ஸ்ரீ பாஷ்யம்— 1-1-7-அந்தர் அதிகரணம் (ஸூத்ரங்கள் 21-22 ) —ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்

ஸ்ரீ பாஷ்யம்— –1-1-5-ஈஷத் அதிகரணம்- (ஸூத்ரங்கள் 5-12 )
1-1-6-ஆனந்த மய அதிகரணம் (ஸூத்ரங்கள் 13-20 )
1-1-7-அந்தர் அதிகரணம் (ஸூத்ரங்கள் 21-22 )
1-1-8-ஆகாசாத் அதிகரணம் (ஸூத்ரம் 23 )
1-1-9-பிராணாதிகரணம் – (ஸூத்ரம் 24 )
1-1-10-ஜோதிஸ் அதிகரணம் (ஸூத்ரங்கள் 25-28 )
1-1-11 இந்திர பிராணா அதிகரணம் (ஸூத்ரங்கள் 29-32 ) -ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் —

————

அந்தர் அதிகாரணம் :

இது கீழே சொல்லப்பட்ட ஆனந்தமயா அதிகரணத்துக்கு சேஷபூதமாக இருப்பது.
அதாவது ஆனந்தமயா திகாரணத்தில் சொல்லப்பட்ட ஜீவ விலக்ஷணத்வமே இதிலும் சொல்லப்படுகிறது.

இதை தனி அதிகரணமாக வைத்தின் காரணம், விஷய வாக்கியம் மற்றும் அது சொல்லப்பட்ட பிரஹ்ம வித்தைகள் வேறானபடியாலே,
அதிகரணமும் தனியாக வைக்கப்பட்டது எனலாம்.
சொல்லப்போனால், முதல் இரண்டு அத்யாயமுமே இந்த பிரகிருதி-ஜீவ விலக்ஷணன் பரமாத்மா என்று சொல்ல வந்தவையே.

சரி. கீழே பார்த்த ஆனந்தமயாதிகரணத்துக்கும் இந்த அந்தர் அதிகரணத்துக்கும் விசேஷமாக வேறுபாடு எதுவும் உண்டா எனில் ,
கீழே 1. அல்ப புண்யம் 2. பிரஹ்மாநுபவத்துக்கு துல்யமான அதிசியானந்த பரிசயம் இல்லாதவன்
3. பீஷாஸ்மாத் வாதப்பவதே , பீஷோ தேதி சூர்யா: பீஷாத் தே அக்நி சேந்த்ரிஸ்ச மிருத்யுத் தாவதி பஞ்சம : என்றபடி
பெருப்பெருத்த தேவதைகள் யாருக்கெல்லாம் பயம் இருக்கிறதோ அவர்கள் யாரும் ஜகத்காரணமாக முடியாது .
யார் பிறருக்கு அபயம் அளிக்க முடியுமோ அவன்தான் ஜகத்காரணமாக முடியும் என்பதாக சொல்லப்பட்டது.

அப்படியானால், பிரஜாபதி,இந்திரன் சூரியன் முதலான தேவதைகள் ஆதிகாரிகர்கள்.
அவர்கள் புண்யத்திலும் , அபயத்திலும் குறைவு கிடையாதே, இவர்கள் ஏன் ஐகத்காரணமாக முடியாது என்று
பூர்வ பூர்வ பக்ஷ கேள்வி கேட்க அதற்கு பதில் இந்ததிகரணத்தில் சொல்லப்படுகிறது .

1. அந்த : தத் தர்மோபதேசாத்:: சூத் .21.

அந்த:
உள்ளே – ஏஷோ அந்தர் ஆதித்யே என்றும் ஏஷோ அந்தர் அக்ஷி என்றும் இருக்கிற விஷய வாக்கியங்களில் உள்ள
அந்தர் என்பது சூரியமண்டலத்துக்குள்ளேயும், நம்முடைய கண்ணுக்குள்ளேயும் இருக்கிற புருஷன், பரமாத்மாதான் , ஏனென்றால்
தத் தர்மோபதேசாத் –
ஜீவாத்மாவில் சகஜமாக இருக்கலாகாது , பரமாத்மாவில் மட்டுமே இருக்கக்கூடிய அபகதபாபத்வாதி தர்மங்கள்
ஸயேஷு ஸர்வேஷு பாப்மப்ய : உதித : என்கிற புருஷன் இடத்திலே இருப்பதாக சொல்லி இருக்கிறபடியால்.
பாப்மா = அபகத பாபத்வம் (or) அபகத கர்மத்வம் அதாவது கர்ம வஸ்யகந்த லவலேசமும் இல்லாதவன்.
பாபம் என்றது புண்யத்துக்கும் உபலக்ஷணம்.
ஜீவாத்மாக்களோ, கர்ம வஸ்யர்கள் . அதாவது, அபகத பாபத்வம் ஜீவாத் அன்ய ஏவ தர்ம: என்றால் பரமாத்ம தர்மம் என்று தொனிப்பொருள்.
லோகேஸத்வம்
காமேஸத்வம்
ஸர்வ காமத்வம்
ஸர்வ பூத அந்தராத்மத்வம்
விஜர:
விமிருத்யுஹு :
விசோக :
விஜிகிச்ச:
அபிபாசா :
சத்யா காம :
சத்யா சங்கல்ப:
இவை அபகத பாபத்மத்துடைய அனுசாரிகள்.

தனவான் ஸுகீ தேவதத்த : என்ற இதில் உள்ள தனவான், ஸுகீவான் என்கிற விசேஷணங்கள் இரண்டுக்கும் கார்ய-காரண பாவம் சொல்லலாவது,
பணம் இருப்பதால் சுகபோகி என்று பொருள் படும் படியாக . அதுபோல, அபகத பாப்மா என்று சொல்ல, மற்ற 7ம் கூடவே சித்திப்பனவாகும் .

ஸ ஏஷ: ஸர்வ பூத அந்தராத்மா , அபகத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண: – ஸுபாலோபநிஷத்
பஹுஸ்யாம் பிரஜா யேதி என்கிற சத்ய சங்கல்பத்வ பூர்வக -ஸமஸ்த சிதசித் வஸ்து ஸ்ருஷ்டி யோகம்
நிருபாதிக பயாபய ஹேதுத்வம் -அதிசயானந்த யோகம் -வாங்மனஸ் பரிமித பரிச்சேத ரஹிதத்வம்
இவை ஒரு ஜீவாத்மாவுக்கு சகஜமாக சம்பவிக்குமா? என்றால் ஏற்படாது.
அசித்துக்கோ ஏற்படுகிற பிரசக்தியே இல்லை என்றே சொல்ல வேண்டும் .
பரமாத்மாவுக்கோ என்னில் இவை அனைத்தும் அகர்ம சம்பாத்தியம் . ஸ்வாபாவிகம்.

எனவே அப்படிப்பட்ட பரமாத்மா ஸ்ருஷ்டி கர்த்தா ஆக முடியும்.
நிரம்ப புண்யம் சம்பாதித்தாலும், பிரம்மா , இந்திரன், அக்கினி, சூர்யன் இவர்கள் ஸ்ருஷ்டிகர்த்தா ஆக முடியாது.
ஸ்ருஷ்டி கர்த்தா ஆகமுடியாது என்றால், ஸ்திதி கர்த்தா, லய கர்த்தாவாகவும் ஆகமுடியாது என்பது தொக்கி நிற்கும்.

பரமாத்மாவுக்கான அசாதாரண தர்மங்கள், ஒரு ஜீவாத்மாவிடத்தில், இருக்க விழியில்லை யாதலால்,
ஆதித்ய மண்டல வர்த்தியாகவும், அந்தர் அக்ஷி புருஷனுமாக உள்ளவன் பரமாத்மாவேயாக வேணும்.
ஜீவாத்மா ஆகமுடியாது, அவன் எவ்வளவு உயர்ந்த புண்யசாலியானாலும், என்பதாக.
பரமாத்மாவுடைய சரீரம் இச்சா கிருஹீத அபிமத தேகமாதலால், அதனை திவ்விய மங்கள விக்கிரகம் என்று கூறலாவது.
அவனுடைய பிறப்பும் அவதாரம் என்று அழைக்கப் படுகிறது. காரணம்,
தந்தைதாய் யார் என்பதும்,
எப்போது எங்கே பிறப்பது என்பதும்
எப்போது அவதாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்பதும் தான் முடிவு செய்கிறபடியால்.
எனவே, சரீரம் இருக்கிறது என்பதனாலேயே, அவனுக்கு கர்ம வசியத்தை உண்டு என்பது தவறு.

சரீர எப்போதும் குணத்ரயாத்மகமானது ஆகையால், கர்மத்துக்கு அனுகுணமாக ஏற்படுவது என்பது பரமாத்மா விஷயத்தில் ஒவ்வாது.
காரணம், அவனுடய அவதாரம் கர்ம வஸ்யமானது அன்று. கிருபா வஸ்யமானது.
அவனுடையது திவ்ய மங்கள விக்ரகம் , சுத்த சத்வ மயமானது. பத்த ஜீவர்களுக்கான பாஞ்ச பௌதிக சரீரம்போல் அன்று.
ஸ்வாபிமத ஸ்வாநுரூப, அபிராக்ருத திவ்ய மங்கள விக்ரகம் அவனுடையது.
எனவே, சரீர சம்பந்த இருப்பதனாலேயே அவன் ஜீவாத்மாக இருக்க வேண்டும் என்பது இல்லை.

2. பேத வியாபதேசாத் ச அந்ய : சூத். 22.

பரமாத்மா, பரம்ஜோதி என்று சொல்லப்படுகிறவன் ஆதித்யாதி ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறு பட்டவன், என்பதாக
வேத வாக்கியங்கள் ஓதுகிறபடியால். எங்கே சொல்லியிருக்கு என்று கேட்டால்

”ய ஆதித்யே திஷ்ட்டன்னு, ஆதித்யாது அந்தர: யம் ஆதித்யோ ந வேத யஸ்ய ஆதித்ய: சரீரம், யா ஆதித்யோ அந்தரோ யமயிதி ”
–அந்தர்யாமி பிராஹ்ம்மணம் , பிரஹதாரண்யகம் .

சாந்தோக்கிய உபநிஷத்தில் ”தத்வமஸி ” என்பது 9 முறை ஓதப்பட்டு இருக்கிறபடியால், ”அபேதமே” ஒளபநிஷத சித்தாந்தம்
என்று அத்வைதிகள் சொன்னாலும், இந்த அந்தர்யாமி பிராஹ்மணத்தில்,
”யஸ்ய ஆத்மா சரீரம், யஸ்ய பிருதிவீ சரீரம் ” என்பதான சரீராத்மா பரமான சப்தங்கள் 22 முறை ஒத்தியிருக்கிறபடியால்,
” ஜீவ-பர: பிரகாரத்தயா அபேதமே ” ஒழிய, கேவல அபேதம் அன்று என்பது ஸுஸ்பஷ்ட்டம்.
இதை அவலம்பித்தே பகவத் ராமானுஜர் தம்முடைய பிரதி தந்த்ர சித்தாந்த (unique, unassailable) மாகிற
ஸவிசேஷ பிரஹ்ம வாதத்தை முன்னிருத்தினார் என்னத்தகும்.

ய யோ அக்ஷரம் அந்தரே ஸஞ்சரதி-அந்தரன்னு யஸ்ய அக்ஷரம் சரீரம்-யம் அக்ஷரம் ந வேத
யோ மிருத்யுர் அந்தரே ஸஞ்சரன்னு-யஸ்ய மிருத்யுர் சரீரம்-யம் மிருத்யுர் ந வேத
ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா-அபகத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண: இதி-தஸ்ய அபகத பாப்மன பரமாத்மன:
ஸர்வான் ஜீவான் சரீரத்வேன வியபதிஷ்ய-தேஷாம் அந்தராத்ம ஸ்வேனயேயம் வியபதிஷ்யதி–ஸுபாலோபநிஷத்

எனவே ஜீவாத்மா சரீரம், பரமாத்மா ஆத்மாவினுடைய ஸ்தானத்தில் இருப்பவன் என்பதை இந்த ஸ்ருதி வாக்கியங்கள்
விஸதமாக ஓதி இருப்பதால், அத: ஸர்வேப்ய: ஹிரண்யகர்பாதி ஜீவேப்ய: அன்ய: ஏவ பரமாத்மா இதி ஸூக்தம் .

பக்தியா மாம் அபிக்ஞானாதி யாவாம் யத் யாஸ்தி தத்வத: — பகவத் கீதை.
என்று உபாசனத்தாலேயே பகவானை அடைய, பக்தியே பரமோபாயம் . அத்தைய பக்தியைத் தவிற வேறு உபாயம் கிடையாது
என்பது நம்முடைய சித்தாந்தத்துக்கும் சம்மதமானதே.
இந்த விஷயத்தில் பகவானுடைய ஸ்வரூப, ரூப, குணங்களை நானாவித பிரஹ்ம வித்யைகள் மூலம் பரிசயம் செய்துகொள்வது சககாரியாகும்.
அந்த திருஷ்டியில் ஒவ்வொரு அதிகரணமும் உதவியாகிறது.

அந்த: தத் தர்மோபதேசாத் – சூத் .1-1-21 (அதிக .7 சூத் 21-22) ::

பரமாத்மாவுக்கான அசாதாரண தர்மங்கள், ஒரு ஜீவாத்மாவிடத்தில், இருக்க விழியில்லை யாதலால்,
ஆதித்ய மண்டல வர்த்தியாகவும், அந்தர் அக்ஷி புருஷனுமாக உள்ளவன் பரமாத்மாவேயாக வேணும்.
ஜீவாத்மா ஆகமுடியாது, அவன் எவ்வளவு உயர்ந்த புண்யசாலியானாலும், என்பதாக.

சித்தாந்த ஸூத்ரங்கள்-இரண்டும் –
அந்தக -தர்மஉபதேசாத்-அந்தஸ்த தர்ம உபதேசாத்- அபஹத பாப்மாதி ஸூதகா அவனுக்கே உண்டு –
நிருபாதிக பாப ரஹித்தவம் -அவனையே உபாஸிக்க சொல்கிறது –உதித என்பதால் –கர்ம வஸ்யம் கந்தமும் இல்லாதவன் அவன் ஒருவனே
கர்மானுகுணமான சுக துக்கங்கள் ஜீவர் அனுபவிக்க –
அபஹத பாப்மா -மற்றை அனைத்துக்கும் உப லக்ஷணம் -ஸர்வேச்வரத்வம் -சரவஞ்ஞத்வம் -சத்யகாமத்வம் சத்யா சங்கல்பம் –
சர்வ பூத அந்தராத்மா -அவன் –
தனவான் ஸூ கி தேவதத்தன் -தனம் வந்தால் ஸூ கம் என்பது இல்லையே -லவ்கிக உதாரணம்
பஹுஸ்யாம் -நிருபாதிக பய அபய ஹேதுத்வம் -அவனுக்கே –
வாக் மனஸ் அபிரிச்சேத்யன் அவனே -அனவதிக அதிசய ஆனந்த யோகன் அவன் ஒருவனே -இச்சா க்ருஹீத அபிமத திவ்ய மங்கள விக்ரகன்-
கரண களேபரங்களை கொடுத்து தன்னை அடைய -சரீரம் ஹேயமானாலும் இந்த த்ருஷ்டியில் உபாதேயம் அன்றோ

வேதையை ச வியாபதேசாத் ச அந்நிய -அடுத்த ஸூத்ரம் -சூத் .1-1-22 (அதிக .7 சூத் 21-22) ::
பரப்ரஹ்மம் பரஞ்சோதி வேறுபட்டவன் -ஸ்ருதி சொல்லுமே -யஸ்ய ஆதித்ய சரீரம் ஆதித்ய திஷ்டன் -யா ஆதித்ய ந வேத –
உள்ளே இருந்து நியமிக்கும் -அந்தர்யாமி ப்ரஹ்மம் –யஸ்ய ஆத்மா சரீரம் போலே–நமக்கும் ஆத்மாவாக இருப்பவன் –
தத்வமஸி 9 தடவை -உண்டே -அந்தர்யாமி -22 தடவை சொல்லும் ஸ்ருதி -ஒரு தடவை சொன்னாலும் புரியும் –
வலியுறுத்தி சொல்லி புரிய வைக்கும் -சரீர சரீரி பாவம்
ப்ருஹதாரண்ய உபநிஷத் சொல்லும் 22 தடவை -சரீரம் சரீரி பாவம் சொல்லி –
யஸ்ய அக்ஷரம் சரீரம் –சர்வ பூத அந்தராத்மா -ஸர்வான் ஜீவன் சரீரத்தவேன
இதை அந்தர் கரண்யம்-சொல்லி நிகமிக்கிறார் –

————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading