ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –
இப்படி இவர் வித்தராகிறதைக் கண்டவர்கள் –
உமக்கு உஜ்ஜீவன ஹேதுவான ஜ்ஞான பிரேமங்கள் உண்டாகையாலே தரித்து இருக்கலாமே -என்ன
தம்முடைய ஔதார்யாதிகளாலே இந்த லோகத்தில் உள்ளார்க்கு தாமே ரஷகராய் யதா ஜ்ஞான உபதேசத்தை பண்ணின
ஸ்ரீ எம்பெருமானாரை அனுசந்தித்து இருக்கும் பலம் ஒழிய எனக்கு வேறு ஒரு தரிப்பு இல்லை என்கிறார் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–
கீழ் பாட்டிலே
ஸ்ரீ எம்பெருமானார் தம்முடைய ஔதார்யத்தாலே தம்மை ததீயருடைய சேர்த்தியில் சேர்த்து அருளினர் என்று –
அனுசந்தித்து இவர் வித்தராய் இருந்தவாறே –
அருகே இருந்தவர்கள் – உமக்கு அவர்கள் பக்கல் ஞான பிரேமங்கள் உண்டாகையாலே -அவற்றைக் கொண்டு ஈடேறலாமே என்ன –
வதான்யதையாலும் -அதுக்கு ஹேதுவான பரம கிருபையாலும் -சகல ஜனங்களையும் ரஷிக்கும் போது –
சீறுபாறு செய்யாமைக்கு உடலாய் -ஆஹ்லாத கரனான சந்தரனைப் போலே இருக்கிற தண் அளியாலும்
இந்த பூ லோகத்தில் உள்ளவர்களுக்கு எல்லாம் கட்டடங்க தமோ ரஷகராய் கொண்டு -யதா வஸ்த்திதமாய் –
விலஷணமான ஞானத்தை உபதேசித்து அருளின ஸ்ரீ எம்பெருமானாரே ரஷகர் என்று அனுசந்தித்து கொண்டு
இருக்கையே நான் ஈடேறு கைக்கு உடலாய் விடும் இத்தனை ஒழிய –
என்னுடைய ஞான பிரேமங்கள் அதுக்கு உடல் அன்று –என்கிறார் –
ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-
இங்கனம் ஸ்ரீ எம்பெருமானார் உடைய மிக்க வண்மை யினால் இவர் ஈடுபடுவதைக் கண்டவர்கள்
ஞானமும் ப்ரேமமும் உய்வதற்கு ஹேதுக்களாக உம்மிடம் இருப்பதனால் -நீர் தரித்து இருக்கலாமே -என்ன –
தம்முடைய வள்ளன்மை முதலியவற்றால் இவ் உலகத்தவர் கட்குத் தாமே ரஷகராய் –
உண்மையான ஞானத்தை உபதேசித்து அருளும் ஸ்ரீ எம்பெருமானாரை
ரஷகராக அனுசந்திக்கும் பலம் ஒழிய எனக்கு வேறு ஒரு தரித்து இருக்கும் நிலை இல்லை என்கிறார் .
வண்மை யினாலும் தன் மாதகவாலும் மதி புரையும்
தண்மை யினாலும் இத்தாரணி யோர்கட்குத் தான் சரணாய்
உண்மை நன் ஞானம் உரைத்த விராமானுசனை வுன்னும்
திண்மை யல்லால் எனக்கில்லை மற்றோர் நிலை நேர்ந்திடிலே – – 73- –
பத உரை –
தன்-தன்னுடைய
வண்மை யினாலும் -வள்ளல் தனத்தாலும்
மா தகவலும் -சீரிய அருளினாலும்
மதி புரையும் -சந்திரனை ஒத்த
தண்மை யினாலும் -குளிர்ச்சி யினாலும்
இத் தாரணி யோர்கட்கு -இந்தப் பூமியில் உள்ளவர்களுக்கு
தான் சரணாய் -தானே ரஷிப்பாராய்
உண்மை-பரமார்த்தமானதும்
நல் -சீரியதுமான
ஞானம் -ஞானத்தை
உரைத்த -உபதேசித்த
இராமானுசனை -ஸ்ரீ எம்பெருமானாரை
உள்ளும் -சரணாக நினைக்கும்
திண்மை யல்லால் -வலிமை ஒழிய
தேர்ந்திடல் -ஆராய்ந்து பார்த்தால்
எனக்கு -அடியேனுக்கு
மற்று ஓர் நிலை -வேறு ஒரு தரித்து இருக்கும் நிலைமை
இல்லை-கிடையாது
வியாக்யானம்
அர்த்த கெளரவம் பாராதே உபகரிக்கைக்கு உறுப்பான தம்முடைய ஔதார்யத்தாலும் –
துர் கதி கண்டு பொறுக்க மாட்டாத பரம கிருபையாலும் –
தாப ஹரனுமாய் -ஆஹ்லாத ஹரனுமான சந்தரனைப் போலே இருக்கிற தண்ணளி யாலும் –
அறிவினால் குறைவில்லாத -திருவாய் மொழி -4 8-6 —
இந்த விபூதியில் உள்ளவர்களுக்கு தாமே ரஷகராய் கொண்டு பாரமார்த்திகமாய் விலஷணமான ஜ்ஞானத்தை உபதேசித்த
ஸ்ரீ எம்பெருமானாரை ரஷகராக அனுசந்தித்து இருக்கும் பலம் ஒழிய ஆராய்ந்து பார்க்கில் எனக்கு வேறு ஒரு தரிப்பில்லை –
தண்மை -தட்பம் -அதாவது குளிர்த்தி
திண்மை -திண்ணிமை -அதாவது -மிடுக்கு .
ஞான பக்திகள் கொண்டு உஜ்ஜவிக்கலாமோ என்னில் -நம்முடைய -அஹங்காரம் இல்லாமல் —
ஸ்வாமி தயை வண்மை கொண்டே உஜ்ஜவனம் / இரக்கமே உபாயம்
தன் வண்மை -ஸ்வாமி வண்மை வாசி -வண்மை யினாலும் -வள்ளல் தனத்தாலும்
தன் மா தகவலும் -சீரிய அருளினாலும் / தன் மதி புரையும் -சந்திரனை ஒத்த தண்மை யினாலும்-
வேதம் கீதை ஸ்வாமி -மூன்று வண்மை -அதிகாரி பார்க்காமல் நமக்கு வேண்டியதை மட்டும் –
மா தகவு –இரண்டு திருக் கண்களும் சந்திரன் போலே –
ஸ்ரீ பாத தீர்த்தம் மூலம் -திருவடி நிலைகளை –சாளக்கிராமம் -முதலியாண்டான் –
தகவு- மா தகவு- தன் மா தகவு -மூன்று நிலை –
அதிகாரி பேதம் பார்க்காமல் ததேவ உபாயம் உபேயம் –ஆச்சார்ய அபிமானம் ஒழிய கதி இல்லையே –
ஸ்வ அபிமானத்தால் ஈஸ்வர அபிமானத்தை குழைத்து கொண்ட இவனுக்கு —
வண்மை யினாலும் –
அர்த்த கௌரவத்தையும் -அதிகாரி மாந்த்யத்தையும் பாராதே
சர்வரையும் சம்சாரத்தில் நின்றும் உத்தரிப்பிக்குமதான ஸ்ரீ பாத தீர்த்தத்தையும் -திருவடிகளையும் –
லோகம் எல்லாம் பருகும்படியாகவும் -சேவிக்கும்படியாகவும் -சாளக்ராமத்தில் பிரதிஷ்டிப்பைக்கும் –
பரம குஹ்யமான சரம ஸ்லோக அர்த்தத்தை பூரி தானமாக கொடுக்கைக்கும் –
தத்வே நயஸ் சித் அசித் ஈஸ்வர தத் ஸ்வ பாவ போகாபவர்க்க தநுபாய கதீருதார -என்றால் போலே
ஸ்ரீ பாஷ்ய கீதாபாஷ்யாதிகளைப் பண்ணி யருளி சர்வ விஷயமாக உபகரிக்கைக்கு உடலான ஔதார்யத்தாலும் –
வண்மை யினாலும் –
தன் என்பதை வண்மை முதலிய மூன்றினோடும் கூட்டுக
ஸ்ரீ எம்பெருமானுக்கும் இல்லாது –ஸ்ரீ எம்பெருமானாருக்கே -தனிப்பட்டு அமைந்து இருப்பவை
வண்மை முதலிய மூன்றும் -என்றபடி
வண்மை யாவது –
தாம் உபதேசிப்பதன் பொருள் சீர்மையை சிறிதும் பாராது
உபதேசத்தை வழங்கும் உள்ளன்மை-
ஸ்ரீ எம்பெருமான் உதவிய வேதமும் ஸ்ரீ கீதையும் போலே
சாரதமம் அல்லாத பொருள்களையும் . கொண்டதாய் அல்லாமல்-
சாரதமமான -அதாவது -பொருள் சீர்மை -மட்டும் வாய்ந்த உபதேசத்தை
ஸ்ரீ எம்பெருமானார் வழங்குதலின் -அவரது வண்மை தனிப் பட்டு அமைந்தது -என்க .
இப்படிப் பட்ட ஔதார்யத்துக்கு மூலம் ஏது என்றால் –
தன் மா தகவாலும் –
ஏவம் சம்ஸ்ர்தி சக்ரச்தே ப்ராம்ய மானேஸ்வ கர்மபி -ஜீவேது காகுலே விஷ்ணோ க்ர்பாகாப்யுஜாயதே -என்றும் –
சம்தப்தம் விவிதைர்த்தும் கைர்த்தூர் வசைரேவ மாதிபி -என்றும் சொல்லுகிறபடியே –
சம்சார கர்த்தத்தில் விழுந்து அழுந்தி கிடக்கிற சம்சாரிகளுடைய துர்கதியைக் கண்டு பொறுக்க மாட்டாத பரம கிருபையாலும் –
தன் மாதகவாலும் –
வந்தேறி யன்றே ஸ்வா பாவிகமாய் -அத்யந்த விலஷணமாய் –
பர துக்க அசஹிஷ்ணுத்வம் கிருபை என்னும் படியான தன் சீர் அருளாலும் –
மா தகவலும் –
மா தகவாவது -பெறுவோரின் தகுதியையோ -உபதேசிப்பதின் பொருள் சீர்மையையோ பாராது –
உயிர் மாய்தல் கண்டு ஆற்ற மாட்டாது -உபதேசிக்கைக்கு உறுப்பான பரம கிருபை .
இதம் தி நாத பச்காய -தவம் செய்யாதவனுக்கு சொல்லல் ஆகாது -என்னும் ஸ்ரீ கீதாசார்யன் போல் அல்லாது
ருசி -விசுவாசம் இல்லாதாரையும் -வலுவில் ருசி விச்வாசங்களை விளைவித்து
சரம உபாயஸ்த்தர் ஆக்கினமையின் -ஸ்ரீ எம்பெருமானார் உடைய மா தகவு தனிப்பட்டு அமைந்தது -என்க-
மதி புரையும் தண்மை யினாலும் –
சர்வ ஜன ஆஹ்லாதகரனான சந்தரனைப் போலே சர்வ ஜன ஹர்ஷ-ஹேதுவாய் கொண்டு
மகத்தான தண் அளியாலும் –
தண்மை -குளிர்த்தி –
புரை -பெருமை –
ஹரிர் துக்காநிபந்தேப்யோ ஹித புத்த்யாக ரோதிச -சாஸ்திர ஷாராக் நிகர்மானி ஸ்வ புத்ராய யதாபிதா -என்கிறபடியே
ஹிதத்தை பண்ணிப் போருகை அன்றிக்கே -பித்த ரோகத்துக்கு மருந்தாக பாலைக் குடிப்பாரைப் போலே
ஸ்வ பிரகாரத்தாலும் ஆஹ்லாதகரமான தண் அளிவை வடிவாகக் கொண்டு இருப்பது என்றபடி –
மதி புரையும் தண்மை யினாலும் –
அதாவது சந்தரன் போலத் தாபத்தைத் தீர்ப்பதும் ஆனந்தப் படுத்துவதுமான குளிர்ச்சி –
உண்மை ஞானத்தை -உபதேசிப்பதனால் சம்சார தாபத்தை தீர்த்தலாலும்-
ஸ்ரீ பகவானுடைய குணங்களை துய்க்க செய்து ஆனந்தப் படுத்தலாலும் –
ஸ்ரீ எம்பெருமானார் இடம் சந்தரன் இடத்தில் போன்ற குளிர்ச்சி உள்ளது என்க .-
சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தன்மை ஸ்ரீ எம்பெருமானிடம் உள்ளதே யாயினும்
அவன் பால் உள்ள ஸ்வா தந்த்ரியத்தின் வெப்பத்தினால் அத் தண்மை தாக்கு உறுவதும் உண்டு
ஸ்ரீ எம்பெருமானார் இடமும் ஸ்வா தந்த்ரிய வெப்பம் அடியோடு
இல்லாமையின் தண்மை என்றும் குன்றாது -தனிப்பட்டதாய் அமைந்தது -என்க .
மதி புரையும் தண்மை –
என்னும் இடத்தில்-சுடர் மா மதி போல் தாயாய் அளிக்கின்ற -என்றபடி தாய்க்கு உபமானமாக
சந்தரன் கூறப்-படுவதற்கு ஏற்ப -தாயின் குணமாகிய வாத்சல்யம் -கருதப் படுகிறது .
ஸ்ரீ பராசார பட்டர்-ஔ தார்ய காருணி கதாஸ்ரித வத்சலத்வ பூர்வேஷூ – என்று
வண்மை கருணை அடியார்கள் இடம் வாத்சல்யம் முதலிய குணங்கள் -என்று லோக மாதாவான-
ஸ்ரீ ரெங்க நாச்சியார் இடம் இம் மூன்று குணங்களை முக்கியமாக அனுசந்த்திது இருப்பது போலே –
ஸ்ரீ அமுதனாரும் இம் மூன்று முக்கிய குணங்களை ஸ்ரீ எம்பெருமானார் இடம் அனுசந்திக்கிறார் .
இத் தாரணி யோர்கட்கு தான் சரணாய் –
இப்புடைகளாலே -உபாஸ்மர்த்தா -என்றும்
உபாய உபேய பாவேன தமேவ சரணம் வ்ரஜேத் – என்றும்
ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தை தொலைத்து கொண்ட
இவனுக்கு ஆசார்ய அபிமானம் ஒழிய கதி இல்லை -என்று சொல்லுகிற கட்டளையால் தாம் ரஷகராய் –
ச ஏவ சர்வ லோகாநா முத்தர்த்தா நாத்ர சம்சய -என்றும்
தஸ்மின் ராமானுஜார்யே குருரிதசபதம் பாதி நாத்ய த்ர
தஸ்மாத் சிஷ்ட ஸ்ரீ மத் குருணாம் குலமிதமகிலம் தஸ்ய நாதஸ்ய சேஷ -என்னக்கடவது இறே –
இத் தாரணி யோர்கட்குத் தான் சரணாய் –
இருள் தரும் மா ஞாலம் ஆதலின் இத் தாரணியில் உள்ளவர்கள்-தாம் சரணாகுமாறு
கோராததோடு -அறிவினால் குறைவில்லா -என்றபடி அங்கனம் கோரவும் தெரியாதவர்களாகி
விட்டோமே என்னும் குறைபாடும் இல்லாதவர்களாய் இருப்பதை நோக்கி
கீழ்க் கூறிய மூன்று குணங்களாலும் ஸ்ரீ எம்பெருமானார் தாமே சரணாயினார்-என்க .
இத் தாரணி யோர்க்கு சரணானதாக கூறினமையின் சரணாதற்கு அதிகாரி பேதம் இல்லாமை தெரிகிறது .
உண்மை நன் ஞானம் உரைத்த –
தத்வ ஹித புருஷார்த்த யாதாம்ய ஹித ரூபமாய் -சார தமமாய் -இருக்கிற ஞானத்தை உபதேசித்த –
பஜேத் சாரதமம் சாஸ்திரம் ரத்நாகர இவாம்ர்தம் -சரவதஸ் சாரமாதத்யாத் புஷ்பேப்ய
இவ ஷட்பத -என்னக் கடவதிறே –
தத்வ ஹித புருஷார்த்த யாத்தார்த ஹித ரூபமாய் -சார தமம்-அசாரம் சாரம் சாரதரம் கழித்து
ஷட் பதம்-வண்டு-தேன் மட்டும் தருவது போல -அருளினார்
உண்மை நன் ஞானம் உரைத்த
இதனால் சரணாய் ரஷித்தபடி பேசப்படுகிறது .
உபதேசித்து திருத்தி பணி கொள்வதே ஸ்ரீ எம்பெருமானார் புரியும் ரஷணம் -என்க
உண்மை ஞானம் -பாரமார்த்திக ஞானம்
நல்ஞானம் -ஆனந்தம் ஆகும் ஞானம்
உரைத்தல்-உபதேசித்தல்
1-மாதகவால் சரணானார்
2-வண்மையினால் தானே சரணானார்
3-தண்மை யினால் உண்மை நன் ஞானம் உரைத்தார் -என்னலுமாம் –
உண்மை ஞானம் உள்ளதை உள்ளவாறே உணர்த்துவதால் தாபத்தை தீர்ப்பதாகவும்
நல் ஞானம் எம்பெருமான் குணங்களை பற்றியதாய் இருத்தலின் ஆனந்தத்தை விளைவிப்பதாயும் உள்ளது ..
மதி போன்ற தண்மை யினால் உரைக்கும் ஞானமும் மதி புரைவது ஆயிற்று .
ஆறிலே ஒன்றை -ஸ்ரீ பாஷ்யம் கற்று ஆராய்ந்து இருத்தல்
இது முடியவில்லை யாகில் -ஸ்ரீ அருளி செயல் கற்று ஆராய்ந்து இருத்தல்
இது முடியவில்லை யாகில் -ஸ்ரீ த்வயம் ஸ்ரீ குரு பரம்பரை பூர்வமாக சதா அனுசந்தானம் செய்து இருத்தல்
இது முடியவில்லை யாகில்–ஸ்ரீ திவ்ய தேசம் கைங்கர்யம் செய்து வர்த்தித்தல்
இது முடியவில்லை யாகில்–திரு நாராயண புரத்தில் குடிசை கட்டி வர்த்தித்தல்
இது முடியவில்லை யாகில்–ஸ்ரீ வைஷ்ணவர் நிழலில் ஒதுங்கி வாழனும்
இது செய்தால் மேலே கூறியவை எல்லாம் தானே கிட்டும்
இராமானுசனை உன்னும் திண்மை யல்லால் –
ஸ்ரீ எம்பெருமானாரே ரஷகர் என்று அத்யவசித்து இருக்கும் பலம் ஒழிய –
திண்மை -திண்ணிமை -அதாவது-மிடுக்கு –
மற்றோர் நிலை நேர்ந்திடில் -எனக்கு –
நன்றாக கொண்டு நிரூபித்து பார்த்தால் -என்னுடைய ஞானமும் ப்ரேமம் தொடக்கமான வேறு சிறிதும் எனக்கு இல்லை –
அகிஞ்சனனாய் அநந்ய கதியாய் இருக்கிற எனக்கு தாரகமாய் மாட்டாது என்று
தம்முடைய பாரமை காந்த்யத்தை யருளிச் செய்தார் ஆய்த்து –
இராமானுசனை —தேர்ந்திடிலே
தாமே ரஷகர் ஆனவரை ரஷகர் என்று அனுசந்திப்பதே பலம் .
ஆராய்ந்து பார்ப்பின் எனக்கு வேறு வகையில் தரித்து இருப்பது இல்லை –என்கிறார் .
———-
கண்ணார் கண்ண புரம் கடிகைகடி கமழும்
தண்ணார் தாமரை சூழ் தலைச் சங்க மேல் திசையுள்
விண்ணோர் நாண் மதியை விரிகின்ற வெஞ்சுடரை
கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ -பெரிய திருமொழி-–8-9-9-
துயக்கறு மதியில் நல் ஞானத்துள்-ஸ்ரீ திருவாய் -1-3-10–
————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply