ஸ்ரீ திருவாய் மொழி முதல் பத்தில் –இரண்டாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

இதர விஷயங்களை விட்டு உங்களுக்கு வகுத்த விஷயத்தைப் பற்றப் பாருங்கள்,’ என்கிறார்.

வீடுமின் உம்முயிர் வீடுடையானிடை வீடு செய்ம்மினே -என்னும் அளவும் கடாக்ஷித்து அவதாரிகை –
வகுத்த விஷயத்தை என்றது உடையான் என்றத்தைப் பற்ற —

வீடு மின் முற்றவும், வீடு செய்து உம்முயிர்
வீடுடை யானிடை, வீடு செய் மி(ன்)னே–1-2-1-

————–

பகவத் வ்யதிரிக்த விஷயங்களை விட்டு விட்டுச் சர்வேஸ்வரனான எம்பெருமான் பக்கலிலே
ஆத்ம சமர்ப்பணம் பண்ணப் பாருங்கோள்,’ என்றார் முதற்பாட்டில்;
பகவத் வ்யதிரிக்த விஷயங்களை விடச் சொல்லா நின்றீர் –
அநாதி காலம் வாசனை பண்ணிப் போந்தனவற்றை இப் போதாக விடப் போமோ?’ என்ன,
அவற்றினுடைய தோஷ தர்சனம் பண்ணவே விடலாம் என்கிறார் இதில்.

முதல் பாட்டில் த்யாஜ்யத்தை அடங்க விடுங்கோள் என்று சொல்லி அனந்தரம் அல்ப அஸ்திரத்தவாதி தோஷங்களை
சொல்லுகிறதுக்கு பிரயோஜனம் சம்சாரிகளுக்குப் பிறந்த சங்கையை பரிஹரிக்கை என்கிறார் –

மின்னின் நிலை இல, மன் உயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை, உன்னுமின் நீரே–1-2-2-

—————–

தோஷ தர்சனம் பண்ணவே விடலாம் என்றீர்; காலம் அநாதி;
அக்காலத்தில் ஈட்டிய வினைகளும்-அநந்தரமாய்- முடிவின்றி இருக்கின்றன;
ஆதலால், பற்றின காலம் எல்லாம் வேண்டுமன்றோ விடுகைக்கும்?’ என்ன,
த்யாஜ்ய அம்சத்தை -விடுந்தன்மையினைச் சுருங்க அருளிச் செய்கிறார்;
சம்சாரத்துக்கு பீஜம் – வித்து இன்னது என்றும்,
அதற்கு பேஷஜம் – மருந்து இன்னது என்றும் அருளிச் செய்கிறார்

அஹங்கார மமகார நிவ்ருத்தியையும் -பகவத் சமாஸ்ரயணத்தையும் சொல்லுகிறதுக்கு பிரயோஜனத்தை
சங்கா பரிகார முகேன தர்சிப்பிக்கிறார் –
பீஜம் -அஞ்ஞானம் கர்மத்துக்குக் காரணம் –
நீர் நுமது என்கையாலே சம்சார பீஜம் –
வேர் முதல் மாய்த்து -பேஷஜம்

நீர்நுமது என்றிவை, வேர்முதல் மாய்த்துஇறை
சேர்மின் உயிர்க்குஅதன், நேர்நிறை இல்லே.-1-2-3-

——————

விடப்படுகின்ற பொருள்கள் போன்று –
அபோக்யமுமாய் -இன்பம் அற்றனவாயும்,-ச தோஷமுமாய் – குற்றங்களை யுடையனவாயும் இராது என்று
பற்றப்படுகின்ற விஷயத்தினுடைய போக்யதையை – இனிமையினை அருளிச் செய்கிறார்.

இல்லதும் உள்ளதும், அல்லது அவன்உரு
எல்லையில் அந்நலம், புல்குபற்று அற்றே-1-2-4-

—————–

இறைவனைப் பற்றுமிடத்து வருகின்ற -அந்தராய பாரிஹாரத்தையும் -இடையூற்றை நீக்குந் தன்மையினை –
அருளிச் செய்கிறார்.
(இங்கு இடையூறு’ என்றது, கைவல்ய அனுபவத்தினை. ‘
ஆயின், அதனை இடையூறு என்றால் பொருந்துமோ?’ எனின், )
இந்திர பதத்தினைக் கோலுமவன், இல்வருகு உண்டான ஐஸ்வர்யத்தைக் கோலான்;
பிரஹ்ம பதத்தை ஆசைப்படுமவன், இவ்வருகு உண்டான இந்திர பதத்தில் கண் வையான்;
கைவல்யத்தை (ஆத்துமானுபவத்தை) ஆசைப்படுமவன் ஐஸ்வர்யம் முதலியவைகளில் கண் வையான்;
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் நித்ய மங்கள விக்ரஹ உக்தனாய் –
எல்லா நற்குணங்களை யுமுடையனாய் திவ்விய மங்கள விக்கிரகத்தை யுடையவனாய் –
இருக்குமவனைப் பற்றுமவன் இவை இத்தனையிலும் கண் வையான்;
ஆக, இங்ஙனம்,- இவை ஒன்றற்கு ஒன்று இடையூறு ஆதல் காண்க.

செற்றது மன்னுரில்-என்றத்தைக் கடாக்ஷித்து சங்கதி அருளிச் செய்கிறார் –
ஆத்ம அனுபவம் அந்தராயம் என்னலாம் என்று விவஷித்து அநேக வாக்கியங்கள் அருளிச் செய்கிறார்
ப்ராப்யதயா பற்றினவன் கைவல்யத்தை இச்சியாதே -அத்தை அபேக்ஷியாது இருக்கையை பரிஹாரம் –

அற்றது பற்றுஎனில், உற்றது வீடுஉயிர்
செற்றது மன்னுறில், அற்று இறை பற்றே-1-2-5-

————–

பற்றுமிடத்தில் வரும்-அந்தராய பரிஹாரம் – இடையூற்றை நீக்குதலை அருளிச் செய்தார் கீழே ;
‘ஆயின், நீர் பரிகாரம் சொல்லுகைக்கு-அவாப்த ஸமஸ்த காமனாய்- எல்லா விருப்பமும் முற்றுப் பெற்றவனாய்,
சேஷியாயிருக்கிற அவன்தான் நமக்குக் கைப் புகுந்தானோ?’ என்ன,
அவன் பக்கல் திருத்த வேண்டுவது ஒன்று இல்லை;
அவன்-சங்க ஸ்வ பாவன்- பற்றுக்கு இருப்பிடமானவன்- என்கிறார்.

ஆத்ம அனுபவம் ஆகிற அந்தராயத்தைத் தப்புங்கோள் என்ற அனந்தரம் சங்க ஸ்வ பாவனாவனுடைய சர்வவித
கைங்கர்யங்களிலும் அன்வயி என்றதற்குப் பிரயோஜனத்தை சங்கா பரிகார முகேன தர்சிப்பிக்கிறார் –
நீர் பரிகாரமும் சொல்லி நாங்களும் ஆஸ்ரயிக்கைக்கு அவன் இப்போது கைப் புகுந்தானோ என்றபடி –
ஈசன் என்றத்தைக் கடாக்ஷித்து அவாப்த ஸமஸ்த காமன் இத்யாதி –

பற்றிலன் ஈசனும், முற்றவும் நின்றனன்
பற்றிலை யாய் அவன், முற்றில் அடங்கே-1-2-6-

——————–

சங்க ஸ்வபாவன் -அடியார் பக்கல் பற்றையே இயல்பாக உடையவன் -என்றார் கீழ் –
அவன் பற்றையே இயல்பாக உடையவன் ஆயினும்,-அபரிச்சின்ன அளவிட முடியாத-
உபய – இரண்டு விதமான மஹா விபூதியை யுடையவனாய் இருந்தான்;
இவன்-அதி ஷூத்ரனாய் – மிகச் சிறியனாய்,-ஷூத்ர- மிகச் சிறிய உபகரணத்தை யுடையவனாய் இருந்தான்;
ஆன பின்னர், அவனை இவனால் கிட்டலாய் இருந்ததோ?
மேலும், கடலிலே புக்க துரும்பானது இரண்டு தலையிலும் நினைவு இன்றிக்கே இருக்கவும்,
திரை மேல் திரையாகத் தள்ளுண்டு போந்து கரையிலே சேருகிறது இல்லையோ?
‘அப்படியே அவனுடைய ஐஸ்வரிய-தரங்கமானது – அலையானது- இவனைத் தள்ளாதோ?’ என்னில்,
இந்த ஐஸ்வரியம் எல்லாம் நமக்கு வகுத்த சேஷியானவனுடைய ஐஸ்வரியம் என்று அனுசந்திக்கவே –
நினைத்தால் தானும் அதுவாக அந்வயிக்கலாம் இறே -சேரலாமே!
ஆன பின்னர், சம்பந்த ஞானமே வேண்டுவது என்கிறார். ‘எங்ஙனம்?’ எனின்,

ஒரு வணிகன் தன் மனைவி கருவுற்று இருக்குங்காலத்தில்-அர்த்த ஆர்ஜனம் – பொருள் தேடும் விருப்பினால்
வெளி நாடு சென்றான்; அவளும் கரு உயிர்த்தாள்; மகனும் தக்க வயது அடைந்து தனக்கும் தகப்பனாருடைய
வாணிகமே தொழிலாக மகனும் பொருள் தேடப் போனான். இருவரும் தத்தமக்கு வேண்டிய சரக்குப் பிடித்துக் கொண்டு
வந்து ஒரு பந்தலில் தங்கினார்கள்; அஃது, அவ்விருவருக்கும் இடம் போதாமையால் அம்பு அறுத்து எய்ய வேண்டும்படி
விவாதம் உண்டான சமயத்தில், இருவரையும், அறிவான் ஒருவன் வந்து,
‘இவன் உன் தமப்பன்; நீ இவன் மகன்,’ என்று அறிவித்ததால்,
கீழ் இழந்த நாள்களுக்குச் சோகித்து, இருவர் சரக்கும் ஒன்றாய்,
அவன் -ரக்ஷகனாய் -காப்பாற்றுகின்றவனாய் இவன் -ரஷ்யமாய் -காப்பாற்றப்படும் பொருளாய்
அந்வயிக்கலாம் அன்றோ-கலந்துவிடுவார்கள் அன்றோ? அது போன்று,

சமானம் வ்ருஷம் பரிஷஸ்வ ஜாதே ‘சீவான்மாவும் பரமான்மாவும் சரீரமாகிற ஒரு மரத்தினைப் பற்றியிருந்தால்
ஒருவன் இரு வினைப் பயன்களை -புஜியா நிற்கும் -நுகரா நிற்பன்; ஒருவன் -புஜிப்பித்து -நுகர்வித்து விளங்கா நிற்பன்;
அவன் நியாமகன் – ஏவுகின்றவன்; நாம்-நியாம்யம் – ஏவப்படும் பொருள்,’ என்னும் முறை அறியவே பொருந்தலாம் அன்றே!

ஓர் அரச குமாரன்-உத்யானத்தை – பூங்கா ஒன்றினைக் கண்டு புக அஞ்சினால், ‘இது உன் தகப்பனது காண்,’ என்னவே,
நினைந்தபடி நடந்து கொள்ளலாம் அன்றோ!
ஆன பின்னர்,ததீயம் – ‘அவனுடைய உடைமை இவையெல்லாம்,’ என்னும் நினைவே வேண்டுவது;
தானும் அதற்குள்ளே ஒருவனாகச் சேரலாம்-அந்வயிக்கலாம் – என்கிறார்.

சங்க ஸ்வ பாவனானால் அவன் பூர்த்தியும் இவன் குறையும் கொண்டு கார்யம் என் –
இவை ஆராயாதே கிட்ட ஒண்ணாதோ என்ன –
ஆனாலும் அவன் ஐஸ்வர்ய உத்ரேகம் இவனுக்குப் பயத்தை விளைவிக்கும் என்னுமத்தை ச நிதர்சனமாக அருளிச் செய்கிறார் –
கடலுக்கும் இத்தைத் தள்ள வேணும் என்னும் நினைவு இல்லை -துரும்புக்கும் தள்ளப் போகிறது என்கிற நினைவு இல்லை
ஐஸ்வர்ய தரங்கம்-இவனைத் தள்ளுகையாவது அவன் எவ்விடத்தான் யான் யார் -என்று அயோக்ய அனுசந்தானத்தால் பிற்காலிக்கை-
இத்தால் தானும் அவ்விபூத் அந்தர் பூதனாய்க் கொண்டு-சேஷ பூதனானால்
ஸ்வ ஸ்வாமி சம்பந்தத்தைக் கொண்டு கிட்டலாம் என்றதாயிற்று –
அம்பு அறுத்து எய்ய வேண்டும்படி -அம்பாலே தலை அறும்படி
தார்ஷ்டாந்திகத்தில்-ஜீவர்கள் சரீரமாகிற வ்ருக்ஷத்தில் சங்கதராய் இருக்கச் செய்தே-த்வம் மே -என்றால் அஹம் மே –
ஷிபாமி -ந ஷமாமி-இங்கனே பிணங்குகிற சமயத்தில்
ஆச்சார்யன் சம்பந்தத்தை உணர்த்தி உபதேசிக்க -இவன் அபிமானத்தில் போம்படி திருத்தி –
தேவர்க்கு சேஷமான இவ் வாத்மாவை இவன் அபாராத்தைப் பார்த்து தள்ள ஒண்ணாது -என்று அவன் திருவடிகளில் சரணம் புக்கு
இவ் வழியாலே இருவரும் கூடினால் -பொழுதே பல பகலும் இத்யாதிப்படியே இவன் சோகிக்க-
கர்மத்தை வியாஜி கரித்து தள்ளினோமே என்று அவனும் சோகிக்க –
இப்படி இருவரும் கீழ் இழந்த நாளைக்கு சோகிக்க -இருவரும் ரஷ்ய ரஷக பாவேந சேருகை
தயோர் அந்ய பிப்பலம் ஸ்வாத்–அபிசாகதீதி-என்றதால் பலித்த நியாந்த்ரு நியாம்ய பாவ சம்பந்தமும் இப்பாட்டுக்கு விவஷிதம்-

அடங்கெழில் சம்பத்து, அடங்கக் கண்டு ஈசன்
அடங்கெழில் அஃது என்று, அடங்குக உள்ளே-1-2-7-

———————–

அவனுக்கு விபூதியாய் அந்வயித்தால் (‘இறைவனுக்கு உரிய செல்வங்களுள் ஒன்றாகச்சேரின்,) பின்னை,
தானும், தனக்கு என்னச் சில கரணங்களும் – உண்டாய் பஜித்தானாகை அரிதாக இருந்ததே என்ன –
(வேறாகக் காணப்படுவன இலவே? வேறாக இருப்பின் அன்றோ வணங்குதல் முடியும்?’ என்ன,)
அவன் தனக்காகத் தந்த கரணங்களை அவனுக்கு ஆக்குகையே வணங்குதலாம் என்று-
பஜன பிரகாரத்தை – வணங்கும் முறையினை அருளிச்செய்கிறார்.

சம்பந்த ஞானம் பூர்வகமாக அவன் விபூதிக்குள்ளே ஒருவனாய் அந்வயிப்பது என்ற அனந்தரம் –
கரண த்ரயத்தையும் அப்ராப்த்த விஷயங்களில் பிரவணம் ஆகாதபடி பண்ணி பகவத் விஷயத்தில் பிரவணம் ஆக்குவதற்கு
என்று சொன்னதுக்கு பிரயோஜனத்தை சங்கா பரிஹார கதந முகேந அருளிச் செய்கிறார் –
பஜன பிரகாரத்தை என்றது–இறையுள்ளில் ஒடுங்கே-என்றது –
பஜனப் பிரகாரமாவது-அவன் தனக்காகத் தந்த கரணங்களை அவனுக்கு உறுப்பாக்குகை –

உள்ளம் உரைசெயல், உள்ளஇம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்துஇறை, உள்ளில் ஒடுங்கே.-1-2-8-

——————

இறைவனுக்கும் உயிருக்கும் உள்ள சம்பந்த ஞானம் உண்டாகவே தன் சிறுமை பார்த்து அகல வேண்டா என்றும்,
பஜனமாவது -வணங்குதலாவது – இவன், இறைவன் தனக்காகத் தந்த கரணங்களை அவனுக்கு
உறுப்பு ஆக்குகை என்றும் அருளிச் செய்தார், கீழே இரண்டு திருப் பாசுரங்களால்;
‘இது தன்னரசு நாடாய்-ப்ராப்த விஷயம் – அடையத் தக்க பொருள் அவன் அல்லாமையால் -பஜியாது- வழி படாது இருக்கின்றேமோ!
பஜனை விரோதிகள் -வழிபட ஒட்டாமல் தடுக்கும் விரோதிகள்-கனக்க- மிகுதியாக இருத்தலால் அன்றோ
நாங்கள் வழிபடாது இருக்கிறோம்?’ என்ன,
‘நீங்கள் அவனைக் கிட்டவே அவை அடைய விட்டுப் போம்,’ என்கிறார் இத் திருபாசுரத்தில்.

கீழ் இரண்டு பாட்டில் ப்ரதிபாதித்த பிரமேயத்தை அனுபாஷியா நின்று கொண்டு
இப் பாட்டில் ஒடுங்கலும் எல்லாம் விடும் என்கிற பதத்தைக் கடாக்ஷித்து சங்கதி – அருளிச் செய்கிறார்-
பஜன விரோதிகள் என்றது பஜன கார்ய விரோதிகள் -புருஷார்த்த விரோதிகள் என்றவாறு –
அவனைக் கிட்டவே -கிட்டுகை -ஆஸ்ரயணம் –

ஒடுங்க அவன் கண், ஒடுங்கலும் எல்லாம்
விடும் பின்னும் ஆக்கை, விடும் பொழுது எண்ணே-1-2-9-

————————-

அழகிது; அப்படியே செய்கிறோம்; பஜனத்துக்கு ஆலம்பமான -வழிபாடு இயற்றுதற்குப் பற்றுக்கோடான- மந்திரம் யாது?’ என்ன,
அது இன்னது என்றும், அதனுடைய -அர்த்தம் அனுசந்தேயம் -பொருள் நினைத்தற்கு உரியது -என்றும் அருளிச் செய்கிறார்.
‘ஆயின், மந்திரம் மாத்திரம் அமையாதோ? அர்த்தமும் அருளிச் செய்ய வேண்டுமோ?’ எனின்,

இம் மந்திரத்தைப் புறம்புள்ளார் ஜபம் ஹோமம் முதலியவைகளாலே காரியங்கொள்ளா நிற்பர்;
நம் ஆசாரியர்கள்,-ஸ்வரூப அனுசந்தானத்துக்கு ஈடாய் இருக்கிற இதனுடைய அர்த்த அனுசந்தானம் மோக்ஷ சாதனம் – என்று
தாங்களும் நினைந்து, தங்களைக் கிட்டினார்க்கும் உபதேசித்துக் கொண்டு போந்தார்கள்.
மற்றும் வேதங்களுக்கும் இவ் வாழ்வார்க்கும் இம் மந்திரம் பிரஸ்துதமான போதே முன்னர் மந்திரத்தைச் சொல்லி,
பின்னர் அர்த்தத்தைச் சொல்லுதல்;
அன்றி முன்னர் அர்த்தத்தைச் சொல்லி, பின்னர் மந்திரத்தைச் சொல்லுதல்
செய்யக் கடவது ஒரு நிர்ப்பந்தம் உண்டாய் இருக்கும்;
அதற்குக் காரணம்,-அர்த்த அனுசந்தானம் – பொருளின் நினைவு இன்றியமையாதது -ஆகையாலே.
‘யாவையும் யாவரும் தானாம் அமைவுடை நாரணன்,’என்னுதல்
‘நாரணன் மூவேழ் உலகுக்கும் நாதன்’ -என்னுதல் செய்வதொரு நிர்பந்தம் உண்டு –
அந்தர் பஹிச்ச தத் சர்வம் வியாப்ய நாராயண ஸ்திதி –
(‘உள்ளும் புறமும் நிறைந்து நாராயணன் இருக்கின்றான்,) என்னுதல்
நாராயண பரஞ்சோதி நாராயண பரமாத்மா
(‘பரஞ்சோதியும் நாராயணனே; பரமாத்துமாவும் நாராயணனே,’) என்னுதல் செய்யும் வேதமும்

இத் திருப் பாசுரத்தால் ஸ்ரீ திரு மந்திரத்தை அர்த்தத்தோடு அருளிச் செய்கிறார்.
ஸ்ரீ ஆழ்வான் இப் பாட்டளவும் வரப் பணித்து இப் பாட்டு இது, இத் திருப் பாசுரம் திரு மந்திரத்தின் பொருள் என்பதற்கும்
மந்திரத்தின் பொருள் ஆசாரியன் பால் கேட்டல் வேண்டும் என்பதற்கும் ஐதிஹ்யம் ஆம்.
ஸ்ரீ ஆழ்வாருடைய முந்தின வார்த்தை,கௌரவத்திலே நோக்கு; பிந்தின வார்த்தை, இனிமையிலே நோக்கு.
வந்தவாறே ‘இத்தையும் உங்கள் ஆசிரியர் பக்கலிலே கேட்டுக் கொள்ளுங்கோள்,’ என்ன,
ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ சீராமப் பிள்ளையும் எழுந்து போகப் புக்கவாறே, அவர்களை அழைத்து,
‘இன்ன போது இன்னார் இருப்பார்; இன்னார் போவார் என்று தெரியாது; இருந்து கேளுங்கோள்,’ என்று
ஸ்ரீ திரு மந்திரத்தை உபதேசித்து, இப்பாட்டை நிர்வகித்து
‘இப் பாட்டை இதற்கு அர்த்தமாக நினைத்திருங்கோள்,’ என்று பணித்தார்.

ஆலம்பன மந்த்ரம் எது என்ன -என்றது
சாஸ்த்ராதி ஷு ஸூத் ருஷ்டாபி சாங்கா சக பலோ தயா-ந ப்ரஸீததி வை வித்யா விநா சதுபதேச-என்றதைப் பற்ற –
அநந்ய சாத்யத்வ ரூபமான -அநந்யார்ஹ சேஷத்வ அநந்ய சரண்யத்வ அநந்ய போக்யத்வ – ஸ்வரூபத்துக்குச் சேர
பூர்வர்கள் அர்த்த அனுசந்தானத்திலே நிஷ்டராய் இருந்து உபதேசிப்பர்
அந்தர் பஹிஸ்ஸ -பஹு வ்ரீஹி ஸித்தமான ஸுலப்யம்
ப்ரோ ஜ்யோதி தத் புருஷ ஸித்தமான பரத்வம்
ஸ்ரீ ஆழ்வானுடைய முந்தின வார்த்தை கௌரவ்யத்தையிலே நோக்கு –
பிந்தின வார்த்தை போக்யத்தையிலே நோக்கு

எண் பெருக்கு அந் நலத்து, ஒண் பொருள் ஈறு இல
வண் புகழ் நாரணன், திண் கழல் சேரே-1-2-10-

———————

நிகமத்தில்
முதல்பாட்டில் -வ்யதிரிக்த விஷயங்களை -வேறுபட்ட பொருள்களை விட்டு, சர்வேஸ்வரன் பக்கல்
ஆத்துமாவைச் சமர்ப்பிக்க இசைமின்,’ என்றார்;
இரண்டாம் பாட்டில், ‘வ்யதிரிக்த விஷயங்களினுடைய தோஷ தர்சனம் பண்ணவே விடலாம்,’ என்றார்;
மூன்றாம் பாட்டில்,-த்யாஜ்ய அம்சத்தை – விடுந்தன்மையினைச் சுருங்க அருளிச் செய்தார்;
நான்காம் பாட்டில் பற்றப் படுகிற விஷயத்தினுடைய நன்மையினை அருளிச் செய்தார்;
ஐந்தாம் பாட்டில், பற்றுமிடத்தில், வரும்-அந்தராய பரிக்ரஹத்தை – தடைகளை நீக்கும் வழியினை அருளிச் செய்தார்;
ஆறாம் பாட்டில், அவன்-சங்க ஸ்வ பாவன்- அன்பே உருவமானவன்,’ என்றார்;
ஏழாம் பாட்டில், ‘சம்பந்த ஞானம் உண்டாகவே பொருந்தலாம்,’ என்றார்;
எட்டாம் பாட்டில், ‘வேறு உபகரணம் தேட வேண்டா; அவன் தந்த உறுப்புகளை அவனுக்கு ஆக்க அமையும்,’ என்றார்:
ஒன்பதாம் பாட்டில், ‘அப்படிச் செய்யவே, -பஜன விரோதிகள்– வழிபாட்டிற்குத் தடையாக உள்ளவை எல்லாம்
தன்னடையே விட்டுப் போம் ’ என்றார்;
பத்தாம் பாட்டில்,-பஜனத்துக்கு ஆலம்பமான மந்திரம் இன்னது என்றார்;
முடிவில், ‘இவைதாம் வாய் வந்தபடி சொன்னவை அல்ல; சேதனருடைய -ஹிதத்துக்கு ஈடாக -நன்மைக்குத் தக
ஆராய்ந்து சொல்லப்பட்டவை,’ என்கிறார்.
அன்றி, ‘இவை தாம் ஹித தமமாய் இருப்பன ஆகையாலே, எப்போதும் ஒக்க ஓரப் படுவன,’ என்கிறார் என்னலுமாம் -.

இது தான் -என்றது கீழ்ச் சொல்லப்பட்ட அர்த்தம் –
வாய் வந்தபடி கை வந்தபடி -இதி கேஷுசித் ஸ்ரீ கோசேஷூ வர்த்ததே -தத் லேகக தோஷா கதம்

சேர்த் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை ஆயிரத்து, ஓர்த்த இப் பத்தே–1-2-11-

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading