சர்வ ஸ்மாத் பரன் ‘எல்லாரினும் உயர்வு அற உயர்ந்தவன்’ என்றார் முதல் திருவாய்மொழியில்;
பரனாகையாலே பஜனீயன் ‘உயர்ந்தவன் ஆகையாலே வழிபடத் தக்கவன்’ என்று பல காலும் அருளிச் செய்யா நின்றார்
இரண்டாந்திருவாய்மொழியில்;
இத்திருவாய்மொழியில் அவனது சௌலப்யத்தை அருளிச்செய்கிறார். ‘யாங்ஙனம்?’ எனின்,
‘வழிபாடு செய்யுங்கள் என்று பலகாலும் அருளிச் செய்கின்றீர்;
இருகை முடவனை ‘யானை ஏறு’ என்றால் அவனாலே ஏறப் போமோ?
அப்படியே, சர்வேஸ்வரனாய், அவாப்த ஸமஸ்த காமனாய்- எல்லா விருப்பமும் முற்றுப் பெற்றவனாய் இருக்கிறவனை
இந்த ஷூத்ரனான- அற்பனான சம்சாரி சேதனனால் பற்றப்போமோ? என்ன,
‘அவ்யானை தானே அவ்விருகை முடவனுக்கும் ஏறலாம்படி படிந்து கொடுக்குமன்று ஏறத் தட்டு இல்லையே?
அப்படியே, இச் சம்சாரி சேதனனுக்கு-பஜிக்கலாம் படி – வழிபடலாம்படி -அவன் தன்னைக் கொண்டு வந்து
தாழ விட்டு எளியனாமாகில், இவனுக்கு வழி படத் தட்டு இல்லையே?’ என்று
கூறுமுகத்தால் அவன் எளிமையை அருளிச் செய்கிறார்.
‘ஆயின், அனைவரும் அவனை வழிபட்டு உய்வு பெறாமைக்குக் காரணம் யாது?’ எனின்,-
பாக்ய ஹீனருக்கு – நல்வினை அற்ற மக்கள் ஸ்ரீ இராமன் ஸ்ரீ கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைத்
தமது பிறவினைப் போன்ற பிறவியாம் என நினைந்து-சஜாதீய பிரதிபத்தி பண்ணி – கேடுறுதற்கும்,
பாக்யாதிகருக்கு- நல்வினை வாய்ந்த பெரியோர்கள், அரியன் எளியனாகப் பெற்றோமே!’ என்று நினைந்து-
ஆஸ்ரயிக்கலாம் படி – அடைந்து உய்வு பெறுதற்கும் பொதுவாக அவதாரங்கள் இருத்தலால் என்க.
சர்வேஸ்வரன் அரியன் என்றால் சம்சாரத்தில் ஆள் பற்றாது என்று அவன் எளிமையை விளங்க விரித்துச் சொல்லிக் கொண்டு போந்தோம்;
அது தானே ‘இவர்களுக்கு இத்தனை எளியனோ?’ என்று விடுகைக்கு உடல் ஆயிற்று?
அவ் வெளிமை தானே ஆதரிக்கைக்கு உடல் ஆயிற்று உமக்கு ஒருவருக்குமே!’ என்று
ஸ்ரீ எம்பாரைப் பார்த்து உடையவர் அருளிச்செய்தாராம் .
தார்மிகர் -அறவோர் சிலர், ஏரி கல்லினால், சேற்றிலே தலையை நொழுந்திப் பட்டுப் போகாநிற்பர் சிலர்;
விடாயர் அதிலே முழ்கி விடாய் தீர்ந்து போகா நிற்பார்கள்;
விளக்கை ஏற்றினால் அதிலே விட்டில் முதலிய சில பொருள்கள் விழுந்து முடிந்து போம்;
சிலர், அதன் ஒளியிலே ஜீவியா நிற்பர்கள்- உய்வு பெறுவார்கள்.
‘ஆயின், இறைவன் தடாகமும் விளக்கும் ஆவனோ?’ எனின்,
‘வாசத் தடம்’,
‘மரகத மணித் தடம்’ என்றும்,
‘வேங்கட மலை மேல் மேவிய வேத நல் விளக்கை’,
‘ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை’,
‘வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி’ என்றும்
இறைவன் தடாகமாகவும் விளக்காகவும் கூறப்படுதல் காண்க.
‘ஆயின், தீ வினையாளர் கேடுற்றதும், நல் வினையாளர் உய்வு பெற்றதும் காணும் இடம் உண்டோ?’ எனின்,
அவன்தான், ‘அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டதும்’-இப்படி வந்து அவதரித்து
எளியனான நிலை தன்னிலே யன்றே?
அப்படியே சிசு பாலன் முதலியோர், பூதனை, சகடாசுரன், இரட்டை மருத மரங்கள் இவர்கள் எதிரிட்டு முடிவுற்றமையும்,
ஸ்ரீ அக்குரூரர் ஸ்ரீ மாலாகாரர் முதலியோர்-அனுகூலித்து உஜ்ஜீவிப்பார்க்கு உஜ்ஜீவிக்கவும் ஆயிற்றே –
‘‘அவனை பஜியுங்கோள் வழிபடுமின்’ என்று பலகாலும் அருளிச் செய்கின்றீர்;
கண்ணாலே கண்டால் அல்லது-பஜிக்க – வழிபட விரகு இல்லை;பஜித்தால் – வழிபட்டால் அல்லது காண விரகு இல்லை;
ஆன பின்னர்,ஆஸ்ரயிக்கும் படி – அவனை அடைதல் எங்ஙனம்?’ எனின்,
தஸ்மிந் த்ருஷ்டே பராவரே (‘நம்மைக்காட்டிலும் உயர்ந்தவர்களான பிரமன் சிவன் இவர்களைத் தனக்கு அடிமையாகவுடைய
இறைவனைப் பர பத்தியால் பார்த்த அளவில் மனத்தில் இருக்கின்ற அவா முதலியன அழிகின்றன,’ )என்றும்,
விசதே தத் அநந்தரம் (‘பரபத்தியால் என்னை உண்மையாக அறிகின்றவன் பிறகு என்னையே அடைகின்றான்,’ )என்றும்
சொல்லுகிறபடியே, சில வருத்தங்களோடே காணக்கூடிய சாதன பத்தியை அன்று இங்குச் சொல்லுகிறது;
காண வேண்டும் என்னும்-ஆகா லேசம் – ஆசை சிறிதுடையார்க்கும் அவன் எளியனாம்படியைச் சொல்லுகிறது.
‘ஆயின், அறப் பெரியவன் ஆசை சிறிது உடையார்க்கு எளியனாகை கூடுமோ?’ எனின்,
சர்வாதிகன் -அறப் பெரியவன் தாழ நிற்கும் அன்று நிவாரகர் -தடை செய்குநர் எவருமிலர்
அறப்பெரிய அவன் இம் மண்ணுலகில் வந்து அவதரித்தான் என்பது பொய்யே அன்றோ?’ எனின்,
பஹு நி மே வியதீதாநி(‘பகைவர்களை அழியச் செய்கின்ற அருச்சுனா, எனக்கும் பல பிறவிகள் கழிந்தன;
உனக்கும் பல பிறவிகள் கழிந்தன; ஆயின், அப்பிறவிகள் பலவற்றையும் யான் அறிகின்றேன்;
அவற்றை நீ அறியாய்,’) என்று அருச்சுனனை நோக்கி, ‘நீ பிறந்தது போன்று, நானும் பிறக்கின்றேன்,’ என்கிறான் ஸ்ரீ கிருஷ்ணன்;
அருச்சுனன் பிறந்தது பொய் அன்று; ஆதலால், இறைவன் அவதரித்ததும் பொய் அன்று.
அவதாரங்களில் புரை இல்லை
‘ஆயின், அருச்சுனன் பிறவிக்குக் காரணம் கர்மம்; இறைவன் பிறவிக்குக் காரணம் யாது?’ எனின், இச்சையே;
இது தன்னை அவதார ரஹஸ்யத்தில் தானும் அருளிச் செய்தான் அன்றே,
ஜென்ம கர்மா ச மே திவ்யம் (‘என்னுடைய பிறவிகளும் பிறவிகளிற் செய்யப்படுகின்ற தொழில்களும்
தெய்வத் தன்மை வாய்ந்தவை,’) என்று?
அதாவது, ‘என்னுடைய பிறவிகள் கர்மம் அடியாக அல்ல; இச்சை அடியாக இருக்கும்.
நாம் பிறவா நிற்கச் செய்தே பிறவாமையும் கிடக்கும்; தாழ நின்ற நிலையிலே மேன்மையும் கிடக்கும்;
அப்ராக்கிருத சம்ஸ்தானத்தை இதர சஜாதீயமாக்கி வந்து பிறப்போம்;
இவற்றுள் ஒன்றை அறிந்தவர்கட்குப் பின்னர்ப் பிறவி இல்லை; நானும் பிறந்து அவர்களும் பிறக்க வேண்டுமோ?
ஈர் இறை உண்டோ?’ என்றான் என்றபடி.
ஆக, இறைவன் ஸ்ரீ இராமன், ஸ்ரீ கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைப் பண்ணிக்கொண்டு எளியனாம்;
ஆன பின்பு, அடைதல் கூடும்; நீங்களும் அவன் ஸ்ரீ கீதையில் நான்காம் அத்தியாயத்தில் அருளிச் செய்தவாறே
உபஜீவித்துக் கொண்டு நின்று, அவற்றை உயர்வதற்கு உரிய சிறந்த நெறியாகக் கொண்டு
அவனை ஆஸ்ரயியுங்கோள் அடைமின்,’ என்கிறார்.
‘நன்று; பிறர்க்கு உபதேசிக்கப் புக்க இவர், தாம் கலங்குதற்குக் காரணம் என்னை?’ எனின்,
அவதாரங்களை முன்னிட்டுக் கொண்டு, அவதாரங்களிலும் நீர்மைக்கு எல்லை நிலமான ஸ்ரீ கிருஷணாவதாரத்திலே இழிந்து,
அது தன்னிலும் பரத்துவத்தோடு ஒக்கச் சொல்லக் கூடிய நிலைகளைக் கழித்து,
நவநீத சௌர்ய நகர க்ஷோபத்திலே அகப்பட்டு, இளமணற்பாய்ந்து ‘எத்திறம்!’ என்று மோஹித்துக் கிடக்கிறார்.
‘ஆயின், பரத்துவத்தைக் காட்டிலும் சௌலப்யம் ஈடுபடுத்துமோ?’ எனின், பரத்துவத்தை நினைந்தார்,
தெளிந்திருந்து பிறர்க்கு உபதேசம் செய்தார்;
எளிமையினை நினைந்தார், ‘எத்திறம்!’ என்று மோஹித்துக் கிடக்கிறார்.
————–
ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –
சர்வ ஸ்மாத் பரன் என்று தொடங்கி அனுகூலித்து உஜ்ஜீவிப்பார்க்கு உஜ்ஜீவிக்கவுமாம் ஆயிற்று அவதாரம் தான் இருப்பது
என்னும் அளவும் ஸங்க்ரஹம் -மேல் விஸ்தாரம்-
பல பிறப்பாய் ஒளி வரும் இயல்வினன் -என்றத்தைக் கடாக்ஷித்து சங்கதி –
இரு கை முடவன் என்றது இரு கையாலும் முடவன் -எழுந்து இருக்கவும் மாட்டாதவன் –
பற்றிலன் ஈசனும் என்கிற பாட்டில் -ஆஸ்ரயித்தால் அவன் அவாப்த ஸமஸ்த காணக்காண சர்வேஸ்வரன் -நமக்கு முகம் கொடுத்து
நம்மோடு கலசி இருக்குமோ என்கிற சங்கையிலே அவன் அப்படி இருக்கும் என்றார்
இங்கே சர்வேஸ்வரனாய் இருக்கிறவனை நாம் ஆஸ்ரயிக்கக் கூடாது என்கிற சங்கையிலே
அவன் ஸூலபன்-என்று பரிஹரிக்கிறார் என்று பேதம் –
அவஜா நந்தி மாம் மூடா மானுஷீம் தனுமாஸ்ரிதம் பரம் பாவமஜா நந்த -என்று சிலர் அவமதி பண்ணிக் கொண்டு போகைக்கும்
மஹாத்மா நஸ்து மாம் பார்த்த தேவீம் ப்ரக்ருதிம் ஆஸ்ரிதா-பஜந்த்ய அநன்ய மனாசோ ஞாத்வா பூதாதி மவ்யயம் என்று சிலர்
அனுகூலித்து உஜ்ஜீவிக்கைக்கும் அடி எது என்கிற சங்கையிலே –
ந மாம் துஷ்க்ருதிநோ மூடா பிரபத்யந்தே நாரதமா-மாயயா அபஹ்ருதா ஞானா ஆஸூரம் பாவம் ஆஸ்ரிதா என்கிறபடியே
அவர்கள் பாக்ய ஹானியும்
யேஷாம் த்வந்தகதம் பாப்பம் நராணாம் புண்ய கர்மணாம் தே த்வந்த்வ மோஹ நிர்முக்தா பஜந்தே மாம் த்ருட வ்ரதா-என்கிறபடியே
அவர்கள் பாக்ய அதிசயமும் அடி என்கிறார் –
இந்த அர்த்தத்தை இரண்டு த்ருஷ்டாந்தங்களாலே தர்சிப்பிக்கிறார்
வேத நல் விளக்கு என்றது வேதங்களுக்கு நிரதிசய பிரகாசகமான தீபம் என்றபடி -திரு வேங்கடமுடையானை சொன்னவாறு –
ஆயர் குலத்திலே ஆவிர்பவித்த மணி தீபம் –குணங்கள் இடைச்சேரியிலே அத்யுஜ்ஜ்வலமான படி —
ஆதித்யனுடைய குலத்துக்கு அத்விதீயமான விளக்கு – ஆதித்யனைப் போலெ இரவு கலாசாதே அத்விதீயமான தேஜஸ்ஸாய் வந்து உதித்து –
பலகாலும் பஜியுங்கோள்-என்றது –
வீடுடை யானிடை வீடு செய்ம்மினே என்றும் இறை சேர்மினே -என்றும் அந்நலம் புக்கு -என்றும் இறை பற்றே-இத்யாதிகளைப் பற்ற-
கண்டால் அல்லது என்றது – பயபக்தி ரூப ஞானம் தரிசன சமா நா காரா பண்ணமானால் அல்லது –
காண விரகில்லை -மோக்ஷ தசையில் பகவத் அனுபவ ரூபா பலம் வர விரகில்லை-என்றபடி –
கண்டால் அல்லது பஜிக்க விரகு இல்லை -பஜித்தால் அல்லது காண விரகில்லை-என்றது
தரிசன சமானாகாரமான பக்தி உண்டானால் அல்லாதது இவன் பஜித்தானாக விரகு இல்லை –
இப்படிப்பட்ட பஜனத்தைப் பண்ணினால் அல்லது ப்ராப்ய சித்தி உண்டாகாது என்று தாத்பர்யம் –
தஸ்மிந் த்ருஷ்டே பராவரே -பராவரே -அஸ்மதாதிகளைப் பற்ற பரர்களான ப்ரஹ்மாதிகளைத் தனக்கு சேஷ பூதர்களாக உடையவன்
பர பக்தி யாவது -சாஸ்த்ராதி முகேன அறிந்த விஷயத்தை இப்போதே பெற வேணும் என்கிற இச்சை –
பர ஞானமாவது -ப்ரத்யக்ஷ சாமானாகாரமான மானஸ அனுபவம்
பரம பக்தி யாவது -விஸ்லேஷ அஸஹத்வம் –
பயபக்திர த்ருஷ்டார்த்த ப்ரத்யக்ஷாபி நிவேசனம் -பர ஞானந்து தஸ்யைவ சாஷாத்கார பரிஸ்புட –
புநர் விஸ்லேஷ பீருத்வம் பரமா பக்தி ருச்யதே -என்னக் கடவது இ றே
இனி நித்ய ஸூரிகளுடைய பரபக்தி பர ஞான பரம பக்திகளாவது
உத்தர உத்தரம் அனுபவ இச்சை -பரபக்தி -அனுபவம் பர ஞானம் -அகலகில்லேன் என்கிறபடியே விஸ்லேஷ அஸஹத்வம் பரம பக்தி –
அவதாரம் -இச்சா ஹேது-இச்சா க்ருஹாதீபிமதோரு தேஹ -அஜோ அபிசன்-ஸ்லோகத்தை உட்கொண்டு -அருளிச் செய்கிறார் –
இவனுக்காக தான் பிறந்ததாகையாலே இறை என்கிறது
பரத்வாபேஷயா ஸுலப்யமே ஈடுபடுத்தும் ஆகையால் எத்திறம் என்று மோஹித்தார்
——————
எம்பெருமானுடைய எளிமையினை உபதேசிக்கப் புக்கு, அவன் வெண்ணெய் களவு கண்ட சரித்திரத்தில்-
நவநீத ஸுர்ய சாரித்ரத்திலே – அழுந்துகிறார்.
பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினொடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே! —1-3-1-
பத்து-
பக்தி. ‘பத்து என்பது பத்தியைக் காட்டுமோ?’ என்னில்,
‘எட்டினோடு இரண்டு எனுங் கயிற்றினால் மனந்தனைக் கட்டி’ என்னக் கடவது இறே !
ஆகையாலே, பத்து என்று பத்தியைச் சொல்லுகிறதாகும்.
அது தன்னிலும் பரபத்தியை அன்று இங்குச் சொல்லுகிறது; –
பக்தி உபக்ரம மாத்ரத்தையே -பத்தியின் தொடக்கத்தைச் சொல்லுகிறது.
‘பத்தியின் தொடக்கம் என்று இதனை நியமிப்பார் யார்?
அதனுடைய-சரம அவஸ்தையை – முடிவான எல்லையினைக் காட்டினாலோ?’ என்னில்,
அஃது ஒண்ணாது; ‘என்னை?’ எனின்,
இப்போது இங்குச் சொல்லிக் கொண்டு போருகிற இது, குணப் பிரகரணம் ஆகையாலும்,
சர்வேஸ்வரனுக்கு ஓர் -உத்கர்ஷம் -ஏற்றஞ்சொல்லுகை இப்போது இவர்க்கு -அபேக்ஷிதம் -விருப்பம் அல்லாமையாலும்,
தம் தாமை ஒழியச் செல்லாதாருக்கு ஸ்நேஹிக்குமது அல்லாதாருக்கும் உண்டாகையாலும்
(தம்மையே நம்பி வந்து அடைந்தவர்களிடத்தில் தாமும் அன்புடன் இருத்தல் ஏனையோர்க்கும் உண்டு ஆகையாலும்,)
மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சன -( ‘நண்பன் என்ற பாவனையைக்கொண்டு வந்த
இவ்விபீடணனை நான் ஏற்றுக்கொள்ளாது விடமாட்டேன்,’ )என்னுமவன் ஆதலானும்,-
உபக்ரம மாத்ரத்தையே – பத்தியின் தொடக்கத்தையே சொல்லிற்றாகக் கடவது
மேலும்,ஆஸாலேசம்- ஆசை சிறிது உடையார்க்கும் தன்னைக் கொடுப்பதாக-பகவத் யுக்தியும் யுண்டாயாய் இருந்தே ஆதலானும்,
‘எதிர் சூழல் புக்கு’ என்றும்,
‘என்னின் முன்னம் பாரித்து’ என்றும் விலக்காமை தேடித் திரிவான் ஒருவன் ஆதலானும் மேலதே பொருள்.
உடை-
இந்த அப்ரதிஷேத அத்வேஷ – விலக்காமை பகையாமை மாத்திரத்தையே- கனத்த உடைமையாகச் சொல்லுகிறார்.
(உடைமை – செல்வம்) ‘இவை கனத்த உடைமை ஆகுமோ?’ எனின்,
இவ் வுலகில் இறைவனிடத்தில் பத்தியினைச் செலுத்துகின்றவர்களை‘விண்ணுளாரிலும் சீரியர்’ என்கிறபடியே,
நித்திய சூரிகளைக் காட்டிலும் கனக்க நினைத்திருக்கும் பகவானுடைய அபிப்பிராயத்தாலே சொல்லுகிறார்.
‘இறைவன் நினைத்திருப்பானோ?’ எனின், இவர்கள் பக்கலிலே இவ்வளவு உண்டானால், பின்னை ‘
இவர்களுடைய பாரத்துக்கு எல்லாம் நானே கடவன்,’ என்று இருப்பவன் இறைவன்;
மேலும் இராவண பவனத்தை விட்டு ஆகாசத்தில் கிளம்பின போதே ஸ்ரீவைஷ்ணவ லக்ஷ்மி குடி கொண்டபடியினால் அன்றோ,
அந்தரிக்ஷ கத ஸ்ரீ மான் (விபீடணனை, ‘ஆகாயத்தை அடைந்த ஸ்ரீமான்’) என்றார்?
லஷ்மனோ லஷமே சம்பன்ன (‘இலக்குமணன் லக்ஷ்மியால் நிறையப் பெற்றவன்’ )என்றார் இளைய பெருமாளை.
இது அன்றோ இவனுக்கு நிலை நின்ற ஐசுவரியம்;
இத்தைப் பற்ற ‘உடை’ என்கிறார். (இது உடைமை என்ற சொல்லின் விகாரம்.)
அடியவர்க்கு –
‘வெறுப்பு – இன்மை மாத்திரம் கொண்டு ‘அடியவர்’ என்னலாமோ?’ எனில்,
இங்கும் பகவானுடைய அபிப்பிராயத்தாலே ‘அடியவர்’ என்கிறார்.
த்வயி கிஞ்சித் சமாபன்னே கிம் கார்யம் சீதயா மம (‘உனக்கு நலிவு சிறிது வந்து இருப்பின்,
சீதையால்தான் எனக்கு என்ன பயன்?’ )என்று, இன்று கிட்டிற்று ஒரு குரங்கை,-
நித்ய ஆஸ்ரிதையான – என்றும் தன்னையே அடைந்திருக்கிற -பிராட்டிக்கும் அவ்வருகாக நினைத்தான் அன்றோ!
ஆதலால், இறைவனுக்கு-சேஷ பூதராய் – அடியவர்களாய் அதிசயத்தைப் பண்ணுகிறவர்கள்
ஒரு திருவடி, ஒரு திருவனந்தாழ்வான் அல்லர்;
இங்கு, இவ் விலக்காமையினை யுடையவர்களே யாவர். ‘காரணம் என்னே?’ எனின்,
அவர்கள் உள்ள குணத்தை அனுபவித்திருப்பவர்கள், அத்தனையே யாம்;
குணம் நிறம் பெறுவது இவர்கள் பக்கலில் அன்றே!
எளியவன் –
அவர்கள் பாவத்தைப் போக்குதல், புண்ணியத்தைக் கொடுத்தல், தன்னைக் கிட்டலாம்படி இருத்தல் செய்தல் அன்றிக்கே,
அவர்கள் இஷ்ட விநியோக அர்ஹமாய் – விரும்பியவாறு செய்துகொள்ளும்படி தன்னை ஆக்கி வைப்பவன்.
அதாவது, தன்னை ஒழிந்தது ஒன்றைக் கொடுத்தல், தான் இருக்குமிடத்தில் அவர்களை அழைத்துக் கொடுத்தல் செய்யான்;
இமவ் ஸ்ம முனி சார்த்தூல கிங்கரவ் சமுத்பஸ்திதவ் -(‘விஸ்வாமித்திர முனிவரே, உம்மைச் சேர்ந்து சரணம் அடைந்தவர்களாய்
இருக்கிறோம் நாங்கள்; ஆணை இட்ட காரியங்களைச் செய்தோம்; இனி எந்தக் காரியங்களைச் செய்யவேண்டும்?
விரும்பும் காரியத்தைக் கட்டளை இடுங்கள்,’ )என்கிறபடியே,
‘நான் உங்கள் அடியான்; என்னை வேண்டினபடி ஏவிக் காரியங்கொள்ளுங்கள்,’ என்று நிற்பான் என்றபடி மற்றும்,
பரம் பிரம்மா பரம் தாம இத்யாதி (‘மேலான மோக்ஷத்தையுடையவன், பாவங்களை அழிக்கின்றவன், அழிவு அற்றவன்,
ஒளி உருவானவன், பிறப்பு இல்லாதவன், எங்கும் நிறைந்தவன்’ )என்று இவை முதலாக
இறைவனைப் பற்றி பீஷ்மாதிகள் கூறிக்கொண்டிருத்தலைக் கேட்டு அறிவு மிக்கிருந்தான் ஆதலின்-
‘நீ ஒருவன் பத்திக்கு எளியவன் ஆவது என்?’ என்று கேட்க,
பக்த்யா த்வன் அநந்யயா சக்யா-(‘அருச்சுனா! வேறு ஒன்றால் அன்றிப் பத்தியினால் மட்டும் அடையும்படி இவ்விதமாக இருக்கிறேன். )
அதாவது-‘ஒருவன் கறுத்திருக்க ஒருவன் சிவந்திருக்கிறபடி கண்டாயே?
அப்படியே எனக்கும் இது நிலை நின்ற தன்மை,’ என்றான் அன்றே?’ என்றபடி.
‘நன்று; பத்திக்கு எளியன் ஆனாலும், ஸ்வதந்தரன் ஆகையாலே சில சமயங்களில் அரியனாகவும் இருக்கலாமே?’ எனின்,
ஸார்வ பவ்மனான ராஜபுத்ரன் -உலகங்களை எல்லாம் ஆளும் அரசபுத்திரன் ஒருவன்,-
ஷாம காலத்திலேயே அல்ப பொருளுக்காக – ஒரு கால விசேடத்தில் சிறிய பொருளுக்காக – அடிமைப்படுவானாயின்,
பின், தன் செல்வக்கிடப்புக் காட்டி மீள ஒண்ணாதது போன்று,
சர்வேஸ்வரனும்-பக்தி நிஷ்டனுக்கு – பத்தியில் நிலை நின்றவனுக்குத் தன்னை அறவிலை செய்து கொடுத்தால்,
பின்னை, மேன்மை காட்டி அகலமாட்டான்;
கழுத்திலே ஓலைக்கட்டித் ‘தூது போ’ என்னலாம்படி தன்னைக் கையாள் ஆக்கி வைக்கும் .
பக்தி க்ருத்தோ ஜனார்த்தன (‘மக்கள் செய்யும் பத்தியினால், அவர்கட்குத் தன்னை அறவிலை செய்து கொடுக்கின்றான் இறைவன்;
அவ்விறைவனாகிய ஜனார்த்தனனே அவர்கட்கு எப்பொழுதும் கையாளாக இருக்கின்றான்,’) என வருதலும் இங்கு ஓர்தல் தகும்.
‘பத்துடை அடியவர்க்கு எளியவன்’ எனவே, பத்தி இல்லாதார்க்கும்-உகாவாதாருக்கும் எளியனாக இருப்பனோ?’ எனின்,
இரான் என விளக்குகிறார் மேல்.
பிறர்களுக்கு அரிய வித்தகன்-
பிறர்களாகிறார், ‘இவனைக் கொண்டு காரியம் கொள்ளோம்’ என்று இருக்குமவர்கள்.
வித்தகன்-
ஆச்சரியப்படத் தக்கவன். ‘
இங்கு ஆச்சரியப்பட வேண்டியது என்?’ என்னில்,
யசோதை முதலியவர்கட்கு எளியனாய் இருந்த அந் நிலையில் தானே,
பூதனை சகடாசுரன் இரட்டை மருத மரங்கள் முதலியவர்கட்கு-அநபவீயனாய் -அவமதிக்க முடியாதவனாய் இருத்தல்.
இன்னமும் -பள்ளி கொண்டு அருளா நிற்கச் செய்தே அருச்சுனனும் துரியோதனனும் கூடவர,
அருச்சுனனுக்குத் தன்னைக் கொடுத்து, துரியோதனனுக்குப் பங்களத்தைக் கொடுத்துவிட்டான் அன்றே?
நம் பெரியோர்கள் எம்பெருமானையே உய்வதற்கு உரிய நெறியாகப் பற்ற,
அல்லாதார்-அசேதன க்ரியா கலேபங்களை – தாம் செய்யும் கருமங்களே பயன்களைக் கொடுப்பனவாக நினைந்து,
அக் கருமத் தொகுதிகளை மேற்கோடலைப் போன்றது ஒன்றாகும் -துரியோதனன் நிலை –
ஸ்ரீ ராமாவதாரத்திலும் இராவணன்-ச பரிகரனாய்- படைகளுடன் கூடினவனாய்க் கொண்டு எடுக்கப்புக்க இடத்தில்
நெஞ்சிற் பகையாலே எடுக்க மாட்டிற்றிலன்;
திருவடி தனியனாய் இருந்தும் நெஞ்சில் செவ்வையாலே கருமுகை மாலை போலே எடுத்து ஏறிட்டுக் கொண்டு போனான்;
இங்ஙன் அன்றாகில் ‘இராவணனுக்குக் கனக்க வேண்டும்’ என்றும்,
‘திருவடிக்கு நொய்தாக வேண்டும்’ என்றும் அன்றே? ஆதலால், பொருள் தன்மை இருக்கும்படி இது.
ஹிமவான் மந்தர மேரு (‘இமயமலை மந்தரமலை மேருமலைகளையும், வசிக்கின்ற பொருள்களோடு
மூன்று உலகங்களையும் இரு கைகளால் பெயர்த்து எடுக்க முடியும்;)
போர்க்களத்தில் பரதனுக்கு இளையவன் பெயர்த்து எடுக்கக் கூடாதவன்,’
சத்ரூணாமப்ர கம்ப்யோ அபி லகுத்வ மகமத் கபே (‘இராவணன் முதலிய பகைவர்களால் பெயர்த்து எடுக்கவும் கூடாதவனாக இருந்த
இலக்குமணன், தூய்மையான மனமும் பத்தியும் பொருந்திய அனுமான் குரங்காய் இருந்தும் எளிதாக எடுக்கத் தக்கவன் ஆனான்,’ )
மலர் மகள் விரும்பும் –
இவ் விரண்டுக்கும் அடி இவளுடைய சேர்த்தியே.
புஷ்பத்தில் பரிமளம் – மலரில் மணம் -போலே-மலரை இருப்பிடமாக வுடையளாய்,
அதிலே மணந்தான் ஒருவடிவு கொண்டாற்போலே இருப்பாளாய், நாட்டார் மணத்தை விரும்புவார்களாகில்,
அந்த மணமும் ‘தண்ணீர் தண்ணீர்’ என்னப் பிறந்தவன்,
நம் அரும்பெறல் அடிகள் –
பெறுதற்கு அரிய ஸ்வாமிகள்.
பெரிய பிராட்டியார் விரும்பும்படி இருக்கை போலே காணும் அறப் பெரிய இறைவனுக்கு இலக்கணம்.
ஹ்ரீச்ச தே லஷ்மீச் ச பத்ந்யவ் ( ஸ்ரீதேவியும் என மனைவியர் இருவர்’ )எனக் கூறப்பட்டுள்ளது அன்றே?
அப்ரமேயம் ஹி தத் தேஜ( ‘ஜனகனுடைய குலத்தில் பிறந்த சீதை விரும்பும் கணவனாக எவன் இருக்கிறானோ,
அவனுடைய திறல் வலி அளி முதலிய குணங்கள் அளவிட்டு அறிய முடியாதன,’ )என்பது ஸ்ரீராமாயணம்.
நம் அரும்பெறல் அடிகள் – நாராயண அநுவாகாதிகளோடே சேர, அந்தப் பிரமாணப் பிரசித்தியைப் பற்ற,
‘உளர் சுடர் மிகு சுருதியுள்’ என்றார் முன்னர்;
அந்தச் சுருதியுள் ‘உனக்கு பூதேவியும் அங்குக்கூறிய அந்த இலட்சுமி சம்பந்தத்தைத் தாம் அங்கீகரித்தமை தோன்ற,
‘மலர் மகள் விரும்பும் நம் அடிகள்’ என்கிறார் இங்கு.
இனி, கீழ்ச் சொன்ன எளிமையை உபபாதிக்கிறார் – விளக்குகிறார் மேல்
மத்துறு. . . எத்திறம்
மந்தரத்தைப் பிடுங்கி, கடலில் நடு நெஞ்சிலே நட்டு, நெருக்கிக் கடைந்து, வெளி கொடு வெளியே
தேவர்களுக்கு அமுதைக் கொடுத்து விட்ட பெருந்தோள்களை யுடையவன் அன்றோ
இப்போது ஆயர் சேரியிலே வந்து பிறந்து, வெண்ணெய் களவு காணப் புக்கு, கட்டுண்டு அடியுண்டு நிற்கிறான் என்கிறார்.
மத்துறு கடை வெண்ணெய் –
தயிர்ச் செறிவாலே மத்தாலே நெருக்கிக் கடையப்பட்ட வெண்ணெய்.
கடை வெண்ணெய் என்பது, முக்கால வினைத் தொகை.
‘முக் காலத்திலும் வெண்ணெய் கடைதல் உண்டோ?’ எனின்,
‘முப்போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெய்’ என வருதலால் உண்டு என்க.
முக் கால வினைத்தொகை யாயினும், நிகழ் காலத்தில் பொருள் சிறப்புடைத்து;
கடையா நிற்கையில், பசியராய் இருக்குமவர்கள் சோறு சமையப் பற்றாமல்
‘வெந்தது கொத்தையாக வாயில் இடுமாறு போன்று, கடைவதற்குள் பொறுக்காமல்
நடுவே அள்ளி அமுது செய்த படியைச் சொல்லுகிறார்,’ என்று திருக் குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பார்.
களவினில்-
களவு செய்யும் பராக்கில் நிழலிலே ஒதுங்கிச் சாபலத்தாலே அள்ளி அமுது செய்தான் போலே காணும் –
களவினில்-
களவிடையாட்டத்தில் -சமயத்தில்; களவு செய்யத் தொடங்குஞ்சமயத்திலே அகப்பட்டானாதலின், ‘களவினில்’ என்கிறார்.
உரவிடை யாப்புண்டு –
மார்விடையில் கட்டுண்டு, உரம் – மார்பு; இடை-ஏழனுருபு.
‘பொன் பெயரோன் தனது உரம் பிளந்து’ என்ற இடத்து ‘உரம்’ இப்பொருட்டு ஆதல் காண்க.
‘பெரிய பிராட்டியார் நெருக்கி அணைக்கும் மார்வை யன்றே கயிற்றாலே நெருக்கிக் கட்டக் கட்டுண்டான்?’ என்பார்,
‘உரவிடையாப்புண்டு’ என்கிறார்:
அன்றியே – ‘மிடுக்கையுடைய ரிஷபம் போன்று இருக்கின்றவன் கட்டுண்டான்,’ என்று பொருள் கூறலுமாம்.
உரம் – மிடுக்கு; விடை – ரிஷபம்
உரம் என்பதனை ‘உதரம்’ என்ற சொல்லின் விகாரமாகக் கொண்டு ‘வயிற்றினிடத்தில் கட்டுண்டு’ என்று
பொருள் கூறலும் ஒன்று. உதரம் – வயிறு.
பிள்ளை பெற்றுத் தாமோதரன் என்று பெயரிடும்படி அன்றே கட்டுண்டான்?
தாம் நா சைவோதரே பத்த்வா ப்ரத்யபத்நா துலூகலே ( ‘யசோதையானவள், தான் தாயான பரிவு தோற்ற இவனைக்
களவிலே கண்டுபிடித்து, தாம்பாலே ஓர் உரலோடே அடுத்துக் கட்டி மறு கண்ணியும் பொத்தினாள்) பொத்தி,
யதி சக்நோ ஷி கச்ச த்வமதி சஞ்சல சேஷ்டித இத் யுக்த்வாத நிஜம் கர்ம சா சகாரா குடும்பி நீ -என்றும் சொல்லுகிறபடி
‘துரு துருக்கைத் தனம் அடித்துத் திரிந்த நீ வல்லையாகில் போய்க் காணாய்!’ என்று உறுக்கி விட்டால் போக மாட்டாதே இருந்தான் என்றபடி.
‘ஆயின், பராஸ்ய சக்திர் விவிதை ஸ்ரூயதே (இப்படிப்பட்ட இறைவனுடைய சீரிய சக்தி பல படியாகக் கேட்கப்படுகின்றது)-
வரம்பில் ஆற்றலையுடைய இறைவனை ‘வல்லையாகில் போய்க் காணாய்’ என்கைக்கு அடி எது?’ எனின், –
இவளுக்கு எளியதான படியினால் சொல்லுகிறாள்.
எல்லாவற்றுக்கும் காரணமான தான் அன்றோ இப்படிக் கட்டுண்டு இருக்கிறான்?
பிரமன் முதலியோரைத் தன் சங்கற்பத்தாலே கட்டுவதும் விடுவதும் ஆகின்றவன் அன்றோ
இப்போது ஓர் அபலை கையால் கட்டுண்டிருக்கின்றான்? ‘ஆயின், இப்படிக் கட்டுண்கைக்குக் காரணம் யாது?’ எனின்,
த்யக்த்வா தேகம் புனர் ஜென்ம நைதி மாமேதி ‘(எனது அவதாரத்தையும் அவதாரத்தில் நிகழ்த்தும் நிகழ்ச்சிகளையும்
தெய்வத்தன்மை வாய்ந்தவை என்று எவன் அறிகிறானோ அவன் இச் சரீரத்தை விட்டால்
வேறு சரீரத்தை அடைகிறான் இல்லை; என்னையே அடைகிறான்,’) என்கிறபடியே,
நம்முடைய கட்டை அவிழ்க்க இறே தான் கட்டுண்டு இருந்தது –
உரலினொடு இணைந்து இருந்து-
உரலுக்கு ஒரு –வியாபார ஷமதை உண்டாம் அன்று – தொழில் செய்யுந் தன்மை உள்ளதாயின்,
தனக்கு ஒரு தொழில் செய்யுந்தன்மை உள்ளது என்று தோற்ற இருந்தபடி.
ஏங்கிய –
உரலைக் காட்டிலும் வியாவ்ருத்தி – வேற்றுமை- இத்தனையே காணும். அதாவது,
அழப் புக்கவாறே ‘வாய் வாய்’ என்னுமே; பின்னை அழமாட்டாதே ஏங்கி இருக்கும் இத்தனை.
எளிவு-
எளிமை.
எத்திறம்-
பிரானே,
இது என்ன பிரகாரம்? இன்னம் மேன்மை தரை காணலாம்; நீர்மை தரை காண ஒண்ணாதாய் இருந்ததே!
‘உயர்வற உயர்நலம் உடையவன்’ என்கிற மேன்மையிலே போவேன் என்கிறார்.
நியாம்யனாய் -ஏவப்படுகின்றவனாய் இருக்கிற இருப்பில் நியந்தாவாய் ஏவுகின்றவனாய் இருக்கிற இருப்புப்
பேசக் கூடியதாய் இருந்தது என்றபடி.
பேசப் புக்க வேதங்களும் யாதோ வாசோ நிவர்த்தந்தே (‘அந்த ஆனந்த குணத்தினின்றும் மனத்தோடு வாக்குகள்
திரும்புகின்றனவோ?’) என்றதும் மேன்மையிலேயே;
‘நிலம் அன்று என்கைக்கும் நிலம் அன்று அன்றே நீர்மை? இவ்வெளிமை ஏனையோர் பக்கலிலும் காணலாமே?’ எனின்,
இத்தனை தாழ நில்லாமையாலே சம்சாரிகள் பக்கல் காண ஒண்ணாது; பரத்துவத்தில் இந்நீர்மை இல்லை.
இது என்ன பிரகாரம் -என்கிறார்
‘ஆயின், உலகத்தில் களவு காண்பாரும் கட்டுண்பாரும் இலரோ? இவன் செயலுக்கு இத்தனை ஈடுபட வேண்டுமோ?’ எனின்,
பெரியவன் தாழ்ச்சி ஆகையாலே பொறுக்க மாட்டுகின்றிலர்.
——————
ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –
வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு எத்திறம் -என்றதைக் கடாக்ஷித்து அவதாரிகை –
எட்டினோடு இரண்டு -ஸ்ரீ மத் அஷ்டாக்ஷரம் த்வயஞ்ச –
ஏதத் உபய ஜன்ய ஞானம் -விஷய வைலக்ஷண்யாதிந ப்ராவண்ய ரூபமேவ ஹி பவதி -பக்தி உபக்ரமம் என்று
அப்ரதிஷேத அத்வேஷ மாத்ரங்களைச் சொல்லுகிறது-
எதிர் சூழல் -எனக்கு அபிமுகனாகைக்கு ஈடான சூழ்ச்சியோடே அவதாரம் –
என்னில் முன்னம் பாரித்து -எனக்கு முன்னே தான் உள்ள அன்றே தொடங்கிப் பாரித்து-
ஸ்ரீ வைஷ்ணவ லஷ்மி -ஞான பல வைராக்யங்கள் –
உத்பபாத கதா பாணிஸ் சதுர்பிஸ் சசிவைஸ் ஸஹ-அப்ரவீச்ச ததா வாக்கியம் ஜாதக்ரோதோ விபீஷண
அந்தரிக்ஷ கத ஸ்ரீ மான் பிராதா வை ராக்ஷஸாதிபம -யுத்த -16-
சர்வ பிரியா கரஸ் தஸ்ய ராம்ஸ்யாபி சரீரித லஷ்மனோ லஷ்மி சம்பன்நோ பஹி பிராண இவாபர -பாலா -18-
அவஸ்துப்ரஸ்தா வேஷ்வ சரம பூத் வஸ்து யதஹம் ச ஏவாஹம் சத்சூ வ்யகணிஷி யதீயைர் வர குணை-
நமஸ் தஸ்மை ராமாவரஜமுநயே மஹ்யமதவா மயா யஸ்மாத் தஸ்யா ப்ரதிக்ஷத தயாத்யா வர குணா -என்று
ஸ்ரீ எம்பார் அருளிச் செய்த ஸ்லோகத்தை ப்ரசாதிப்பர் –
பிறர் என்றது -கீழ்ச் சொன்ன அத்வேஷம் இல்லாத ஸ்வ யத்ன பரரை-
இரண்டுக்கும் என்றது -எளிமைக்கும் அருமைக்கும்
இவளோட்டைச் சேர்த்தியே எளிமைக்கு அடி
மலர்மகள் -மகள் என்று உத்பத்தி தோன்றுகையாலே -பரிமளத்தின் உடைய பரிணாமம் போலே இருக்கிறாள் என்று விவஷிதம் –
பரிமளம் தான் தண்ணீர் தண்ணீர் என்னப் பிறந்தவள் -என்று சர்வ கந்தனான சர்வேஸ்வரனைச் சொல்லுகிறது என்றுமாம்
ஸ்ரீ லஷ்மீ விசிஷ்டனே சர்வாதிகன் என்பதற்கு பிரமாணங்களை அருளிச் செய்கிறார்
கடை வெண்ணெய் -வர்த்தமான நிர்த்தேசத்தால் என்றபடி
முப்போதும் -சிறு காலையும் உச்சியும் அந்தியும்
உரவிடை ஆப்புண்டு -மூன்று அர்த்தங்கள் -நெஞ்சு -மிடுக்கு -உதரம் இடைக்குறை
இணைந்து இருந்து -அசேதனமான உரலோடே சமமாய் இருந்தது என்றபடி –
லோக விலக்ஷணனான இவன் தாழ நிற்கை சம்சாரிகளுடைய உஜ்ஜீவன அர்த்தமாய் இருக்கும் என்கை –
——————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply