சூத். 2-2-10 :: மஹத்தீர்க்கவத் வா ஹ்ரஸ்வ பரிமண்டலாப்யாம் ::
ஐஹிக, ஆமுஷ்கிக பலன்களை அடைய வேண்டுமானால் யாரை நாம் தியானிக்க வேண்டும் ?
கஸ்ச தியேய : ? என்பது ஸகஸ்ரமான காலத்திலிருந்தே கேட்கப்படும் கேள்வி.
காரணம் து தியேய : என்பது உபநிஷத்தின் பாடம். காரணம்தான் எது ? என்றால்
யாதோவா இமாநி பூதாநி ஜாயந்தே—-தத் பிரஹ்மேதி — தன்னை ஒழிய எல்லா பொருளுக்கும் காரணமானது எதுவோ
தனக்கொரு காரணம் இல்லாதது எதுவோ அது தான் பர பிரஹ்மம். அந்த பர பிரஹ்மத்தைத்தான் நாம் சிந்தை பண்ண வேண்டும் .
இந்த பர பிரஹ்மத்துக்கு காரணத்வம் இல்லை என்று சொல்லி வந்தனர் பலர்.
எங்கெல்லாம் காரணத்வ வாக்கியம் உள்ளதோ அவையெல்லாம் பர பிரஹ்ம பரமாகா இல்லை.
அவை சேதனாசேதன பரமாகத்தான் உள்ளன என்று சாங்கியன் என்ன, இந்த நையாயிகன் என்ன இவர்கள் பிரதிக்ஷேபணம் பண்ணவே
அவர்கள் எல்லாருக்கும் இந்திந்த ஸ்ருதி வாக்கியங்களை நீங்கள் கூறுகிற அர்த்தம் பொருந்தாது . இதுதான் அர்த்தம்.
பர பிரஹ்மத்தைத்தான் அவை சொல்லுகின்றன. காரணம் என்று எவை எவைகளை ஸ்ருதி வாக்கியம் சொல்லுகின்றனவோ
அவை அனைத்தும் பர பிரஹ்மத்தான் காட்டுகின்றன என்பதாக
அயோக விவச்சேத, அந்யயோக விவச்சேதத்தாலே அந்த பர பிரஹ்மத்துக்கு காரணத்வத்தை சமன்வயப் படுத்தினார்
ஸமன்வயாத்யத்திலே.
அதைத் தொடர்ந்து வந்த அவிரோதாதியத்திலே முதல் பாதமான ஸ்மிருதி பாதத்தில்
பரிகரிக்கப்பட்ட ஸ்ம்ருதி விபிரதிபதிக்கு யுக்த்யாபாசம் இருக்கு.
அதாவது இன்னும் உண்டான வேறு சில ஸ்ருதி வாக்கியங்களை கொண்டு பார்த்தால் பிரஹ்ம காரண வாதம் எடுபடாது
என்கிற விஷயம் பிரஸ்துதமாக – இத்தனை தூரம் இதரர்கள் வாள் கொண்டு வீச, கேடயம் கொண்டு தடுத்த வியாசர்,
இப்போது கிருஸ்ந பிரசக்தி அதிகாரணத்தோடே இந்த இரண்டாவது தர்க்க பாதத்தோடே நேரே சங்கதி உண்டு.
இதில் பரபக்ஷ பிரதிக்ஷேபத்துக்கே இறங்குகிறார் சூத்ரகாரர்.
ஸ்வ பக்ஷ தோஷாஸ்ச என்று ஸ்ம்ருதி பாதத்தில் கோடிட்டு காட்டினத்தை தர்க்க பாதத்தில் கம்பீரமாக
பர தர்ம வாதிகளை ஒவ்வொருவராக வாத விவாதத்துக்கு அறைகூவி அழைத்து அவள் பக்ஷத்தை எல்லாம் நிரஸனம் பண்ணுகிறார்.
அந்த வகையில் மஹாதீர்க்கதிகரணத்தில் கணாத பக்ஷமான பரமாணுகாரணவாதமும் அஸமஞ்ஜசஹ என்று காட்டப் படுகிறது.
இதுதான் கீழுள்ள விஷயங்களுக்கும் இதற்குமான சங்கதி.
பரமாணுவாதிகள் சொல்வதாவது –
பரமாணுகளின் உள்ளே இடமே கிடையாது. நிரம்சமானது. நிரவயவம் (Dimentionless) –
அகல, நீள , உயர, கன பரிமாணங்கள் அதற்கு கிடையாது. காரணம் அத்யந்த ஸூக்ஷ்மமானது .
ஜகத்து பரமாணு சமூகத்தால் ஆனது அதாவது பரமாணுக்களே ஜகத்துக்கு உபாதான காரணம் என்கிறான்.
காபில அநுயாயிகளான சாங்கியன் ஆநுமானிக பிரதானத்தை உபாதானமாக சொன்னது போலே,
இவர்களும் ஆநுமானிக பரமாணுவை ஜகத் உபாதான காரணம் என்கின்றனர்.
விப்ரதிஷேதாச்ச அசமஞ்சஸம் என்று கீழ் அதிகாரணத்தில் சொன்ன பொருந்தாமையை
இந்த அதிகரண பிரதி ஸூத்ரத்திலும் அன்வயித்துக் கொள்ள வேண்டும்.
மஹத்தீர்க்கவத் வா ஹ்ரஸ்வ பரிமண்டலாப்யாம் —
பரிமண்டலம் = பரமாணு
ஹ்ரஸ்வம் = த்வயணுகம்
மஹத்தீர்க்கம் = த்ரியணுகம்
இது எதுவும் கூட காரணமாகாது.
வா ஸப்தே ச அர்த்தே = அதுவா, இதுவா என்றல்லாமல், அதுவும் கூட என்கிற சமுச்சயார்த்ததில் வந்துள்ளது.
பரமாணு 2 சேர்ந்தால் த்வியணுகம் . 3 த்வியணுகம் சேர்ந்தால் அது த்ரியணுகம் .அப்பேர்பட்டது 4 சேர்ந்தால் சதுரணுகம் ஆகிறது.
இப்படி ஸூக்ஷ்ம அணுக்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து ஸ்தூல ஜகத்தாகிறது என்பது அவர்களுடைய மதம்.
ஷட் பார்ஸ்வ ஸம்யோகம் :
ஷட்பார்ஸ்வ முடைய செங்கல் ஒவ்வொன்றாக சேர்த்து சுவர் எழும்புவதுபோல ஷட்பார்ஸ்வ முடைய பரமாணு முறையே
த்வியணுகம் , த்ரியணுகம் என்று உண்டாவது. அணுக்கள் நிரவயமானதால், அணுவுக்குள் அணு பிரவேசித்தல் முடியாது,
செங்கலுக்குள் செங்கல் போகாதாப்போலே பரமாணுகளின் உள்ளே இடமே கிடையாது.
அப்படி போக முடிந்தால், பஹுத்வம் (அ) ஸ்தூலத்வம் சித்திக்காது,
ஸாம்சமான அணுவுக்குள் ஸாம்சமான அணு , அதனுள் இன்னொன்று என்று அநவஸ்தா தோஷம் வந்து சேரும்.
அத்யந்த அணுப் பிரமாணம்.
அல்ப பரிமாணம்
மத்யம பரிமாணம்
மஹத் பரிமாணம்
பரம பரிமாணம்
விபு
என்று அடுத்தடுத்து அணு மஹத்தாக விகரிக்கிறது என்கிறான்.
இதில் நிரவயவத்தை ஒத்துக் கொண்டால் தருமமே சித்திப்பதில்லை.
ஸாவயவத்தை ஒத்துக் கொண்டால் தர்மியே சித்திப்பதில்லை. அதாவது
வேஷ்டிக்கு அவயவம் ஓத பிரோத்தங்கள் (உண்டை, பாவு) என்கிற நூல் ஒன்றோடு ஒன்று சேரும்போது வஸ்திரம் ஆகிறது.
இப்படி இரண்டு அவயவங்கள் ஒன்று சேரும் போது அவற்றைக் காட்டிலும் பெரிதான அவையவம் உண்டாகிறது.
இது போல இரண்டு பரமாணுக்கள் ஒன்று சேரும் போது அதைக் காட்டிலும் பெரியதான த்வியணுகம் உண்டாக்கவேண்டும்.
ஆனால் அணுக்கள் நிரவயமாக சொல்லப் படுவதால், அவைகளைக் காட்டிலும் பெரிய பரிமாணம் உள்ள பொருளே (தருமமே) உண்டாக வழி இல்லை.
இந்த தோஷத்தை கழிக்க, அணுக்கள் ஸாவயவம் என்றால், அனவஸ்தா தோஷம் சித்திக்கும்.
ஸாவயவம் என்றால் அவை மேலும் பல அவயவங்களாக பிரிக்கக் கூடும் என்பதால் முடிவில் ,
பிரிக்க முடியாத மூல காரணம் ஒன்று (தர்மியே) இல்லையாகிவிடும். .
இதுபோலவே இவர்களுடைய மற்ற கொள்கைகளும் பொருந்தாதவையே – என்பதை ”வா” சப்தத்தால் குறிப்பிடப் படுகிற ”ச”காரம் காட்டும்.
—————–
சூத். 2-2-11 :: உபயதா அபி ந கர்ம : அத : ததபாவ :
பரமாணுக்கள் சேர்ந்து த்வ்யணுகம், த்ரஸரேணு என அடுத்தடுத்து உண்டாக மூல காரணம் பரமாணுவில் ஏற்படும் முதற்கிரியை என்றும்,
புண்ய பாபங்களால் உண்டாகும் அதிருஷ்டம் பக்குவமாகிற போது அதுவே முதற் கிரியைக்குக் காரணமாகிறது என்கின்றனர்.
காரணங்கள் இரண்டு.
1. அசாதாரண காரணம் = அவியஹிதமான இவைகள் இருந்தால் அல்லது காரியம் நடவாதான நாம் சொல்லும்
உபாதான, நிமித்த காரணங்கள் எல்லாம் அஸாதாரண காரணம் என்றும்
2. சாதாரண காரணம் = மற்ற கால தேசாதிகள் சாமான்ய காரணம் போல, பகவானும் ஸாதாரண காரணம் என்கின்றனர்.
அங்கனாகில் பரமாணுவில் ஏற்படும் இந்த முதற்கிரியைக்குக் காரணமான அதிருஷ்டம்
பரமாணுவில் உள்ளதா? (அ) ஜீவனிடம் உள்ளதா? என்ற கேள்வி பிறக்கிறது.
முதல் யோஜனையாக ஜீவன் செய்த புண்ய பாப க்ரியைகளால் உண்டாகும் அதிருஷ்டம் பரமாணுவில் இருக்க வழியில்லை.
அதை ஏற்றாலும், எப்போதுமே கிரியை ஏற்பட்டு, ஸ்ருஷ்டி நித்யமாகப் போகும்.
இரண்டாவது யோஜனையாக, அந்த அதிருஷ்டம் ஜீவனிடத்தில் தான் இருக்கிறது என்று கொள்வோமானால் ,
பரமாணுவில் கிரியை ஏற்படுவது சாத்தியமில்லை.
இரண்டுக்குமான ஸம்யோகத்தால் பரமாணுவில் கிரியை ஏற்படலாகுவது என்றாலும் , கர்ம பிரவாஹம் நித்தியமாய்,
சிருஷ்டியும் எப்போதும் நடந்து கொண்டே இருக்க, விஸர்க்காதிகள் அஸம்பவம்.
உபயதா அபி – இந்த அத்ருஷ்டம் அணுவிலோ, ஜீவனிடமோ இரண்டில் எத்தனிடத்தில் இருந்தாலும்
ந கர்ம – சொல்லப்பட்ட முதற்கிரியை ஏற்படமுடியாது.
அத – ஆதலால்
ததபாவ — பரமாணுக்கள் சேர்ந்து த்வ்யணுகம், த்ரஸரேணு இத்தியாதி ஏற்படுகின்றன என்பது பொருந்தாது.
மேலும் புண்ய, பாபங்கள்தான் ஒரு மொத்தமாக பலன் கொடுப்பதில்லை. அவை
சஞ்சித கர்மா ஜன்மாந்தரத்திலும்
ஆரப்த்த கர்மா கிடைத்த இந்த ஜன்மத்திலுமாக பலன் அளிப்பவை என்கிற விபாகமும்
ஆத்மாக்கள் அநேகம். அவர்கள் பல காலங்களில் பலவிதமாக செய்யும் கர்மங்கள் ஒரே காலத்தில் பக்குவம் ஆனால் அன்றோ ,
ஸ்ருஷ்டி ஒருமுகமாக நடக்க வல்லது? அதுதான் ஈஸ்வர சங்கல்பத்தாலே அணுக்களில் கிரியை ஏற்படுவதாகக் கொண்டல்லது
அவை தமக்குத் தாமே செயலாற்று மிடத்து பொருந்தாது.
இன்னும் பிரம்மாவுக்கு எத்தனைக் காலம் ஸ்ருஷ்டியோ, அத்தனைக் காலம் பிரளயம் என்பதான பரார்த்த விவஸ்தை;
ஏக கால ஸ்ருஷ்டி இயலாதபோது, ஸம்ஹரமும் ஒருகாலத்தில் ஏற்படுவது என்பதும் முடியாது.
ஆக, யுக்தா யுக்திகளைக் கொண்டு ஈஸ்வரன் அதிஷ்டியாத பரமாணுக்கள் ஜகத்காரணம் என்று சொல்வது அஸமஞ்சஸம்.
—————————-
சூத். 2-2-12 :: ஸமவாயாப் யுபகமாச்ச ஸாம்யாதநவஸ்திதே —
முதல் யுக்ம 2 சூத்ரத்தில் காரணப் பொருள் ஸாவயவமா ? நிரவயவமா? என்பதற்கு உதாரணம்
ஷட் பார்ஸ்வமுடைய செங்கல்லும் (Building blocks) , ஒன்றுக்குள் ஒன்று போடக்கூடிய ஸசகமும் (Tumbler) காட்டப்பட்டன.
ஸாவயவம் என்ற போது அநவஸ்தா தோஷமும், நிரவயவம் என்றபோது காரியம் உண்டாக்காத படிக்கு,
ஸ்தூலத்வ அஸித்தியும் தோஷமாக பொருந்தாமையை சொல்ல,
ராஜாவானவன் செயல் பட, மந்திரி மண்டலம் துணை புரிவது போலே இந்த பரமாணுக்கள் செயல்பட,
அத்ருஷ்டமானது மந்திரி மண்டலி போல ஆத்ய-ஸ்பந்தனம் – ஈஸ்வர ஸ்தானத்தில் இருந்து செயல் புரிகின்றன.
சங்கியான் பிரஹ்மத்தை இல்லை என்றே சொன்னான். இந்த நையாயிகன் ஈஸ்வரனை ஆமோதித்து அது ஆநுமானிக சித்தம் என்றான்.
பாக அறையில் அக்கினியை புகை ஸாகச்சர்யத்தோடு பார்த்திருந்தால் தானே , ஸந்திக்த சாக்ஷிவாந் பக்ஷத்திலே
புகையைப் பார்த்து நெருப்பு உள்ளது என்று ஊகிக்க, முடியும்.
அந்த ஆநுமானிக ஈஸ்வரனும், ஜீவாத்ம கோஷ்டியிலே விலக்ஷணனான ஒருவன் சித்தப்பனே ஒழிய, ஸ்ருதியிலே சொல்லப் பட்ட,
போக்தா, போக்கியம் பிரேரிதாரம் ச மாத்வா
ஸர்வம் ப்ரோக்தம் த்ரிவிதம் பிரஹ்ம :
என்கிற மூன்றாவது தத்துவமான ஈஸ்வரன் சித்திப்பதில்லை.
அந்த ஸ்ருதிதானே
ஸோஸ்நுதே ஸர்வாந் காமாந் – என்றதில்
காம்யந்த காமா : இதி கல்யாண குணா –என்பதான அத்தனையும் சித்திக்காதே.
ஸ்ருதியை அனுசரித்துப் போகிற எங்களுக்கு ஸர்வஜ்ஞத்வம், ஸர்வசக்தித்வம் இவையெல்லாம் ஈஸ்வரன் விஷயத்தில் சித்திக்குமே ஒழிய ,
உங்களுடைய ஆநுமானிக ஈஸ்வரனக்கு சொல்லப் போகாது. அதுவும் அன்றி இவைகளை எல்லாம் நீங்கள் ஸ்ம்ருதி பாதத்தில்
ஒன்றொன்றும் கிடையாது, கிடையாது என்று மறுத்து இருக்கிறீர்கள் அல்லவா?.
அப்படி இருக்க இந்த அத்ருஷ்டத்தை ஜீவகதம் என்றும் சொல்ல வருவதில்லை. அசேதனமான பரமாணு கதம் என்றும் சொல்ல வருவதில்லை.
உன்னுடைய ஈஸ்வரன் ஆநுமானிக ஈஸ்வரனாக இருக்கிற படியால் அவன் விஷயத்திலும் அதிருஷ்டம் பொருந்துவ தில்லை.
ஸ்ருதேர் து ஸர்வ மூலத்வாத்
ஸர்வ தர்மோ உபபத்தி
என்று இருக்கிற எங்களுடைய ஈஸ்வரனுக்கே அது சாத்தியம்.
இனி அடுத்துள்ள, இரண்டாவது யுக்மமான 2 சூத்திரங்களையும் பார்ப்போம்.
———————————-
திரவ்ய குண கர்ம சாமான்ய விசேஷ ஸமவாய அபாவாத் ஸப்த பதார்த்த :
பதம் + அர்த்தம் = பதார்த்தம்.
அர்த்தம் என்பது இங்கு பதத்தால் குறிக்கப்படுகிற கடபடாதி பொருளைச் சொல்லும்.
பூதலே கட : – பூமி மேல் பானை உள்ளது. இது ஸம்யோகம் . பானை பூமியை விட்டு அகற்றப்பட்டால் அது வியோகம்.
இது பிரதக் சித்தம், வியோக, நாசமடையக்கூடிய சம்பந்தம். . அப்பிரதக் சித்தம் என்றால் விடமுடியாத சம்பந்தம்.
வேட்டியில் வெண்மை உள்ளது. கரையில் செந்நிறம் உள்ளது. இது இரண்டுக்கும் சம்பந்தம் எப்படி என்றால்
ஸமவாயி சம்பந்தம் என்கிறான் நையாயிகன். எத்தனை திரவ்யங்களில் இந்த சம்பந்தம் உள்ளது என்பதற்கு
அவயவ – அவயவிக்குமான சம்பந்தம் – கட – கபாலம் . பானைக்கு வயிறு பாகமும், கழுத்து பாகமும் போல.
குண – கர்மம் சம்பந்தம் – திருமண வெண்ணிறம். ஸ்ரீசூர்ணம் சிகப்பு நிறம். சக்கரை இனிப்பு.
இவைகளில் உள்ள நிறத்தையோ, சுவையையோ த்ரவ்யத்திலிருந்து பிரித்துக் காட்ட முடியோ. முடியாது.
அப்படி இவைகளுக்கான அபிரதக் சம்பந்தம் ஸமவாயி சம்பந்தம் என்கின்றனர்.
திரவ்யத்துக்கு குணம் போல கர்மத்துக்கு சலநாத்திகள் உ.ம். வெள்ளை குதிரை ஓடுவதை பார்க்கலாமே ஒழிய ,
வேகத்தை தனித்துப் பார்க்க முடியோ முடியாது.
ஜாதி – கடத்தில் உள்ள கடத்வம் போல , மனித ஜாதியில் மனுஷ்யத்வம் , அதேபோல தேவத்வம், மிருகத்வம் , அஸ்வத்வம்
இத்யாதி வியக்கத்திகளில் உள்ள தர்மம்.
They are separate but not separable . சம்பந்த பின்னத்வே ஸதி விசிஷ்ட புத்தி நியாமகத்வம். இது தான் சமவாயி காரணம்.
இத்தை ஒரு திரவியமாக இவர்கள் ஒத்துக் கொள்கிறபடியால், அது எங்கு இருக்கிறது என்றால்,
அதற்கு ஒரு சமவாயி காரணம் என்று இப்படி அநவஸ்தா ஆஸ்பதமாக இருக்கிறது என்பதே இதற்குண்டான தோஷம்.
இந்த சமவாயி சம்பந்தத்தை ஆகாச முஷ்டிகம் ( இரண்டு மல்லர்கள் குத்திக் கொண்டு சண்டையிடுவது பலசாலி யார் என்று சொல்ல.
அதுவே ஆகாசத்தை நோக்கி குத்துவதால் என்ன வரும்?) போலேயோ இந்த சமவாயி தத்வ நிராகாரணம்? என்றால்
ஸ விசேஷ பிரஹ்மவாதியான வியாசர் நியாய-வைசேஷிக சமவாயி பக்ஷத்தை கண்டனம் செய்கிறபடியால்,
சூத்ரகாரரைப் பின்பற்றி சுவாமி ஸ்ரீபாஷ்ய கிரந்தத்த்தில் அதை கண் டிக்கிறார்–
இது வேதார்த்த சங்கிரகம் போலே ஸ்வதந்திர பிரபந்தம் அன்று. அனுயாயி கிரந்தமானபடியாலே.
சாங்கியன் பரமாத்மாவையே ஒத்துக் கொள்ள வில்லை.
சேஸ்வர சாங்கியனும், யோககாரும் சாக்ஷி மாத்ர ஈஸ்வரனை ஒத்துக்க கொண்டனர்.
வைசேஷிக நையாயகர்கள் ஆநுமானிக ஈஸ்வரனை ஒத்துக் கொண்டாலும் , கேவல நிமித்த காரணமாக மட்டுமே.
உபாதான காரணம் இந்த பராமாணு திரவியம் என்பதாக.
அந்தப் பிரவிஸ்ய நியமன சீலம், இச்சா பூர்வக ஸ்ருஷ்டி எல்லாம் வேதத்தில் சொன்னபடிக்கு இவர்கள் ஈஸ்வரன் விஷயத்தில்
ஒத்துக் கொள்வதில்லை. கால, தேச, அத்ருஷ்டத்தின் ஸ்தானத்தில் ஈஸ்வரனைக் கொள்கிறார்கள் தவிர,
ஸர்வஜ்ஞத்வம் , ஸர்வசக்தித்வம், ஸத்யகாம்தவம் இவைகளை ஒப்புக் கொள்ளவில்லை.
ஸமவாயாப் யுபகமாச்ச – சமவாயம் என்கிற சம்பந்தத்தை ஒத்துக் கொண்டாலும்
ஸாம்யாத் – பிரதத் சித்த சம்பந்த ஆதார-ஆதேய பாவத்தாலே சையோகம் உண்டாவது போல
அப்பிரதத் சம்பந்தத்தாலே சொல்லப்படுகிற இரண்டு பதார்த்தங்களுக்கான சம்பந்தமே சமவாயம் –
இத்தை அதற்கான பொருளோடு சம்பந்தப்படுத்தி பொருத்திக் காட்ட வேறொன்றை ஒப்புக்கொள்ள வேண்டி வருவதால்
அநவஸ்திதே – இதை ஒரு திரவியமாகவே இவர்கள் ஒத்துக் கொள்கிறபடியால்,
அது எங்கு இருக்கிறது என்றால், அதற்கு ஒரு சமவாயி காரணம் என்று இப்படி
அநவஸ்தா ஆஸ்பதமாக இருக்கிறது என்பதே இதற்குண்டான அஸமஞ்சஸம்,
ஜாதி முதலானவை திரவ்யத்தோடே ஸ்வரூபம் என்று ஒத்துக் கொண்டு விட்டால் ஸமவாய சம்பந்தத்தை கற்பிக்க வேண்டிய தேவையே இல்லை.
ஆகையால் சமவாயத்தை கற்பிப்பதால் ஒரு சார்த்தகமும் இல்லை.
தானாக ஆகிற காரியத்துக்கு – மத்யே கிம் தேந ? – இடைத் தரகர் ஏதுக்கு என்ற கணக்காம் இது.
———————-
சூத். 2-2-13 :: நித்யமேவ ச பாவாத் ::
நையாயிகன் சமவாயம் ஒரே பொருள். நித்தியமானது என்றான்.
பிராபகர மீமாம்ஸகன் சமவாயம் அநேகமாக உள்ளது. அநித்யமான சமவாயமும் உண்டு என்பதாகச் சொன்னான்.
சமவாயத்தை நித்தியமாக ஒத்துக் கொண்டிருக்கிற வைசேஷிக பக்ஷம் கண்டிக்கப் படுகிறது இந்த சூத்ரத்தால்.
சம்பந்தமும், அதை உடைய பொருள்களும் நித்யம் என்றால் , சம்பந்தி பதார்த்தங்களும் நித்யமாக வேண்டி வரும்.
சம்பந்தம் நித்யமானால் — கட்டமும் நித்யமாகும். அதற்கு சம்பந்தப்பட்ட ரூபமும் நித்யமாகப் போகும்.
ஜகத் சிருஷ்டியும் நித்தியமாய், பிரளயமே ஏற்படாது. உண்மை என்னவென்றால் ,எந்தெந்த பொருள்கள்
ஆகாரத்தோடும் ரூபத்தோடும் இருக்கின்றனவோ அவை அநித்தியம். கட , படாதிகள் போல. கடம் உடைந்து போகலாம்.
படம் ஜீர்ணமாக்கிப் போகலாம். அவை நித்யமில்லை. அபாவம் என்கிறதை தனி ஒரு பதார்த்தமாக நாம் ஒத்துக் கொள்வதில்லை.
பூதலே கடம் நாஸ்தி என்றால் அது பாவாந்தரத்தில் உள்ளது என்றுதான் பொருளே ஒழிய வஸ்து அபாவத்தை சொல்லாது,
தத்துவங்கள் அனைத்தும் சத்யமான படியாலே.
தத்வம் ஜிக்ஞாஸ மாநானாம் ஹேதுவை ஸர்வதோ முகை :
தத்வம் ஏகோ மஹாயோகி ஹரிர் நாராயண ப்ரபு :/பர :
ஆலோட்ய ஸர்வ சாஸ்த்ராணி விசார்யச புநப்புந :
இதமேகம் ஸுநிஷ்பந்நம் த்யேயோ நாராயணோ ஹரி :
ஸத்யம் ஸத்யம் புந ஸத்யம் உதிருத்ய புஜமுச்யதே
வேதாஸ் சாஸ்திரம் பரம் நாஸ்தி நத்தைவாதம் கேசவாத் பரம் — வியாசர்.
இந்த 3 வியாச ஸ்லோகங்களைக் கொண்டு அவர் ஸவிசேஷ பிரஹ்ம வாதி என்பதும்,
அந்த பர பிரஹ்மம் நாராயணனே என்பதும் விளங்கும்.
———————————————————————————————————
வஸ்து – பிரமாணம் (3) – பிரத்யக்ஷம் + அனுமானம் + சப்தம்.
பிரமேயம் (7)
|
அதிரவியம் – ஸத்வம் + ஸப்த + ஸம்யோகம்
| ரஜஸ் ஸ்பர்ச சக்தி
| தமஸ் ரூப
| ரஸ
| கந்தம்
திரவ்யம்
|
அஜடம் + ஜடம் – பிரகிருதி (24) + காலம் (3)
|
பிரத்யக் + பராக் – பரத பாஸமானம் (தன்னைத்தான் அறியாது
| பிறரால் அறியாத தக்கது)
| நித்ய விபூதி + தர்ம பூத ஞானம்
| தர்மி பூத ஞானம்
|
ஜீவன் + ஈஸ்வரன் – ஸ்வயம் + ஸ்வஸ்மை பாஸமானம்
| பர (நித்ய விபூதி)
| வியூக(4)(கார்ய வைகுண்டம்)
| க்ஷீராப்தி
| பிரத்யும்ன (பிரம்மா)
| அநிருத்த (விஷ்ணு)
| ஸங்கர்ஷணர் (சிவன்)
| விபவ – ஆவேசம் + அம்சம் + பூர்ணாவதாரம் | அந்தர்யாமி (தகராகாசம்)
| அர்சை (106 பூலோக திவ்ய தசங்கள்)
| ஆழ்-ஆசா-அபிமான-அந்திம
| ஸ்தலங்கள்)
|
நித்யன்
முக்தன்
பத்தன்
|
புபுக்ஷு – அர்த்தகாம பரன் + தர்ம பரன்
| |
| தேவதாந்த்ர பரன் + பகவத் பரன்
முமுக்ஷு
|
பரம மோக்ஷர்த்தி + கைவல்யார்த்தி
|
பிரபன்னன் + பக்தன்
|
பரமை காந்தி + ஏகாந்தி
|
ஆர்த்தன் + திருப்தன்
————————————————————————————————————
இதத்தனையும் பகவானுக்கு சரீரமாக உள்ளன.
தர்ம பூத ஜ்ஞானம் , ஸத்வம், ரஜஸ், இவைகள் திரவ்ய த்வாரா பகவானுக்கு சரீரமாக உள்ளன,
தனித்து அவனுக்கு சரீரம் என்று சொல்லப் பட வில்லை.
ஈஸ்வரன் சரீரீ ஆகும்போது கூட தானும் தர்மபூத ஜ்ஞானத்தோடே சரீரீ ஆகிறான் என்பதும் சித்தாந்தம்.
இந்த சரீராத்மா ஸம்பந்தத்தை சமவாயி சம்பந்தத்தால் சாதிக்க முடியாது.
துவைதிகள், ஏகாயனர்கள், சைவர்கள், நியாய வைசேஷிகர்கள் அனைவரும் இந்த சரீர-ஆத்ம பாவத்தை
அடியோடு ஒத்துக் கொள்வ தில்லை.
சமவாயி என்பது அஸமஞ்சஸமாக இருக்கிறது என்று கீழ் சூத்ரங்களால் காட்டப்பது.
அது நித்யம் என்று சொன்னபடியாலே – ஜகத்து, அத்தோடு கூடி இருக்கிற சம்பந்தி பதார்த்தங்களும் நித்தியமாக வேண்டி வரும்.
இது பிரத்யக்ஷ விரோதம் மட்டுமல்லாது ஸம்ஹாரம் என்பதே ஏற்பட்டாது. எனவே பரமாணு ஜகத் காரணமாக மாட்டாது.
இத்தால், பிரஹ்ம காரண வாதமே ஸ்ருதிக்கு தாத்பர்யம் என்பது நிரூபிக்கப் பட்டது.
ஜ்ஞானம் ஸ்வரூப அநுபவகதமானால் ஆனந்தமாகும்.
————————————
சூத். 2-2-14 :: ரூபாதி மத்வாச்ச விபர்யயோ தர்ஸநாத் —
பிரஹ்ம வித்தை 32ம் அதிகருத்தாதிகாரம். எப்படி ஆற்றங்கரைப் புல் பசுமாட்டுக்கும் , காட்டிலுள்ள கோரைப்புல் யானைக்கும்
உணவாகுமோ அதுபோல விசேஷாதிகாரிகளுக்கு மட்டுமே அவை ஆனாலும் ,
அதற்குள் அந்தரகதமாக இருக்கிற ஜ்ஞாஸ வித்தை (அ ) பிரபத்தி மார்கம் ஸர்வாதிகாரம்.
பிராஹ்மனேப்யோ ததி நீயதாம் தக்ரம் கௌண்டின்யாய – என்ற நியாயத்தாலே
பிரஹ்ம வித்தைக்குள் அடக்கம் மானாலும் ஸத்-சூத்திராதிகாரிகளுக்கும் இந்த நியாஸ வித்தையில் அதிகாரம்
என்பது ராமாநுஜார்ய திவ்யாஜ்ஞை . .
ரசநானுப்பபத்தி அதிகரணத்தில் பிரதான காரண வாதியான சாங்கியனை நிராஸனம் பண்ணி அடுத்து
இன்னமொரு பிரதான காரணவாதியான பாசுபதனை எடுக்காமல் இடையில் பரமாணு காரணவாதியான
நையாயிக வைசேஷிகரை நிரசிக்க தொடங்கியது , பாசுபதனுடைய பாஹ்யத்வ ஆதிக்கத்தாலே.
பாசுபதன் சிவ பாரமயத்தை சொல்வதோடு அதற்கு வேதப் பிரமாணத்தையும், வர்ணாஸ்ரம தர்ம சாஸ்திரமான
மந்வாதி ஸ்மிருதிகளையும் நிராகாரணம் பண்ணி, சைவ ஆகமங்களையே அவலம்பித்த நிக்ருஷ்டதை யாலே
அவர்களை விசேஷித்து கண்டிக்க வேண்டி தனித்து சூத்ரமிட்டார் சூத்ரகாரர்.
இது எதைப்போலே என்றால், ஸர்வ தர்ம ஸங்கிரகத்தில் சங்கரர், அடுத்து வரும் பௌத்த பக்ஷ நிரஸன கிரமத்தில்
வியாச சூத்திரங்களை பின்னிருந்தது முன் அவலிம்பித்தாப்போலே இது என்று சொல்லலாம்பட்டி உள்ளது.
பௌத்தர்கள் 4 வகை. -வைபாஷிக + சௌத்திராந்திகன் -யோகாசாரன் -சூன்யவாதியான மாத்யமிகன்
இவர்கள் மதத்தை வியாசர் 3 கோஷ்டியையையும் 3 அதிகரணம் கொண்டு நிரசிக்கிறார்.
ஆனால் சங்கரரோ தம்முடைய ஸர்வதர்ம ஸங்கிரகத்தில் முதலில் மாத்யமிகன் அடுத்து யோகாசாரன், வைபாஷிக , சௌத்திராந்திகன் என்று
இவர்கள் பரஸ்பரம் கண்டனம் பண்ணிக் கொள்வதாக அதிகரண பரிக்ரம பங்கமாக பேசியபடி போலே என்று கொள்ள அமையும்.
நடுவில் சமவாய தத்வ நிரசனம் பிரஸ்துதமானதுக்கு காரணம் என் வந்தது ? என்றால்
நாம் சொல்லுகிற தத்வங்களான ராமானுஜ சித்தாந்தமென்ன? வியாச சித்தாந்தமென்ன? அதற்கடிப்படையான தத்துவங்கள் என்ன?
அதன்படி தத்வ விபாகம் பண்ணிப் போனால் பகவானை அடையலாம் அன்றி வேறு எந்த விதித்தாலும் பிரஹ்மத்தை கிட்ட முடியாது .
குறிப்பாக ஜகத் காரணத்வத்தை சொல்ல வந்தபோது நையாயிகன் கால தேச ஈஸ்வரன் அதிருஷ்டம் இவை
சாதாரண காரணம் என்றும் , அசாதாரண காரணம் (அ ) உபாதான காரணம் பரமாணு என்றும் சொன்னான்.
பகவானை நிமித்த காரணம் என்று மட்டும் கொண்டு அந்த ஈஸ்வரனை அனுமானத்தாலே சித்திக்கிறேன் என்று சொல்லி
ஸமவாயி , அஸமவாயி காரணங்களை பற்றிப் பேசினான்.
நம்முடைய சித்தாந்தம் எப்படி இருக்கிறது ? என்றால்
தத்வம் ஜிஞாஸ மாநானாம் ஹேதுவை ஸர்வதோ முகை :
தத்வம் ஏகோ மஹாயோகி ஹரிர் நாராயண ப்ரபு :
என்று தத்வம் ஒன்றே தான். அது ஸூக்ஷ்ம சித்தசித் விசிஷ்டமானபோது காரணமாயும்,
ஸ்தூல சித்தசித் விசிஷ்டமானபோது காரியமாயும் வியாபரிக்கிறது . இது அவஸ்தாந்தர பேதமே ஒழிய திரவியம் ஒன்றே தான்.
அவன்தான் காரியமாகிறான். அதனால் உபாதானகாரணமும் அவனே என்ற இதைக் கொண்டு அவனுக்கு அபேதத்தையே சொல்லலாம்.
நையாயிகன் அவயவத்தைக் காட்டிலும் அவயவி அதிருக்தம் – வேறு பட்டது. காரியம் வேறு. காரணம் வேறுதான் என்றான்.
சாங்கியன் காரியத்தில் காரணம் அடங்கி உள்ளது. அவஸ்தா பேதமும் அதனுள்ளேயே அடக்கம் என்று சொல்லி வைத்தான்.
இவை எல்லாம் ஆரம்பணாஅதிகாரணத்தில் விளக்கப்பட்டன.
அவ்விடத்தில் நம் முடைய சித்தாந்தம் என்ன காட்டப் பட்டது என்றால்
திரவியத்தைப் பற்றி சொல்லும்போது, எது உபாதான காரணமாக இருக்கிறதோ – அதாவது எது அவஸ்தாஸ்ரயமாக இருக்கிறதோ –
அதுவே திரவியம் என்றதாயித்து. அவஸ்தா பேதமாவது அப்பிரதத் சித்தமானது ஒரு நிலையில் இருந்தது இன்னொரு நிலைக்கு
மாறுவது காதாசித்கமாய் , ஸ்வரூபம் தான் நித்தியமாய் பிரஹ்மத்துக்கு
1. அபின்ன நிமித்தோபாதான காரணத்வம் இரண்டும்
2. ”பதிம் விஸ்வஸ்ய மீஸ்வரகும் ” என்று அத்தனைக்கும் உள்ளே பிரவிஸ்ய நியமன சீலனாய் வர்த்திக்கிற சரீராத்மா பாவம்
இவை அனைத்தும் சித்திக்க இந்த ஸமவாயி பதார்த்தத்தை கண்டிக்க வேண்டிய அவசியம் வந்தது.
சாவயவ, நிரவயவ தோஷம் வேதோக்த பகவத் தத்துவத்துக்கு ஏன் பொருந்தாது என்பதை
கிருஸ்ந பிரஸக்தி அதிகாரணத்தில் ஸ்ருதேஸ் து ஸப்த மூலத்வாத் என்ற சூத்திரத்தின் மூலம் விளக்கிய தோடு
வேதம் வல்லாரைக்கு கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து – என்று வேதம் என்னவெல்லாம் சொல்லி இருக்கிறதோ
ஸர்வஜ்ஞ
ஸர்வ சக்தி
கல்யாண குணாகர
ஸத்ய காம
ஸத்யசங்கல்பத்வாதி
அஷ்ட குணங்களோடு கூடிய பர பிரஹ்மத்தை வேதாந்தம் காட்டிய வழியில் ஈஸ்வரனை அறியலாமே ஒழிய –
வேதாந்தத்தில் சொல்லப்பட்டதான இத்தனை விதமான கல்யாண குணங்களை வேத விருத்தமும், இல்லாததுமான
ஸமவாயி , அஸமவாயி , அபாவ பதார்த்தங்களைக் கொண்டு அனுமானிக்க ஈஸ்வரனிடத்திலோ சாக்ஷி மாத்ர ஈஸ்வரனிடத்திலோ
பொருத்துவதற்கில்லை.
அதனல் இடையில் வந்த ஸமவாயி நிராகரணம் தான் கீழ் சூத்ரத்துக்கும், இதுக்கும் அடுத்த சூத்ரத்துக்குமான சம்பந்தம்.
ரூபாதி மத்வாச்ச விபர்யயோ தர்ஸநாத் ::
பகவானுக்கு காரியமாக உள்ள இந்த பிருத்வி, அப்பு தேஜஸ் ஆகிற அசேதனம் என்ன, சேதனம் இவை
ததேவ சௌம்ய! இதம் அக்ர ஆஸீத் – என்பதில் இதம் ஸப்த வாச்சயமாய் இப்போது நாம ரூபத்தோடு விளங்கா நிற்க,
பிரளயாவஸ்தையில், அவை ஆவியாஹ்ருதங்களாய் ஸூக்ஷ்ம நாம ரூபங்களோடு அந்த மூலப் பிரக்ருதியில் இருக்க வேண்டும்.
காரணம் இல்லாதது உண்டாக்க முடியாதாகையாலே.
படத்திலே தந்து அவியாஹ்ருதமாய் இருக்கிறது. அந்த படத்தின் வர்ணம் தந்துவின் ரூபத்தின் பேரில் அமைகிறது.
சிகப்பு வர்ண தந்துவால் சிகப்பு வர்ண படம் கிட்டுகிறது. அதுபோல ரக்த, பீத,, விசித்திர வர்ண படங்கள் உண்டாகின்றன .
ஆக பட ரூபத்துக்கு தந்து ரூபம் காரணம். படத்துக்கு தந்து ஸமவாய காரணம்.
இப்படி, காரணத்தில் உள்ள ரூபாதி குணங்கள், காரியத்தில் பரிணமிக்கின்றன என்பதாகச் சொன்னான்.
——————–
சூத். 2-2-15 :: உபயதா ச தோஷாத் ::
அப்படியானால், ஜகத்துக்கு ரூபம் உண்டு. பரமாணுவுக்கு ரூபம் கிடையாது என்று சொல்ல,
ஜகத்துக்கு ரூபம் எப்படி வந்தது ? என்பது கேள்வி.
பரமாணுவுக்கு ரூபம் உண்டு என்று சொல்லுவையேல், ரூபாவத்தானது எல்லாம் அநித்யமாமே.
அப்போது பரமாணு அநித்தியம் என்றல்லவோ தேறும்? அன்றி ரூபம் உண்டு என்றால் சூக்ஷ்மத்வம் தொலையும்.
ரஸ, கந்தங்கள் உண்டு என்றால் நிரவயவத்வம் தொலைந்து கடபடாதிகள் போலேயாகும்.
இல்லை ரூபம் கிடையாது என்றால், காரியத்துக்கும் ரூபா சூன்யத்வம் சித்திக்க வேண்டும்.
அது பிரத்யக்ஷத்துக்கு விரோதம். எப்படிக்கு கொண்டாலும் இந்த அசமவாய சம்பந்தம் அஸமஞ்ஜஸம் .
————-
சூத். 2-2-16 :: அபரிக்ரஹாத் ச அத்யந்தம் அநபேக்ஷஆ ::
ஸாங்கிய கபில மத ஸத்காரியவாதம் என்ன, தத்வ விபாகம் என்ன இப்படி சில அம்சங்கள் நமக்கு ஒத்துப் போகின்றன.
ஆனால் இந்த தார்கிக, நையாயிகள் பக்ஷம் ஒரு அம்சத்திலேயும் ஒத்துப் போவதில்லை.
ஆகவே இந்த காணாத , கௌதம பக்ஷம் வைதிகர்களுக்கு அத்யந்த அநபேக்ஷைவ :மோக்ஷஅர்த்த பிரவர்தனமாக உள்ள
இந்த சாரீரக சாஸ்திரம் இதில் முற்கூறியபடி இம்மதம் முழுவதும் பொருந்தாமை கொண்டு அநாதரணீயம்.
சூத்திரத்தில் உள்ள ”ச”காரம் முன் சூத்திரங்களில் சொன்ன பொருந்தாமை களை கூட்டிக் கொள்கிறது.
ஸர்வம் ஸ்வலக்ஷணம் ஸலக்ஷணம்.
ஸர்வம் துக்கம், துக்கம்.
ஸர்வம் சூன்யம், சூன்யம்
என்று ஸ்வரூபமே தொலைவதாக சொல்கிற பௌத்தன் பூர்ண வைநாசிகன் என்றால்
இந்த தார்கிகன் அர்த வைநாசிகன் என்று சிஷ்ட கோஷ்டியில் பிரசித்தம்.
தார்கிகன் சொல்வது என்ன வென்றால் இந்த சரீரம் க்ஷணிகம் என்பதாக. இது நாம் உண்ணுகிற ஆகாரம், பருகிற தீர்த்தம்,
ஒளஷதம் தன்மூலம் உபசய, அபசயங்கள் பிரதிக்ஷணம் உண்டாகிற காரணத்தால், காரியமாய் இருக்கிற இந்த சரீரமும் க்ஷணிகம் என்கிறான்.
உதாரணத்துக்கு மேகம் உண்டாவதும், மழை பொழிவதும், கணுக் கணு நீரால் உண்டாகும் சமுத்திரம் போலேயும்;
கடி எந்திரம் கொண்டு சால் சாலாக நீர் கிணற்றில் இருந்து இறைப்பது போலேயும் ஸர்வம் க்ஷணிகம் என்கிறான்.
எனவே இவர்கள் தள்ளத்தக்கவர்களே.
ஆனால் இவர்களுடைய தர்க்க சாஸ்திரத்தால், அரண்மனைக்கு புறத்தே மதிலை சுற்றியுள்ள அகழி போல
பௌத்தாதிகளை தூரத்தே வைக்குமளவாகக் கிஞ்சித்து ரக்ஷணை உண்டு அவ்வளவே.
வேதாந்த சாத்திரமும் கூட நம்முடைய ராணுவப் படை போல பர பக்ஷ நிரசனத்துக்கே ஆக வேண்டும்.
அந்தப்புர ஸ்தானத்தில், நம் ஆழ்வார், ஆசாரியர்களுடைய ஸ்ரீ ஸூக்திகள் என்ன, அதில் சொல்லப்பட்ட நாயகா- நாயகி பாவம் என்ன,
அதனால் கிட்டுகிற பரபக்தி, பரஜ்ஞான மென்ன அதன் மூலமாக ஆண்டு அனுபவிக்கிற
பகவத் ஸ்வரூப, ரூப, குண அனுபவம் என்ன இவைகளையே தேக யாத்திரைக்கு உபஜீவனமாக கொள்ள அமையும்.
—————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்- திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply