ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை – -1-4-7-

தம்தாமுடைய குற்றங்களைப் பாராமல், ‘அருள் ஆழிப் புட்கடவீர் அவர் வீதி’ என்று சொல்லும் இத்தனையோ
வேண்டுவது என்று அவர்க்குக் கருத்தாக,
‘எங்கள் குற்றம் ஒன்றுமேயோ பார்ப்பது?
தம்முடைய அபராத சஹத்வம் பார்த்தல் வேண்டாவோ என்று சொல்,’ என்று தன் கிளியை இரக்கிறாள்.

———————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

கீழ்ப் பாட்டில் யாமும் என் பிழைத்தோமே என்று அதப்யுபகத வாதத்தால் அருளிச் செய்து
இப்பாட்டில் அப்யுபகத வாதத்தாலே அருளிச் செய்கிறார் என்று அருளிச் செய்வர்-
குற்றம் -பூர்வாகம் -கீழ்ப் பாட்டிலே அபராதம் உத்தராகம் -என்று விவஷிதம் என்று கருத்து –

———————–

என்பு இழை கோப்பது போலப் பனி வாடை ஈர்கின்ற
என் பிழையே நினைந் தருளி அருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக் கென்று ஒரு வாய் சொல்
என் பிழைக்கும் இளங்கிளியே! யான் வளர்த்த நீ யலையே?–1-4-7-

என்பு இழை கோப்பது போலப் பனி வாடை ஈர்க்கின்ற-
எலும்பினைத் தொளைத்து அதிலே -மூர்த்தமாய்- கடினமானது ஒரு கயிற்றினைக் கோத்தது போன்று
நஞ்சு ஊட்டின வாடையானது அறுக்கின்றது.
எலும்பும் நரம்புமேயாம்படி-சரீரம் தான் – போர க்ருசமாய் மிகவும் இளைத்தது ஆதலின், சரீரம் என்னாது ‘என்பு’ என்கிறாள்.
பம்போ பவன மாருதம் -‘பம்பா நதிக் கரையின் சோலையிலிருந்து வருங்காற்று’ நாயகனுக்கு இருந்தது போன்று,
இருக்கிறது காணும் இவ்வாடை இவளுக்கு.

பத்ம ஸுகந்திக வஹம் –
கலம்பகம் சூடுவாரைப் போலே தாமரையோடை செங்கழுநீரோடைகளிலே சென்று புக்கு
பூவில் இழியில் அதில் வெக்கை தட்டும் என்று மேல் எழ நின்று அரிமிதியன பரிமளத்தை கொய்து கொண்டு வாரா நின்றது
சிவம் –
கலப்பற்றுப் பசும் தென்றலாய் இருந்தது -அதாவது புறம்பே சிலருக்கு உடம்பு கொடுத்துச்
சுணங்கு அழியாதே தாய்த் தென்றலாய் இருக்கை
சோக விநாசனம் –
நம்மை இனி பிராணனோடு வைத்து நலியாதது போலே இருந்தது
தன்யா –
காற்று வாரா நின்றது என்றால் ஏகாந்த ஸ்தலம் தேடிப் படுக்கை படுகிறவர்களும் சிலரே
லஷ்மண சேவந்தே-
இது எப்போதோ வருவது என்று இருப்பார்கள்
பாம்போ பவன மாருதம் –
ஆகரத்தில் நெருப்பு என்னுமா போலே
நாயக நாயகிகள் ஒருவரை ஒருவர் பிரிந்தவாறே, அந்தர ஜாதி காலிலே துகை உண்பதே இப்படி.
அந்தரத்தில் ஜாதமானது -அந்தர ஜாதி -ஆகாசாத் வாயு இறே -கால் காற்று
‘மனைவியானவள் இப்படி வாடைக்கு இடைந்து நோவு படாநிற்க, இதனை நீக்குதற்கு,
அவர் கடல் அடைத்தல், படை திரட்டல் ஆகிறபடி என்?’ என்னில்,

என் பிழையே நினைந்தருளி-
நான் படுகிற துன்பம் போராது என்று கீழாண்டைச் சிகை வாசியா நின்றார்.
அதாவது,-அவ்விஞ்ஞாதா வாகை – அடியார்களுடைய குற்றங்களை அறியாதவராய் இருந்தமை- தவிர்ந்து,
சஹஸ்ராம்ஸூ -‘கணக்கு அற்ற ஞானங்களை யுடையவர்’ என்கிறபடியே,
இப்போது குற்றங்களை அறிவதில் -சர்வஞ்ஞராய் -முற்றறிவினராய் இருக்கிறார் என்றபடி,

அருளாத திருமாலார்க்கு-
இதற்கு- ந கச்சின் ந அபராத்யதி -‘குற்றம் செய்யாதவர் ஒருவரும் இலர்’ என்பாரும் அருகே இருக்க,
எங்கள் குற்றம் பார்த்து அவள் பக்கல் முகம் பெற இருக்கிறாரோ!’ என்று ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்வர்.
‘நான் இப்படி நோவுபடுதற்குக் காரணம், அவனுக்கு அவள் முகங்கொடுத்து அங்கே துவக்குகையால் அன்றோ
என்று இன்னாதாகிறாள்,’ என்று ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பர்.
‘ஆயின், பிராட்டியின் மேல் வெறுப்பாக, ஸ்ரீ பிள்ளான் இங்ஙனம் பணித்தல் தகுமோ?’ எனின்,
உறவு உள்ள இடத்திலே யன்றோ வெறுப்பும் உண்டாகும்? ஆதலால் தகும்.

என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு –
‘தத்தம் குற்றம் பாராமல் அருளச் சொல்லும் இத்தனையோ வேண்டுவது?’ என்று சொல்ல நினைந்தாராகில்,
‘ஸ்வாமியினுடைய திருவருளுக்கு என்ன குற்றத்தைச் செய்தாள்?’ என்று நீங்கள் சொல்லுங்கள்.
இனி, இதற்கு, என் குற்றத்தைப் பார்த்துத் -தமிக்க நினைந்தாராகில், தம் பொறையாகிற நேர்தரவைக் காட்டுங்கள் என்னுதல்.
அதாவது, ‘ஸ்வாமியான தம் பொறை வயிறு நிறைய எங்களால் குற்றஞ்செய்யப் போமோ?’ என்று சொல்லுங்கள் என்றபடி.
‘ஏன் செய்யப் போகாதோ?’ என்னில், ஆஸ்ரயத்துக்குத் தக்கபடி அன்றோ எல்லாம்?
நாங்கள் குற்றம் செய்வதும் எங்கள் அளவிலே; தாம் பொறுப்பதும் தம் அளவிலே யன்றோ? ஆதலால், செய்யப் போகாது.
இனி, இதற்கு ‘தேவரீர் திருவருளுக்குத் தண்ணீர் துரும்பாக-ப்ரதக்ஷிண – வலம் வருதல்,-நமஸ்காராதிகள் -வணங்குதல்
முதலியன எவையேனும் செய்தன உளவோ?’ என்று ஸ்ரீ நம்பிள்ளை அருளிச் செய்யும் படி –

தகவினுக்கு
ஆந்ரு சம்சயம் பரோ தர்ம -‘பிறருடைய குற்றத்தைப் பொறுத்திருத்தலாகிய பெரிய தர்மமானது தேவரீரிடமிருந்தே
என்னால் கேட்கப்பட்டது,’ என்று சொல்லும்படி இருக்கும் நிலைக்கு
என் பிழைத்தாள்-என்ன தப்புச் செய்தாள் – என்பாள், ‘திருவடியின் தகவினுக்கு என் பிழைத்தாள்’ என்கிறாள்.
கிம் கோப மூலம் -‘கோபத்திற்குக் காரணம் யாது?’ என்கிறாள் தாரை; அதாவது,
‘இராஜ புத்திரர்களை நான்கு மாதம் மின்னுக்கும் இடிக்கும் இரையாக்கி தாங்கள் இன்பத்திலே கருத்து
ஊன்றினவர்களாய் இருந்தும், இருந்தனவற்றுள் ஒன்றையும் நினையாது,
அவர்கள் பொறையை நினைந்திருந்த கனத்தாலே உம்முடைய கோபத்திற்கு அடி என்?’ என்கிறாள்.–.
மனுஜேந்த்ர புத்ர -அறுபதினாயிரம் ஆண்டு செய்தார் செய்த குற்றங்களைப் பொறுத்துச் சேரவிட்டு ஆண்டு கொண்டு போந்தான்
உங்கள் தமப்பனார் -அவன் வயிற்றிலே பிறந்து குற்றம் செய்தோம் என்று தலை அறுக்க வந்து நின்றீர் நீர் –
அழகியதாய் இருந்தது உம்முடைய போக்கு
கஸ்தே ந சந்திஷ்டதி வாங்நிதேசே -சாஸ்த்ர வஸ்யம் இன்றிக்கே கண்டத்தில் கடுக்கச் சாபல்யத்தைப் பண்ணி
மீளமாட்டாத திர்யக்குகளே நீரே இழந்த போகங்களை புஜிப்பது -என்று சேர்த்து விட்டு
நீர் சொல்லிற்றுச் செய்தன என்று தலை அறுக்க வந்து நின்றீர் –
இப்படிச் சொல்லலாம் படி இறே இவர் பொறை இருப்பது –

ஒரு வாய் சொல் –
ஒரு வாய் -ஒரு வார்த்தை/ சொல் – சொல்லு.-ஒரு வார்த்தை சொல்லு -என்றபடி

என்பு இழைக்கும் இளங்கிளியே –
முஃதயத்தாலும் -இளமையாலும், ஸ்நிக்தமான பிணிதியாலும் – அன்புடன் கூடிய சொற்களாலும், வடிவில் பசுமையாலும்,
வாயில் பழுப்பாலும் தலைவனுடைய நினைவை உண்டு பண்ணுவதனால், எலும்பைச் சிதைக்கின்ற கிளியே!
இனி, ‘என்பு இழைக்கும்’ என்று பிரிக்காமல், என் பிழைக்கும் என்று கொண்டு,
‘என் நிலையை அறிவித்தால் என்ன தவறு உண்டாம்?’ என்று கோடலுமாம்.

யான் வளர்த்த நீ அலையே –
திருமகள் கேள்வனாய்த் தான் தோன்றியாய் இருப்பார் செய்வனவற்றை வயிற்றில் பிறந்தாரும் செய்வரோ?
இனி, இதற்குக் ‘கலந்து பிரிந்தார் செய்வனவற்றை வளர்த்தவர்களும் செய்வர்களோ?’ எனலுமாம்.
இனி, ‘அவன் தான் இப்படிச் செய்யவேண்டும் என்று செய்தானோ?
என்னுடைய சம்பந்தம் அன்றோ அவன் இப்படிச் செய்தான்?
அப்படி, என்னுடைய சம்பந்தம் உனக்கும் உண்டான பின்பு, நீ நலியச் சொல்ல வேண்டுமோ?’ என்பாள்,
‘யான் வளர்த்த நீயலையே’ என்கிறாள் என்று கூறலுமாம்.
இனி, ‘எனக்குத் தகுந்தாற்போலே அன்றோ நீயும் இருப்பாய்’
உன் மேல் குறையுண்டோ?’ என்பாள், அங்ஙனங் கூறுகின்றாள் என்றலும் ஒன்று.

————————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

உடம்பு என்னாதே என்பு என்றத்துக்கு பாவம் அருளிச் செய்கிறார் –
இழை என்று கர்க்க சரஜ்ஜவாதிகளுக்கும் உப லக்ஷணம் -என்றபடி -வ்யாபரிக்கை -குத்துகை-
வாடை என்னாதே பனி வாடை – என்றத்துக்கு தாத்பர்யம் -நஞ்சூட்டின இத்யாதி –அதுக்கு த்ருஷ்டாந்தகம் -பம்போபவ நேத்யாதி –
கலம்பகன் – நாநா புஷ்ப க்ரதித நாநா வர்ண மாலா –
அரி மிதியான -அரி -வண்டு -வந்தாலே மிதிக்கப்பட்ட -கிளப்பப்பட்ட பரிமளம்
தாய்த் தலைத் தென்றல் -பிரதமத்திலே உண்டாய் ஸ்லாக்யமான தென்றல் -என்றபடி –

ஆகரத்தில் நெருப்பு என்னுமா போலே நாயக நாயகிகள் ஒருவரை ஒருவர் பிரிந்தவாறே
அந்தர ஜாதி காலிலே துகை யுண்பதே இப்படி -என்று அருளிச் செய்வர்-
அந்தர ஜாதி காலிலே -ஆகாசத்தில் ஜென்மத்தை யுடைய காற்றாலே -என்றபடி -ஆகாசாத் வாயு –
கீழாண்டைச் சிகையாவது -பழம் கணக்கிலே நிற்கிற நிலுவை விசாரிக்கை –

அவ்விஞ்ஞாதா சஹஸ்ராம்ஸூர் விதாதா க்ருத லக்ஷண-பூர்வம் ஆஸ்ரித தோஷ விஷயத்திலே அவிஞ்ஞாதவாய் –
குண விஷயத்தில் சஹஸ்ராம்ஸூவாய் -சர்வஞ்ஞராய்ப் போந்தவர் –
இப்போது அந்த ஆகாரத்தை விட்டு தோஷ ஏகத்ருக்கானார்-என்றபடி –
அருளாத திரு மாலார்க்கு -என்றத்துக்கு இரண்டு பொருள் –
அவள் முகம் கொடாள் என்றும் -அவள் சம்பந்த வ்யாமோஹ விஷய பூதனானான் -என்றபடி –
திருமாலால் அருளப்பட்ட சடகோபன் -8-8-11-அன்றோ

தகவு -பொறையாதல் கிருபை யாதல் -இரண்டு அர்த்தங்கள் -தத் கார்யமான ஷமையை லஷிக்கிறது
நேர்த்தரவு -செல்லுச் சீட்டு-விஸூத்தி ஓலை –
என்பிழைக்கும் -என்புகளை இழைக்கும்-சிதைக்கும் / என்ன பிழையாம் தப்பாம் என்றுமாம் –
கீழே யாமும் என் பிழைத்தோம் என்று தன மேல் குற்றம் இல்லையாகச் சொல்லி வைத்து
இதில் என் பிழையே பார்ப்பது என்று அபராதம் இசைவான் என் என்ன –
அநப்யுபகத வாதமும் அப்யுகம்ய வாதமும் உண்டாகையாலே விரோதம் இல்லை –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading