கீழே ப்ரஸ்துதமான – சொல்லப் பட்ட நாராயணன் என்னும் திருப் பெயரின் பொருளை –
சப்தார்த்தம் -அருளிச் செய்கிறார்-
அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான்
அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்
அவனே யவனும் அவனுமவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே–9-3-2-
அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான் அவனே –
விஸ்த்ருதமான அகன்ற பூமியை உண்டாக்கி
பிரளயம் கொண்ட பூமியை மஹா வராகமாய் எடுத்தானும் அவனே
அவனே -என்ற ஏ காரத்தால்
படைத்தல் முதலான கார்யங்களில் ஸஹ காரி நைரபேஷ்யம் -வேறு
துணைக் காரணம் இல்லாமையைச் சொல்லுகிறது –
அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான் அவனே –
பிரளயம் கொள்ளாதபடி பூமியை எடுத்து வயிற்றிலே வைத்து வெளிநாடு காண உமிழ்ந்து
மகாபலியாலே அபஹ்ருதமாக -கவர்ந்து கொள்ளப்பட எல்லை நடந்து மீட்டுக் கொண்டான் -அவனே
அவனே -என்ற ஏ காரத்தால் ஆபத்துக்கு ஸஹ -துணையாதல் முதலான
காப்பாற்றுதல் தொழிலும் சஹகாரி நைரபேஷ்யம் -வேறு துணை இன்மையை தெரிவித்தவாறு –
யவனும் அவனுமவனும் அவனே –
பிரமனும் சிவனும் இந்த்ரனும் ஆகிய இவர்கள் உடைய
ஸ்வரூபம் ரஷணம் ஸ்திதி நிற்றல் இருத்தல் பிரவ்ருத்தி நிவ்ருத்தி – முதலான செயல்கள் அவன் இட்ட வழக்கு
ஸ ப்ரஹ்மா ஸ சிவ ஸ இந்த்ரா -என்கிற பிரசித்தியைப் பற்றிச் சொல்லுகிறார் -என்றது
ச -அவன் ச-அவன் ச -அவன் என்றே போருகிறார்-என்றபடி –
அவனே மற்று எல்லாமும்-
ஸ அஷர பரம ஸ்வராட் –
அவனே உயர்ந்தவனும் விகாரம் இல்லாதவனும்
கர்மங்கட்கு வசப் படாதவனான முக்தன் -என்றபடியே
பிரதானரோடு பிரதானம் இல்லாதாரோடு வேற்றுமை இல்லாதபடி
சேதன அசேதன பொருள்கள் எல்லாம் அவன் வசப் பட்டவை யாம் –
அறிந்தனமே –
பிரமன் முதலாயினோர்- ஈஸ்வரோஹம் -என்று இருக்கையும்
அவர்களைப் பற்றுகின்றவர்களுமாக -ஆஸ்ரயிப்பாருமாக -சொல்லா நிற்க
நீர் -அவனே -என்றது என் கொண்டு -என்னில் –
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற காரணத்தால் நாம் அறிந்தவர் ஆனோம்
அதனாலே சொல்லுகிறோம் -என்கிறார் –
ஆக
இரண்டு பாசுரங்களாலும்
திரு மந்தரத்தையும்
அதன் அர்த்தத்தையும் -பொருளையும்-அருளிச் செய்தாராய் நின்றார் –
————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply