பெருமான் மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம் -என்று இவள் சொன்ன அநந்தரம்-
திருத் தாயார் அத்தை அநுபாஷிக்கையாலே -அத்தைக் கேட்டு -பிராட்டியான தசை போய் –
தாமான தசையாம் படியாய் தரித்தார் -இவர் தம்மை தாம் உணர்ந்தால் இவர்க்குப் பாழி கிருஷ்ணாவதாரம் இறே –
அங்கே புக்கு -எத்திறம் -என்கிறார் –தோழி தலைவனது நீர்மையைத் தலைவிக்கு கூறல் —
வாசகம் செய்வது நம் பரமே தொல்லை வானவர் தம்
நாயகன் நாயகர் எல்லாம் தொழுமவன் ஞால முற்றும்
வேயகமாயினும் சோராவகை இரண்டே யடியால்
தாயவன் ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று நம்மிறையே – -61 –பிறந்தவாறும் -5-10-
பதவுரை
தொல்லை வானவர் தம் நாயகன்–பழமையான நித்ய ஸூரிகளுக்குத் தலைவனும்
நாயகர் எல்லாம் தொழுமவன்–ஈச்வரத்வம் பாராட்டுகிற (பிரமன் முதலியோர்) எல்லோரும் (தம் தம் தலைமைபெறும் பொருட்டு) வணங்கும்படியானவனும்
ஞாலம் முற்றும்–உலகம் முழுவதையும்
வேய் அகம் ஆயினும் சோரா வகை–ஒரு கோற்குத்து நிலமாயினும் தவறாதபடி (துளியிடமும் மிச்சமாகாதபடி)
இரண்டே அடியால் தாயவன்–(தனது இரண்டு அடிகளாலே அளந்து கொண்டவனுமாகிய
நம்மிறையே–நமது தலைவன்
ஆய் குலம் ஆய் வந்து தோன்றிற்று–இடையர் குலத்தை யுடையவனாய்க் கொண்டு அக்குலத்தில் வந்து வளர்ந்த எளிமையை
வாசகம் செய்வது–எடுத்துப் புகழ்ந்து கூறுவது
நம் பரமே–நம்மாலாகக் கடவதோ? (ஆகாது)
இவருக்குத் தானே எத்திறம் என்று மோஹித்து கிடக்கை பிரகிருதி இறே-
பிறவாதவராய் இருக்கிறவர்கள் இறே -பிறக்கிற ஈஸ்வரனை வந்து ஸ்தோத்ரம் பண்ணுகிறார்கள் –
மனுஷ்யர் கண்ணுக்கும் கூட தோற்றாதவர்கள் -ராவண வத அனந்தரத்திலே-வந்து ஸ்தோத்ரம் பண்ணினார்கள் –
சர்வஞ்ஞனான தான் பரத்வத்தையும் கால்கடைக் கொண்டு இக்குல அபிமானத்துக்கு அவ்வருகு ஓன்று
அறியாதனாய் வந்து பிறந்தான்-தன்னைப் பற்றினாரும் பழையருமாய் பிறவாதருமாய் இருக்க அவன் வந்து பிறந்த
இதுக்கு பாசுரம் இடப்போமோ -வந்து தோன்றிற்று -ஆவிர்பூதம்-வேங்கடத்தாயன் படியில் ஈடுபடுகிறார் –
————
கீழ் கிருஷ்ண அவதார சௌலப்யம் இறே அனுசந்தித்தது -அந்த அவதார சம காலத்திலேயே-தாம் உளராக பெறாமையாலே
வந்த ஆற்றாமையாலே -கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி தசையை – பிராப்தரானார் -அவள் பிறிவாற்றாமைக்கே மேலே
கடலோசையும் பாதகமாக நின்றது என்று திருத் தாயார் சொல்லுகிறாளாய் இருக்கிறது-
தலைவியின் ஆற்றாமையைத் தோழி தலைவனுக்கு கூறுதல் –
இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
அறையோ என நின்றதிரும் கருங்கடல் ஈங்கிவள் தன்
நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணைமேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே – – – 62- –தேவிமார் ஆவார் -8-1-
பதவுரை
இரக்கினும்–எவ்வளவு வேண்டிக் கொண்டாலும்
ஓர் பெண்பால் எனவும் ஈங்கு இறை இரங்காது–இவள் ஒரு பெண் மகளென்று கருதியும் இவளிடத்திற் சிறிதும் இரக்கம் கொள்ளாமல்
கருங் கடல்–கரியகடலானது
அறையோ என நின்று அதிரும்–(இவளெதிரில்) அறை கூவுகிறதோ வென்று சொல்லும் நிலைநின்று (ஒரே விதமாக) கோஷஞ் செய்கின்றது;
ஓ–இஃது ஒரு கொடுமையே
அரவு அணைமேல்–சேஷ சயனத்தின் மீது
பள்ளி கொண்ட–சயனித்தருளா நின்ற
முகில் வண்ணனே–காளமேகம் போன்ற வடிவுடையவனே!
ஈங்கு–இவ்விடத்தில்
இவள்தன்–இவருளுடைய
நிறையோ–நிறைக் குணமோவென்னில்,
இனி–இனிமேல்
உன் திருஅருளால்–உனது கிருபையினாலல்லது (வேறொன்றாலும்)
அன்றி–பாதுகாத்து வைக்க முடியாது;காப்பு அரிது–
முறையோ–(இவளை நீ இங்ஙனம் உபேஷித்தல்) முறைமையோ?
உம்முடைய பிரணயித்வத்தால் நோக்கும் எல்லை கழிந்தது இறே -ஸ்வரூப பிரயுக்தமான கிருபையாலே -அல்லது
நோக்க ஒண்ணாதாய் வந்து விழுந்தது -ஊரார் சொல்லும் பழிக்கு அஞ்சி மீளும் எல்லையும் கழிந்தது
முறையோ -தத் தஸ்ய சத்ரு சம்பவேத் -என்று இருக்கும் நிலை கழிந்து கூப்பிட்டு பெற வேண்டும் தசை வந்து விழுந்தது
இவள் கடின ஸ்த்தலத்திலே கிடக்க-நீர் மெல்லிய படுக்கையை தேடிக் கிடக்கிறீரே –
ஒ ஸ்வாமி -இப்போது நீ இவள் இடம் அருள் செய்து -உன் வடிவு அழகை காட்டினால் அல்லது-
இவள் ஜீவிக்க உபாயம் இல்லை -ஆகையால் ஒருகால் நீ வந்து தோற்ற வேணும் என்கிறார்கள் –
முகில் வண்ணனே –இத்தை எம்பார் அருளிச் செய்கிற போது -இயலை சொல்லுகிறவரைப் பார்த்து -இவ்வளவிலே
முகம் காட்டாதே செங்கற்கீரை கட்ட இருக்கிறவர் -முதலிகளாய் இருப்பார் – தலையிலே பிரம்புகள் விழிலும்-
முகில் வண்ணரே -என்னீர் -என்று அருளிச் செய்தார் –
இருவருமான வன்று சேர நிற்கவும்-பிரிந்த வன்று தாய்க்கூற்றிலே நிற்குமவர் இறே இவர் –
முகில் வண்ணன் -என்று ஏக வசனமாக சொன்னால் -நம்மை ஏக வசனமாக உதாசீனமாக சொல்லுகிறது -என் -என்றபடி –
ஆகையால் முகில் வண்ணர் -என்று பூஜ்யமாக சொல்லீர் என்று அருளிச் செய்தார் -என்றபடி -மிதுனமே உத்தேச்யமாய் இருக்க –
எம்பார் பிராட்டி பஷமாய் இருந்து ஈஸ்வரனை வெறுக்கிறது என் என்ன என்று அருளிச் செய்கிறார் –
ஸ்வாபதேசம் –
இப்பாட்டால் ஸ்வரூபத்தாலே பெற இருக்கை அன்றிக்கே -ஸ்வரூபத்தை அழித்தாகிலும்
பெற வேண்டும்படி -ஆற்றாமை கரை புரண்டபடி சொல்லுகிறது –
—————–
முறையோ -என்று கூப்பிட்டால் ஆறி இரான் இறே -வந்து குளிர நோக்கினான்
தலைவனை இயல் பழித்த தோழிக்குத் தலைவி இயல் பட மொழிதல் –
வண்ணம் சிவந்துள வானாடமரும் குளிர் விழிய
தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன தாமிவையோ
கண்ணன் திருமால் திருமுகம் தன்னோடும் காதல் செய்தேற்கு
எண்ணம் புகுந்து அடியேனோடு யக்காலம் இருக்கின்றதே – – 63- –இவையும் அவையும் -1-9-
பதவுரை
வண்ணம் சிவந்துள–திருநிறம் சிவந்துள்ளவையும்
வான் நாடு அமரும் குளிர் வழிய–பரமபதம் ஆனந்த மடையும் படியான குளிர்ந்த பார்வையை யுடைவையும்
தண் மெல் கமலம் தடம் போல் பொலிந்தன–குளிர்ந்த மென்மையான தாமரைத் தடாகம் போல விளங்குகின்றவையுமாகிய
இவையோ தம்–இத்திருக்கண்களோ
கண்ணன்–கிருஷ்ணாவதாரஞ் செய்தவனும்
திருமால்–திருமகள் கணவனுமான பெருமானுடைய
திருமுகம் தன்னொடும்–திருமுக மண்டலத்திலே
காதல் செய்தேற்கு–வேட்கை கெண்டிருக்கிற என்னுடைய
எண்ணம்–மனத்திலே
புகுந்து–பிரவேசித்து
இ காலம்–இப்பொழுதும்
அடியேனோடு இருக்கின்ற–(விட்டு நீங்காமல்) என்னோடு இருக்கின்றன.
இப் பேற்றுக்கு வருமாறு முனை நாள் அறிந்திலேன் கிடீர் -இருக்கின்றனவே -நச புன ஆவர்த்ததே –
என்னும் பேற்றைப் பெற்றோம் என்று -தோன்றி இரா நின்றது -ஒரு நாளும் இனி பிரிக்கைக்கு –
சம்பாவனை இல்லை என்று தோற்றும்படி இரா நின்றது -பிரத்யஷ சாமாநகாரம் ஆகிலும் இவருக்கு
சாமானகாரமாக தோற்றாதே-பிரத்யஷம் என்று இறே தோற்றுவது –
———-
திருக் கண்களால் குளிர கடாஷித்தான் என்று இறே கீழ் நின்றது -அல்லாதார் மேல் வையாதே-தம்மேல் விசேஷ கடாஷம்
பண்ணுகைக்கு நிபந்தனம் என் -என்று ஆராய்ந்தார் -அஹ்ருதயமாக-திரு நாமத்தை சொன்னேனே என்ன –
அத்தாலே ஆகாதே -என்கிறார் –தலைவன் பேர் கூறித் தரித்து இருத்தலைத் தலைவி தோழிக்கு கூறி இரங்கல்-
இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர் யாமுமவா
ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே – -64 – –பாமுரு மூவுலகும் -7-6–
பதவுரை
நிலத் தேவர் –பூமி தேவர்களாகிய பிராமணர்கள்
இருக்கு ஆர் மொழியால்–வேதங்களிற் பொருந்தின மந்திரங்களைக் கொண்டு
நெறி இழக்காமை–முறைமை தவறாமல்
உலகு அளந்த திருதால் துணை வணங்குவர்–உலகங்களை அளவிட்ட (எம் பெருமானது) திருவடிகளை வணங்கி அனுபவிப்பார்கள்:
யாமும்–நாமும்
அவா ஒருக்கா–(எமது) ஆசையை அடக்க மாட்டாமல்
வினையொடும் எம்மொடும் நொந்து–(அப்படி அநுபவிப்பதற்கு விரோதியான எமது) பாவத்தையும் (அப்பாவத்திற்கு இடமான) எம்மையும் வெறுத்துக் கொண்டு
கனி இன்மையின் கருக்காய் நடிப்பவர்கள் போல–பழம் கிடைக்காமையாற் பிஞ்சைத் தின்பவர் போல
திருநாமம் சொல் கற்றனம்–(பூர்ணாநுபவம் கிடைக்காமையால் அதுவரையில் தரித்திருப்பதற்காக அவனது) திருநாமங்களாகிய சொற்களைச்சொல்லுதல் செய்கிறோம்.
என் உடம்பை நான் விடேன் -என்று ஸ்வீ கரிக்கும் ஸ்வா பாவனாய் உள்ளவனை -இவை அறியாது இருக்கச் செய்தே –
தானே எல்லை நடந்து-மீட்டுக் கொண்டான் இறே –பழம் இல்லாமையாலே பசும் காயைக் கடிப்பாரைப் போலே –
திரு நாமம் சொல் -இதில் அர்த்த அனுசந்தானம் எனக்கு இல்லை –அவனைக் கண்ணாலே கண்டு கையாலே அணைக்க
ஆசைப்பட்டாருக்கு அவன் பேரைக் கொண்டு என் செய்வார்-திரு நாமம் மாத்ரம் சொன்னேன் -இத்தை வ்யாஜ்யமாக்கி
நிர்ஹேதுகமாக கடாஷித்தான் -நித்ய ஸூ ரிகள் அனுபவிக்கும் விஷயத்தை கிட்டி அவத்யத்தை விளைத்தேன்
என்றும் விஷாதத்திலே தாத்பர்யம் –
————-
தலை மகள் நோக்கி வீடுபட்ட தலைமகன் -அக் கண்கள் தனக்கு பாதகமானபடியை பாங்கனுக்கு சொல்லுகிறான் –
தலைவி நோக்கின் வாசி கண்டு தலைவன் குறிப்பறிந்து உரைத்தல் –
கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று ஒரோகரும
முற்றுப் பயின்று செவியொடு உசாவி உலகமெல்லாம்
முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
உற்றமுறாதும் மிளிர்ந்த கண்ணா யெம்மை உண்கின்றவே – – -65 –நோற்ற நோன்பு -5-7–
பதவுரை
கன்று பிணை–இளமையான பெண்மான்களுடைய
மலர் கண்ணின்–பரந்த கண்களின்
குலம்–சாதியை
வென்று–ஜயித்து
ஒரே கருமம் உற்று–ஒரு காரியத்திலே பொருந்தி
பயின்று–அக்காரியத்திலே பழகி
செவியோடு உசாவி–(அக்காரியத்தைக் ) காதுகளோடு வினாவி ஆலோசித்து,
உற்றும் உறாதும் மிளிர்ந்த–(எனக்கு) அனுகூலமாயும் பிரதிகூலமாயும் தடுமாறுகிற
கண் ஆய்–கண்களாய் (இவை)
உலகம் எல்லாம் முற்றும் விழுங்கி உமிழ்ந்த பிரானார் திரு அடி கீழ்–எல்லா வுலகங்களையும் மிச்சமில்லாதபடி (பிரளயகாலத்தில்) வயிற்றினுட்கொண்டு (பின்பு) வெளியிட்ட எம்பெருமானது திருவடிகளின் கீழே (இவ்வுலகத்திலே)
எம்மை உணர்கின்ற–எம்மை (த் தமக்கு உள்ளாம்படி) கவர்ந்து கொள்கின்றன.
கண் என்கிற வ்யபதேசத்தாலே -ஒரு பாதக பதார்த்தம் என்னை நலியா நின்றது –
ஆழ்வாருடைய ஞான வைபவத்தில் ஈடுபட்ட அன்பர் பாசுரத்தை நாயகியின் நோக்கில் அகப்பட்டு உரைத்த
நாயகன் பேச்சாலே அருளிச் செய்கிறார்
ஸ்வா பதேசம்
இத்தால் ஆழ்வார் படியை கண்டவர்கள் இருக்கிற படி இறே இது –
கற்றுப் பிணை மலர்க்கண்ணின்-குலம் வென்று -என்கிற இத்தால் கார்ய புத்தி இல்லாத மௌக்த்யத்தை -நினைக்கிறது
ஒரோ கருமம்-உற்ற பயின்று -என்ற இத்தால் பிரபத்தியை சொன்னபடி இறே0இது பின்னை ஜ்ஞான கார்யம் அன்றோ –
கீழ் சொன்ன மௌக்த்யத்துக்கு சேர்ந்த படி எங்கனே என்னில் -அதில் கர்த்தவ்யாத புத்தி இன்றிக்கே-இருக்கையை நினைக்கிறது –
இது தன்னை செய்யா நிற்கச் செய்தே -சாதனத்தில் அன்வயியாதே-ஸ்வரூபத்தில் அந்தர்பவித்து இருக்கும் இறே
கண்ணா இத்யாதி -சொன்ன படியை உடையராய் இருக்கிற இருப்பு தான் கண்டவரை ஈடுபடுத்துகிற படியை சொல்லுகிறது –
———–
தலைமகள் கண் அழகில் ஈடுபட்ட தலைமகன் வார்த்தை இதுவும்
தலைவன் பாங்கனுக்கு கழற்றெதிர் மறுத்தல்-
இதுவும் ஆழ்வாருடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயின் ல் ஈடுபட்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் பாசுரத்தை
நாயகியின் கடாக்ஷத்தில் ஈடுபட்ட நாயகன் வார்த்தை
உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்வினவாம் எரி நீர் வளி வான்
மண்ணாகிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாள்
கண்ணாய் அருவினையேன் உயிராயின காவிகளே – -66 –ஆராவமுதே -5-8-
பதவுரை
எரி–அக்நியும்
நீர்–ஜலமும்
வளி–வாயுவும்
வான்–ஆகாசமும்
மண்–பூமியும்
ஆகிய–என்னும் பஞ்ச பூதங்களின் வடிவமான
எம்பெமான் தனது எம்பெருமானுடைய
காலிகள்–செங்கழுநீர்ப் பூக்காளனவை
உண்ணாது–உண்ணாமலும்
உறங்காது–தூங்காமலும்
உணர்வு உறும்–(எப்பொழுதும் த்யாக ரூபமான) ஞானத்திற் பொருந்தின
வைகுந்தம் அன்னான்–ஸ்ரீவைகுண்டத்தை யொத்து எப்பொழுதும் அநபவிக்கத் தக்கவளான தலைமகளினுடைய
கண் ஆய்–கண்களென்று பேராய்
அரு வினையேன் உயிர் ஆயின–தீர முடியாத தீவினைகளையுடைய எனக்கு உயிர் நிலையான
எத்தனை யோகியர்க்கும்–மிக்க யோக நிலையை யுடைய முனிவர்க ளெல்லோர்க்கும்
எண் ஆய்–(அந்த யோகத்தை விட்டு எப்பொழுதும்) நினைக்கத் தக்கவையாய்
மிளிரும்–பிறழ்ந்து தோன்றுகிற
இயல்வின் ஆம்–தன்மையை யுடையவையாம்.
அப்படிப் பட்டவள் பக்கலிலே வந்தவாறே – பிரதான அவயவகமாய் -என் பக்கலிலே வந்தவாறே –
அசேத்யமாய் -அதாஹ்யமாய் -அழியாதாய் இருந்துள்ள ஆத்மா வஸ்துவாய் -பாதகமாம் இடத்தில் ஸ்வதந்த்ரமாய் –
கண்ணுக்கு விஷயமாய் நின்று பாதகம் ஆகா நின்றன –-ரஷகம் ஆனவையே பாதகமாம் படி பாபத்தை பண்ணினேன் –
அவள் பக்கலிலே வந்தவாறே கண்ணாய் -என் பக்கலிலே வந்தவாறே உயிராய் –
இவை தான் நிரூபித்த வாறே வடிவு சில காவிகளாய் செங்கழு நீர்ப் புஷ்பங்களாய் இரா நின்றன
ஸ்வா பதேசம்
இத்தால் ஆழ்வார் உடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை கண்டு அனுபவிக்கும் பாகவதர்களுக்கு -தேவு மற்று அறியேன் –
என்னும் படி இறே இருப்பது -அவர்கள் அதை ஆதரிக்கிறது-பகவத் சம்பந்தத்தால் இறே -அதுக்கு அடியான பகவத் விஷயத்தை
அநாதரித்து -இவரை ஆதரிக்க-வேண்டும்படி இவருக்கு ஸ்ரீ வைஷ்ணத்வம் தலை நிரம்பின படியை சொல்கிறது –
சரம அவதியை-கண்டு அனுபவித்தவர்கள் பிரதம அவதியில் நில்லார்கள் இறே –
———-
இப்பாட்டும் -கண் அழகு தன்னையே தலைமகன் சொல்லுகிறான் –
தலைவன் பாங்கனுக்குத் தன் வலி யழிவு உரைத்தல்-
காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு அசுரைச் செற்ற
மாவியம்புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர்
தூவியம் பேடை யன்னாள் கண்களாய துணை மலரே – – 67- –உலகமுண்ட பெரு வாயா -6-10-
பதவுரை
அசுரை–அசுரர்களை
செற்ற–அழித்த
மா விய புள் வல்ல–பெரிய ஆச்சர்ய கரமான கருடப் பறவையை ஏறி நடத்துகிற
மாதவன்–திருமகன் கணவனும்
துணை மலர்–ஒன்றொடொன்று ஒத்த இரண்டு தாமரை மலர்கள்
காவியும்–செங்கழுநீர்ப் பூவையும்
நீலமும்–கருநெய்தற் பூவையும்
வேலும்–வேற்படையையும்
பலபல–(மற்றம் கண்ணுக்கு ஒப்பாகின்ற மான்விழி முதலிய) மிகப்பல பொருள்களையும்
கோவிந்தன்–பசுக்களைக் காப்பவனுமான பெருமானுடைய
வேங்கடம்–திருவேங்கடமாமலையிலே பொருந்தி வாழ்கிற
தூவி அம்பேடை அன்னான்–சிறகழகையுடைய அன்னப் பேடை போன்றவளது
கண்கள் ஆய்–கண்களாகிய
வென்று–தமக்கு ஒப்பாகாதபடி ஜயித்து
பாரிப்பு–என்னை வருத்துவதற்கு அடி கோலிய பரப்பு
ஆவியின் அல்ல–(எனது) உயிரின் தன்மைக்கு
அளவு அல்ல–ஏற்ற அளவல்ல.
சிவப்பாலே செங்கழு நீரை வென்று -கருமையாலே நெய்தலை வென்று -ஓர் ஆளும் ஓர் நோக்கும்
நேராய் இருக்கும் படியாலே -வேலை வென்று -மௌ க்த்யத்தாலே கயலை வென்று -மற்றும் ஒப்பாக
சொல்லும் அவற்றை அடைய புக்க விடம் புக்கு தன்னடையே அழியும் அவற்றை யழிக்கை வெற்றிக்கு உடலோ -வென்று
அழியாதான ஆத்ம வஸ்துவையும் -அழிப்பதாக கோலா நின்றது –
ஸ்வாபதேசம் –
இத்தால் -திருமலையிலே வந்து நிற்கிறவனுடைய சீல குணத்திலே வித்தராய் இருக்கிற ஆழ்வார் படி போக்தாக்கள்
அளவல்ல -என்று ஸ்ரீ வைஷ்ணவர்கள் சொல்லுகிற பாசுரத்தை பார்ஸ்வச்த்தர் பாசுரத்தால் தாம் அனுபவிக்கிறார் –
காவி –என்கிற நிறத்தாலே -ராகத்தை சொல்லி பக்தி நிஷ்டரையும் –
நீலம் -என்ற அஞ்ஞனத்தாலே -பிரகாசத்தை சொல்லி -ஞான நிஷ்டரையும் –
வேலும் கயலும் -என்ற சகாரத்தாலே -கர்ம நிஷ்டரையும் –
எல்லாரையும் ஜெயித்து இருக்கும் ஆழ்வார் உடைய ஞானம் என்றபடி –
கடைக் கண் சிகப்பினால் செங்கழு நீரையும்
கரு விழியின் கருமையினால் -கரு நெய்தலையும்
நோக்கின் கூர்மையினால் வேலாயுதத்தையும்
ஆகார சௌந்தர்யம் -கெண்டைகளையும் –
இப்படி மற்று உள்ள குணங்களினால் மற்ற வஸ்துக்களையும் – அதிசயித்து -என் ஆத்மாவையும் அபகரித்து –
எனக்கு ரஷகனான ஸ்ரீ ய பதியையும் வசீகரிப்பதாய் வியாபிக்கத் தொடங்கிற்று –
ஆகையால் நான் இதன் நின்றும் மீள சக்தன் ஆகிறிலேன்-
————–
கலந்து பிரிந்த தலைமகன் -கொன்றை பூக்கும் காலத்திலே வருகிறேன் -என்று காலம் குறித்துப் போனானாய் –
அக்காலம் வந்து அவையும் பூக்கச் செய்தே -அவன் வாராமையாலே தலை மகள் தளர -அத்தைக் கண்ட தோழியானவள் –
அக்காலம் அல்ல என்ன ஒண்ணாதபடி அது முடிகிக் கொடு நிற்கையாலே -இவை பூக்க உத்யோகிக்கிறன இத்தனை –
பூத்துச் சமைந்தன வில்லை காண் –ஆன பின்பு அவனும் வந்தானத்தனை –நீ அஞ்சாதே கொள் -என்று
அவளை யாஸ்வசிப்பிக்கிறாள்-
மலர்ந்தே யொழிந்தில மாலையும் மாலைப் பொன் வாசிகையும்
புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி பொரு கடல் சூழ்
நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய்
கலந்தார் வர வெதிர்கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே – – 68- –கால மயக்கு–கொண்ட பெண்டிர் -9-1-
பதவுரை
பொரு கடல் சூழ்–அலை மோதுகிற கடலால் சூழப்பட்ட
நிலம்–பூலோகத்தை
தாவிய–அளந்தருளின
எம்பெருமான் தனது–எம்பெருமானுடைய
வைகுந்தம்–ஸ்ரீவைகுண்டத்தை
அன்னாய்–ஒத்து விளங்குகிறவளே!
கலந்தார் வரவு எதிர் கொண்டு–(உன்னோடு) கலந்து பிரிந்து சென்றவருடைய வருகையை முந்தி எதிர்பார்த்து
வல் கொன்றைகள்–வலிய கொன்றை மரங்கள்
கார்த்தனவே–கருவடைந்து அரும்பின; (அதுவே தவிர)
மாலையும்–மாலைகளையும்
மாலை பொன் வாசிகையும்–பொன்னாலாகிய சுருள்மாலை வட்டத்தையும்
புலம் தோய் தழைபந்தர்–மநோஹரமான தழைகளர் சிறு பந்தலிலே
தண்டு–கொம்புகளிலே
உற–நெருங்க
நாற்றி–தொங்க விட்டுக் கொண்டு
மலர்ந்தே ஒழிந்தில–முற்றும் மலர்ந்து விட்டனவில்லை
அவனதான நித்ய விபூதியோடு ஒத்து இருந்துள்ளவள் அன்றோ நீ -அவ் விபூதியை விடில் அன்றோ உன்னை விடுவது –
உன்னை தளர விட்டு இருக்குமோ-உன் ஸ்வ ரூபத்தை அழியாது ஒழிந்தால் -அவன் தன் ஸ்வ ரூபத்தையும் அறியாது ஒழியுமோ –
உன்னோடு கலந்து சுவடி அறிந்தவன் – உன்னை விட்டு இருக்குமோ -கலந்தார் -என்றே காணும் அவனுக்கு நிரூபகம் –
ஸ்வா பதேசம் –
இத்தால் அவனுடைய குண ஜ்ஞானத்தாலும் -இத்தலையை அவன் அவஹாகித்த படியாலும்-போக யோக்யமான காலத்தில்
வாராது ஒழியான் என்று பார்ஸ்வச்தர் ஆஸ்வசிக்கிறபடியை சொல்லுகிறது –
————
அதுக்கு மேல் சந்த்யையும் வந்து நலிய -அநந்தரம்-போக யோக்யமான காலமாய் இருக்க – அவன் வந்து தோன்றாமையால்
தலை மகள் ஆற்றாளாக – இது கண்ட தோழி யானவள் -இது சந்த்யை அல்ல இரண்டு வ்ருஷபங்கள் தங்களிலே பொருகிறன
காண் -என்று காலம் மயக்கி அவளை தரிப்பிக்கிறாளாய் -இருக்கிறது – மாலைக்கு இரங்கிய தலைவியை தோழி ஆற்றுதல்-
காரேற் றிருள் செகிலேற்றின சுடருக்கு உளைந்து வெல்வான்
போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை புவனி எல்லாம்
நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே
வாரேற்றி இள முலையாய் வருந்தேல் உன்வளைத் திறமே – -69 – –கற்பார் இராம பிரானை -7-5-
பதவுரை
கார்–கருத்த
இருள்–இருளாகிய
ஏறு–எருதானது
செகில்–சிவந்த
சுடர்–ஸூர்யனாகிய
ஏற்றிற்கு–எருதுக்கு எதிரில்
உளைந்து–இளைத்து
வெல்வான்–(மீள) வெல்லும் பொருட்டு
போர் ஏற்று–போர் செய்வதை ஏற்றிக் கொண்டு
எதிர்த்தது–வந்து எதிரிட்டது.
நீர் ஏற்று–(மாவலி கையால் தாரை வார்த்துத் தத்தஞ்செய்த) நீரை (க் கையில்) ஏற்று
புவனி எல்லாம்–எல்லா வுலகங்களையும்
அளந்த–அளந்து கொண்ட
நெடிய–நீண்ட வடிவமுடைய
பிரான்–தலைவன்
புன்தலை மாலை–அற்புதமான தன்மையையுடைய மாலைப் பொழுதிலே
அருளாவிடுமே–(உனக்கு) அருள் செய்யாதொழிவனோ? (ஒழியான்.)
வார் ஏற்றும் இன முலையாம்–கச்சை மேலேறுவிக்கும்படி வளர்ந்த இளமை மாறாத தனங்களை யுடையவனே!
உன் வளை திறம்–உனது கைவளையின் நிமித்தமாக
வருந்தேன்–வருத்தப்படாதே.
அவன் படியை அறிந்தால் வரும் என்று இருக்க வேண்டாவோ -இந்த்ரன் வ்யாஜ்யமாக எல்லார்-தலையிலும் –
நிர்ஹேதுகமாக -அமரர் சென்னிப் பூவாய் இருக்கிற திருவடித் தாமரைகளை-வைக்குமவன் அன்றோ –
இப்படி எல்லாருக்கும் உபகாரகனாய் இருக்குமவன் -உன்னை விடுமோ –மண்ணுக்கு பதறி இரந்தவன்
பெண் ஒரு தலை யானால் ஆறி- இருக்குமோ –காடும் மேடுமான பூமியிலே காலை வைத்தவன்
உன் முலை மேலே காலை வையாது ஒழியுமோ இத்தால் அவனுடைய குண ஞானத்தாலும் -அவன் இத்தலையை அவஹாகித்த படியாலும்
தரிப்பித்த படியை சொல்லிற்று கீழ் -இதில் அது வேண்டாதே இருவருடையவும் தர்மிஹ்ராக பிரமாணமே அமையும் தரிக்கைக்கு என்கிறது –
அவனாகில் ரஷகனாய் -இத்தலையாகில் ரஷ்யகமாய் – இருக்கும் இறே
நெடிய பிரான் என்கையாலே ரஷகமும் –வாரேற்ற இள முலை -என்கையாலே ரஷ்யகமும் -தோற்றுகிறது
——–
ஸ்ரீ வைகுண்ட நாதன் சாத்தின மாலையை பெற வேணும் என்னும் அபேஷையால் உண்டான-த்வரையாலே –
காலம் செலுத்த உள்ள அருமை -சொல்லுகிறது –தலைவி இரவின் நெடுமைக்கு இரங்கல் —
வளைவாய்த் திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல்
தளைவாய் நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை
விளைவான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க எம்மை
உளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே — 70- –பிறவித் துயரற -1-7-
பதவுரை
வளை வாய் திரு சக்கரத்து–வட்டமான நுனியையுடைய அழகிய சக்கராயுதத்தையுடைய
எங்கள் வானவனார்–எமக்குத் தலைவரும் பரமபதத்திலிருப்பவருமான பெருமானுடைய
முடிமேல்–திருமுடியிற் சாத்தியுள்ள
தளைவாய்–கட்டு வாய்ந்த
நறு–பரிமளமுள்ள
கண்ணி–மாலை வடிவமான
தண் அம்–குளிர்ந்து அழகிய
துழாய்க்கு–திருக்குழாய்க்கு (ஆசைப்பட்டு)
உண்ணம் பயலை விளைவான்–(எமது) மாயை நிறம் மாறிப் பாலை நிறம் விஞ்சம்.
மிக வந்து–அடாவந்து
நான் திங்கள் ஆண்டு வழி நிற்க–நாளாயும் மாதமாயும் வருடமாயும் கற்பமாயும் தோன்றினது தவிர
எம்மை உளைவான் புகுந்து–எம்மை முற்று மழிக்க நெருங்கி
இது ஓர் கங்குல்–இந்த ஒரு ராத்ரிதானே
ஆயிரம் ஊழிகளே-ஆயிரம் கற்பமாகா நின்றது.
முந்துற ஒரு ராத்திரி -ஒரு நாளாய் பெருகிற்று -அது போய் ஒரு மாசமாய் – அது போய் ஒரு வத்சரமாய் -அது போய்
ஒரு கல்பமாய் -பெருகும் படி ஒழிய என்னை நலிகைக்காக வந்து புகுந்து ஒரு ராத்திரி அநேகம் ஊழிகளாக நின்றது –
மிக வந்து -ஒன்றுக்கு ஓன்று மிகும் படி வந்து என்னுதல் -அநேகம் ராத்திரி எல்லாம் வந்தது இறே –
இது ஒரு ராத்திரி இருந்தபடி என்-
ஸ்வாபதேசம் –
இத்தால் பதி சம்மா நிதா சீதா -என்று அவதாரத்தில் பிராட்டி பெற்ற பேற்றை-ஸ்ரீ வைகுண்ட நாதன் பக்கலிலே
பெற வேணும் என்று ஆசைப்பட்டு -பெறாமையாலே காலம்- செல்ல அரிதான படி சொல்லிற்று –
————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply