ஈராயிரப்படி –
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற் கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மை இட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்–2-
பதவுரை
வையத்து–இப் பூமண்டலத்தில்
வாழ்வீர்காள்–வாழ்ந்திரா நின்றுள்ளவர்களே!
நாமும்–(எம்பெருமானாலேயே பேறு என்ற அத்யவஸாய முடைய) நாமும்
உய்யும் ஆறு எண்ணி–உஜ்ஜீவிக்கும் வழியை ஆராய்ந்து,
பால் கடலுள் பைய துயின்ற பரமன் அடி பாடி–திருப்பாற்கடலில் அவதாநத்துடன் கண் வளர்ந்தருளா நின்ற
பரமபுருஷனுடைய திருவடிகட்கு மங்களாசாஸணம் பண்ணி
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி–(ஆசார்யாதிகளுக்கு இடு கையாகிற) ஐயத்தையும்,
(ஆர்த்தர்கட்கு இடுகையாகிற) பிக்ஷையையும் சக்தியுள்ளவளவும் இட்டு
உகந்து–மகிழ்ந்து
ஈம் பாவைக்கு செய்யும்–நமது நோன்புக்கு (அங்கமாகச்) செய்ய வேண்டிய
கிரிசைகள்–க்ரியைகளை
கேளீர்–காது கொடுத்துக் கேளுங்கள்
நாம்–நோன்பு நோற்கத் தொடங்கின நாம்
நெய் உண்ணோம்–நெய் உண்ணக் கடவோமல்லோம்;
பால் உண்ணோம்–பாலை உண்ணக் கடவோமல்லோம்;
நாட்காலே நீர் ஆடி–விடியற் காலத்திலேயே ஸ்நாநஞ்செய்து விட்டு
மை இட்டு எழுதோம்–(கண்ணில்) மையிட்டு அலங்காரம் பண்ணக் கடவோமல்லோம்;
மலர் இட்டு முடியோம்–(குழலிற்) பூ வைத்து முடிக்கக் கடவோமல்லோம்;
செய்யாதன–(மேலைத் தலைவர்கள்) செய்யாதவற்றை
செய்யோம்–செய்யக் கடவோமல்லோம்;
தீ குறளை–கொடிய கோட் சொற்களை
சென்று ஓதோம்–(எம்பெருமானிடத்துச்) சென்று கூறக் கடவோமல்லோம்;
ஏல் ஓர் எம்பாவாய்
வையத்து வாழ்வீர்காள்-
வழியடி யுண்கிற தேசத்திலே முடி வைத்துக் கொண்டு இருக்கிற பாக்யவதிகாள் –
கிருஷி பண்ணும் பூமியிலே பலம் புஜிக்கப் பிறந்த பாக்யவதிகாள் –
நாமும் –
இந்தப் பலம் நமக்கு ஒரு நாள் கை வரவற்றே என்று இருந்த நாமும்
(அவனாலே அவனை அடைவோம் என்று விஸ்வசித்து உள்ள நாமும் )
நம் பாவைக்கு
நம்முடைய நோன்புக்கு
இந்த்ரஜித்து நிகும்பிலையிலே ஹோமம் பண்ணினாலே போலே அன்றிக்கே
சக்ரவர்த்தி நாலாஹூதி பண்ணி நாலு ரத்னங்களைப் பெற்றால் போலே
நமக்கும் நோன்பு கூடுவதே -என்று கொண்டாடுகிறார்கள்
செய்யும் கிரிசைகள் –
செய்து தலைக் கட்டும் கிரியைகள்
கேளீரோ
கேட்க்கை தானே உத்தேச்யம் –
ஸ்ரீ நாரத பகவான் ஸ்ரீ ராமாயணத்துக்குப் போக்கு விட்டால் போலே சொல்லி அல்லது
தரிக்க ஒண்ணாதாய் இருக்கிற படி
(ஒரே கேள்விக்கு சங்க்ஷேப ராமாயணம் –32- ஸ்லோகம் அருளிச் செய்தார் அன்றோ தாம் தரிக்கைக்காக )
இவள் ஆச்சார்யத்வம் ஆசைப்பட்டு அன்று
இவர்கள் -சொல்லாய் என்னச்- சொல்லுகிறிலள்-
பாற் கடலுள்-பையத் துயின்ற –
திருப் பாற் கடலிலே ஆர்த்தருடைய ஆர்த்த நாதம் செவிப்படும்படி அவஹிதனாய்க் கொண்டு
மெத்தெனக் கண் வளர்ந்து அருளினை படி –
ஜகத் ரக்ஷண சிந்தை இறே –
(ஜம்போதீபம் நாம் இருப்பது -இத்தைச் சுற்றி உப்புக் கடல் -சப்த த்வீபங்கள் உண்டே -ஆறாவது த்வீபம் பின்பு
ஆறாவது கடல்-திருப் பாற் கடல்-கூப்பீடு கேட்க்கும் இடம் )
துயின்ற பரமன் –
உறக்கத்துக்கு ஆலத்தி வழிக்க வேண்டி இருக்கை –
நம் பாற் கடல் சேர்ந்த பரமன்–(திருவாய் -3–7–1- )-இறே –
கிடந்தோர் கிடக்கை-(திருமாலை -23-) இறே
அநாஸ்ரிதற்கு புலி உறங்கினால் போலே -ஆஸ்ரிதற்கு என்றும் அபயமாய் இருக்கும்
தொட்டில் கால் கடையிலே படுத்துக் கொள்ளும் தாயைப் போலே சம்சார ஆர்ணவத்தின் நடுவே கிடக்கை
பரமன் –
தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே திருவனந்த ஆழ்வான் மேலே சாய்ந்த பின்பு நிறம் பெற்ற படி
பரமன் அடி பாடி-நெய்யுண்ணோம் பாலுண்ணோம் –
உண்டார்க்கு உண்ண வேணுமோ –
பாலைக் குடித்து வேப்பங்காயைத் தின்ன வேணுமோ
ஆனால் கிருஷ்ணனைச் சொல்லாதே ஷீரார்ணவ சாயியைச் சொல்லுவான் என் என்னில் –
கோப வ்ருத்தர்கள் தளும்பாமைக்காக ஒரு தேவதையின் பேரிட்டுச் சொல்லுகிறார்கள் –
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் –
திருவடிகளை பாடுகையாலே தெகுட்டி-இவற்றால் கார்யம் இன்றிக்கே இருக்கை –
நெய்யுண்ணோம் -என்கிறது
கிருஷ்ணன் பிறந்த பின்பு முதலிலே வ்யுத்பத்தி இல்லாமை –
நெய்யுண்ணோம் –
பாலில் சாரமான நெய்யைத் தவிர்த்தவர்கள் பாலைத் தவிர்க்க கேட்க வேணுமோ –
நாட்காலே நீராடி-
ப்ராஹ்மே முஹுர்த்தே -இத்யாதி படியே ராம விரஹத்தாலே பிறந்த வெக்கையை ஆற்றுகைக்காக
ஸ்ரீ பரத ஆழ்வான் நீராட்டுப் போலே
கிருஷ்ணம் விரஹம் தின்ற உடம்பை நீரிலே தோய்க்க வென்கிறார்கள் –
சாத்விக அக்ரேஸர் எழுந்து இருக்குமா போலே எழுந்து இருக்கை –
மை இட்டு எழுதோம் –
அஸி தேக்ஷணைகளாகையாலே வேண்டுவது இல்லை –
அஞ்சன பர்வதத்தின் அந்தராத்மாவைப் பிடித்தாய்த்துக் கொள்ளீர் இவள் மை எழுதுவது –
(பக்தி சித்தாஞ்சனமே -கண்ணனையே பூசிக் கொண்டவர்கள் அன்றோ –
அஞ்சன-மைப்படி மேனி -அந்தராத்மா -ஸ்வரூபத்தையே கைக் கொண்டவர்கள் அன்றோ )
மலரிட்டு நாம் முடியோம்
மாலை முடியோம் –
பறப்பதின் குட்டி தவளுமோ
சூடிக் களைந்தன சூடுவார்கள் இறே –
மாலா காரர் மகள் இறே
(நாமாகவே முடியோம் -அவன் சூட்ட வந்தால் முடிந்து கொள்வோம் என்றுமாம் )
செய்யாதன செய்யோம்
விதி யுண்டே யாகிலும் பூர்வர்கள் ஆசரித்த படியை ஒழிய செய்யக் கடவோம் அல்லோம்
முடி சூடுகை சிஷ்டாசாரம் அல்ல என்று இருந்த ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே
பஞ்ச லக்ஷம் குடியிலே உள்ள பெண்களிலே
ஒருத்தி குறையிலும் கிருஷ்ணன் பக்கல் போகோம் என்கிறார்கள் –
(போவான் போகின்றாரைக் காத்து உன்னைக் கூவுவான் வந்தோம் என்பவர்கள் அன்றோ )
தீக்குறளை சென்று ஓதோம்
நம்மில் நாம் பேய்ப் பெண்ணே என்று சொன்னமே யாகிலும்
கிருஷ்ணன் செவி கேட்க ஒரு குறை சொல்லோம்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கல் தோஷம் கண்டால் கண்டது நெஞ்சோடு கூட்டோம் என்கிறார்கள்
நெஞ்சோடு கூட்டுகையாவது -அவனுக்குச் சொல்லுகை
என் நெஞ்சகம் கோயில் கொண்ட -(பெரிய திரு மொழி -9-5-10 )-இறே
அந்தர்யாமி -இறே
என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -(திருவாய் -10-8-6 )-இறே
ஆகையால் நெஞ்சோடு கூட்டோம் என்கிறார்கள் –
ஐயமும் பிச்சையும் –
முகந்து இடுகையும் பிடித்து இடுகையும்
ஐயமாவது யோக்கியருக்கு இடுமது
பிச்சையாவது சன்யாசிகளுக்கு இடுமது
(பாகவத வைபவம் சொல்வதும் பகவத் வைபவம் சொல்வதும் என்றுமாம் )
ஆந்தனையும் –
கொள்வாரைப் பெருந்தனையும் -கொடுக்கக் கொள்ளுவார் கொள்ள வல்லார் ஆந்தனையும்
கை காட்டி
எல்லாம் கொடுத்தாலும் -நாம் கொடுத்தது உண்டோ -என்று அத்தை அநாதரிக்கை –
ஓவ்தார்யத்தின் மிகுதி இருக்கிறபடி
உய்யுமாறு எண்ணி –
இப்படிகளாலே பிழைக்கும் விரகு எண்ணி
உகந்து
ப்ரீதைகளாய்
எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்
அனுபவிக்கும் படியை மநோ ரதித்து
உகந்து செய்யும் கிரிசைகள் கேளீரோ என்று அந்வயம் –
————————————————–
நாலாயிரப்படி -அவதாரிகை –
விடுமவற்றை விடுகையும் – செய்யுமவற்றை செய்கையும்- இரண்டும் பிரியமாகையாலே-
க்ருத்ய அக்ருத்ய விவேகம் பண்ணுகிறது –
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற் கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மை இட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்–2-
வையத்து வாழ்வீர்காள் —
கொடு உலகம் -என்ற இவ் விடத்தே வாழப் பெற்ற பாக்யவதிகாள் –
இங்கே இருந்து ப்ராக்ருத போகங்களை புஜிக்கிற உங்களுக்கு –
மேல் சொல்லுகிற அப்ராக்ருத போகம் இவ் வுடம்போடே சித்திப்பதே -என்கிறார்கள் –
இங்கே கிருஷ்ண குணங்கள் ஆழ மோழையாய்ச் செல்லா நிற்க வானிலே போய்ச் சிறை இராதே –
அந்த இருப்பு தட்டில் (பெரிய வீட்டுச் சிறை )இருப்பாரைப் போலே -இது ராஜ்ய பிராப்தி போலே –
அவன் காற் கடைக் கொண்ட பரம பதம் ஒழிய இங்கே பிறக்கப் பெற்றிகோளே-என்கிறது
அயோத்யாம் அடவீம் வித்தி –
(ராமம் தசரதம் வித்தி மாம் வித்தி ஜநகாத் மஜாம்
அயோத்யாமடவீம் வித்தி கச்ச தாத யதா ஸூகம் -அயோத்யா -40-8-
ஸ்ருஷ்டத்வம் வனவாஸாய -ராமம் தசரதம் வித்தி -ஸ்ரீ ராமனை தசரத சக்ரவர்த்தியாக நினைத்திரு
மாம் வித்தி ஜநகாத் மஜாம் -ஸீதா பிராட்டியை நானாக நினைத்திரு
அயோத்யாமடவீம் வித்தி -அடவீம் அயோத்யாம் வித்தி -காட்டை அயோத்யா பட்டணமாக நினைத்திரு
கச்ச தாத யதா ஸூ கம் –தாத யதா ஸூ கம்-கச்ச -குழந்தாய் ஸூ கமாக செல்வாயாக –)
(அங்கு பெருமாள் தண்டகாரண்யம் -இங்கு கண்ணன் பிருந்தாவனத்தில் வந்த பின்பு அங்கு செல்வார் உண்டோ)
வாழ்வீர்காள் –
திரு அயோத்யையிலே உள்ளாரைப் போலே வாழக் கோலிப்
பதினாலு ஆண்டு தரைக் கிடை கிடந்தால் போலே கிடத்தல் –
அவர்களைப் போலே வாரிப் பிடியாகப் பிடியுண்டு போய் அநர்த்தப் பட்டால் போலே படுதல் செய்யாதே
அவனோடு ஓக்கப் பிறந்த பாக்யவதிகள் அன்றோ
திருவடி -பாவோ நான்யத்ர கச்சதி -என்று இலனோ -(அநர்த்தப்படாமல் தப்பித்த திருவடி மட்டும் )
அச்சுவை பெறினும் வேண்டேன் (திருமாலை )-என்றும்
வானுயர் இன்பம் -என்றும்
அவ்விடம் இவர்களுக்கு சம்சாரமாய்த்து -அவன் இருந்த இடத்தே வாழலாம் அத்தனை இறே-
சேதனனுக்கு அரிதான இடம் –
இவ்விடம் அவன் தானே வந்து தன்னைப் பெறுகிற விடமான தன்னேற்றம் உண்டு
(யானும் நீ தானே யாவதோ மெய்யே அரு நரகவையும் நீ யானால்
வானுயரின்பம் யெய்திலென் மற்றை நரகமே யெய்திலென் எனினும்
யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நானடைதல்
வானுயரின்பம் மன்னி வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே–8-1-9-)
உயர்வற உயர்நலம் யுடையவன் -என்ற போது தெளிவோடு இருந்தவர் –
உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு -என்ற போது -எத்திறம் -என்று மோஹித்தார்-
தெளியப் பண்ணும் விஷயமே மோஹிக்கப் பண்ணும் –
விஷயமோ சீரியது -அங்கு அவனைத் தொழும் அத்தனை –
இங்கு தொழுகையும் இவை கண்ட யசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாள்-என்று
அவன் தொழவும் காணலாம் –
ஆகையால் அன்றோ இங்குள்ளார் -விண்ணுளாரிலும் சீரியராய்த்து
வாழ்வீர்காள்
என்கிற பன்மையாலே ஒரு விபூதியாக பகவத் அனுபவமே யாத்ரையாய் இருக்குமா போலே
ஊராக இதுவே யாத்திரையாக இருக்கை
அடியோமோடும் நின்னோடும் –வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல்-என்று கூட்டுத் தேடினார் தமப்பனார்
இவளுக்கு இங்கே வாழுகைக்கு குழாங்கள் உண்டான படி –
ஏகாம் தரணிம் ஆஸ்ரிதவ்-என்று நீங்களும் அவனும் ஒரே மண்ணிலே பிறக்கப் பெற்றி கோளே -என்றுமாம் –
கிருஷ்ணன் ஒளிக்க வேண்டும் ஆணாகாதே பெண்ணாகப் பெற்றி கோளே
அதுக்கு மேலே பருவம் கழிந்த பெண்களாகாதே அவன் உகக்கும் பருவத்தில் பெண்ணாகப் பெற்றி கோளே -என்றுமாம் –
நாமும்
நமக்கும் சில க்ருத்ய அக்ருத்யங்கள் யுண்டு –
உபாய உபேயங்கள் அவனே யாகையாலே இவை அவற்றில் புகாது
வேறு ஒன்றைக் கொண்டு போது போக்க ஒண்ணாது –
ருசி கிடந்த இடத்திலே கிடக்க ஒட்டாது –
நாமும்
அதனாலே அலமருகிற நாமும் –
நாராயணனே உபாயம் என்று அறுதியிட்டு —
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான் ஓன்று நூறு ஆயிரமாகக் கொடுத்துப்
பின்னும் ஆளும் செய்வன் -என்று பேற்றை அறுதியிட்டு நாமும்
நம் பாவைக்கு
அவனையும் அவன் உடைமையையும் அழிக்க நினைத்த இந்திரஜித்தின் நோன்பு போல் அன்றியே
அவனையும் அவனுடையாரையும் உண்டாக்கும் நோன்பு
பெண்களையும் அவனையும் எழுப்பிக் கூட்டி ஓலக்கம் இருத்திக் காண்கையே பிரயோஜனமாய் இருக்கை –
பெரிய திருவடியைப் போலே சாத்தியமே சாதகமாய் இருக்கை –
(அம்ருதம் தேடப் போன பெரிய திருவடியை வாழ்த்தின விநதா தாய் போல் கௌசல்யை பெருமாளுக்கு மங்களா ஸாஸனம்
சாதனமாக அம்ருதம் கொண்டு வந்தது போல்)
தூய அமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே -(1-7-3)
(விபவ அவதார அனுபவமே ஸாத்யம் -இத்தைக் கொண்டு மயர்வு அறுத்ததால் சாதனமாகவும் ஆனதே)
தர்மம் மேல் பலம் தருமதாய் இருக்கை
ஸூ ஸூகம் கர்த்தும் (அவ்யயம் -ஸ்ரீ கீதை )-கைக்கூலி கொடுக்க வேண்டி இருக்கை –
(ஸ்ரவணம் கீர்த்தனம் இத்யாதிகள் அங்கும் உண்டே இதனாலே -அவ்யயம் -என்கிறான்–அவ்யயம்-பலனைக் கொடுத்த பின்பும் தேயாதே )
(அவதார ரஹஸ்யம் -மே திவ்யம் கர்ம திவ்யம் ஜன்ம -அவனுக்கே திவ்யம் -ஸாத்யம் ஸாதனம் இரண்டுமே ஓன்று ஆனதே)
கரும்பு தின்னக் கருப்புக் கட்டி கூலியாமா போலே -அவ்யயம் -தன்னையும் உபய விபூதியையும் கொடுத்தாலும் போராது
இவன் பண்ணின உபகாரத்துக்கு -என்று இவன் பண்ணின அஞ்சலியை நினைத்து இருக்கை –
(கோவிந்த இதி யத் ஆக்ரந்தத் க்ருஷ்ணா மாம் தூரவாஸிநம்)ருணம் ப்ரவ்ருத்தம் இவ மே-
ந ஜாது ஹீயதே -(ஆளவந்தார் -ஒரு கை கூப்பு -அனைத்தையும் கொடுத்து வீணாகப் போகாமல் விட்டுப் பிரியாமல் இருக்குமே )
(த்வதங்க்ரிம் உத்திஶ்ய கதா’பி கேநசித்
யதா ததா வா’பி ஸக்ருத்க்ருதோ’ஞ்ஜலி |
ததைவ முஷ்ணாத்யஶுபாந்யஶேஷத:
ஶுபாநி புஷ்ணாதி நஜாது ஹீயதே ||–ஶ்லோகம் 28 –
காயிக சரணாகதியைக் குறிக்கும் ஒரு அஞ்சலியை யார் எச் சமயத்தில் எவ்வாறு செய்தாலும், அது எல்லாப் பாபங்களையும்
அடியோடு உடனே போக்கி விடும்; மங்களங்களை வளர்க்கும்; அந்த மங்களங்கள் அழியாமல் இருக்கும்..)
செய்யும் கிரிசைகள் –
விஹிதத்திலே ப்ரதிஷேதம் உள்ளது –
இச்சைக்கு விதேயத்வம் உண்டோ –
நாம் உகந்து செய்யும் க்ருத்யங்கள் –
செய்யும் கிரிசைகள்
மடல் போலே காட்டி நடுவே விடுவது அல்ல -செய்து தலைக் காட்டியே விட வேணும் –
கேளீரோ –
கிருஷ்ணனையும் நம்மையும் சேர சம்மபிப்பதே -இதொரு லாபமே -என்று இத்தைக் கொண்டாட
மேய்ச்சல் தரையிலே அசையிடாதே இத்தைக் கொள்ளுங்கோள் -என்கை –
ஸ்ரூயதாமிதி சாமந்த்ர்ய ப்ரஹ்ருஷ்டோ வாக்யமப்ரவீத் -என்று தொடங்கி-
புருஷார்த்தோய மேவைகோ யத் கதா ஸ்ரவணம் ஹரே -என்னும் அளவும்
மஹா பாரதத்தில் சபாத லக்ஷ க்ரந்தத்திலும் தர்மார்த்த காம மோக்ஷங்களைச் சொல்லி –
இவற்றில் நீ எது புருஷார்த்தமாய் இருந்தாய் -என்று வைசம்பாயன பகவான் தன் சிஷ்யனான ஜனமேஜயனைக் கேட்க
நீ பகவத் குணங்களை சொல்லி நான் கேட்க்கும் அது ஒன்றுமே புருஷார்த்தமாக நினைத்து இருந்தேன் -என்றான்
கேளீரோ
இழிந்த துறை தோறும் ஆழங்கால்-அவர்கள் கேட்க ஷமர் அல்லர் -இவள் சொல்லாது இருக்க ஷமை அல்லள்
இவள் ஆச்சார்யத்வம் ஆசைப் பட்டது அல்ல -அவர்கள் அறியாது கேட்க்கை யல்ல
போதயந்த பரஸ்பம் பண்ண –
ஸம்ஸ்ரவே மதுரம் வாக்யம் –
உங்கள் வயிறு வளர்க்க அமையுமோ என்ன சொல்லீரோ என்றார்கள் –
பாற் கடலுள்-பையத் துயின்ற –
கீழ் நாராயணன் -என்றது -இங்கு அவன் கிடந்த படி சொல்லுகிறது
சதா பஸ்யந்தி -என்று தன்னைப் பிரியில் வாடுமவர்களை விட்டுப் போந்து -சம்சாரிகளோடு கலக்கப் பெறாதே
நடுவே தனியே இவற்றின் ஆர்த்தி தீர்த்துக் கலக்கைக்கு உபாயம் சிந்தித்துக் கிடக்கிறபடி
பையத் துயின்ற
கர்ப்பிணிகள் வயிற்றில் பிரஜைகளுக்கு நோவு வாராமல் சாயுமா போலே அங்கு பிராட்டிமார்களும் கழகங்களுமாய்ச் செல்ல
ஆனைக்குப்பு (சதுரங்கம் )பாடுவாரைப் போலே அநாதரித்து
மஹாபலி போல்வார் நலிந்தார்கள் என்று கூப்பிடும் கால் கேட்டுக் கிடக்கை –
துயின்ற
ஜகத் ரக்ஷண சிந்தை பண்ணுகை
பரமன்
சர்வாதிகன் தன்னை பரார்த்தமாக்கி வைக்கும் குணாதிகன்(அதமன் -மத்யமன் -உத்தமன் -பரம உத்தமன் இதர ஸமஸ்த விலக்ஷணன் )
அடி பாடி
அவன் சேஷித்வத்துக்கு சமைத்தால் போலே யாயத்து சேஷத்வத்துக்கு இவர்கள் சமைந்த படி
இத்தை அடைய (ஜகத் ரக்ஷண சிந்தை -பரார்த்தமாக செய்தவை சேஷித்வம் அனைத்தையும் )அழிக்கிறோம் -என்கை
மடலூர்ந்தால் தலைமை கிடக்கும்-(ஸ்வ பாவம் மாத்திரம் அழியும் )-ஆர்த்திக்கு உதவிற்றிலன் என்னில் ஸ்வரூபம் அழியும்
அடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் –
உண்டார்க்கு உண்ண வேணுமோ –
உண்ணா நாள் பசியாவது ஒன்றில்லை –
கூறை சோறு இவை வேண்டுவது இல்லை –
எல்லாம் கண்ணன் –
உண்ணோம்
என்கிற இது கிருஷ்ணன் பிறந்த பின்பு உண்ணக் கடவதோ– குடிக்கக் கடவதோ-என்று வியுதப்பத்தி இல்லாமை
இவர்கள் பர்த்தாக்கள் காம ரசம் அறியலாய்த்து இவர்கள் இது அறிவது
இவர்கள் பட்டினி அவனை பட்டினி கொள்கை இறே(ரக்ஷணமே அவனுக்கு ஊண் )
ஆண்களும் அகப்பட- ந மே ஸ்நானம் -என்னக் கடவ அவன் -(கைகேயி புத்திரனான பரதனை விட்டு குளிக்க மாட்டேன் பாஞ்ச ஜன்ய அம்சம் )
பெண்கள் மாசுடை யுடம்போடு தலை யுலரி –நாச் -1–8- என்று தரிக்க வல்லனோ –
(மாசுடை யுடம்போடு தலை யுலறி வாய்ப் புறம் வெளுத்து ஒரு போதும் உண்டு
தேசுடைத் திறலுடைக் காமதேவா நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்
பேசுவது ஓன்று இங்கு உண்டு எம்பெருமான் பெண்மையைத் தலை யுடைத்தாக்கும் வண்ணம்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப் பேறு எனக்கு அருள் கண்டாய் –1-8-)
நாட்காலே நீராடி-
நாம் முற்பட்டு அவன் மநோ ரதத்தை அசத் கல்பம் ஆக்குவோம்
ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே விரஹ தாபம் தீர –
மை இட்டு எழுதோம்
மைய கண்ணாள் ஆகையால் மங்களார்த்தமாக இடுமத்தனை –
எம்பெருமான் பூர்ணனாய் இருந்து வைத்து இவற்றின் (சேஷ பூதர் சத்தைக்கும் சேஷ உபகரண ) சத்தை யுண்டாக்கைக்காக அடிமை கொள்ளுமா போலே
இவர்களும் அவன் சத்தைக்காக அடிமை செய்வர்கள் –
இப்போது அது செய்யோம் -அவனைத் துடிப்பிக்கிறோம் என்று கருத்து –
மலரிட்டு நாம் முடியோம்-
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்த சூடும் இத்தொண்டர்களோம்-என்னுமவர்கள் ஆகையால்
சேஷத்வம் இவர்களுக்கு ஸ்வரூபம்
நாம் முடியோம்
அவன் சூடி (கொண்டை) கட்டி ஒப்பிக்கில் இவர்களுக்கு செய்யலாவது இல்லை –
ப்ருந்தா வனத்தே கொடு புக்கு மாலையைச் சூடி ஆணையிட்டு விரல் கவ்வி –
கொண்டையை அவிழாதே கொள்-என்னில் செய்யலாவது இல்லை –
நமக்கு அபேக்ஷை இல்லாமையால் புருஷார்த்தம் அன்று -அவன் தீம்பாலே செய்யில் செய்யும் அத்தனை –
செய்யாதன செய்யோம் –
முன்பு அநீதிகள் செய்து இப்போது தவிர்க்கிறோம் என்கிறார்கள் அல்லர் –
ஸ்ரீ பரத ஆழ்வான் முடி சூடுகைக்கு எல்லாப் படியாலும் வழக்குண்டாய் இருக்க
இக் குடியில் செய்து போராதது செய்யேன் -என்றால் போலே பூர்வர்கள் செய்யாதனகள் தவிருகை –
ஆழ்வானை தேவரீர் தேவதாந்த்ர பஜநம் பண்ணாது ஒழிகிறது என் என்ன –
எங்கள் பூர்வர்கள் செய்து போந்திலர்கள் என்றார்
இவர்களுக்கு இவை யல்ல பொருள்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் முன்னிலையாக அல்லது எம்பெருமானைப் பாடப் புகோம் -என்று இருக்கை
நிவேதியத மாம் க்ஷிப்ரம்
பிதாமஹம் நாத முனிம் விலோக்ய ப்ரஸீத
ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் ஸ்ரீ பரத ஆழ்வான் முன்னாகத் திருச் சித்ர கூட பர்யந்ததுக்கு போனால் போலே
தீக்குறளைச் சென்று ஓதோம்
பிராட்டி ராக்ஷஸிகள் செய்த தப்பு திருவடிக்கு அருளிச் செய்யாதே மறைத்தால் போலே
தம்மில் தாம் ப்ரணய ரோஷத்தாலே
ஏதேனும் தப்புப் புகுந்தாலும் எம்பெருமானுக்கு அறிவியாமை
சென்று ஓதோம்
கண்ணால் கண்டது நெஞ்சோடு கூட்டோம் -அந்தர்யாமி இறே
நினைக்கை யாவது அவனுக்குச் சொல்லுகை
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறியுமவன் இறே
(நினைக்கவே கூடாதே -இதனால் தான் பாகவத அபசாரம் குரூரம் என்கிறார் )
ஐயமும் பிச்சையும்
ஐயம் யோக்யற்கு குருவாகக் கொடுக்குமவை
பிச்சை -சன்யாசிகளுக்கும் ப்ரஹ்மசாரிகளுக்கும் இடுவது
ஆந்தனையும்
அவர்கள் கொள்ள வல்லார் ஆந்தனையும்
கை காட்டி
ஒன்றும் செய்ததாய் இராமை
உய்யுமாறு
சந்தமேநம் -என்று உஜ்ஜீவிக்கக் கடவர்கள்-
கைங்கர்யம் என்றால் உஜ்ஜீவிக்கச் சொல்ல வேணுமோ
(ப்ரஹ்மம் அஸ்தி சத்தாக ஜீவனம் -உள்ளவராக அறிந்த பின்பு கைங்கர்யம் செய்வதே அதுக்கும் மேல் உஜ்ஜீவனம்)
எண்ணி உகந்து-
நின் புகழில் வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ அவர்க்கு வைகுந்தம் என்று
அருளும் வான் -என்று மநோரத மாத்திரமே இனிதாம் விஷயம்
உய்யுமாறு எண்ணி உகக்கை யாகிறது –
தொட்டு உதைத்து நலியேல் கண்டாய்-என்றும்- . குருந்திடைக் கூறை பணியாய் – என்றும்
தாங்களும் அவனும் இட்டீடு கொள்ளும் படியை மநோ ரதிக்கை
ஏலோர் எம்பாவாய்-
—————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply