ஆக நாராயண பதத்தாலே
நார சப்தேந ஜீவாநாம் ஸமூஹ ப்ரோசயதேபுதை–என்று
ப்ராப்தாக்களான பிரத்யகாத்மாக்களைச் சொல்லி
அயந சப்தத்தால் -அவ்வாத்மாக்களுக்கு உபாய பூதன் என்னும் அர்த்தத்தைச் சொல்லி
அவனை உபாயத்வேந ஆஸ்ரயிக்கைக்கும் –
உபாய கார்யமான அநிஷ்ட நிவ்ருத்தியாதிகளைப் பண்ணுகைக்கும் உறுப்பான குண விசேஷங்களைச் சொல்லிற்று ஆயிற்று –
—-
அநந்தரம்
இக்குணங்களுக்கு ஆஸ்ரயமாய்
ந க்ராஹ்ய-
ஸ்வப்னதீ கம்யம்
பொறி யுணர் அவை இலன் -என்று சஷூர் கோசாரம் இல்லாமையாலும்
கண்டால் அல்லது ஆஸ்ரயிக்க விரகு இல்லாமையாலும்
கண்டு ஆஸ்ரயிக்கைக்காக சஷூர்க் கோசரமான திவ்ய மங்கள விக்ரஹத்தைச் சொல்லுகிறது -சரணவ் -என்கிற பதம்
ஆஸ்ரயணத்துக்கு விக்ரஹம் அபேக்ஷிதமாகில் வாத்சல்யாதிகள் செய்கிறது என் என்னில்
குற்றம் கண்டு கை விடாமைக்கும்
அங்கீ காரம் தன் பேறாகைக்கும்
அங்கீ கார விஷய பூத சேதனர் சிறுமை பாராமைக்கும்
வாத்சல்யாதிகள் உண்டானாலும் இவை ஆஸ்ரயண உன் முகனைக் குறித்தாகையாலே
ஆஸ்ரயணம் சஷூர் இந்திரிய க்ராஹ்யமான விஷயத்தில் அல்லது கூடாமையாலே அந்த வாத்சல்யாதிகளாலே பிரகாசிதமாய் –
ஸுலப்ய குண கார்யமாய்-மூர்த்தம் ப்ரஹ்ம–என்னும்படி குணங்களிலும் அந்தரங்கமாய்
அபிமதோரு தேஹ –என்கிறபடியே அபிமதமாய்
பூர்ண ஷாட் குண்ய விக்ரஹ -என்கிறபடியே மாணிக்கச் செப்பில் பொன் போலே அகவாயில் ஆத்ம குணங்களை
பிரகாசிப்பிக்கக் கடவதாய் இருக்கிற திவ்ய மங்கள விக்ரஹத்தைச் சொல்லுகிறது
ஆனால் விக்ரஹ வாசகமான சப்தத்தை இட்டுச் சொல்லாதே ஏக அவயவ மாத்ர வாசகமான திருவடிகளை இட்டு
விக்ரஹத்தை சொல்லுவான் என் என்னில்
ஆஸ்ரயண உன் முகனான இச் சேதனன் பிரணவ யுக்தமான அநந்யார்ஹ சேஷத்வ ஞானவான் ஆகையால்
இந் நாராயண பதத்தில் சொல்லுகிற ஸ்வாமித்வ சேஷித்வங்களுக்கு பிரதிசம்பந்தியான
ஸ்வத்வ சேஷத்வங்களை அனுசந்தித்தவன் ஆகையாலும்
பிரஜைக்கு மாதாவினுடைய சர்வ அவயவங்களில் காட்டிலும் தனக்கு தாரகமான ஸ்தந்யத்தை உபகரிக்கையாலே
ஸ்தநத்திலே விசேஷ பிராப்தி உண்டாம் போலே
அடியேன் சேவடி அன்றி நயவேன்-என்று ஸ்வரூபத்துக்கு அனுரூபமான அம்ருதத்தை
விஷ்ணோ பத பரமே மத்வ உத்ச
உன் தேனே மலரும் திருப்பாதம்
அம்ருதயஸ் யந்திநீ பாத பங்கஜே–என்கிறபடியே ப்ரவஹிக்கையாலும்
சேஷ பூதனுடைய யுக்தி ஆகையாலும்
கையைப் பிடித்துக் கார்யம் கொள்ளுமத்திலும் காலைப் பிடித்து கார்யம் கொள்ளுமவன் பக்கல் கிருபை அதிசயித்து இருக்கையாலே
கார்யம் கடுகப் பலிக்க உறுப்பாகையாலும்
திருவடிக்கு வாசகமான சப்தத்தாலே விக்ரஹத்தைச் சொல்லுகிறது –
ஆக ஆஸ்ரயண பிரதி சம்பந்தியாய் ஸ்தூலமான விக்ரஹத்தை -சரண -சப்தத்தாலே சொல்லுகிறது
அதவா
மேலே -சரணம் பிரபத்யே -என்கிற உபாய வரணத்துக்கு -பிரதி சம்பந்தியாக விக்ரஹத்தைச் சொல்லுகையாலே
ஈஸ்வரன் வாத்சல்ய முகேன ஸ்வ தோஷ தர்ச நாதி பய நிவ்ருத்தியைப் பண்ணி ருசியைப் பிறப்பித்து
ஞான சக்த்யாதி முகேன கார்யகரனாகிறவோபாதி விக்ரஹத்வாராவும் ருசி ஜனகனாய்
உபாய பூதனாகையாலே அந்த உபாயத்வ ப்ரதான்யத்தைப் பற்ற விக்ரஹத்தை சொல்லுகிறது ஆகவுமாம்
தெரிவை மாருருவமே மருவி
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை
சிலம்படி யுருவில் கரு நெடும் கண்ணனார் திருத்தனாய் –என்கிறபடியே நாசகரமான நாரீ ஜனங்களுடைய
நயனங்களிலும் அகப்பட்டு நாரகிகளாய்ப் போருகிற நார ஜனங்களை
தன் பால் ஆதாரம் பெருக வைத்த அழகன்
காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி
என் செய்ய தாமரைக் கண் பெருமானார்
என் செய்ய தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான்
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்து–என்கிறபடி தன் பக்கலிலே பிரவணமாம் படி பண்ணி
ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே -என்று தோற்றுத் திருவடிகளில் விழும்படி பண்ணி
ஸர்வதா சரண த்வந்த்வம் வ்ரஜாமி சரணம் தவ -என்று பின்னை தன்னையே உபாயமாகப் பற்றி
பாஹி மாம் புண்டரீகாக்ஷ ந ஜாநே சரணம் பரம் -த்வத் பாத கமலாதந் யந்நமே ஜென்மாந்த்ரேஷ் வபி –
நிமித்தம் குசலஸ்யாஸ்தியே ந கச்சாமி ஸத் கதிம்-என்று யாதொரு குசலத்திலே ஸத் கதியை பிராப்பிப்பன் –
அந்த குசலத்துக்கு நிமித்தம் தேவரீர் திருவடிகளை ஒழிய வேறு இல்லை என்றும் பிரதமத்திலே தோற்பித்த கண் அழகும்
தோற்று விழும் திருவடிகளையும் ஒழிய உஜ்ஜீவன உபாயம் இல்லை என்று சொல்லும்படி பண்ணி
நகாம கலுஷம் சித்தம் மம தே பாதயோஸ் ஸ்திதம் –என்று திருவடிகளில் பிராவண்யத்தாலே
வேறு ஒன்றில் மனஸ்ஸூ கலங்காத படி பண்ணி
ஆக இப்படி
ருசி ஜனகனுமாய்
ருசி பிறந்தால் உபாயமுமாய்
இதர விஷயத்தில் சங்கத்தைப் போக்க வற்றாய்
மாக மா நிலனும் முழுதும் வந்து இறைஞ்சும் மலரடி
மேலை விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும் மென் தளிர் போல் அடி –என்கையாலே சர்வ அபாஸ்ரயமாய்
திரு மா நீள் கழல்
திருக் கமல பாதம் வந்து –என்கையாலே ஆஸ்ரிதர் இருந்த இடங்களிலே தானே சென்று அங்கீ கரிக்கக் கடவதாய்
நின் மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால் –என்று ஞான விஷயமாய்
உன் இணைத் தாமரை கட்கு அன்பு உருகி நிற்குமது
தொழு நீர் இணை அடிக்கே அன்பு சூட்டிய -என்று பக்தி விஷயமாய்
அந்த பக்தியால் கலங்கி
உபாயம் வாப்யபாயம் வாஷாமோந் யாந்நா வலம்பிதும்
என்னால் செய்கேன் -என்கிறபடியே உபாய அனுஷ்டானம் பண்ண சாக்தர் அல்லாதார்க்கு
நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்-என்று உபாயமாய்
கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்
கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமின் -என்று உபதேச சமயத்திலும்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட
கண்ணனைத் தாள் பற்றி
வேங்கட மா மலை மேய
ஆயன் அடி அல்லது மற்று அறியேன் -என்று ஸ்வீகார சமயத்திலும் வியதிரிக்தங்களில் செல்லாதபடி பண்ணக் கடவதாய்
செய்ய நின் திருப்பாதத்தை யான் என்று கொல் சேர்வது
நீடு உறைகின்ற பிரான் கழல் காண்டும் கொல்
பாத பங்கயமே தலைக்கு அணியாய்
த்வச் சரணாம்புஜ த்வயம் மதீய மூர்த்தானம் அலங்கரிஷ்யதி -கதா புநா –என்று பிறப்பியமாக பிரார்த்திக்கப்படுவதாய்
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேன் சரணங்கள் -என்று ப்ராப்யத்வேந லப்தமாய்
நலம் கழல் அவன் அடி நிழல் தடம்
ஆதித்தன் தாமரை அடி -என்று நிழல் கொடுத்து ஆப்தமாக வழி நடத்தி
தாளிணைக் கீழ்ச் சேர்த்து
பாத பற்புத் தலை சேர்த்து
பொன்னடி சேர்த்து வேறே போகல் விடேல் -என்று நிஷ்கர்ஷித்துப் பிரார்த்திக்க
பிரார்த்தனைக்கு அனுரூபமாக அருளி அடிக்கீழ் இருத்திக் கொண்டு இறப்பவை பேர்த்து
அடிக்கீழ் குற்றேவல் -என்கிற கைங்கர்யத்தில் மூட்டி முடிய நடத்தக் கடவதாய் இறே -சரண -உப லஷிதமான -விக்ரஹம் இருப்பது –
ஆகை இறே ஸ்வரூப குணங்களில் ஓர் அறிவும் இன்றிக்கே விக்ரஹ அனுபவ ஏக பரையாய் இருக்கிற சிந்தயந்தி
சிந்தயந்தீ ஜகத் ஸூதீம் பர ப்ரஹ்ம ஸ்வரூபிணம் -நிருச்ச வாச தயா முக்திங்க தாந்யா கோப கந்யகா –என்றும்
தச் சித்த விமல ஆஹ்லாத ஷீண புண்ய சயா மலா -தத் பிராப்தி மஹா துக்க விலீ நா அசேஷ பாதகா -என்று
தத் வித்வான் புண்ய பாப விதூய நிரஞ்சனா பரமம் சாம்யம் உபைதி –என்கிறபடியே
புண்ய பாப விதூநந பூர்வகமாகப் பெற்று அனுபவிக்கக் கடவ நிரதிசய ஆனந்த ரூபமான பரம சாம்யா பத்தி ரூப
மோக்ஷத்தை கேவல விக்ரஹ ரூப தியானத்தால் பெற்றாள் என்கிறதும் –
பிரசாத பரமவ் நாதவ் மம கேஹம் உபாகதவ் -தன்யோஹம் அர்ச்சயிஷ்யாம் ஈத்யாஹா மால்ய உபஜீவன -என்று
பூவில் கண் வைக்கில் சங்கம் செல்லும் என்று முகத்தை மாற வைத்துத் தொடுத்து விற்று வயிறு வளர்க்கும் படி
பதார்த்த வைஷம்யம் அறியாத மாலாகாரரும் அகப்பட -ஸ்வரூப ரூப குணங்கள் கனாக்கண்டும் அறியாதே
விக்ரஹ தர்சன மாத்திரத்திலே
நாதத்வம் ஸ்வரூபம் ஆகையால் அவர் ஜெனீயமாய்க் கிடக்கிறது அத்தனை -தண்ணளியே விஞ்சி இருப்பது –
இவ்வர்த்தம் ராஜ மார்க்கத்தில் போய் கம்ச க்ருஹத்திலே புகாதே
நம் தெருவின் நடுவே வந்திட்டு -என்னும்படி நான் இருந்த முடுக்குத் தெரு தேடிக் கொண்டு வந்த போதே தெரியாதோ –
நான் க்ருதார்த்தன் ஆனேன் -தரித்ரன் நிதி எடுத்தால் போலே
வைத்த மா நிதி
வைப்பாம் மருந்தாம்-என்கிற ஆயர் கொழுந்தாகிற நிதியைப் பெற்று அழைத்துக் கொடுத்து உஜ்ஜீவிக்க –
(அழித்துக் கெடுத்து ஜீவிக்க) -பாரா நின்றேன் -என்று சொல்லும்படி
ருசியே தொடங்கி மோக்ஷ பர்யந்தமான பேற்றுக்கு எல்லாம் விக்ரஹமே ஹேதுவாக எழுதிற்றும் –
ஆக குணாதிகளை ஒழியவே-விக்ரஹம் தானே விரோதி நிவ்ருத்தியையும் அபிமத பிரதானமும் பண்ணும் என்கிற
ப்ராதான்யத்தைப் பற்ற திவ்ய மங்கள விக்ரஹத்தைச் சொல்லுகிறது -சரணவ் -என்று –
ஆனால் திவ்ய மங்கள விக்ரஹம் தர்சனம் சர்வ சாதாரணம் அன்றோ -சர்வரும் முக்தராக வேண்டாவோ என்னில்
ருசி ஜனகத்வ ஹேதுவான ஸுந்தர்யாதிகள் விக்ரஹத்துக்கு உண்டே யாகிலும் –
ஸுந்தர்ய சவ்ஸீல்யாதி குண ஆவிஷ்காரேண அக்ரூர மாலாகாராதி தான் பரம பாகவதான் க்ருத்வா -என்கிறபடியே
ரூபம் தான் ஸுந்தர் யாதிகளைப் பிரகாசிப்பித்து ருசியைப் பிறப்பித்து
மோக்ஷ பிரதானம் பண்ணாமையாலே சர்வரும் முக்தராகாது ஒழிகிறது
ஆனால் விக்ரஹமே ஸ்வ தந்த்ர உபாயம் என்கிறபடி என் என்னில் –
குணங்களை ஒழியவே விக்ரஹகதமான ஸுந்தர்யாதிகளை பிரகாசிப்பித்து ருசி ஜனகனுமாய் ச விக்ரஹனுமாய்க் கொண்டு
பல பிரதானம் பண்ணும் என்கிற ப்ராதான்யத்தாலே சொல்லுகிறது அல்லது
சைதன்யாநாதரமான விக்ரஹத்துக்கு பல பிரதான சக்தி உண்டு என்கை –
ஏஷ வந்த்யா ஸூதோயாதி போலே -அசங்கதம்
அவ ரஷனே-என்கிற நிருபாதிக ரக்ஷகத்வேன-தாது ஸித்தமான ரக்ஷகத்வம் திவ்யாத்ம ஸ்வரூபத்துக்கு ஒழிய
சேதன அசேதனங்களில் ஒன்றுக்கு உபாயத்வம் சொல்லுகையாகிறது
ரஷ்யத்வேநவும் சேஷத்தவேநவும் சித்திக்கும் அந்த வஸ்துக்களினுடைய ரஷ்யத்வ ஸூசகமான அத்யந்த பாரதந்தர்யத்துக்கும்
சேஷத்வ உபபத்தி ஹேதுவாகையாலே தத் ஸூ சகமான கைங்கர்யத்துக்கும் ஆஸ்ரயமான ஆகாரத்தோடும்
அவற்றுக்கு உபகரணமாய்க் கொண்டே ஸ்வரூப சித்தி யாகிற ஆகாரத்தோடும் விரோதிக்கும் –
அதுக்கு மேலே நிருபாதிக ரக்ஷகமான திவ்யாத்மா ஸ்வரூபத்தோடும் விரோதிக்கும்
ஆகை இறே அகார யுக்தமான ரக்ஷகத்வத்துக்கு விஷய பூதனாய் ஞானானந்த ஸ்வரூபனான மகார வாச்யனுக்கு
அனந்தர பதத்தால் ரக்ஷகத்வ நிஷேத பூர்வகமாக ரஷ்யத்வ ஸ்தாபனம் பண்ணிற்றும்
சரணம் வ்ரஜ என்கிற விரோதியைப் பற்றி வருகிற ஸ்வீ காரத்தில் ஸ்வ ரக்ஷண அன்வயத்தை ஏக பதத்தால் வியாவர்த்தித்ததும்
ஆகையால் ருசி ஜனகத்வ உபயோகியாய் -அத ஏவ ஸ்வதந்த்ர உபாயமான விக்ரஹத்தைச் சொல்லுகிறது
மராமரம் எய்த மாயவன் என்னுள் இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ
கோலத் திரு மகளோடு உன்னைக் கூட –என்றும் சொல்லுகையாலே ஸ்வரூபமும் புருஷார்த்தமும்
ந சாஹம் அபி ராகவ
வைதேஹ்யா கிரி சானு ஷூரம்ஸ் யதே -அஹம் சர்வம் கரிஷ்யாமி –என்று
ஸூரி களில் பிரி கதிர் பட்டு தொடர்ந்து அடிமை செய்ய வந்த இளைய பெருமாள் படியானால் -சாதனமும்
சா பிராதுஸ் சரணவ் காடம் நீ பீட்ய-என்று அவர் பரிக்ரஹித்த திருவடிகளே யாகக் கடவது
ஆக
ஸ்ரீ மன் நாராயண சரணவ் -என்று
திருவுடை அடிகள் தம் நலம் கழல் வணங்கி –வாத்சல்யம் —
நாதனே வந்து உன் திருவடி அடைந்தேன்-ஸ்வாமித்வம்
சீலம் எல்லையிலான் அடி -ஸுசீல்யம்
திருக்கமல பாதம் வந்து -ஸுலப்யம்
வண் கழல் நாரணன் திண் கழல் சேரே-ஞானம் சக்தி
நம்பி தன் நல்ல மா மலர்ச் சேவடி -பூர்த்தி
உன் பொற்றாமரை அடி -பிராப்தி
அருளுடையவன் தாள் –என்று
வாத்சல்யம் தொடங்கி கிருபா பர்யந்தமான குண விசேஷங்களுக்கு எல்லாம் ப்ரகாசகமான திருவடிகளைச் சொல்லிற்று ஆயிற்று –
இப்பதத்தில் த்வி வசனத்தாலே
ஆஸ்ரயணீய வஸ்துவினுடைய ஏகத்துவம் பலிக்கையாலே உபாயத்தினுடைய நைரபேஷ்யமும் சொல்லுகிறது
———-
அநந்தரம் சரணம் -சப்தம்
உபாயே க்ருஹ ரஷித்ரோஸ் சப்தஸ் சரணமித்யயம் -வர்த்ததே சாம் ப்ரதஞ்சை ஷா உபாயார்த்தைக வாசக –என்கிறபடியே
உபாய வாசகமாய் -கீழ்ச் சொன்ன ஸ்ரீ யபதியாய்-ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் –
நித்ய திவ்ய மங்கள விக்ரஹ உபேதனாய் இருக்கிற வஸ்துவை விஷயமாக உடைத்ததாய்
சேதனகதமான பிரபத்தியின் பிரகார விசேஷத்தைச் சொல்கிறது –அதாகிறது
அவனே உபாயம் என்று அத்யவசிக்கிறது
இஸ் சரண சப்தம் உபாயத்தையும் கிருஹத்தையும் ரக்ஷகனையும் காட்டுமே யாகிலும்
இப்போது பிரகரண பலத்தால் உபாயம் ஒன்றையுமே சொல்லக் கடவது-
ரக்ஷகத்வம் ஆகிறதும் இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிஹார ரூபமாய் –
உபாயத்வமாவதும் இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிஹார ரூபமாய் இருக்கையாலே இரண்டும் பர்யாயமாய் இருக்க –
உபாயே க்ருஹ ரஷித்ரோஸ்-என்று இரண்டையும் பிரியச் சொல்லுவான் என் என்னில்
ரக்ஷகத்வமாவது -த்ரிவித ஆத்ம வர்க்கத்தினுடையவும் சத்தா ஸ்திதி பிரவ்ருத்திகளை உண்டாக்கி ரஷிக்கையும்
கர்மா ஞானாதி சாதன விசேஷ அனுஷ்டானம் பண்ணின உபாசகனுக்கு தத் தத் சாதன ஸாத்ய பலன்களைக் கொடுத்து ரஷிக்கையும்
உபாயத்வமாவது -அவ்யவதாநேந ஸ்வயமேவ பல உத்பாதகமாயும் பல ப்ரதாதாவுமாகை
ஏவம் ரூபமான உபாய விசேஷத்தைச் சொல்லா நின்று கொண்டு – இஸ் சரணம் -சப்தம்
கீழ்ச் சொன்ன ஸ்ரீ மத்தைக்கும்-குண யோகத்துக்கும் -விக்ரஹவத்தைக்கும் –
திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன்
திருமால் எம்மான்
திருவுடை அடிகள்
நாரணன் எம்மான்
எம்பிரான் எம்மான்
நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதன்
எம்மானே என் வெள்ளை மூர்த்தி
எல்லா உலகுமுடைய ஒரு மூர்த்தி
திரு நாரணன் தொண்டர்
ஸ்ரீ மன் நாராயண ஸ்வாமிந் –என்று சேஷத்வத்திலும் அன்வயம் உண்டாய்
சீதா சமஷம் காகுத்ஸ்த்தமிதம் வசனம் அப்ரவீத்
நாராயணனே நமக்கே பறை தருவான்
திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து உய்மினோ
திருவாளன் இணை அடியே அடை
திருமாலை விரைந்து அடி சேர்மினோ
அலர்மேல் மங்கை உறை மார்பா –உன் அடிக்க கீழ் அமர்ந்து புகுந்தேனே -இத்யாதிகளாலே
ப்ராபகத்திலும் அன்வயம் உண்டாய்
ஸ்ரியா சார்த்தம் ஜகத்பதி ஆஸ்தே
தயா சஹா ஸீ நம
ப்ரகர்ஷயிஷ்யாமி
கோலத் திரு மகளோடு உன்னைக் கூடாதே
திருமாலின் சீர் இறப்பு எதிர் காலம் பருகிலும் ஆர்வேனோ
பிணங்கி அமரர் பிதற்றும் குணம்
கோலமேனி காண வாராய்
கூராழி வெண் சங்கு ஏந்திக் கொடியேன் பால் வாராய் -இத்யாதிகளாலே பிராப்தியிலும் அன்வயம் உண்டாய்
இருக்கும் என்றும் சொல்லுகையாலே
அதில் சேஷித்வ ப்ராப்யத்வங்களைக் கழித்து -ப்ராபகமாக அத்யவசித்து -என்கிற அர்த்தத்தைக் காட்டுகிறது
ஆக சரண சப்தத்தால்
உன் பொற்றாமரை அடியே போற்றும்
தாமரை என்ன பொன்னாரடி எம்பிரானை -என்கிற -ஸ்வாமித்வ ப்ராப்யத்வ விசிஷ்டமான திருவடிகளையே
பிராபகம் என்கையாலே
ஸ்வரூப அனுரூபமுமாய் ப்ராப்யத்துக்கு சத்ருசமாய் இருக்கும் என்னும் இடத்தையும்
உபாய பூதனானவன் ஸ்வ கார்யமாகவும் ஸ்வயம் பிரயோஜனமாகவும் ரஷிக்கும் என்னும் இடத்தைச் சொல்லுகிறது –
இத்தால் இவ் வுபாயம் உபாயாந்தரங்களைப் போலே சாத்தியமுமாய் – சாபேஷமுமாய் -வியவஹிதமுமாய்
இருக்கவும் இன்றியிலே
ஸித்தமாய் -நிரபேஷமாய்-ஸ்வரூப அனுரூபமாய் -நிரபாயமாய் -அவ்யவஹிதமாய் -இருக்கும் என்கிறது –
உபாயமாவது -அநிஷ்ட நிவர்த்தகமாயும் இஷ்ட ப்ராப்திக்கும் உறுப்பாயும் இருப்பது ஓன்று இறே
அதில் அநிஷ்ட நிவ்ருத்தி யாவது –
தேஹாத்ம அபிமானம் தொடங்கி -கைங்கர்யத்தில் ஸ்வ கீயத்வ -ஸ்வ ஸ்வாரஸ்ய பர்யந்தமாக வருகிற
ஸ்வரூப விரோதமான அநிஷ்டங்களை நிவர்த்திப்பிக்கை -அதாவது –
அநாத்மன் யாத்ம புத்திர்யா அஸ்வே ஸ்வமிதியா மதி அவித்யாதரு சம்பூதி பீஜ மேதத் த்விதாஸ் திதம்
நீர் நுமது என்று இவை –என்கிறபடியே தான் அல்லாத தேஹத்தைத் தானாக நினைத்தும்
யஸ்யாஸ்மி –என்று பகவத் அநந்யார்ஹ சேஷமான தன்னை ஸ்வ தந்த்ரனாக நினைத்தும்
ஈஸ்வரன் விபூதி பூதமானவற்றை என்னது என்று அபிமானித்தும் -போருகிற அகங்கார மமகாரங்களாகிற அவித்யை
அது அடியாக வருவதாய் மோக்ஷ விரோதியாகையாலே இவ்வதிகாரிக்கு த்யாஜ்யமாய் ஐஹா லௌகீகமாயும்
பார லௌகீகமாயும் உள்ள ஸூகத்துக்கு ஹேதுவான புண்ய கர்மம்
சர்வ சாதாரணமாக த்யாஜ்யமான துக்கத்தை விளைப்பிக்கிற பாப கர்மம்
அது அடியாக வருகிற தேவ திர்யக்காதி சரீரம்
அநாதி கால வாசிதம் ஆகையால் வருகிற அவித்யா வாசனை -கர்ம வாசனை -பிரகிருதி வாசனை –
அவ்வாசனை அடியாக வருகிற அவித்யா ருசி கர்ம ருசி பிரகிருதி ருசி சம்பந்த ருசி
ஆக பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -என்கிற இவை
இவை அடியாக வருகிற துர்மானம்-இவை அடியாக வருகிற காம க்ரோதாதிகள் –
நோய் பிறப்பு மூப்பு இறப்பு பிணி -என்கிற ஜரா மரணாதிகள்-ஆத்யாத்மீக -ஆதி பவ்திக-ஆதி தைவிகம் -என்கிற
தாப த்ரயங்களால் வரும் துக்கம் -ஏவமானவற்றை விடுவிக்கை
இஷ்ட பிராப்தி யாவது
ஸ்தூல ஸூஷ்ம ரூபாமவிஸ்ருஜ்ய -என்கிற சரீர சம்பந்த நிவ்ருத்தி பூர்வகமாக
ப்ரீதி காரித கைங்கர்ய பர்யந்தமாக உண்டாக்குகை -அதாவது
பகவத் அனுபவ விரோதியான ப்ரக்ருதி சம்பந்தத்தை அநாயாசேந விடுவித்து அர்ச்சிராதி மார்க்கத்தாலே –
நயாமி பரமாம் கதிம் -என்கிறபடியே ஆதி வாஹிகர் கையிலே காட்டிக் கொடாமல் தானே கொடு போய்
வருண இந்த்ர பிரஜாபதி லோகங்களில் அவர்கள் சத்கரிக்க வழி நடத்தி ஆவரண சப்தகங்களையும் அதிக்ரமிப்பித்து-
த்ரிகுணாத் மிகையான மூல பிரக்ருதியையும் அதி லங்கிப்பித்து விராஜா ஜல ஸ்பர்சத்தாலே ஸூஷ்ம சரீரத்தை விடுவித்து
அமா நவம் சமாசாத்யா -என்று அமானாவன் கர ஸ்பரிசத்தை உண்டாக்கி
அபஹத பாப் மத்வாதி குணங்களையும் தத் ஆஸ்ரயமான ஸ்வரூபத்தையும் பிரகாசிப்பித்து
அப்ராக்ருத விக்ரஹத்தைப் பரிக்ரஹிப்பித்து -சதம் மாலா ஹஸ்தா -என்கிற மாநேய் நோக்கியரான
மதிமுக மடந்தையரைக் கொண்டு ப்ரஹ்மலங்காராத்தாலே அலங்கரிப்பித்து
கொடு அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்-என்கிற திவ்ய கோபுர பிராப்தியையும் உண்டாக்கி ராஜ மார்க்கத்தில் போய்
திரு மா மணி மண்டபத்தைக் கிட்டி தமிததம்வித் பாதே நாத்யா ரோஹதி–என்கிறபடியே பாத பீடத்தில் காலையிட்டுப்
படுக்கையைத் துகைத்து மடியிலே சென்று ஏறி ஆலிங்கன ஆலாப விலோகநாத் யநுபவமும் பண்ணுவித்து
அவ்வனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யத்தையும் கொடுக்கை –
சேஷமான ஸ்வரூபத்துக்கு அனுரூபமான இஷ்டம் -தத் உப பத்தி ஹேதுவான கைங்கர்யமாய் இருக்க
சரீர விமோசனமும் -பிராப்தியும் -அனுபவமும் -முதலானவற்றைச் சொல்லுகிறது –
சரீர சம்பந்தம் கைங்கர்ய விரோதி ஆகையாலும்
ஸ்வரூப பிரகாசம் கைங்கர்ய ஆஸ்ரயம் ஆகையாலும்
தேச பிராப்தி கைங்கர்ய வர்த்தகமும் ஆகையாலும்
அனுபவம் கைங்கர்ய ஹேதுவான ப்ரீதிக்கு நிதானம் ஆகையாலும்
ஆக
பிரதான பலம் கைங்கர்யமாய்
அல்லாதவை அவற்றுக்கு உப யுக்தங்களாய் இருக்கும்
சரணம் சப்தம்
ஏவம் பூதமான அநிஷ்ட பிராப்தி இஷ்ட பிராப்திகளுக்கு அவ்யவஹிதமான உபாயம் –
ஸ்ரீ யபதியாய் -ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் -நித்ய மங்கள விக்ரஹ உபேதனாய் இருக்கிறவனுடைய
திருவடிகள் என்றதாயிற்று –
———————
அநந்தரம் -ப்ரபத்யே -என்று
இப்படிப் புருஷகாரமும் -உபாயமும் சித்தமானாலும் -அநிஷ்ட நிவ்ருத்திக்கும் -இஷ்ட லாபத்துக்கும் அபேக்ஷை உடையவனாய்
அது தான் சரண்யனான ஈஸ்வரனையே கொண்டு கொள்ளக் கடவன் என்று இருப்பான் ஒரு அதிகாரி இல்லாமையாலே இறே –
இவ் உபாயம் இதுக்கு முன்பு கார்யகரம் ஆகாது ஒழிந்தது –
ஆகையால் இதுக்கு விஷய பூதனான அதிகாரியைச் சொல்லக் கடவதாகக் கொண்டு அவ்வதிகாரிக்கு விசேஷணமாய் –
கீழ்ச் சொன்ன திருவடிகளை விஷயமாக உடைத்தாய்
அத ஏவ தான் உபாயமும் இன்றிக்கே -சரணவ் சரணம் -என்கையாலே -கர்ம ஞானாதி வியாவ்ருத்தமாய்-
த்வி வசனத்தாலே சஹாயாந்தர நிரபேஷமாய்
சரணம் பிரபத்யே -என்கையாலே -தான் உபாய சரீரத்திலும் -உபேய சரீரத்திலும் புகாதே உபாய ஸ்வீ காராத்மகமாய்
அஹம் அஸ்ம்ய அபராதாநாம் ஆலயோ கிஞ்ச நோ கதி -என்றும்
த்வமேவ உபாய பூதோ மே பவதி ப்ரார்த்தநா மதி -சரணாகதி ரித்யுக்தா சா தேவேஸ்மின் ப்ரயுஜ்யதாம -என்கிற
பிரபத்தி லக்ஷண வாக்கியத்தின் படியே
அஹம் அர்த்தத்துக்கு சேஷத்வம் அன்று நிரூபகம் -ஞானாநந்தன்களும் அன்று -அபராதானாம் ஆலயத்வம் என்னும்படி
சாபராதானான நான் தந் நிவ்ருத்தி யுபாய ரஹிதனாகையாலே அகிஞ்சனன் –
நிவர்த்தகாந்தரம் இல்லாமையாலே அகதி -இப்படி இருக்கிற எனக்கு ரக்ஷகரான தேவரீரே உபாயமாக வேணும் என்று
பிரார்த்திக்கிற ப்ரார்த்தநா ரூப வியவசாயம் சரணாகதி என்கையாலும் –
அநன்யா சாத்யே ஸ்வ அபீஷ்டே மஹா விஸ்வாச பூர்வகம் -ததேக உபாயதா யாச் ஞா பிரபத்தி -என்று
ஸ்வ அபீஷ்டமான ப்ராப்யம் ப்ராப்ய பூதனானவன் அவன் தன்னை ஒழிய வேறே ஒருவரால் சாதிக்க ஒண்ணாதே –
அவன் தன்னையே கொண்டு சாதிக்க வேண்டும்படி -அவன் ஞான சக்திகளால் பூர்ணனாய் –
இவன் ஞான சக்திகளால் அபூர்ணனாய் இருக்கையாலே –
ஸ்ரீ விபீஷண ஆழ்வான்-தன்னை ஸ்பர்சிக்க மாட்டாத நாக பாசத்தாலே-பத்தரான தசையிலும் –
பெருமாளையே ரக்ஷகர் என்று விஸ்வசித்து இருந்தால் போலே மஹா விஸ்வாசத்தை முன்னிட்டுக் கொண்டு –
சாதனாந்தர தியாக பூர்வகமாகவும் -ஸ்வீ கார அங்க ரஹிதமாகவும் அவனையே உபாயமாக யாஸிக்கை-பிரபத்தி -என்கையாலும்
பிரார்த்தனா கர்ப்பமாய் -வைத்தேன் மதியால் -உணர்வின் உள்ளே இருத்தினேன் -என்று
ரஷ்யத்வ அனுமதி ரூபமாய் -ஸ்வரூப யாதாத்ம்ய ஞான பலமாய்க் கொண்டு
தத் அனந்தர பாவி யாகையாலே அசித் வியாவ்ருத்தி ஸூசகமாய்
த்வத் அங்க்ரி முத்திஸ்ய -என்கிற ஸ்லோகத்தின் படியே பிராப்தமாய் ஸூலபமான திருவடிகளை
விஷயமாக்கிக் கொடுக்கிறது
ப்ரபத்யே என்கிற சப்தம் ப்ரபத்தியைக் காட்டுமோ என்னில் -பத்லு கதவ் -என்கிற தாதுவினாலே
கதி வாசியாய் அந்தக் கதி தான் கத்யார்த்தா புத்யர்த்தா -என்று மானஸ கதியைக் காட்டுகையாலே
ப்ரபத்திக்கு வாசகமாகிறது –
இப்பிரபத்தி தான் மாநசமோ வாசகமோ காயிகமோ என்னில்
இது அதிகாரி விசேஷணமாய் பல சித்திக்கு உறுப்பு இன்றிக்கே இருக்கையாலே இதில் நியமம் இல்லை
த்ரிவித கரணங்களினாலும் உண்டாயிற்றதாகில் -பெற்று அல்லது நிற்க ஒண்ணாத த்வராசியத்தை
பிரகாசிப்பிக்கக் கடவதாகையால் மயர்வற மதி நலம் அருள பெற்றவர் –
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே தந்தை தாய் என்று அடைந்த -என்று
த்ரிவித கரணங்களாலும் சரணம் புக்கது
ஏக கரணத்தால் உண்டாயிற்றதாகில் இவ்வுபாயத்தில் அதிகரித்த அளவைக் காட்டக் கடவது
துணிவினால் வாழ்
கடைத்தலை இருந்து வாழும் –என்று இத்துணிவு தானே வாழ்ச்சியாய் இறே இருப்பது
மானஸ கதியாவது
உணர்வின் உள்ளே இருத்தினேன்
ஸ்மர்த்தா
த்வ்யவக்தா
ஸ்மரண மாத்ரேண–என்கிறபடின் உபாயத்வேந அத்யவசிக்கை
வாசிக கதியாவது
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேன்
நாராயணா ஓ மணி வண்ணா நாகணையாய் வாராய் என் ஆர் இடரை நீக்காய் -என்று வாசகமாக பிரார்த்திக்கை
காயிக கதியாவது
அஞ்சலி பிரயோகம் பண்ணுதல்
ரஷக வஸ்து இருந்த இடத்தே வருதல் செய்கை
பத்தாஞ்சலி புடம் தீநம் யாசந்தம் சரணாகதம் –
தீநம் -என்று மாநஸத்தையும்
யாசந்தம் -என்று வாசகத்தையும்
பத்தாஞ்சலி புடம் சரணாகதம் -என்று காயிகத்தையும் -என்று த்ரிவிதமான பிரபத்தியையும் சொல்லிற்று –
உபாயமும் –
புருஷகாரமும் -குணமும் -விக்ரஹமும் -கூடின பசும் கூட்டாகக் கொண்டு பூர்ணமாய் இருக்கச் செய்தேயும் –
அவை உபாய பிரகாசகமாய் -பல பிரதானம் கிருபையால் யாகிறாப் போலே
இங்கும் உபாய ஸ்வீ காரம்
கரண த்ரயத்தால் உண்டாயிற்றே யாகிலும் -பலம் அவனாலே ஆகையால்
பல த்வாரா ஆஸ்ரய பூதனான அதிகாரியினுடைய பூர்த்தியை பிரகாசிப்பிக்கக் கடவது அல்லது
ஒன்றிலும் சாதன பாவம் இல்லையே –
ஏவம் பூதமான ப்ரபத்திக்கு -ஜாதி குண வ்ருத்தாதிகளால் -ஒருவனை விசேஷித்து இவன் அதிகாரி என்னாமையாலும்
ஏவ மூர்த்தாஸ் த்ரய பார்த்தாயா மவ்ச பரதர்ஷப -திரௌபதியா சஹிதாஸ் ஸர்வே நமஸ் சக்ருர் ஜனார்த்தனம் -என்றும்
ரக்ஷமாம் சரணாகதாம் -என்றும்
ஸோ ஹந்தே தேவ தேவேச நார்ச ச நா கௌஸ்து தவ நச சாமர்த்த்யவான் க்ருபா மாத்திரம் நோ வ்ருத்தி ப்ரசீதமே -என்றும்
தம் ப்ரபின் சிரோக்ரீவ மாஸ்யே நஸ்ருத சோணிதம் -விலோக்ய சரணம் ஜக்முஸ் தத் பத்ந்யோ மது ஸூத நம -என்றும்
த்ரீந் லோகான் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத -என்றும்
த்யக்த்வா புத்ராம் ச தாராம்ஸ் ச ராகவம் சரணம் கத -என்றும்
பரமாபதமா பந்நோ மநசா சிந்த யத்தரிம்
மற்றது நின் சரண் நினைப்ப –என்றும்
ராக்ஷசைர் வாத்யமாநா நாம் வாநராணாம் மஹாஸமூ–சரண்யம் சரணம் யாதாராமம் தசாரதாத்மஜம் -என்றும்
ஸூக்ரீவம் சரணங்கத
அஞ்சலிம் ப்ராங்முக க்ருத்வா பிரதிசிஸ்யே மஹோததே–என்றும்
ச பிராதுஸ் சரணவ் காடம் நீ பீட்ய-என்று
ஏழை ஏதலன்
நஞ்சு சோராவதோர்–சரணாய் -என்றும்
வெம் கூற்றம் தன்னை அஞ்சி நின் சரணவ் ச சரணாய் -என்றும் இத்யாதிகளாலே
ஜென்ம வ்ருத்தாதிகளால் உத்க்ருஷ்டரோடு அபக்ருஷ்டரோடு வாசியற பலரும் பல இடங்களிலும் பிரபத்தி பண்ணக் காண்கையாலும்
இந்த பிரபத்திக்கு அபேக்ஷிதம் பகவத் ஏக ரஷ்யத்வ ரூப யாதாத்ம்ய ஞானமும் தத் அனுரூப ப்ராப்ய ருசியும் ஆகையால்
இந்த ருசிகளுக்கு அபேக்ஷிதம் சைதன்ய மாத்திரம் ஆகையால் அது ஸர்வ சாதாரணம் ஆகையாலும்
தேவா நாம் தானவா நாஞ்ச சாமான்யம் அதி தைவதம்
ஈடும் எடுப்புமில் ஈசன்
கொள்கை கொளாமை இலாதான்-என்று சம்பந்தம் ஸர்வ சாதாரணம் ஆகையால் சரண்யனுக்கு உதகர்ஷ அபகர்ஷ நிபந்தமான
உபேக்ஷை அபேக்ஷைகள் இல்லாமையாலும் ஸர்வ அதிகாரமாய் இருக்கும்
ந்யாஸ இதி ப்ரஹ்ம
தஸ்மான் ந்யாஸ மேஷாம் தபஸா மதிரிக்தமாஹு
முமுஷுர்வை சரணம் அஹம் ப்ரபத்யே –இத்யாதிகளாலே வேதாந்த ஸித்தமாய் சகல சாதனங்களிலும் அதிகமாய் இருந்ததே யாகிலும்
கர்ம ஞானாதிகளைப் போலே -அக்னி வித்யா சாபேஷை இல்லாமையாலும்
ஸாஸ்த்ர ஸித்தமாய் இருக்கச் செய்தேயும் ஸ்த்ரீ ஸூத்ராதிகளுக்கு அதிகாரம் உண்டாய் இருக்கிற
பாக யஞ்ஞாதிகளோ பாதி சர்வாதிகாரமாகக் கடவது –
ததஸ் சாகர வேலாயாம் தர்ப்பா நாஸ்தீர்ய ராகவ அஞ்சலீம் ப்ராங்முக க்ருத்வா பிரதிசிஸ்யே மஹோ ததே -என்று
பெருமாள் கடலைச் சரணம் புகுகிற இடத்தில் முழுகி மூக்கைப் புதைத்து முத்து விளக்கிக் கீழ் மேலாகப் புல் படுத்துக் கிடந்தது
நியமங்களோடே சரணம் புக்கார் என்கையாலே புரஸ் சரணாகதி சா பேஷம் என்னலுமாய்
த்வாந்து திக் குல பாம்சநம் -என்று ராவணனால் உபேக்ஷிதனான ஸ்ரீ விபீஷண ஆழ்வான்
ஆஜகாம முஹுர்த்ததேந யாத்ர ராமஸ் ச லஷ்மண -என்று அந்த க்ஷணம் தன்னிலே வந்து பெருமாளைச் சரணம் புகுகிற இடத்தில்
ஸ்நாந ஆசமநாதிகளும் பண்ணாதே சரணம் புக்கார் என்கையாலே புரஸ் சரணாகதி நிரபேஷம் என்னலுமாய் இருந்தது –
ஆனால் என் சொல்லிற்று ஆயிற்று என்னில்
இந்த ஸ்வீ காரமாகிறது -ரக்ஷகனான ஈஸ்வரன் பக்கலிலே ஸ்வதஸ் ஸித்தமாய் நியம விசேஷ சா பேஷம் அன்றியிலே
விஷய மாத்ர சா பேஷமாய் இருக்கிற உபாயத்தை அறிகிற அளவாகையாலே
அதுக்கு அபேக்ஷிதம் ரஷ்யத்வ ஞானம் மாத்ரமேயாய் –
அவனாலே அதிஷ்டிதமான சரீராதிகளையும் தத் கத உபகரணங்களையும் கொண்டு கொள்வதொரு கார்யம் இல்லாமையாலே
புரஸ் சரணாதி நிரபேஷமாயே இருக்கும்
ஆனால் பிரதிபத்தாவான சேதனனுடைய ஸ்வ பாவ விசேஷங்கள்
உதாஹரண கார்ய உபயோகியான கடத்தினுடைய வர்ணாதிகள் தத் உபயோகம் இன்றிக்கே இருக்கச் செய்தேயும்
அவர்ஜனீயமாகக் கொண்டு கிடக்குமா போலே அவர்ஜ நீயதயா அந்விதமாய்க் கிடக்கக் கடவது
இத்தாலே தந் நிபந்தனமாக த்யாஜ்ய அம்சமும் இல்லை -அநுஷ்டேய அம்சமும் இல்லை –
இருந்தபடியே அதிகாரம் என்றதாயிற்று
ஆனால் உபாயாந்தர தியாகம் விதேயமாகிற படி என் என்னில்
இந்த பிரதிபத்திக்கு விஷயமான உபாயம் உபாயாந்தர சன்னிதானத்தில் உதியாதபடி ஸ்வ தந்திரமுமாய் நிரபேஷமுமாய்
இருக்கையாலே அதுக்கு விஷய பூதனானவன் அவ்வாகாரங்களை யதாவத் பிரதிபத்தி பண்ண வேண்டுகையாலும்
இந்த பிரதிபத்திக்கு ஆஸ்ரயமான ஸ்வரூபம் அத்யந்த பரதந்த்ரமாய் இருக்கையாலே
கிரயமாணமான கிரியையில் நிஷ்பன்னமானவை உபாயமாக மாட்டாமையாலும்
உபாயாந்தரங்களை விடச் சொல்லிற்று அத்தனை ஒழிய
உபாய ஸ்வரூப சம்பாத நார்த்தமாகவும் உபாய க்ருத யோத் யுக்தனாகைக்காகவும்–
உபாயாந்தர தியாகம் விதித்தது அன்று
ஆகையால் சர்வாதிகாரமாய் நியம விதுரமான ப்ரபத்தியைப் பண்ணுகிறேன் என்கிறது
ப்ரபத்யே -என்று இதில் வர்த்தமானம் உபாய விஷய அபி முக்ய ஸூசகமான பிரதிபத்திக்கும்
ஸ்மர்த்தா -என்ற அநந்தரம் -தத-என்று நைரந்தர்யத்தைக் கழிக்கையாலே-ஸக்ருத் கரணம் அமையுமே யாகிலும் –
ஸ்ரீ யபதித்வாதி விசிஷ்ட விஷயம் ஆகையால்
ஸூ ஸூகம் கர்த்தும் அவ்யயம் –என்று சாதன திசையிலும்
நாள் கடலைக் கழிமின்-என்று ஸமாச்ரயண அநந்தரம் பிராப்தி அளவும் கால ஷேபம் அரிதாகையாலே அந்த கால ஷேப அர்த்தமாகவும்
சம்சார தோஷமும் பகவத் வைலக்ஷண்யமும் தத் பிராப்தி அபி நிவேசமும் நெஞ்சிலே நடந்த போது
பூர்வ பரிக்ருஹீதமான உபாயத்தை திருட அத்யவசாயம் பண்ணுமத்தனை ஆகையாலும்
அநந்ய சரண்யத்வம் இவனுக்கு ஸ்வரூபம் ஆகையாலும்
நம இத்யேவ வாதிந -என்று போக தசையில் நடக்கையாலும்
த்வயம் அர்த்த அனுஸந்தாநேந சகச தைவம் வக்தா யாவச் சரீர பாதம் அத்ரைவ ஸ்ரீ ரெங்கே ஸூக மாஸ்வ -என்று
சரண்யன் தானே அருளிச் செய்கையாலும்
வாழ் நாள் சென்னாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காண் என்கிறபடியே
ஸ்திதே மநஸீ ஸூஸ்வஸ்தே ஸ்ரீ ரே சதியோ நர –என்று சரீரமும் பாங்காய் சத்வ உத்ரேகம் பிறந்த போது
அவனே உபாயம் என்கிற நினைவு மாறாமல் செல்லக் கடவது என்னும் அர்த்தத்தைக் காட்டக் கடவது
ஆனால் நிதித்யா சி தவ்ய -என்று அஸக்ருதா வ்ருத்தி ரூபமான உபாஸனாத்மக ஞானத்தில் காட்டிலும்
இதுக்கு வாசி ஏது என்னில்
அங்கு அனுசந்தான விச்சேதத்தில் பல விச்சேதம் பிறக்கையாலே விதி ப்ரேரிதமாய் -பரமாய் -இருக்கும்
இங்கு அப்படி வருவதொரு சங்கடம் இல்லாமையாலும் ஸ்மர்த்த விஷய சாரஸ்யதையாலும் ராக ப்ராப்தமாய் இருக்கும்
இப்பதம் தான் பிரபத்யே -என்று அடைகிறேன் என்கிறபடி ஆகையால் ஜூ ஹோமி ததாமி என்னுமா போலே
தத்கால அனுஷ்டான மாத்ரத்தைக் காட்டுகிறது
கால த்ரய வர்த்தித்வத்தைச் சொல்லுகிறது (அன்று) என்று சதாச்சார்ய ஸித்தமான சம்ப்ரதாயம்
அங்கன் அன்றியிலே அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா வமுதம் -என்கிற விஷயத்தை யாவத்காலம் அனுபவிக்கை யாகிற
பேற்றைப் பார்த்தால் யாவச் சரீர பாதம் இவ்வத்யவசாயம் நடந்தாலும் ஸக்ருத் என்கைக்கும் போராத படியாய்க் காண் இருப்பது
என்று ஸ்ரீ எம்பார் அருளிச் செய்வார்
சக்ருதேவ என்கிறது சகசா என்றபடியாய் வரம் ஹுதவ ஹஜ் வாலா பஞ்சராந்தர் வ்யவஸ்திதி -என்கிறபடியே
நெருப்பில் இருப்பு நன்று என்னும்படியான சம்சாரத்தில் பயமும் ஆனந்தீ பவதி என்கிற நிரதிசய ஆனந்த அனுபவமுமாகிற
பகவத் பிராப்தி ருசியும் வடிம்பிடுகையாலே
வென்னாள் நோய் வீய வினைகளை வேரறப் பாய்ந்து எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவன் -என்கிற ஆர்த்திக்கு
ஸூ சகமான தவ்ராதிசயத்தோடே சடக்கென ஆஸ்ரயிக்கச் சொல்லுகிறது என்று ஸ்ரீ ஆழ்வான் நிர்வாகம்
ஆக
திருமந்திரத்தில் பத த்ரயத்திலும் சொல்லுகிற
அநந்யார்ஹ சேஷத்வ -அநந்ய சரண்யாத்வ -அநந்ய போக்யத்வங்கள் ஆகிற ஆகாரங்கள் உடைய
அதிகாரி ஸ்வரூபத்தை ஆஸ்ரயமாக உடைத்தாய்
ஸ்ரீயப்பதியாய்
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய்
விலக்ஷண விக்ரஹ உபேதனனாய் இருக்கிற
சர்வேஸ்வரனை விஷயமாக உடைத்தாய்
ஸ்வ அபராத பூயஸ்த நிபந்தனமாகவும்
நித்ய சம்சாரியான நமக்கு அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தர் அனுபவிக்கும் விஷயம் சித்திக்குமோ என்கிற
உத்தேச்ய துர்லபத்வ நிபந்தனமாகவும்
சகல சாம்சாரிக துரித விதூநந பூர்வகமாக அனுபாவ்யமான நிரஸ்த அதிசய ஆஹ்லாத ஸூக பாவ ஏக லக்ஷணமான
பரம புருஷார்த்தத்தை ஒரு பிரபத்தி மாத்திரம் சாதிக்க வற்றோ என்கிற
உபாய பல்குத்வ நிபந்தனமாகவும் வருகிற பயன்களைப் புருஷகார உத் பூதமான வாத்சல்ய அநு குண அனுசந்தானத்தாலும்
நாராயண பத யுக்தமான நிருபாதிக ஸ்வாமித்வ அனுசந்தானத்தாலும்
தத் பத யுக்தமான சர்வஞ்ஞத்வாதி குண அனுசந்தானத்தாலும் மறுவலிடாதபடி போக்குகையாலே
மஹா விஸ்வாசாத்மகமாய் பிராமண ப்ரமேயங்களாலும் குலைக்க ஒண்ணாதபடியான வ்யவசாயத்தைச் சொல்லுகிறது –
ஆக
பூர்வ வாக்கியம்
அசித் வ்யாவ்ருத்தி ஸூசகமாய்க் கொண்டு சேதனகதமான விவசாயத்தையும்
தத் பிரகாரமான உபாயத்தையும்
அந்த உபாயத்துக்கு உபாயாந்தர வ்யாவ்ருத்தி ரூப சித்தத்வ ஸூ சகமான விக்ரஹத்வத்தையும்
உபாய கார்ய உபயோகியான ஞானாதி வை சிஷ்டியையும்
தத் ஆஸ்ரயண ஏகாந்தமான வாத்சல்யாதி குண யோகத்தையும்
தத் உத்பாவக புருஷகாரத்தினுடைய நித்ய சம்ஸ்லேஷத்தையும்
புருஷகார அபேக்ஷிதமான உபய சம்பந்தத்தையும் சொல்லிற்று ஆயிற்று
அநந்தரம்
இப்படி ஸ்ரீயப்பதியாய்
ஸர்வ ஸ்வாமியான சர்வேஸ்வரன் திருவடிகளில்
ஸர்வ காலாதிகளிலும்
ஸர்வ தேசாதிகளிலும்
அநுஷ்டேயமான கைங்கர்யத்தை
தத் விரோதி நிவ்ருத்த்ய அபேஷா ஸஹிதமாகப் பிரார்த்திக்கிறது உத்தர வாக்கியம் –
————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பரகால நல்லான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply