ஸ்ரீ சைல தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர பிரணவம் வந்தே ரம்யஜா மாதரம் முனிம்-
லோகச்சார்யா குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நாம –
சித் பிரகரணம் –
சூர்ணிகை -1-
முமுஷூ வான சேதனனுக்கு-மோஷம் யுண்டாம்போது-தத்வ த்ரய ஞானம் யுண்டாக வேணும் –
தத்வ ஜ்ஞாநாத் முக்தி –
போக்தா போக்யம் ப்ரேரிதா ராஞ்ச மத்வா ஜூஷ்டஸ் ததஸ் தேன அம்ருதத்வமேதி -உபநிஷத்
பசுர் மனுஷ்யா பஷீ வா எ ச வைஷ்ணவ சம்ஸ்ரயா தே நைவ தே ப்ரயாஸ் யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம்
-ஸ்ரீ வைஷ்ணவ அபிமானத்தாலே பெறலாம் என்றும்
யம் யம் ஸ்ப்ருசதி பாணிப்யாம் யம் யம் பச்யதி சஷூஷா ஸ்தாவராண் யபி முச்யந்தே கிம் புநர் பாந்தவா ஜநா-
திர்யக் ஸ்தாவரங்களுக்கும் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்பர்சத்தாலும் கடாஷத்தாலும் சித்தி -என்றதே என்னில்
இங்கே சேதனனுக்கு -என்கிறதே -இங்கு முமுஷுவான சேதனனுக்கு இறே மோஷ சித்திக்கு தத்வ த்ரய ஞானம் யுண்டாக வேணும் என்கிறது –
அங்குத் தானும் முமுஷ்த்வமும் -தத்வ ஞானமும் பககல் இன்றிக்கே இருக்கச் செய்தேயும்
இவை இரண்டாலும் பூர்ணனாய் இருப்பான் ஒரு வைஷ்ணவன் யுடைய அபிமானம் இறே கார்யகரமாகச் சொல்லுகிறது –
ஆகையால் அபிமானி யானவனுடைய ஜ்ஞான விசேஷத்தை கடாஷித்து இறே
அபிமான அந்தர் பூதமான இவற்றுக்கும் ஈஸ்வரன் கார்யம் செய்கையாலே –
தத்வ ஞானம் மோஷம் என்கிற இது அவ்விடத்திலும் சத்வாரகமாக சித்திக்கும் –
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி -நான்ய பந்தா அயநாய வித்யதே -ஈஸ்வர தத்வம் ஒன்றையே அறிந்தால் போதுமே என்னில்
அத்தை சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம் என்றும் காரண வ்யாபக தாரக நியாமாக சேஷியாக அறிய வேணுமே –
அவற்றின் ஸ்வரூப ஸ்வ பாவங்களை அறியவே தானே இவை அனைத்தையும் அறிய முடியும்
ப்ருதகாத்மா நம் ப்ரேரிதா ராஞ்ச மத்வா -சுருதி வாக்கியம் என்பதால் சுருதி விரோதம் இல்லை
——————————————————
சூர்ணிகை -2- தத்வ த்ரயம் ஆகிறது -சித்தும் அசித்தும் ஈஸ்வரனும்
சூர்ணிகை -3-சித் என்கிறது ஆத்மாவை
சைதன்யம் அறிவுக்கு ஆதாரமான வஸ்து சித் என்கிறது -சேதனன் சித்து பர்யாயம்-அசேதனம் அசித்து பர்யாயம்
————————————————–
சூர்ணிகை -4
ஆத்ம ஸ்வரூபம் சென்று சென்று பரம் பரமாய் -என்கிறபடியே
தேக-இந்த்ரிய-மன-பிராண-புத்தி விலஷணமாய்
அஜடமாய்-ஆனந்த ரூபமாய்-நித்யமாய்-அணுவாய்-அவ்யக்தமாய்-அசிந்த்யமாய்-நிரவயவமாய்
நிர்விகாரமாய்-ஜ்ஞாநாஸ்ரயமாய்-ஈஸ்வரனுக்கு ந்யாம்யமாய்-தார்யமாய்-சேஷமாய்-இருக்கும்-
சூர்ணிகை -5
ஆத்ம ஸ்வரூபம்-தேஹாதி விலஷணம்-ஆனபடி என் என்னில்-
சூர்ணிகை -6
தேஹாதிகன் -என்னுடைய தேஹாதிகன் -என்று-ஆத்மாவில் வேறுபட்டு தோற்றுகையாலும்
இதம் -என்று தோற்றுகையாலும்-ஆத்மா -நான் என்று தோற்றுகையாலும்-இவை ஒருகால் தோற்றி ஒரு கால் தோற்றாமையாலும்
ஆத்மா எப்பொழுதும் தோற்றுகையாலும்-இவை பலவாகையாலும்-ஆத்மா ஒருவன் ஆகையாலும்-ஆத்மா இவற்றில் விலஷணன் என்று கொள்ள வேணும்
சென்று சென்று பரம் பரமாய் -என்னுடைய தேஹம் -இந்த்ரியம் மனம் பிராணம் ஞானம் –
தேகாதிகள் இதம் புத்திக்கு விஷயமாகும் -அஹம் அர்த்தத்தில் காட்டிலும் வேறுபட்டவை
ஜாக்ரத தசையில் மட்டுமே தேசோஹம்-புத்தி தோன்றும் -ஸூ ஷுப்தி தசையில் இல்லையே
மூர் பிறவி பலனாய் இருக்கும் லோக வழக்கும் உண்டே -எனவே தேஹாதி விலஷணம்-என்றதாயிற்று –
——————————————————————
சூர்ணிகை -7
இந்த உக்திகளுக்கு கண் அழிவு யுண்டே யாகிலும் சாஸ்திர பலத்தாலே ஆத்மா -தேஹாதி விலஷணனாகக் கடவன்
சாஸ்திரமே பிரபல பிரமாணம்
பஞ்ச விம்சோயம் புருஷ –ஆத்மா து ச மகாரேணே பஞ்ச விம்ச பிரகீர்த்ததே —ஸ்ருதி ஸ்ம்ருதிகள் தேஹாதிகளில் ஆத்மா விலஷணன் என்றதே
—————————————————————————————
சூர்ணிகை -8
அஜடமாகை யாவது ஞானத்தை ஒழியவும் தானே தோற்றுகை –
ஸ்வயம் பிரகாசமாய் இருக்கை-தானே தோற்றிக் கொண்டே இருப்பதே அஜடத்வம் -அத்ராயம் புருஷ ஸ்வயம் ஜ்யோதிர் பவதி –
சூர்ணிகை -9
ஆனந்த ரூபமாகை யாவது ஸூ கரூபமாய் இருக்கை –
சூர்ணிகை-10-
உணர்ந்தவன்-ஸூகமாக உறங்கினேன் என்கையாலே ஸூக ரூபமாகக் கடவது –
ஸூ கமாகவே உறங்கினேன் -நிர்வாண மய ஏவாய மாத்மா –ஜ்ஞானானந்த மயஸ் த்வாத்மா -ஜ்ஞானானந்தைக்க லஷணம்-இத்யாதி பிரமாணங்கள்
———————————————–
சூர்ணிகை -11
நித்யமாகை யாவது-எப்போதும் யுண்டாகை –
சூர்ணிகை -12-
எப்போதும் யுண்டாகில் ஜன்ம மரணங்கள் யுண்டாகிற படி என் என்னில் ஜன்மமாவது தேக சம்பந்தம் மரணமாவது தேக வியோகம்
ஆத்மா தேஹத்துடன் சம்பந்தம் கொள்வதே ஜன்மம் -பிரிந்து போகும் பொழுது மரணம் -ந ஜாயதே ம்ரியதே வா விபச்சித் -பிரமாணங்கள் –
——————————————————-
சூர்ணிகை -13-
அணுவான படி என்-என்னில் –
சூர்ணிகை-14-
ஹிருதயப் பிரதேசத்தில் நின்றும் உத்க்ரமித்துப் போவது வருவதாம் என்று சாஸ்திரம் சொல்லுகையாலே ஆத்மா அணுவாகக் கடவது –
உத்க்ராந்தி கத்யாகதீ நாம் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் –
சூர்ணிகை-15–
அணுவாய் ஹ்ருதயத்து அளவில் நிற்குமாகில் ஸூக துக்கங்களை புஜிக்கிற படி என் என்னில் –
சூர்ணிகை- 16-
மணி த்யுமணி தீபாதிகள் ஓர் இடத்திலே இருக்க பிரபை எங்கும் ஒக்க வ்யாபிக்கையாலே அவற்றைப் பூஜிக்கத் தட்டில்லை –
சூர்ணிகை-17-
ஒருவன் ஏக காலத்திலே அநேக தேஹங்களைப் பரிக்ரஹிக்கிறதும் ஜ்ஞான வ்யாப்தியாலே –
குணாத் வா ஆலோகவத் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் –சௌபரி அநேக தேக பரிக்ரஹம் ஜ்ஞான வ்யாப்தியால் –
சூர்ணிகை -18-
அவயகதம் ஆகையாவது கட படாதிகளை க்ரஹிக்கிற சஷூராதிகளாலே தோற்றாது இருக்கை –
ச்சேத நாதி யோக்யாதி கடபடா தீநி வஸ்தூ நியை பரமாணைர் வ்யஜ்யந்தே தை –அயமாத்மா ந வ்யஜ்யதே-இதி அவ்யக்த -ஸ்ரீ கீதா பாஷ்யம்
மானஸ ஜ்ஞானத்துக்கு விஷயமாம் அத்தனை யல்லது இந்த்ரிய ஜ்ஞானத்துக்கு விஷயமாகாது –சென்று சென்று பரம் பரமாய் –ஞானம் கடந்ததே –
சூர்ணிகை -19-
அசிந்த்யமாகை யாவது-அசித்தோடு சஜாதீயம் என்று-நினைக்க ஒண்ணாது இருக்கை –
ஒருபடியாலும் நினைக்க ஒண்ணாது என்றது இல்லை -அசித்துடன் சஜாதீயமாக யென்ன ஒண்ணாது என்றபடி
சூர்ணிகை -20-
நிர்வவவமாகை யாவது அவயவ சமுதாயம் அன்றிக்கே இருக்கை –
அவயவ சமுதாயம் இல்லாதபடி -விஜ்ஞ்ஞான மயம் விஜ்ஞ்ஞான கனம் என்றபடி –
சூர்ணிகை -21-
நிர்விகாரம் ஆகையாவது அசித்துப் போல விகரிக்கை அன்றிக்கே ஒருபடிப் பட்டு இருக்கை–
அம்ருத அஷரம் ஹர —என்றும் -ஆத்மாகத்தோஷர -என்றும் அஷர சப்தத்தால் சொல்லப்படும் வஸ்து -சதா ஏக ரூபமாய் இருக்கை –
சூர்ணிகை -22-
இப்படி இருக்கையாலே-சஸ்த்ரம்-அக்னி-ஜலம் வாதம் ஆதபம்-தொடக்க மானவற்றால்
சேதித்தல்-தஹித்தல்-நனைத்தல்-சோஷிப்பித்தல் செய்கைக்கு-அயோக்யமாய் இருக்கும் –
நை நம் ச்சிந்தந்தி சஸ்த்ராணி–அச்சேத்யோயம் அதாஹ்யோயம்-வெட்ட கொளுத்த அற்ஹயமாய் இருக்காதே –
சூர்ணிகை -23-
ஆர்ஹதர் ஆத்மாவை தேக பரிமாணன் என்றார்கள் –
சூர்ணிகை -24-அது ஸ்ருதி விருத்தம் –
சூர்ணிகை -25-அநேக தேகங்களை பரிக்ரஹிக்கிற யோகிகள் ஸ்வரூபத்துக்கு சைதில்யமும் வரும் –
ஜைனர்கள் ஆத்மாவை தேக பரிமாணன் என்பர்
அம்ருத அஷரம் ஹர -ஏஷ அணுர் ஆத்மா –வாலாக்ர சத பாகச்ய
ஏவஞ்சாத்மா அகார்த்ச்ன்யம்-ப்ரஹ்ம ஸூ த்ரம் -கஜ பீபீலிகாதி சரீரங்களை ஸ்வ கர்ம அனுகுணமாக பரிக்ரஹிக்கும் அவர்களுக்கு
-யானை எறும்பு -சரீரம் -சைதில்யம் வருமே
சூர்ணிகை -26-
ஞான ஆஸ்ரயம் ஆகையாவது-ஞானத்துக்கு-இருப்பிடமாய்-இருக்கை –
தீபம் ஒளி இரண்டுமே தேஜோ த்ரவ்யம் -தீபம் ஒளிக்கு ஆஸ்ரயம் -விஜ்ஞா தாரமரே கேன விஜாதீயாத் –ஜ்ஞானான் யேவாயம் புருஷ -பிரமாணங்கள்
சூர்ணிகை -27-
ஆத்மா ஜ்ஞானத்துக்கு இருப்பிடம் அன்றிக்கே ஜ்ஞானம் மாதரம் ஆகில்
சூர்ணிகை -28-
நான் அறிவு என்று சொல்ல வேணும் நான் அறியா நின்றேன் என்னக் கூடாது –
பௌத்தர் ஜ்ஞான மாதரம் என்பர் ஆத்மாவினுடைய ஜ்ஞாத்ருத்வம் பிரத்யஷ சித்தம்
சூர்ணிகை -29-
ஜ்ஞாதா என்ற போதே–கர்த்தா-போக்தா என்னுமிடம் சொல்லிற்று ஆய்த்து-
சூர்ணிகை -30-
கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் ஜ்ஞான அவஸ்தா விசேஷங்கள் ஆகையாலே
ஹேய உபாதேய ஜ்ஞானம் உண்டானால் –சிகீர்ஷை முயற்சி உண்டாகி கர்த்ருத்வம் உண்டாகும் -கர்த்தாவான போதே போக்தாவும் ஆகிறான் –
சூர்ணிகை -31
சிலர் குணங்களுக்கே கர்த்ருத்வம் உள்ளது ஆத்மாவுக்கு இல்லை என்றார்கள்
சூர்ணிகை -32-
அப்போது இவனுக்கு சாஸ்திர வச்யதையும் போக்த்ருத்வமும் குலையும்
சாங்க்யர்கள் வாதம் –சாஸ்திரங்கள் விதி நிஷேதங்கள் சேதனனுக்கே-சாஸ்திர பலம் பிரயோக்தரி -கர்த்தா சாஸ்த்ரார்த்த வத்வாத்
ஸ்வர்க்க காமோ யஜேத –முமுஷூ ப்ரஹ்ம உபாசீத —கர்த்தா சாஸ்த்ரார்த்த வத்வாத் -ப்ரஹ்ம ஸூ த்ரம் –
சூர்ணிகை -33-
சாம்சாரிக பிரவ்ருதிகளில் கர்த்ருதம் ஸ்வரூப பிரயுக்தம் அன்று –
சூர்ணிகை -34-
குண சமசாகக் க்ருதம்
ப்ரக்ருதே க்ரியமாணாநி கர்மாணி சர்வச அஹங்கார வி மூடாத்மா கர்த்தா ஹமிதி மந்யதே -ஸ்ரீ கீதா –
சூர்ணிகை -35-
கர்த்ருத்வம் தான் ஈஸ்வர அதீநம்
ஞானம் இச்சை பிரயத்னம் -மூன்றும் பகவத் ஆதீனம் -பிரதம யத்னத்தை அபெஷிததுக் கொண்டு ஈஸ்வரன் ப்ரவர்த்திப்பிக்கிறான்
பராத் து தத் ஸ்ருதே –க்ருத பிரயத்த அபேஷஸ் து விஹித பிரதிஷித்த அவையர்த்த் யாதிப்ய
அந்தராத்மாவாக இருந்து -நல்லது செய்யும் அளவில் அனுக்ரஹித்தும் தீயது செய்யும் அளவில் நிக்ரஹத்தையும் செய்து அருளுவான்
நடாதூர் அம்மாள் -தத்வ சாரம் -ஆதாவீச்வர தத்தயைவ புருஷஸ் -ஸ்வா தந்த்ர்ய சக்த்யா ஸ்வ யம தத்தத் ஜ்ஞான சிகீர்ஷ்ண ப்ரயதி நானா
உத்பாதயன் வர்தாதே தத்ரோபேஷ்யே தத் அநு மத்யே விததத் தன நிக்ரஹ அநு க்ரஹௌ தத்தத் கர்மபலம் ப்ரயச்சதி ததஸ் சர்வச்ய பும்சோ ஹரி –
ஏஷ ஹ்யேவ சாது கர்ம காரயதி யம் ஏப்யோ லோகேப்யோ உன்நீஷதி ஏஷ ஏவ அஸாது கர்ம காரயது யம் அதோ நிநீஷதி -உபநிஷத்
-சர்வ ஜன சாதாரணம் இல்லை -அனுமதி அளிக்கும் தன்மையே -அனுகூளர் பக்கல் அனுக்ரஹம் பிரதிகூலர் பக்கல் நிக்ரஹம்
சூர்ணிகை -36-
ஞான ஆச்ரயமாகில் சாஸ்த்ரங்களில் இவனை ஞானவான் என்று சொல்லுவான் என் என்னில்
சூர்ணிகை -37-
ஜ்ஞானத்தை ஒழியவும்-தன்னை அறிகையாலும்-ஜ்ஞானம் சாரபூத குணமாய் நிரூபக தர்மமே இருக்கையாலும் -சொல்லிற்று
யோ விஜ்ஞானே –விஜ்ஞானம் யஜ்ஞம் தநுதே -ஸ்ருதிகளில் ஜ்ஞானம் என்கிற சொல்லாலே சொல்லிற்றே என்றபடி அதற்கு சமாதானம் அருளுகிறார்
சூர்ணிகை -38-
நியாமகமாகை ஆவது ஈஸ்வர புத்திய அதீனமாக எல்லா வியாபாரங்களும் யுண்டாம்படி இருக்கை —
சரீரத்தின் உடைய சகல பிரவ்ருத்திகளும் சரீரியினுடைய புத்தி அதீனமாக உண்டாகிறாப் போலே சரீர பூதமான இவ்வாதம வஸ்துவினுடைய
சகல வியாபாரங்களும் சரீரியான பரமாத்வாவினுடைய புத்தி அதீநம் என்றபடி
சூர்ணிகை -39-
தார்யம் ஆகையாவது அவனுடைய ஸ்வரூப சங்கல்பங்களை ஒழிந்த போது தன சத்தை இல்லையாம்படி இருக்கை –
சூர்ணிகை -40-
சேஷமாகை யாவது சந்தன குஸூம தாம்பூலாதிகளைப் போலே அவனுக்கு இஷ்ட விநியோக அர்ஹயமாய் இருக்கை-
ஈஸ்வரன் தனக்கேயாக இருக்கும் -அசித்து பிறருக்காய் இருக்கும் -ஆத்மா தனக்கும் பிறருக்கும் பொதுவாய் இருக்கும் என்று முற்பட்ட நினைவு –
அங்கன் இன்றிக்கே அசித்தைப் போலே -தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -நமஸ்-அர்த்தம் முமுஷுப்படி
சூர்ணிகை -41
இதுதான் –க்ருஹ ஷேத்திர புத்ர களத்ராதிகளைப் போலே ப்ருதக் சித்யாதிகளுக்கு யோக்யமாம் படி இருக்கை
அன்றிக்கே சரீரம் போலே அவற்றுக்கு அயோக்யமாய் இருக்கை –
சூர்ணிகை -42
ஆத்மஸ்வரூபம் தான்-பக்த-முக்த-நித்ய-ரூபேண-மூன்றுபடிப் பட்டு இருக்கும் –
சூர்ணிகை -43
பத்தர் என்கிறது-சம்சாரிகளை –
சூர்ணிகை -44
முக்தர் என்கிறது சம்சார சம்பந்தம் அற்றவர்களை –
கேவலரையும் முக்தர் என்கிறது –
சூர்ணிகை -45-
நித்யர் என்கிறது ஒருநாளும் சம்சரியாத சேஷ சேஷசநாதிகளை –
சூர்ணிகை -46-
ஜலத்துக்கு அக்னி சம்ம்ஸ்ருஷ்ட சததாலீ சம்சர்க்கத்தாலே ஔஷண்ய சப்தாதிகள் யுண்டாகிறாப் போலே
ஆத்மாவுக்கும் அசித் சம்பந்தத்தாலே அவித்யா கர்ம வாசனா ருசிகள் உண்டாகிறன-
நெருப்பால் தண்ணீர் விகாரம் ஆவது போலே ரஜஸ் தமஸ் சத்வம் கலந்த அசித் சம்பந்தத்தால் ஜ்ஞானானந்த அமல ஸ்வரூப ஆத்மாவுக்கு அவித்யாதிகள் உண்டாகின்றன
சூர்ணிகை -47
அசித்து கழிந்த வாறே அவித்யாதிகள் கழியும் என்பார்கள் –
காரியம் நிவ்ருத்தமானால் காரணமும் நிவர்தமாகுமே -தத்வ வித்துக்கள் அசித் சம்பந்தம் நீங்கமே அவித்யாதிகள் கழியும் என்பர் –
சூர்ணிகை -48-
இம் மூன்றும் தனித் தனியே அனந்தமாய் இருக்கும் –
சூர்ணிகை -49-
சிலர் ஆத்மா பேதம் இல்லை ஏக ஆத்மாவே உள்ளது என்றார்கள் –
சூர்ணிகை -50
– அந்த பஷத்தில் ஒருவன் ஸூகிக்கிற காலத்தில் வேறே ஒருவன் துக்கிக்க கூடாது –
சூர்ணிகை -51-
அது தேக பேதத்தாலே என்னில்-
சூர்ணிகை -52-
சௌபரி சரீரத்திலும் அது காண வேணும் –
சூர்ணிகை -53-
ஒருவன் சம்சரிக்கையும் ஒருவன் முக்தனாகையும் ஒருவன் சிஷ்யனாகையும் ஒருவன் ஆச்சார்யனாகையும் கூடாது
சூர்ணிகை -54-
விஷம சிருஷ்டியும் கூடாது –
சுக துக்க -ஜீவ பேதமும் கர்ம தாராதம்யமும் விஷம சிருஷ்டிக்கு ஹேது –
சூர்ணிகை -55-
ஆத்மபேதம் சொல்லுகிற ஸ்ருதியோடும் விரோதிக்கும் –
நித்யோ நித்யா நாம் சேதனச் சேத நா நாம் எகோ பஹூ நாம் யோ விததாதி காமான் –
சூர்ணிகை -56-
சுருதி-ஔபாதிக பேதத்தை சொல்லுகிறது என்ன ஒண்ணாது –
சூர்ணிகை -57-
-மோஷ தசையிலும் பேதம் யுண்டாகையாலே –
சூர்ணிகை -58-
அப்போது தேவ மனுஷ்யாதி பேதமும் காம க்ரோதாதி பேதமும் கழிந்து ஆத்மாக்கள்,ஸ்வரூபம்
அத்யந்தம் சமமாய் ஒரு படியாலும் பேதம் சொல்ல ஒண்ணாத படி இருந்ததே யாகிலும்
சூர்ணிகை -59-
பரிமாணமும் எடையும் ஆகாரமும் ஒத்து இருக்கிற பொற்குடங்கள் ரத்னங்கள் வரீஹ்கள் தொடக்கமான வற்றுக்கு
பேதம் உண்டாகிறாப் போலே ஸ்வரூப பேதமும் சித்தம் –
சூர்ணிகை -60-
ஆகையால் ஆத்மா பேதம் கொள்ள வேணும் –
சூர்ணிகை -61-
இப்போது இவர்களுக்கு லஷணம் சேஷத்வத்தோடே கூடின ஜ்ஞாத்ருத்வம் –
சேஷத்வம் மட்டும் சொன்னால் -அசித்துக்கும் பொருந்தும் -ஞாத்ருத்வம் மட்டும் ஒன்னால் ஈஸ்வரனுக்கும் பொருந்தும்
இது–சேஷத்வத்துடன் கூடிய ஞாத்ருத்வம் பத்தர் முக்தர் நித்யர் மூவகைப் பட்ட ஆத்மா வர்க்கங்களுக்கும் பொருந்தும்
சூர்ணிகை -62-
இவர்கள் யுடைய ஜ்ஞானம் தான் ஸ்வரூபம் போலே நித்ய த்ரவ்யமாய் அஜடமாய் ஆனந்த ரூபமாய் இருக்கும் –
சூர்ணிகை -63-
ஆனால் ஜ்ஞானத்துக்கும் ஸ்வரூபத்துக்கும் வாசி என் என்னில்-
சூர்ணிகை -64-
ஸ்வரூபம் தர்மியாய் சங்கோச விகாசங்களுக்கு அயோக்யமாய் தன்னை ஒழிந்த வற்றை பிரகாசிப்பியாமலே
தனக்குத் தானே பிரகாசிக்கக் கடவதாய் அணுவாய் இருக்கும்
ஜ்ஞானம் தர்மியாய் சங்கோச விகாசங்களுக்கு யோக்யமாய் ‘ தனை ஒழிந்தவற்றை பிரகாசிக்கக் கடவதாய்
தனக்குத் தானே பிரகாசியாதே ஆத்மாவுக்கு பிரகாசிக்கக் கடவதாய் விபுவாய் இருக்கும்
ஸ்வரூபமான ஞானம் -தர்மமான ஞானம் இரண்டையும் சொல்லிற்று ஆயிற்று -இரண்டுக்கும் வாசி காட்டி அருளுகிறார்
சூர்ணிகை -65-
அதில் சிலருடைய ஜ்ஞானம்-எப்போதும் விபுவாய் இருக்கும்
சிலருடைய ஜ்ஞானம் எப்போதும் அவிபுவாய் இருக்கும்
சிலருடைய ஜ்ஞானம் ஒருக்கால் விபுவாய் ஒருக்கால் அவிபுவாய் இருக்கும் –
ஸ்வா பாவிகமாக ஞானம் விபுவாக இருந்தாலும் தாராதாம்யம் பார்கின்றோம்
-அயர்வறும் அமரர்கள் -சம்சாரிகள் -கரைகண்டோர் -முக்தர்கள் -மூவருக்கும் ஞான வாசி உண்டே
சூர்ணிகை -66-
ஜ்ஞானம் நித்யமாகில் எனக்கு ஜ்ஞானம் பிறந்தது நசித்தது என்கிறபடி என் என்னில்-
சூர்ணிகை -67-
இந்த்ரியத் த்வாரா பிரசரித்து மீளுவது ஆகையாலே அப்படிச் சொல்லக் குறை இல்லை –
சர்வம் ஹ பஸ்ய பஸ்யதி ச ச ஆனந்த்யாய கலப்பதே -மோஷ அவஸ்தையில் சர்வ விஷயம்
-சம்சார தசையில் கர்ம அனுகுணமாக இருக்குமே -இத்தால் ஜ்ஞானத்துக்கு நித்யத்வத்தில் குறை இல்லை
சூர்ணிகை -68-
இது தான் ஏகமாய் இருக்கச் செய்தே நாநாவாய்த் தோற்றுகிறது ப்ரசரண பேதத்தாலே –
சூர்ணிகை -69-
த்ரவ்யமான படி என் என்னில்
சூர்ணிகை -70-
க்ரியா குணங்களுக்கு ஆச்ரயமாய் அஜடமாய் இருக்கையாலே த்ரவ்யமாகக் கடவது —
க்ரியா ஆஸ்ரயம் த்ரவ்யம் -குணா ஆஸ்ரயம் த்ரவ்யம் -ஜடா வஸ்துக்களில் த்ரவ்யங்களும் உண்டு அத்ரவ்யங்களும் உண்டு
ஆனால் அஜட வஸ்துக்கள் -த்ரவ்யமாகவே தானே இருக்கும் ஆகவே ஜ்ஞானம் த்ரவ்யம் அஜடத்வாத்
சூர்ணிகை -71-
அஜடம் ஆகில் ஸூ ஷுப்தி மூர்ச்சாதிகளில் தோற்ற வேண்டாவோ என்னில்-
யத் அஜடம் தத் த்ரவ்யம் -யதா ஆத்மாதி -என்பதால் அஜடத்வத்தையும் கொண்டும் தரவ்யத்தை சாதிக்கிறார்
சூர்ணிகை -72-
பர ஸ்மரணம் இல்லாமையாலே தோற்றாது –
விஷயங்களை கிரஹிக்கிற வேளையில் தான் ஜ்ஞானம் தன்னுடைய ஆஸ்ரயத்துக்கு தானே பிரகாசிக்கும் –
சூர்ணிகை -73-
ஆனந்த ரூபம் ஆகையாவது ஜ்ஞானம் பிரகாசிக்கும் போது அனுகூலமாய் இருக்கை –
ஜ்ஞானம் பிரகாசிப்பது என்றது ஞானன் தனது ஆஸ்ரயத்துக்கு விஷயங்களைக் காட்டும் போது என்ற படி
சூர்ணிகை -74
விஷ சசராதிகளை காட்டும் போது பிரதிகூல்யமாய் இருக்கைக்கு அடி தேஹாத்மா ப்ரமாதிகள்-
சூர்ணிகை -75-
ஈஸ்வராதமகம் ஆகையாலே எல்லா பதார்த்தங்களுக்கும் ஆனுகூல்யமே ஸ்வ பாவம் ப்ராதிகூல்யம் வந்தேறி –
ஜகத் சர்வம் சரீரம் தே–தானி சர்வாணி தத்வபு -தத் சர்வம் வை ஹரேஸ் தநு -சகல பதார்த்தங்களும் சரீரம் அன்றோ
சூர்ணிகை -76-
மற்றைய அனுகூல்யம் ஸ்வா பாவிகம் ஆகில் ஒருவனுக்கு ஒருக்கால் ஓர் இடத்திலே அனுகூலங்களான சந்தன குசஸூ மாதிகள்
தேசாந்தரே-காலாந்தரே இவன் தனக்கும் அத்தேசத்திலே அக்காலத்திலே வேறே ஒருவனுக்கும் பிரதிகூலங்களாகக் கூடாது
ஆக பகவாத்மகத்வ மூலகமான ஆனுகூல்யமே இயற்க்கை –
முமுஷுக்களுக்கு தத்வத்ரய ஞானம் அவச்யகம் -என்றும் -தத்வத்ரயம் சித்தும் அசித்தும் ஈஸ்வரனும் –
ஆத்மா வஸ்து உடைய ஸ்வரூபமும் லஷணமும்-பத்தர் முத்தர் நித்யர் மூவகை பட்டமையும் –
ஏகாத்ம வாதம் ஸ்ருதிக்கும் உக்திக்கும் ஒவ்வாது என்றும் ஆத்மாக்களுக்கு சேஷத்வதுடன் கூடிய ஜ்ஞாத்ருத்வம் அசாதாராண லஷணம் என்று காட்டியும்
ஞானத்துக்கும் ஸ்வரூபத்துக்கும் உண்டான சாதர்ம்ய வைதர்ம்யங்கள்
மூவகைப்பட்ட சேதனர்களின் ஞான விசேஷமும்-ஞானத்தின்
நித்ய த்ரவ்யத்வ அஜடத்வ ஆனந்த ரூபவத்வங்கள் விவரணம் சொல்லி சேதனத்வத்தின் உடைய வேஷம் நிரூபித்தித் தலைக் கட்டுகிறார் –
————————————————————————————————————————-
கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply