ஈராயிரப்படி-
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெரும் செந்நெலூடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத
தேங்காதே புக்கிருந்து தீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய் –3-
பதவுரை
ஓங்கி–(மஹாபலி வார்த்த நீர் கையில் விழுந்தவாறே) ஆகாசத்தளவும் வளர்ந்து
உலகு-(மூன்று) லோகங்களையும்
அளந்த-(திருவடிகளாலே தாவி) அளந்து கொண்ட
உத்தமன்–புருஷோத்தமனுடைய
பேர்–திருநாமங்களை
நாங்கள்–(பிரயோஜநாந்தரத்தை விரும்பாத) நாங்கள்
பாடி–(ப்ரீதிக்குப் போக்கு வீடாகப்) பாடி
நம் பாவைக்கு சாற்றி–நம் நோன்புக்கென்று சங்கற்பித்துக் கொண்டு
நீர் ஆடினால்–நீராடினால்
நாடு எல்லாம்–தேசமெங்கும்
தீங்கு இன்றி–(அதிவிருஷ்டி, அநாவ்ருஷ்டி ஆகிற) தீங்கு ஒன்றுமுமில்லாமல்
திங்கள் மும்மாரி பெய்து–மாதந்தோறும் மூன்று தரம் மழை பெய்ய (அதனால்)
ஓங்கு பெரு செந் நெல் ஊடு–ஆகாசத்தளவும் வளர்ந்து பெருத்துள்ள செந்நெற் பயிர்களின் நடுவே
கயல் உகள–மீன்கள் துள்ள
பூ–அழகிய
குவளை போதில்-நெய்தல் மலரில்
பொறிவண்டு–மிக்க புகரையுடைய வண்டுகளானவை
கண் படுப்ப–உறங்க,
புக்கு–(மாட்டுத்தொழுவிற); புகுந்து
தேங்காதே இருந்து–சலியாமல் பொருந்தி யிருந்து
சீர்த்த முலை பற்றி வாங்க-(பசுக்களின்) பருத்த முலைகளை (இரு கையாலும்) பிடித்து வலிக்க.
வள்ளல்–(எல்லார்க்கும் கட்டி அடிக்கலாம்படி விதேயமா யிருக்கை யாகிற) உதார ஸ்வபாவமுடைய
பெரும் பசுக்கள்–பெரிய பசுக்களானவை
நீங்காத செல்வம் நிறைந்து–நீங்காத ஸம்பத்து நிறையும்படி
குடம் நிறைக்கும்–(பால் வெள்ளத்தாலே) குடங்களை நிறைக்கும்.
ஏல் ஓர; எம் பாவாய் !
ஓங்கி –
பிறர் கார்யம் செய்ய என்றால் பணைக்கும்-என்கை –
உவந்த உள்ளதனாய் –இத்யாதி
பனியில் சாய்ந்த மூங்கில் ஆதித்ய கிரணங்கள் பட்டால் எழுமா போலே ஓங்குகை
வெய்யில் -ஆர்த்த நாதம்
உலகளந்த –
ஏக தேசத்தை அன்றியே எல்லாரையும் அடைய குணாகுண நிரூபணம் பண்ணாதே ரஷிக்கை-
உத்தமன் –
தென்றலும் நிலவும் போலே பிறர்க்கேயாய் இருக்கை
ந தே ரூபம் -இத்யாதிப்படியே –
நமக்கு பகவத ஏவாஹமஸ்மி போலே அவனுக்கு -ந தே ரூபம் பக்தா நாம் -ஆகையும்-
ஆகையால் உத்தமன் ஆனான்
பேர்
பிறர்க்கும் அவனுக்கும் உள்ள வாசி போரும்-திரு நாமத்துக்கு அவனுக்கும்
கங்கா ஸ்நானம் பண்ணுமவனுக்குப் பூர்வத்தில் ஸ்நானம் வேண்டாதாப் போலே
இது தானே எல்லா ஸூத்தியும்
பேர்
இது தான் எல்லா அதிகாரிகளுக்கும் அபேக்ஷிதம் –
கர்ம யோகிக்கு விரோதி போகைக்கும் -கர்மம் செய்து தலைக் கட்டுகைக்கும்
ஞான யோகிக்கு ஞானம் விசதமாகைக்கும்
பக்தி யோகிக்கு பக்தி சித்திக்கைக்கும் விரோதி போகைக்கும்
பிரபன்னனுக்குச் சோறும் தண்ணீரும் போலே யாகைக்கும்
திரு நாமம் போலே இல்லை என்றபடி
பாடி
ஆர்வத்தால் பாடாதார் பாட்டு என்றும் பாடல்ல -(பெரிய திருமொழி-11-7-4 )–என்று இறே பாட்டுக்கு லக்ஷணம் –
நாங்கள் –
பாடா விடில் தரியாத நாங்கள் –
உபாயம் அவனேயாகும் -தாரகமாம் அத்தனை இறே –
நம் பாவைக்கு –
பெறுவது கிருஷ்ணனையாய் பெறுவிப்பானும் கிருஷ்ணனேயான நோன்புக்கு
சாற்றி நீராடினால்
நாட்டுக்கு புண்யம் –
நமக்கு விரஹ சமனம்-
தீங்கின்றி நாடெல்லாம் –
எல்லாப் பொல்லாங்குகளும் போக -சேஸ்வரமான ஜகத்தடைய வாழ
திங்கள் மும்மாரி பெய்து
நெடுநாள் மழை இன்றிக்கே வியசனப் பட்டால் போலே வெள்ளத்தால் கேடாகாமே
ஒன்பது நாள் வெய்யில் எரித்து
ஒரு நாள் தலைக்கு எண்ணெய் ஊற விட்டால் போலே நன்றாம் படி மழை பெய்ய வேணும் -என்கை
யத்ர அஷ்டாக்ஷர -இத்யாதிப்படியே
(யத்ர அஷ்டாக்ஷர ஸம்ஸித்தோ மஹா பாகோ மஹியதே-ந தத்ர சஞ்சரிஷ்யந்தி வியாதி துர்பிக்ஷ தஸ்கரா
மூன்று அடி அவனது -மூன்று பதம் இதில் -ஆகவே இந்த பிரமாணம் காட்டி அருளுகிறார் )
நாட்டில் உள்ள பாவம் எல்லாம் சும்மெனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே-(பெரியாழ்வார் )-
என்று சொல்லுகிறபடியே –
ஓங்கு பெரும் செந்நெல்
கவிழ்ந்து நின்று முதலையிட்டு அநந்தரம் அண்ணாந்து பார்க்க வேண்டுகை –
மேல் நோக்கி உயரும் என்கை –
ஊடு கயலுகளப்
ஒண் மிதியில் -என்னுமா போலே
பயிர் மேல் நோக்கும் தனையும் ஆனைக் கன்றுகள் போலே செருக்கித் திரிகிற கயல்களுக்குத்
தாவித் திரியலாம் படி இருக்கை
பூங்குவளைப் போதில்
அழகிய குவளைப் பூவில் –
போது என்று காலம் ஆகவுமாம்-
(போது எல்லாம் போது கொண்டு உன் பொன் அடி புனைய மாட்டேன் போல் )
கயலினுடைய ஸஞ்சாரத்தாலே பூக்கள் நெகிழ்கிறபடி
பொறி வண்டு –
ரசாயன சேவை பண்ணினால் போலே நரை திரை மாறி இளகிப் பதித்து இருக்கை
கண் படுப்ப
சவ்யக்யத்தாலே உறங்கி நீ எழுப்பிற்று இல்லை- நீ எழுப்பிற்று இல்லை- என்று உணர்ந்து விடுவோறே
வெறுத்துத் தன்னில் தான் சீறு பாறு -என்கை
தேங்காதே புக்கிருந்து –
இனி ஊரில் ஸம்ருத்தியைச் சொல்லுகிறது
தேங்காதே
திருவடி சமுத்திர தாரணத்துக்கு ஒறுப்பட்டால் போலே
முத்துக்கு முழுகுவார் கடலுக்கு இறாயாதாப் போலே யாயத்து இறாயாதே புக்க படி
இருந்து
பால் வற்றி எழுந்து இருக்க விரகு இல்லை -ஸ்தாவரப் பிரதிஷ்டை போலே
தீர்த்த முலை பற்றி
விரலாலே பிடிக்க ஒண்ணாதே இரண்டு கையாலே அணைக்க வேண்டும்படி இருக்கை
பற்றி வாங்க-
தொட்டு விட அமையும் –
வாங்கக் குடம் நிறைக்கும்
ஒரு கால் பற்றி வலிக்க இட்ட குடம் நிறைக்கை-
வைப்பார் தாழ்வே –
வைத்த குடம் எல்லாம் நிறைக்கும் -என்றுமாம்
வள்ளல் –
சிறு பிள்ளைகளும் கட்டிவிடலாய் -கழுத்தைக் கட்டிக்க கொண்டு நாலலாயிருக்கை
பெரும் பசுக்கள்-
கிருஷ்ணனோட்டை ஸ்பர்சம் உண்டாகையாலே ஸ்ரீ சத்ருஞ்சயனைப் போலே இருக்கை
நீங்காத செல்வம் –
ஈஸ்வரன் பார்த்த இடம் போலே சாவதி அன்று இறே இவர்கள் பார்த்த இடம்
நிறைந்தேலோ ரெம்பாவாய் –
——————————————————-
நாலாயிரப்படி -அவதாரிகை –
(கேவல நாம ரூப காரிகள் -அவர்களையும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் -சக போஜனம் ஸஹ வாஸம் சமபோஷணம் செய்யாமல்
அவர்களுக்கும் ஆசீர்வாதம் வழங்க வேண்டும் -விலக்ஷண மோக்ஷ அதிகாரம் -சொல்லும்
இந்தப் பாசுரம் கொண்டே அருளிச் செய்யப்பட்டுள்ளது)
தங்கள் நோன்பாலே லோகத்துக்குப் பலிக்கும் பலம் சொல்லுகிறது –
சாது கோட்டியுள் கொள்ளப்படுவாரே–(பெரியாழ்வார் -3-6)என்று தங்களோடு ஒரு கோவையாகக் கூடுகை பரம புருஷார்த்தம் –
அதில்லாத பின்பு ஐஹிக போக்யத்தை யாகிலும் இழவாதே பெற்றிடுவர்கள் என்கை —
நம்மார்த்தி தீர நாம் குளிக்க- நாடு வாழப் பெறுவதே -என்கிறார்கள் -(நாம் பெரும் இஹ லோக பலன் நல்லார் ஒருவர் நோற்கும் நோன்பின் பலனே )
ருஷ்யருங்கன் திரு வயோத்த்யையிலே –(அங்க தேசத்திலே ?)-புகுந்த பின்பு அநா வ்ருஷடி நீங்கி ஸம்ருத்தமானால் போலே –
ஸ்ரீ பரத ஆழ்வான் வியசனம் தீர -நாடு ப்வ்ரஹ்ருஷ்டம் உதித லோகா (துஷ்ட புஷ்டா ஸூதார்மிக )-ஆய்த்து இறே-
இவர்களும் கிருஷ்ணனும் கூடின பின்பு நாட்டுக்கு வ்ருஷ ஸம்ருத்தி இறே –
இவர்கள் விஸ்லேஷமே இறே நாட்டுக்கு அநா வ்ருஷ்டி —
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெரும் செந்நெலூடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்ப
தேங்காதே புக்கிருந்து தீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய் –3-
ஓங்கி –
பிறர் கார்யம் செய்ய -என்றால் பணைக்கும் இறே –
உவந்த உள்ளதனாய் யுலகமளந்து அண்டமுற நீண் முடியன்-
பனியில் சாய்ந்த மூங்கில் ஆதித்யனைக் கண்டால் எழுமா போலே
பிறர் கார்யம் செய்கை சத்தா ப்ரயுக்தம் -என்கை –
ஓங்குகைக்கு அடியான வெய்யில் அங்கு –
இங்கு ஆர்த்த நாதம் –
வளர்ந்த சடக்கு –
கையில் விழுந்த நீரும் ப்ரஹ்மா திருவடி விளக்கினை நீரும் ஓக்க விழும் படியாகை –
உலகளந்த –
ஏக தேசத்துக்கு அன்றியே இருந்ததே குடியாக குணாகுண நிரூபணம் பண்ணாதே ரஷிக்கை-
அகவாயில் வ்யாப்தியில் வரைதல் இல்லாதாப் போலே திருவடிகள் புறம்பு எல்லோரோடும் கலந்த படி –
அந்யத்ர-அநஸ் நந்நந்ய-என்று ஒட்டற்று நின்றான் –
இங்கு தனக்கு தாரகமாக நின்றான் –
உறங்குகின்ற பிரஜையை தாய் கட்டிக் கொண்டு கிடக்குமா போலே இவ்விடம் தனக்கு தாரகம் –
இவ்வவதானம் எல்லாம் இணைந்து போருகையாலே கிருஷ்ணாவதாரத்தோடே ஒக்கும் –
இசையாதார் பக்கல் விழுமவன் இசைந்தார் பக்கல் மேல் விழச் சொல்ல வேணுமோ –
உத்தமன் –
தனக்காய் இருத்தல் செய்யாதே- தென்றலும் நிலாவும் போலே பிறர்க்கேயாய் இருத்தல் –
(உத்தமன் –
பர ஹிம்சை பண்ணியும் தம் தாம் வயிறு வளர்ப்பர் அதமர்-
பிறர் ஜீவனத்தை அனுமதி பண்ணி இருப்பர் -அவனிலும் உத்க்ருஷ்டர் –
பிறரும் ஜீவிக்க வேணும் ஜீவிக்க வேணும் -என்று இருப்பார் மத்யமர் –
உதாரனானவன் பக்கலிலே தன்னை அழிய மாறியும் பிறரை ஜீவிப்பிக்குமவன் –)
ந தே ரூபம் ந சாகார(ஜிதந்தா )–நிஷேதம் தன்னது என்கையைத் தவிர்க்கிறது
நமக்கு -அஹமபி ந மம பாகவத ஏவாஹமஸ்மி போலே
இவனுக்கும் ந தே ரூபம் –பக்தா நாம் -என்கை
உத்தமன்
சர்வாதிகன் -என்கை –
தான் நிர்ஹேதுகமாக ரஷிக்கையும்-
அது தன் பேறாய் இருக்கையும் –
ஈஸ்வரர்களும் அகப்பட இவன் காலிலே வணங்கப் புகுகையாலே
இவனே பர தத்வம்
தன் திருவடிகளை கிருபையால் தன் பேறாகத் தலைகளில் வைக்கையாலே –
ப்ராப்யமும் ப்ராபகமும் தானே -(இதுக்கும் மேல் பர கத ஸ்வீ காரம்-ப்ராப்திக்கு உகப்பனும் அவனே )
பேர்
பிறர்க்கும் அவனுக்கும் உள்ள வாசி போரும்-திரு நாமத்துக்கும் அவனுக்கும் உள்ள வாசி –
ஒருவன் திரு நாமத்தைச் செவியில் சொல்லி உறவை அறிவித்துத் தலையிலே திருவடிகளை வையாமையாலே யன்றோ
எனக்கு உன் திருவடிகள் சம்பந்தம் அந்தராத்மத்தையோடு ஒத்து நிலையில்லாதே போய்த்து
(நாமம் நாமியாலும் அறிவிக்க முடியாத சம்பந்தம் உணர்த்துமே
அரங்கனும் தன் சரண் தந்திலன்; சரண் என்று, தான் அது தந்து வந்து எடுத்த , எந்தை இராமானுசன் !)
பேர்
அம்மே -என்பற்கு சடங்கு வேண்டா –
மாத்ரு காதுகனுக்கும் கை நொந்தால்- அம்மே என்ன பிராப்தி யுண்டால் போலே சர்வாதிகாரம்
ப்ரயதனாய் சொல்ல வேண்டாவோ என்னில்-
கங்கா ஸ்நானம் பண்ணப் போமவனுக்கு – வேறு ஒரு குழியிலே தோய வேண்டாதாப் போலே
இது தானே எல்லா ஸூத்தியையும் பிறப்பிக்கும்(பூதாஸ்மி ரகு நந்தன -சபரி சத்தை பெற்றாளே )
எம்பெருமானை ஒழிந்த ஸூத்திகள் இவனுக்கு துரபிமானத்தைப் பிறப்பித்து எம்பெருமானை அகலப் பண்ணும்
அவன் பண்ணும் ஸூத்தியே ஸூத்தியாக தான் அஸூத்தன் என்று இருக்குமவனுக்கு –
தானும் தன்னை விட்டு -பிறரும் தன்னைக் கை விட்டு
எம்பெருமான் பரிக்ரஹிக்கைக்கு உடலாகி விடும்
மத் வ்ருத்தம் அசிந்தயித்வா –
(அக்ருத்ரிம த்வச் சரணாரவிந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதிம் ஆத்ம வந்தம் |
பிதாமஹம் நாதமுநிம் விலோக்ய
ப்ரஸீத மத் வ்ருத்தம் அசிந்தயித்வா ||-ஶ்லோகம் 65 –
எம்பெருமானே! என்னுடைய நடத்தையைக் கருதாமல், உன் திருவடிகளில் இயற்கையான அன்பில் சிறந்தவரான,
தன் ஸ்வரூபத்தை உணர்ந்தவரான, என்னுடைய பாட்டனாரான ஸ்ரீமந் நாதமுனிகளைப் பார்த்து என்னை மன்னித்தருள வேண்டும்.)
கர்ம யோகிக்கு விரோதி போகைக்கும் கர்மம் செய்து தலைக் கட்டுகைக்கும் திரு நாமம் வேணும்
ஞான யோகிக்கு ஞானம் விசதமாகைக்கும் விரோதி போகைக்கும்
பக்திமானுக்கு விரோதி போகைக்கும் பக்தி வர்த்திகைக்கும்
பிரபன்னனுக்கு சோறும் தண்ணீரும் போலே தேஹ யாத்ரைக்கும் வேணும்
இப்படி எல்லார்க்கும் திரு நாமம் வேணும் -வேறே ஒன்றும் இது போல் இல்லை
பாடி
ஆர்வத்தால் பாடும் பாட்டு இறே பாட்டுக்கு லக்ஷணமாவது -அல்லாதது பாட்டு அல்ல –
(கூடா விரணியனைக் கூருகிரால் மார்விடந்த
ஓடா வடலரியை யும்பரார் கோமானைத்
தோடார் நறுந்துழாய் மார்வனை யார்வத்தால்
பாடாதார் பாட்டு என்றும் பாட்டல்ல கேட்டாமோ -11-7-4-)
நாங்கள்
பேர் பாடா விடில் தரியாத நாங்கள் –
உபாய அம்சம் அவனேயானால் தாரகமும் அவனேயாம் அத்தனை இறே
நம் பாவைக்கு
அனுஷ்டானமும் அநநுஷ்டானமும் விகல்பிக்கலாம் படி இருக்கை —
அனுஷ்டித்ததாகில் சாதனம் என்று கொள்ள ஒண்ணாதே ப்ராப்ய ருசியால் வந்தது என்கை –
அனுஷ்டித்தது இல்லையாகில்-அவனே உபாயம் என்கையாலே பலத்தில் அழிவில்லாமை
பெறுமதுவும் கிருஷணனேயாய்-பெறுவிப்பவனும் கிருஷ்ணனேயான நோன்பு -என்றுமாம் –
(நோன்பு -உபாயம் அல்லவே -பெறு வித்தவனுக்கு கைங்கர்ய மாத்திரமே)
சாற்றி நீராடினால்
நாட்டுக்கு புண்யம் -நமக்கு விரஹ சமனம்-
வ்ருத்த ப்ரக்ருதிபிர் நித்யம் ப்ரயாதி சரயூம் நதீம் -ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே என்கை –
ந மே ஸ்நானம் பஹுமதம் -இத்யாதியால் சொல்லுகிறபடியே அவனுடைய விரஹ தாபம் தீரும்
தீங்கின்றி நாடெல்லாம் –
எல்லாப் பொல்லாங்குகளும் போகை–
தந்தாம் பண்ணின புண்ய பலமென்றே அனுபவிக்கிறது -சேஸ்வரமான ஜகத்தடைய வாழ –
திங்கள் மும் மாரி பெய்து
நெடுநாள் மழை இன்றிக்கே வ்யஸனப் பட்டால் போலே -வெள்ளத்தால் கெடாமே ஒன்பது நாள் வெய்யில் எரித்து
ஒரு நாள் மழை பெய்து தலைக்கு எண்ணெய் ஊற விட்டால் போலே நன்றாம் படி மழை பெய்ய வேணும் என்கை –
யத்ர அஷ்டாக்ஷர ஸம்ஸித்தோ மஹா பாகோ மஹியதே-ந தத்ர சஞ்சரிஷ்யந்தி வியாதி துர்பிக்ஷ தஸ்கரா -என்றும்
நாட்டிலுள்ள பாவமெல்லாம் சும்மெனாதே கைவிட்டு ஓடித் தூறுகள் பாய்ந்தனவே -என்றும் சொல்லுகிறபடியே –
(யத்ராஷ்டாக்ஷரஸம் ஸித்தோ மஹா பாகோ மஹீயதே –
ந தத்ர ஸஞ்சரிஷ்யந்தி வ்யாதி துர்ப்பிக்ஷ தஸ்கரா; என்று
திருவெட்டெழுத்து வல்லனொருவனிருந்த நாடு ஸம்ருத்தமாயிருக்கும் -நோய் பஞ்சம் திருடர் -மூன்றுமே இருக்காதே
ஓம் அர்த்தம் புரிந்தால் திருட்டு போகும் -அநந்யார்ஹ சேஷ பூதன் அறிந்தால் பிறர் நன் பொருளை அபகரிக்க மாட்டோம்
நமஸ் அர்த்தம் புரிந்தால் பஞ்சம் தொலையும் -அநந்ய சரண்யத்வம்
நாராயாணாயா அர்த்தம் புரிந்தால் வியாதி தொலையும் -அநந்ய போக்யத்வம்
மூன்று பத அர்த்தங்களை ஸூ சகம் -மூன்று அடிகள் -திரிவிக்ரமன் –
முதலில் ஏஷ நாராயணன் -அடுத்து ஷீராப்தி நிகேதன் -பின்பு தானே ஆகதோ மதுரா நிலையன் –
நேராக சொல்லாமல் த்ரிவிக்ரமன் -ராமன் -கிருஷ்ணன் -இப்படி மூன்று பாசுரங்கள் –
இது முதல் பேர் பாடுதல் தொடக்கம் -)
ஓங்கு பெரும் செந்நெல் –
கவிழ்ந்து நின்று முதலை நட்டு (நாற்று நட்ட பின்பே )அனந்தரம் அண்ணாந்து பார்க்க வேண்டுகை –
செய் கொள் செந்நெலுயர் -என்னுமா போலேயும்-
வரம்புற்ற கதிர்ச் செந்நெல் -(பெரியாழ்வார் 4-9)என்னுமா போலேயும்
ஓங்கு பெரும் செந்நெல்
சுற்றுடைமையும் -ஓக்கமும் -வரம்புக்கு அவ்வருகே போக ஒண்ணாமையாலே
ஒரு முதலே செய் யுள்ளது அடையக் கொண்டு
ஆகாசத்துக்கு எல்லை இல்லாமையால் மேல் நோக்கி உயரா நின்றது -என்கை
ஓங்கு பெரும் செந்நெல்
வ்ருஷே வ்ருஷே பஸ்யாமி (மாரீசன் எங்கு பார்த்தாலும் ராமனாகவே பார்த்தால் போல் )
ஊடு கயலுகளப்
பயிர் நெருக்கித் தனையும் ஆனைக் கன்று போலே செருக்கித் திரிகிற
கயல்களுக்குத் தாவித் திரியலாம் என்கை –
திரு யுலகு அளந்து அருளின எம்பெருமானைக் கண்டு அனுகூலர் செருக்கி ப்ரீதிக்குப் போக்குவிட்டு
சஞ்சரிக்குமா போலே கயல்கள் திரிகிற படி –
(ஆழி எழ சங்கும் வில்லும் எழ -ஜாம்பவான் பறை கொட்டி ஆர்பரித்தால் போல் இங்கு கயல்களும்)
பூங்குவளைப் போதில்
அழகிய குவளை பூவிலே –
போது என்று கால பரமாகவுமாம்
கயல்களுடைய சஞ்சாரத்தால் பூக்கள் கட்டு நெகிழ்கிற படி
பொறி வண்டு
ரசாயன சேவை பண்ணினாரைப் போலே நரைதிரை மாறி இளகிப் பதித்து இருக்கை
இவர்களுக்கு அங்குள்ளது எல்லாம் உத்தேசியமாய் இருக்கை
கண் படுப்ப-
ஒரு மஹா பாரதத்தை நினைத்து வந்து ஏறிப் படுக்கையிலே ஸூகத்தாலே உறங்கி விடிந்தவாறே உணர்ந்து
நீ எழுப்பிற்றிலை நீ எழுப்பிற்றிலை என்று தன்னில் தான் (ஆண் வேண்டும் பெண் வேண்டும் )சீறு பாறு -என்கை
கிருஷ்ணனும் பெண்களும் படுவது எல்லாம் படா நிற்கும்
பள்ளி கமலத்திடைப் பட்ட இத்யாதி –
(வள்ளி கொழுநன் முதலாய மக்களோடு முக் கணான்
வெள்கியோடே விறல் வாணன் வியன் தோள் வனத்தைத் துணிந்து உகுந்தான்
பள்ளி கமலத்திடைப் பட்ட பகுவாய் அலவன் முகம் நோக்கி
நள்ளி யூடும் வயல் சூழ்ந்த நறையூர் நின்ற நம்பியே—-6-7-6-)
தேங்காதே புக்கிருந்து
இனி ஊரில் ஸம்ருத்தி சொல்கிறது
தேங்காதே
திருவடி சமுத்திர தரணத்துக்கு ஒருப்பட்டால் போலே புக்கு –
கடலிலே முழுகுவார் கடலுக்கு இறாயாதாப் போலே யாய்த்து இறாயாதே புக்க படி –
தேங்காதே புக்கு
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்னும் விஷயத்தை –
அத் தலையை உண்டாக்குகைக்காக தம் குற்றம் பார்த்து இறாயாதே ஸ்வீ கரிக்குமா போலே(நைச்யம் பாவித்து நீங்கக் கூடாதே )
இருந்து
பால் ஸம்ருத்தி யாலே தேங்கும் அத்தனை –
பால் வற்றி எழுந்து இருக்க விரகில்லை-ஸ்தாவர ப்ரதிஷ்டை
தீர்த்த முலை பற்றி
விரலால் பிடிக்க ஒண்ணாது –
இரண்டு கையாலும் அணைக்க வேண்டி இருக்கை
பற்றி வாங்க
தொட்டு விட அமையும்
வாங்கக் குடம் நிறைக்கும்
ஒரு கால் பற்றி வலிக்க இட்ட குடங்கள் நிறைக்கை-
வைப்பார் தாழ்வே –
வைத்த குடம் எல்லாம் நிறைக்கும் என்றுமாம்
வள்ளல் –
சிறு பிள்ளைகளுக்கும் கட்டி விடலாய் கழுத்தைக் கட்டிக் கொண்டு நாலலாம் படி இருக்கை –
பெரும் பசுக்கள்
கண்ணன் குழலோசையை அசையிட்டு வளருகையாலும் –
அவனோட்டை ஸ்பர்சம் உண்டாகையாலும் ஸ்ரீ சத்ருஞ்சயனைப் போலே இருக்கை
நீங்காத செல்வம் –
ஈஸ்வரன் பார்த்த இடம் போலே சாவதி அன்று இறே இவர்கள் பார்த்த இடம் –
புண்யம் அடியாக வருதல் ஈஸ்வர கடாக்ஷம் அடியாக வருதல் செய்யுமவை போல் அன்று
அவனுடைய ஐஸ்வர்யத்துக்கு அடியான கடாக்ஷம் உள்ளவர்கள் இறே இவ்வைஸ்வர்யத்துக்கு அடி
(இவர்கள் -கடி மலர்ப் பாவைக்கு ஒப்பு உள்ளவர்கள் அன்றோ)
நிறைந்தேலோ ரெம்பாவாய் —
உத்தமன் –
பட்டர் அருளிச் செய்த வார்த்தை –
கரு மணியாய் இரந்த கள்வனே உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு-(இரண்டாம் திருவந்தாதி -61)என்று
சிறு காலைக் காட்டி இரந்து பெரிய காலைக் கொண்டு அளந்து
நீ பண்ணின ஓரம் உன்னை ஆஸ்ரயித்தார் நிர்ப்பரராகைக்கு அவர்களுக்கு நீ வைத்த சந்தானச் சாபம் இறே –
(ஒரு சந்தானம் வைத்து வளர்ப்பது போல் விஸ்வாஸம் ஒன்றாலே உஜ்ஜீவனம்)
இவ்வாந்தராளிகர்(இடைப்பட்டோர் -இங்கு இடையர் என்றபடி )த்ருஷ்டா த்ருஷ்டங்களில் ஒருவர்க்கு அஞ்சாதே
யமாதிகளுக்கு முழங்கை காட்டிச் செருக்கராய் இவர்கள் திரிகைக்கு அடி என் என்னில் அறிந்தோம் –
ஒரு பரம தார்மிகன் செவியிலே துரப்பலரான நம்மால் நம் கார்யம் நிர்வஹித்துக் கொண்டு கரையிலே ஏற ஒண்ணாது –
உன்னுடைய ரக்ஷணத்துக்கு ஒரு பிரபலனை அண்டை கொண்டு
த்ருஷ்டா அதிருஷ்ட விஷயமான உன்னுடைய யத்னங்களை யடைய அவன் வசத்திலே பொகட்டு நிர்ப்பயனாய் இரு என்று சொல்லிப் போம் –
இவனும் அத்தையே விஸ்வஸித்து அப்படியே என்று இருக்கும் –
எம்பெருமான் கழுத்திலே ஓலை காட்டித் தூது போயும் மார்பிலே அம்பேற்றும் சாரத்யம் பண்ணியும்
பகலை இரவாக்கியும் சத்ய ப்ரதிஞ்ஞனாயும் அசத்ய ப்ரதிஞ்ஞனாயும் பொய் சொல்லியும் மெய் சொல்லியும்
வார்க்கொத்துக் (கொல்லா மாக்கோல )குத்தியும் எல்லை நடந்தும் – இங்கன் ஒத்த செயல்களைச் செய்து இவர்கள் காரியமே நிர்வஹியா நிற்கும் -என்றார் –
மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியில் வாழலாம் மட நெஞ்சமே -என்று திருமந்த்ரத்துக்கு அர்த்தமாக
மண் முழுதும் அகப்படுத்து நின்ற வெந்தை மலர் புரையும் திருவடியே வணங்கினேன் என்று அனுசந்தித்தால் போலே
இவளும்-
ஓங்கி உலகளந்த உத்தமன் -என்று திரு நாமத்தினுடைய அர்த்தத்தை முந்துற அனுசந்தித்து
பின்னை அதுக்கு வாசகமான -திரு மந்த்ரத்தை பாடி -என்கிறாள் –
(மந்த்ரத்திலும் மூன்று பதம் -இவனும் கண்ணால் மூன்று பதம் காட்டினானே)
(மூன்று எழுத்து அதனை மூன்று எழுத்து அதனால் மூன்று எழுத்தாக்கி மூன்று எழுத்தை
ஏன்று கொண்டு இருப்பார்க்கு இரக்க நன்குடைய வெம் புருடோத்தமன் இருக்கை
மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்றுரு ஆனான்
கான் தடம் பொழில் சூழ் கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடி நகரே –பெரியாழ்வார் -4-7-10-)
—————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply