நாளும் கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார் –10-2-1-
நாள் தோறும் கொடிய செயலைச் செய்யக் கூடிய எமனுடைய தூதுவர்களும் வந்து கிட்டப் பெறார்கள்
ம்ருத்யுவுக்கு அந்தரங்கராய -எமனுடைய தூதுவர்கள் என்னா சர்வேஸ்வரன் உடையார் பக்கலிலே
வந்து கிட்டவோ -என்பார் -தமர்களும் -என்கிறார் –
ஸ்வ புருஷம் அபி வீஷ்ய பாச ஹஸ்தம் வததி யம கில தஸ்ய கர்ண மூலே
பரிகர மது சூதன பிரபன்னான் பிரபு அஹம் அத்யன் ருணாம் ந வைஷ்ணவானாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-13-
தஸ்ய யஞ்ஞா வராஹச்ய விஷ்ணோ அமித தேஜச
ப்ரணாமம் யேயி குர்வந்தி தேஷாமபி நமோ நம-ஸ்ரீ விஷ்ணு தர்மம் –
அளவற்ற ஆற்றலை உடைய அந்த யஞ்ஞா வராக பெருமாளை எவர்கள் வணங்கு கின்றார்களோ
அவர்களை நான் பல முறை வணங்குகிறான் -என்பதே அன்றோ அக் கூற்றுவன் வார்த்தையும் -என்றது
இறைஞ்சியும் சாதுவராய் போதுமின்கள் என்றான் -நான்முகன் திருவந்தாதி -68 -என்கிறபடியே
அவர்களைக் கண்டால் -நாம் கடவோம் அல்லோம் என்று போராதே
அவர்களை கிட்டி அனுவர்த்தித்து -அணுகி வணக்கத்தைச் செய்து விட்டு செல்லுங்கள் என்கிறான் என்றபடி
ஸ்வபுருஷம் என்கிற ஸ்லோகத்தில்
எமன் தன் பரிகரம் கையும் சூலமும் நாயுமாகப் போகிற படியை பார்த்து
பாகவதர்களும் அல்லாதாரும் கலந்து இருப்பர்கள்
பாகவதர்கள் முன்னே இவன் கிட்டில் செய்வது என்-என்று துணுக் என்று -பயந்து சொல்லுகிறான்
ஸ்வ புருஷம் –
தனக்கு அந்தரங்கனாய் இருக்கையாலே தன் மேன்மை சொல்ல வேண்டும் இடத்தில்
தாழ்வு சொல்கிறானாய் ஆயிற்று தவிர ஒண்ணாமை யாலே
அபிவீஷ்யே –
அபி வி என்ற இரண்டு உபசர்க்கத்துக்கு -இவன் தான் நாலு இரண்டு ஓலை மறுக்க தர முடையனாய் இருக்கும் ஆயிற்று –
சொல் செல்லுகைக்காக இப்படி இருக்கிறவனை பார்க்கிற பார்வையிலே கார்யத்தின்
கௌரவம் எல்லாம் தோற்றும்படி பார்த்தான் ஆயிற்று –
மது சூதன பிரபன்னான் –
இவர்களை நலிந்தால் அவனுக்கு என் என்ன
இவர்கள் அவன் பக்கலிலே ந்யஸ்த பரராய் -பாரங்களை எல்லாம் போட்டவர்களாய் இருப்பர்கள் –
இவர்களுக்கு வந்தது ஒன்றுக்கு -அவன் மார்வு தட்டிக் கொண்டு வரும் -மோஷ யிஷ்யாமி -என்பானே
நன்று உனக்கு உடையோமாய் போகிற நாங்கள் வேறு
சிலர்க்கு அஞ்ச வேண்டும்படி இருந்ததாகில்
நீ பின்னை யாராய் இவ்விருப்பு இருந்து ஏவுகிறது -என்ன
பிரபு அஹம் அந்ய ந்ருணாம்
எனக்கு அடைந்த விஷயத்தில் என் சொல் செல்லாதாகில்
அன்றோ எனக்கு குறையாவது
நாம் கடவோம் அல்லாதவர்கள் இடத்தில் நாம் ஆராயா நிற்கவோ -என்றான் –
இது தன்னை திரு மழிசைப் பிரானும் அருளிச் செய்தாரே அன்றோ
திறம்பேன்மின் கண்டீர் திருவடி தன் நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தர் -இறைஞ்சியும்
சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு –என்று
திறம்பேல்- இத்யாதி –
சொல்லுகிற வார்த்தையைத் தப்பாதே கொள்ளுங்கோள் –
திறம்பாதே கொள்ளுங்கோள் என்னும் போது நாலுபத்தோலை மறுக்கவுமாம் –
திருவடி தன நாமம் மறந்தும் புறம் தொழா –
பரிஹர மதுசூதன பிரபன்னான் -என்கிறபடியே ஸ்வாமி யினுடைய திரு நாமத்தை ஒருகால் கற்றுப்
பின்னை மறந்தார்களே யாகிலும் திரு நாமத்தை மறக்கவுமாம் –
தேவதாந்தர பஜனம் பண்ணாது ஒழிகை இவன் பிரபன்னன் ஆகையாவது –
பர்த்தாவின் பக்கல் அனுகூல்யம் கிரமத்தாலே பிறக்கவுமாம் – பர்த்ராந்தர பரிக்ரகம் இறே அவனுக்கு ஆகாமைக்கு அடி
இதர தேவதைகளை தொழாத மனுஷ்யர்களை பாபம் பண்ணினாரை தமிக்கக் கடவ யமன்
மாந்தரை –
மனுஷ்யரை –
இறைஞ்சியும் சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன் தூதுவரைக் கூவிச் செவிக்கு –
தன்னுடைய தூதரை அழைத்துச் செவியிலே -வைஷ்ணவர்களைக் கண்டால் வணங்கி சாதுக்களாய் போருங்கள்-என்கிறான் –
செவியிலே சொல்லுகிறது தன் கோஷ்டியிலும் அகப்பட அவர்களிடையாட்டம் ராஜ தார ப்ராவண்ய நிஷேதம் போலே
சொல்லக் கடவன் அல்லாமையாலே
ஸ்வ புருஷம் அபிவீஷ்ய பாச ஹஸ்தம் வத்தி யம தஸ்ய கர்ணமூலே பரிஹர மது ஸூ தன பிரபன்னான்
ப்ரபுரஹம் அந்ய ந்ருணாம் ந வைஷ்ணவா நாம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-15-என்றத்தைத் தன் தூதுவரை என்கிறார் –
பாச ஹஸ்தம் -என்கிற க்ரூர வேஷத்தைத் தவிர்ந்து
விநீத வேஷராய் அஞ்சலி ப்ரணாமாதிகளை பண்ணிப் போரும்கோள்-என்கிறார் –
அவர்களை நலிந்திலோம் என்று இருக்க ஒண்ணாது-
தன் தூதுவரை-ஸ்வ புருஷம் -என்றபடி
செவிக்கு-கர்ண மூலே -என்றபடி
கூவி என்கையாலே அபி வீஷ்ய-என்கிறவையின் கருத்தை வ்யக்தம் ஆக்கின படி
சாதுவராய் -என்று பாச ஹஸ்தம் -என்றதுக்கு எதிர் தட்டு இருக்கிற படி என்றான்
வத்தி -இருக்கிறபடி –
நமனும் – யம பதத்தில் அர்த்தம் சொன்னபடி-சம இதி -என்று சொல்லப் படுகிறவனும்-ப்ரஹ்மாதிகள் உடன் சமமாக சொல்லப்படுமவன் –
அந்தரங்கருக்கு வார்த்தை சொல்லா நிற்கச் செய்தே-பிரகாசிக்கில் என்னாகிறதோ என்று நெஞ்சு பறை கொட்டுகிறது-
புறம் தொழா மாந்தர் -என்று –மது ஸூதன பிரபன்னான் -என்கிற பதத்தில் அர்த்தம் சொன்னபடி
பிரபன்னான் -என்கையாவது தேவதாந்திர பஜனம் பண்ணாது ஒழிகை
பர்த்தாவின் பக்கல் ஆனுகூல்யம் க்ரமத்திலே மறக்க்கவுமாம் –
பர்த்ரந்தர பரிக்ரஹம் அற்று இருக்கை பாதிவ்ரத்யத்துக்கு வேண்டுவது –
—————————————
மாறு செய்த வாள் அரக்கன் நாள் உலப்ப அன்று இலங்கை
நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார்
வேறு செய்து தம்முள் என்னை வைத்திடாமையால் நமன்
கூறு செய்து கொண்டு இறந்த குற்றம் என்ன வல்லனே -திருச் சந்த விருத்தம் -116-
என்கிறபடியே சக்கரவர்த்தி திருமகனார் பெயரை இவன் ஆராயவோ -என்கை
நரக ஹேதுவான பாபத்தைப் பண்ணி
நான் அத்தாலே யம வச்யராய் அன்றோ இருக்கிறது என்று திரு உள்ளத்தைக் குறித்து
நமக்கு தஞ்சமான சக்கரவத்தி திருமகனார் -தம்மோடே நம்மைக் கூட்டிக் கொண்ட பின்பு –
யமனால் நாம் செய்த குற்றம் ஆராய முடியுமோ -என்கிறார்-
நமன் கூறு செய்து கொண்டு –
செய்தார் செய்த குற்றங்களை ஆராயக் கடவ யமன் -என்னை விபஜித் கொண்டு –
ஆண் பிள்ளையான -சக்கரவர்த்தி திருமகனார் -தம்மோடு கூட்டிக் கொள்ள -யமனாலே-பிரிக்க லாமோ –
இப்பாட்டு –சக்கரவர்த்தி திருமகனைச் சொல்லுகிறது-
அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி -என்று சொல்லுகிறபடியே –
யம வச்யமான ஸ்தாவர ஜங்கமங்களை இருந்தபடியே விஷயீ கரித்து -பரம பதத்துக்கு-ஏறக் கொண்டு போன ஏற்றத்தை நினைத்து –
கூறு செய்கை -பிரிக்கை –
இறந்த குற்றம் எண்ண வல்லனே
செய்து கழிந்த பாபத்தை எண்ண வல்லனோ –
கீழ்க் கழிந்த பாபமாவது -அநுதாப தசையையும் -பிராயசித்த தசையையும் கழித்து –
நரக அனுபவம் பண்ணியே கழிக்க வேண்டுமவை -என்கை
எண்ண வல்லனே -என்றது -பாபம் பண்ணினான் என்று தனி க்ரஹத்திலே இருந்து நினைக்கவும் சக்தன் அல்லன் -என்றபடி –
ஒரு திருவேட்டையிலே பட்டர் திரு ஊற்றம் கரையிலே பேர் ஒலக்கமாய் இருக்க
மாலைப் பொழுது ஆயிற்று என்று சிலர் விண்ணப்பம் செய்ய
நான் பெருமாள் அழகிலே துவக்குண்டு இன்று ஒருநாளும் செய்ய வேண்டிய கார்யத்திலே
சிறிது தாழ நின்றோம் என்றால்-இது குற்றமாக யமன் கேட்கவோ
ஒரு அரசன் இருந்து நாட்டுக் கணக்கு கேட்டுக் கொடு வாரா நின்றால்
அரசனுக்கு அந்தரங்கனாய் இருப்பான் ஒருவன் பெயரை வாசித்தால் -ஓம் காண் அது கிடக்க மேல் செல் -என்றால்
பின்னை ஒரு நாளும் அப் பெயரை எடுத்து வாசிக்கப் பெறான் காண் -என்றாராம்
இந்த விஷயத்திலே
உனக்கு ஆகித் தொண்டு பட்ட நல்லேனை வினைகள் நலியாமை நம்பு நம்பீ-பெரிய திருமொழி -6-8-9-என்று அருளிச் செய்தார் –
வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன் தமர் கள்ளர் போல் -பெரிய திருமொழி -8-10-7-என்கிறபடியே
இருவர் ஒரு வழி போகப் பெறார்
கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப் பெறா-என்றார் பட்டர் பிரான்
விழுக்காடு அறியாதே வந்து கிட்டில் செய்வது என் என்னில்
தட வரைத் தோள் சக்கர பாணீ –சாரங்க வில் சேவகனே -என்கிறபடியே
திரு ஆழி இட்டு தோளைக் கழித்தல்
ஓர் அம்பாலே தலையை உருட்டுதல் -செய்யும் அத்தனை –
வாணன் பட்டது படுதல் -இராவணன் பட்டது படுதல் -செய்யும் அத்தனை –
வேண்டாமை நமன் தமர் என் தமரை வினவப் பெறுவார் அலர் என்று உலகு ஏழ் ஆண்டான் -பெரிய திரு மொழி -10-6-5-
என்கிறபடியே
யம தூதுவர்கள் நம்முடையாரை வினவப் பெறார்கள்-அதற்கு அடி என் எனில்
வேண்டாமை –
ஊர்க் கணக்கனோ கோயில் கட்டணத்திலே-அந்தப்புரத்திலே –
புக்கு படுக்கைப் பற்று -பெண்கள் இருக்கும் இடம் -ஆராய்வான்
செய்தாரேல் நன்று செய்தார் -பெரியாழ்வார் திருமொழி -4-9-2-
என்கிறவன் இவர்கள் கையில் காட்டிக் கொடானே
நின் நாமம் கற்ற ஆவலிப்புடைமை நமன் தமர் தலைகள் மீதே
நாவல் இட்டு உழி தருகின்றோம் -எனபது திருமாலை -1-
அஹம் அமரவரார்சிதென தாத்ரா
யம இதி லோக ஹிதா ஹிதே நியுக்த
ஹரிகுரு வசக அஸ்மி ன் ஸ்வ தந்திர
ப்ரபவதி சம்யமனே மமாபி விஷ்ணு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-14-
உலக குருவான பகவானுக்கு நான் அடங்கினவனாய் இருக்கிறேன்
நான் ஸ்வ தந்த்ரன் அல்லன்
என்னைத் தண்டிப்பதற்கும் விஷ்ணுவுக்கு ஆற்றல் உண்டு என்கிறபடியே
உங்களை நியமிக்கப் போந்த என்னைப் போலே அல்லன் காண் என்னை நியமிக்குமவன்
இவ் ஓலக்கத்தில் வந்தால் அன்றோ நான் ஆராய்வது
அவன் -விஷ்ணு -எங்கும் உள்ளவன் அன்றோ –
நாளும் கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார் –
பழையதாக நலிந்து போந்த வாசனை கொண்டு பகவத் விஷயத்தில்
முதலடி இட்ட இன்றும் -கிட்டவோ -கேசவா -என்றது வார்த்தை மாத்ரம் என்பதால் முதலடி –
துராசாரோபி சர்வாசீ க்ருதக்னோ நாஸ்திக புரா
சமாசரயேத் ஆதிதேவம் ஸ்ரத்தயா சரணம் யதி
நிர்த்தோஷம் வித்தி தம் ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்மன -பாரதம் –
நிர்தோஷம் வித்தி –
சாவது பிறப்பதாய் போந்தவனாவது – பரிஹாரம் -கழுவாய் இல்லாத தீ வினைகளை உடையவன் ஆவது
ஆனாலும் அவனைக் குற்றம் அற்றவன் ஆகவே புத்தி பண்ண வேணும்
குற்றங்கள் இருக்க இப்படி நினைக்க வேண்டுவான் என் -என்ன –
பிரபாவாத் –
இவனையோ பார்ப்பது-இவன் பற்றினவனைப் பார்க்க வேண்டாவோ –
இவனை ஆராய்கை யாவது -பகவானுடைய பெருமையை அளவிட்டு அறிதலாம் அன்றோ
குறுகார் எண்ணாதே குறுக -கில்லார் -என்றது
எரிகிற நெருப்பில் கிட்டுவார் உளரோ -என்றது –
நியாமகனுடைய -ஏவுகின்ற தலைவனுடைய -நியமன வாக்கியம் -ஏவலை மேற்கொண்டு கிட்டாமை அன்று
தந்தாமை வேண்டாதார் உளரோ -என்றபடி –
மேலே பெறக் கூடிய பேற்றினை -ப்ராப்யத்தை -சொல்கிறார்-
————————————
திருக்கோட்டியூர் நரக நாசனை நாவில் கொண்டு அழையாத மானிட சாதியர் பருகு நீரும் உடுக்கும் கூறையும்
பாவம் செய்தன தான் கொலோ -பெரியாழ்வார் -4-4-4-
தம்மன்னை நரகம் புகாள் -4-6-சீரணி மால் திரு நாமம் இடத் தேற்றிய பதிகம்-
சாம் இடத்து என்னைக் குறிக் கொள் கண்டாய் சங்கோடு சக்கரம் ஏந்தினான் நா மடித்து என்னை
அநேக தண்டம் செய்வதா நிற்பார் நமன் தமர்கள் -4-10-2-
எற்றி நமன் தமர் பற்றும் போது நில்லும் என்னும் உபாயம் இல்லை –அல்லல் படா வண்ணம் காக்க வேண்டும்
அரங்கத்து அரவணைப் பள்ளியானே –4-10-3-
சித்திர கூத்தன் எழுத்தால் தென் புலக்கோன் பொறி ஒற்றி வைத்த இலச்சினை மாற்றித் தூதுவரோடு ஒளித்தார் –
பக்தருக்கு அமுதன் அடியேன் பண்டு அன்று பட்டினம் காப்பே 5-2-2-
காலநேமி காலனே கணக்கில்லாத கீர்த்தியாய் –திருச்சந்த -31-
காவலில் புலனை வைத்துக் கலி தன்னைக் கடக்கப் பாய்ந்து நாவல் இட்டு உழி தருகின்றோம்
நமன் தமர் தலைகள் மீதே –திருமாலை 1-
நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க நரகமே ஸ்வர்க்கமாகும் நாமங்களுடைய நம்பி -12-
——————————–
அங்கு வெந்நரகத்து அழுந்தும் போது அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து தங்கு
தாமரை என்ன பொன்னார் அடி எம்பிரானை –பெரிய திருமொழி -7-3-5-
உண்ணாது வெங்கூற்றம் ஓவாத பாவங்கள் சேரா மேலை விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும்
மென் தளிர் போல் அடியினானை –தண் சேறை அம்மான் தன்னை -7-4-8–
நந்தா நரகத்து அழுந்த வகை நாளும் எந்தாய் தொண்டரானவர்க்குஇன்னருள் செய்வாய் -11-8-9–
அவுணன் ஆருயிரே யுண்ட கூற்றினை குணம் கொண்டு உள்ளம் கூறு நீ கூறுமாறே –திருக் குறும் தாண்டகம் -2-
——————————————
செடியார் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் எழு பிறப்பும் விடியா வெந்நரகத்து
என்றும் சேர்த்தால் மாறினாரே –திருவாய் -2-4-7-
சீர்மை கொள் வீடு சுவர்க்க நரகீறா ஈர்மை கொள் தேவர் நடுவா மாற்று எப்பொருட்க்கும் வேர் முதல் வித்தாய்ப்
பரந்து தனி நின்ற கார்முகில் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே 2-8-10-
நம்பனை ஞாலம் படைத்தவனைத் திரு மார்பனை உம்பருகினில் யார்க்கும் உணர்வரியான் தன்னை கும்பி நரகர்கள்
ஏத்துவரேலும் அவர் கண்டீர் எம் பல் பிறப்பிடை தோறும் எம் தொழு குலம் தாங்களே -3-7-8-
இன்பமில் வெந்நரகாகி இனிய நல் வான் சுவர்க்கங்களுமாய் –பல பல மாய மயக்குகளால்
இன்புறும் இவ்விளையாட்டுடையானைப் பெற்று ஏதும் அல்லல் இலனே -3-10-7-
கோலம் கொள் சுவர்க்கமும் யானே என்னும் கோலமில் நரகமும் யானே என்னும் -5-6-10-
நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய் –பல் வகையும் பரந்த பெருமான் –திரு விண்ணகர்க் கண்டேனே -6-3-1-
வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெம் கூற்றமுமாய் –திருவிண்ணகர்ச் சேர்ந்த பிரான் -6-3-8 –
கூற்றியல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்க் கொடும் சேனை தடிந்து ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்கவரியே -7-6-10-
அசுரர் வன் கையர் கூற்றமே கொடிய புள்ளுயர்த்தாய்-8-1-8-
யானு நீ தானே யாவதோ மெய்யே அரு நரகவையும் நீ யானால் வானுயர் இன்பம் எய்தில் என் மற்றை நரகமே எய்தில் என்
எனிலும் யானும் நீ தானாயத் தெளிதொறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல் வானுயர் இன்பம் மன்னி
வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே -8-1-9-
அசுரர் வன் கையர் வெம் கூற்றை புகழுமாறு அறியேன் -8-4-8-
செழும் பனைத் திருப்புளிங்குடியாய் கூற்றமாய் அசுரர் குலம் முதல் அரிந்த கொடு வினைப் படைகள் வல்லானே -9-2-9-
கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம் ஏத்தும் நம் கட்கும்
அமரர்க்கு முனிவருக்கும் இன்பன் –திருமோகூர் ஆத்தன் -10-1-6-
கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும் கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார் -10-2-1-
காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த வாட்டாற்று எம்பெருமானை -10-6-11-
—————————–
அவன் தமர் எவ்வினையர் ஆகிலும் எம் கோன் அவன் தமரே என்று ஒழிவது அல்லால் -நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல் பேராயர்க்கு ஆட்பட்டார் பேர் -முதல் திருவந்தாதி –55-
என்று அவர் தங்களிலே சொல்லி இருக்கும் வார்த்தை அன்றோ இது –
வினையால் அடர்ப்பட்டார் வெந்நரகில் சேரார் தினையேனும் தீக் கதிக் கண் செல்வார் –
நினைத்தற்கு அரியானைச் சேயானை ஆயிரம் பேர் செங்கண் கரியானைக் கை தொழுதக்கால் -65-
இனியார் புகுவார் எழு நரக வாசல் முனியாது மூரித்தாள் கோமின் கனி சாயக் கன்று எறிந்த தோளான்
கனை கழலே காண்பதற்கு நன்கு அறிந்த நா வலம் சூழ் நாடு -87 –
நா வாயில் உண்டே நமோ நாரணா வென்று ஓவாது உரைக்கும் உரை உண்டே
மூவாத மாக் கதிக் கண் செல்லும் வகை யுண்டே என்னொருவர் தீக் கதிக் கண் செல்லும் திறம் -95-
தாமுளரே தம்முள்ளம் உள்ளதே தாமரையின் பூ யுளதே ஏத்தும் பொழுதுண்டே
வாமன் திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே அரு நகரம் சேர்வது அரிது -இரண்டாந் -21-
இது கண்டாய் நல் நெஞ்சே இப் பிறவியாவது இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது
இது கண்டாய் நாரணன் பேரோதி நரகத் தருகணையா காரணமும் வல்லையேல் காண்-66-
திறம்பிற்று இனி அறிந்தேன் தென்னரங்கத்து எந்தை திறம்பா வழி சென்றார்க்கு அல்லால்
திறம்பாச் செடி நரகை நீக்கித் தாம் செல்வதன் முன் வானோர் கடி நகர வாசல் கதவு -88-
—————————————
பிரகிருதி வச்யரான பின்பு சரீர விஸ்லேஷ சமனந்தரம் நரகம் ஒருவகை தப்பாது-
ஆனபின்பு அவ்விஷயத்தை வணங்கப் பாருங்கள் என்கிறார் –
திருவடிகளிலே தலையைச் சாய்த்து யமன் தலையிலே காலை வைத்துத் திரியுங்கள் –
பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர்
முன்னால் வணங்க முயல்மினோ -பன்னூல்
அளந்தான் இக்கார் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம்
அளந்தான் அவன் சேவடி –91-
பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர்-
சரீர விஸ்லேஷ சமனந்தரம் வடிம்பிட்டு நிற்கிறது நரகம் -ஆகையாலே சம்சாரம் வடிம்பிட்டுக் கொண்டு திரிகிறபடி –
பேதுறுவீர்-
முன்னடி தோற்றாதேபாபத்தைப் பண்ணிப் பின்னை அனுதாபம் பிறந்து பேதுற்றுத் திரிகிற நீங்கள் –
முன்னால் வணங்க முயல்மினோ –
பின்னை செய்கிறோம் என்று ஆறி இருக்க ஒண்ணாது -முற்பட வணங்கிப் பின்னை தேக யாத்ரை பண்ணப் பாருங்கள் –
பால்யம் இ றே பின்னை வணங்கச் செய்கிறோம் என்னுதல்-யௌவனம் இ றே இப்போது என் என்னுதல் –
வார்த்தகம் இ றே இனி என் என்னுதல் செய்யாதே
ஒரு ஷண காலமாகிலும் முற்பட்டுக் கொண்டு ஒரு கை கால் முறிய வாகிலும் சென்று விழுங்கள் –
ஆஜகாம முஹூர்த்தேந-யுத்த -17-1-இதுக்கு பிரமாணம் என் என்னில் –
பன்னூல் அளந்தான்-
எல்லா பிரமாணங்களாலும் அளக்கப் படுபவனை –
அஷர ராசியாலே ஜிஜ்ஞாசிக்கப் பட்டவனை –
வேதைஸ்ஸ சர்வை அஹமேவ வேத்ய -ஸ்ரீ கீதை -15-15-
சர்வ வேதா யத்ரைகம் பவந்தி -யஜூர் ஆரண்ய -3-11-
இக்கார் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம் அளந்தான் அவன் சேவடி –
வேதைக சமதி கம்யனாய் அரிதாய் இருக்குமோ என்னில் –
வரையாதே எல்லார் தலையிலும் ஒக்க அடியை வைத்து ஸூ லபனானவனுடைய திருவடிகளை –
கார்க்கடல் சூழ் ஞாலத்தை எல்லாம்
கருத்த கடல் சூழ்ந்த பூமியை எல்லாம் –
ஞாலத்தை எல்லாம் அளந்தான் –
சாஸ்திரம் தேட வேண்டா -ஆட்சி கொண்டு அறியலாம் –
அளந்தான் –
முயல்மினோ என்றவாறே தேவை யுண்டோ என்று இராதே அப்ரதிஷேதமே வேண்டுவது –
சேவடி –
பிரஜை ஸ்தனத்திலே வாய் வைக்குமா போலே –
முலைப் பாலுக்குக் கூலி கொடுக்க வேணுமோ –
கூலியாவது உண்கை இ றே -அல்லாவிடில் சம்பந்தம் பொயயாகாதோ-
பேதுறுவீர் –
செய்வற்றைச் செய்து இப்போதாக அஞ்சினால் லாபம் யுண்டோ –
பன்னூல் அளந்தானைக் கார்க்கடல் சூழ் ஞாலத்தை எல்லாம் அளந்தான் அவன் சேவடி பின்னால்
அரு நரகம் சேராமல் பேதுறுவீர் முன்னால் வணங்க முயல்மினோ -என்று அந்வயம்
———————–
கொடிய நரகானுபவம் பிரத்யாசன்னம் ஆவதற்கு முன்னே நிரதிசய போக்யனாய்-பிரதிகூல ஹந்தாவானவனை விரும்பி ஏத்துங்கள் என்கிறார் –
கடிது கொடு நரகம் பிற்காலும் செய்கை
கொடிது என்றது கூடா முன்னம் -வடி சங்கம்
கொண்டானைக் கூந்தல் வாய் கீண்டானைக் கொங்கை நஞ்சு
உண்டானை ஏத்துமினோ உற்று–93-
கடிது கொடு நரகம் –
கொடிதான நரகம் தர்சனமே கடிது -அதுக்கு மேலே –
பிற்காலும் செய்கை கொடிது –
பின்பு அது செய்யும் செயல்களோ கடிது -ருதிர ஆறுகளிலே பொகடுகை -வாள் போன்று இருந்துள்ள கோரைகளிலே ஏறிடுகை –
பிற்காலும் செய்கை கொடிது –
அத்தைக் காண்கைக்கு மேலே -அவர்கள் செய்வன பொறுக்கப் போகாது -அன்றிக்கே
அவர்கள் வேஷம் காண்கையே போரும் -அதுக்கு மேலே -என்றுமாம் –
தென்னவன் தமர் செப்பமிலாதார் சேவதக்குவார் போலப் புகுந்து பின்னும் வன் கயிற்றால் பிணித்து எற்றி
பின் முன்னாக இழுப்பதன் முன்னம் -பெரியாழ்வார் -4-5-7-என்னக் கடவது இறே –
கொடிது என்று –
இவற்றை அனுசந்தித்து
அது கூடா முன்னம் –
அவை கிட்டுவதற்கு முன்னே –
வடி சங்கம் கொண்டானைக் –
கூரிய ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைக் கையிலே ஆயுதமாகக் கொண்டவனை -ஆயுதம் இ றே -கூர்மைக்குச் சொல்ல வேணுமோ -அன்றிக்கே –
அதுக்கு கூர்மையாவது -த்வநியிலே உகவாதார் முடிகை –அன்றிக்கே அழகாகவுமாம் –
கூந்தல் வாய் கீண்டானைக்-
கேசியின் வாயைக் கிழித்தவனை-கூந்தல் மா இறே -கூந்தல் யுடையத்தைக் கூந்தல் என்கிறது –
கொங்கை நஞ்சு உண்டானை –
பூதனையை முடித்தவனை –பருவம் நிரம்புவதற்கு முன்னே செய்த செயல் -விரோதி நிரசனம் சத்தா பிரயுக்தம் –
ஏத்துமினோ உற்று-
நெஞ்சாலே அனுசந்தித்து -வாயாலே ஸ்தோத்ரம் பண்ணுங்கோள் –
நரகம் கொடிது என்று அனுசந்திக்க -விரோதி நிரசன சீலனானவனைக் கிட்டி ஏத்தலாம் –
கடிது கொடு நரகம் –
தர்மபுத்திரன் கண்டு மோஹித்தான் இ றே
வடி சங்கம் –
ச கோஷோ தார்த்தராஷ்ட்ராணாம்-ஸ்ரீ கீதை -1-19-
————————————-
மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் மலராள் தனத்துள்ளான் தண் துழாய் மார்வன்
சினத்துச் செருநர் உகச் செற்று உகந்த தேங்கோத வண்ணன் வரு நரகம் தீர்க்கும் மருந்து –மூன்றாம் -3-
இமம் சூழ் மலையும் இரு விசும்பும் காற்றும் அமம் சூழ்ந்து அற விளங்கித் தோன்றும்
நமம் சூழ் நரகத்து நம்மை நணுகாமல் காப்பான் துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு -98-
நாராயணன் என்னை யாளி நரகத்துச் சேராமல் காக்கும் திருமால்
தன் பேரான பேசப் பெறாத பிணச் சமயர் பேசக் கேட்டு ஆசைப்பட்டு ஆழ்வார் பலர் -14-
கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ மாற்றமும் சாரா வகை அறிந்தேன் ‘
ஆற்றங்கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் உரை கிடக்கும் உள்ளத்து எனக்கு -50-
திறம்பேன்மின் கண்டீர் திருவடி தன் நாமம் மறந்தும் புறம் தொழா மாந்தர்
இறைஞ்சியும் சாதுவராய்ப் போதுமின்கள் என்றான் நமனும் தன் தூதுவரைக் கூவிச் செவிக்கு -நான்முகன் -68-
விரைந்து அடைமின் மேல் ஒரு நாள் வெள்ளம் பரக்க கரந்து உலகம் காத்து அளித்த கண்ணன்
பரந்து உலகம் பாடின ஆடின கேட்டு படு நகரம் வீட்டினை வாசல் கதவு -80-
——————–
சென்று அங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு இன்று இங்கு என் நெஞ்சால் இடுக்குண்ட
அன்று அங்கு பார் உருவும் பார் வளைத்த நீருருவும் கண் புதைய காருருவன் தான் நிமிர்த்த கால்–பெரிய திருவந்தாதி -21-
இளைப்பாய் இளையாப்பாய் நெஞ்சமே சொன்னேன் இளைக்க நமன் தமர்கள் பற்றி இளைப்பெய்த
நாய் தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான் தாய் தந்தை எவ்வுயிர்க்கும் தான் -23-
நான் கூறும் கூற்றாவது இத்தனையே நாள் நாளும் தேங்கோத நீருருவன் செங்கண் மால்
நீங்காத மா கதியாம் வெந்நரகில் சேராமல் காப்பதற்கு நீ கதியாம் நெஞ்சே நினை -46-
வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்தான் –சிறிய திருமடல்
முன்னை வினை அகல மூங்கில் குடி யமுதன் பொன்னம் கழல் கமலப் போது இரண்டும் என்னுடைய
சென்னிக்கு அணியாகச் சேர்த்தினேன் தென் புலத்தார்க்கு என்னைக் கடவுடையேன் யான் -இராமானுச நூற்றந்தாதி தனியன் –
இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னம் நரகில் இட்டுச் சுடுமே அவற்றைத் தொடர் தரு தொல்லை சுழல் பிறப்பில்
நடுமே இனி நம் இராமானுசன் நம்மை நம் வசத்தே விடுமே சரணம் என்றால் மனமே நையல் மேவுதற்கே -98-
ஆழ்வார்களும் அருளிச் செயல்களையும் தாழ்வா நினைப்பவர்கள் தாம் நரகில் வாழ்வார்கள் என்று நினைத்து
நெஞ்சே எப்பொழுதும் நீ யவர் பால் சென்று அணுகக் கூசித்திரி -உபதேச ரத்னமாலை -35-
———————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply