ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-2-2–

இப் பெண் பிள்ளையினுடைய தசை -நிலை என்னாய் விளையக் கடவது?’ என்கிறாள்.

என் செய்கின் றாய்? என் தாமரைக் கண்ணா! என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என் செய்கேன் எறி நீர்த் திருவரங் கத்தாய்! என்னும் வெவ் வுயிர்த் துயிர்த் துருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும் முகில்வண்ணா! தகுவதோ என்னும்
முன் செய் திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்! என் கொலோ முடிகின்றது இவட்கே?–7-2-2-

என் செய்கின்றாய் –
ஆற்றாமை மிக மிக அவனைக் கேட்குமித்தனை அன்றோ?

என் தாமரைக் கண்ணா என்னும் –
ஒரு நீர்ச் சாவியான பயிருக்கு ஒரு பாட்டம் மழை பெய்யக் கடவதன்றோ?’ என்கிறாள்.
அவலோகந தாநேந பூயோமாம் பாலய’ ஸ்ரீ விஷ்ணு புராணம் – 1.20:16.
தேவனே! அடைந்தவர்க்கு அருள் செய்பவனே! கேசவனே! அருள் புரிவாய்; அச்சுதனே! பார்வையாலே
மறுபடியும் என்னைக் காப்பாயாக,’ என்னக் கடவதன்றோ’
என் தாமரைக் கண்ணா என்னும் – தாமரைக் கண் என்றே தளரும்’ என்றது;
உணருகிற போது கண்களை வாய் வெருவிக் கொண்டாயிற்று உணர்ந்ததும். தளர்வதற்குக் காரணமும்,
தளர்ச்சி நீங்கித் தெளிவதற்குக் காரணமும் இக் கண்களே என்று கொண்டு அருளிச் செய்கிறார்,

தாமரைக் கண் என்றே தளரும் என்றது’ கீழ் திருப் பாசுரத்தில் ‘தளரும்’ என்று மோஹத்தைச் சொல்லி, இத் திருப் பாசுரத்தில்
என் தாமரைக் கண்ணா என்கையாலே, இது உணர்த்தியில் வார்த்தை என்றபடி.
தாமரைக்கண் என்றே தளரும்’ என்று தளர்த்திக்கு உடலானது இப்போது தாரகமாய்ச் சொல்லுகிறது.
நீர் ஏறுண்டார்க்கு அந் நீரைத் தெளித்து ஆஸ்வஸிப்பிக்குமா போலே, எனக்கு ஆற்றாமையை விளைத்த கண்களாலே என்
ஆர்த்தி தீர்க்கப் பார்த்தாயோ, இல்லையோ?
கண்களாலே பிறர்க்கு ஆகாதபடி பண்ண அமையுமோ? ஸதார்சனத்தையும் பண்ணி வேண்டாவோ?’ என்பது
இருபத்து நாலாயிரப்படி.

கிட்டின காலத்தில் ‘நானும் என்னுடைமையும் நீ இட்ட வழக்கன்றோ?’ என்றது கண்களாலே அன்றோ?
அக் கண்களிலே அன்றோ இவள் எழுதிக் கொடுத்தது?
கண்களாலே நோக்கி அணைக்கும் படியை நினைத்து,
அந்த பாவனையின் ப்ரகர்ஷத்தாலே -மிகுதியாலே கலந்து பிரிந்தால் போலே கண்ணீர் மல்க இருக்கும்.

என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய் என்னும் –
என் தாபம் ஆறும்படி அவ்வலை ஏற்றிலே கொண்ட போய்ப் பொகட வல்லீர் கோளே’என்னும்.
திருப் பொருநலில் தண்ணீர், பிரிந்தார்க்கு நிலாப் போலே -உபதப்தமாய் -சுடுகின்ற நீராய் இரா நின்றது போலே காணும்.
என்செய்கேன்
உன்னைக் கிட்டுகைக்கு நான் செய்வது என்?’ என்பாள், ‘என்செய்கேன்’ என்கிறாள்.
அப்போதே கிட்டப் பெறாமையாலே, ‘ஆசைப்பட்ட நாம் அழகியதாகப் பெற்றோம்’ என்று நெடு மூச்சு எறியா நிற்கும்
தஹந் தீமிவ நிஸ்வானஸ: வ்ருக்ஷாந் பல்லவ தாரிகை;’சுந். 17:29
தளிர்களைத் தரித்திருக்கின்ற மரங்களைத் தன் மூச்சுக் காற்றினால் எரிக்கின்றவளைப் போல இருக்கிறவளை’
பெருமூச்சாலே தன் பகை அறுக்கப் பாரா நின்றாள்.
பல்லவங்களைத் தரித்தன வாயிருத்தல் இப்போது இவளுக்குப் பகை அன்றோ?
ஒரு படிப்பட நின்று நலிகிறபடி அன்றோ அவை?
அரக்கியர்கள் உறங்கும்போதும் உண்டே அன்றோ!
உருவ இப்படியே நிற்கிற இத்தனை அவை,
உருகும் –
உருகுகிறபடியே நிற்கு மத்தனை.
நெடு மூச்சு எறிகைக்குத் தர்மியும் இல்லையோ என்னும்படி உருகும்.
வெவ்விதாகப் பலகால் நெடு மூச்சு எறிந்து, அந்த வெப்பத்தாலே உருகா நிற்கும்.

முன் செய்த வினையே முகப்படாய் என்னும் –
வலிக்கைக்கு விரகு பார்க்கிறபடி.
நான் முன்பு செய்த பாவமே, என் முன்னே வந்து நிற்க வல்லையே?’ என்னும்.
நீ முகம் காட்டினாயாகில். ‘தாமரைக்கண்ணா, என் செய்கின்றாய்?’ என்று அவனைக் கேளாது ஒழியலாயிற்றே. என்றது,
நான் செய்த வினையின் பயன் இதுவான பின்பு நாம் யாரை வெறுப்பது?’ என்று இருக்கலாயிற்றே என்றபடி.
ஸ்ரீ ஜனகராஜன் திருமகளுக்கும் இவர்க்கும் உள்ளது ஒன்றாயிற்று;
நன்மை அவனாலே’ என்றும், ‘தீமை தந்தம்மாலே’ என்றுமாயிற்று இருப்பது.
மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் மஹதஸ்தி ந ஸம்ஸய:’சுந். 38:48.
என்னுடைய பாவம் அதிகமாய் இருக்கிறது; சந்தேகம் இல்லை,’ என்றாள் அன்றோ?

முகில் வண்ணா தகுவதோ என்னும் –
நான் செய்த பாவம் கிடக்கட்டும், கர்மங்கட்குத் தகுதியாகவோ நீர் காரியம் செய்யுமது?
தகுவதோ –
சேருமோ என்றபடி
ஜல ஸ்தல – தண்ணீர் என்றும் தரை என்றும் வேறுபாடு பாராமல் மழை பெய்வது போன்று,
திருவருள் செய்யும் உம்முடைய ஒளதார்ய குணத்துக்குப் போருமோ?’ என்னும்.
ஒரு க்ரியா மாத்ரத்துக்கு -வினைக்கு இத்தனை உயிர் உண்டோ?
நான் காண் இது விளைத்தேன்,’ என்று அவ் வடிவைக் கொண்டு வந்து காட்ட வல்லையே’ என்னும்.
இது பத்தியின் காரியமே யாகிலும், பகவானுடைய அனுபவத்திற்கு விரோதி ஆகையாலே பாவம் என்கிறது.
அநிஷ்டாவஹம் -விருப்பம் இல்லாததனைக் கொடுப்பது பாவம் இத்தனை அன்றோ?

தகவிதோ’
என்ற பாடத்திற்கு, ‘நான்செய்த பாவம் நானே அனுபவிக்க வேணுமாகில்
உம்முடைய திருவருளுக்கு விஷயம் இன்னது என்று அருளிச் செய்ய வேண்டும்,’ என்னும்.
முன் செய்த வினையே முகப்படாய்’
என்கிற இடம், ‘கிரியை அத்ருஷ்ட ரூபத்தாலே நின்று பலத்தைக் கொடுக்கும்’ என்பார் வார்த்தை.
முகில் வண்ணா’
என்கிற இடம், ‘ஒரு பரம சேதனனுடைய திருவருளே பலத்தைக் கொடுப்பது’ என்றிருக்கும் வேதாந்திகள் வார்த்தை.
குற்றவாளர் ராம கோஷ்டிக்கு ஆள் அல்லர்’என்கிற மஹாராஜர் தொடக்கமானார் வார்த்தை போன்றது கீழே சொன்னது:
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்’ :யுத். 18:3-அவர்கள் குற்றவாளரே யாகிலும்’ என்ற ராம சித்தாந்தம் போலே
தகவிதோ’ என்கிறது.‘
என்னை நமஸ்காரம் செய்’ என்றால் போலே மேல் சொன்னது‘
மாம் நமஸ்குரு’ என்பது ஸ்ரீ கீதை, 9:34.;போலே கீழ்ச் சொன்னது
மாஸூசா -துக்கப்படாதே’ என்றால் போலே ‘தகவிதோ’ என்கிறது.
முகில் வண்ணா’
என்கைக்கு, நம் ஒளதார்யம் எங்கே பலிக்கக் கண்டு சொல்லுகிறது?’ என்ன,

இவ்வுலகம் முன் செய்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்-
நிர்ஹேதுகமாக -காரணம் ஒன்றும் இல்லாமலே முன்பு உலகத்தைப் படைத்தல் முதலானவைகளைச் செய்து
தகவிதோ’ என்கைக்கு ‘உபகரணம் இல்லாத அன்று இதனை உண்டாக்கி நோக்கினாய் நீ அன்றோ?’ என்றது,
கரண களேபரங்கள் இல்லாமல் கிடந்த இதனை வெறும் உன் கிருபையாலே உண்டாக்கினாய் இத்தனை அன்றோ?
உண்டாக்கி விட்ட அளவையோ?
பிரளய ஆபத்து வயிற்றிலே வைத்துப் பாதுகாத்து, உள்ளே கிடந்து நோவு படாதபடி புறப்பட விட்டு,
எல்லை நடந்து மீட்டுக் கொண்டு, சர்வ வித ரக்ஷணமும் -செய்தாய் அல்லையோ!’ என்றபடி.

என் கொலோ முடிகின்றது இவட்கே –
இவள் அளவில் தர்மிலோபமேயோ பலிக்கப் புகுகிறது?
நீர் ரஷிக்கும் பூமிக்கும் இவளுக்கும் ஒரு வாசி உண்டாக நினைத்திருக்கின்றிலீரோ!
இவளுடைய பாபமோ, உம்முடைய திருவருளோ பலிக்கப் போகிறது?
இவள் இடை யாட்டத்தில் நீர் செய்யப் பார்த்தபடி எங்ஙனே?’ என்னுதல்
இவளுடைய தசை -நிலை என்னாய் விளையக் கடவது?’ என்னுதல்.

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading