ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் தனியன் –
லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-
—————————————————————————————————————
இப்புருஷார்த்ததுக்கு ப்ரதிபந்தகம் —
இப்படி பரமாத்மா யாதாம்ய அனுபவத்தாலே நிரதிசய ஆனந்தி யாகைக்கு யோக்யனான ஆத்மா –
ஈஸ்வரனுடைய ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்களையும் –
ஸ்வ ஸ்வரூப யாதாம்யத்தையும் அறியாதே -ஸ்வரூப விபரீதங்களாய்-
ஷண ஷரண ஸ்வபாவத்வாதி தர்ம விசிஷ்டங்களான நாநா வித தேஹங்களிலே ஆத்ம புத்தியைப் பண்ணி –
தேஹ அனுபந்திகளாய் பகவதீயங்களாய் இருக்கிற க்ருஹ ஷேத்திர ஆராமாதிகளை ஆத்மீயங்களாகவும்
அத்தை பகவதீ யத்வாகாரத்தை ஒழிய ஸ்வா தந்த்ர்யேண போக்யங்களாகவும் நினைத்து
அவை லபிக்கைக்கு அனுகூலித்தவர்கள் பக்கலிலே ராகத்தையும்
ப்ரதிகூலித்தவர்கள் பக்கலிலே த்வேஷத்தையும் பண்ணி –
அவற்றை லபிக்கைக்கு சாதனங்களான பர ஸ்தோத்ர பர ஹிம்சா தேவதாந்திர பஜனங்களிலே அந்வயித்து
அவற்றால் நாநா வித சரீரங்களைப் பரிக்ரஹித்து
பால்ய யௌவன வார்த்தக்யாத்ய வச்தைகளிலே
ஆத்யாத்மிகாதி தாபத்ர தப்தனாய் -மரண தசையிலே யம கிங்கர பீடிதனாய்
துக்கேன சரீரங்களை விட்டு
யாதநா சரீரங்களிலே பிரவேசித்து ரௌரவாதி நரகங்களிலே நாநா வித துக்கங்களை அனுபவித்து
தூம ராத்ரி அபர பஷ தஷிணாயன பித்ரு லோக ஆகாச சந்திர க்ரமத்தாலே உபரிதன லோகங்களிலே போய்
நாராகி தர்சன நைரந்தர்யத்தாலும் அதிக ஸூக அனுபவத்தாலும் அஸூர ராஷச பீடையாலும் பதன பீதியாலும்
துக்க பஹூளமான ஷூத்ர ஸூகங்களை அனுபவித்து த்யு பர்ஜன்ய ப்ருதிவீ புருஷ யோஷித் ஸ்தானங்களிலே
ஸ்ரத்தா சோம வர்ஷான்ன ரேதோ ரூப அவஸ்தா விசிஷ்டனாய்க் கொண்டு பிரவேசித்து
இப்படி ஜன்ம ஜரா மரண நிரயாதிகளிலே நாநா வித துக்கங்களைச்
சக்ர நேமி க்ரமத்தாலே அனுபவிக்கும் படி பண்ணும் கர்ம சம்பந்தம் –
—————————————————————————
ஜகன் மித்யாத்வ வாதி சங்கர மத உபன்யாசம்
நனு–அந்ருதேன ஹி பிரத்யூடா –என்றும் –
தஸ் மிம்ஸ் சாந்யோமாயா சந்நிருத்த –என்றும் –
மமா மாயா துரத்யயா –என்றும்
வஸ்த் வஸ்தி கிம் –மகீ கடத்வம் –தஸ்மான்ன விஜ்ஞான ம்ருதே அஸ்திகிஞ்சித் –சத்பாவ ஏவம்-என்றும்
ஸ்ருதி இதிஹாச புராணங்களிலே –அந்ருதம் –மாயை –நாஸ்தி -அசத்யம் -இத்யாதி சப்தங்களாலே சொல்லுகையாலே
மித்யா பூதமான அஜ்ஞானம் பந்த ஹேது -பந்தமும் மித்யை என்று சிலர் சொன்னார்கள் –
————————————————————————-
தத் கண்ட நம்
அது அனுபபன்னம் -அதில் பிரமாணம் இல்லாமையாலும் அநேக பிராமண பாதிதம் ஆகையாலும்
அந்ருத-சப்தத்தாலே சொல்லுகிறது –
சாம்சாரிக பலத்துக்கு ஹேதுவான கர்மத்தை –
ருதேதரமந்ருதம்-ருதம் ஆவது கர்ம பலம் -ருதம் பிபந்தௌ-என்கையாலே
இவ்விடத்தில் அந்ருதம் என்கிறது பகவத் ப்ராப்திக்கு எதிரான கர்மத்தை –
ஏதம் பிரம்மா லோகம் ந விந்தந்தி அந்ருதேன ஹி பிரத்யூடா -என்கையாலே –
மாயை என்கிறது பிரகிருதியை —
மாயம் து ப்ரக்ருதிம் வித்யாத் -என்கையாலே -பிரகிருதியை மாயை என்கிறது விசித்திர கார்யங்களைப் பண்ணுகையாலே –
வஸ்த் வஸ்தி கிம் -இத்யாதி ஸ்லோகங்களாலே விநாசித்வத்தைச் சொல்லுகிறது -மித்யாத்வத்தைச் சொல்லுகிறது அன்று
மித்யா பூதமாகில் ஸூக்தி காரஜதம் போலேயும்
ரஜ்ஜூ சர்ப்பம் போலேயும் பாதிதமாக வேணும் –
ம்ருத்தி கேத்யேவ சத்யம் -என்றும் –
சர்வ மேதத்ருதம் மன்யே யந்மாம் வதசி கேசவ -என்றும் –
காலச்ய ஹி ச ம்ருத்யோஸ் ச ஜங்கமஸ் தாவரச்ய ச –ஈசதேபகவா நேகஸ் சத்யமேதத் ப்ரவீமி தே -என்றும்
சத்யம் சத்யம் புநஸ் சத்யம் உத்த்ருத்ய புஜமுச்யதே –வேதாச்சாஸ்த்ரம் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம் -இத்யாதி
பிரமாணங்களோடு விரோதிக்கும் –
ஆகையால் பந்தமும் பந்த ஹேதுவும் பரமார்த்தம் –
————————————————————————
ப்ரஹ்ம அஜ்ஞான வாத நிரசனம்
தத்வமஸி-என்றும் –
அயமாத்மா ப்ரஹ்ம -என்றும் -பிரமத்துக்கும் ஜீவனுக்கும் தாதாத்ம்யம் சொல்லுகையாலே
ப்ரஹ்மம் தானே சம்ஹரிக்கிறது என்கிறதும் அசங்கதம்-
ப்ரஹ்மம் நித்ய நிர்தோஷம்-சமஸ்த கல்யாண குணாத்மகம் -ஜீவாத் விலஷணம் -என்று சொல்லுகிற
அபஹத பாபமா –என்றும் –
யஸ் சர்வஜ்ஞ -என்றும் –
ப்ருதகாத்மானம் -என்றும் -இத்யாதி சாஸ்த்ரங்களோடு விரோதிக்கையால்-
தத்வமஸி -இத்யாதி வாக்யங்களில் சரீர சரீரி பாவத்தைச் சொல்லுகிறது
ஆகையால் தச்மிம்ஸ் சான்ய-என்றும் –
தயோர நய பிப்பலம் ஸ்வாத் வத்தி -என்றும் –
ஈச்வரப்ரேரித -என்றும்
சொல்லுகிறபடியே ஜீவன் சம்சரிக்கிறான் –
விரோதி ஸ்வரூப நிர்ணய பிரகரணம் சமாப்தம் –
—————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply