ஸ்ரீ திருப்பாவை – -ஈராயிரப்படி நாலாயிரப்படி -ஆழி மழைக் கண்ணா — ஸ்ரீ திரு நாராயண புரத்து ஸ்ரீ ஆய் -என்னும் ஸ்ரீ ஜனன்யாச்சார்யார்-வியாக்யானங்கள் —

ஈராயிரப்படி —

ஆழி மழைக் கண்ணா ஓன்று நீ கை கரவேல்
ஆழி யுட்புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழியம் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம் புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்–4-

பதவுரை

ஆழி மழை கண்ணா–மண்டல வர்ஷத்துக்குத் தலைவனான பர்ஜந்யனே !
நீ–நீ
கை-(உன்னுடைய) கொடையில்
ஒன்றும்-ஒன்றையும்
கரவேல்–ஒளியா தொழியவேணும்; (நீ செய்ய வேண்டிய பணி என்ன வென்றால்)
ஆழியுள் புக்கு–கடலினுட் புகுந்து
முகந்து கொடு–(அங்குள்ள நீரை) மொண்டு கொடு
ஆர்த்து–கர்ஜனை பண்ணி (பேரொலி செய்து)
ஏறி–(ஆகாயத்தே) ஏறி,
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து–காலம் முதலிய ஸகல பதார்தத்ங்களுக்குங் காரண பூதனான
எம் பெருமானுடைய திருமேனி போல் (உனது) உடம்பிற் கருமை பெற்று
பாழி அம் தோள் உடை பற்பநாபன் கையில்–பெருமையும் அழகும் பொருந்திய தோள்களை யுடையவனும்,
நாபிக் கமல முடையனுமான எம் பெருமானுடைய கையில் (வலப் பக்கத்திலுள்ள)
ஆழி போல் மின்னி–திருவாழி யாழ்வானைப் போல் ஒளி மல்கி,
வலம்புரி போல் நின்று அதிர்ந்து–(இடப் பக்கத்திலுள்ள) பாஞ்ச ஜந்யாழ்வானைப் போல் நிலை நின்று முழங்கி,
சார்ங்கம் உதைத்த–ஸ்ரீ சார்ங்கத்தாலே தள்ளப்பட்ட
சரம் மழை போல்–பாண வர்ஷம் போல்,
வாழ (உலகத்தாரனைவரும்) வாழும்படியாகவும்
நாங்களும்–(கண்ண பிரானோட்டைக் கலவிக்கு நோன்பு நோற்கிற) நாங்களும்
மகிழ்ந்து–ஸந்தோஷித்து
மார்கழி நீராட–மார்கழி நீராட்டம் செய்யும் படியாகவும்
உலகினில்–இல் வுலகத்தில்
தாழாதே–தாமதம் செய்யாமல் (சடக்கென)
பெய்திடாய்–மழை பொழியக் கடவை.
ஏல் ஓர் எம் பாவாய் !.

ஆழி மழைக் கண்ணா –
பேர் அளவை யுடைய வர்ஷத்துக்கு நிர்வாஹகனான வருணனே

ஓன்று நீ கை கரவேல்-
தந்தாம் பாக்யத்து அளவில் கார்யம் செய்யும் போது அன்றோ புதைத்து விட வேண்டுவது –
எங்களுடைய பாக்யம் அன்றோ புஜிக்கப் புகுகிறது –

ஆழி யுட்புக்கு –
முன் வாயிலே சகரர் கல்லின குழியில் ஒழிய பெரும் கடலிலே புக்கு

முகந்து கொடு –
பாதாளம் கிட்டி மணலோடே பருக வேணும்

ஆர்த்தேறி-
அநசத்திலே தீஷித்த முதலிகள் திருவடி த்வனியைக் கேட்டு இருந்த போதே எழுந்தாட
பிராட்டியைத் திருவடி தொழுத ப்ரீதி பிரகரக்ஷத்தாலே திருவடி ஆர்த்துக் கொண்டு
வந்தால் போலே வர வேணும் –

ஏறி –
விஸ்ரம்ய விஸ்ரம்ய புந ப்ரா யந்தி -கர்ப்பிணிகள் நகர்ந்து நகர்ந்து பெரிய ஏற்றம் ஏறுமா போலே
மத யானை போல் எழுந்த மா முகில்காள்
விண்ணீல மேலாப்பு விரித்தால் போலே ஆகாச அவகாசம் அத்தனையும் இடமடையும் படி
பாரித்துக் கொண்டு வர வேணும்

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்-
ஸ்ருஷ்ட்டித்தால் இவை பண்ணும் நன்மை தீமைக்குத் தக்கபடி பார்க்கும் பார்வை போல் அன்றிக்கே-
ஸ்ருஷ்டிக்கு முன்பு
எல்லாரையும் ஐயோ என்று ஓக்கப் பார்க்குமா போலே –
நீயும் இங்குத்தைக்கு ஒத்து இருக்கப் பார்க்க வேணும் என்று கருத்து-
(யவ்கபத்யம் அனுக்ரஹ கார்யம் -அவன் ஸ்ருஷ்டியில் தாரதம்யம் இல்லாமல் –
நான்முகன் மூலம் ஸ்ருஷ்டியே கர்மாதீனம் )

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணன்-( 3-2-1-) இறே –

(முகில் வண்ணன் மேக வண்ணன் -மற்ற கவிகள் –
ஆண்டாளோ மேகத்தை அவனைப் போல் -இது அன்றோ யதாவஸ்திதம் -)

உருவம் போல் –
அகவாயில் நீர்மை உங்களால் தேடப் போகாது
நிறத்தை யாகிலும் கொள்ளுங்கோள்
நாச்சியார் விழி விழிக்கச் சொல்லுகிறார்கள் –

மெய் கறுத்து-
அக வாயில் நீர்மை அவனுடைய நீர்மைக்கு நெருப்பு என்னலாம்-
(மெய் மட்டுமே கறுத்து என்றபடி )

பாழி-
பஹுஸ் ஸ்யாம் அவஷ்டப்த யஸ்ய லோகாத் மஹாத்மன –
(திருவடி முதல் வார்த்தை -பெருமாளைக் கண்டவுடன் )
ஒதுங்கின ரஷ்ய வர்க்கம் பொருந்தும் படி நிழல் மிக்கு இருக்கை
நிவாஸ வ்ருஷஸ் ஸாதூ நாம் –
(தாரை வாக்கியம் -நாமி பலம் இது -அங்கு நாம பலம் )

யம் தோள் –
உழறு பால் -ரக்ஷகமும் தானேயாய் -போக்யமும் தானே யாகை-
சுந்தரத் தோளுடையான் இறே
(தோள் -ரக்ஷகம் -சுந்தரம் போக்யம்
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா அன்றோ )

பற்பநாபன் –
புத்ரஸ் தே ஜாத -என்று ப்ரஹ்மாவை உண்டாக்கின அநந்தரம் பிறந்த ஒளி

கையில்-ஆழி -போல் மின்னி-
வெறும் புறமே அமையும் -அதுக்கு மேலே திருவாழி-
நெய்யார் ஆழி-(பெரிய திருமொழி -7-7-3) இறே

ஆழியோடும் பொன்னார் சாரங்கமுடைய அடிகளை இன்னார் என்று அறியேன்
இவர்களை சேர்க்கைக்குப் பரிகரம் அதுவே

(கடகர்கள் அன்றோ
பிறந்த குழந்தையை ரக்ஷிக்க திவ்ய ஆயுதங்கள்
கற்பகம் மரம் –கிளைகள் தோள்கள் -பூம் கொத்து திவ்ய ஆயுதங்கள் –
விளம்பம் சகிக்காமல் -ஸதா திவ்ய ஆயுதங்கள் தரித்து –
யஸ்ய மதம் -தஸ்ய மதம் -யதோ வாஸோ நிவர்த்தந்தி )

வலம் புரி போல் நின்று அதிர்ந்து
பாரத சமரத்தில் முழக்கம் போலே இருக்கை –
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும்-(நாச்சியார் -9-9-)
(பிரணவ கோஷம் -வேதாந்தார்த்தம் -இவளுக்கு அழகு -வெண்மை சிவந்த ஆதாரம் -கறுத்த கன்னம் –
வர்ண கலப்பு –வாய் எச்சில் அமுதம் -அன்றோ ஈர்க்கிறது )
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் -(பெரிய திருவந்தாதி )

வலம் புரி
உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம்
கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத் தலத்தே

தாழாதே –
(தயங்காமல் -சடக்கென )
தேவதாந்த்ர பஜனம் பண்ணினாரைப் போலே யன்றிக்கே
பகவத் சமாஸ்ரயணம் பண்ணினார் பெறுமா போலே பெற வேணும்
தேவ மாத்ருகம் போல் அன்றிக்கே
பகவத் சமாஸ்ரயணம் நதி மாத்ருகம் போலே சரதம் என்கை
(கர்ம அனுரூபமாக இல்லாமல் -நதி பிரவாகம் போல் நித்தியமாக அருள் பிரவாகம் அன்றோ )

சார்ங்கம் உதைத்த –
பெருமாள் கடைக் கணித்துப் பார்க்கும் தனையுமாய்த்துப் பார்ப்பது
பின்னை தானே பராக்ரமிக்கும் –
அகம்படி கிளர்ந்தால் அரசனால் விலக்க ஒண்ணாது
சார்ங்கம் என்னும் வில்லாண்டான் இறே –
(போதும் என்று சொல்வதே ஆண்டான் க்ருத்யம்
அந்தரங்க கைங்கர்ய பரர்களுக்கு கோபம் வந்தால் அவனாலும் தடுக்க முடியாதே
கோப வசம் ஆனார் பெருமாள் அந்தரங்கரர்களை தாக்கியதும் )

சர மழை போல்
சர வர்ஷம் வவர்ஷ ஹ
வாழ உலகினில் பெய்திடாய்
சர வ்ருஷடி பண்ண அன்று ராக்ஷசர் மேல் பட்டாப் போல் அன்றிக்கே
லோகம் அடைய வாழும்படி வர்ஷிக்க வேணும்

நாங்களும்-மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்–
நாங்களும் கிருஷ்ணனும் மகிழ்ந்து நீராட
(சோஸ்னுதே சர்வான் காமம் ஸஹ ப்ரஹ்மணா -கூடியே அனுபவம் –
இத்தையே -நாங்களும் -நீராட்டமே ப்ரஹ்ம அனுபவம் தானே -)

ப்ரஹர்ஷயிஷ்யாமி –
நாங்கள் வியக்க இன்புறுதும் என் பெண்மை ஆற்றோம் –( 10-3-9-)
ஏவமுக்தா ஹநுமதா மைதிலீ ஜனகாத்மஜா உவாச தர்ம ஸஹிதம் ஹநூமந்தம் யசஸ்வி நீ –
(சத்ருக்களும் வாழ வேண்டும் -இவள் வார்த்தை
தஹ பச -அவன் வார்த்தை
எங்கள் குடிப் பிறப்புக்கும்
பிறந்த மண் பாட்டுக்கும் தக்கபடி சத்ருக்களும் வாழ வேணும்
எங்கள் கோஷ்ட்டியில் வார்த்தையைச் சொல் என்று அருளிச் செய்தார் -)

——————————-

நாலாயிரப்படி -அவதாரிகை –

சேஸ்வரமான ஜகத்தடைய இங்கே கிஞ்சித்கரித்துத் தந்தாம் சத்தை பெறா நின்றது –
நம்முடைய சத்தையும் பெறுவோம் -என்று -வர்ஷத்துக்குக் கடவ பர்ஜன்யன் வந்து-
நான் செய்ய வேண்டுவது என் -என்ன-
வர்ஷம் பெய்யும்படியை அவனுக்குக் கையோலை செய்து கொடுக்கிறார்கள் –

ராவண வத அநந்தரம் முன்பு மறந்த இந்திரன் தன் பதம் பெறுகைக்காக ஒரு வரம் கொள்ள வேணும் -என்றான் -(இறந்த வானர முதலிகளுக்கு மீண்டும் உயிர் அளித்த வ்ருத்தாந்தம் )
அங்கு தப்பினார்க்கு இவர்கள் உளராக அஞ்ச வேண்டா –
இங்கு தப்பினார்க்கு விநாசமே இறே யுள்ளது –

இப்படி தேவதைகள் வந்து இவர்களுக்குச் சொல்லிற்றுச் செய்வார்களோ -என்னில் –
த்ரவந்தி தைத்யா பிரணமந்தி தேவதா
பரிகார மது ஸூதன ப்ரபந்நான்
இறைஞ்சியும் சாதுவராய்–இத்யாதி
நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே
உன் தன் தமருக்கு என்றும் நமன் தமர் கள்ளர் போல் -என்றும் உண்டு இறே

இந்த ஆக்கரான தேவதைகள் அன்றிக்கே சாஷாத் தேவதைகளான அயர்வறும் அமரர்களும்
இவர்களைத் தொழா நிற்பார்கள் -எங்கனே என்னில்
ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப் படுவார்(திருவாய் -3-5-அன்பிலா மூடரை ஆழ்வார் நிந்திக்க -நித்யர் அன்புள்ளவரைக் கொண்டாடுவார்கள் )
மலி புகழ் வானவர்க்காவர் நற்கோவையே
விரும்புவர் அமரர் மொய்த்தே
விண்ணுளாரிலும் சீரியர் –என்று சொல்லுகையாலே –

ஆழ்வானை ஒரு பட்டன் -தேவதாந்த்ரங்களை நீங்கள் கண்டால் பண்ணும் ஆசாரம் என் -என்று கேட்க
சாஸ்த்ர விரோதமாகக் கேளாதே கொள்ளாய் –
தேவதாந்த்ரங்கள் உங்களைக் கண்டால் பண்ணும் ஆசாரம் என் என்று கேளாய் -என்றார்

சர்வேஸ்மை தேவா பலிமா வஹந்தி(தைத்ரியம் சிஷா வல்லி -இவர்கள் ஆராதிக்கிறார்கள் )
தஸ்ய யஞ்ஞவராஹஸ்ய –தேஷாமபி நமோ நம
எம்பெருமானுக்குப் பண்ணும் அஞ்சலியே இறே இவர்களும் பண்ணுவது
இவர்கள் பெருமைக்கு இடைவிடாதே பண்ணுகிறேன் -எம்பெருமானுக்கு ஒருகால் அமையும் –
ப்ராப்யரான இவர்களுக்கு சர்வ ஸ்வதானமாகத் தன்னைக் கொடுக்கும் அத்தனை இறே-

ஆழி மழைக் கண்ணா ஓன்று நீ கை கரவேல்
ஆழி யுட்புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழியம் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம் புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்-4-

ஆழி மழைக் கண்ணா
சம இதி லோக ஹிதாஹிதே நீ யுக்த -என்று யமனை அக் காரியத்துக்கு இட்டால் போலே
புண்ய பாப அனுரூபமாக வேண்டும் அளவிலே வர்ஷிப்பிக்கைக்கு சர்வேஸ்வரனாலே நியமிக்கப் பட்டுப்
பேர் அளவுடையையாய் வர்ஷத்துக்கு நிர்வாஹகனானவனே

தேவதை அப்ரஸித்தம் ஆனமையாலும் தங்கள் ராஜ குலத்தாலும்
இன்ன பணிக்குக் கடவன் -என்பாரைப் போலே தொழிலை இட்டுச் சொல்லுகிறார்கள் –

தந்தாம் பாகத்து (புண்ணியத்துக்கு )அளவிலே கார்யம் செய்யும் போதைக்கு அன்றோ புதைத்து (குறைத்து )விட வேண்டியது
எங்களுடைய பாக்ய பலமன்றோ எல்லாரும் புஜிக்கப் புகுகிறது
சேதனனுடைய நன்மை தீமை கணக்கிட்டுப் படி வைக்கும் குசாண்டுள்ள ஈஸ்வர கோஷ்ட்டியின் படி அன்றியே
வரையாதே பாபமே பச்சையாக ரஷிக்கும் எங்கள் (பிராட்டி சமர் )கோஷ்ட்டியில் படியே நடத்தித் தர வேணும்

மித்ர மவ்பயிகம் க்ருத்தம் –விதிதஸ் ச ஹி தர்மஞ்ஞா –
ஏவ முக்தா ஹநுமதா–இத்யாதி–பாபா நாம் வா –
ராஜ ஸம்ஸ்ரய வஸ்யா நாம் -(ராஜா ஆணைப்படி செய்த ராக்ஷஸிகள் எய்தவன் இருக்க அம்பைச் சொல்வதோ )
அலமேஷா –(த்ரிஜடை வார்த்தை )இத்யாதி
மஹா பாரதம் தூது போனவன் ஏற்றமான நீர்மையைச் சொல்லுகிறது –
ஸ்ரீ ராமாயணம் பிராட்டி நீர்மையைச் சொல்லுகிறது-

ஓன்று நீ கை கரவேல்-
ஆர்த்திகள் கை பெரியன் என்று கொண்டாடுமா போலே
உன் படிகள் ஒன்றும் குறையாதபடி வந்து தோற்ற வேணும் என்கிறாள்
என்னை ஸ்தோத்ரம் பண்ணுகிறது என் -உங்களுக்கு வர்ஷிக்கைக்கு நீருண்டோ என்னில்

ஆழி யுட்புக்கு முகந்து கொடு –
என்கிறார்கள் -இந்த முன் வாயில் சகரர் கல்லின உப்புக் குழி ஒழிய பெரும் கடலிலே புக்கு
முகந்து கொண்டு பாதாளம் கிடக்க மணலோடே பருக வேணும்(கடல் மாத்திரம் அல்ல இந்து மா சமுத்திரம் -ஆவரண ஜலம் போல்வன உண்டே )

ஆர்த்தேறி-
ஆர்த்து
முதலிகள் அநசனத்திலே தீஷித்துக் கிடந்தவர்கள் த்வனி கேட்ட போதே
எழுந்து இருந்து ஆடும் படி திருவடி பிராட்டியைத்
திருவடி தொழுத ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே ஆர்த்துக் கொண்டு
வந்தால் போலே வர வேணும் –

ஏறி
நாங்களும் ஜகத்தும் கண்ட காட்சியாலே தளிரும் முறியுமாம் படி மின்னி
முழங்கி வில்லிட்டுக் கொண்டு வர வேணும்
விஸ்ரம்ய விஸ்ரம்ய புன ப்ரயாந்தி–(கிஷ்கிந்தா )
கர்ப்பிணிகள் நகர்ந்து நகர்ந்து பெரிய ஏற்றம் ஏறுமா போலே ஏற வேணும்
மத யானை போல் எழுந்த மா முகில்காள்
விண்ணீல மேலாப்பு விரித்தால் போலே ஆகாச அவகாசம் அத்தனையும் நிறையும்படி பாரித்துக் கொண்டு வர வேணும்

ஊழி முதல்வன்
ஸ்ருஷ்ட்டித்தால் இவை பண்ணும் நன்மை தீமைக்குத் தக்கபடி பார்க்கும் பார்வை அன்றிக்கே-
ஸ்ருஷ்டிக்கு முன்பு
எல்லாரையும் ஐயோ என்று ஓக்கப் பார்க்குமா போலே
நீயும் இங்குத்தைக்கு ஒத்து இருக்கப் பார்க்க வேணும் என்று கருத்து-
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணன் இறே

உருவம் போல்
அகவாயில் நீர்மை உங்களால் தேடப் போகாது
நிறத்தை யாகிலும் கொள்ளுங்கோள்
நாச்சியார் விழி விழிக்கச் சொல்லுகிறார்கள் –
ஈஸ்வரனைப் போல் முகம் தோற்றாமல் நின்று உபகரிக்க ஒண்ணாது

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
கால உபலஷிதமான சர்வ பதார்த்தங்களையும் உண்டாக்க வேணும் என்று திரு உள்ளத்தில் கொண்டதாகையாலே
கருவடைந்த பயிர் போலே இருக்கும் திரு நிறம் -என்கை –

மெய் கறுத்து
அகவாயில் நீர்மை அவனுடைய நீர்மைக்கு நெருப்பு என்னலாம்-

பாழி-
இடமுடைமை –
பஹுஸ் ஸ்யாம் வஷ்டப்த-ஒதுங்கின ரஷ்ய வர்க்கம் பொருந்தும் படி நிழல் மிக்கு இருக்கை
நிவாஸ வ்ருஷஸ் ஸாதூ நாம் -(ஆபன்னானாம் சாதூனாம் பராங்கதி-நாமி பலன் சுக்ரீவனுக்கு உண்டு தாரை வாலிக்கு உபதேசம் )

யம் தோள் –
உழறு பால் -ரக்ஷகமும் தானேயாய் -போக்யமும் தானேயாகை-
சுந்தரத் தோளுடையான் (நாச்சியார் -9-1)இறே -படவடித்தாலும் விட ஒண்ணாது-

பற்பநாபன் கையில்
பற்பநாபன் –
புத்ரஸ் தே ஜாத -என்று ப்ரஹ்மாவை உண்டாக்கின அநந்தரம் பிறந்த ஒளி
கொப்பூழில் எழு கமலப் பூ வழகர் எம்மனார் -என்று கொப்பூழ் அழகைக் கண்டு கிடக்குமவள் இறே

கையில்-ஆழி -போல் மின்னி-
வெறும் புறமே அமையும் -அதுக்கு மேலே திருவாழி-
ராஜாக்களுக்கு பிள்ளை பிறந்தால் காம்பீர்யத்தால் அவர்கள் தங்கள் பேசாது இருக்க
உறிய வடியார் நெய்யாடல் போற்றுமா போலே திருவாழி நின்று ஜ்வலியா நிற்கும்
ஆழியோடும் பொன்னார் சாரங்கமுடைய அடிகளை இன்னார் என்று அறியேன்(10-10)
வெளிச் செறிப்பிப்கைக்கும் அழிக்கைக்கும் பரிகரம் அதுவே

வலம் புரி போல் நின்று அதிர்ந்து
பாரத சமரத்தில் பாஞ்ச ஜன்யம் போலே முழங்கித் தோற்ற வேணும்
ச கோஷா தார்த்தாஷ்ட்ராணாம்
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும்-
கை கழலா நேமியான் –இத்யாதி
ஸ்த்ரீத்வத்துக்கு முலை போலே அவனுடைய பும்ஸத்வத்துக்குத் திருவாழி

வலம் புரி
உண்பது சொல்லில் உலகலந்தான் வாயமுதம் –
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ யுண்டக் கால் -என்று தம் துறையில் உள்ளது இறே
தேவதாந்த்ர பஜனம் பண்ணினாரைப் போலே யன்றிக்கே
பகவத் சமாஸ்ரயணம் பண்ணினார் பெறுமா போலே பெற வேணும்
தேவ மாத்ருகம் போல் அன்றிக்கே பகவத் சமாஸ்ரயணம் நதி மாத்ருகம் போலே சரதம் என்கை

(வானம் பார்த்த பூமி போல் இல்லாமல் நதி பாயும் பூமி போல் )

தாழாதே
தசாரதாத்மஜன் -சரணம் என்று புகுந்தவர்களைக் கொண்டு அல்லது தரியாதாப் போலே வர வேணும் என்கை

சார்ங்கம் உதைத்த –
பெருமாள் கடைக் கணிக்கும் போதும் பெருமாளைப் பார்த்துப் பின்னைத் தானே பராக்ரமிக்கும் என்கை
பின்னை தானே பராக்ரமிக்கும் -அகம்படி கிளர்ந்தால் அரசனால் விலக்கப் போகாது இறே –
அவஷ்டப்ய மஹத் தநு–பெருமாள் தம்மால் அமைக்க ஒண்ணாமே பிடித்துக் கொண்டு நின்று ஊசலாடினார்
சார்ங்கம் என்னும் வில்லாண்டான் –

சர மாரி-(நாச்சியார் )
ஆழி மழை (தீ வாய் வாழி மழை )-வார்த்தை முறைப்பட்டது
சர வர்ஷம் வவர்ஷ ஹ -என்று தானே சர வ்ருஷ்டி பண்ண வற்று

வாழ உலகினில் பெய்திடாய்
சர வ்ருஷ்டி பண்ண அன்று ராக்ஷசர் மேல் பட்டாப் போல் அன்றிக்கே
லோகம் அடைய வாழும்படி வர்ஷிக்க வேணும் –

எங்கள் வடிவைப் பாராய் -மழை வேண்டுவார்க்கு -நாளையுமாம் -(நாளைக்கும் வாழும் படி )
இப்படி செய்தால் எனக்கு பிரயோஜனம் என் என்ன –

உன் கார்யம் செய்து தருகிறோம்(நாங்கள் ஸம்ஸ்லேஷிக்க நீ காணப் பெறலாமே  )

நாங்களும்-மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்–
நாங்களும் கிருஷ்ணனும் மகிழ்ந்து குளித்துத் தருகிறோம் என்கிறார்கள் –
ப்ரஹர்ஷயிஷ்யாமி
நாங்கள் வியக்க இன்புறுதும் –

இவர்களுக்கு காட்டேன்மின் நும்முரு என்னுயிர்க்கது காலன்-என்ன வேண்டாவே –
கிருஷ்ணனைக் கண்டால் போலே இருக்க அமையும் –

ஏவமுக்தா ஹநுமதா மைதிலீ ஜனகாத்மஜா உவாச தர்ம ஸஹிதம் ஹநூமந்தம் யசஸ்வி நீ –
தஹ பச -என்றும் –
கொள்ளை- கூத்து என்றும்
ராம கோஷ்ட்டியில் சொல்லும் வார்த்தையைச் சொல்லாதே
எங்கள் குடிப் பிறப்புக்கும்
பிறந்த மண் பாட்டுக்கும் தக்கபடி சத்ருக்களும் வாழ வேணும்
எங்கள் கோஷ்ட்டியில் வார்த்தையைச் சொல் என்று அருளிச் செய்தார் –

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading