ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை – -1-4-6-

எங்கள் ஆற்றாமை நீக்கிலராயினும், தம்முடைய நாராயணன் என்ற பெயர் குறைந்து போகாதபடி,
நோக்கிக் கொள்ளச் சொல்லுங்கள்,’ என்றாள் முன்,
‘தாம் அல்லாதாருடன் கலந்து வரும் தாழ்வினைக் காட்டிலும் நம்முடைய நாராயணன் என்ற பெயர் அழியினும் அமையும்’
என்பதனை இறைவன் திருவுள்ளமாகக் கொண்டு, மேல் செய்யத் தக்க செயலைக் கூறுகிறாள் இப் பாசுரத்தில்.
அதாவது, தமக்கும் தாழ்வு வாராமல் எங்கள் சத்தையும் கிடக்கைக்கு ஒருவழி உண்டு.
தாம் அழகு செண்டு ஏறப் புறப்படுதல், யானைக்கு அருள் செய்யப் புறப்படுதல் செய்வன போல்வன சில உளவே அன்றே?
அப்போது எங்கள் தெருவே போனால் தமக்கும் ஒரு தாழ்வு வாராது;
நாங்களும் சாளரத்தின் வழியால் கண்டு பிழைத்துக் கிடப்போம்;
இப்படி அவிருத்தமாக- மாறுபாடு இல்லாதனவாகச் செய்யலான பின்பு,
அதனைச் செய்யச் சொல்,’ என்று ஒரு வண்டை இரக்கிறாள்.

—————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

கீழ்ப் பாட்டில் பிரமேயத்தை அனுபாஷித்து சங்கதி -ஒறுவாய்-விகலமாய் –
அவர் வீதி ஓரு நாள் அருளாழிப் புட் கடவீர்-என்ற பதங்களைக் கடாக்ஷித்து சங்கதி –
அழகு செண்டு ஏறுகை -தான் அலங்கரித்துக் கொண்டு புறப்பட்டால் அந்த அழகு ஆஸ்ரிதர் நெஞ்சில் படும்படி புறப்படுகை –
விளையாட்டுச் சரிகை புறப்படுகை -செண்டு என்று பந்தாய் அது அடித்து விளையாடுகைக்காக ராஜாக்கள்
அழகியதாகக் குதிரை ஏறிப் புறப்படுவதைச் சொன்னவாறு-

———————-

அருளாத நீர் அருளி அவர் ஆவி துவரா முன்
அருள் ஆழிப் புட் கடவீர் அவர் வீதி ஒரு நாள் என்று
அருள் ஆழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
யருள் ஆழி வரி வண்டே! யாமும் என் பிழைத்தோமே–1-4-6-

அருளாத நீர்-
ஏதத் விரதம் மம ( ‘என்னை வணங்குகின்றவனை நான் பாதுகாக்கிறேன்; இது எனக்கு நோன்பு,’ )
என்று திருவருள் புரிவதற்குச் சங்கற்பித்திருக்குமாறு போன்று, அருளாமைக்குச் சங்கற்பித்திருக்கிற நீர்.
‘மயர்வற மதிநலம் அருளினன்’ என்று நெஞ்சுருகிக் கிடக்குமவர், ‘அருளாத நீர்’ என்கிறது என்ன நிலை விசேஷம் என்று அறிகிலோம்;
அருளாத நீர்’ என்று ஒரு திருப்பெயர் சாற்றுகிறாள்.
இனி,‘அருளாத நீர் அருளி’ என்பதற்கு, ‘திருவருள் செய்வதற்குப் பரிபக்குவமுள்ள உயிர்கள் கிடைக்காமையாலே
அருள் குமரியிருந்து அருள் செய்யாதிருக்கிற நீர், அருள் செய்தற்குச் சமயம் வருமிடத்தில் அருள் செய்து’ என்று உரைத்தலுமாம்.

நீர் அருளி
அருளைக்கொண்டே நிரூபிக்க வேண்டும் தன்மை உம்மது;
அருள் இல்லாதவர்க்கும் ‘அய்யோ’ என்ன வேண்டும் நிலை இவளது;
அங்ஙனம் இருக்க, அருளாது ஒழிவது எங்ஙனே!’ என்பாள், ‘நீர் அருளி’ என்கிறாள்.

அவர் ஆவி துவரா முன்
அவளுடைய பிராணன் – உயிர் பசை அற உலர்வதற்கு முன் அருளப் பாரும்.
இனி, ‘பின்னையும் அருள் செய்தற்குத் தவிரீர் அன்றே! ஆதலால்,
அவள்,அசத் சமமாக – உயிர் அற்ற பொருளுக்குச் சமம் ஆவதற்கு முன்னர் அருளப் பாரும்,’ என்று பொருள் கூறலுமாம்.
ஜீவந்தீம் மாம் யதா ராமஸ் சம்பாவயதி கீர்த்திமான் ( ‘கீர்த்தியையுடைய இராமன் என்னைப் பிழைத்து
இருப்பவளாக எப்படிக் கௌரவிப்பாரோ, அப்படி உம்மால் வார்த்தை சொல்லத்தக்கது,’) என்றாள் பிராட்டியும்.
‘நாங்கள் சொல்லும் அத்தனையேயோ வேண்டுவது?
அவன் அருள் செய்யப் போகின்றானோ?’ என்ன,
‘நீங்கள் அறிவிக்கும் அத்தனையே வேண்டுவது:

கொடுவருவாரும் அங்கே உண்டு,’ என்கிறாள்.
அருள் ஆழிப்புள்-
அருட்கடலான பறவை.
‘வெஞ்சிறைப்புள்’ என்றாள் முன்னர்க் கொண்டு போனபடியாலே;
இப்போது வரவுக்குக் காரணமாகையாலே -உடல் ஆகையால் -‘அருளாழிப்புள்’ என்கிறாள்.

கடவீர் –
அனுகூலர் -‘அன்புள்ளவர்கள் கண்டு வாழுகைக்கும்-ஸூக ஸ்பர்சத்தாலும் -தான் ஊற்றின்பம் உறுகைக்குமாகப்
போகாதே பிசுகிச் சுழியா நிற்கும்
ஆதலின்,அசேதனமான – அஃறிணைப் பொருளான தேரினைப் போன்று, வடிம்பாலே தாக்கி நடத்த வேண்டும்’ என்பாள்,
‘கடவீர்’ என்கிறாள். ‘எங்கே?’ என்னில்,

அவர்வீதி –
அவள் தெருவிலே.‘அங்ஙனம் ஒண்ணுமோ? ஒரு தெருவில் பலகால் போகப் புக்கவாறே
‘இவ்வரவு ஒரு காரணமுடைத்து என்று கூறார்களோ?’ என்னில்,
ஒரு நாள்-
நாங்கள் பிழைத்து கிடப்பதற்கு ஒரு நாள்-போக அமையும்.

அருள் ஆழி அம்மானை –
‘தாமரையாள் ஆகிலும் சிதகு உரைக்குமேல் என் அடியார் அது செய்யார்,’ என்னும்படி அருட் கடலானவன்.
இதனால், பெரிய திருவடியும் மிகை என்கிறாள்,
இனி அருளை இறைவனுக்கு அடைமொழியாக்காது, ஆழிக்கு அடைமொழியாக்கி,
ஆழி என்பதற்குச் சக்கரம் என்று கொண்டு,
அருளை நிரூபகமாகவுடைய திருவாழியைக் கையிலேயுடையவன்’ என்று பொருள் கூறலுமாம்.
‘ஆயின், ஆழி அருளை நிரூபகமாக வுடையதாய் இருக்குமோ?’ எனின்,
அருளார் திருச்சக்கரம்’ என்ப ஆதலின், சர்வேஸ்வரனுக்கும் ‘கைக்குறியாப்பை வாங்குவது இங்கே யன்றோ!
சர்வேஸ்வரன் பக்கல் அருள் மறுத்தாலும் அருள் கூடு கட்டி நிற்கும் இடமன்றோ இது?
இப்பொருளால், ‘பெரிய திருவடி ஒருவனுமேயோ!
அங்குக் கையாளாக உள்ளார் அடைய நம் பரிகரம் அன்றோ?’ என்று தெரிவிக்கிறாள்.

இது சொல்லி யருள்-
இத்தனையும் சொல்லியருளல் வேண்டும். ‘எது?’ என்னில்,
‘அருள் ஆழிப் புட்கடவீர் அவர்வீதி ஒருநாள்’ என்கிற வார்த்தையைச் சொல்லி யருளல் வேண்டும்.

ஆழி வரி வண்டே-
ஸ்ரமஹரமாய் -வருத்தத்தை நீக்கக் கூடியதாய் அழகியதாய் இருக்கிற வண்டே.
இனி, இதற்கு ‘வடிவு சிறுத்திருக்கவும் காமபீர்யம் பெருத்திருக்கிற வண்டே’ என்றும்,
‘சுழலப் பறக்கிற வண்டே’ என்றும் பொருள் கூறலுமாம்.
இதனால், கடகருடைய -இறைவனோடு சேர்க்கின்ற ஆசாரியனுடைய ஆத்தும குணத்தைப் போன்றே,
ரூப உருவத்தின் குணமும்-உத்தேச்யம் – உட்கோள் என்கை,

யாமும் என் பிழைத்தோம் – ‘
நாங்கள் என்ன தப்புச் செய்தோம்?
தாம் பிரிந்து துவளவிட்டு வைத்தது போன்று, நாங்களும் கிரமத்திலே பெறுகிறோம் என்று ஆறியிருந்தோமோ?
திர்யக்கின் -விலங்கின் காலில் விழுவாரும், தூது விடுவாரும் தாமாக இருக்க, –
அத்தலை இத்தலையாகியும் வாராது இருக்கிற தம்மதோ, எங்களதோ குற்றம்?’ என்பாள்,
‘யாமும் என் பிழைத்தோம்?’என்கிறாள்.

———————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

அருளாத நீர் அருளி -முந்தின அர்த்தத்தில் சங்கல்பத்தில் லக்ஷணை-
குமரிருந்து -அனுபவ யோக்யம் அன்றிக்கே இருந்து-நீர் -தயா நிரூபகத்வம் தோற்றுகிறது –
தேர் கடவி -என்னுமா போலே அசேதன சமாதியால் கடவீர் -என்கிறார் –
பிசிகிச் சுழிகை -மந்தமாக வளைய வருகை -அருளாழி அம்மானை -கிருபா சமுத்ரமான ஸ்வாமியை –
கையாளாய் உள்ளார் -பரிகரமாய் உள்ளார் -கையிலே இருக்கிறவர்கள் என்றுமாம் –
கைக் குறி- ஆப்பைக் குறி -லௌகிக பரிபாஷை -குறி -அளவு –
ஆழி -சமுத்திரம் என்று விவஷித்து -ஸ்ரமஹரமாய்-
ஆழம் -காம்பீர்யம் –
ஆழி வட்டம் -அத்தாலே-சுழலுதலைச் சொன்னவாறே —
மூன்று பொருளுக்கும் வரி -அழகு –
திர்யக்கின் காலிலே -ஸூக்ரீவம் நாதம் இச்சதி –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading