முடியானே -பிரவேசம் –
தேர் கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்கள் -என்று பிறந்த அபேக்ஷையானது மிகவும் உத்பூதையாய்-
அந்த அபேஷா அனுகுணமாகக் காணப் பெறாத வ்யஸனத்தினாலே அத்யந்தம் அவசன்னராய்க் கொண்டு
தம்முடைய சர்வ கரணங்களாலும் சர்வ பிரகாரத்தாலும் எம்பெருமானை அனுபவிக்க வேணும் என்று சொல்லிக் கொண்டு கூப்பிடுகிறார் –
—————————————————
முடியானேஎ! மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானேஎ! ஆழ்கடலைக் கடைந்தாய்! புள்ளூர்
கொடியானேஎ! கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில் நெடியானேஎ! என்று கிடக்கும்என் நெஞ்சமே.–3-8-1-
சர்வ லோகாதிபத்ய ஸூ சகமாய் -நிரதிசய தீப்தி யுக்தமாய் -அதி ரமணீய தர்சனமாய் இருந்த திரு அபிஷேகத்தாலே –அலங்க்ருதனாய்
ப்ரஹ்ம ஈஸா நாதிகளுக்கும் ஈஸ்வரனாய் வைத்து அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யனாய் ஆஸ்ரித ஜன சமீஹித நிவர்த்தகனாய் இருந்தவனே-
பொன்மலையின் மீமிசைக் கார் முகில் போலே பெரிய திருவடி திருத் தோளின் மேல் ஏறி அருளி இந்த லோகத்தில் வந்து தோன்றாய் -என்று
எம்பெருமானைக் காண ஆசைப்பட்ட போதே காணப் பெறாமையாலே குறைப் பட்டுக் கிடைக்கும் என் நெஞ்சம் -என்கிறார் –
——————————————
நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே! தண் இலங்கைக்கு இறையைச் செற்ற
நஞ்சனே! ஞாலம் கொள் வான் குறளாகிய வஞ்சனே! என்னும் எப்போதும் என் வாசகமே.–3-8-2-
ஆஸ்ரித சமீஹித விரோதி நிரசன சமர்த்தனாய் தத் சமீஹித நிவர்த்தன உபாயஞ்ஞனாய் இருந்த நீ நெஞ்சு உன்னை நினைக்க அருள் செய்தால் போலே
நானும் உன்னை நினைக்க அருள் செய்து அருள வேணும் என்று எப்போதும் அலற்றா நிற்கும் என் வாசகம் -என்கிறார்
————————————
வாசகமே ஏத்த அருள் செயும் வானவர் தம் நாயகனே! நாள் இளந் திங்களைக் கோள்விடுத்து
வேய் அகம் பால் வெண்ணெய் தொடு வுண்ட ஆன் ஆயர் தாயவனே! என்று தடவும் என் கைகளே.–3-8-3—
வானவர் தம் நாயகனாய் வைத்து வாசகமே ஏத்த அருள் செய்து அருளினால் போலே அபிநவ பூர்ண சந்த்ர கிரணம் போலே திரு முத்தின் ஒளி புறப்படும்படி
திருப் பவளத்தைத் திறந்து -வெண்ணெய் தொடு உண்ட உன்னுடைய அழகை நானும் ஏத்தும்படி அருள் செய்ய வேணும் என்று தடவும் என் கைகள் -என்கிறார் –
————————————————
கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை வைகலும் மாத்திரைப் போதும் ஓர் வீடு இன்றிப்
பைகொள் பாம்பு ஏறி உறை பரனே! உன்னை மெய்கொளக் காண விரும்பும் என் கண்களே.–3-8-4-
பைகொள் பாம்பு ஏறி உறை பரனே! உன்னை ஒரு க்ஷண மாத்ரமும் ஒழியாமே எப்போதும்
கைகளால் ஆரத் தொழுது மெய்கொளக் காண விரும்பும் என் கண்கள் -என்கிறார் –
———————————————
கண்களாற் காண வருங் கொல் என்று ஆசையால் மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல்
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்துத் திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே.–3-8-5-
மண் கொண்ட வாமனன் ஏறி யருள –மது பணம் பண்ணின வந்து பிளே களித்துக் கொண்டு செல்லும் பெரிய திருவடி மேலே
அவன் ஏறி யருளி வரும்படியைக் காண வேணும் என்றும் வரும் பொது பெரிய திருவடியினுடைய
அத் திருச் சிறகின் ஒலி கேட்க வேணும் என்றும் ஆசைப்படா நிற்கும் என் செவிகள் -என்கிறார் –
——————————————–
செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனியெனும் கவிகளே காலப் பண் தேன் உறைப்பத் துற்றுப்
புவியின் மேல் பொன் நெடுஞ் சக்கரத்து உன்னையே அவிவு இன்றி ஆதரிக்கும் எனது ஆவியே.–3-8-6-
உன்னுடைய கீர்த்திக் கவி என்னும் கனிகளை காலப் பண்ணாகிற தேனில் கலந்து என் செவிகள் ஆரத் துற்று பொன்னெடும் சக்கரத்து உன்னை
இந்த லோகத்திலே காண வேணும் என்று அவிவின்றி ஆதரிக்கும் எனது ஆவி -என்கிறார்
——————————————
ஆவியே! ஆரமுதே;என்னை ஆளுடைத் தூவி அம் புள்ளுடையாய்!சுடர் நேமியாய்!
பாவியேன் நெஞ்சம் புலம்பப் பல காலும் கூவியும் காணப்பெறேன் உன கோலமே.–3-8-7-
என்னுடைய தாரகமே-என்னுடைய போக்யமே-உன்னை விஸிலேஷித்து நான் அவசன்னனான இந்த தசையிலே நான் முடிவதற்கு முன்னே
இச் க்ஷணத்தில் வந்து என்னை அடிமை கொள்ளுகைக்காகப் பெரிய திருவடியை திவ்ய வாஹனமாக யுடையவனே
த்வத் ஸம்ச்லேஷ விரோதியான என்னுடைய வினை கடிகைக்காக எப்போதும் கை கழலா நேமியாய்
பாவியேன் நெஞ்சம் புலம்பப் பலகாலம் குவியும் காணப் பெறுகிறிலேன் உன் அழகை -என்கிறார் –
—————————————-
கோலமே! தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன நீலமே! நின்று எனது ஆவியை ஈர்கின்ற
சீலமே! சென்று செல்லாதன முன் நிலாம் காலமே! உன்னை எந்நாள் கண்டு கொள்வனே?–3-8-8-
கோலமே! தாமரைக் கண்களை யுடையதொரு ஓர் அஞ்சன நீலமே!–இப்படி இருந்து வைத்து என்னுடைய நிகர்ஷம் பாராதே
என் நெஞ்சமே நீள் நகராக இருந்த நிரவாதிக சவ் சீல்யத்தாலே என்னை மயக்குகிறவனே உன்னை என்று நான் காண்பது -என்று செல்ல
எம்பெருமானும் காணக் கடவிய காலம் வந்தால் அண்டர் காணலாவது -என்று அருளிச் செய்ய -அக்காலம் தான் நீ இட்ட வழக்கன்றோ –
ஆனபின்பு இக்காலம் தன்னையே அந்தக் காணக் கடவிய காலம் ஆக்குவம் என்றால் உன்னால் ஆக்க முடியாதோ -என்கிறார்
————————————————–
கொள்வன் நான், மாவலி! மூவடி தா’என்ற கள்வனே! கஞ்சனை வஞ்சித்து வாணனை
உள்வன்மை தீர,ஓர் ஆயிரம் தோள் துணித்த புள்வல்லாய்! உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே?–3-8-9-
கோலின அளவை முடிக்க விரகு அறிவான் ஒருவனாய் -ஆஸ்ரித விரோதி நிராசன ஸ்வ பாவனாய் —
விரோதி நிராசன சமர்த்தனாய் -இருந்த உன்னை எஞ்ஞான்று பொருந்துவன் -என்கிறார் –
—————————————————
பொருந்திய மாமருதின்னிடை போய எம் பொருந் தகாய்! உன் கழல் காணிய பேதுற்று
வருந்தி நான் வாசக மாலை கொண்டு உன்னையே இருந்திருந்து எத்தனை காலம் புலம்புவனே?–3-8-10-
பொருந்தின மா மருதினிடை அகப்படாதே போய் -என்னை ரஷித்து அருளின பரம காருணிகனே-உன் திருவடிகளைக் காண ஆசைப்பட்டு பெறாது ஒழிந்து
இப்படி முடியவும் பெறாதே இருந்து பெரிய வருத்தத்தோடே உன் குணங்களைச் சொல்லிக் கொண்டு
நான் இன்னம் எத்தனை காலம் கிடந்தது அலற்றக் கடவேன் -என்கிறார் –
———————————————
புலம்பு சீர்ப் பூமி யளந்த பெருமானை நலங்கொள் சீர் நன் குருகூர்ச் சடகோபன் சொல்
வலங்கொண்ட வாயிரத்துள் இவையுமோர் பத்து இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே –3-8-11-
எல்லாராலும் ஏத்தப்படும் குணங்களை யுடையனான பூமி யளந்த எம்பெருமானை குண ஏக தாரகத்வம் ஆகிற கல்யாண குணத்தை யுடையனாய் இருந்த
நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன இத்திருவாய் மொழியைச் சொன்னார் எல்லாரும் திரு நாட்டிலே புகப் பெறுவார் -என்கிறார் –
—————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply