அந்தராதிகரணம்
விஷயம்
கண்ணின் உள்ளே நிற்பவனாக சாந்தோக்யத்தில் சொல்வது பரமாத்மாவே என்று நிரூபணம்
———
1-2-13-அந்தர உபபத்தே –
கண்ணில் இருப்பவனாக கூறப்படுபவன் பரம்பொருளே-அங்கு கூறுவது அவனுக்கு மட்டுமே பொருந்தும்
விஷயம்
சாந்தோக்யம் -4-15-1-
ய ஏஷோ ஷிணி புருஷோ த்ருச்யதே ஏஷ ஆத்மேதி ஹேவாச ஏதத் அம்ருதம் அபயமேதத் ப்ரஹ்ம –
அவனே ஆத்மா -அம்ருதம் -அபயம் -ப்ரஹ்மம்
சங்கை
அபிமான தேவதையா -ஜீவாத்மாவா -பரமாத்மாவா
பூர்வபக்ஷம்
காணப்படுபவன் என்பதால் அங்கு பிரதிபலிக்கும் ஒருவனே -ஜீவாத்மாவே –
உயிர் இருக்கிறதா இல்லையா என்று திறந்த கண்கள் மூலம் அறிவதால் அபிமான தேவதையே
பிருஹத் 5-5-2-ரஸ்மி ப்ரேஷ -அஸ்மின் ப்ரதிஷ்டித -என்று ஸூரயனில் காணப்படும் புருஷனே
இந்த மூவரில் ஒருவனே கண்ணில் உள்ளான்
சித்தாந்தம்
அங்கு கூறப்படும் விஷயங்கள் பொருந்த வேண்டும் என்பதால் -பரமாத்மாவே
சாந்தோக்யம்-4-15-3-
ஏஷ ஆத்மேதி ஹோவாச ஏததம்ருதமபயமேதத் ப்ரஹ்மேதி
ஏதம் சம்யத்வாம இத்யா சஷதே ஏதம் ஹி சர்வாணி வாமான்யபி சம்யந்தி
ஏஷ உ ஏவ வாமநீ ஏஷ ஹி சர்வாணி வாமானி நயதி
ஏஷ உ ஏவ பாம நீ ஏஷ ஹி சர்வேஷூ லோகேஷூ பாதி -என்று
அந்த பரம் பொருளே ஆத்மாவாகவும் -அமிர்தமாகவும் -அச்சம் இல்லாதவனாகவும் –
கல்யாண குணங்கள் நிரம்ப உடையவனாயும்–எல்லா நன்மை அளிப்பவனாயும் -எங்கும் உள்ளவனாயும் – போன்ற
பல தன்மைகள் உள்ளவனாய் சொல்லியதால் ப்ரஹ்மத்தையே சொல்லிற்று-
————-
1-2-14-ஸ்தா நாதி வ்யபதேசாத் ச –
கண்களில் இருப்பவன் -கண்களை ஆள்பவன் -போன்ற தன்மைகளால் அவனே பரம் பொருள்
ப்ருஹத் ஆரண்யகாவில் -3-7-18-
யச் சஷுஷி திஷ்டன் -என்று கண்ணில் உள்ளவன் -நியமிப்பவன் -என்று இருப்பதால்
சாந்தோக்யம் 4-15-1- ய ஏஷ அஷிணி புருஷ -கண்ணில் உள்ள புருஷன் பரமாத்மாவே
மேலும் சாந்தோக்யம் 4-15-1-த்ருஸ்யதே -காணப்படுகிறான் -என்பதால்
யோகிகளால் கண்ணில் இவனைக் காண இயலும் என்பதால் பொருத்தமே யாகும்
—————–
1-2-15-ஸூ க விசிஷ்டாதிபா நாத் ஏவ ச –
சாந்தோக்யம்-4-10-5- -கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம ப்ரஹ்மம் –
சுகத்துடன் பெரியதாக உள்ளவன் -ப்ரஹ்மமே-தொடர்ந்து
சாந்தோக்யம்-4-15-1–ய ஏஷோ அஷிணி –சுகமாக உள்ளவன் என்பதால் ப்ரஹ்மமே
மேலும் யாரிடம் அனைத்து விரும்பத்தக்க தன்மைகளும் உள்ளதோ அந்த ப்ரஹ்மம் என்றும் இங்கு உணர்த்தப்படுகிறது –
ஏவ -என்று இங்கு எடுக்கப்படும் வாதங்கள் மற்றவற்றுடன் தொடர்வு உடையவை அல்ல -இங்கு தனி வாதம்
கீழே -12–13-ஸூத்ர வாதங்கள் -18-ஸூத்ரத்தத்தில் நிகமனம்
பூர்வ பக்ஷம்
சாந்தோக்யம்-4-10-5- -கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம ப்ரஹ்மம் —தொடர்ந்து
சாந்தோக்யம்-4-15-1–ய ஏஷோ அஷிணி இரண்டையும் இணைக்க இயலாது
இரண்டுக்கும் நடுவில்-4-11-/-4 -13-முடிய உள்ளவற்றில் -மூன்று அக்னிகள் குறித்த வித்யை உபதேசம் -உபகோஸலனுக்கு –
அத ஹை நம் கார்ஹபத்யோ அநுச சாஸ -4-11-1-கார்ஹபத்யம் என்ற அக்னி தேவதை உபதேசம்
இதனால் பெற்ற ஞானம் பலமாக நீண்ட ஆயூஸூ -பரம்பரை இத்யாதிகள் ப்ரஹ்ம வித்யையின் பலன்களுக்கு
விருத்தியாகும் -என்பர் பூர்வ பக்ஷிகள்
சித்தாந்தம்
உபக்ரமம் உபஸம்ஹாரம் இரண்டிலும் ப்ரஹ்ம பதம் தெளிவாக உண்டே
சாந்தோக்யம் -4-10-5-ப்ரானோ ப்ரஹ்ம -என்று தொடங்கி
சாந்தோக்யம் -4-15-1-ஏதத் அம்ருதம் அபயம் ப்ரஹ்ம –
மேலும் சாந்தோக்யம் -4-14-1-ஆச்சார்யஸ்து தே கதிம் வக்தா -என்று பரம கதிக்கு ஆச்சார்யர் உபதேசிப்பார் –
என்பதால் ப்ரஹ்ம விதியையே உபதேசம்
மேலும் -அத ஹை நம் கார்ஹபத்யோ அநுச சாஸ -4-11-1-என்று ப்ரஹ்ம வித்யைக்குத் தகுதி உள்ள
ஒருவனுக்கே அக்னி வித்யை உபதேசிக்கப்படுகிறது
மேலும் சாந்தோக்யம் 4-10-3–வ்யாதிபி பிரதி பூர்ணோஸ்மி -என்று உலகவிஷய பீதனாக இருக்கும் படி சொல்லி
சாந்தோக்யம் -4-14-1-ஏஷா சோம்ய தே அஸ்மாத் வித்யா ஆத்மவித்யா ச -என்பதால்
இந்த அக்னி வித்யையானது ப்ரஹ்ம வித்யையின் அங்கமே
இவ்வாறு அறிந்த பின்பு மற்ற பலன்கள் குறித்த வாக்கியங்கள் அர்த்தவாதம் -வெறும் புகழ்ச்சி வாக்கியங்கள்
மட்டுமே என்று கொள்ள வேண்டும் –
மேலும் மோக்ஷத்துக்கு விரோதமாக எந்த ஒரு வாக்கியமும் காணப்பட வில்லை
சாந்தோக்யம் -4-11-2-
அபஹதே பாப க்ருத்யாம் லோகீ பவதி சர்வமாயுரேதி ஜ்யோக்ஜீவதி நாஸ்யா பர புருஷா ஷீயந்தே உபவயம்
தம் புஞ்ஜாமோ அஸ்மிச்ச லோகே அமுஷ்மிச்ச –என்று
அபஹதே பாப க்ருத்யாம்-ப்ரஹ்ம பிராப்தி பிரதிபந்தங்கள் நீங்கப் பெற்ற பின்னர்
லோகீ பவதி-நீங்கிய பின்பு பரமபதம் அடைகிறான்
சர்வமாயுரேதி-ப்ரஹ்ம உபாஸனைக்கு தக்க ஆயுசைப் பெறுகிறான்
ஜ்யோக்ஜீவதி-நோய் இல்லாமல் வாழ்கிறான்
நாஸ்யா பர புருஷா ஷீயந்தே -அவர்கள் சீடர்கள் பரம்பரைகளும் பர ப்ரஹ்மம் அடைகிறார்கள்
இது தவிர ப்ரஹ்ம வித்யையின் பலமாக முண்டக -3-2-9-/ மாண்டூக்ய -3-3-
நாஸ்யா ப்ரஹ்ம வித் குலே பவதி –என்று அவனுடைய குலத்தில் ப்ரஹ்ம வித்யை அறியாதவர்கள் பிறப்பது இல்லை
உபவயம் தம் புஞ்ஜாமோ அஸ்மிச்ச லோகே அமுஷ்மிச்ச —
வயம் என்றால் இங்கு -அக்னி என்று பொருள்
தம் -மோக்ஷ அதிகாரி
உப புஞ்ஜாமோ-ப்ரஹ்ம பிராப்தி வரை அனைத்து பிராப்தி பிரதிபந்தகங்களிலும் இருந்து காப்பாற்றுவோம் –
இதற்கு பூர்வ பக்ஷம்
சாந்தோக்யம் -4-14-1-ஆச்சார்யஸ்து தே கதிம் வக்தா –
ஆச்சார்யர் உனக்கு மார்க்கத்தைக் குறித்து உபதேசிப்பார்
என்பதால் போகும் பாதையை மட்டும் உபதேசம் –
மாறாக ப்ரஹ்ம உபாசனத்துக்கு இருப்பிடமோ அதன் குணங்களோ இந்தப்பகுதியில் சொல்வதாகக் கொள்ள முடியாது
சித்தாந்தம்
சாந்தோக்யம் -4-14-1-ஆச்சார்யஸ்து தே கதிம் வக்தா -என்று
உபாஸனை பற்றி இல்லாமல் அர்ச்சிராதி பற்றி சொல்வது
அவன் வருந்தி இருக்க -அவனது கைங்கர்யத்தால் மகிழ்ந்த அக்னிகள் அவனைத் தேற்ற ப்ரஹ்ம ரூபம் குறித்து
ப்ரஹ்ம வித்யையின் அங்கமாக அக்னி வித்யை உபதேசித்தன-
அதன் பின்னர் –சாந்தோக்யம் -4-9-3- ஆச்சார்யாத் ஏவ வித்யா விதிதா சா திஷ்டம் ப்ராப்யதி–என்று
ஆச்சார்யன் மூலம் பெரும் வித்யையே சிறந்தது என்ற வார்த்தை எண்ணிப் பார்க்க —
ப்ரஹ்ம உபாசனம் பூர்ணம் ஆச்சார்யனாலே என்றும் –
ப்ரஹ்மம் அனைத்தையும் தன்னுள் கொண்டது என்றும்
ப்ரஹ்மம் இருப்பிடம் இன்னது என்றும்
அர்ச்சிராதி மார்க்கம் பற்றியும் இந்த உபதேசம்-
ஆகவே கதி -மார்க்கம் மூலம் -எஞ்சிய பகுதிகள் என்றவாறு
இதனால் தான் ஆச்சார்யனும் -சாந்தோக்யம் -4-14-3-
அஹம் து தே தத் வஹ்யாமி –என்றும்
யதா யுஷ்கரபலாச ஆபோ ந ஸ்லிஷ்யந்த ஏவமேவம் விதி பாபம் கர்ம ந ஸ்லிஷ்யதே–என்றும்
கல்யாண குணங்கள் விஸிஷ்ட ப்ரஹ்மம் கண்ணின் உள்ளே இருப்பதாக உபதேசிக்க -ஆகவே
சாந்தோக்யம் -4-10-5-கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம என்ற வரியில் கூறப்பட்ட ப்ரஹ்மமே
கண்ணில் உள்ள பரமாத்மா என்றதாயிற்று
இதுக்கு பூர்வ பக்ஷம்
சாந்தோக்யம் -4-10-5-கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம என்று உபதேசிப்பதன் பொருட்டு –
ஒன்றை மற்ற ஒன்றின் மேலே ஏறிட்டு -7-1-5-நாம ப்ரஹ்ம என்றும் -7-3-2-மநோ ப்ரஹ்ம
என்றும் போன்றதே என்பர்
இதுக்கு சமாதானம் அடுத்த ஸூத்ரம்
————-
1-12-16-அத ஏவ ச ச ப்ரஹ்ம —
இத்தகைய காரணங்களால்–க என்ற சப்தம் மூலம் கூறப்படும் ஆகாசமும் – ப்ரஹ்மம் என்றதாயிற்று
உபகோசலனுக்கு -ப்ரஹ்ம வித்யையை அக்னி தேவன் -பிராணனே ப்ரஹ்மம் சுகமே ப்ரஹ்மம் ஆகாசமே ப்ரஹ்மம் –
சாந்தோக்யம் –4-10-5–
யதேவ கம் ததேவ கம் யதேவ கம் ததேவ கம் -என்று
ஆகவே கம் -ஆகாசத்தைக் குறிக்காது -ஸூகத்தையே குறிக்கும் –
ஆகாயம் போன்ற அளவற்ற சுகத்துடன் இருப்பவனே ப்ரஹ்மம் -என்பதால்
ஜீவனுக்கு பொருந்தாது -பரம் பொருளுக்கே பொருந்தும் –
இங்கே கூறப்படுவது இதுவே ஆகும் –
அக்னிகள் சாந்தோக்யத்தில் 4-10-5-
ப்ரானோ ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம -பிராணனே ப்ரஹ்மம் ஸூகமே ப்ரஹ்மம் -ஆகாசமே ப்ரஹ்மம் -என்று கூற
அப்போது உபகோஸலன் -சாந்தோக்யம் 4-10-5-
ஜீவனாம் யஹம் யத் ப்ரானோ ப்ரஹ்ம கம் ச து கம் ச ந ஜீவா நாமி –என்று
நான் முக்கிய பிராணன் ப்ரஹ்மம் என்று அறிவேன் –
ஆனால் அத்தகைய ப்ரஹ்மம் ஸூகம் என்றும் ஆகாசம் என்றும் நான் அறிய வில்லை என்றான்
ஸூகம் ஆகாசம் இவை ப்ரஹ்மத்தின் சரீரமே -ப்ரஹ்மத்தின் கட்டுப்பாட்டில் உள்ளவையே –
தனித்தனியே இவை உள்ளதால் ப்ரஹ்மத்தின் அபரிமித ஆனந்தத்தை சொல்லுமோ
இத்தை அறிந்த அக்னிகள் -சாந்தோக்யம் -4-10-5-
யதேவ கம் ததேவ கம் யதேவ கம் ததேவ கம்-என்று ப்ரஹ்ம ஸ்வரூபம் நிரதிசய ஆனந்த மயம் என்று சொல்லி நிறைவில் —
பிராணம் ச ஹாஸ்மை ததாகாசம் சோசு-என்றும் சொல்லி இந்த ப்ரஹ்மமே கண்ணுக்குள் உள்ளதாக சாந்தோக்யம் கூறும்
ஆகவே கண்ணுக்குள் உள்ளவன் பரமாத்மாவே தான் -என்றதாயிற்று
————–
1-2-17-ஸ்ருத உபநிஷத் காக கத்யபி தா நாத் –
உபகோசலனுக்கு அக்னி தெளிவாக கூறியதால் கண்களில் உள்ளவன் பரம்பொருளே
பரமாத்மாவைக் குறித்து யாதாத்ம்ய ஞானம் உள்ளவன் அர்ச்சிராதி கதி சிந்தனம் எப்போதும்
பண்ணியபடியே இருக்க வேண்டும் என்பதால் கண்ணில் உள்ளவன் பரம புருஷனே ஆவான் –
சித்தாந்தம்
சாந்தோக்யம் -4-15-5-
தே அர்சிஷமே வாபி சம்பவந்தி அர்ச்சிஷோ அஹரஹ்ந அபூர்த்த்யமான பக்ஷம் என்று தொடங்கி
சாந்தோக்யம் -4-15-5-/6–
சந்த்ரமஸோ வித்யுதம் தத் புருஷோ அமாநவ ச ஏதாந் ப்ரஹ்ம கமயத்யேஷ தேவபதோ ப்ரஹ்ம பத ஏதேந
பிரதிபத்யமாநா இமாம் மாநவமாவர்த்த நாவர்த்தந்தே–என்று நிகமிக்கப்பட்டது–
இந்தக் காரணத்தாலும் கண்களில் உள்ளவான் பரமாத்மாவே ஆவான் –
பரம்பொருளை அறிந்தவர்கள் அர்ச்சிராதி கதி மூலம் அவனை அடைகிறார்கள்
——————
1-2-18-அனவஸ்திதே அசம்பவாத் ச
ஜீவன் எப்போதும் கண்களில் நிலை பெற்று இல்லையே –
மரணம் இன்றி இருப்பவன் என்பதும் ஜீவனுக்கு பொருந்தாது –
சித்தாந்தம்
கண்களால் காணப்படும் பொருள்களின் பிரதிபிம்பம் கண்களில் எப்போதும் இருப்பது இல்லை –
அம்ருதத்வம் போன்ற தன்மைகளும் அவற்றுக்கு இல்லையே
இந்திரியங்களை நியமிக்க ஜீவாத்மா ஹ்ருதயத்தில் உள்ளான் – கண்களின் உள்ளே இல்லையே –
இதே போன்று சூரியனும் கண்களின் உள்ளே இல்லை –
ப்ருஹத் ஆரண்யகா -7-5-10-
ரச்மிபிரேஷே அஸ்மின் ப்ரதிஷ்டித -ஒளிக்கதிர் மூலமாக சூரியன் கண்களில் உள்ளான் -கண்களுக்குப் புறப்படுகிறான்
அல்லாமல் கண்களில் உள்ளவனாக கூறப்பட வில்லை
மேலும் அம்ருதத்வம் போன்ற தன்மைகள் பரமாத்மாவுக்கு மட்டுமே பொருந்தும் -மற்றவர்களுக்குப் பொருந்தாது –
ஆகவே கண்களில் உள்ளவன் பரமாத்மாவே ஆவான் -என்று நிரூபணம்
———————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply