இரண்டாம் திருவந்தாதி-தனியன் / அவதாரிகை / பாசுரங்கள் 1-10- – -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

திருக்கடல் மல்லையிலே–மலர்ந்த உத் பல்ல புஷ்ப்பத்திலே —
ஐப்பசி -அவிட்டத்தில்-ஸ்ரீ கௌமோதகீ என்னும் திருக் கதையின் அம்சமாக –
ஆவிர்பவித்த ஸ்ரீ பூதத்தாழ்வாரை ஸ்துதிப்போம் –

தநிஷ்டா-அவிட்டம்–கௌமோதகீ -ஆனந்தம் கொடுக்கும் கதாம்சம் –

துலா தநிஷ்டா ஸம்பூதம் பூதம் கல்லோல மாலின
தீரே புல்லோத்பல மல்லா புர்யா மீடே கதாம்சஜம் –

மல்லாபுர வராதீசம் மாதவீ குஸூமோத்பவம்
பூதம் நமாமி யோ விஷ்ணோ ரவிம் தீப மகல்பயத்-

எவர் ஒருவர் பரம புருஷனுக்கு ஞானச் சுடர் விளக்கை ஏற்றினாரோ
கடல் மல்லையின் தலைவராய் -மாதவீ-குருக்கத்திப் பூவில் திரு அவதரித்து அருளினை பூதத்தாழ்வாரை வணங்குகிறேன்

அன்பே தகளி நூறும் அருளினான் வாழியே
ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே
நன் புகழ் சேர் குருக்கத்தி நாண் மலரோன் வாழியே ‘நல்ல திருக் கடல் மல்லை நாதனார் வாழியே
இன்புருகு சிந்தை திரியிட்ட பிரான் வாழியே
எழில் ஞானச் சுடர் விளக்கை ஏற்றினான் வாழியே
பொன் புரையும் திருவரங்கர் புகழ் யுரைப்போன் வாழியே
பூதத்தார் தாளிணை இப்பூதலத்தில் வாழியே –

———

(பூதம் சிரஸ்ஸூ -நம்மாழ்வார் அவயவி
இரும் தமிழ் நூல் புலவர் -இவர் ஸ்ரீ ஸூக்தி கொண்டே –
யானே இரும் தமிழ் நன் மாலை இணை அடிக்கே சொன்னேன் பெரும் தமிழன் நல்லேன் பெரிது –74
இறையும் அகலகில்லேன் -செவ்விப் படிக் கோலம் கண்டு அகலாள் –82-இவரது
அலர் மேல் மங்கை உறை மார்பா -திருமங்கை நின்று அருளும் தெய்வம் -57-
மாலே நெடியானே –100
போன்ற பல ஸ்ரீ ஸூ க்திகள் கொண்டே நம்மாழ்வார் ஸ்ரீ ஸூக்திகளுக்கு இவரதே மூலம்
அன்பிலே ஞானத்தமிழ் -இரும் தமிழ் -தானே கொண்டாடும் படி இவர் திவ்ய பிரபந்தம் )

———-

மூவரும் அடுத்த அடுத்த திரு நக்ஷத்திரத்தில் திரு அவதாரம்
எங்கும் தீர்த்தாரராய் திரிந்து -திருக்கோவிலூரில் -நெருக்கு உகந்த மிதுனம்
பா மாலை பாடி கைங்கர்யம்
மூவரும் பூவில் அவதாரம்
கார்ய காரண பாவம் மூவருக்கும் -மூவருக்கும் -பூ காய் பழம் போல்
பர பக்தி -பர ஞானம் -பரம பக்தி
ஞான -தர்சன -பிராப்தி -ஞானம் த்ரஷ்ட்டும் பிரவேஷ்டும் -கீதை
மூன்றுமே மூவருக்கும் உண்டு –
பூவே காயாகி பழம் -உலகில் ஒன்றே தான் இருக்கும்
இங்கு அப்படி அல்லவே -மூவரும் கூடவே இருந்து -மூன்று மநோ நிலைகளும் உண்டு –

உபய விபூதிநாதன் சர்வேஸ்வரன் -அடையாளம் மட்டும் சொல்லி –
அடுத்தவர் -நாரணற்கு -என்று வியக்தமாகக் காட்டி அருளி –
அடுத்தவர் -மிதுனம் -ஸ்ரீ யபதி -கண்டு பாடி அருளினார்
நம்மாழ்வார் இவற்றை விளக்காகக் கொண்டு -முதல் பத்தில் உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன் –
உபய விபூதி நாதன் ஸர்வேஸ்வரன் என்று காட்டி அருளி
அடுத்த பதிகம் வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே என்று அருளி
மலர்மகள் விரும்பும் நம் திருவுடை அடிகள் -என்று மூன்றாம் பதிகத்தில் மிதுனம் -ஸ்ரீ யபதி காட்டி அருளினார்
திருமழிசை ஆழ்வார் -உறை இடாமல் -திரு வில்லாத் தேவரை தேறேல் மின் –
ஒண் சங்கு கதை வாள் ஆழி -ஆழ்வார்கள் வரிசை
அத்புதம் பாலகம் சங்கு கதை காட்டிய ஸ்லோகம் உண்டே-

இறைவனைக் காணும் இதயத்து இருள் கெட ஞானம் என்னும்
நிறை விளக்கு ஏற்றிய பூதத் திருவடி தாள்கள் நெஞ்சத்து
உறைய வைத்து ஆளும் இராமானுசன் புகழோதும் நல்லோர்
மறையினைக் காத்து இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே – இராமானுஜ நூற்றந்தாதி -9-

இதயத்து-ஸூத்தமான மனஸ்ஸூ தானே -இறைவனைக் காணும் கருவி –
பாபங்கள் காமம் க்ரோதம் -இந்திரியாணி -மனம் புத்தி -ஞானம் மூன்றையும் தாக்கும்
ஞான தீபேண பாஸ்கர -ஆதித்ய வத்-அஞ்ஞானம் இருளை நாசமாக்கி -உள்ளத்தில் இருந்து ஒளி விளக்கு ஏற்றி –
ஆதித்யவது-முதல்திருவந்தாதி – ஞானம்-இரண்டாவது – – ப்ரகாசயத்தி -மூன்றாவது -தத் பரம் -கீதை மூன்று சப்தங்கள்
கீதாச்சார்யன் அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
தேஷாம் -அங்கு சொன்னது முதல் ஆழ்வார்களையே –

இராமானுசன் புகழோதும் நல்லோர்-நம்மாழ்வார் நாதமுனிகள் முற்பட்டவரையும் குறிக்கும்
மறை -சம்ஸ்க்ருத -கூரத்தாழ்வான்
மறை -அருளிச் செயல் -பிள்ளான் முதலோர்-

——————————————————————————————

திரு குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த தனியன் –

என் பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா
அன்பே தகழி யளித்தானை -நன் புகழ் சேர்
சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல் மலை பூதத்தார்
பொன் அம் கழல் –

என் பிறவி தீர இன்னமுதா-இனிய அமுதம் -சாகா அம்ருதம் போல் அல்லவே -மீளாத பேர் இன்பம் அளிக்குமே
அன்பே தகழி யளித்தானை –
நன் புகழ் சேர்-நல்ல கீர்த்தி சேர்ந்த -பெருமாள் ஆழ்வார் ஆச்சார்யர்கள் சேர்ந்த
சீதத்தார் முத்துக்கள் சேரும் -குளிர்ந்த -கடல் முத்துக்கள் தண்ணீர் ஸ்பர்சம் –
கடல் மலை பூதத்தார்
பொன் அம் கழல் -ஸ்ப்ருஹணீயம் -விரும்பத்தக்க அழகிய திருவடிகள் -பாவன போக்யத்வங்கள் இரண்டும் உண்டே –
இறைஞ்சினேன்-முக் கரணங்களாலும் ஸ்துதித்தேன்

இதில் திவ்ய பிரபந்த ப்ரதாதாவுமாய் -திவ்ய தேசத்தை ஜென்ம தேசமாக யுடையாருமாய் இருக்கிற பூதத்தாருடைய
ஸ்ப்ருஹணீயமான திருவடிகளை ஜென்ம சம்பந்தம் அறும் படி (முக்கரணங்களாலும் )பஜித்தேன் என்கிறது –

(திருமங்கை ஆழ்வார் பாகவத சேஷத்வம் அருளிச் செய்த நன்மை
பொன் முத்துக்கள் சேரும் –பெருமாளும் – முக்த பிராயரும் சேர்
கடல் மல்லை பூதத்தார் -கடல் மல்லை தலை சயனப்பெருமாள் -சேஷி சேஷன் இருவருக்கும் நிரூபகமான நன்மை
கடல் வண்ணன் பூதங்கள் -மலிய-கலி கெடுமே )

இன்னமுதாய் -அன்பே தகழி யளித்தாருமாய் –
நன் புகழ் சேர்-சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல் மலை பூதத்தார்
பொன் அம் கழல் களை -என் பிறவி தீர இறைஞ்சினேன் -என்கிறது –

என் பிறவி தீர இறைஞ்சினேன்
என் பிறவி யாவது -இவர் தாம் -இது கண்டாய் நன்னெஞ்சே இப்பிறவி யாவது -66-என்று அருளிச் செய்தபடியே
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -(திருவாய் -2-6-8-)
பல் பிறவியில் படிந்து (படிக்கின்ற யான் -திருவாய் -3-2-2-)
பிறவிப்  பெரும் கடலிலே (பெரிய திருமொழி -8-9-8-)
உடலாழி பிறப்பிலே (திருவாய் -1-4-10)புக்கு உழலுகை
ஏவம் விதமான ஜென்ம பரம்பரைகள்(புனரபி ஜனநம் புனரபி மரணம் என்று ) தீரும்படி ஜென்ம வைபவத்தை யுடைய பூதத்தார் பொன்னம் கழலை இறைஞ்சினேன் என்கிறது
இறைஞ்சுதல் -பஜிக்கை -அதாவது சேவிக்கை என்றபடி (முக்கரணங்களாலும் வணங்குகை )

பொது நின்ற பொன்னம் கழலே தொழுமின் முழு வினைகள் முன்னம் களாலும் முடிந்து -(மூன்றாம் திருவந்தாதி -88)என்னுமா போலே
பூதத்தாழ்வார் பொன்னம் கழற்கு ஆன ஜன்மம் (அத்தாள்களை நெஞ்சத்து உறைத்து இருப்பவர்களுக்கு பிறப்பு இறப்புக்கள் )கழலும் இறே

இனி அவர் உபகாரத்வ வைபவம் சொல்லுகிறது-

இன்னமுதா அன்பே தகளி அளிக்கையாவது-

(அளிக்கை யாவது கொடுக்கை -அதாவது
விலை மதிப்பற்ற மாணிக்கத்தைக் கூவிக் கொடுப்பாரைப் போலே
உத்தமன் பேர் ஏத்தும் திறம் அறிமின் -39-என்று மேல் விழுந்து உபகரிக்கை)

இன்னமுதா அன்பே தகளி அளிக்கையாவது
அமுதன்ன சொன்மாலையான-(இரண்டாம் திருவந்தாதி -85)(தொண்டர்க்கு அமுது என்ன சொன் மாலைகள் சொன்னேன் -திருவாய் -9-4-9 )
இரும்தமிழ் நன் மாலை இணை அடிக்கே சொன்னேன் பெரும் தமிழன் நல்லேன் (14)-என்றும்
நாரணற்கு ஞானத் தமிழ் புரிந்த நான் (1)- என்னும்படியான
அன்பே தகளியா -என்னும் திவ்ய பிரபந்தத்தை
உத்தமன் பேர் ஏத்தும் திறம் அறிமின்(39) -என்னும்படி உபகரிக்கை –

அன்றிக்கே
கொடுக்கை –

கீழே ஞான வைபவம் சொல்லிற்று
இனி ஜன்ம வைபவம் சொல்கிறது மேலே-நன் புகழ் சேர்-சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல் மலை பூதத்தார்-என்று
அதாவது -ஸ்லாக்யமான யஸஸ்ஸூ சேரும் ஊருமாய் –
சீதள அதிசய முக்தாமணிகள் சேரும்படியாய் இருக்குமூர் -சீதக் கடலில் பிறந்த முக்தாதிகளும் சீதளமாய் இருக்கும் இறே
சீதக்கடல் -(பெரியாழ்வார் -1-2-1)என்று குளிர்த்தி நிறைந்த கடலில் தோன்றும் முத்துக்கள் சீதத்தார் முத்துக்களாய் இருக்கும் அன்றோ

நன் புகழ் ஆவது –
(பெருமாள் -புண்டரீக மஹ ரிஷிகள் -ஆழ்வார் -ஆச்சார்யர்கள் சேரும் திவ்ய தேசம் )
நிவாஸ வ்ருஷ ஸாதூ நாம் யசஸ் சைக பாஜனம் (புகழுக்கு ஒரே இருப்பிடமாய் இருப்பவன் ராமபிரான் கிஷ்கிந்தா -15-19-)
சேரும் கொடை புகழ் எல்லை இலானை(திருவாய் -3-9-7)
அந்தமில் புகழ் கார் எழில் அண்ணலே(திருவாய் -3-3-2)
எண்ணிறந்த புகழினானை (பெரிய திருமொழி -2-5-8) -என்னும்படியான
கடல் மலை தல சயனத்து உறைவாரையும்-(தல சயனப் பெருமாளையும் )
எப் புவியும் பேசும் புகழ் (உபதேச ரத்ன மாலை -6)பூதத்தாரையும் உடைத்ததாகையாலும் – உண்டான முத்துக்கள்

(சீதள அதிசய முக்தா மணிகள் சேரும்படியான ஸ்தலம் –
திசைவில் வீசும் செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை (திருவாய் -5-8-9-)என்கிறபடியே
முத்துக்களும்
மணிகளும்
ஸ்வாபதேசத்தில்
ஞானச் சிறப்பாலே உலகம் எங்கும் ஒளி வீசும் பாகவத உத்தமர்களை குறிக்கின்றன
சம தமாதி குணங்களை யுடையவராகையாலே அவர்களையும் சீதத்தார் முத்துக்கள் என்னலாம்
சீதத்தார் முத்துக்கள் சேரும் -இந்நிலத்திலே உண்டான முத்துக்கள்)

இதன் கரையிலே
வந்துதித்த வெண்டிரைகள் வெண் முத்தத்தை கொழிக்கை(மூன்றாம் திருவந்தாதி -16)
மா மணி வந்து உந்து முந்நீர் மல்லையிலே-(திரு நெடும் தாண்டகம் -9)

சங்கிடம் கொள் முத்து ஒன்றும்
கரை கடந்த முத்தொன்றும் -சேரும் ஸ்தலம் –

(சங்கிடம் கொள் முத்து ஒன்றும்-சங்கை இடக்கையில் கொண்ட எம்பெருமான்
சங்கில் முளைத்த முத்து என்றுமாம்
கரை கடந்த முத்தாகிற ஆழ்வார் -இருவரும் சேரும் இடம்)

இக்கரை ஏறி -என்னக் கடவது இறே(அக்கரை என்னும் அநர்த்தக் கடலுள் அழுந்திக் கிடந்தேனை உன் பேர் அருளால் இக்கரை ஏறி -பெரியாழ்வார் -5-3-7))
கரை கண்டார் (திருவாய் -8-3-10)என்னும்படியான முக்தர் ஆயிற்று இவரும்

கடல் மலை –
விலஷண வஸ்துக்கள் சேரும் ஸ்தலம் –
சங்கு தங்கு தடம் கடல் கடல் மல்லை (யுள் கிடந்தாய் -பெரிய திருமொழி-2-5-8 ) இறே
மா மல்லை என்று இறே இவர் தாமும் மண்டி இருப்பது

(திருமங்கை மன்னன் அருளிச் செய்த பெருமையால் இவரும் தமர் உள்ளும் மா மல்லை (70 )-என்று ஈடுபட்டார் )

கச்சிக் கிடந்தவனூர் கடல் மலை தல சயனம் -(பெரிய திருமொழி -2-6-5 )என்று (கச்சியையும் கடல் மல்லையையும் )அடுத்தடுத்து படிக்கும் படி தேசமாக இறே பாடினார்
ஆகையால் அவன் படுகாடு கிடக்கும் தேசம் என்கிறது

(பொய்கையார் பூதத்தார் -அடுத்து அடுத்து அவதாரம் -அவன் படுகாடு கிடந்தது இவர்களை அவதரிப்பித்து நம்மை அடைய கோர மா தவம் செய்கிறான்)

கடல் மல்லை  பூதத்தார் –
தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதம் -(திருவாய் -5-2-4)
பாற்கடல் மேல் பாம்பணை மேல் பள்ளிக் கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே -(திரு விருத்தம் -79)என்னக் கடவது இறே
இண்டை கொண்டு தொண்டர் ஏத்த வெவ்வுள் கிடந்தான் (பெரிய திருமொழி -2-2-10)என்கிறபடியே
மிக்க சீர் தொண்டரான (பெரிய திருமொழி-11-1-9)புண்டரீகர் –
வண்டு கிண்டு நறும் துழாய் அலங்கல் கொண்டு (பெருமாள் திரு மொழி -2-8)சாத்தக் கிடந்த இடம் இறே

கடல் மலை பூதத்தார் –
திருக்கடல் மல்லையிலே குருக்கத்திப் பூவிலே ஐப்பசி அவிட்டத்தில் திருவவதாரம்
இவரும் இரும் தமிழ் நன் மாலை இணை அடிக்கே சூட்டினார் (74-புண்டரீகர் பூ மாலை சூட்ட )இறே –
அத்தை இட்டு -கடல் மலை பூதத்தார் -என்கிறது
அவனுக்கும் -கடல் மலை தல சயனது உறைவார் -( பெரிய திருமொழி -2-6-4)என்று இறே நிரூபகம்

பூதத்தார் பொன் அம் கழல் இறைஞ்சினேன் –
மேவினேன் அவன் பொன்னடி (கண்ணி-2)-என்னுமா போலே
தமிழ் தலைவன் பொன்னடி (இராமானுச -10 )-என்னக் கடவது இறே

பொன் அம் கழல் என் பிறவி தீர இறைஞ்சினேன் –
இவர் பொன்னடி யடியாக விறே ஜன்ம சம்சார பந்தம் நீங்குவது

இத்தால்
பூதத்தார் பாதத்தை பணியவே பிறப்பறும் என்றதாயிற்று-

—————————————————————————————————-

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் அருளிச் செய்த அவதாரிகை –

கீழில் திருவந்தாதியில்
உபய விபூதி நாதனாய்
சர்வ ஸ்மாத் பரனாய் இருக்கிற சர்வேஸ்வரனுடைய
ஸ்வரூப ரூப குண விபூதிகளைத்
தன் நிர்ஹேதுக கடாக்ஷ விசேஷ லப்தமாய்
பரபக்தி தசா பன்னமான ஞான விசேஷத்தாலே சாஷாத் கரித்து அனுபவித்து
அனுபவ ஜெனித ப்ரீதி பிரகர்ஷத்தாலே அனுபவித்த படியே
ச விபூதிகனான எம்பெருமானைப் பேசி
ப்ராப்தாவான ஆத்மாவினுடைய சேஷத்வமான ஸ்வரூபத்தையும்(வாய் அவனை அன்றி வாழ்த்தாது இத்யாதியால் )
சேஷியான எம்பெருமான் திருவடிகளிலே பண்ணும் நித்ய கைங்கர்யமே ஸ்வரூப அனுரூபமான ப்ராப்யம் என்னும் இடத்தையும்
அந்த ப்ராப்யத்தைக் கைப் படுத்தித் தரும் ஸ்வரூப அனுரூபமான ப்ராபகமும் அவன் திருவடிகளே என்னும் இடத்தையும்
அறுதியிட்டார் முதல் ஆழ்வார்களில் முதல் ஆழ்வாரான ஸ்ரீ பொய்கையை யாழ்வார்-

அநந்தரம் பூதத்தார் –
வையம் தகளியில் அருளிச் செய்த எம்பெருமான் படிகளைக் கூட இருந்து
உத்தரோத்தரம் அனுபவித்துக் கொண்டு போருகையாலே-
எம்பெருமானுடைய அருளே தளமாக முளைத்துக் கிளர்ந்த தம்முடைய பரபக்தியானது
பரஞான தசா பன்னமாம் படி பரிபக்குவமாய் வளர –
அந்த பரஞான தசா பன்ன ப்ரேம விசேஷத்தாலே அவன் படிகளைக் கட்டடங்க சாஷாத் கரித்து
அனுசந்தித்துத்
தாம் அனுபவித்த பிரகாரத்தை நாடு அறிந்து அனுசந்தித்து வாழும் படி
நடை விளங்கு தமிழ் மாலையாலே பேசித் தலைக் கட்டுகிறார் –

பகவத் சேஷமான விபூதியை ஸ்வ தந்திரம் என்றும் –
அந்நிய சேஷம் என்றும் பிரமிக்கிற பாஹ்யமான அஞ்ஞான அந்தகாரம் நீங்கும் படி
பிருதிவ்யாதி பூத பவ்திக பதார்த்தங்களை தகளி யாகவும் நெய்யும் விளக்குமாக
ரூபித்துக் கொண்டு பேசினார் பொய்கையார் –

இவர் ஆந்தரமான பகவத் பிரேமத்தில் அவஸ்தா விசேஷங்களைத் தகளி யாகவும் நெய்யும் விளக்குமாக ரூபிக்கும் படி
இவ் விஷயத்தில் உள்ளூற அவகாஹித்து
இறைவனைக் காணும் ஹிருதயத்தைப் பற்றிக் கிடக்கிற உள்ளிருள் நீங்கும் படியாக
ப்ரத்யக் வஸ்துவான ஆத்ம பரமாத்மாக்களில் உண்டாகக் கடவ சம்சய விபர்யயங்களை அறுக்கிறார் –

பர பக்த்யாதிகள் மூன்றும் மூவர்க்கும் தனித்தனியே குறைவற உண்டாய் இருக்கச் செய்தேயும்
ஓர் ஒருத்தருக்கு ஒரோ அவஸ்தை தலையெடுத்து –
அல்லாத அவஸ்தைகள் அதுக்கு உள்ளே அடங்கிக் கிடக்கும் –

1-பர ஞான பரம பக்திகள் நிழலிட்டுத் தோற்றும் படியே பர பக்தியே விஞ்சி இருக்கும் அவருக்கு –

2-பர பக்தி முற்றிப் பக்வமானதாய் -பரம பக்தி சிரஸிகமான (தலையாகக் கொண்ட )பர ஞானமேயாய் இருக்கும் இவருக்கு

3-பரம பக்தியே விஞ்சிப் பர பக்தி பர ஞானங்கள் இரண்டும் அதன் கீழே செருகிக் கிடக்கும் மற்றை யவருக்கு –

பர பக்த்யாதிகளினுடைய உத் பத்தியும் வ்ருத்தியும் இன்னாருக்கு இன்ன போது இன்னது தலை எடுக்கக் கடவது
இன்னது அடங்கிக் கிடக்கக் கடவது என்னும் இவை எல்லாம் ஈஸ்வரன் நினைவாலே உண்டாகத் தட்டில்லை –

பகவத் விஷயத்தை சாஷாத் கரிக்க வேணும் என்னும் அபிநிவேசம் பர பக்தி–
சாஷாத் காரம் பர ஞானம் —
பின்பு உத்தரோத்தரம் அனுபவிக்க வேணும் என்னும் அபிநிவேசம் பரம பக்தி –

சம்ஸ்லேஷத்தில் ஸூகித்து –விஸ்லேஷத்திலே துக்கிக்கும் படி இருக்கை பர பக்தி –
அடியாரோடு இருந்தமை -என்னும் படி பூர்ண சாஷாத் காரம் பர ஞானம் –
அனுபவம் பெறா விடில் நீரைப் பிரிந்த மத்ஸ்யம் போலே மூச்சு அடங்கும் படி இருக்கை பரம பக்தி என்று
அருளிச் செய்யும் படி –

நிரூபித்தால் தன்னில் இரண்டும் ஒக்கும் –
இவை பிராமாணிகருக்கு முக்தி அவஸ்தையில் உண்டாம் இத்தனை –
மயர்வற மதி நலம் அருள பெற்ற ஆழ்வார்களுக்கு இங்கே இருக்கச் செய்தே பகவத் பிரசாதத்தாலே யுண்டாய்த்து –

இனி –
பர பக்தி பர ஞான பரம பக்தி ஏக ஸ்வ பாவம் மாம் குருஷ்வ (சரணாகதி கத்யம் )-என்று பிராமாணிகருக்கு
அவன் பக்கலிலே பிரார்த்துப் பெற வேணும் -(இவை உபாயம் என்றால் அவை அங்கே வேண்டாமே
அங்கும் பிரார்த்திப்பது – கைங்கர்யம் தூண்ட ப்ராப்ய ருசி வர்த்திக்க பக்தி வேண்டுமே )

ஞான தர்சன ப்ராப்திகள் என்று சாஸ்திரங்களில் பர பக்த்யாதிகளைச் சொல்லும் –

ஞாதும் த்ரஷ்டுஞ்ச்ச தத்த்வேன பிரவேஷ்டுஞ்ச பரந்தப–ஸ்ரீ கீதை -11 -54-என்று இறே கீதாச்சார்யன் வார்த்தை

பக்த்யா த்வநந்யயா ஸக்ய மஹமேவஂவிதோர்ஜுந.–
ஜ்ஞாதும் த்ருஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப—৷৷11.54৷৷

வேதத்தாலோ தபஸாலோ –யாகங்களாலும் முடியாதே -பக்தி ஒன்றை தவிர -அறிவதற்கும் காண்பதற்கும் அடைவதற்கும் –
பக்தி இல்லாத வேதம் தபஸ் யாகம் தானம் மூலம் அடைய முடியாதே
பக்தி ஒன்றாலே முடியும் -எதிரிகளை தப்பிக்க செய்பவன் -பரந்தப –
அறிய பார்க்க அடைய -உண்மையாக -இந்த உருவத்தை பார்க்க பக்தி ஒன்றே –
பர பக்தி பர ஞானம் பரம பக்தி ஞான தரிசன பிராப்தி அவஸ்தைகள் –

ஸம் ஞ்ஞாயதே சந் த்ருச்யதே வாப்யதி கம்யதே வா தத் ஞானம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6 -5-87–என்று இறே பராசர வசனம் –

——————————————————————————————-

பகவத் பிரசாத லப்தமான தம்முடைய ப்ரேம அவஸ்தா விசேஷங்களைத் தகளியும் நெய்யுமாக
நிரூபியா நின்று கொண்டு
சர்வ சேஷியான நாராயணனுக்குப் பர ஞானம் ஆகிற உஜ்ஜ்வல தீபத்தை ஏற்றி
அடிமை செய்யப் பெற்றேன் என்று க்ருதார்த்தர் ஆகிறார் –

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்-1-

பதவுரை

ஞானம் தமிழ் புரிந்த நான்–பகவத் விஷய ஜ்ஞானத்தைத் தருமதாய் த்ராவிட பாஷா ரூபமான
திருவந்தாதிப் பிரபந்தத்தை (உலகத்தார்க்கு) விரும்பி வெளியிட்ட அடியேன்.-பேர் ஊர் சொல்லிக் கொள்ளாத ஆழ்வார் அன்றோ இவர்  —

அன்பே  தகளி ஆ (பரபக்தியின் ஆரம்ப தசையான) ஸ்நேஹம் தகளியாகவும்
ஆர்வமே நெய் ஆக–(அந்த ஸ்நேஹம் மூலமாகப் பிறந்த) அபிநிவேசம் நெய்யாகவும்
இன்பு உருகு சிந்தை இடுதிரி ஆ–(பகவத் விஷயத்தின்) இனிமையாலே நீர்ப்பண்டமாக உருகுகின்ற
மனமானது (விளக்குக்கு) இடப்படுகிற திரியாகவுங்கொண்டு
நன்பு உருக–ஞானம் என்றே சொல்லலாம் படி ஞான ஸ்வரூபமான  ஆத்மாவும் உருகப் பெற்று
நாரணற்கு–ஸ்ரீமந் நாராயணனுக்கு
ஞானம் சுடர் விளக்கு ஏற்றினேன்–பரஜ்ஞானமாகிற பிரகாசமான தீபத்தை ஏற்றினேன்.

அகல் -அன்பு தொடக்க நிலை பக்தி ஆதாரம் -அதில் தான் பர பக்தி -அது வளர்ந்து பர ஞானம் ஆக வேண்டுமே

விஷய வைக்ஷண்யம் தளமாக முளைத்துக் கிளருகிற பர பக்தி உபக்ரம ரூபமான ஸ்நேஹமானது –
மேல் சொல்லுகிற நெய் திரி முதலான வற்றுக்கு ஆதாரமான தகளி யாகவும் –
அந்த விஷய வை லக்ஷண்யத்துக்கு என் புகுகிறதோ என்று
பரிந்து காப்பிடும் படி பரிபக்குவ தசாபன்னமான அபிநிவேசமானது
மேல் ஏற்றத் தேடுகிற விளக்கை வளர்க்கைக்கு உறுப்பான நெய்யாகவும் –
விஷய வை லக்ஷண்ய அனுசந்தான ஜெனிதமான ஆனந்தத்தால் த்ரவீ பூதமான அந்த ப்ரேம அவஸ்தைகளுக்கு
வாய்த் தலையான ஹிருதயமானது மேல் சொல்லுகிற பர ஞானம் ஆகிற விளக்குக்கு இடப்படும் திரியாகவும் –

(நன்பு -ஞானம் -நன்மை )–ஞான ஆனந்த லக்ஷணமாய் -ஞான குணகமாய் -பகவத் அநந்யார்ஹ சேஷம் ஆகையால்
அத்யந்த விலக்ஷணமான ஆத்ம வஸ்துவானது பகவத் குண ஆஸ்வாத ரசத்தாலே-
த்ரவ்ய த்ரவ்யமாய் யுருகிப் பர ஞானம் ஆகிற உஜ்ஜ்வல தீபத்தை
(ஞானத் தமிழ் புரிந்த நான் ஏற்றினேன் )பகவத் தத்வ யாதாத்ம்ய ஞான ஜனகமாய் -வேதாதிகள் போலே அதிகாரம் அநாதிகாரம் அன்றிக்கே
சர்வாதிகாரமான திராவிட பிரபந்தத்தை
லோக உபகாரகமாகப் பண்ணின நான்-
சர்வ சேஷியான நாராயணனுக்கு
ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூபங்கள் உள்ள படியே பிரகாசிக்கும் படி ஏற்றினேன் –

பேசுவிக்க ஒருப்பட்ட ஈஸ்வரன் ஸத்ய ஸங்கல்பன் ஆகையாலும் –
பேசித் தலைக் கட்டி யல்லது தரிக்க ஒண்ணாத தம் ப்ரக்ருதியாலும் –
சித்தவத் கரித்து -தமிழ் புரிந்த -என்கிறார் –

(பகவத் குணாம்ருதமான மதுவைப் பருகி -காலாளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் –பெரிய திருவந்தாதி -34- என்னும் நிலைக்கும் மேலே சென்று
எரிக்க முடியாத ஆத்மா நீர்ப்பண்டமானதே –
ஆர்வமான நெய்யும் உருகிற்று
சிந்தையும் உருகிற்று
அனைத்துக்கும் ஆதாரமான ஆத்மாவும் உருகிற்று –
பகவத் குணங்கள் படுத்தும் பாடு இது –
நாரணற்கு -விளக்கு ஏற்றத் தகுந்தவனுக்கு -ஸமஸ்த ஸகல பதார்த்தங்களையும் தன்னுள் கொண்டவனை
ரத்தினங்கள் அடங்கிய பெட்டியை விளக்கு ஏற்றிக் கண்டு அனுபவிப்பாரைப் போலே அனுபவித்தேன்
ஞானத்தமிழ் -பகவானின் யாதாத்ம்ய அறிவை விளைக்கும் -அனைவரும் கற்கலாம் படியான அமுதினிலும் இனிய தமிழ் நூல்
அம் தமிழ் இன்பப்பாவினை அவ்வடமொழியை -பெருமாள் -1-4-என்றும்
செந்திறத்த தமிழ் ஓசை வடசொல்லாகி -திரு நெடும் தாண்டகம் -4-
புரிந்த -விரும்பிச் செய்கை -தனது பேறாக உபகரிக்கை –
புரிந்த -உபக்ரமத்திலேயே முடிந்தது போல் -ஸத்ய ஸங்கல்பன் பேசுவிப்பதாலும்
பிரபந்தத்தை முடிக்காமல் நிற்க மாட்டாத தனது ஸ்வ பாவத்தாலும்
இயற்றிய -என்று இறந்த கால பத பிரயோகம் )

அறை கழல் சுடர்ப் பூந்தாமரை சூடுதற்கு அவா வாருயிர் உருகி உக்க நேரிய காதல் அன்பு -திருவாசிரியம் -2–என்று ஆழ்வாரும்
பரபக்த்யாதிகள் மூன்றும் தமக்கு உண்டு என்று அருளிச் செய்கிறவர் –
சூடுதற்கு அவா -என்று பர பக்தியை முந்துற அருளிச் செய்து
பர ஞானம் அருளிச் செய்கிற இடத்தில் -அவா வாருயிர் உருகி உக்க நேரிய காதல் -என்று
பர பக்தியால் உருகி உக்க ஆருயிர் யுண்டு -ஆத்ம வஸ்து –அதின் இடத்தில் யுண்டான ஸூஷ்மமான காதல் -என்று
பர ஞான அவஸ்தையில் ஆத்மா த்ரவ்ய த்ரவ்யமாக உருகும் என்னும் இடம் அருளிச் செய்தார் இறே –

(சூடுதற்கு அவாவு ஆர் உயிர்
சூடுகையிலே அவாவி இருக்கிற -ஆசைப்படுகிற ஆத்ம வஸ்து –
உருகி யுக்க
அத் தலையில் வை லக்ஷண்யத்தை அனுசந்தித்தால்
அவன் பக்கல் ருசி பண்ணி அல்லது நில்லான் இறே சேதனன்
அத் தலையில் வை லக்ஷண்யத்தை அனுசந்தித்தவாறே
அச் சேத்யமான ஆத்ம வஸ்து த்ரவ்ய த்ரவ்யமாய்
ஓர் அவயவி யாக்கிக் காண ஒண்ணாத படி மங்கிற்று ஆயிற்று –
பக்தி பரவசரான படியை அருளிச் செய்கிறார்
நேரிய காதல்
அந்த அவாவானது விலக்ஷணமானதொரு சங்கத்தையும் பிறப்பித்தது)

அந்த நேரிய காதலாலே உண்டான அன்பு -என்று பரம பக்தியைச் சொல்லுகிறது –
ஆவல் அன்பு யுடையார் –நாச் 4-8–என்றும்
ஸ்ரத்தை தன்னால் வேடிக்கை மீதூர -திருக் குறுந்தாண்டகம் -4-என்றும் –
ஈர நெல் வித்தி –பேரமர் காதல் -5-3-4-என்றும்

பர பக்தி தனக்கே இரண்டும் உண்டாக அருளிச் செய்கையாலே –
அன்பு -ஆர்வம் -என்று ஓர் அவஸ்தை தன்னில்
உபக்ரம சரம அவஸ்தைகளை சொல்லத் தட்டில்லை –

பரபக்திக்கு
ஆவல் -ஸ்ரத்தை ஈரம் ஆகியவை தொடக்க நிலை
அன்பு வேட்கை பேர் அமர் காதல் -முடிந்த நிலை

சங்காத் சஞ்சாயதே காம -ஸ்ரீ கீதை -2-62 -என்று இறே கீதாச்சார்யனும் அருளிச் செய்தது –
காமோ நாம சங்கஸ்ய விபாக தசா -என்று இறே அதுக்கு பாஷ்யம் –
ஸ்நேஹோ மே பரம –பக்திஸ்ஸ நியதா வீர -என்றான் இறே திருவடியும் –
ஆகையால் பர பக்த்ய அங்குர ரூபமான அன்பே தகளி என்றும் —

அத் தலைக்குப் பரிந்து அல்லது நிற்க ஒண்ணாத படி பரிபக்வமான பரபக்தியை நெய் என்றும் –
நன்புருகி ஞானச் சுடர் விளக்கு -என்று
ஆஸ்ரயமான ஆத்ம வஸ்து உருகி விழும்படியான பர ஞான அவஸ்தையை
விளக்கு என்று இவரும் அருளிச் செய்தார் ஆயிற்று –

ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெரும் செய்யுள் -5-3-4-என்று
பக்த்யங்குரமான சங்க அவஸ்தை முதலாக
நெஞ்சு தளமாக உண்டாமதாயிருக்க பர ஞான அவஸ்தைக்கு காரணமாக நெஞ்சை சொல்லுகிறது –

உருகுமால் நெஞ்சம் –பெருகுமால் வேட்க்கை–9 -6 -1-என்று
பர பக்த் யவஸ்தையில்
கரணமான நெஞ்சும் உருகும்

பர ஞான அவஸ்தையில்
கரணமான நெஞ்சும் –
கரணியான ஆத்மாவும் உருகும் -என்கிற விசேஷம் தோற்றுகைக்காக–

—————————————————————————————

பக்தி பரவசர்களாய்க் கொண்டு அக்ரமமாகத் திரு நாமங்களைச் சொல்லி கூப்பிடுமவர்களை –
சர்வேஸ்வரன் நித்ய ஸூரிகளோடு ஒத்த தரத்தைக் கொடுத்து ரஷிக்கும் என்கிறார் (சததம் கீர்த்த யந்த நித்ய யுக்த -கீதை )

நிஷ் கல்மஷைர் நிஹத ஜென்ம ஜரா விகாரைர்
பூயிஷ்ட பக்தி விபவை அபவை அவாப்யம்
அந்யைர் அதந்ய புருஷைர் மநசாபி அநாப்யம்
வைகுண்ட நாம தவ தாம தத் ஆம நந்தி –ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -45-

கல்மஷம் அற்றவர்களாயும் -பிறப்பு மூப்பு முதலிய விகாரங்களைத் தொலைத்தவர்களாயும்
பக்திச் செல்வம் மிகுந்தவர்களாயும் உள்ள முமுஷுக்களாலே அடையத் தகுந்ததாய்
மற்றையோர்களான தரித்ரர்களாலே நெஞ்சினாலும் அணுகத் தகாததாய் உள்ள -அப்படிப்பட்ட
ஸ்ரீ வைகுண்டம் என்னும் ஸ்தானத்தை -எம்பெருமானே -தேவரீருடைய இருப்பிடமாகச் சொல்லுகின்றார்கள் –

ஞானத்தால் நன்கு உணர்ந்து நாரணன் தன் நாமங்கள்
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால் வானத்
தணியமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே நங்கள்
பணியமரர் கோமான் பரிசு-2-

பதவுரை

நாரணன் தன்–ஸ்ரீமந் நாராயணனுடைய
நாமங்கள்–(திருமேனி முதலியவற்றிற்கு வாசகமான) திருநாமங்களையும்
மற்று–மற்றும்
அவன் பேர்–அப்பெருமானுடைய (விபூதி விஸ்தாரங்களுக்கு வாசகமான) திருநாமங்களையும்
ஞானத்தால்–(ப்ரேம ரூபமான) ஜ்ஞானத்தாலே-அன்பே உருவான அறிவாலே -பக்தியால் -அறிவும் அன்பும் கலந்தால் பக்தி ஆகுமே
நன்கு உணர்ந்து–உள்ளபடி யறிந்து
தானத்தால்–(ப்ரேமத்தின் முடிவெல்லையான) ஸ்தானத்திலே நின்று
சாற்றினால்–அநுஸந்தித்தால்,
நங்கள் பணி அமரர் கோமான் பரிசு–நமக்கு பந்துக்களாயும் எப்போதும் கைங்கர்ய பரர்களாயுமுள்ள
நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானுடைய தன்மையாவது,
வானத்து அணி அமரர் ஆக்குவிக்கும் அ”து அன்றே–பரம பதத்திற்கு அலங்காரமான நித்ய ஸூரிகளாக (நம்மை)ச் செய்து வைக்கு மதுவேயாம்

(இங்கே இருக்கும் பொழுது திரு நாமங்களை முறை கெட்டு பிதற்ற– முறையுடன் சொல்லும் -நீதி வானவர்-கோஷ்ட்டியில் ஒரு கோவையாக்குமே-கண்ட பேர் முன் பணியாத அமரர் நித்யர் )

வகுத்த சேஷியான சர்வேஸ்வரனுடைய விக்ரஹாதிகளுக்கு வாசகமாய் –
அசாதாரணமான திரு நாமங்களையும்

(பிரமன் ருத்ரன் இந்திரன் வாயு ஆகாசம் போன்றவை அவனுடைய விபூதிகளைக் காட்டி -சரீரீ யான அவன் அளவும் பர்யவசிக்குமே )
ப்ரேம தசா பன்னமான ஞானத்தாலே-அவனுக்கும் தனக்கும் யுண்டான சேஷ சேஷித்வ ரூபமான உறவளவும் செல்ல
உள்ளபடி அறிந்து -(இதுவே நன்கு உணர்தல் )
பேர் பல சொல்லிப் பிதற்றி -திருவாய்-3-5-8-என்கிறபடியே
சொல்லி அல்லது நிற்க ஒண்ணாத படி
தலை மண்டிக் கொண்ட பிரேமத்தினுடைய முடி ஸ்தானத்தில் நின்று -அடைவு கெடக் கூப்பிட்டால் –

(சாற்றினால் –
அத்யந்த பக்தி யுக்தஸ்ய ந ஸாஸ்த்ரம் நைவ ச க்ரம -என்றபடி முறை கெடக் கூப்பிட்டால்
அல்லது அறிந்த அளவு சொல்லுதல்)

பரமாகாச சப்த வாஸ்யமான பரம பதத்தில் ஸ்வ சம்பந்தத்தாலே நிறம் கொடுக்கும் படியான அழகை யுடையரான
ஸூரிகளோடு ஒத்த பெருமை யுடையராம் படி பண்ணுமாதன்றோ –

நமக்கு நிருபாதிக பந்துக்களாய் –
நித்யாஞ்சலி புடா -என்கிறபடியே
கையும் அஞ்சலியுமாக கொண்டு தொழுகையே
நித்ய யாத்திரையாக யுடையராய் இருக்கிற அநந்த வைநதேயாதிகள் ஆகிற நித்ய சித்த புருஷர்களுக்கு
நிருபாதிக சேஷியானவனுடைய பிரகாரம் –

(நங்கள் அமரர் -ஸ்வா பாவிக ஸம்பந்தம் உடையவர்
பணி அமரர் -கைங்கர்யம் செய்வதையே யாத்ரையாகக் கொண்டவர்
என்பதால் நித்ய ஸூரிகளைச் சொன்னவாறு)

இங்கே அடைவு கெட திரு நாமம் சொன்னவர்களை அங்கே
அடைவு கெட்டுக் கூப்பிடும் கோஷ்டியிலே வைக்கும் என்றபடி –

——————————————————————————

அடுத்து அணித்தாகத் திருப் பாற் கடலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிற
நீர்மையை யுடையவனை ஆஸ்ரயிக்குமவர்கள் –
பரம பதத்தைச் சென்று பிராபிக்கப் பெறுவார் -என்கிறார் –

(கீழ்ப் பாட்டின் விவரணமாக இப் பாசுரம் -நல்லமரர் கோமான் நகர் நமக்கு பரிசாகக் கிடைக்கும்
பத்ரம் புஷ்ப்பம் பலம் தோயம் -இதுக்கே இப்பலம்-புகப் பெறுவர் போலாம்-என்ன ஆச்சர்யம் )

பரிசு நறு மலரால் பாற்கடலான் பாதம்
புரிவார் புகப்பெறுவர் போலாம் -புரிவார்கள்
தொல்லமரர் கேள்வித் துலங்கொளி சேர் தோற்றத்து
நல்லமரர் கோமான் நகர் -3-

பதவுரை

பால் கடலான் பாதம்–க்ஷீராப்தி நாதனுடைய திருவடிகளை
பரிசு நறுமலரால்–செவ்வி குன்றாத பரிமளம் மிக்க புஷ்பங்களைக் கொண்டு
புரிவார்–விரும்பித் தொழுமவர்கள்,
புரிவார்கள் தொல் அமரர்–ஸாதநாநுஷ்டாந பரர்களான (இந்திரன் முதலிய) பழைய தேவர்களுக்கும்
கேள்வி–(கண்ணால் காண முடியாமல்) காதால் மாத்திரம் கேட்டுக் கொண்டிருக்கக் கூடியதும்
துலங்கு ஒளி சேர் தோற்றத்து–மிக விளங்குகின்ற ஒளி பொருந்தித் தோன்றுதலையுடையதுமான
நல் அமரர் கோமான் நகர்–நித்யஸூரி நாதனுடைய திவ்யநகரமான பரமபதத்தை
புகப்பெறுவர் போலாம்–அடையப் பெறுவர்கள்

செவ்வி குன்றாத அழகிய பூக்களைக் கொண்டு சம்சாரிகளை (விரஜைக்கு )அக்கரைப் படுத்துகைக்காகத் திரு பாற் கடலிலே
முற்கோலிக் கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திருவடிகளை
சாஸ்திர யுக்தமான பிரகாரத்தால் பக்தி பரவசராய்க் கொண்டு ஆஸ்ரயிக்குமவர்கள் –

முழுகுவது -மூக்குப் புதைப்பது -ஜபிப்பது -தொழுவது -புகழுவதாய்க் கொண்டு இடை விடாமல்
அவனை ஆஸ்ரயித்துக் கொண்டு போரக் கடவர்களாய் –
சம்சாரிகளில் பழையரான ப்ரஹ்மாதி தேவர்கள்
காண ஒண்ணாதே என்றும் –
கேட்டே போம் இத்தனையாய் –
நிரவதிக தேஜஸை உடைத்தாய்க் கொண்டு பிரகாசிக்கக் கடவதாய் இருந்து –
பிரியில் தரிக்க மாட்டாத நன்மையை யுடைய நித்ய ஸூரிகளுக்கு நாயகனான
சர்வேஸ்வரனுடைய வைகுண்ட மா நகரத்தை பிராபிக்க பெறுவாராம் –

(கேள்வி நகர்
யந் ந தேவா ந முநயோ ந ச அஹம் ந ச சங்கர
ஜா நந்தி பரமேஸஸ்ய தத் விஷ்ணோ பரமம் பதம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-55-என்கிறபடியே
ப்ரஹ்மாதிகளாலும் கேட்டே போகுமது -காண முடியாதது அன்றோ –

ஸ்ரீ பத்ம நாப ஸ்ரீ யா -பிறந்த குழந்தை நான்முகன் உளறுகிறது -ஜல்பிக்க -யாரும் பார்த்தது இல்லை -கேட்டு உய்க்கும் அனந்தஸாயி -தேசிகன்

அத்யர்க்க அநல தீப்தம் தத் ஸ்தாநம் விஷ்ணோர் மஹாத்மன
ஸ்வ யைவ ப்ரபயா ராஜன் துஷ் ப்ரேஷம் தேவதாநவை -பாரதம் -ஆரண்ய -186-18-

நல் அமரர்
ந ச ஸீதா த்வயா ஹீநா ந ச அஹம் அபி ராகவா -அயோத்யா -53-31-என்கிறபடியே
அக்குளத்தில் மீன் போல் க்ஷணம் விஸ்லேஷம் வந்தாலும் சத்தையை இழப்பவர்கள்
யத்ர பூர்வே ஸாத்யா சந்தி தேவா -நித்ய ஸூரிகளே நல் அமரர்கள்
ப்ரபன்னர்களுக்கு ஒரு முயற்சியும் செய்ய வேண்டாமல் பரம புருஷார்த்தத்தை தனது பேறாகவே அளிக்கிறான்)

———————————————————————————–

அன்பே தகளி என்று தொடங்கி –
தம்முடைய பக்த்யாவஸ்த விசேஷங்களை -தகளியும் நெய்யும் விளக்குமாக நிரூபித்தால் போலே
தம்முடைய பக்த்யாவஸ்த விசேஷங்களை -இதழும் -அல்லியும்-தாதுமாய் -இருபத்தொரு –
தாமரைப் பூவாக நிரூபித்துக் கொண்டு அவனை ஆஸ்ரயிக்கிறார்-(அது பிரகாசம் இங்கு பரிமளம் )

(நகரம் நித்திலம் மணியான மாணிக்கம் வயிரம்
நாள் மலர் -பைம் கமலம் -புற இதழ் -உள் இதழான அல்லி -தாது
ஆழ்வார் திரு உள்ளம்-நெஞ்சம் -ஸ்நேஹம் சங்கமாகிய பற்று -காமம்
விதிப்படி ஸ்வாமி சேஷி அறிந்து பற்றி இனிமை அறிந்து காதல் அபி நேசம் -ரூபக அதிசய யுக்தி )

(ஸ்ரீ மன் நாராயண சரணவ் சரணம் நம — பனி மலராள் அங்கம் வலம் கொண்டான் அடி பைங்கமல மேந்திப் பணிந்தேன்)

நகர் இழைத்து நித்திலத்து நாள் மலர் கொண்டு ஆங்கே
திகழும் மணி வயிரஞ் சேர்த்து -நிகரில்லாப்
பைங்கமல மேந்திப் பணிந்தேன் பனி மலராள்
அங்கம் வலம் கொண்டான் அடி-4-

பதவுரை

நகர் இழைத்து–என்னுடைய நெஞ்சை எம்பெருமான் வாழக் கூடிய திரு மண்டபமாக அமைத்து
நித்திலத்து நாள் மலர் கொண்டு–(அதிலே) ஸ்நேஹமாகிற முத்தை செவ்வி குன்றாத புற விதழாக அமைத்து
திகழும் மணி வயிரம் சேர்த்து–ஸங்கம் காமம் என்கிற நல்ல மாணிக்கத்தையும் வயிரத்தையும் அல்லியும் தாதுமாக வைத்து
நிகர் இல்லா–ஒப்பில்லாத
பைங் கமலம் ஏந்தி–பக்தியாகிற அழகிய தாமரைப் பூவைத் தரித்துக் கொண்டு
பனி மலராள் அங்கம் வலம் கொண்டான்–குளிர்ந்த தாமரைப் பூவிற் பிறந்த பிராட்டியை வல மார்பினில் வைத்துக் கொண்டிருக்கும் பெருமானுடைய
அடி–திருவடிகளை
பணிந்தேன்–வணங்கினேன்.

பக்தி யுத்ப்பத்தி ஸ்தானமான நெஞ்சை
ராஜாதி ராஜனான சர்வேஸ்வரனுக்கு திருப் படை வீடாக வகுத்து –
விஸ்வதோ ஆயதனம் மஹத்
நெஞ்சமே நீள் நகர் -5-8-2-
அந்தத் திருப் படை வீட்டிலே -அந்நெஞ்சில் ( ஸ்நேஹம் )யுண்டாய் –

(உபமேயத்தை மறைத்து உபமானமாகவே சொல்லுகையாலே ரூபாய் அதிசயித்த யுக்தி -அணி அலங்காரம் ஆகும்)

ஸ்வாதந்தர்யம் ஆகிற அழல் தட்டாமையாலே குளிர்ந்து
சர்வ கந்த -என்கிற விஷயத்தைப் பற்றிக் கிளருகையாலே பரிமளிதமாய்-
ஒளி விடுகிற ஸ்நேஹம் ஆகிற முத்தை செவ்வி குன்றாத இதழாக வகுத்துக் கொண்டு

(சாதன பக்தி நிஷ்டர்களின் ஸ்நேஹம் -ஸ்வா தந்தர்யமாகிய வெப்பத்துடன் இருக்கும்
இங்கோ பாரதந்தர்யமாகிய தண்மை குளிர்த்தி இருப்பதால் பக்தியின் தொடக்க நிலையான -(இதனாலே புற இதழ் )ஸ்நேஹத்தைக் குளிர்ந்த முத்தாலே கூறுகிறார் -)

ப்ராப்தியையும் வை லக்ஷண்யத்தையும் விஷயீ கரித்து (பிராப்தி அறிந்து சங்கம் வருமே -வை லக்ஷண்யம் அறிந்து காமம் வருமே  )இரண்டு கூறாக எழுந்து இருக்கிற அபிநிவேசம் ஆகிற
உஜ்ஜவலமான மாணிக்ய வைரங்களை அல்லியும் தாதுமாகச் சேர்த்து
இப்படி லௌகீகமான தாமரையில் காட்டில் வியாவிருத்தமான
இதழையும் அல்லியையும் தாதையும் யுடைத்தாய் யாகையாலே
உபமான ரஹிதமான பக்தி யாகிற பெரிய தாமரைப் பூவை அழகு பெற தரித்துக் கொண்டு

குளிர்ந்த தாமரைப் பூவை இருப்பிடமாக யுடைய போக்யதை ஏக வேஷையான (மென்மை நறுமணம் இத்யாதியால் மலராள் ) பெரிய பிராட்டியாரைத்
திரு மேனியில் வலவருகான திரு மார்விலே வைத்துக் கொண்டவனுடைய திருவடிகளிலே
நிர் மமனாய்க் கொண்டு விழுந்து ஆஸ்ரயித்தேன் –

நெஞ்சை நகரமாக ரூபிக்கையாலே-
நகரம் ஆகில் -முத்து மாணிக்கம் முதலான விலக்ஷண வஸ்துவை உடைத்தாய் இருக்கும் என்று
பக்த்யாவஸ்தா பேதமான ஸ்நேஹாதிகளை முத்து மாணிக்யாதிகளாக ரூபிக்கிறது –

பைங்கமலம் ஏந்தி -என்று
பக்தியைத் தாமரையாக நிரூபிக்கையாலே அந்த பக்த்யாவஸ்த பேதமான ஸ்நேஹாதிகளை
அதுக்கு இதழும் அல்லியும் தாதுவும் ஆக ரூபிக்கிறது –

பக்தியினுடைய போக உபகரணத்வமும் -போக்யத்தையும் -தோற்றுகைக்காக –
அத்தைத் தாமரையாக நிரூபிக்கிறது –

(ஆங்கே திகழும் மணி வயிரம் சேர்த்து -ஸ்நேஹம் -அடுத்து -சங்கம் -காஜாமம் –
சர்வேஸ்வரன் வகுத்த ஸ்வாமி என்று அனுசந்திக்க சங்கம் ஏற்படும்
அவனது போக்யதையை அனுசந்திக்க காமம் எனப்படும் பக்தி நிலை – ஏற்படும் –
இரண்டும் சேர்ந்து அபி நிவேசம் காதல் ஏற்படும்
பர ஞான பக்தி தசையே நிகர் இல்லா பைம் கமலம்)

நெஞ்சை நரகமாக நிரூபிக்கிறது –
கலங்கா பெரு நகரத்தில் பண்ணும் விருப்பத்தைத் தன் நெஞ்சிலே பண்ணிக் கொண்டு
அவன் ரஸோத்தரமாக வர்த்திக்கும் என்று தோற்றுகைக்காக -(அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மான் அன்றோ )

(நகர் முத்து மாணிக்கம் வயிரங்களை யுடைத்தால் போலே நெஞ்சில் பக்தியின் முன் நிலைகளை -ஸ்நேஹம் சங்கம் காமம் யுடையதாய் இருக்குமே –
நெஞ்சை நீள் நகரம் என்றது ஸ்ரீ வைகுண்டத்தி திவ்ய தேசங்கள் அனைத்துடன் ஸ்ரீ பூமி நீளா தேவிமார்களுடனும் நித்ய ஸூரிகளுடன் புகுந்து
அவை எல்லாம் இளம் கோயில் என்னும் படி பெரிய விசாலமான நகரமாய் இருக்குமே
பக்தி பகவத் அனுபவ உபகரணமாகவும் -தானே ஸ்வயம் பிரயோஜனமாக அனுபவிக்கத் தக்கதாயும் –
பிற இன்பங்கள் அனுபவிக்கத் தக்கதாயும் இருப்பதால் தாமரையாக உருவகம்)

—————————————————————————-

ஆழ்வீர் நீர் நம்மைப் பணிந்தீரோ என்ன -ஒன்றைச் சொன்னேன் அத்தனை போக்கி
ஏவம் விதனான உன் நீர்மை ஒருவரால் பரிச்சேதிக்கப் போமோ என்கிறார் –

(பணி அமரர் -நித்ய ஸூரிகளில் ஒருவராக இருந்தாலும் ஏவம் விதமான அவனது நீர்மை யாராலும் பரிச்சேதிக்க ஒண்ணாதே
என்னும் இடத்துக்கு உலகு அளந்த விருத்தாந்தம் காட்டி அருளுகிறார்-

நன்கு உணர்ந்து பேர் சாற்றினால் -2- என்றும்
பாதம் புரிவார் புகப்பெறுவர் -3-என்றும்
அடி பணிந்தேன் -4-என்றும் என்று உரைத்தீரே
நீர் நம்மை நன்கு உணர்ந்து பணிந்தீரோ என்ன
உன்னை முழுவதும் அறிய ஒருவராலும் முடியாதே
உனது மேன்மையைச் சிறிது அறிந்தாலும் நீர்மையை யாவராலும் அறிய முடியாதே என்கிறார் )

அடி மூன்றால் இவ்வுலகம் அன்று அளந்தாய் போலும்
அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் -படி நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அறிந்து–5–

பதவுரை

படி நின்ற–அத்யந்த ஸூ லபனாய் -தேவர்கள் கால் பாவாத -பூமியிலே அவதரித்து நின்ற
நீர் ஓதம் மேனி நெடுமாலே–கடல்வண்ணனான ஸர்வேச்வரனே!,
அன்று இ உலகம்–முன்பொரு காலத்தில் இவ்வுலகத்தை
அடி மூன்றில் அளந்தாய் போலும்–மூவடியாலே அளந்து கொள்பவன் போல
அடி மூன்று அவனி–மூவடி நிலத்தை
இரந்து கொண்டாய்–(மாவலியிடத்தில்) யாசித்துப் பெற்றாய்;
நின் அடியை–இப்படிப்பட்ட சர்வ ஸூ லபனான உனது திருவடிகளை
அறிந்து–நன்றாகத் தெரிந்து கொண்டு
ஓதவல்லார் ஆர்–பேசவல்லவர்கள் யாவருளர்? (யாவருமில்லை)

சால தூர (தீர்க்க )தர்சியாய்க் கொண்டு –
இரண்டு அடியாலே அளந்து –
ஓரடிக்குச் சிறையிட்டு வைப்பாயாக -மஹா பலி பக்கலிலே முந்துறச் சென்று –
மூன்றடியை அர்த்தித்து -பூமியை அளந்து கொண்டாய் –

(அளந்து கொண்டாய் என்றும் அளந்து கொண்டவனே -என்று சம்போதகம் ஆகவுமாம்)

அளந்து கொள்ளுகிற அக் காலத்திலே இரண்டு அடியால் அளந்து கொண்டது
அத்தனை போக்கி –
மூன்று அடியால் இந்த லோகங்களை அளந்து கொண்டாயோ தான் –

(மாவலியை சிறையில் இட்டு வைக்கவே இச்செயல் என்று நிந்தா ஸ்துதி என்றுமாம்)

பூமியிலே ரக்ஷகனாய் கொண்டு செவ்வே வந்து அவதரித்து நின்று நீர்மையை யுடையையாய் –

(மற்ற தேவதைகளை போல் இங்கு தண்மையால் கால் பாவாமல் நிற்கை அன்றிக்கே
தேவாதி தேவனான நீ -தனது உடைமையான இதன் இடம் உள்ள அதி வ்யா மோஹத்தாலே
இதுவே இவனுக்கு வந்தேறியாக இல்லாமல் இயற்கையான இருப்பிடம் என்று காண்பார் கருதும்படி கால் தோய்ந்து நின்றமையால் ஈடுபட்டு அருளிச் செய்கிறார்)

(படி நின்ற நீர்-நீர்மை என்றும்
நீரோதம் -நீர் நிறைந்த கடல் என்றும் கொண்டு கூட்டிப் பொருள்)

ஜல ஸம்ருத்தியை யுடைத்தான கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையையாய் –சர்வாதிகனான ஸர்வேஸ்வரனே –

இப்படி நீர்மையே வடிவான உன்னுடைய திருவடிகளை –
என்னைப் போலே அறிவு கெட்டார் பேசில் பேசும் அத்தனை போக்கி
நேர் கொடு நேரே இவ்வளவு என்று அறிந்து பேச வல்லார் யார் –

(இப்படி நீர்மையே வடிவான உன்னுடைய திருவடிகளின் பெருமையை என்னைப் போல் அறிவு கலங்கியவர்கள் பேசலாம் ஒழிய
அது இல்லாதவர்களால் இவ்வளவு என்று அளவிட்டுப் பேச முடியுமோ என்றுமாம்)

த்வே இதஸ்ய க்ரமேண ஸ்வர் த்ருசோ அபிக்யாய மர்த்யோ புரண்யதி
த்ருதீய மஸ்ய நகிரா ததர்ஷதி வயஸ்சந பத யந்தஸ் பதத்ரிண -ருக் அஷ்டகம் -2-2-25-

பரமபதத்தைக் காண்பவனான விஷ்ணுவினுடைய இரண்டு அடி வைப்புக்களையே மனிதன் நன்கு அறிந்து பஜிக்கிறான்
இந்த விஷ்ணுவின் மூன்றாவது அடி வைப்பை ஒரு போதும் அறிய வல்லன் அல்லன்
அந்த ஆகாசத்தில் எங்கும் வீசும் வாயுக்களும் பறக்கும் பறவைகளும் அறிய வல்லன வல்ல-

பரோ மாத்ராய தன்வா வ்ருதாந ந தே மஹித்வ மன்வஸ் நுவந்தி
உபதே வித்ம ரஜஸீ ப்ருதிவ்யா விஷ்ணோ தேவ த்வம் பரமஸ்ய வித்ஸே –ருக் அஷ்டகம் -5-5-24-

ஓங்கு உலகு அளந்த உத்தமனே -நீ மிகப் பெரியவன் -உனது பெருமையை அளவிட்டு அனுபவிக்க – அறிய வல்லார் யாருமே இல்லையே
பூமியில் இருந்து தொடங்கிய உன்னுடைய இரண்டு பாத ஸ்தானங்களை அறிகிறோம்
அதற்கு மேற்பட்ட மூன்றாவது அடி வைப்பை நீயே அறிகிறாய்
என்கிற ஸ்ருதி சாயையில் மூன்றாவது அடி வைப்பை எவராலும் அறிய முடியாது என்கிறார் ஆகவுமாம்)

—————————————————————————————————

ஆனால் இப்படி யாரும் அறியாதே இழந்து போம் அத்தனையோ -என்னில்
அது வேண்டா -இதர விஷய சங்கம் அற்று
அவன் திரு நாமங்களைச் சொல்லிப் புகழும் அவர்கள் அவன் திருவடிகளைப் பெறுவார் -என்கிறார் –

(கீழே அவனை ஆறும் அறியார் என்றது -எத்தனை அளவுடையராய் இருந்தாரே யாகிலும் அவனை அளவிட்டு அறிய முடியாது என்றார்
இதில் அன்புடன் அவனை ஆஸ்ரயிப்பவர்களுக்குத் தானே தன்னைக் காட்டி அருளுவான் என்கிறார்
ஆகையால் யாதும் விரோதம் இல்லை
யாதும் ஒரு நிலைமையன் என அறிவரிய எம்பெருமானே
யாதும் ஓர் நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான் அன்றோ)

அறிந்து ஐந்தும் உள்ளடிக்கி யாய் மலர் கொண்டு ஆர்வம்
செறிந்த மனத்தராய் செவ்வே -அறிந்தவன் தன்
பேரோதி ஏத்தும் பெரும் தவத்தோர் காண்பரே
காரோத வண்ணன் கழல்-6-

பதவுரை

அறிந்து–(எம்பெருமானுடைய வைலக்ஷண் யத்தையும் விஷயங்களின் கெடுதல்களையும் நன்றாக) அறிந்து கொண்டு
பஞ்சேந்திரியங்களையும்–பஞ்சேந்திரியங்களையும்
உள் அடக்கி–(பட்டி மேய வொண்ணாதபடி தடுத்து) பகவத் விஷயத்திலே ஊன்றும்படி நியமித்து
ஆய் மலர் கொண்டு–(பகவானுக்கு ஏற்கும்படி) ஆராய்ந்த புஷ்பங்களை ஸம்பாதித்துக் கொண்டு
ஆர்வம் செறிந்த மனத்தர் ஆய்–பக்தி மிகுந்த மனத்தை யுடையராகி
செவ்வே அறிந்து–(எம்பெருமானுக்கும் தமக்குமுள்ள -சேஷ சேஷி பாவத்தை -முறைமையை) நன்றாக அறிந்து
அவன் தன் பேர்–அப்பெருமானது திரு நாமங்களை
ஓதி–இடைவிடாமற் சொல்லிக் கொண்டு
ஏத்தும்–துதிக்கின்ற
பெரும் தவத்தோர்–மஹா பாக்யசாலிகள்
கார்ஓதம் வண்ணன் கழல்–கருங்கடல் வண்ணனான அப்பெருமானுடைய திருவடிகளை
காண்பர்–கண்டு அநுபவிக்கப்பெறுவார்கள்.

பகவத் வை லக்ஷண்யத்தையும் -இதர விஷய தோஷங்களையும் நன்றாக அறிந்து -ஹேய விஷயங்களில் போகாதபடி
ஸ்ரோத்ராதிகளான இந்திரியங்கள் ஐந்தையும் ப்ரத்யக்கான பகவத் விஷயத்தில் ப்ரவணமாம் படி நியமித்து

(கடையற பாசங்கள் விட்ட பின்னை யன்றி அவனவை காண் கொடானே -திருவாய் -8-2-8-

சப்தாதிகள் -இந்திரியங்கள் -மனஸ் -புத்தி ஆத்மா -மேல் மேல் உயர்ந்த நிலை )

அங்குத்தைக்கு சத்ருசமாம் படி கந்தல் அற  (த்ரிவித தியாகங்கள் உடன் )ஆயப்பட்ட செவ்விப் பூக்களை சம்பாதித்துக் கொண்டு
அபிநிவேசம் மிக்க மனஸை யுடையராய் –

அவன் சேஷி -நாம் சேஷ பூதர் -என்னும் முறையை நன்றாகத் தெரிந்து
குண சேஷ்டிதாதிகளுக்கு வாசகமான அவன் திரு நாமங்களை இடைவிடாமல் சொல்லிக் கொண்டு ப்ரீதி பிரகர்ஷத்தாலே
ஸ்தோத்ரம் பண்ணும் பெரிய பாக்யாதிகர்கள் ஆனவர்கள் —

(புரிவதுவும் புகை பூவே -திருவாய் -1-6-1-
‘கள்ளார் துழாயும் கணவலரும் கூ விளையும் முள்ளார் முலரியும் ஆம்பலும் -பெரிய திருமொழி -11-7-6-என்று இருந்தாலும்
பொங்கும் பரிவாலே அசாரமான பூக்களைக் கழித்து ஸூ குமாரமான திருமேனிக்குத் தக்கதாய் அன்று அலர்ந்தபூக்களைக் கொண்டு ஆராதிக்க வேண்டுமே
இத்தையும் விஹிதம் என்று எண்ணாமல் -பெரும் காதல் நிறைந்த மனத்தோடு இதினிலும் இனியது இல்லை என்ற எண்ணத்துடன் –
உபாய புத்தியைச் சிறிதும் வைக்காமல் -நம் கார்யம் செய்பவன் ஸ்வாமியான அவனே என்ற எண்ணத்துடன்
குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்களை ஸ்வயம் ப்ரயோஜனமாகக் கீர்த்தனை பண்ணி
நியாஸம் ஏஷாம் தபஸாம் அதிக்ரிதமாஹு -என்று
சரணமாகப் பற்றுகிறவர்கள் பாக்கியசாலிகள் என்கிறார் )

கறுத்த கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையனாவன் திருவடிகளைக் கண்டு அனுபவிக்கப் பெறுவர்கள் –

(திருவடிகளையே உபாயமாகப் பற்றி திருவடிகளையே அடைவார்கள் என்கிறார்)

————————————————————————————————————

இப்படி பாக்ய உத்தரர் அடங்கலும் ஆஸ்ரயித்து வாழுகிற விஷயத்தை ப்ரீதி பூர்வகமாக
நெஞ்சே -நீயும் அனுசந்திக்கப் பார்-என்கிறார் –

கழல் எடுத்து வாய் மடித்துக் கண் சுழன்று மாற்றார்
அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச -தழல் எடுத்த
போராழி ஏந்தினான் பொன் மலர்ச் சேவடியே
ஓராழி நெஞ்சே உகந்து-7-

பதவுரை

ஆழி நெஞ்சே–ஆழ்ந்த மனமே!
முன்பு த்ரிவிக்ரமாவதாரம் செய்தருளின போது)
கழல் எடுத்து–திருவடிகளை உயரத் தூக்கினவனாயும்,
மாற்றார்–எதிரிட்ட நமுசி முதலானவர்கள்
அழல் எடுத்த சிந்தையர் ஆய் அஞ்ச–பயாக்னி கொளுந்தின நெஞ்சை யுடையவர்களாய் நடுங்கும்படியாக
வாய் மடித்து–உதட்டை மடித்துக் கடித்துக் கொண்டு
கண் சுழன்று–(பார்க்கிற பார்வையிலேயே அவ்வெதிரிகள் சுருண்டு விழும்படி) கண்கள் வட்டமிட
தழல் எடுத்த போர் ஆழி–நெருப்பை யுமிழ்கிற போர் செய்ய வல்ல திருவாழி யாழ்வானை
ஏந்தினான்–தரித்தவனாயுமிருக்கிற எம்பெருமானுடைய,
பொன்மலர் சே அடியே–அழகிய மலர் போன்ற திருவடிகளையே,
உகந்து ஓர்–விரும்பி அநுஸந்திப்பாயாக.

ஆஸ்ரிதர் வாழும் படி திருவடிகளை வளர்த்து -சத்ருக்களான நமுசி பிரக்ருதிகள் நெருப்புக் கொளுத்தின
ஹ்ருதயத்தை யுடையராய்க் கொண்டு -(பயமே அக்னியாக இவர்களுக்கு )

(கழல் எடுத்து -நமுசி பிரக்ருதிகள் அஞ்சும்படி பூமி அதிரும்படி என்றும்
அடியார் வாழும்படி திருவடியைத் தூக்கி உலகு அளந்தான் என்றும் கொள்ளலாம்)

பல்லிறுகி -நா மடித்துக் கொண்டு -பார்வையில் பட்டு விழும்படி சுடப் பார்க்கிற கண் -பரிபிரமித்து
நடுங்கும் படியாக எதிரிகள் மேலே நெருப்பை உமிழ்கிற
யுத்த உன்முகமான திரு வாழியை தரித்த (ஏந்தினான்-தூக்கினான் இல்லையே )சர்வேஸ்வரனுடைய
பொன் போலேயும் பூ போலேயும் -ஸ்ப்ருஹணீயமாய் -அதி ஸூ குமாரமான சிவந்த திருவடிகளையே

அளவுடைய நெஞ்சே -தேவையாக யன்றிக்கே ப்ரீதியோடே கூடிக் கொண்டு அநுஸந்தி —

வாய் மடித்துக் கொண்டு கண் சுழன்று கொண்டு
மாற்றார் அழல் எடுத்த சிந்தையராம் படி தழல் எடுத்த போராழி என்னவுமாம் –

(வாமனனுக்கு ஆழி உண்டோ என்னில் திரிவிக்ரமனுக்கு உண்டே -ஆழி எழ இத்யாதி )

(ஆழி நெஞ்சே -கடல் போலே ஆலமுடைய கம்பீரமான நெஞ்சே -உனது ஆழத்தை எந்நாளும் அறிய முயல் அன்றோ
முந்துற்ற நெஞ்சான உனக்கு நான் உபதேசிக்க வேண்டுகிறது
பொன் மலர்ச் சேவடியே உகந்து ஓர் -இது கடன் விதி என்ற புத்தி இல்லாமல் அன்புடன் ப்ரீதி மண்டி
கைக் குழந்தைக்குத் தாய் முலை போலே சேஷபூதனுக்கு இனிதாய் தாரகமாய் இருக்கும் சேஷியுடைய திருவடிகளைப்
பற்றச் சொல்லி நான் உபதேசிக்க வேண்டுமோ
பால் குடிக்கக் கால் பிடிக்க வேண்டுமோ
என்னிலும் முந்துற்று நீயே உகந்து பற்ற வேண்டிய விஷயம் அன்றோ திருவடிகள் என்கிறார் – )

—————————————————————————————————

இப்படி ஆஸ்ரயிக்கும் இடத்தில் -பிரதிபந்தகம் உண்டானாலோ என்னில் —
பூதனையை முடித்தால் போலே
அவன் தானே அவற்றைப் போக்கும் என்கிறார் –

உகந்து உன்னை வாங்கி ஒளி நிறம் கொள் கொங்கை
அகம் குளிர உண் என்ற அவளாவி உகந்து
முலை  யுண்பாய் போலே முனிந்து உண்டாய் நீயும்
அலை பண்பா லானமையால் அன்று—8-

பதவுரை

(பூதனை யானவள்)
உகந்து–யசோதைப் பிராட்டியைப் போல அன்புடையவளாக அபிநயஞ்செய்து
உன்னை வாங்கி–(நீ தூங்கும்போது வந்து) உன்னைத்தூக்கியெடுத்து
ஒளிநிறம் கொள் கொங்கை–(பால் விம்மியிருத்தலால்) ஒளிவிட்டு அழகுபெற்றுள்ள (தனது) ஸ்தனத்தை
அகம் குளிர உண் என்றாள்–(‘குழந்தாய்!) மனமகிழ்ந்து உண்ணு’ என்று சொல்லி வாயிலே வைத்தாள்.
ஆனமையால்–ஆகையினாலே,
அன்று–அவள் முலைதந்த; அக்காலத்தில்
நீயும்–சிறு குழந்தையான நீயும்
அலை பண்பால்–அலையெறிகிற (அதிகமான) உன் ஸௌலப்ய குணத்தினாலே
முலை உண்பாய் போலே–மெய்யே ஸ்தன்யபானஞ்செய்பவனைப் போலே
உகந்து–(பெறாப்பேறு பெற்றாற் போலே) மகிழ்ந்துகொண்டு
முனிந்து–(மனத்தில்) சீற்றங் கொண்டு
ஆவி–(அந்தப் பூதனையின்) உயிரை
உண்டாய்–உறிஞ்சி உட்கொண்டாய்.

(பொத்த உரலும் பூதனை விஷப்பாலும் அவனுக்கே என்று அற்று தீர்ந்து இருப்பதால் திரு உள்ளம் உகப்பானே
விஷமே அம்ருதமான வேளையில் திரு அவதாரம் அன்றோ

அலை பண்பால்-கண்ணனுக்கும் பூதனைக்கும் -அலைகிற பண்பு -அலை எறிகிற குணத்தால் -குழந்தைத் தனம் -தாழ்ந்த குணம்

கையார் சக்கரத்து–போனாய் மா மருதின் நடுவே -தேனே இன்னமுதே என்று என்று சில கூத்துக்கள் சொல்ல
மெய்யே பெற்று ஒழிந்தேன்

பாசுரத்தில் உகந்து இரண்டு தடவை -அவளும் இவனும் )

பூதனை யானவள் -யசோதை பிராட்டி ஸ்நேஹிக்குமா போலே ஸ்நேஹித்துப் பரிவு தோற்ற ஒசழக்காக
உன்னை உறக்கத்தில் தூக்கி எடுத்து -பால் விம்மி -ஒளி விடுகின்ற புகரை யுடைத்தான முலையை
ஹிருதயம் குளிரும்படி உண் என்று சாதரமாக முலை தந்தாள் –

ஆகையால் நீயும் அவள் முலை தந்த அன்று அலை எறிகிற குணத்தால் பெறாப் பேறு பெற்றால் போலே உகந்து கொண்டு
மெய்யே முலை உண்பாரைப் போலே சீறி யுண்டு அவள் பிராணனை முடித்துப் பொகட்டாய் –

அலை பண்பால்-என்று
அழிந்த நீர்மையை யுடையவள் -என்று அவள் மேலே ஏறிடவுமாம் –

உகந்து உன்னை வாங்கி ஒளி நிறம் கொள் கொங்கை-அகம் குளிர உண்-என்றாள் —
ஆனமையால் நீயும் -அலை பண்பால் உகந்து-முலை  யுண்பாய் போலே
முனிந்து ஆவி உண்டாய் –
என்று அந்வயம் –

(மித்ர பாவேந ஸம் ப்ராப்தம் ந த்யஜேயம் -என்கிற நீ
வெளி வேஷ அன்பை யுடையாளாய் வந்த பூதனையையும்
ரக்ஷித்து உன்னிடம் சேர்த்துக் கொண்டு இருப்பாய்
அப்படிச் செய்யாமல் அவளை அழித்தது -உன்னை ஒழிய சத்தை நிலை இல்லாத அடியார் இடம் உனக்குள்ள பக்ஷ பாதத்தால் அன்றோ )

————————————————————————————————————–

பூதனை படியை அனுசந்தித்த நெஞ்சாறல் தீர -இவ் விஷயத்தில் நிலை நின்ற ப்ரேமமுடைய
யசோதை பிராட்டியும் ஒருத்தியே என்று அவள் ஸ்நேஹத்தைக் கொண்டாடுகிறார் –

அன்றது கண்டு அஞ்சாத ஆய்ச்சி உனக்கு இரங்கி
நின்று முலை தந்த இந் நீர்மைக்கு -அன்று
வரன் முறையால் நீ  யளந்த மா கடல் ஞாலம்
பெரு முறையால் எய்துமோ பேர்த்து—9-

பதவுரை

அன்று–(பூதனை பிணமாக விழும்படி நீ முலை யுண்டு அவளுயிரை முடித்த) அக் காலத்தில்
அது கண்டு–முலை கொடுத்த அவள் செத்துக் கிடந்த அச் செய்தியைக் கண்ணாலே பார்த்தும்
அஞ்சாத–‘முலை கொடுக்கிற நாமும் ஒருகால் செத்துப் போவோமோ!’ என்று பயப்படாத
ஆய்ச்சி–யசோதைப் பிராட்டியானவள்
நன்று–தரித்து நன்று
அந்தப் பூதனையின் (விஷத்திற்கு மாற்றாக)–
உனக்கு இரங்கி முலை தந்த–உன்னிடத்துப் பரிவு கொண்டு முலை கொடுத்த
இ நீர்மைக்கு–இந்தப் பெருங் குணத்திற்கு,
அன்று நீ வரன் முறையால் அளந்த மா கடல் சூழ் ஞாலம்–முன்பு நீ சிறந்த உறவினாலே அளந்து கொண்ட கடல் சூழ்ந்த இவ்வுலகமானது
பெருமுறையால் எய்துமோ–இன்னது பெரியதென்று பார்க்கும் முறையில் ஒப்பாகப் பொருந்துமோ?

அவள் பிணமாய் விழும்படி நீ முலை யுண்டு முடித்த அன்று –
முலை கொடுத்தவள் பட்டது கண்டு -நாமும் அப்படிச் செய்வது என் -என்று பயப்படாத யசோதை பிராட்டியானவள் –
உனக்கு ஏது விளையத் தேடிற்றோ -என்னும் வயிறு எரிச்சலாலே பரிந்து
தளராதே தறையிலே கால் பாவும் படி தரித்து நின்று முலை தந்த இந்த மஹா ஸ்வபாவத்துக்கு

மஹா பலி நீர் வார்த்துத் தந்த அன்று நீ உடையவனும் இவை உடைமையும் ஆகிற ஸ்ரேஷ்டமான உறவாலே ரக்ஷகனான நீ
அந்நிய அபிமானத்தால் வந்த அழல் மாறும் படி குளிரத் திருவடிகளாலே ஸ்பர்சித்து அளந்து கொண்ட பெரிய கடலாலே
சூழப் பட்ட பூமியானது மறித்துப் பார்க்கும் இடத்தில் –
இதில் இது பெரியது என்று பெருக்கப் பார்க்கும் க்ரமத்தாலே ஒக்குமோ
அதுவும் பெரிய செயல் -இதுவும் பெரிய செயல் -அந்த ஸ்வ பாவத்துக்கு இது ஒப்பாகப் போருமோ என்றபடி –

(இவ்வுலகம் எல்லாம் யசோதைப் பிராட்டியின் இந்த குணத்துக்கு ஒப்பாகுமோ

பொங்கும் பரிவாலே கொழு மோர் காய்ச்சி ஐம்படைத்தாலி போல்வன சாத்தி பின்பு தானம் முலை கொடுத்து-பரே சப்தம் கௌஸ்துபம் போல்வன பறை சாற்றை -கூர்ம வியாக்ரம் -ஸுலப்யம் பறை சாற்றுமே –
அப்ராக்ருத குணக்கடலான உனது பெருமையும் பிராகிருத சம்பந்தம் யுடையவளாய் இருந்தும் இப்படிச் செய்த இவள் குணத்துக்கு ஒப்பாகுமோ
இத்தால் யசோதை பிராட்டிக்கு கண்ணன் மீது உள்ள அன்பின் மஹாத்ம்யம் சொல்லிற்று )

—————————————————————————————————-

அவளைப் போலே எனக்கு உன் பக்கல் அதி மாத்ர பிராவண்யம் இல்லையே யாகிலும் –
ப்ராவண்ய லேசம் தான் ஆகிலும் யுண்டே –
அதுவே பற்றாசாக அடியே பிடித்துக் கண்ட கண்ட தேவதைகள் கால் கீழே தலை மடுத்துப் பட்ட
என் தண்மையைப் போக்கி ரக்ஷிக்க வேணும் -என்கிறார் –

பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் மண்ணிரந்து
காத்தனை பல்லுயிரும் காவலனே -ஏத்திய
நா வுடையேன் பூ வுடையேன் நின்னுள்ளி நின்றமையால்
கா அடியேன் பட்ட கடை———-10-

பதவுரை

காவலனே–ஸர்வ ரக்ஷகனே!,
பிள்ளைஆய்–சிறு குழந்தையாயிருந்து
மா சகடம்–(அஸுராவேசமுள்ள) பெரிய வொரு வண்டியை
பர்த்தனை–கட்டழியும்படி உதைத்துத் தள்ளினாய்;
மண்–பூமியை
இரந்து–(மஹாபலியினிடத்தில்) யாசித்துப் பெற்று
(திருவடியாலே குளிரத்தடவி)
பல் உயிரும்–எல்லா ஆத்மாக்களையும்
காத்தனை–ரக்ஷித்தருளினாய்;
நின்–(இப்படி ரக்ஷகனான) உன்னை
உள்ளி நின்றமையால்–(ஆஸ்ரயிக்கத் தக்கவனாக) மனப்பூர்வமாக எண்ணியிருப்பதனால்
ஏத்திய நா உடையேன்–உன்னை ஸ்துதிப்பதையே ஸ்வபாவமாகவுள்ள நாக்கை யுடையவனாயிருக்கிறேன்;
பூ உடையேன்–(அர்ச்சிப்பதற்கு உரிய) புஷ்பங்களையுமுடையவனாயிருக்கிறேன்;
(ஆனபின்பு)
அடியேன்–உனக்கு அடியவனாயிருக்கும் பெரும் பதவியைப் பெற்றிருக்கிற நான்
பட்ட–வெகுகாலமாக அடைந்துள்ள
கடை–தாழ்வுகளை
கா–காப்பாற்று -போக்கி யருள வேணும்.

வளர்த்தின தொட்டிலிலே கிடக்கும் படியான சிறு பிள்ளையாய்க் கொண்டு
பெரிய சகடத்தை கட்டு அழியும் படி தள்ளிப் பொகட்டாய் –
சர்வ ரக்ஷகன் ஆனவனே –

அந்த ரஷ்ய ரக்ஷக சம்பந்தத்தை புரஸ்கரித்துக் (முன்னிட்டுக் )கொண்டு ஆஸ்ரிதனான இந்திரன் இழவைப் பரிஹரிக்கைக்காக
பூமியை அர்த்தித்து வாங்கிக் கொண்டு -திருவடிகளாலே குளிர ஸ்பர்சித்து சகல ஆத்மாக்களையும் ரக்ஷித்து அருளினாய்

இப்படி ரக்ஷகனான உன்னை சர்வ ஸமாஸ்ரயணீயன் என்று
அனுசந்தித்து நிற்கையாலே தனக்குத் தானே ஏத்தும் படியான நாவை யுடையேன் ஆனேன் –

காயிகமான அடிமை செய்கைக்கு உபகரணமான புஷ்பங்களை யுடையேன் ஆனேன் –
உனக்கு சேஷ பூதன் ஆகையால் வந்த ராஜ குலத்தை யுடையேனான நான்
அநாதி காலம் அர்வாசீநமான தேவதைகளின் கால் கீழே
தலை மடுத்துப் பட்ட தண்மையை இனி வாராத படி தேவரீர் காத்து அருள வேணும் –

(நீ ஸர்வ ரக்ஷகன் என்பதை உனது ஒவ்வொரு செயலும் பறை சாற்றுகிறதே -உன்னால் அத்தை மறைக்கப் போமோ
பிள்ளையாய் ஆன திசையிலும் ஸர்வ ரக்ஷகத்வத்தை மறைக்கப் போமோ
ஸர்வ ரக்ஷகத்வம் ஸ்வா பாவிக ஸ்வரூபம் அன்றோ உனக்கு
இதனால் அன்றோ பல பிரதனான உனது ஸ்வரூபத்தை மாற்றிக் கொண்டு மாணியாய் இரந்து
அத்தை வியாஜ்யமாக்கி -தாய் பிரஜையை தனது பேறாகவே அணைத்துக் கொள்வது போல் அன்றோ
நீ ஸமஸ்த லோகங்களையும் அளந்து அருளினாய்
இந்த ரக்ஷகத்வத்தை அனுசந்தித்து
என்னிலும் முந்துற்ற கரணங்கள் -உன்னி -ஏத்திய நா -பூ உடையேன் -என்பதால் மநோ வாக் காயங்கள் மூன்றும்
பகவத் விஷயத்தில் ஈடுபட்டமையை வெளியிட்டு அருளுகிறார் –
அடியேன் பட்ட கடை கா
இவ்வாறு உனக்கே அநந்யார்ஹ சேஷ பூதனான அடியேன் முன்பு அநாதி காலம் தாழ்ந்த -கடை என்றது தாழ்வைக் குறிக்கும்
அடுத்த பாசுரத்தில் -அமரர் கழல் தொழுது நாளும் இடை நின்ற இன்பத்தராவர்-என்று தேவதாந்த்ர பஜநம் சொல்வதால்
இங்கும் கடை என்று அத்தையே சொல்லிற்று எனக் கொள்ளலாம்
கா -ஸர்வ ரக்ஷகனான நீயே இப்படிப்பட்ட தாழ்வுகளை -அல் வழக்குகளை -இனிப்படாமல் ரக்ஷித்து அருள வேணும் என்கிறார் )

——————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading