ஸ்ரீ பரகால நல்லான் ரஹஸ்யம் -ஸ்ரீ திரு மந்த்ரார்த்த விவரணம்-நாராயண பதார்த்தம்/ பிரார்த்தனாயாம் சதுர்த்தி யர்த்தம்–

ஸ்ரீ பிரணவத்தாலே
பகவத் ஸ்வரூபம் என்ன
சித் ஸ்வரூபம் என்ன
தத் சம்பந்த ஸ்வரூப விசேஷம் என்ன
உபாய ஸ்வரூபம் என்ன
ப்ராப்ய ஸ்வரூபம் என்ன –இத்யாதிகளான சகல அர்த்தங்களும் சொல்லப்படுகிறது –
ஆகையால் சகல சாஸ்த்ரா ஸங்க்ரஹம் என்னும் இடம் ஸம்ப்ரதி பன்னமாகச் சொல்லிற்று ஆயிற்று

————–

அநந்தரம் உகார விவரணமான நமஸ் சப்தம்

ஆக நமஸ் சப்தத்தால்
ஸ்வரூப விருத்தமான அஹங்கார மமகாரங்களினுடைய நிவ்ருத்தியும்
நிவ்ருத்தமான ஸ்வரூபத்தினுடைய அத்யந்த பாரதந்தர்யமும்
இந்த பாரதந்தர்ய காஷ்டையான ததீய சேஷத்வமும்
பரதந்த்ரனுக்கு அனுரூபமான உபாயமும் சொல்லிற்று ஆயிற்று

ஆக பிரணவத்தால் ஸ்வரூபம் சொல்லி
நமஸ் சப்தத்தால் ஸ்வரூப அனுரூபமான உபாயம் சொல்லிற்று ஆயிற்று

அநந்தரம் அகார விவரணமான நாராயண பதம்
பகவச் சேஷபூதனாய் -பகவத் ஏக சரணனாய் இருந்துள்ள ஆத்மாவுக்கு
தத் அனுரூப புருஷார்த்த ஸ்வரூபமான கைங்கர்ய பிரார்த்தனையைச் சொல்லக் கடவதாகக் கொண்டு
தத் பிரதி சம்பந்தியாய் தத் ஹேதுவான சேஷித்வத்துக்கு காரணமான
சர்வ ஆதார சர்வ வ்யாபகத்வ சர்வ அந்தர்யாமித்வ சர்வ ரக்ஷகத்வ சர்வ சரீரித்வாதிகளை யுடையவனாய்
அனுபாவ்ய குண சம்பன்னனாய் உபாய உபேய பூதனாய் ஹேயபிரத்ய நீகத்வ கல்யாணைகதாநத்வ விசிஷ்டானாய்
ஸ்ரீ யபதியாய் சர்வவித்த பந்துவாய் சர்வ காரணனான சர்வேஸ்வரனைச் சொல்லுகிறது

அகாரத்தில் சொன்ன சர்வ ரக்ஷகத்வத்துக்கு விஷயமான ரஷ்ய அம்சத்தைச் சொல்லுகையாலும்
நாராயண பதத்தில் சமாசத்வ யத்தாலும் ரக்ஷண பிரகாரத்தைச் சொல்லுகையாலும் அகார விவரணம் ஆகிறது நாராயண பதம்
நார என்றும் அயன என்றும் இரண்டு பதமாய் மேல் சதுர்த்ததீ விபக்தியுமாய் இருக்கும்
அதில் நார பதம் -நர என்றும் நார என்றும் நாரா என்றுமாய்
ஸ்வரூபேணவும் ப்ரவாஹ ரூபேணவும் நித்தியமான சகல பதார்த்தங்களையும் சொல்லுகிறது -எங்கனே என்னில்

ரேபம் -ரிங் ஷயே-என்கிற தாதுவிலே ஸித்தமாய்-ர-என்ற பதமாய் ஷயிஷ்ணுக்களான வஸ்துக்களைச் சொல்லி –
நகாரம் அத்தை நிஷேதித்து -நர -என்று நித்ய பதார்த்தத்தைச் சொல்லுகிறது –
க்ஷய பிரசங்க நிஷேத முகேன நித்யத்வம் சொல்லுகையாலே
ப்ரவாஹ ரூபேண நித்யங்களான பதார்த்தங்களும் இந்த நார பதத்தால் சொல்லுகிறது
யஸ்யச நாராயண என்று பஹு வ்ரீஹியாய் -ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களிலும் அந்தப் பிரவிஷ்டனாய்க் கொண்டு
ஆகாசாதிகளைப் போலே ஸ்வரூப ஏக தேசத்தாலே வ்யாபிக்கை அன்றிக்கே
பிரதிபதார்த்தம் யாவத் ஸ்வரூபம் பரிசமாப்ய ஆத்மதயா வியாபித்து நின்று நியமிக்கும் என்னும் இடத்தையும் சொல்லிற்று ஆயிற்று

இத்தாலே -யச்ச கிஞ்சிஜ ஜகத் யஸ்மின் த்ருஸ்யதே ஸ்ரூயதேபிவா -அந்தர்ப்பஹிச்ச தத் சர்வம்
வ்யாப்ய நாராயணஸ் ஸ்திதா -என்று ப்ரத்யஷாதி பிரமாண ஸித்தமான சகல வஸ்துக்களிலும் உள்ளும் புறமும் வியாபித்து நிற்கும் என்று
ஸ்ருதி ஸித்தமான அந்தர் வ்யாப்தியும் பஹிர் வ்யாப்தியும் சொல்லிற்று ஆயிற்று
இந்த வியாப்தி த்வயமும் அனோர் அணீயான் மஹதோ மஹீயான் -என்கிற ஸ்ருதியிலும் சொல்லப் பட்டது

ஸ்வ வ்யாதிரிக்த ஆதாரத்வ ரூபமான பஹிர் வியாப்தியில் ஞான சக்த்யாதி குணங்கள் ஸ்வரூப ஆஸ்ரயமாய்க் கொண்டு
இருக்கையாலே தத் வியாப்தியிலே அந்வயிக்கக் கடவன-

அந்தர் வியாப்தி பலம் -அந்தர் பிரவிஷ்டஸ் சாஸ்தா ஜனா நாம் சர்வாத்மா –
சாஸ்தா விஷ்ணோர் அசேஷஸ்ய ஜகத–என்கிறபடியே நியந்த்ருத்வம் ஆகையால்
அது குண த்வாரா ஆகையால் குண யுக்தனாயே வியாபிக்க வேண்டுகையாலும் –
வஸ்து தான் நிர்குணமாய் இராமையாலும்
தத் குணங்களில் குணி வியாபிக்கும் போதைக்கு குணங்களுக்கு வ்யாப்ய வியாபகத்வங்கள் இரண்டும் உண்டாகையாலே
ஆத்ம ஆஸ்ரய தோஷம் வருகையாலும் குணங்களில் குணி வியாபிக்கும் போதைக்கு அந்த குணம் தன்னிலும் குணி வியாபிக்க வேணும்
அவைகளிலும் குணி வியாபிக்க வேணுமாகையாலே அநவஸ்தை வரும் –
ஆகையால் அந்தரவ்யாப்தியிலே குணங்களுக்கு அன்வயம் இல்லை –

இந்த நார ஸப்தத்திலே ஸ்ரீ லஷ்மீ ஸ்வரூபம் அந்தர்பவித்து இருக்கையாலே
அயன சப்த வாஸ்யமாய் வியாபகமான பகவத் ஸ்வரூபம் ஸ்ரீ லஷ்மீ விசிஷ்டமாய் இருக்கும் என்கிற அர்த்தம்
ஸ்வரூப நிரூபகத்வேந யுண்டான அவர்ஜனீய சந்நிதியாலே யாதல்
தேவத்வே தேவ தேஹேயம் மனுஷ்யத்வே மானுஷீ -விஷ்ணோர் தேஹ அநு ரூபாம் வைகரோத் யேஷாத்மனஸ் தநூம்
தவியாஸ விஷ்ணுநா ஸாம்பஜகத் வியாப்தம் சராசரம் இத்யாதிகளில் சொல்லுகிற விபூதி பேதத்தாலே யாதல்
அத்தனை அல்லது பரம மஹத் பரிமாண லக்ஷணமான விபுத்வத்தால் அன்று
அப்படியே யாமாகில் ஈஸ்வர த்வித்வாதி தோஷம் வரும் -விஷ்ணு பத்னீ என்கிற இவளுடைய பத்நீத்வ ஸ்ருதியோடும்
ஈஸ்வரனுடைய -ஈஸதே தேவ ஏச -என்றும் -சாஸ்தா சராசரஸ்யைச -என்கிற ஏகத்துவ ஸ்ருதியோடும் விரோதிக்கும்
ஆகையால் ஸ்ரீ யபதித்தவம் சொல்லிற்று
அகாரத்தில் சொல்லுகிற ஸ்ரீயப்பதித்துவத்துக்கு சேஷத்வ பிரதி சம்பந்தித்தவமும்
இதில் சொல்லுகிற ஸ்ரீயப்பதிவத்துக்கு கைங்கர்ய பிரதி சம்பந்தித்தவமும் ஆகிற அர்த்த பேதம் உண்டாகையாலே
பவ்நருர்த்யம் இல்லை-
ஆகையால் வியாபகமான பகவத் ஸ்வரூபம் ஸ்ரீ லஷ்மீ விசிஷ்டமாயே இருக்கும்

இதில் சொல்லுகிற அந்தர் வியாப்தி ஆத்மாவினுடைய நிரவயத்வ நிபந்தமான அந்தராகாச அபாவத்தாலே கூடாதே என்னில்
வியாப்ய வியாபகங்களான உபய ஸ்வரூபமும் த்ரவ்யமாய்க் கொண்டு தேஜோ த்ரவ்யங்களோபாதி ஸ்வசகங்களாய் இருக்கையாலே
தகை அற ஒரு நீராகக் கலக்கைக்கு யோக்யதை உண்டு –
ஆகையால் நியந்தாவான வியாபக ஸ்வரூபம் நியாம்யமான ஆத்மாவுக்குள்ளே வியாபித்து நியமிக்கக் குறை இல்லை
இதில் பஹிர் வியாப்தியால் சர்வ ஆதாரத்வமும் அந்தர் வியாப்தியாலே வியாபகத்வமும் சர்வ அந்தர்யாமித்வமும் சொல்லுகிறது –
இத்தாலே இதுக்கு விஷய பூதனான ஆத்மாவினுடைய ஆதேயத்வ விதேயத்வ வியாபயத்வங்கள் பலிக்கையாலே
தல் லக்ஷணமான ஆத்மாவினுடைய சரீரத்வம் சொல்லுகிறது –
ஆகையால் அவற்றுக்கு பிரதி சம்பந்திதயா ஆதாரத்வ வியாபகத்வாதி விசிஷ்டனாய்
அயன சப்த வாச்யனானவனுடைய சரீரத்வம் சொல்லிற்று ஆயிற்று

நத தஸ்திவிநாயத்ஸ் யான் மயா பூதம் சராசரம் –என்று வியாப்ய பதார்த்த ஸத்பாவம் வியாபக வஸ்து அதீனம் என்று
சொல்லுகையாலே இந்த வியாப்தி த்வயத்தாலும் சத்தா தாரகத்வ நிபந்தனமான ரக்ஷகத்வம் சொல்லுகிறது –

இதில் சொல்லுகிற சரீர சரீரீ பாவத்தால் சரீரியைப் பற்ற சரீரம் சேஷமாய் இருக்கும் என்று இந்த சரீராத்மா பாவ சம்பந்தத்தால்
கீழ்ச் சொன்ன சேஷத்வத்தை த்ருடீகரிப்பிக்கையாலே சரீரியான ஈஸ்வரனுடைய சர்வ சேஷித்வம் சொல்லுகிறது

இதிலே ஞானாதி குண விசிஷ்டனாகவும் சொல்லுகையாலே அனுபாவ்ய குண பூர்த்தியும் சொல்லிற்று ஆகிறது

அயன பதம்–இண் கதவ் -என்கிற தாதுவிலே ஸித்தமாய்க் கொண்டு -கதி வாசி யாகையாலே -கதிர் ஆலம்பனம் தஸ்ய -என்றும்
விஷ்ணு போதம் விநா நாந்யத் கிஞ்சி தஸ்தி பாராயணம் -என்று சொல்லுகிற உபாயத்வமும் உபேயத்வமும்
கம்யதே அநேந -என்கிற கரேண வ்யுத்பத்தியாலும் சித்திக்கையாலே -இத்தால் ப்ராபகத்வமும் ப்ராப்யத்வமும் சொல்லிற்று ஆயிற்று –

ஹேய நிவர்த்தகத்வ ரூபமான உபாயத்வம் ஹேய பிரதிபட வஸ்துவுக்கு ஆகையாலும்
உபேயத்துக்கு அனுபாவ்ய குண பூர்த்தி உண்டாக வேண்டுகையாலும் இதில்
ஹேயபிரத்ய நீகத்வ கல்யாணைகதாநத்வ ரூபமான உபய லிங்க விசிஷ்டத்வமும் சொல்லுகிறது –

உபாய பூதனுடைய ரக்ஷகத்வமும் இந்த ப்ராப்யத்வமும் சர்வ பிரகார விசிஷ்டம் ஆகையாலும் பந்து லாபமும் ப்ராப்யம் ஆகையாலும்
மாதா பிதா பிராது நிவாசஸ் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாழ் நாள் -என்றும் சொல்லுகிறபடியே
ப்ராப்யபூதரான சகலவித பந்துக்களும் நாராயண சப்த வாச்யனான சர்வேஸ்வரன் என்கிறது

அங்கன் அன்றியிலே இந் நாராயண பதம் ஸமஸ்த கல்யாண குணாத்மகமான வஸ்துவைச் சொல்லுகையாலே
இதில் சொல்லுகிற வாத்சல்ய ஸ்வாமித்வ ஸுசீல்ய ஸுலப்யங்களாலே மாத்ருத்வ பித்ருத்வ நிவாஸத்வங்களையும்
சர்வஞ்ஞத்வ சர்வ சக்திதவ அவாப்த ஸமஸ்த காமாத்வ பரம காருணிகத் வாதிகளாலே உபாயத்வத்தையும்
ஸுந்தர் யாதிகளாலே ப்ராப்யத்வத்தையும் சொல்லுகையாலே
இந் நாராயண பதம் சர்வ வித பந்துத்வத்தையும் சொல்லுகிறது என்னவுமாம்

நாராஜ்ஜாதாநி தத்வாநி நாராணீ திததோவிது தாந்யே வசாயநம் தஸ்ய தேந நாராயணஸ் ஸ்ம்ருத-என்று
நித்யத்வேந நர சப்த வாச்யனான சர்வேஸ்வரன் பக்கல் நின்றும் உத் பன்னமானவை நாரங்கள்-
அவற்றை இருப்பிடமாக உடையவன் நாராயணன் என்று சொல்லுகையாலே இந்த நாராயண பதத்தால் சர்வ காரணத்வம் சொல்லிற்று

இப்படி சர்வ வியாபகனான நாராயணன் ஜகத் காரணன் என்று சொல்லுகையாலே –
நாராயணே நஸ்ருஜ்யாஸ்தே ப்ரஹ்ம ருத்ராதயோமரா -ஸம்ஹார்யாஸ் சததைவேம சர்வே நாராயணாத்மகா -என்று
அவனாலே ஸ்ருஜ்யமாய் ஸம்ஹாரியருமான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு காரணத்வ சங்கையே பிடித்தது இல்லை என்னும் இடம்
காரண வாக்கியங்களில் சத் ப்ரஹ்மாதி சப்தங்கள் -கதி சாமாநயாத்-என்கிறபடியே
சாமான்ய விசேஷத்தாலே வ்யக்தி விசேஷமான நாராயணன் பக்கலிலே பர்யவசித்தவோ பாதி
ப்ரஹ்ம சிவாதி சப்தங்களும் சாஸ்வத சிவ பரப்ரஹ்ம பூதனான நாராயணன் பக்கலிலே
பர்யவசிக்கும் என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று

இப்பதத்திலே சேதன அசேதன சரீரியாகச் சொல்லுகையாலே
கார்யே நந்தேஸ்வ தனு முகதஸ் த்வாம் உபாதானமாஹு-என்கிறபடியே உபாதானத்வமும்
சர்வஞ்ஞத்வாதி விசிஷ்டமாக சொல்லுகையாலே நிமித்த சஹகாரித்வங்களும்
இது தன்னாலே ததைக்யமும்
வியாப்தியாலே கார்யபூத ஸமஸ்த வஸ்த்வாத்மகத்வமும்
ஹேயபிராதிபட்யத்தாலே தத்கத தோஷ ஸ்பர்ச ராஹித்யமும் சொல்லிற்று ஆயிற்று
இதில் ஸங்க்ரஹ விவரண கதங்களான காரணத்வங்களுக்கு சேஷித்வ வியாபகத்வங்களுக்கு ஹேதுவாகிற
ப்ரவ்ருத்தி நிமித்த பேதங்கள் உண்டாகையாலே புநருக்தி வாராது –

ஆக நாராயண பதத்தால்–கைங்கர்ய பிரதிசம்பந்தியான ஈஸ்வரனுடைய ஆதாரத்வ -அந்தராத்மத்வ -ரக்ஷகத்வ -வியாபகத்வ –
சரீரித்வ -சேஷித்வங்களை சொல்லுகையாலே
தத் விஷயமான சேதனனுடைய கைங்கர்யத்தில் பிரார்த்தனா ஹேதுவான சேஷத்வத்துக்கு காரணமான ஆதேயத்வாதிகளும்
கைங்கர்யத்துக்கு அடியான ப்ரீதிக்கு ஹேதுவான அனுபவத்துக்கு விஷயமான பகவத் ஸ்வரூப குணாதிகளும்
அனுபவ விரோதி நிவ்ருத்தி பூர்வகமாக அனுபவ பிரதானம் பண்ணும் உபாயத்வமும்
தத் ஹேதுவான உபய லிங்க வைசிஷ்டியும்
இத்தனையும் ஸ்வ லாபமாகச் சொல்லுகைக்கு ஹேதுவான ஸர்வவித பந்துத்வமும்
கைங்கர்யத்துக்கு கர்த்தாவான சேதனருக்கும் தத் உபகரணங்களான பதார்த்தங்களும் ஹேது பூதனாகையாலே வந்த
காரணத்வமும் சொல்லிற்று ஆயிற்று –

ஆக கைங்கர்ய பிரதிசம்பந்தியைச் சொல்லி -தத் பிரதிசம்பந்திகமான கைங்கர்யத்தை பிரார்த்திக்கிறது

மகார விவரணமான பிரார்த்தனாயாம் சதுர்த்தியாலே பகவத் அநந்யார்ஹ சேஷ வஸ்துவுக்கு தத் உபபத்தி ஹேதுவான
கைங்கர்ய பிரார்தனையைப் பண்ணுகிறது ஆகையால் சேஷபூத வாசகமான மகாரத்துக்கு
கைங்கர்ய பிராத்தனா வாசகமான சதுர்த்தீ விவரணமாகக் கடவது
இச் சதுர்த்தீ கைங்கர்ய பிரார்த்தனா வாசகமானபடி எங்கனே என்னில் –
சதுர்த்தியாவது -தாதரத்யே சதுர்த்தீ வக்தவ்யா-என்கையாலே தாதர்த்த வாசியாய் இருக்குமே
அதில் பிரதம அஷரத்தில் சதுர்த்தீ ஸ்வரூப தாத்பர்யத்தைச் சொல்லுகையாலும்
நமஸ் சப்தம் அந்த ஸ்வரூபத்தினுடைய சர்வ ரக்ஷண ஹேதுவான ஸ்வா தந்தர்யத்தினுடைய நிவ்ருத்தியைப் பண்ணுகையாலும்
தாதார்த்ய ஹேதுவான சரீராத்ம பாவத்தினுடைய நித்யத்வத்தாலே தாதர்த்யம் நித்யம் ஆகையால்
ஸ்வரூப தாதர்த்யம் பிரார்த்தித்து பெற வேண்டாது ஒழிகையாலும்
இச் சதுர்த்தியாலே ததர்த்த பூதமான ஸ்வரூபத்தினுடைய ப்ரவ்ருத்தி தாதர்த்ய முகேந கைங்கர்யத்தை சொல்ல வேண்டுகையாலும்
இது தனக்கு பிரார்த்தனையும் அர்த்தமாகலாய் இருக்கையாலே தாதர்த்ய பிரார்த்தனைகள் இரண்டையும் சொல்லா நின்று கொண்டு
ப்ரவ்ருத்தி தாதர்த்ய ரூப கைங்கர்ய பிரார்த்தனா வாசகமாய் இருக்கையாலே கைங்கர்ய பிரார்த்தனா வாசகம் என்னக் குறையில்லை –

கைங்கர்ய பிரதி சம்பந்தியான ஈஸ்வரனுடைய உத்துங்கத்வத்தாலும் -அவாப்த ஸமஸ்த காமத்வத்தாலும்
இவனுடைய சேஷத்வ பாரதந்தர்யங்களாலும்
நமஸ் சப்தத்தில் உபாய நிஷ்டனான இவன் லப்த கைங்கர்யம் இல்லாமையாலும்
நித்ய கிங்கரோ பவாநி
நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய்
வான் உயர் இன்பம் மன்னி வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே
அடிமை செய்ய வேண்டும் நாம் -இத்யாதிகளாலே பிரார்த்தநா விஷ்டமாகச் சொல்லுகையாலும் பிரார்த்தித்தே பெற வேணும்
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்கிறபடியே
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும் உசிதமான ஸர்வவித கைங்கர்யங்களையும்
பண்ணப் பெறுவேனாக வேணும் என்று பிரார்த்தித்துத் தலைக் கட்டுகிறது

கைங்கர்ய பிரதி சம்பந்தி வாசகமான நாராயண பதத்தால் கைங்கர்ய ஹேதுவான ப்ரீதிக்கு நிதானமான அனுபவத்துக்கு
விஷயமாய்க் கொண்டு போக்யபூதனான சர்வேஸ்வரனையும் போக்தாவாய் சரீரதயா சேஷமான ஆத்மாவையும்
நித்யராகச் சொல்லுகையாலே கைங்கர்ய ஹேதுவான போகம் நித்யமாகையாலும்
நச புந ராவர்த்ததே
அநா வ்ருத்தி சப்தாத்–இத்யாதிகளில் படியே யாவதாத்மபாவி அனுபாவ்யமாகையாலும்
தத்கார்யமான கைங்கர்யத்தை சார்வ காலீனமாக பிரார்த்திக்கக் குறையில்லை –

இப்பதத்தில் போக்தாவான வாத்மாவை சேஷ தயா பிரகாசிதமான ஸ்வரூபாதிகளை யுடையனாகச் சொல்லுகையாலே
அனுபவ உபகரணமான ஞானாதிகளுக்கு சங்கோசம் இல்லை என்கையாலும்
போக்யமான ஈஸ்வரனை அபரிச்சின்ன ரூபனாகச் சொல்லுகையாலும் போகம் சர்வ தேச சித்தமாகையாலும்
தஸ்ய சர்வேஷு லோகேஷு காமஸாரோ பவதி
இமான் லோகான் காமான் நீ காம ரூப்யநு சஞ்சரன்-இத்யாதிகளில் சொல்லுகிற சர்வ தேச சித்தமாக பிரார்த்திக்கிறது

அப்ருதக் சித்தனாய்க் கொண்டு சர்வ அவஸ்திதானாகையாலே நித்ய அக்னி ஹோத்ரம் என்னா நிற்கச் செய்தேயும்
சாயம் பிராத காலங்கள் ஒழிய மத்திய கால விசசித்தியை யுடைய அக்னி ஹோத்ரம் போல் அன்றிக்கே
அந்தரங்க பஹிரங்கமான சர்வ அவஸ்தைகளிலும் நடக்கும் என்கையாலே
இந்த பிரார்த்தனை சர்வ அவஸ்தா விசிஷ்டமாய் இருக்கும்

இவனுடைய சேஷத்வத்தை சர்வ பிரகாரமாக இதில் சொல்லுகையாலும்
நிவாஸ சய்யா ஆசன பாதுகா அம்ஸூக உபாதான வர்ஷா தப வாரணாதிபி
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே சர்வவிதமாகச் சொல்லுகையாலும்
ஸர்வவித கைங்கர்யங்களையும் பண்ணப் பெறுவேனாக வேணும் என்று பிரார்த்திக்கிறது

இப்படிப் பண்ணும் இடத்தில்
குருஷ்வமாம் அனுசரம்
க்ரியதாம் இதி மாம்வத
ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான்
உனக்கே நாம் ஆட் செய்வோம்
முகப்பே கூவிப் பணி கொள்ளாய் -இத்யாதிகளால் சேஷ பூதனான இவனுக்கு பிரதி சம்பந்தி நியதி ஒழிய
பிரகார நியதி இல்லாமையால் சேஷி அதீன கைங்கர்யமே ஸ்வரூப ப்ராப்தமாகச் சொல்லுகையாலே
உசித கிஞ்சித்காரமாக பிரார்த்திக்கிறது –

இப்படி நியத பிரதி சம்பந்திக கைங்கர்ய கர்த்தாவான ஆத்மாவை ஞாதாவாகச் சொல்லுகையாலும்
அஹம் அந்நாத
ஸோஸ் நுதே சர்வான் காமான்
அத்ர ப்ரஹ்ம சமஸ் நுதே –இத்யாதிகளிலே ஞான அனுகுணமாக போக்த்ருத்வத்தைச் சொல்லுகையாலும்
இதிலே ஸ்வ கர்த்ருத்வ ஸ்வ சாரஸ்யாதிகள் நடக்கக் கூடுகையாலே தந் நிவ்ருத்தியும்
இச் சதுர்த்தியாலே பிரார்த்திக்கப் படுகிறது

ஆனால் இந்த நிவ்ருத்தி பிரார்த்தனை கூடும்படி என் என்னில்
கைங்கர்ய பிரதி சம்பந்தியான பகவத் ஸ்வரூபாதிகளை அனுபவிக்கைக்கு உபகரணமான ஞானம்
ஆத்மகதமாய் இருந்ததே யாகிலும் பகவத் அதீன சத்தா தாரகம் ஆகையால் தத் அனுமதி ஒழிய
அது அனுபாவ்ய விஷய விஷயீகார க்ஷமம் இல்லாமையாலும்
இந்த ஞான ஆஸ்ரயமான வஸ்து தான் பகவத் ஸ்வரூபகதமுமாய் பகவத் அதீன ஸ்வ பாவமுமாய் இருக்கையாலே
தத் ப்ரேரிதமான அனுபவம் ஒழிய ஸ்வ அதீனமான அனுபவம் இல்லாமையாலும் விஷய பிரகாசத்வமும் தத் காரியங்களும்
பக்தாநாம், தவம் பிரகாஸசே-என்றும்
ஸுந்தர்ய சவ்ஸீல்யாதி குண ஆவிஷ் காரேண அக்ரூர மாலாகாராதி கான் பரம பாகவதான் க்ருத்வா -என்றும் சொல்லுகிறபடியே
ஏதத் அதீனமாக வேண்டுகையாலும்
தத் ப்ரீதிகாரித கைங்கர்யமும் அவனுடைய நியோகாதீனமாக தத் ப்ரேரிதனாய்க் கொண்டு பண்ண வேண்டுகையாலும்
சேஷதைக ஸ்வரூபமான வஸ்துவுக்கு சேஷி பிரயோஜனத்துக்கு உறுப்பான சேஷியினுடைய நியமன தாரணாதி விஷயத்வம் ஒழிய
ஸ்வ பிரயோஜனாதிகள் இல்லாமையால் சேஷபூத வஸ்துகதமாய் சேஷத்வ ஞான நிபந்தனமான அனுபவம் என்ன –
தத் ஹேதுவான கைங்கர்யம் என்ன -தத் விஷய ரசம் என்ன -என்று இத்தனையும் ஸ்வ அதீனம் இல்லாமையாலும்

ப்ரகர்ஷயிஷ்யாமி
அஹம் அந்நம் அஹம் அந்நம் அஹம் அந்நாத
நீத ப்ரீதி புரஸ்க்ருத
உந்தன் திரு உள்ளம் இடர் கெடும் நாங்கள் வியக்க இன்புறுதும்–இத்யாதிகளால்
சேஷி பிரயோஜனமே தங்களுக்கு பிரயோஜனமாகக் கொள்ளுகையாலும்
ஸோஸ் நுதே
லப்த்வா நந்தீ பவதி -இத்யாதிகளில் சொல்லுகிற ஆனந்தித்தவம் பகவத் அதீன ஸ்வரூப ஸ்வ பாவனான இவனுடைய
பகவத் பிரீதி விஷய ஞானத்தைச் சொல்லுகிறதாக வேண்டுகையாலும்
இவ்வாகாரம் தான் சேஷியான ஈஸ்வரனாலே லப்தமாக வேண்டுகையாலும்
இந்த ஸ்வ அதீன நிவ்ருத்தியை மத்யம பதமான நமஸ் சப்தம் காட்டுகையாலும்
ஏவம்பூத ஞான விசிஷ்டனான இவனுக்கு ஸ்வ கர்த்ருத்வ ஸ்வ ஸ்வாரஸ்யாதி நிவ்ருத்தி பிரார்த்தனை அத்யந்தம் உப பன்னம்

ஆக ச விபக்திகமான நாராயண பதத்தால்
சர்வ சேஷியான சர்வேஸ்வரன் திருவடிகளில் சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தா உசிதமான
ஸர்வவித கைங்கர்யங்களை ஸ்வா தந்தர்ய ஸ்வ ஸ்வாரஸ்ய தீ மயமான விரோதி நிவ்ருத்தி பூர்வகமாகப்
பண்ணப் பெறுவேனாக வேணும் என்று பிரார்த்தித்துத் தலைக் கட்டுகிறது –

ஆக பத த்ரயத்தாலும்
ஈஸ்வர ஸ்வரூபமும்
த்யாஜ்யமான விரோதி ஸ்வரூபமும் சொல்லிற்று ஆயிற்று –
ஈஸ்வரன் சர்வ சேஷியாய் இருக்கும்
சேதனன் அநந்யார்ஹ சேஷமாய் இருக்கும்
அந்ய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்ய தேஹாத்ம அபிமானாதிகள் விரோதியாகக் கடவது என்றும்
உகார மகாரங்களாலே தந் நிவ்ருத்தியைச் சொல்லுகிறது என்றும் சொல்லிற்று

பிரணவத்திலே ஈஸ்வரனுடைய உபாயத்வமும் -சேதனனுடைய அநந்ய சரணத்வமும் -உபாயாந்தர சம்பந்தமும் –
ஸ்வ ரக்ஷண அர்த்த ப்ரவ்ருத்தியும் ஸ்வரூப ஹானி என்னும் இடமும் தந் நிவ்ருத்தியும் சொல்லிற்று

நமஸ் ஸப்தத்திலே -ஈஸ்வரனுடைய ப்ராப்யத்வமும் சேதனனுடைய அநந்ய போக்த்வமும்
ப்ராப்யாந்தர சம்பந்தம் அப்ராப்தம் என்னும் இடத்தையும்
ப்ராப்ய விஷயமான ஸ்வ கீயத்வ ஸ்வாரஸ்யாதி நிவ்ருத்தியும் சொல்லிற்று

நாராயண பதத்தில் இந்த சேஷித்வ உபாயத்வ ப்ராப்யத்வங்கள்
ஈஸ்வரனுக்கு ஸ்வரூபம் ஆகையால் ஈஸ்வர ஸ்வரூபமும்
அநந்யார்ஹ சேஷத்வ அநந்ய சரணத்வ அநந்ய போக்த்வங்கள்
ஆத்மாவுக்கு ஸ்வரூபம் ஆகையால் ஆத்ம ஸ்வரூபம் சொல்லிற்று

இம்மந்திரம் அநந்யார்ஹ சேக்ஷத்வாதி ஆகாரத்ரய வாசகம் ஆகையால் வாக்ய த்ரயாத்மகமாய் இருந்ததே யாகிலும்
அகாரார்த்தாய -என்கிற ஸ்லோகத்தாலே -அகாரார்த்தாயைவஸ்வ மஹம் -என்று
அகார வாச்யனுக்கே சேஷம் நான் என்று பிரணவ அர்த்தத்தைச் சொல்லி
அதமஹ்யம் ந -என்று வாக்ய பேதத்தைக் காட்டி நமஸ் சப்தார்த்தமான ஸ்வ அதீனதா நிவ்ருத்தியையும்-
தத் கார்யமான ததீய சேஷத்வ பர்யந்தமான தச் சேஷத்வத்தையும் சொல்லி
நாராணாம் நித்யானாம் அயனமிதி நாராயண பதம் யமாஹ -என்று நார சப்த வாச்யமாகையாலே
நித்ய பதார்த்தங்களான சேதன அசேதன சமூகங்களுக்கு அயனமாக இருக்கும் என்று
நாராயண பதம் யாவன் ஒருவனைச் சொல்லுகிறது என்று நாராயண பதார்த்தத்தைச் சொல்லி
அஸ்மை காலம சகல மபி ஸர்வத்ர சகலா ஸ்வ வஸ்த்தா ஸ்வாவிஸ்யுர் மம சஹஜ கைங்கர்ய விதய-என்று
அவன் திருவடிகளில் சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும் சர்வவிதமான கைங்கர்ய விதிகள்
ஆவிர்பவிக்க வேணும் என்று சதுர்த்த்யர்த்தமான கைங்கர்ய பிரார்த்தனையைச் சொல்லித்
தலைக் கட்டுகையாலே ஏக வாக்யமாய் இருக்கும்

ஆக அகார வாச்யனான சர்வேஸ்வரனுக்கே சேஷம் நான் -எனக்கு உரியேன் அல்லேன் –
சேதன அசேதனங்களுக்கு அயனமான சர்வேஸ்வரன் திருவடிகளில் என்றும் எங்கும் எப்போதும்
எல்லா அடிமைகளும் செய்யப் பெறுவேனாக வேணும் -என்கிறது

ஆக -திருமந்த்ரத்தால்
சேதனனுடைய சேஷத்வமும் –
சேஷத்வ பிரதி சம்பந்தியும் –
இதனுடைய அநந்யார்ஹத்வமும் –
அநந்யார்ஹ சேஷபூதனுடைய ப்ரக்ருதே பரதவ ஞான குணகத்வாதிகளும்-
அவனுடைய அஹங்கார மமகார நிவ்ருத்தியும் –
நிவ்ருத்தமான ஸ்வரூபத்தினுடைய அத்யந்த பாரதந்தர்யமும் –
பாரதந்தர்ய காஷ்டையான ததீய சேஷத்வமும் –
பரதந்த்ரனுக்கு அனுரூபமான உபாயமும் –
பலமான கைங்கர்யத்துக்கு பிரதி சபந்தியையும் -கைங்கர்ய பிரார்த்தனையும் சொல்லிற்று ஆயிற்று

தேஹா சக்தாத்ம புத்திர் யதிபவதி பதம் சாது வித்யாத் த்ரிதீயம் ஸ்வா தந்தர் யாந்தோயதி ஸ்யாத்
பிரதம மிதர சேஷத்வதீஸ் சேத் த்வீதீயம் -ஆத்ம த்ராண உன்முகஸ்சேந் நம இதிச பதம பாந்தவாபாச லோலஸ் சப்தம்
நாராயாணாக்யம் விஷய சபல தீஸ் சேத்தும் –பிரபன்ன
ரக்ஷகாந்தர பிரபத்தி உண்டான போது அகாரத்தை அனுசந்தித்து மீளுவான்
ஸ்வ ஸ்வா தந்தர்ய பிரதிபத்தி உண்டான போது சதுர்த்தி அர்த்தத்தை அனுசந்தித்து மீளுவான்
தேஹாத்ம அபிமானாதிகள் உண்டான போது மகாரார்த்தத்தை அனுசந்தித்து மீளுவான்
ஸாத்ய சாதன ருசியும் பாகவத் சஜாதீய புத்தியும் உண்டான போது நமஸ் சப்த அர்த்தத்தை அனுசந்தித்து மீளுவான்
ஈஸ்வர விபூதி பூதரோடே ராக துவேஷமும் ஸ்வ பந்துத்வ பிரதிபத்தியும் உண்டான போது
நாராயண பாத அர்த்தத்தை அனுசந்தித்து மீளுவான்
பிரயோஜனாந்தர ருசி உண்டான போது சதுர்த்தி அர்த்தத்தை அனுசந்தித்து மீளுவான்

திருமந்திர பிரகரணம் முற்றிற்று

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பரகால நல்லான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading