ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை – -1-3-2-

‘எத்திறம்’ என்ற ஸ்ரீ ஆழ்வார் ஆறு மாதம் மோஹித்துக் கிடந்தார் என்பது பிரசித்தம் அன்றோ?
இவர் மோஹித்துக் கிடக்க,
ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ பிராட்டியும் பள்ளி கொண்டருளின இடத்தை ஸ்ரீ குகப் பெருமாள் நோக்கிக் கொண்டு கிடந்தாற்போன்று,
ஸ்ரீ மதுரகவி முதலான பெரியோர் அனைவரும்-பலிதமான வ்ருக்ஷத்தை – பழங்கள் நிறைந்த மரத்தைப் –
பஷி ஜாதங்கள் -பறவைக் கூட்டங்கள் மொய்த்துக் கொண்டு கிடக்குமாறு போன்று, இவரைச் சூழ்ந்து கிடந்தார்கள்.
பெருமாளும் பிராட்டியும் துயின்று இடத்தை நோக்கி இருந்த ஸ்ரீகுகப் பெருமாள் பசியர்க்குத் தாந்தாம் உண்ணும்
உணவினைப் பகுந்து இடுவாரைப் போன்று, அங்கு வந்த ஸ்ரீ பரதாழ்வானுக்குத் தாம் நோக்கிக் கொண்டிருந்த இடத்தைக் காட்ட,
அவ் விடத்தைக் கண்டவாறே சத்ருனோ அனந்தர ஸ்த்தித ( ‘தொட்டால் முடிந்துவிடுவானோ!’ என்று சத்துருக்கனன் எண்ணும்படி )
என்று மோஹித்துக் கீழே வீழுந்த ஸ்ரீ பரதாழ்வானைப் போன்று, மோஹித்துக் கிடந்த இவர்,
சிரேண சம்ஜ்ஞாம் பிரதி லப்ய சைவ விசிந்தயாமாச விசால நேத்ரா ( விசாலமான கண்களையுடைய பிராட்டி
பல நாழிகைகள் கழித்து மூர்ச்சை தெளிந்து, பின்னர்ச் சிந்தித்தாள்,’) என்பது போன்று-
அனுபவிதாக்கள் பாக்யத்தாலே – பெரியோர்களுடைய நல் வினைப் பயனால் காலம் உணர்த்த உணர்ந்து,
‘நான் இங்குச் சொல்லியது என்?’ என்று கேட்டார்.
ஆயின், அங்கு அனுபவிக்கும் பெரியோர் உளரோ?’ எனின்,
‘நல்லார் நவில் குருகூர்’ அன்றே? ஆதலால், அங்குள்ள சத்துக்கள் – பெரியோர் அனைவரும் இவரைப் பற்றிப் படுகாடு கிடந்தனர்.
கேட்டதற்குப் ‘பத்துடை அடியவர்க்கு எளியவன்’ என்று கூறி, அதனை விளக்குவதற்கு அதன் தொடர்ச்சியாக
‘மத்துறு கடைவெண்ணெய்’ என்பது முதலாகச் –ப்ரசக்த அனுபிரசக்தமாக -சிலவற்றைக் கூறி,
‘எத்திறம்’ என்று மோஹித்துக் கிடந்தீர், என்றார்கள்,
‘தப்பச் செய்தோம்;தப்பச் சொன்னோம் அழித்துச் சூளுறவு-ப்ரதிஜ்ஜை – செய்ய வேண்டும்,’ என்கிறார் இரண்டாம் பாட்டில்.
அதாவது,
பிறர்க்கு உபதேசம் பண்ணப்புக்குத் தாம் அனுபவித்தார் முதற்பாட்டில்;
இப் பாட்டுத் தொடங்கிப் பிறர்க்கு உபதேசம் செய்கிறார் என்றபடி.
மேல் பாட்டில் கூறிய எளிமையினை வகைப்படுத்தி அருளிச் செய்கிறார் இப்பாட்டில்.

———————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

பெரியவர்களுடைய ஸ்திதி கமந சயநாத் அவஸ்தைகள் எல்லாம் இவ்வாத்மாவுக்கு பகவத் பக்தி வர்த்தகங்களாய்க் கொண்டு
தஞ்சமாய் இருகையாலும் காமிநிகளுடைய வியாபாரங்கள் எல்லாம் காமுகருக்கு அவர்கள் இடத்தில் அபிநிவேசத்தாலே
போக்யங்களாய் இருக்குமா போலே இவ் வாழ்வார் பக்கல் தமக்கு உண்டான அபிநிவேசத்தாலே அவருடைய
மோஹ அவஸ்தையும் தமக்கு போக்யமாய் இருகையாலும் அதில் தமக்கு உண்டான ஆதார அதிசயம் தோன்றும்படி
அவர் மோஹித்த போது ஞாதாக்கள் எல்லாம் அவரை நோக்கிக் கொண்டு எழுந்து அருளி இருக்கும் பிரகாரத்தை
அருளிச் செய்வதாகத் திரு உள்ளம் பற்றி அதிஷ்டிக்கை அருளிச் செய்கிறார் –
இவர் இப்படி மோஹித்துக் கிடந்த ஆறு மாசமும் எறும்புகள் கடியாதபடி ஞாதாக்கள் நோக்கிக் கொண்டு இருந்த பிரகாரத்தை
ச நிதர்சனமாக அருளிச் செய்யா நின்று கொண்டு அதுக்கு ஹேதுவை அருளிச் செய்கிறார் –
பழுத்த மரத்தைப் பழத்தில் ஆசையால் பக்ஷிகள் சூழ்ந்து கிடைக்குமா போலே பகவத் ப்ரேமத்தாலே பரிபக்வமான இவர் பக்கல் நின்றும்
நமக்கு ப்ரேமம் உண்டாய் க்ருதார்த்தராக வேணும் என்று இவரை வளைத்துக் கொண்டு கிடந்தார்கள் என்கை —
ஸ்வ உஜ்ஜீவன அர்த்தமான அர்த்த விசேஷ அனுஷ்டான விசேஷ ஞான பக்தி வைராக்யாதி சித்த்யர்த்தமாக என்றபடி —
ரக்ஷண புருஷார்த்த லிப்சிஸைகளுக்காக இரண்டு த்ருஷ்டாந்தங்கள் —
ஸ்ரீ குகப்பெருமாள் ஆஸ்ரமத்தின் நின்றும் பெருமாள் புறப்பட்டு எழுந்து அருளினதுக்கும் அங்கு ஸ்ரீ பரதாழ்வான் எழுந்து அருளினதுக்கும்
மத்யே இருபத்திரண்டு நாள் வ்யவதானம் உண்டாய் இருக்கச் செய்தேயும்-
தத் சயன சிஹ்னங்களை அனுபவித்த போதே ஸ்ரீ குகப்பெருமாள் இவ்விடத்தை ரஷித்துக் கொண்டு இருந்தமை சித்தம் என்று கருத்து –

நல்லார் நவில் -ஆச்சார்ய விஷயத்தில் சேஷித்வ ரக்ஷகத்வாதிகளை ஏறிட்டு ஈஸ்வரனை
தத் சம்பந்த த்வாரா அனுபவித்துப் போரும் ஸ்ரீ மதுரகவிகள் போல்வார் –
தப்பச் சொன்னோம் -பத்துடை அடியவர்க்கு எளியவன் என்று சோபாதிகம் என்று தோன்றும்படி சொன்னோம் என்றபடி –
அழித்து ப்ரதிஜ்ஜை பண்ணுகையாவது -நிருபாதிகத்வம் தோன்றும்படி சொல்லுகை –
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் சர்வேஸ்வரனாய் இருக்குமவன் அவதரித்து சேதனகத அப்ரதிஷேதாதிகமும் அபேக்ஷியாதே
அபார காருண்யாதிசயத்தாலே எளிவருகையே ஸ்வ பாவமாக யுடையனாகிற பிரகார ஸஹிதமாகஅருளிச் செய்கிறார் இதில் –

—————–

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பு இல பல பிறப்பாய்
ஒளிவரும் முழுநலம் முதல் இல கேடு இல வீடாம்
தெளிதரு நிலைமை யது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரு மருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே–1-3-2-

எளிவரும் இயல்வினன் –
எளிமையை ஸ்வ பாவமாக – இயல்பாகவுடையவன்.
‘பத்துடை அடியவர்க்கு எளியவன்’ என்றார் மேல்;
தன்னிடத்து அன்புடையார் மாட்டுத் தானும் அன்புள்ளவனாய் இருத்தல் ஒரு குணம் அன்று
ஆதலின், அதனை மறுத்து, ஈண்டு ‘எளிவரும் இயல்வினன்’ என்கிறார்.
எல்லார்க்கும் ஒவ்வொரு காலத்தில் எளிமை கூடும்;
இவனுக்கு எளிமை ஸ்வரூபம் என்பதனைத் தெரிவிப்பதற்கு ‘எளிவரும் இயல்வினன்’ என்கிறார் என்றபடி.

நிலை வரம்பு இல –
இன்ன அவதாரம் இன்ன செயல் என்பது இல்லை;
‘நிலை இல, வரம்பு இல’ என ‘இல’ என்பதனை ‘நிலை’ என்பதுடனும் கூட்டி பூர்வர்கள் நிர்வாகம்
இனி, பட்டர் இவ்விரு பொருளையும் ‘நிலை இல’ என்பதன் பொருளாகவே கொண்டு,
‘வரம்பு இல’ என்பதற்கு, வேறு பொருள் அருளிச்செய்வர்.
அதாவது, ‘அவதரித்து எளியனாய் நின்ற நிலை தன்னிலே பரத்துவம் தோற்ற நிற்கிலும் நிற்கும்,’ என்று.
சாரதியை வேஷத்தோடே தேர்ப் பாகனாய்த் தாழ் நிற்கச் செய்தே ஸ்ரீ விஸ்வரூபத்தைக் காட்டியும்,
தான் புத்திரப் பேற்றின் பொருட்டுப் போகா நிற்கச் செய்தே கண்டா கர்ணனுக்கு மோக்ஷத்தைக் கொடுத்தும்,
ஏழு வயதிலே கோவர்த்தன மலையைத் தரித்துக்கொண்டு நின்றும் செய்தவை.
இத்தாற் பெறப்படுவது, ‘ஒன்றிலும் ஒரு நியதி இன்று; ரக்ஷணத்துக்கு -காப்பதற்கு உறுப்பாம் அத்தனையே வேண்டுவது;
ஏதேனுமாக அமையும் இவனுக்கு,’ என்கை.

பல பிறப்பாய்-
தெளிவுடைய தான் சொல்லும் போதும் பஹு நி ( ‘பல பிறவி’ )என்பன்;
யதா பூத வாதியான -உண்மையினைக் கூறும் -வேதங்கள் கூறும்போதும்-பஹு தா விஜாயதே
( பல வேறுபட்ட சாதிகளில் பிறக்கிறான்’ )என்று கூறும்;
அவன் கொடுத்த அறிவு கொண்டு சொல்லுவார்,‘பல பிறப்பு’ என்பர்.
பிறப்பாய் –
பரார்த்தமாக -பிறருக்காகத் தாழ நின்றோம் என்ற நினைவு சிறிதும் இன்றி,
அவ்வப் பிறவியின் தன்மைக்குத் தக்கவாறு புரை இன்றிக்கே இருப்பதால் -‘பிறந்து’ என்னாது ‘பிறப்பாய் ’ என்கிறார்.
‘ஆயின், பரத்துவ நினைவு சிறிதும் இன்றி இருந்தான் என்பதனை நாம் அறியுமாறு யாங்ஙனம்?’ எனின்,
ஆத்மாநாம் மானுஷம் மன்யே ( ‘என்னை நான் மனிதனாகவே நினைக்கின்றேன்;’ ) என்ற ஸ்ரீ ராமன் வார்த்தையாலும்,
அஹம் வோ பாந்தவ ஜாத ) நான் உங்கட்குச் சுற்றத்தவனாய்ப் பிறந்திருக்கிறேன்,’ என்ற ஸ்ரீகிருஷ்ணன் வார்த்தையாலும் அறிதல் தகும்.

ஒளி வரும் முழு நலம்-
அபஹத பாப்மாத்வாதிகள் -நீங்கின தீவினைகளையுடைத்தாய் இருத்தல் முதலிய தன்மைகள் ஜீவாத்மாவுக்கும் உண்டு இறே,
ஜென்ம நிபந்தமான -பிறவிகள் காரணமாக -திரோதானம் பிறவா நின்றது இறே –
அவற்றிற்கு மறத்தல் முதலிய தன்மைகளும்-விகாராதிகளும் – இன்பத் துன்பங்களும் உளவாம்;
இவன் தன்னைத் தாழ விட்டுப் பிறக்கப் பிறக்க, கல்யாண குணங்கள் புகர் – ஒளி பெற்று வாரா நிற்கும்.
‘ஆயின், இருவர்க்கும் பிறவி ஒத்து இருக்க, இறைவனுக்கு நற்குணங்கள் ஒளி பெறுகைக்குக் காரணம் யாது?’ எனின்,
ச உ ஸ்ரேயான் பவதி ஜாயமான ( ‘அவன் பிறந்தவனாய் நன்மையுடையவனாகவே இருக்கின்றான்,’ )என்கிறபடியே,
கர்மம் காரணமாகப் பிறக்கும் பிறவியாய் இருப்பின், பிறக்கப் பிறக்கப் புகர் அழியும்;
அனுக்ரஹம் -திருவருள் காரணமாக வருகிற பிறவி ஆகையாலே புகர் பெற்று வாரா நிற்கும்.
ச உ ஸ்ரேயான் (அவ் விறைவனே புகழை யுடையான்) என்றபடி.
‘அக் குணங்கள்தாம் இருக்கும்படி என்?’ என்னில்,

முதல் இல கேடு இல-
ஒரு நாள் வரையிலே தோன்றி ஒரு நாள் வரையிலே முடியுமவை அல்ல;
ஸ்வரூபத்தோடு-அந்தர்கதமாய் – சேர்ந்தவைகளாய் இருக்கின்றன.

வீடாம் தெளிதரும் நிலைமையது,
மோக்ஷமாகிற தெளிவு; பரம பதம். அதனைத் தரும் ஸ்வ பாவம் என்றும் ஒத்திருக்குமவன்.
அவன் இங்கே வந்து அவதரிக்கிலும் சோக மோஹங்களைப் பண்ணும் இவ்விடம்;
இவன் அங்கே செல்லினும் தெளிவைப் பண்ணும் அவ்விடம்; ஆதலால், ‘வீடாம் தெளி’ என்கிறார்.
‘தெளி விசும்பு’ என்னகே கடவது இறே
ஆயின், இக்குணம் ‘ஒளிவரும் முழுநலம்’ என்றதிற்புகாதோ?’ எனின்,
மோக்ஷத்தை அளிக்கும் இறைமைக் குணம் தனியே சொல்ல வேண்டுவது ஒரு குணம் ஆகையாலே சொல்லுகிறார்;
மேலும், அவதாரத்துக்குப் பயன் இதுவே அன்றோ?

முழுவதும் ஒழிவிலன்-
மேலே கூறிய இரண்டனையுங் கூட்டிச் சொல்லுகிறார்.
இறையோன்-
மேல் ‘வீடாம் தெளிதரு நிலைமையது ஒழிவிலன்’ என்றார்;
அவ்வீட்டினை அளித்தல் ஈஸ்வரனுக்கே உள்ளது ஒன்று ஆதலின்,
அதனைத் தெரிவிக்கும் பொருட்டு அதனை அடுத்து ‘இறையோன்’ என்கிறார்.
இனி, மேல் ‘பல பிறப்பாய்’ என்றாராதலின்,
அவ்வாறு பிறப்பினும், ஈஸ்வரத் தன்மையில் குறையாதே நிற்பான் என்பதனைத் தெரிவிக்கும் பொருட்டு
‘இறையோன்’ என்கிறார் என்னலும் ஆம்.

அளிவரும் அருளினோடு –
குளிர்ந்து பக்குவமான அருளோடே.
இனி, இதற்கு, ‘அருளால் வரும் அருளோடே’ என்று பொருள் கூறி,
‘அருளால் வரும் அருளாவது,நிர்ஹேதுகம் – காரணம் இன்றியே செய்யும் திருவருள்,’ என்று கூறலுமாம்.
அகத்தனன் –
ஆஸ்ரிதற்கு -அடியார்கட்குக் கழுத்திலே ஓலை கட்டித் ‘தூது போ’ என்னலாம்படி இருப்பான்.
புறத்தனன் –
அநாஸ்ரிதற்கு – அடியார் அல்லாதவருக்கு அந்நிலை தன்னிலே கிட்ட ஒண்ணாதபடி இருப்பான். அமைந்து –
இப்படிச் சமைந்து.

‘இறையோன், அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனனாய் அமைந்து, முதல் இல கேடு இலவாம்
ஒளிவரும் முழுநலம், வீடாம் தெளிதரு நிலைமையது முழுவதும் ஒழிவிலனாய்,
நிலை வரம்பில் பல பிறப்பாய், எளிவரும் இயல்வினன்’ என்று அந்வயம்-

——————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

ஈஸ்வரனோடு வேதங்களோடு ஆழ்வார்களோடு வாசி அற முடிவு காண ஒண்ணாமையைப் பற்ற-அருளிச் செய்கிறார் –
பல பிறப்பாய் ஒளி வரும் முழு நலம் -என்ற பத சேர்க்கையால் ஜீவ வ்யாவ்ருத்தியைக் காட்டுகிறார்
நலம் என்று ஜாதி ஏக வசனம் –
அவதார பிரதான ப்ரயோஜனத்வாதி பாவ மோக்ஷ பிரதத்வம்
அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே–விநத விவித பூத வ்ரத ரக்ஷைகதீஷே —
த்வத் ஆஸ்ரிதா நாம் ஜகாத் உத்பவ ஸ்திதி பிராணாச சம்சார விமோச நாதய-சம்சார விமோசனம் -மோக்ஷ பிரதத்வம் -என்றபடி
தெளி விசும்பு -தெளிவைத் தரும் பரமாகாசம் -வீடாம் தெளிதரும் இத்யாதியோடே கூட்டித் தாத்பர்யம்
அளி வரும் அருளினோடு -அளி -குளிர்ச்சியும் பக்வதையும்-கிருபை – –
நிர்ஹேதுகமாக பல பர்ய வசாயித்வம்-கிருபையால் வரும் கிருபையோடு -என்றபடி –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading