து என்றபடி.
குடைந்து வண்டு உண்ணும் துழாய் முடியானை அடைந்த தென் குருகூர்ச் சடகோபன்-1-7-11-
தேனைக் குடிப்பதற்கு இழிந்த வண்டுகளானவை பெருங்கடலிலே இழிந்தாரைப் போன்று உள்ளே உள்ளே
இடங்கொண்டு குடித்தலை அன்றி,மது வற்றிக் கை வாங்க ஒண்ணாதபடி இருக்கிற திருத் துழாய் மாலையாலே
அலங்கரிக்கப் பட்ட திருமுடியை யுடையவனை.
அம் மதுவிலே படிந்த வண்டுகள் விடமாட்டாதவாறு போன்று, பகவத் விஷயத்தை விடமாட்டாத ஆழ்வார்
நீர் புரை வண்ணன், சீர் சடகோபன்-1-8-11-
நீரோடு ஒத்த தன்மையை யுடையவனுடைய ஆர்ஜவ குணத்தை.
ஆர்ஜவ குணமாவது, சம்சாரிகள் விலங்கிப் போனது தனக்கு வழியாம் படி தான் செவ்வியனாகை.
ஆக, இத் திருவாய்மொழியில் அருளிச் செய்தது சர்வேஸ்வரனுடைய ஆர்ஜவ குணம் என்பது போதரும்.
இவ் வார்ஜவ குணத்திற்கு இலக்கான ஆழ்வார்-இவ் வர்த்தத்தைக் கடக்க நின்ற ஒருவர் அல்லர்,
உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவருக்குக் கண்ண பிராற்கு
இச்சையில் செல்ல யுணர்த்தி வண் குருகூர்ச் சடகோபன்-1-9-11-
பூமி இல்லை -என்று-என் உச்சியுள்ளே வர்த்தியா நின்றான்
என் உச்சியுள்ளே நிற்கையாலே தேவ தேவன் ஆனான்-இனி அவ்வருகு போக்கில்லை
அயர்வரும் அமரர்கள் அதிபதியாய் இருக்கிற இருப்பையும் நினைக்கிறிலன்-உபகார சீலனான ஸ்ரீ கிருஷ்ணனுக்கு
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்குத் தம் பக்கல் உண்டான இச்சையைத் தாம் அறிந்த படியை அவன் திரு உள்ளத்திலே படும்படி உணர்த்தி
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அறிவித்த அளவு அன்றிக்கே சம்சாரிகளும் அறியும் படி பண்ணின உதாரரான ஸ்ரீ ஆழ்வார்
மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர் அணியைத் தென் குருகூர்ச் சடகோபன் சொல் பணி செய் ஆயிரம்–1-10-11-
மணியை-முந்தானையிலே முடிந்து ஆளலாம்படி கைப் புகுந்திருப்பான் என்று அவனுடைய சௌலப்பியத்தைச் சொல்லுகிறார்.
‘தென் குறுங்குடி நின்ற’ என்கிற இடத்தில் சௌலப்பியம்.
வானவர் கண்ணனை –இதனால், ‘உம்பர் வானவர் ஆதியம் சோதி’ என்கிற மேன்மையைச் சொல்லுகிறார்.
தன்னதோர் அணியை-இதனால் ‘அச் செம் பொனே திகழும் திரு மூர்த்தி’ என்கிற வடிவழகை நினைக்கிறார்.
இம் மூன்றுங்கூடின பசுங்கூட்டே பரத்துவம் எனப்படுதலின், இவற்றை ஈண்டு ஒரு சேர அருளிச் செய்கிறார்.
தென் குருகூர்ச் சடகோபன் சொல் பணி செய் ஆயிரம் –
ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்ததாய் ‘நாம் இங்குத்தைக்குக் கிஞ்சித்கரித்தோம் ஆக வேண்டும்’ என்று,சொற்கள் தாம்
‘என்னைக் கொள், என்னைக் கொள்’ என்று ‘மிடைந்தசொல்’ என்கிறபடியே,சொற்கள் பணி செய்த ஆயிரம் பாசுரங்கள்.
இனி, ‘சொல் பணி செய் ஆயிரம்’ என்பதற்கு,
‘சொற்களால் பணி செய்த ஆயிரம்; அதாவது, வாசிகமான அடிமையைச் சொல்லுதல் –
——————-——————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply