இவள் இவ்வளவு ஆபன்னையாய் இருக்க இவள் துயரத்தைத் தீர்த்து
அருளா தொழிகைக்குக் காரணம் என்னுடைய கர்மவிபாகம் -பாபமே’ என்கிறாள்
‘மையல் செய்து என்னை மனம் கவர்ந் தானே! என்னம்’ மா மாயனே!’ என்னும்;
‘செய்ய வாய் மணியே!’ என்னும்’தண் புனல் சூழ் திரு வரங் கத்துள்ளாய்!’ என்னும்;
‘வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல்!’ என்னும்;
பை கொள் பாம்பணையாய்!இவள் திறத் தருளாய் பாவியேன் செயற் பாலதுவே–7-2-6-
மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே என்னும்-
உணர்த்தி உண்டாகில் நெஞ்சு இழவாள் காணும்.
பகைவர்ளுடைய அநவதானம்- சமயம் பார்த்திருந்த அவர்களை கோட்டை கொள்ளுவாரைப் போலே.
என்னை-
கடலைத் தரை கண்டான் என்னமாறு போலே இருத்தலின், ‘என்னை’ என்கிறது.
மனம் கவர்ந்தான்
புழு கூற்றிச் சட்டம் பொகடுவாரைப் போலே இருத்தலின், ‘மனம் கவர்ந்தான்’ என்கிறது.
மையல் செய்து மனம் கவர்ந்தான்
கொன்று கிழிச்சீரை அறுப்பாரைப் போலே இருத்தலின், ‘மையல் செய்து மனம் கவர்ந்தான்’என்கிறது.
மா மாயனே என்னும்-
மையல் செய்த பிரகாரங்கள், என்றது,‘கலக்கிற சமயத்தில் தாழ நின்று கையைக் காலைப் பிடித்த பரிமாற்றம்
காணும் இவள் மனத்தில் பட்டுக் கிடக்கிறது’ என்றபடி. ‘
ஸ்வதஸ் ஸித்தமான -இயல்பாயுள்ள மேன்மை போன்ற தன்றே, காதலால் தாழ நின்ற நிலை’
சம்ச்லேஷ தசையில் –கலவிக் காலத்தில் ஆச்சரியமான செயல்களை யுடையவனே!’ என்னும்.
செய்ய வாய்-
இதுவும் அந்த மாயங்களிலே ஒன்று.
தைரியக் குறைவு-பங்கம் – உண்டாய் ‘நான் உன் சரக்கு அன்றோ?’ என்று சொல்லுகிற போதை
அதரத்தில் பழுப்பு இருக்கிறபடி.
ஸ விலாஸ ஸ்மிதாதாரம்’ ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 17:21 -அழகிய முறுவலை யுடைய
முகத் தாமரையைத் தரித்தவனை’ என்னக் கடவதன்றோ?
மணியே-
புஷ்பம் மலருகிற போது எங்கும் ஒக்க ஒரு செவ்வி பிறக்குமாறு போலே, புன் முறுவல் செய்யும் போது
வடிவிலே எங்கும் ஒக்க ஒரு செவ்வி பிறந்தபடி.
தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய் என்னும்-
புன்முறுவலில் உண்டாகும் குளிர்த்தியைப் போலாயிற்று ஊரில் குளிர்த்தியும்.
அகவாயில் குளிர்த்தி போலே யாயிற்று இவ் வாயில் குளிர்த்தியும்.
வாய் -இடம்
வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல் என்னும்-
திவ்ய ஆயுதங்கள் பகைவர்களை அழிப்பதற்கு உடலாக இருக்குமாறு போலே காமிநி- காதலிகளை அழிக்கைக்கும்
உடலாக இருக்குமன்றோ உகப்பாரையும் உகவாதாரையும் ஒக்கத் தோற்பிக்குமவை?
முன்னே கை கண்டு வைக்கிறவை அன்றோ?
காணவே பகைவர்கள் மண்ணுண்ணும் படியான திவ்ய ஆயுதங்களைத் தரித்திருக்கிற நீ என்
விரோதிகளைப் போக்கி முகம் காட்டாது ஒழிவதே!
திவ்ய ஆயுதங்களினுடைய சேர்த்தியால் வந்த அழகினைக் காட்டி நடத்த, அதுவே ஜீவனம் ஆயிற்று அந் நாடு கிடப்பது.
இல்லையாகில், அங்கே வினை உண்டாகத் தரித்திருக்கிறான் அன்றோ?
பை கொள் பாம்பு அணையாய் –
ஸ்மிதத்தோடு புன்சிரிப்போடு.
திவ்ய ஆயுதங்களோடு,
நித்ய விபூதியை யுடையனா யிருக்கிற இருப்போடு,
திருவனந்தாழ்வான் மேலே சாய்ந்தருளினதோடு வாசி அற எல்லாம் உத்தேஸ்யமாக இருக்கிறபடி.
பகவானுடைய திருமேனியின் ஸ்பர்சத்தால் உண்டான ஹர்ஷத்தாலே விகசிதமான -உவகையாலே மலரந்த படங்களை
யுடையனான திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடையவரே!
தனிப் படுக்கையிலே சாய்வதே நீர், இவள் தரைக் கிடை கிடக்க?
இவள் திறத்து அருளாய் –
படுக்கையில் சேர்த்தி பெறா விட்டால், நாட்டுக்கு -உலகத்தாருக்குச் செய்யும் அருளும் இன்றிக்கே ஒழிய வேணுமோ?
இவள் திறத்து –
பாடோடிக் கிடக்கிற இவள் திறத்து.
அருளாய் –
அருள் கொள்வார் தேட்டமான நீர்,
அருள் பெறில் ஜீவிக்கும் இவளை இப்படித் தரைக் கிடை கிடக்க விட்டு வைப்பதே!
பாவியேன் –
நீர் அருளாதவர் அல்லீர்;
இவள் அது பெறா விடில் ஜீவிப்பாள் அல்லள்;
இதற்கு அடி நான் செய்த பாபம் அன்றோ?
‘மத் பாபமேவாத்ர நிமித்தம் ஆஸீத்’-அயோத். இது, ஸ்ரீபரதாழ்வான் கூற்று.
என் பாபமே இந்த விஷயத்தில் காரணம் ஆயிற்று’ என்னமாறு போலே,
கொன்றே னான் என் தந்தையை மற்றுள் கொலை வாயால் ஒன்றோ கானத் தண்ணலை உய்த்தேன்
உலகாள்வான் நின்றேன் என்றால் நின் பிழை யுண்டோ பழி உண்டோ?
என்றே னுந்தான் என்புகழ் மாயு மிடமுண்டோ?’-கம்பராமாயணம்.
செயற்பாலது –
என்னுடைய செயலிடத்தது அருளாமைக்கு அடி; என்றது,
இவள் பக்கலிலும் குறை இல்லை;
உம்முடைய பக்கலிலும் குறை இல்லை;
இருவருமான சேர்த்தியைக் காண இருக்கிற என் பாபம் அன்றோ இதற்கு ஹேது –
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply