ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -9-2-11–

நிகமத்தில் –
இத் திருவாய்மொழி கற்றார் அவனை நிரந்தரமாக -எப்பொழுதும் நினைக்கப் பெறுவார் என்கிறார்-

கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரை கடல் கடைந்தவன் தன்னை
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல் வழுதி நாடன் சடகோபன்
நாவில் பாடல் ஆயிரத் துள்ளும் இவையும் ஓர் பத்தும் வல்லார்கள்
ஓவுதல் இன்றி யுலகம் மூன்று அளந்தான் அடி இணை யுள்ளத் தோர்வாரே–9-2-11-

கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரை கடல் கடைந்தவன் தன்னை –
குரை கடல் கடைந்தவன் தன்னை -கூவுதல் வருதல் செய்திடாய் என்று-ஆயிற்று இவர் சொல்லிற்று
முறை கெடவுமாம்
முறையிலே ஆகவுமாம்
காணும் இத்தனையே வேண்டுவது –

குரை கடல் கடைந்தவன் தன்னை —
இந்த அபேக்ஷை விருப்பம் இல்லாதார்க்கும் உடம்பு நோவ கடல் கடைந்து அமுதம்
கொடுத்தவனை ஆயிற்று இவர் விரும்பியது

மேவி நன்கு அமர்ந்த –
இந்த ஸ்வபாவ தன்மையின் அனுசந்தானத்தாலே நினைவாலே பொருந்தி
கால் தரையிலே பாவினார் ஆயிற்று –

வியன் புனல் பொருநல் வழுதி நாடன் சடகோபன் –
விஸ்மய நீயமான பரந்த புனல் நிறைந்த திருப் பொருநலை உடைய
திரு வழுதி நாட்டுக்கு தலைவரான ஆழ்வார்

நாவில் பாடல் ஆயிரத் துள்ளும் இவையும் ஓர் பத்தும் வல்லார்கள் –
மனத்தின் சஹகாரம் -துணையும் இன்றிக்கே ஆயிற்றுச் சொல்லிற்று
அங்கனம் சொன்ன ஆயிரம் பாசுரங்களுள் இந்தப் பத்துப் பாசுரங்களையும் – வல்லவர்கள்

ஓவுதல் இன்றி யுலகம் மூன்று அளந்தான் அடி இணை யுள்ளத்தோர் வாரே –
யுலகம் மூன்று அளந்தான் அடி இணை -யுள்ளத்து -ஓவுதல் இன்றி-ஒர்வாரே
ஆஸ்ரித அடியவர்கட்கு ஸூலபன் ஆனவனுடைய திருவடிகளை ஹ்ருதயத்தில் மனத்தால் நிரந்தரமாக –
எப்பொழுதும் அனுபவிக்கப் பெறுவார்
இத்தனை போதும் இவர் தாம் -இவற்றைப் பெற வேண்டும் -என்னும் அபேஷையோடே ஆசையோடு
திருக் கண்களால் குளிர நோக்கி அருள வேண்டும்
திருவடிகளை தலைக்கு மேலே வைத்து அருள வேண்டும்
தேவரீர் எழுந்து அருளி இருக்கும் இருப்பைக் காண வேண்டும்
நாய்ச்சிமாரும் தேவருமான இருப்பைக் காண வேண்டும்
உலாவும்படி காண வேண்டும்
ஸ்மிதம் புன்முறுவல் இருக்கும் படி காண வேண்டும்
என்று ஆசைப் பட்ட இவருக்கு அப்போதே கிடையாமையாலே
இவற்றைப் பெற வேண்டும் என்னும் மநோ ரதம் -எண்ணம் தானே பேறு ஆகத் தோற்றிற்று

இதனைக் கற்றவர்களுக்கும் அப்யசித்தவர்களும் -இந்த மநோ ரதம் -எண்ணம்
மாறாமலே முடியச் செல்லும் என்கிறார்
துர்க்க தாவபி ஜாதாயாம் த்வத்கதோ மே மநோ ரத
யதி நாசம் நவிந்தேத தாவதாஸ்மி கருதி சதா -ஜிதந்தா ஸ்தோத்ரம்
உன்னை அடைந்து இருக்கிற என்னுடைய எண்ணமானது கெடாமல் இருந்ததே ஆனால்
அதனால் எல்லா காலத்திலும் விரும்பினவற்றை எல்லாம் பெற்றவனாய் இருக்கிறேன் -என்கிறபடியே –

பண்டை உறவான பரனைப் புளிங்குடிக்கே
கண்டு எனக்கு எல்லா உறவின் காரியமும் -தண்டற நீ
செய்தருள் என்றே இரந்த சீர் மாறன் தாள் இணையை
உய் துணை என்று உள்ளமே ஓர்–திருவாய் மொழி நூற்றந்தாதி –81–

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading