ஸ்ரீ தேசிகர் அருளிச் செய்த ஸ்ரீ அஞ்சலி வைபவம் –சில்லறை ரஹஸ்ய கிரந்தம் —

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

ஸ்ரீ அம்ருதா ஸ்வாதிநீ -ரஹஸ்யங்களில் மூன்றாவது-ஸ்ரீ அஞ்சலி வைபவம் –

ஸ்ரீ ஆளவந்தார் -ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -28-ஸ்லோக விஸ்தரமான வியாக்யானம் – அருளிச் செய்ய –
ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் இந்த கிரந்தம் அருளிச் செய்கிறார்
இதில் அஞ்சலி பிரபாவமும் -அது பரம்பரையா மோக்ஷ காரணமாவதும் –
அஞ்சலி முத்திரை ஆகிஞ்சனம் தெரிவிப்பதாய் ப்ரபத்தியே விவஷிதம் என்பதால் சாஷாத் மோக்ஷ காரணம்
என்பதும் அருளிச் செய்யப்பட்டது

இதில் அவதாரிகா ரூபமாய் -ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்-27-

தவாம்ருதஸ் யந்தி நி பாத பங்கஜே
நிவேஸி தாத்மா கத மந்யதிச் சதி
ஸ்திதே அரவிந்தே மகரந்த நிர்ப்பரே
மது வ்ரதோ நே ஷூ ரகம் ஹி வீஷதே–27-திருச் சரணார விந்தங்களின் போக்ய அதிசயம்

இந்த ஸ்லோகத்துக்கு மூலப்பாட்டு –
நாளும் நின்று அடும் நம் பழமை யம் கொடு வினை உடனே
மாளும் ஓர் குறைவில்லை மனனக மலமறக் கழுவி
நாளும் நம் திரு உடை அடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே –திருவாய் -1-3-8-

சேவா யோக்யதை அருளிச் செய்யும் முதல் பத்தில் -ஸுவ்லப்யத்தை அருளிச் செய்யும் மூன்றாம் திருவாய் மொழியில் –
சர்வ கால ஆஸ்ரயத்வத்தை வெளியிட்டு அருளும் எட்டாவது பாசுரம் இது

இதற்கு திருக் குருகைப் பிரான் பிள்ளான் -இப்படி அநந்ய ப்ரயோஜனராய்க் கொண்டு
நம் திரு உடை அடிகள் தம் நலம் கழல் வணங்கவே–ஒரு குறை இல்லை –
நாம் அபேக்ஷித்த படியே எம்பெருமானை அனுபவிக்கப் பெறலாம் -இப்படி சிர காலம் கூட பலவத் சாத்தியமான
பக்தி யோகத்தை சாதிக்கைக்குக் காலமும் பலமும் இன்றியே அந்திமதசாபன்னரானார் இழந்து போம் யத்தனையோ என்னில் –
அந்த அந்திம தசையிலாகிலும் ஓர் அஞ்சலி மாத்ரமாதல் ஓர் யுக்தி மாத்ரமாதல் ஓர் ஸ்ம்ருதி மாத்ரமாதல்
அவன் திறத்திலே செய்ய அந்த பக்தி யோகத்திலும் நன்று என்கிறார் -என்று நிரூபிக்கப் பட்டு இருக்கிறது –
ப்ரபத்தியே ஸூசிக்கப்படுகிறது

அந்தராதி கரணம்
முன் பின் -கேசவன் தமர் கீழ் மேல் -ரக்ஷித்துக் கொடுக்கும்

த்வத் அங்க்ரிம் உத்திஸ்ய கதா அபி கேநசித்
யதா ததா வா அபி சத்ருக் ருத்தோ அஞ்ஜலி
ததைவ முஷ்ணாத்ய ஸூ பான்யசேஷ தஸ்
ஸூ பானி புஷ்ணாதி ந ஜாது ஹீயதே—28-

த்வத் அங்க்ரிம் உத்திஸ்ய ————திரு உடை அடிகள் தம் நலம் கழல்
கதாபி கேநசித் யதா —————மனனக மலமறக் கழுவி
ததா வாபி ஸக்ருத் க்ருத அஞ்சலி —-மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது
ததைவம் உஷ்ணதி —————-உடனே மாளும்
அஸூபாநி அசேஷத—————–நாளும் நின்று அடும் நம் பழமை யம் கொடு வினை
ஸூபாநி புஷ்ணாதி —————–வலமே
ந ஜாது ஹீயதே ——————–ஓர் குறைவில்லை

இவ் வஞ்சலி–நோற்ற நோன்பிலேன் –புகல் ஓன்று இல்லா அடியேன் –இத்யாதிகளில் படியே –
ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வாதி யோகத்தால் -பிரபத்தி அதிகாரியாய்ப் -பர ந்யாஸம் பண்ணுகிறவனுடைய –
ஸ்வ ரக்ஷண அர்த்த -ஸ்வ வியாபாரத்தில் -கை முடங்குகிற படியைக் காட்டுகிற முத்ரையாய் நின்ற போது

தாவதார்த்திஸ் ததா வாஞ்ஜா தாவந் மோஹஸ் ததா ஸூகம்
யாவந் ந யாதி சரணம் த்வாம் அசேஷாக நாசநம் –இத்யாதிகளில் படியே
இவ்வஞ்சலிக்கு உள்ளீடாய்க் கொண்டு சகல பல ஸாதனமாய் நிற்கிற பிரபத்தியின் ப்ரபாவத்தைச் செல்லுகையில்
தாத்பர்யம் ஆகையால் இங்கு ஒரு பிராமண விரோதமும் வாராது –

அல்லாத பகவத் கர்மங்கள் போல் இவ்வஞ்சலியும் ஒரு சத் கர்ம விசேஷமாய் நின்றால் —
இட்ட படை கல் படையாய் -பாப ஷயம் -சத்வ உந் மேஷம் -சம்யக் ஞானம் -பக்தி பிரபத்திகள் -என்று
இப்பரம்பரையாலே மோக்ஷ சாதனத்வம் உண்டாகையாலே கீழ்ச் சொன்ன
சர்வ அநிஷ்ட நிவ்ருத்திக்கும் சர்வ அபீஷ்ட சித்திக்கும் விரோதம் இல்லை

———-

அஞ்சலி -அம் ஜலயதி –நெஞ்சு உருகும் பக்தனை கண்டு நெஞ்சு உருகுவானே அவனும் –

இரும்பு போல் வலிய நெஞ்சையும் உருக்குவானே —

கர்த்ருத்வ தியாகம் காட்டுவதே அஞ்சலி –

அகிஞ்சனன் என்பதைக் காட்டுவதே அஞ்சலி என்றுமாம் –

—————-

இதன் தனியன் –
ஹிதாய சர்வ ஜெகதாம் வ்யக்தம் யோ அஞ்சலி வைபவம்
பிராஸீக சத் தம் வந்தே அஹம் வேதாந்த யுக தேசிகம் —

————-

அவதாரிகை -த்வத் அங்க்ரிம் உத்திஸ்ய –சப்தார்த்தம் –கதாபி-சப்தார்த்தம்- கேநசித் -சப்தார்த்தம்
யதா ததா வாபி -சப்தார்த்தம்—ஸக்ருத் க்ருத –சப்தார்த்தம் –அஞ்சலி–சப்தார்த்தம்–
ததைவ -சப்தார்த்தம் முஷ்ணதி அஸூபாநி –சப்தார்த்தம்–அசேஷத –சப்தார்த்தம்
ஸூபாநி புஷ்ணாதி —சப்தார்த்தம்-ந ஜாது ஹீயதே -சப்தார்த்தம்–
அஞ்சலி பிரபன்னன் ஆகிஞ்சன்யத்தைக் காட்டும் முத்திரை –சரண்யனுடைய அபய முத்திரையின் பிரயோஜனம் —
பர ந்யாஸ வ்யஞ்ஜக முத்ரா ரூபத்வ சமர்த்த தமம் -சஹஜ கிருபா விஸிஷ்ட பகவானே மோக்ஷ ப்ரதன்–
அஞ்சலியின் பரம்பரயா மோக்ஷ சாதனத்வம் -அஞ்சலி விஷயத்தில் அதிவாதாதிகளின் அநவ் சித்ய நிரூபணம் –
ஸ்லோகார்த்த ஸங்க்ரஹம் -பகவத் அநந்யார்ஹத்வ அத்யவசாயத்தைக் காணும் பிரகாரம் -உப சம்ஹாரம் –

————

அவதாரிகை –

ஸ்ரீ பெரிய முதலியார் -தவாம்ருதஸ் யந்திநி பாத பங்கஜ -என்கிற ஸ்லோகத்தில் –
பகவச் சரணார விந்தத்திலே போக்யதாதிசயத்தை அத்ய வசித்தவனுக்கு அதனுடைய துத்ஸ்த்ய ஜதையால்
கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி கண்ட இன்பம் தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம் -என்னுமதில்
சொல்லுகிற ஐஸ்வர்ய கைவல்ய ரூபங்களான ப்ராப்யாந்தரங்களிலே இளைப்பாறுகை கூடாது என்று அருளிச் செய்தார்

அநந்தரம்-தவத் அங்க்ரி முத்திஸ்ய –என்கிற ஸ்லோகத்தால்
அப்படிப்பட்ட அதிகாரிகளுக்குத் திருவடிகளை உத்தேசித்து உண்டான அல்ப அநு கூலங்களான வியாபாரத்தால்
சர்வ அபேக்ஷித சித்தி உண்டாம் படியான ஆஸ்ரயண ஸுவ்கர்யத்தாலும் திருவடிகளுடைய
துஸ்த்ய ஜதையை அருளிச் செய்கிறார் -தவத் அங்க்ரி முத்திஸ்ய-இத்யாதியால்

த்வத் அங்க்ரிம் உத்திஸ்ய -கதாபி– கேநசித் யதா ததா வாபி —-ஸக்ருத் க்ருத — –அஞ்சலி–
ததைவ – முஷ்ணதி அஸூபாநி — –அசேஷத — ஸூபாநி புஷ்ணாதி — -ந ஜாது ஹீயதே

———–

த்வத் அங்க்ரிம் உத்திஸ்ய –சப்தார்த்தம் —
த்வத் அங்க்ரிம் உத்திஸ்ய-என்கிறது சர்வ லோக சரண்யமாய் -சர்வ போக்யாதிசயிகளான தேவரீருடைய
சரணார விந்தங்களை உபாயமாகவும் பிராப்யமாகவும் அபி சந்தி பண்ணி என்கிற படி -இத்தால்
ப்ராஹ்மாணம் சிதி கண்ட்டம் ச யாஸ் ச அந்யா தேவதா ஸ்ம்ருதா
பிரதிபுத்தா ந சே வந்தே யஸ்மாத் பரிமிதம் பலம் –சாந்தி பர்வம் -357-36–
ஏதவ் த்வவ் விபுத ஸ்ரேஷ்ட்டவ் பிரசாத க்ரோதஜவ் ஸ்ம்ருதவ்
தத் ஆதர்சித பந்தாநவ் ஸ்ருஷ்ட்டி சம்ஹார காரரவ் –சாந்தி பர்வம் -357-19-இத்யாதிகளில்
பரதந்த்ர சேதனராகச் சொல்லுகையாலே சாஷாந் மோக்ஷத்திற்கு சமர்த்தர் அல்லாத
எருத்துக் கொடியுடையானும் பிரமனும் இந்திரனும் முதலான திருவில்லாதத் தேவரை கை விட்ட படியும்
அல்ப அஸ்திரத்வாதி தோஷ தூஷிதங்களான ப்ரயோஜனாந்தரங்களில் பற்று அற்ற படியும் சொல்லிற்று ஆயிற்று

———————

கதாபி-சப்தார்த்தம்-
பஹு த்வாரஸ்ய தர்மஸ்ய –என்கிறபடியே நாநா விதங்களான தர்மங்கள் எல்லாம் கால விசேஷங்களைப்
பற்றி இருக்கும் -எங்கனே என்னில் –
அந்யே க்ருதயுகே தர்மா -மனு -1-85-இத்யாதிகளில் படியே -யுக வேதம் -அயன பேதம் -மாச பேதம் -பக்ஷ பேதம் –
திதிவார நக்ஷத்ர பேதம் -ராத்ரி திவ சாதி பேதம் -யாம பேதம் -ராசி பேதம் -முஹுர்த்த பேதம் -என்று இப்படிப்பட்ட
கால பேதங்களில் வ்யவஸ்திதங்களாய் இறே கர்ம விசேஷங்கள் இருப்பது
இவ்வஞ்சலி பந்த ரூபமான ஸூகர்மத்திற்கு ருசி பிறந்த போதே காலம் -மற்றொரு கால விசேஷம்
பார்த்து இருக்க வேண்டாம் என்னும் இடத்தை கதாபி -என்று அருளிச் செய்கிறார் –

மதுராந்தகத்திலே பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டாரே எம்பெருமானார் பெரிய நம்பியிடம்

பிரதமத்தில் பாடம் செய்த சிஷ்யன் அறிவு மங்குமா போல் பிராட்டி இளைத்து இருந்தாள் -வால்மீகி ராமாயணம்

—————

கேநசித் -சப்தார்த்தம்
வர்ண தர்மம் -ஆஸ்ரம தர்மம் -குண தர்மம் -நிமித்த தர்மம் என்றால் போலே சொல்லும் தர்மங்கள் எல்லாம்
சில அதிகாரி விசேஷங்களை பற்றி இருக்கும் –
இவ்வஞ்சலி பந்தம் ஸத்ய வசனாதிகளைப் போலே சாமான்ய தர்மம் ஆகையால்
ப்ராஹ்மணன் முதலாக ஸ்வ பாகன் அளவாக சர்வருக்கும் சாஸ்த்ரயீமுமாய் ஸூ கரமுமாய் இருக்கும் என்னும் இடத்தை –
கேநசித் -என்று அருளிச் செய்கிறார்

—————-

யதா ததா வாபி -சப்தார்த்தம்—

அல்லாத தர்மங்களுக்கு எல்லாம் நாநா விதங்களான பிரகார விசேஷ நியமங்கள் உண்டாய் இருக்கும் –
இவ்வஞ்சலிக்குப் பர அவர தத்துவ ஹித புருஷார்த்தங்களில் தெளிவு உண்டாகவுமாம்-இல்லை யாகவுமாம் –
மஸ்திஷ்க சம்புடாதிகளில் வேண்டியபடி யாகவுமாம் -வசம் செய்யும் கை இல்லாத போது வாக்காலும் மனஸ்ஸாலும் ஆகவுமாம்
எல்லாப்படிக்கும் இது ச பலமாம் என்னும் இடத்தை-யதா ததா வாபி -என்று அருளிச் செய்கிறார்

ஐஸ்வர்யம் அக்ஷர கதிம் பரமபதம் வா கஸ்மை சித் -லஜ்யதே -அனைத்தும் அருளி அஞ்சலிக்கு ஈடாக செய்ய வில்லையே
கடைக்குப் போகும் பொழுது கை கூப்பி வைப்போமே என்று இருந்தவர்களுக்கும் அருளிய பின்பு
ஸத்ருசமாக செய்யப் பெற்றிலோமே வெட்க்கி குனிந்து -பட்டர்

—————-

ஸக்ருத் க்ருத –சப்தார்த்தம் —
ஸக்ருத் க்ருத சாஸ்த்ரார்த்த -என்கிற சாமான்யத்துக்கு அபவாதம் இல்லாமையால்
ஆவ்ருத்த் யபேஷை இல்லை -என்னும் இடத்தை -ஸக்ருத் க்ருத -என்று அருளிச் செய்கிறார்

————————

அஞ்சலி–சப்தார்த்தம்–
ஸர்வேஷாம் ஏவ தர்மாணாம்ந் உத்தமோ வைஷ்ணவோ விதி
ரக்ஷதே பகவான் விஷ்ணு பக்தான் ஆத்ம சரீரவத்–ஆனு பர்வம் -36-24- இத்யாதிகளில்
தர்மாந்தரங்களில் காட்டில் அதிக ப்ரபாவங்களாக ப்ரசித்தங்களான சம்மார்ஜன உப லேபனே மாலாகரண
தீப ஆரோபண ப்ரதக்ஷிண ப்ரணாம ஸ்துதி சங்கீர்த்தன ஜாபாதிகளில் காட்டில் அதிக தமமாக
அஞ்சலி பரமா முத்ரா -ஸ்ரீ பரத்வாஜ சம்ஹிதை -என்று சொல்லப்பட்ட இதன் ஸ்வரூபம்
கை கூப்பும் அளவே என்று தோற்றுகைக்காக அஞ்சலி என்கிறார்

உப லேபனே-பெருக்கி விளக்குவது -கடைத்தலை சீய்க்கப் பெறுதல்
அதிக தமமாக–பரமாம் -greatest

—————

ததைவ -சப்தார்த்தம்
காலாந்தரத்தில் பலிக்கும் கர்மங்கள் போல் அன்றிக்கே –
க்ஷிப்ரம் தேவ ப்ரஸாதி நீ –ஸ்ரீ பரத்வாஜ சம்ஹிதை-என்ற ப்ரபாவத்தை -ததைவ- என்று அருளிச் செய்கிறார்

————-

முஷ்ணதி அஸூபாநி –சப்தார்த்தம்–
அஸூபங்களை நசிப்பிக்கும் என்ற அர்த்தத்தை -முஷ்ணதி அஸூபாநி–என்று அருளிச் செய்ய வேண்டிற்று என் என்னில்
ஆஸ்ரிதனானவன் அநாதி வாசனைகள் மேலிட்டு சாம்சாரிக புண்ய பாப ரூபங்களான விலங்குகளை விடுவிக்க இசையாது ஒழியிலும்
தமர்கள் கூட்ட வல்வினையை நாசம் செய்யும் சதிர் மூர்த்தி என்கிறபடி
பாலனை உபச் சந்தனம் பண்ணி அபத்தயத்தை பரிஹரிக்குமா போலே ஒரு விரகால் இவனுக்கு
அநு கூலங்களாகத் தோற்றும் பந்தகங்களைக் கழிக்கும் என்றபடி
இங்குச் சொல்லுகிற அசுபங்கள் ஆவன-பிராப்தி விரோதிகளான கர்மங்கள் ஆதல் –
உபாக்யாதிகளை விரோதிக்கும் கர்மங்களை யாதல் என்று யதா அதிகாரம் கண்டு கொள்வது

முஷணம் pick pocket -அறியாமலே திருடுதல் பிரார்த்திக்காமலேயே -நானும் வேண்டாம் நீயும் வேண்டாம் தன்னடையே போகும் –

ஸ்ரீ மூஷ்ணம் -திவ்ய தேசம் இத்தைப் பண்ணுவதாலேயே பெற்ற பெயர்
முஷித க்ருத கர்மம்– -சபரி செய்ததாக ரகுவீர கத்யம் -ஸாஷீ மாத்திரம் பெருமாள்

—————-

அசேஷத –சப்தார்த்தம்

க்ருச்சர சாந்த்ரயாணாதி கர்மங்கள் சில அஸூ பங்களைக் கழிக்க வற்றாய் இருக்கும் –
இது அப்படி அன்று -சர்வ அநிஷ்டங்களையும்

——————

ஸூபாநி புஷ்ணாதி —சப்தார்த்தம்-ந ஜாது ஹீயதே -சப்தார்த்தம்–
அஞ்சலி பிரபன்னன் ஆகிஞ்சன்யத்தைக் காட்டும் முத்திரை –சரண்யனுடைய அபய முத்திரையின் பிரயோஜனம் —
பர ந்யாஸ வ்யஞ்ஜக முத்ரா ரூபத்வ சமர்த்த தமம் -சஹஜ கிருபா விஸிஷ்ட பகவானே மோக்ஷ ப்ரதன்–
அஞ்சலியின் பரம்பரயா மோக்ஷ சாதனத்வம் -அஞ்சலி விஷயத்தில் அதிவாதாதிகளின் அநவ் சித்ய நிரூபணம் –
ஸ்லோகார்த்த ஸங்க்ரஹம் -பகவத் அநந்யார்ஹத்வ அத்யவசாயத்தைக் காணும் பிரகாரம் -உப சம்ஹாரம் –

———–

ந ஜாது ஹீயதே

சந்ததிகளுக்கும் சேர்த்தே பேறு -கேசவன் தமர் கீழ் மேல் ஏழு பிறப்பும்
விபீஷணன் உடன் வந்த நால்வருக்கும் பேறு-ஏழு தலைமுறைகளுக்கும் குடி குடி ஆக்கமும் அளிக்கும் –

————

12-அம் ஜலயதி அஞ்சலி –கர்த்ருத தியாக ஸூ சகம்

பிரபத்தி லக்ஷணம் -ஸூ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி

வாக்ய குரு பரம்பரை ஸ்லோக குரு பரம்பரை
கை முடங்கி -இரு கையையும் கூப்பினேனோ திரௌபதியைப் போலே
ஓட்டைக்கைக்கும் யானைக்கும் இடையே ஓர் ஆயிரம் தூரம் –
துவாரகை =ஹஸ்தினா புரம்
இடையே நடக்குது புடவை வியாபாரம்

——–

13-அஞ்சலி முத்திரை பிரபன்னனுக்கு-சேஷனுக்கு அடையாளம்
சேஷிக்கு முத்திரை – அபய ஹஸ்தம்–ஸத்யஸங்கல்பன் -சங்கல்ப மாத்திரத்தில் அஞ்சலி கண்டு உகந்து அனைத்தையும் அளிப்பான்–
அஞ்சலி விரதம் சத்வ குணத்தை வளர்க்கும் -பலன் கருதாமல் அஞ்சலி செய்வதே சாலச் சிறந்தது –

ப்ரபன்னன் வாங்கிய கைக்கு வைத்த கை அபய ஹஸ்தம்

————

14-பலன் காட்டி அருளுகிறார்
ப்ரயோஜனாந்தர பரர்களுக்கு அவ்வோ ப்ரயோஜனாந்தரங்களை அளிக்கும்
அநந்யார்ஹ அவா அற்று வீடு பெறும் அவஸ்தை அருளும்

———–

15-பிரதி ஹஸ்தம் இதுவே

ஹஸ்தீஸ துக்க விஷ திக்த பல அநு பந்தினி
அப்ரஹ்ம கிதம பராஹதா ஸம்ப்ரயோகே
துஷ் கர்ம சஞ்சய வஸாத் துரதிக்ரமே நா
பிரதி அஸ்ரம் அஞ்சலி அசவ் தவ நிக்ரஹ அஸ்த்ரே––ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத் —–30-

அஞ்சலி பரமாம் முத்திரை அன்றோ -நிக்ரஹ சங்கல்பம் மாற்றி மோக்ஷ பர்யந்தம் அளிக்கச் செய்யுமே –

அஸ்வத்தாமா நாராயண அஸ்திரம் ஏவ
அர்ஜுனன் இதற்கு பிரதி
துரோணர் பிள்ளைக்கு மட்டும் சொல்லிக் கொடுத்த அஸ்திரம்
கை கூப்புவதே -பிரதி
பீமன் செய்யாமல் இருக்க இருவர் கைகளைத் தூக்கி
hands up போல் இதுவே

————

16-நான்கு அடையாளங்கள்

கண புரம் நான் ஒருவருக்கு உரியேனோ
மற்ற தெய்வம் தொழாமல்
சிற்றின்ப ஆசை ஒழித்து
நிர் பரத்வ அத்யவசாயம்
இந்த நான்கு அடையாளங்கள் இருக்க வேண்டும் என்று அருளிச் செய்து நிகமிக்கிறார்

————

1.-ஸ்ரீ யபதியே பராத்பரன் -ஸர்வேச்வரேச்வரன் –
2. அஞ்சலிக்கு கால நியதி இல்லையே –
3. சர்வாதிகாரம் -சரம எளிய உபாயம்–
4. மற்ற தர்மங்களில் அதி உத்க்ருஷ்டம் அஞ்சலியே-
5. அஞ்சலியே அனைத்து பிரதிபந்தகங்களையும் பாப சமூகங்களைப் போக்கி அருளும் –
6. அஞ்சலியின் பயன்கள் –
7. அஞ்சலியா சரணாகதியா எது மோக்ஷ உபாயம் –
8. -சேதனனுக்கு அஞ்சலி முத்திரை -பரம சேதனனுக்கு அபய ஹஸ்தம் –
9.-அஞ்சலி தன்னுள்ளே பரந்யாசத்தையும் கொண்டு உள்ளதே –
10. நம் அபராதங்களால் அவனுக்கு உள்ள சீற்றம் ஒரே அஞ்சலியால் காணாமல் போகுமே –
11.ஒப்பற்ற சரணாகதியின் மஹிமை –
12. பிரபன்னன் தனது ஆத்மாவாகவே கொல்லப்படுகிறானே-
13. அஞ்சலி அனைத்தையும் அருளி ப்ரீதி காரித கைங்கர்யத்தையும் அளிக்கும் –
14. அஞ்சலி மஹிமையை அதிசங்கை பண்ணுவார்கள் வாதங்கள் சமாதானம் –
15. ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ ஸூக்திகளில் அஞ்சலி மஹாத்ம்யம் –
16. பிரபன்னனுக்கு முக்கியமான நான்கு விசேஷணங்கள்-அவற்றை அங்கீ கரிக்கும் அடையாளங்கள் -போன்றவை இதில் உள்ளன –

சார அசார விவேகிகள்-ஸ்ரீ யயதியின் திருவடிகளே உபாயமும் உபேயமும் என்று அறிவார்கள்
இவனே மோக்ஷபலப்ரதன் -சர்வ நியாமகன் -ப்ரஹ்மாதிகளுக்கும் ஈஸ்வரன் –
அஞ்சலிக்கு கால தேச அதிகார நியதி இல்லையே -வர்ணாஸ்ரம தர்ம நியதியும் இல்லையே –
ப்ரஹ்மாதி பிப்பிலி ஈறாக இதற்கு அதிகாரிகள் –

பரிபூர்ண அனுக்ரஹம் அளிக்கும் – தத்வ த்ரய ரஹஸ்ய த்ரய அர்த்த பஞ்சக ஞான சூன்யர்களும் இதுக்கு அதிகாரிகள்-
மனஸ் பூர்வகமாக இல்லாவிட்டாலும் -வாக் சஹகாரியாக இல்லாவிட்டாலும் -காயம் முழுவதும் வணங்காமல்
அஞ்சலி மாத்திரமே பலனை அளிக்க வல்லதே-
கை கூப்பாமலே மனசாலே நினைத்தாலும் வாய் வார்த்தையாகச் சொன்னாலும் பலன் கொடுக்கும் –
கடைத்தலை சீய்க்கப் பெறுதல் -தூ மலர் தூவித் தொழுதால் -திரு விளக்கு ஏற்றுதல் -ப்ரதக்ஷிணங்கள் செய்தல் –
சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தல் – -ஸ்தோத்திரங்கள் ஸ்துதிப்பதும் செய்தல் – -திருநாம சங்கீர்த்தனம் செய்தல் –
இவற்றை விட அஞ்சலி எளிமையானது மட்டும் இலை -அவனுக்கு மிகவும் உகப்பாக கால விளம்பம் இல்லாமல் பலனை அளிக்கும்

ருசி வாசனைகளையும் போக்கி அருளும்-அஞ்சலி விரதமே சதாச்சார்யர் அனுக்ரஹம் பெற்று உஜ்ஜஜீவிக்க உதவுமே –
பரிபூர்ண அனுபவம் அங்கும் பெற இது வழி காட்டும் -ப்ரபத்தியில் மூட்டும் -பிரபத்தி அங்கங்களை எளிதாக்கும் –
பகவத் பாகவத கைங்கர்யங்களிலும் மூட்டும் –
ஏழு தலைமுறைகளுக்கும் குடி குடி ஆக்கமும் அளிக்கும் –
பக்தியில் அசக்தனுக்கு இது -ப்ரபன்னனைக் காட்டும் முத்திரை -அஞ்சலியும் ப்ரபத்தியும் வேறே வேறே இல்லையே –

——-

13-அஞ்சலி முத்திரை பிரபன்னனுக்கு-சேஷனுக்கு அடையாளம்
சேஷிக்கு முத்திரை – அபய ஹஸ்தம்–ஸத்யஸங்கல்பன் -சங்கல்ப மாத்திரத்தில் அஞ்சலி கண்டு உகந்து அனைத்தையும் அளிப்பான்–
அஞ்சலி விரதம் சத்வ குணத்தை வளர்க்கும் -பலன் கருதாமல் அஞ்சலி செய்வதே சாலச் சிறந்தது –

ப்ரபன்னன் வாங்கிய கைக்கு வைத்த கை அபய ஹஸ்தம்

————

14-பலன் காட்டி அருளுகிறார்
ப்ரயோஜனாந்தர பரர்களுக்கு அவ்வோ ப்ரயோஜனாந்தரங்களை அளிக்கும்
அநந்யார்ஹ அவா அற்று வீடு பெறும் அவஸ்தை அருளும்

1-அந்ய சேஷத்வம் கழிந்து
2-தேவதாந்த்ர போஜனம் இல்லாமல்
3-பலனைக் கருதாமல்
4-பர சமர்ப்பணம் தானே அஞ்சலி

பரம ஏகாந்தி -உபாயாந்தர தோஷம் இல்லாமல் -தேவதாந்த்ர பஜநம் இல்லாமல் –
பிரயோஜனாந்தர தோஷம் இல்லாமல் –பர சமர்ப்பணம் பண்ணி
நிர்ப்பர நிர்ப்பயராய் -நம் பூர்வர்களைப் போலவே இருப்போம்
பூசும் சாந்து என் நெஞ்சமே –தேசமான அணிகலனும் என் கை கூப்புச் செய்கையே –ஸ்ரீ நம்மாழ்வார் –

கண்ணன் கழல் தொழக் கூப்பிய கையின் பெருமை தனை
எண்ணம் கடக்க யமுனைத் துறைவர் இயம்புதலால்
திண்ணம் இது என்று தேறித் தெளிந்த பின் சின் மதியோர்
பண்ணும் பணிதிகள் பாற்றிப் பலம் தொழில் பற்றினமே

ஸ்ரீ மத் வேங்கடாந்த ஸ்ரீதரா பாத பத்ம சக்த சிந்தனம்
அஞ்சலி வைபவம் அகதயத் அநு ஸ்ம்ருதம் யமுனாச்சாரியை –

——————-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரும் தேவி தாயார் சமேத ஸ்ரீ தேவாதி ராஜ பர ப்ரஹ்மம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading