ஸ்ரீ திரு விருத்தம் -91-100–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

இங்கே கிடந்தது காலம் நெடுகா நின்றது -குறுகா நின்றது என்னா -ஆழம் கால் படா நில்லாதே-நாங்கள் கண்டீரே –
புறம்புள்ள விஷயங்களிலே தரித்து -காலம் குறுகுதல் நெடுகுதல் செய்தாலும்-சுகுத்து திரிகிறோம் –
அப்படியே நீரும் பகவத் விஷயத்திலே நின்றும் நெஞ்சை மாற வைக்கப் பாரத்தாலோ என்ன –
ஓம் அப்படி செய்யலாற்றிற்று இறே-அதுக்கு ஈடாய் இருப்பதோர் நெஞ்சு பெற்றோம் ஆகில் -என் நெஞ்சு அவனை ஒழிய
வேறு ஒன்றை அறியாது என்கிறார் -இந் நெஞ்சு தன்னையும் வைக்கல் ஆயிற்றே-அவன் ஸௌர்யம் பண்ணிற்று இலனாகில் –
தோழிக்கு தலைவி தன் கற்பு உணர்த்தி அறத்தொடு நிற்றல் —

சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை வையமுற்றும்
ஒருங்குற வுண்ட பெரு வயிற்றாளனை மாவலி மாட்டு
இருங்குறளாகி இசையவோர் மூவடி வேண்டிச் சென்ற
பெரும்கிறி யானை யல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே – – -91 –வார் கடா அருவி -8–4-

இத்தால் ஆஸ்ரித ஸ்பர்சமுள்ள -த்ரவ்யத்தாலே தரிக்கையும் –
ஜகத் ரஷணத்திலே பர்யாப்தம் இன்றிக்கே இருக்கும் படியையும் சொல்லிற்று –
இசைவிக்க கிருஷி பண்ணினவன் தானேயாய் -அவன் இசைவும் தன்னதீனமாம் படியாக-உடையனாய் –
ஆரேனும் வேண்டா என்னிலும் அவனும் இசைந்து கொடுக்கும் படியும் ஓர் மூவடி வேண்டிச் சென்ற -இரண்டு அடியை இரந்து –
இரண்டு அடியும் அளந்து விடாதே-ஓர் அடிக்கு சிறை இடும்படி மூன்று அடியை இரந்தவனை –
அடியேன் -மகா பலியைப் போலே ஓன்று கொடுக்க இருக்கிறார் அல்லர் -இந்த்ரனைப் போலே ஓன்று பெற இருக்கிறார் அல்லர் –
அச் செயலுக்கு தோற்று எழுதிக் கொடுக்குமவர் இறே இவர் – யானே என் தனதே என்று இருந்த என் நெஞ்சையும்
நான் அறியாதபடி அபஹரித்தான் –

இதில் பகவத் அலாபத்தாலே ஆழ்வார் படும் பாட்டைக் கண்ட சம்சாரிகள் நீர் இவ்விஷயத்தை விட்டு எங்களைப் போலே
சப்தாதி விஷயங்களிலே ப்ரவணராய் ஸூ கித்து இரும் என்று சொல்ல நான் அப்படி செய்யினும்
என் மனஸ்ஸூ அவனை விட்டு மற்று ஒன்றையும் விரும்பாதே என்கிறார் –

———–

பெரும் கிறியானை யல்லால் யடியேன் நெஞ்சம் பேணலதே -என்றாரே தாம் கீழே –
அளவுடையாராய் அதிகாரி புருஷர்களான தேவர்களுக்கும் இதுவும் அன்றிக்கே ஒழிவதே -என்கிறார் –
என் தான் அவர்களுக்கு வந்த குறை என் என்னில் -நாம் எல்லாவற்றையும் அழிய மாற பெற இருக்கிற வஸ்துவை –
அழிவுக்கு இட்டு வேறே சில பிரயோஜனங்களை கொள்ளா நின்றார்களே -என்கிறார் –
வேந்தற்கு உற்று உழிப் பிரிவில் தலைவனைக் குறித்துத் தலைவி இரங்குதல்–

பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய்
நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர்
நாள் நிலந்தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று
காண லுமாங்கொல் என்றே வைகல் மாலையும் காலையுமே – – 92- –ஆழி எழ -7–4-

இத்தால் –அநந்ய பிரயோஜனருக்கு நேர்த்தி அல்பமாய் -பலம் அதிகமாய்
பிரயோஜனாந்தர பரர்க்கு-நேர்த்தி அதிகமாய் பலம் அல்பமாய் -இருக்கும் என்றபடி
கீழ் அவதார குணங்களை அனுபவித்தார் -இதில் தேவர்கள் பிரார்த்தனையால் அன்றோ தன் சௌகுமார்யம் பாராமல்
இந்த கர்சகமான லோகத்தில் அவதரித்தது என்று அவர்களை வெறுக்கிறார் –
அவர்களுடைய பாஹ்ய ஹீனைக்கு நான் என் சொல்வேன் என்கிறார் –

—————-

தேவர்கள் தானோ ஓர் அபிமான விசேஷத்தாலே தவிருகிறார்கள் -அல்லாதாரோ தான் பகவத் பஜனம் பண்ணுகிறார்கள் –
அவர் இவர் என்று விசேஷிககிறது என் -எல்லார்க்கும்-புறம்பே அன்றோ போது போக்கு என்கிறார் –
இருள் கண்டு அஞ்சுகிற தலைவி தோழி செவிலியரை வெறுத்தல் —

காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பாவுவர் அன்ன கண்டும்
காலை நன் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் வன்மைப்படியே – – -93 –ஒரு நாயகமாய் -4–1-

புறம்புத்தை ஜல்பங்களைத் தவிர்ந்து -பகவத் விஷயத்தை-பேசுவோம் என்றால் -அதுக்கு பாங்கான
நாவைப் படைத்து வைத்து -இவர்கள் புறம்பே போகிறது என்-என்கிறார்
வ்யாமோஹம் பண்ணாதே -த்வேஷத்தைப் பண்ணினாலும் விட ஒண்ணாத வடிவு அழகை நினைப்பார் இல்லை –

—————

துர்மானத்தாலே இழப்பாரும் அறிவு கேட்டாலே இழப்பாருமாகா நிற்பர்கள் -என்றார்
உமக்கு குறை இல்லையே -என்ன – எனக்கும் ஒரு குறை உண்டாக்கி வைத்தாயே –
முன்னாடி தோற்றாதபடி -மயர்வற மதி நலம் அருளினாயே -பக்தி ரூபாபன்ன ஜ்ஞானத்தை-இறே அருளிற்று –
அந்த பக்தி பாராவச்யத்தாலே சொல்ல மாட்டுகிறிலேன் என்னுதல் –
வள வேழ் உலகின் படியே அயோக்யா அனுசந்தானத்தாலே என்றும் சொல்ல மாட்டுகிறிலேன் என்னுதல் –
தலைவியைக் கண்ட பாங்கன் தலைவனைக் யடுத்து வியந்து கூறல் —

மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் வைதிகரே
மெய்ப்படியால் உன் திருவடிச் சூடும் தகைமையினார்
எப்படி யூராமி லைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும்
அப்படி யானும் சொன்னேன் அடியேன் மற்று யாது என்பனே — – 94- –இருத்தும் வியந்து -8-7-

மைப்படி மேனியும் -அஞ்சனத்தின் படியான திரு மேனியும் -கண்டார்கள் கண் குளிரும்படியான-வடிவும் –
மைப்படி -காதல் மையலை உண்டாக்கும் படியான திரு மேனி –பொன்னார் சார்ங்கம் உடைய யடிகளை இன்னார் என்று அறியேன் –
பட்டர் ஒருகால் இவ்விடத்தை அருளிச் செய்யா நிற்க -பிள்ளை விழுப்பர் அரையரும் -அப்பான் திருவழுந்தூர் அரையரும் –
இருந்தார்களாய் –அனுசந்தித்தார் நெஞ்சில் இருள் படியும் படியான-திரு மேனியும் -என்று அருளிச் செய்ய –
நஞ்சீயர் -இன்னார் என்று அறியப் பண்ணுகை யாகாதே -என்று அருளிச் செய்து அருள -இவ்வார்த்தை சொன்னார் யார் -என்ன –
ஜீயர் -என்று அவர்கள் சொல்ல -நூற்றுப் பதின்காதத்து அவ்வருகே பிறந்து -இவ்வளவும் வந்து -இன்று
நமக்கு இத்தை உபகரிப்பதே -என்று கொண்டாடி அருளினாராம்

ஊருக்கு வரும் பசு கன்றைநினைத்து கத்துமா போலே குருட்டு பசுவும் கத்துவது போலே குருட்டுப்-பசுவும் சம்ப்ரமியா நிற்கும் இறே –
அப்படி யானும் சொன்னேன் -அளவுடையார் சொல்லும்-விஷயம் அன்றோ -நாம் என் -என்று பாராதே -நானும் பாசுரத்தை சொன்னேன் –
நீ அளித்த பக்தியால் உன் ஸ்வரூபாதிகளில் விழித்து மதி மயங்கி கிடக்கிற நான் உன்னை ஸ்மரித்து
ஸ்வ தந்த்ரித்து ஒன்றைச்சொல்ல வல்லேன் -என்கிறார் –
அன்றிக்கே அயோக்யா அனுசந்தானம் பண்ணி அகலுகிற நான் அங்குத்தைக்கு சத்ருசமாக ஒன்றைச் சொல்லித் தலைக் கட்ட வல்லேனோ –
நெஞ்சு பிச்சேரும்படியான விக்ரக வை லஷண்யம்-அயோக்யா அனுசந்தானமே ஸ்வ ரசமான தாத்பர்யம்

———-

பக்தி பாரவச்யத்தாலே யாதல் -அயோக்யா அனுசந்தானத்திலே யாதல் -ஏதேனும் ஒரு படி-கண் அழிவு சொல்லிக் கை வாங்காதே –
தன் பக்கலிலே பிராவண்யா அதிசயத்தை உடையேனாய் -இதர விஷயங்களிலே அருசியையும் உடையேனாய் –
பண்ணின மகோ உபகாரத்தை அனுசந்தித்து -அவன் திருவடிகளிலே விழுகிறேன் என்கிறார் –
இவ்விடத்தில் ஜீயர் குறியாக அருளிச் செய்த ஒரு வார்த்தை உண்டு –
திருக் கோட்டியூரிலே பட்டர் எழுந்து அருளி இருக்கச் செய்தே -அங்கே ராமானுஜ தாசர் என்கிற ஸ்ரீ வைஷ்ணவர் –
அடியேனுக்கு திரு விருத்தம் அருளிச் செய்ய வேணும் என்ன -பெருமாளைப் பிரிந்த சோகத்தாலே நான்-ஒன்றுக்கும் ஷமண் அல்ல –
ஜீயரே நீரே அருளிச் செய்யும் என்ன -ஜீயரும் அருளிச் செய்து கொடு போக்கு நிற்கச்-செய்தே –
வளவன் பல்லவதரையர் -என்று திருக் கோட்டியூர் நம்பி-ஸ்ரீ பாதத்தை உடையார் ஒருவர் அனுசந்தித்து கொடு போந்தராய் –
அவர் இப்பாட்டு-அளவிலே வந்தவாறே -கண்ணும் கண்ணநீருமாய் -புளகித காத்ரராய் -இருக்க -இத்தைக் கண்டு –
பாட்டுகளில் வார்த்தை சொல்லுவது -இனி பிரசங்கித்த மாத்ரத்திலே வித்தர் ஆனீரே என்ன –
நம்பி எனக்கு ஹிதம் அருளிச் செய்த அனந்தரத்திலே-எம்பெருமான்-திரு முன்பே இப்பாட்டை நாள் தோறும் விண்ணப்பம் செய் –
என்று அருளிச் செய்தார் -அத்தை-இப்போது ஸ்மரித்தேன் என்ன –
அவர் இதிலே அருளிச் செய்யும் வார்த்தைகளை நினைத்து-இருப்பது உண்டோ -என்ன -அது எனக்கு போகாது –
இப்பாசுர மாத்ரத்தை நினைத்து இருப்பேன் -என்றாராம் –
நம்பி ஆதரித்த பாட்டாகாதே என்று ஐந்தாறு நாழிகை போது இத்தையே கொண்டாடி அருளிச் செய்தார் –
தலைவி அறத்தொடு நிற்கத் துணிதல் –

யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே -அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
மாதாவினைப் பிதுவை திரு மாலை வணங்குவனே – -95 – –திருமாலிருஞ்சோலை -10-8-

யாதானும் பற்றி -பகவத் வ்யதிரிக்த விஷயம் ஆகையே வேண்டுவது -பற்றுவது ஏதேனும் ஒன்றாக-அமையும் –
அவற்றில் குண தோஷங்கள் நிரூபிக்க வேண்டா –நீங்கும் -பகவத் விஷயம் இத்தனையே வேண்டுவது விடுக்கைக்கு-
சர்வேஸ்வரன்-ஏதத் வ்ரதம் மம -என்று ரஷிக்கைக்கு வ்ரதம் கொண்டு இருக்குமா போலே யாயிற்று-இவன் அவனை
விடுகைக்கு வ்ரதம் கொண்டு இருக்கும் படி –
த்விதா பஜ்யேய மப்யேவம் ந ந மேயம் -என்கிறபடியே இரண்டாக பிளக்கிலும் தலை சாயேன்-என்று ஆயிற்று இருப்பது –
மாதாவினைப் பிதுவை -சரீரத்துக்கு பாதகராய் -சம்சார வர்த்தகராய் இறே யல்லாத மாதா பிதாக்கள் இருப்பது –
இவன் அதில் நின்றும் விடுவித்து ரஷிக்குமவன் ஆயிற்று -இங்கன் இரண்டு ஆகாரமாய் சொல்ல வேண்டுவான்
என் என்னில் –திருமாலை -ஸ்ரீ ய பதி யாகையாலே -பிதாமாதா சமாதவ -என்னுமா போலே –
வணங்குவனே -இதர விஷயங்களில் அருசியைப் பிறப்பித்து -தன் பக்கலில் பிராவண்யத்தைப் பிறப்பித்த -இவ் உபகாரத்துக்கு
சத்ருசமாய் இருப்பதொரு பிரத்யு உபகாரம் நம்மால் பண்ண ஒண்ணாது இறே –
அவனதான வஸ்துவை அவன் பக்கலில் சமர்ப்பிக்கும் அத்தனை இறே –

———–

லபிக்கும் அம்சம் எல்லாம் இங்கு இல்லை என்கிறார் -நீ கை விட்டால் உன் கார்யம் செய்யப் போந்த நானும் கை விடவோ
லபிக்கும் அம்சம் இங்கு இல்லை என்று பூர்வ அர்த்தத்தை கடாஷித்துக் கொண்டு –
நீ இப்படி செய்த பின்பு உன்னை ஆஸ்ரயிக்கும் உபாயம் ஒன்றும் இல்லை என்று அருளிச் செய்கிறார் –
நீ கை விட்டால் உன் கார்யம் செய்ய போந்த நானும் கை விடவோ-என்று ஸ்வ சரண கமல சமாஸ்ரயணத்துக்கு உறுப்பாக –
கரண களேபரங்களைக் கொடுத்து-பிரவ்ருத்தி நிவ்ருத்தி சக்திகளையும் கொடுத்து -ஹிதைஷியாய் இருந்தேன் இத்தனை ஒழிய-
கை விட்டேனோ என்று அருளிச் செய்கிறார் –
இவை சம்சரிக்கைக்கு ஈடாக-ப்ரவர்த்தித்ததாய் நீ என்னலாம்படி விழுந்தது -கிணற்றின் கரையில் பிரஜையை வாங்காதே –
யாறி இருந்த தாயை தானே தள்ளினாள் என்னக் கடவது இறே –தலைவி வெறி விலக்கு வைக்க நினைத்தல் –

வணங்கும் துறைகள் பல பல வாக்கி மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பல பல வாக்கி அவையவை தோறு
அணங்கும் பல பல வாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின் கண் வேட்கை எழுவிப்பனே – -96 – ஒன்றும் தேவும் -4-10-–

சூத்திர தேவதைகளை ஆஸ்ரயணீயர் என்று உபதேசிப்பாரையும் -அவர்களுக்கு உபதேசிக்கைக்கு-பாசுரமான
சாஸ்திரங்களையும் -அவ்வவோ தேவதைகளையும் உண்டாக்கி வைத்தாய்
நின் கண் வேட்கை எழுவிப்பனே-ஸ்வ தந்த்ர்யத்தையும் தவிர்த்து -அவர்கள் தங்கள் அறிவு கெட்டு-இன்பம் அனுபவியாதபடி
பண்ணி -எல்லாரும் என்னைப் போலே உன் பக்கிலே ஆசை-உடையராம்படி -பண்ணக் கடவேன் –
இது சம்சாரத்தில் இருக்கச் செய்தே பகவத் ஜ்ஞானம்-பிறக்கையால் வந்த கர்வோக்தி யிருந்தபடி இறே –
நீ கை விட்டாலும் நான் கை விடவோ -அனைவரையும் ஆஸ்ரிதர்-ஆக்குகிறேன் என்று ஈஸ்வரன் இடம் மார் தட்டுகிறார் –

————

பெரும் கிறியானை அல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே -என்றும் –
நின்கண் வேட்கை எழுவிப்பனே -என்றும் -இவ்விஷயத்திலே இங்கனே கிடந்தது அலமாவா நின்றீர் –
இவ்விஷயத்தில் கை வைக்கில் உமக்காகவும் பிறர்க்காகவும் கிலேசந்தவிராதாய் இரா நின்றது -அல்லாதார் கண்டீரே –
புறம்புள்ள விஷயங்களிலே நெஞ்சை வைத்து -அவற்றாலே உண்டு உடுப்பது-கண் உறங்குவதாய் கொண்டு போது போக்குகிறபடி –
அப்படியே நீரும் நம் பக்கலிலே நின்றும்-நெஞ்சை புறம்பே மாற்றி போது போக்க வல்லீரே என்ன –
அவர்கள் உன்னை-அறியாமையாலே -என்கிறார் –தலைவன் பிரிவில் துயில் கொள்ளாத தலைவி இரங்குதல் —

எழுவதும் மீண்டே படுவதும் படு எனை யூழிகள் போய்க்
கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம்
தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு
கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே – – 97–பரிவதில் ஈசனை -1-6-

நெஞ்சை வாங்கலாயோ -உன் படி இருப்பது-விலஷண விஷயமுமாய்-அதிலே பாவ பந்தம்-உண்டானால் ஆறி இருக்கப் போமோ –
எப்பொழுதும் நாள் திங்கள் –திருவாய் மொழி – 2-5 4- – இத்யாதி –ஸ்வ தந்த்ரனான பெருமாள் உறங்கினார் என்று
கேட்டோம் இத்தனை போக்கி-அவரை அனுவர்த்திதுப் போன இளைய பெருமாளுக்கு கண் உறங்கிற்றோ –
பகவத் விஷயத்தில் கை வைத்தார் இதுக்கு முன்பு கை உறங்கினார் உண்டு என்று யாரேனும்-கேட்டு அறிவார் உண்டோ –

————

இவ் விஷயத்திலே கை வைத்து அதில் உமக்கு உண்டான ஈடுபாட்டைச் சொல்லுவது –
பிறரை திருத்தப் பார்ப்பதாய்க் கொண்டு -க்லேசியாய் கிடவாதே -உம்முடைய துறை அன்றோ கிருஷ்ணாவதாரம் –
நவநீத ஸௌ ர்ய வ்ருத்தாந்தத்தை அனுபவித்து போது போக்க பார்த்தாலோ -என்றார்கள் சிலர் –
இவர்க்கு அது ஆழம் கால் என்று அறியார்களே -இவர் -எத்திறம் -என்று மோஹித்து கிடக்குமது இறே அது தான் –
அது நெஞ்சாலும் நினைக்கப் போகாது –
தலைவனது அருமை நினைந்து கவல்கிற தலைவிக்கு தோழி கூறல் —

துஞ்சா முனிவரும் அல்லாதவரும் தொடர நின்ற
எஞ்சாப் பிறவி இடர் கடிவான் இமையோர் தமக்கும்
தன்சார்விலாத தனிப் பெரு மூர்த்தி தன் மாயம் செவ்வே
நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே – -98 –கெடுமிடராய-10-2-

ப்ரஹ்மாதிகள் தங்கள் துக்க-நிவ்ருத்திக்கு உடலாக தன்னை ஆஸ்ரிக்கிறவோபாதி-தான் வேறு சிலரை ஆஸ்ரயநீயராக உடையன்
அன்றிக்கே இருக்குமவன்-ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யமே தனக்கு தாரகமாய் -அது தான் நேர் கொடு நேர் கிட்டப் பெறாதே –
இப்படி களவு கண்டாகிலும் புஜிக்க வேண்டி – அதுதான் தலைக்கட்ட பெறாதே -வாயதுகையதாக அகப்பட்டு -கட்டுண்டு –
அடியுண்டு -பிரதி க்ரியை அற்று –உடம்பு வெளுத்து பேகணித்து நின்ற நிலை சிலருக்கு நிலமோ –
அரையனுக்கு போகிற பாலை ஓர் இடையன் களவு கண்டான் -என்று கட்டி அடியா நிற்க –பிள்ளை உறங்கா வல்லி தாசர் கண்டு
பரவசராய் இருந்து -இத்தால் வந்ததுக்கு எல்லாம் நான் கடவன் -என்று விடுவித்துக் கொண்டாராம் –

—————

பகவத் விஷயத்தில் நீர் இன்ன போது மோஹித்து கிடப்புதீர் என்று அறிகிறிலோம்-உம்மை-விஸ்வசிக்க போகிறது இல்லை –
அத்ய ராஜ குலச்ய ஜீவிதம் த்வதீனம் ஹே புத்திர வியாதி தே சரீரம் பரிபாததே நச்சித் -அயோத்யாகாண்டம் -8 7-9 – –
ரசவாதம் கீழ்ப் போமாம் போலே ஸ்ரீ பரத ஆழ்வான் மோஹித்து கிடக்க -திருத் தாய்மார் வந்து சொல்கிறார்கள் –
இப்படை வீடாக-உன்னைக் கொண்டு அன்றோ ஜீவிக்கிறது -சக்கரவர்த்தி துஞ்சினான் -பெருமாள் பொகட்டுப் போனார் –
நீ இருந்தாய் என்கிறார்கள் அன்று-உன் முகத்தில் பையாப்பு கண்டால் அவர் மீளுவர் என்னும் அத்தாலே
அன்றோ இது ஜீவித்து கிடக்கிறது -நீ இல்லை என்று கேட்கில் இத் திக்கில் என்றும் நோக்குவரோ –
புத்ர வ்யாதிர் நுதே கச்சித் சரீரம் பரிபாதிதே -என்றும் -அபி வ்ருஷா -என்கிறபடிக்கே படை வீட்டில்-ஸ்தாவரங்கள் அடைபட
நோவோன்றாய் இருக்கச் செய்தே -பிள்ளாய் உனக்கு நோய் என் -என்று-கேட்கும்படி வேண்டி இறே சடக்கென மோஹித்து விழுந்தபடி –
அப்படி சத் பிரக்ருதிகளாய் இருக்கையாலே – இன்ன போது மோஹிப்புதீர் என்று தெரிகிறது இல்லை –
சௌலப்ய குணத்தை உபதேசிக்க புக்கு -எத்திறம் -என்று மோஹித்து கிடக்குமவர் இறே இவர் –

ஆழ்வான் திருவாய் மொழி நிர்வஹிக்க புக்கால் -பிள்ளை உறங்கா வல்லி தாசர் கண்ணும் கண்ணீருமாய்
அத்தை இத்தை பிரசங்கித்து சித்தராவார் -அத்தைக் கண்டு -கூரத் ஆழ்வானாய்-மகா பாஷ்யம் கற்று -சதுர் ஆஸ்ரமாக ஒன்றை
நிர்வஹிக்கிற எங்களைப் போல் அன்றிக்கே -பகவத் குண பிரசங்கத்திலே சிதிலராகும்படி பிறந்த உம்முடைய ஜன்மம் ஒரு ஜன்மமே -என்றானாம் –

ஆழ்வான் தான் வீராணத்திலே ஒரு பெண் பிள்ளை புக்காளாய்-மடியிலே வைத்துக் கொண்டு-இருந்து –
கள்வன் கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து -என்று சந்தை சொல்லுவியா-நிற்க –
அந்த பெண் பிள்ளையில் பார்த்தா அவளை அழைத்துக் கொண்டு போக -மேற் சந்தை இட மாட்டாதே மோஹித்து விழுந்தான் –
இப்படி இருக்கிறவன் இறே தன்னை-வன் நெஞ்சனாக்கி வார்த்தை சொன்னான் –

ஸ்வாமிகள் திரு மழிசை தாசராய் – நஞ்சீயரை பட்டர் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரியப்பித்தராய் -அர்த்தாத் -யாத்ருசிகமாக –
அவரும் தாமாக பகலிருக்கையில் போயிருந்து –அவரும் தாமுமாக திருவாய் மொழி ஓதா நிற்க -ஆண்டான் பின்னிட்டு சென்றானாய் –
அவனைக் கண்டு-ஜீயர் எழுந்து இருக்க புக -வேண்டா -என்று கை கவித்து கொடு வந்து –
நீங்கள் கோயில் கூழைத் தனம்-அடிக்கிற படி இதுவோ -தான் -என்ன -லௌகிகர் அன்ன பாநாதி நிமித்தமாக வ்யாபாரித்தது போலே –
உங்களுடைய யாத்ரை இதுவே யென்று வித்தரானாராம் ஆண்டான் –
திரு வாய் மொழி ஓதிற்று ஸ்ரீ பாதத்திலே யாயிற்று -என்றாராம் –

பகல் எல்லாம் பாஷ்யத்திலே அந்ய பரராய் இருப்பார் -இரவு அமுது செய்து பள்ளிக்கட்டில் எறி-அருளினால் –
சந்தை சொல்ல வாராயோ -என்று அழைப்பர் -முந்துற சந்தை சொன்னால்-புளகிதகாத்ரர் ஆவார் –
இரண்டாம் சந்தைக்கு சிதிலர் ஆவார் என்று-எங்கேனும் ஒரு கால் புக்கார் ஆகில் நாலிரண்டு ஒவியல் கொண்டு
பரிமாற்ற-வேண்டுபடியாய் ஆயிற்று கண்ணா நீர் வெள்ளமிட்ட படி –
பெருமாள் அமுது செய்யும் போது இன்னதனை கறியமுதும் நெய்யமுதும் என்று
கடக்கிட்டு அவை தன்னை அமுது செய்வதற்கு முன்னேயும் எனக்கு காட்டி அமுது
செய்தாலும் எனக்கு காட்டிக் கொடு போம் கோள்-என்றாரே -அவர்களும் திரு உள்ளத்தில் ஓடுவது-அறியாதாராய் –
அப்படியே செய்து கொடு போந்தார்களாய் -இப்படி ஆறு மாசம் சென்ற பின் -ஒரு நாள் பார்த்து -இத்தை ஒரு நாள்
குறி அழித்திட்டு வைத்தால் ஆகாதோ -என்று அருளிச் செய்தாராம் –

கிடாம்பி ஆச்சான் ஆழ்வான் உடன் திருவாய் மொழி கேட்கிற நாளிலே ஒருநாள் ஸ்ரீ பாதத்திலே-புகும் போதிலே தாழ்த்து புக –
ஏன் நீ வேகினாயீ -என்ன -ஆழ்வான் பாடே திருவாய் மொழி கேளா நின்றேன் -என்றானே –
இன்று என்ன திருவாய்மொழி நிர்வஹித்தான் -என்று கேட்டருள -பிறந்தவாறு -என்றானாய் -அதில் சொன்ன வார்த்தைகள் என் என்ன –
ஒரு வார்த்தையும் இல்லை -என்றானாய் -நீ கேட்ட படி என்
அவன் சொன்ன படி என்-என்ன -நிர்வஹிப்பதாக ஆரம்பித்து இயல் சொல்லி -அநந்தரம்-ஆழ்வாருடைய-பாரவச்யத்தை அனுசந்தித்து –
நெடும் போது கண்ணும் கண்ண நீருமாய் இருந்தது – இவ் ஆழ்வாரும் ஒருவரே –
இவர்க்கு ஓடுகிற பாவ வ்ருத்தி நாம் இருந்து பாசுரம் இடுகையாவது என் -இற்றைக்கு விடலாகாதோ -என்று விட்டான் -என்ன –
என்ன பரம சே தனனோ-என்று அருளிச் செய்தாராம் –

நீர் தெளிந்து இருக்கிறபோதே -உம்முடைய சித்தாந்தத்தை எங்களுக்கு அருளிச் செய்ய வேணும்-என்ன –
ஆகில் அத்தை கேட்கலாகாதோ -என்று தம்முடைய சித்தாந்தத்தை அருளிச் செய்கிறார் –
மித்ர பாவேன -என்கிற ஸ்லோகம் ராம சித்தாந்தமாய் இருக்கிறாப் போலே -இப்பாட்டு ஆழ்வாருடைய-சித்தாந்த்தமாய் இருக்கிறது –
தலைவி தனக்குத் தலைவன் இடத்து உள்ள அன்பு உறுதியைத் தோழிக்கு கூறல் —

ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே – – 99- செஞ்சொல் கவிகாள் -10-7-

ஆசை உடைய நான் பேசாது இரேன் இறே-பரார்தமாக தன்னைப் பேணாதே -ரஷிப்பான் ஒருவனைப்-பற்ற வேண்டாமோ-
பிறர்க்காக தன்னை அழிய மாறுவான் ஒருவன் ஆகையாலே -ரஷ்யத்துக்காக தன்னைபாராதே-அழிய மாறுவான்-
உடைமை பெறுகைக்கு உடையவனே யத்நிக்கும் அத்தனை இறே –
உடைமை தான் யத்நிக்குமது இல்லை இறே -ஆகையாலும் அவனே வேணும் –ஷயியான பலத்தை அனுபவிக்கிறவர்கள்
தங்களுக்கே அன்றி -அநந்த ஸ்திர-பலத்தை அனுபவிக்கிற நித்ய சூரிகளுக்கும் அவன் வேணும் –
அவர்களுக்கும் அனுபவத்துக்கு தங்கள் சத்தை-வேணுமே பேற்றுக்கு இத்தலையில் ஜ்ஞானம் உண்டாக வேண்டாவோ என்ன –
உண்டாகவுமாம் இல்லையாகவுமாம் – அப்ரதிஷேதத்துக்கு வேண்டுவதே இவன் பக்கலில் வேண்டுவது –பேற்றுக்கு அடியான ஜ்ஞானம்
அவன் பக்கலிலே உண்டு என்கிறார்

ஒரு விசை திருக் கோட்டியூர் நம்பி திரு நாளுக்கு நடந்த இடத்தே இவ் அர்த்தத்தை அருளிச்-செய்வதாக
ஒரு ஏகாந்த ஸ்தலத்தை எம்பெருமானாரையும் கொண்டு புக்கராய் -திருப்பணி செய்வான் ஒருத்தன் அங்கே
உறங்கி குறட்டை விடா நிற்க -அவனைக் கண்டு அனர்த்தப் பட்டோம் -என்று-இவ்விசைவுக்கு தவிர்ந்து பிற்றை இசைவிலே
இத்தை நம்பி அருளிச் செய்ய கேட்டு அருளி ஆழ்வான் அகத்திலே அமுது செய்து இருக்கிற அளவிலே-உச்சி வெய்யிலிலே
வந்து புகுந்து நம்பி இவ்வர்த்தத்தை ஒருவருக்கும் சொல்லாதே கொள் என்று அருளிச் செய்தார் –
உனக்கு இது சொல்லாது இருக்க மாட்டேன் இறே -என்று சஹகாரி நைரபேஷ யத்தை அருளிச் செய்தார் இறே

பிறரை பிரமிப்பைக்கு சொல்லும் விப்ரலம்ப வாக்கியம் அன்றிக்கே பகவத் பிரசாத லப்த ஜ்ஞானத்தை உடையேனாய் –
அவ் வெளிச் செறிப்பு கொண்டு அறுதி இட்டு-சொன்ன வர்த்தம் இது தான் பிறர்க்கு சொல்ல வேணும் என்று சொல்லிற்றும் அல்ல –
என் அனுபவத்துக்கு போக்கு விட்டு சொன்ன பாசுரம் -என்கிறார் –
மதுரகவி பிரக்ருதிகள் அந்தரங்கர் கேட்க ஆழ்வார் அருளுகிறார் -தம்முடைய பரம சித்தாந்தத்தை
வெளி இடுகிறார் பரம ஔ தார்யத்தால் -இதில் –

————–

நீர் பகவத் பிரசாத லப்த ஜ்ஞானத்தை உடையீருமாய் -இப்படி அறுதி இட்டு காண்கைக்கு ஈடான-நன்மையை உடையீருமாய்
இருக்கையாலே நீர் இப் பேறு பெற்றீர் -உம்மைப் போலே ஜ்ஞானம்-இன்றிக்கே பாக்ய ஹீனருமாய்
பிற்பாடருமான சம்சாரிகள் செய்வது என் என்ன –
அவர்களுக்கு என் தன்னை ஜ்ஞானமில்லையே யாகிலும் -நான் சொன்ன இப் பாசுர மாத்ரத்தையே- சொல்ல –
அவர்களும் எல்லாம் நான் பெற்ற பேறு பெறுவார்கள் -என்கிறார் –

நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
வல்லார் அடிக்கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையில் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே – – 100- –முனியே நான்முகன் -10-10-

மகா பாரதம் போலே பரந்து இருத்தல் -பிரணவம் போலே சுருங்கி இருத்தல் -செய்யாதே -நூறு பாட்டாய் –
ஜ்ஞாதவ்யாம்சம் அடைய உண்டாய் இருக்கை –பலத்தை முற்பட சொல்லுகிறார்
பொல்லாததுமாய்-அருவினையாய் – மாயமுமாய் -பொய் நிலமுமாய் இருக்கிற
பிறப்பாகிற வன் சேற்று அள்ளலில் அழுந்தார்-ஆவிர்பூத ஸ்வ ஸ்வரூபராய் வாழும் பலன் சொல்லி தலைக் கட்டுகிறார்-

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading