ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —
சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –
—————————————————————————
அதிகாரம் -17 -சாஸ்த்ரீய நியமன அதிகாரம்–
முகுந்தே நிஷிப்ய ஸ்வ பரம் அநதோ முக்தவத் அசௌ
ஸ்வ தந்திர ஆஜ்ஞா சித்தம் ஸ்வயம் அவிதித ஸ்வாமி ஹ்ருதய
பரித்யாகே சத்ய ஸ்வ பர விவித அநர்த்த ஜனநாத்
அலங்க்யாம் ஆமோஷாத் அநுசரதி சாஸ்த்ரீய சரணிம்–
இச் சேஷத்வ சம்பந்தம் அடியாக பகவத் பாகவத விஷயங்களில் இவன் பண்ணும் கைங்கர்யம்
சாஸ்திர சாபேஷை ருசியாலேயோ -சாஸ்திர நிரபேஷ ருசியாலேயோ -என்னில்
இருள் தரும் மா ஞாலத்துள் இருக்கிற இவனுக்கு சாஸ்திரம் கை விளக்காக வேண்டுகையாலே
யதா சாஸ்த்ரமாய் -சாஸ்திரம் விகல்பபித்த வற்றில் யதா ருசியாகக் கடவது –
அது எங்கனே என்னில்
எம்பெருமானார் திரு நாட்டுக்கு எழுந்து அருளுகிற போது ஸ்ரீ பாதத்திலே சேவித்து இருந்த
முதலிகளுடைய ஆர்த்தியைக் கண்டு அருளி
இவர்களை அழைத்து அருளி -என்னுடைய வியோகத்தில் தேக த்யாகம் பண்ணினார் உண்டாகில்
ஆளவந்தார் ஸ்ரீ பாதமே என்னோடு அவர்களுக்கு சம்பந்தம் இல்லை -என்று அருளிச் செய்ய –
இவர்களும் இதைக் கேட்டு மிகவும் சோகார்த்தராய்-
இனி எங்களுக்கு செய்ய அடுப்பது எது என்று விண்ணப்பம் செய்ய –
இவர் அருளிச் செய்து அருளின வார்த்தை –
1-ஒருவன் பிரபன்னன் ஆனால் அவனுடைய ஆத்ம யாத்ரை பகவத் அதீனை யாகையாலே
அதில் அவனுக்கு அந்வயம் இல்லை –
உண்டு என்று இருந்தான் ஆகில் ஆத்ம சமர்ப்பணம் பொய்யாம் இத்தனை –
தேக யாத்ரை கர்மாதீனம் ஆகையாலே அதுக்கு கரைய வேண்டா –
கரைந்தான் ஆகில் நாஸ்திகனாம் அத்தனை –
ஆகையால் உபய யாத்ரையும் கொண்டு இவனுக்கு கார்யம் இல்லை —
2-ஆனால் மநோ வாக் காயங்கள் ஆகிற முக் கரணங்களையும் கொண்டு வேண்டிற்றுச் செய்து திரிய அமையுமோ என்னில்
அது இவனுக்கு ஸ்வரூபம் அன்று –
உபய அம்சத்தில் அந்வயம் இல்லா விட்டாலும் ப்ராப்யமான கைங்கர்யத்தில் இவற்றை அன்வயிப்பிக்கும் இத்தனை –
3-அதில் இவனுக்கு இங்கு இருந்த நாள் பண்ணலாம் கைங்கர்யம் அஞ்சு உண்டு -அவையாவன –
ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்து பிரவர்த்திப்பித்தல் –
அதுக்கு யோக்யதை இல்லையாகில் அருளிச் செயலைக் கேட்டு பிரவர்த்திப்பித்தல் –
அதுக்கு யோக்யதை இல்லையாகில் உகந்து அருளின திவ்ய தேசங்களுக்கு அமுதுபடி சாத்துப்படி
திரு விளக்கு திரு மாலைகளை உண்டாக்குதல்
அதுக்கு யோக்யதை இல்லையாகில் த்வயத்தினுடைய அர்த்த அனுசந்தானம் பண்ணுதல்
அதுக்கு யோக்யதை இல்லையாகில் என்னுடையவன் என்று அபிமாநிப்பான் ஒரு ஸ்ரீ வைஷ்ணவன்
அபி மானத்திலே ஒதுங்கி வர்த்தித்தல் செய்யலாம்-
ஆகிய ஐந்து வித கைங்கர்யங்கள் செய்யலாம் என்று அருளிச் செய்தார் –
4-இப்படி வர்த்திக்கும் அதிகாரிக்கு முன்னடி பார்த்து வர்த்திக்க வேண்டுவன மூன்று விஷயம் உண்டு –
அவை யாவன -அநு கூலர் என்றும் -பிரதி கூலர் என்றும் -அநு பயர் என்றும்
அநு கூலர் ஆவார் -ஸ்ரீ வைஷ்ணவர்கள்
பிரதி கூலர் ஆவார் -பகவத் த்விட்டுக்கள் –
அநு பயராவார் -இவ் விரண்டும் இல்லாத சம்சாரிகள் –
இதில் அநு கூலரைக் கண்டால் -சந்தன குஸூமாதிகள் போலவும் -நிலவு தென்றல் போலவும் –
அபிமத விஷயங்கள் போலவும் உகந்து வர்த்திப்பான்
பிரதி கூலரைக் கண்டால் -சர்ப்பாதிகளைக் கண்டால் போலே வெருவி வர்த்திப்பான்
அநு பயரைக் கண்டால் காஷ்ட லோஷ்டாதிகளைக் கண்டால் போலே த்ருணவத் கரித்து வர்த்திப்பான் –
இவர்கள் அநு கூலிப்பார்கள் ஆகில் இவர்களுக்கு ஞானத்தை உண்டாக்கவும்
இவர்கள் அநு கூலியார்கள் ஆகில் ஐயோ என்று இவர்கள் பக்கல் கிருபை பண்ணி இருக்கவும் அடுக்கும்
5-இப்படி செய்ய ஒட்டாது ஒழிகிறது அர்த்த காமங்களில் ப்ராவண்யம் –
அர்த்த காமங்கள் அடியாக ஸ்ரீ வைஷ்ணவர்களை அநாதரித்து இருக்குமாகில் சார்வ பௌமனாய் இருப்பான்
ஒரு ராஜாவினுடைய புத்திரனை
ராஜ சந்நிதியிலே பரிபிவித்தால் ராஜா வெறுக்குமா போலே எம்பெருமான் திரு உள்ளம் சீறும் –
அர்த்த காமங்கள் அடியாக பிரதி கூலரை ஆதரிக்குமாகில் ராஜா சார்வ பௌமனாய் இருக்க
ராஜ மகிஷி ஷூத்ர ஜந்துக்கள் பக்கல் மடிப்பிச்சை புக்கால்
ராஜாவுக்கு அவத்யமாய் அத்தாலே அவளை அவன் வெறுக்குமா போலே எம்பெருமான் திரு உள்ளம் வெறுத்து இருக்கும் –
அர்த்த காமங்கள் அடியாக அநு கூலரை ஆதரிக்குமாகில் ரத்னத்துக்கும் பாஷாணத்துக்கும் வாசி அறியாதாப் போலே
இவனுக்குப் பிறந்த ஞானம் கார்யகரம் ஆயிற்று இல்லை என்று அவன் அளவிலே எம்பெருமான் அநாதரித்து இருக்கும் –
இப்படி ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்த உத்தர க்ருத்யத்திலே
குலடா ஷண்ட பதிதா வைரிப்ய காகிணீமபி
உத்யதாமபி க்ருஹீண்யா ந்நாபத்யபி கதாசன -என்றும்
பர ரந்த்ரேஷூ ஜாத்யந்தா பரதாரேஷ்வ பும்சகா
பரிவாதேஷூ யே மூகா தே அதீவ திதா மம–என்றும்
சொல்லுகிறபடியே தர்ம விருத்த அர்த்த காமங்கள் தூரதோ நிரஸ்தங்களான படியாலே
தர்ம அவிருத்தங்களான அர்த்த காமங்கள் உபாதியாகவும்
அநு கூல பிரதிகூல உதாசீன விஷயங்களில் தான் நின்ற நிலை குலையலாகாது என்றும் திரு உள்ளம் –
அதில் அநு கூலரை அநாதரிக்கலாகாது என்னும் இடம் ஸ்ரீ சாண்டில்ய சுருதியிலே –
அநாத்யத ஸூதம் கேஹீ புருஷம் நாபி நந்ததி ததா அநார்சித சத் பக்தம் பகவான் நாபி நந்ததி -என்று சொல்லப் பட்டது –
பிரதி கூல சம்சர்க்கம் ஆகாது என்னும் இடம் மகா பாரதத்திலே
யே த்விஷந்தி மஹாத்மானம் ந ஸ்மரந்தி ச கேசவம் ந தேஷாம் புண்ய தீர்த்தேஷூ கதி சம்சர்க்ககிணாம் அபி -என்று சொல்லப்பட்டது –
அப்படியே -மூடை பாபரதை க்ரூரைர் பகவச் சாஸ்திர தூஷகை சம்பந்தம் நாசரேத் பக்திர் நச்யத்தே தைஸ்து சங்கமே என்று
பிரதி கூல சம்சர்க்கம் பகவத் பிரேமத்தை அழிக்கும் என்று சொல்லப்பட்டது –
உதாசீனரை த்ருணவத் கரித்து இருக்க வேணும் என்னும் இடம்
அத்ய ப்ரப்ருதி ஹி லோகா யூயம் வயம் வயம் அர்த்த காமபரா யூயம் நாராயண பரா வயம் நாஸ்தி சங்கதிரச்மாகம்
யுஷ்மாகம் ச பரஸ்பரம் வயம் து கிங்கரா விஷ்ணோர் யூய மிந்த்ரய கிங்கரா -இத்யாதிகளிலே பிரசித்தம் –
இப்படி முன்னடி பார்த்து வர்த்திக்க வேண்டும் என்று அருளிச் செய்த அர்த்தம் சாஸ்த்ரைக வேத்யம் ஆகையாலே
சாஸ்த்ரீயங்களுக்கு உப லஷணமாக சாரோத்தாரம் பண்ணி இவர் அருளிச் செய்த கைங்கர்யங்களும்
தான் வேண்டின படி செய்ய ஒண்ணாமை யாலே சாஸ்த்ரோக்தமான நியமத்தோடு செய்தால் கைங்கர்யமாம் என்று ஸூசிதம்-
வேண்டிற்றுச் செய்து திரிய அமையுமோ என்னில் அது இவனுக்கு ஸ்வரூபம் அன்று -என்று அருளிச் செய்த படியாலே
அசாஸ்த்ரமாஸூரம் க்ருத்ச்னம் -ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் -21-என்று ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த படியே
சாஸ்திர விருத்தங்கள் தைவப் பிரக்ருதியான இவன் ஸ்வரூபத்துக்கு பொருந்தாமையாலும்
சுருதி ச்ம்ருதிர் மமை வாஜ்ஞா யஸ்தா முல்லன்க்யம் வர்த்ததே
ஆஜ்ஞாச் சேதீ மம த்ரோஹீ மத்பக்தோ அபி ந வைஷ்ணவ -என்று அடிமை கொள்ளுகிறவன் அருளிச் செய்த படியாலும்
இவன் சரீரத்தோடு இருந்த காலம் சாஸ்திர வச்யனாய் அடிமை செய்ய வேண்டும் என்று திரு உள்ளம் –
நிஜ கர்மாதி பக்த்யந்தம் குர்யாத் ப்ரீத்யைவ காரித
உபாயதாம் பரித்யஜ்ய ந்யச்யே தேவ து தாம்பீ -ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் -31–அருளிச் செய்த படி
ப்ரீத்யைவ -என்கிற அவதாரணத்தாலே சாதனத்வ புத்தியை வ்யவச்சேதித்தார் என்னும் இடம்–
உபாயதாம் பரித்யஜ்ய -என்று விவரிக்கையாலே வ்யக்தம்
சாஸ்த்ரீய கைங்கர்யத்தில் ப்ரீதியினுடைய ப்ரேரகத்வ அதிசயம் விவஷிதம் ஆனாலும்
நிஜகர்மாதி பக்த்யந்தம் என்கிற இவற்றின் ஸ்வரூபத்துக்கு
சாஸ்திரமே பிரமாணம் என்னும் இடம் நிஜ கர்ம சப்தத்தாலே தர்சிதமாயிற்று -இது சாஸ்த்ரீய நியமம் –
அவிப்லவாய தர்மாணாம் பால நாய குலச்ய ச
சங்க்ரஹாய ச லோகஸ்ய மர்யாதா ஸ்தாப நாய ச
ப்ரியாய மம விஷ்ணோச்ச தேவ தேவஸ்ய சாரங்கிண
மநீஷீ தைவிகாசாரம் மநஸா அபி ந லங்கயேத்–என்று -ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் -17-93/94-பிரபத்யாயத்திலே பிரசித்தம்
இது தவிர்ந்த போது வரும் அநிஷ்டமும்
யதா ஹி வல்லபோ ராஜ்ஞோ நதீம் ராஜ்ஞா ப்ரவர்த்திதாம்
லோகோப யோகி நீம் ரம்யாம் பஹூ சஸ்ய விவர்த்தநீம்
லங்கயன் சூலமாரோ ஹேதநபேஷ அபி தாம் ப்ரதி
ஏவம் விலங்கயன் மர்யாதாம் வேத நிர்மிதாம்
ப்ரிய அபி ந ப்ரிய அசௌ மே மதாஜ்ஞா வ்யதிவர்த்த நாத் –ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் -17-95/96/97–என்று அனந்தரம் சொல்லப்பட்டது
இந்த பகவத ப்ரீதிக்கு ஷமை கொண்டிலன் ஆகில் முக்தன் ஆவதற்கு முன்னே
அதிகார அனுரூபமாக ஏதேனும் ஒரு அநிஷ்டத்தை விளைவிக்கும் –
அது நிற்க சத்த்வ பிரக்ருதியான இவனுக்கு பகவத் அப்ரீதிக்கு மேற்பட்ட நரகம் இல்லை
அந்த பகவத் அப்ரீதி சமிப்பதும் பின்பு ஷமை கொள்ளில் –
ஸூ ஹ்ருதம் சர்வ பூதா நாம் என்னும் படி நிசர்க்க ஸூ ஹ்ருத்தான ஈஸ்வரனுடைய
அப்ரீதி சமிக்கும் அளவும் இவனுக்கு அருந்து தமாயிருக்கும்
இங்கன் இராதவனுக்கு ஸ்வாமி விஷயத்தில் பிராவண்யமும் கைங்கர்ய ரூபமான மோஷத்தில் ருசியும் சங்கிக்க அடுக்கும் –
இவ் வாஜ்ஞாதி லங்கனம் ப்ரஹர்ஷ யிஷ்யாமி-என்று உத்தேச்யையான பகவத் ப்ரீதிக்கு விரோதியான படியாலே
இக் சாஸ்த்ரீய நியமம் ரகஸ்ய த்ரயத்தில்
விரோதி நிவ்ருத்தியை அனுசந்திக்கும் இடங்களிலே அனுசந்திக்கப் பிராப்தம் –
இந்த நியமன அனூவர்த்தனம் பூர்ண உபாயர் அல்லாத அதிகாரிகளுக்கு உபாய பூர்த்தி விரோதியை
சமிப்பித்துக் கொண்டு பகவத் பிரசாதமாய் இருக்கும்
பூர்ண உபாயருக்கு அதி லங்கன ஹேதுக அப்ரீதி பிறவாத படி பண்ணிக் கொண்டு பகவத் ப்ரீணமாய் இருக்கும் –
ஆஜ்ஞா அநுஜ்ஞா விபாகேன த்விதா சாஸ்த்ரீய புத்தி
நிக்ரஹ அநுதயாய ஆத்யா பரா தத்தத் பல ஆப்தயே-என்றும்
அநுஜ்ஞாய ப்ரவ்ருத்தே அபி க்ரம கோப ஆதி சம்பவே
ஆஜ்ஞா அதிக்ரம தோஷ ஸ்யாத் நியம அதி துரத்யய-என்றும்
பிரத்யவாய பரீஹார பலாந்தர சமன்விதே
தத்ர சம்வலிதம் ப்ராஹூ அதிகாரம் விசஷணா -என்றும்
நித்ய காம்ய ஸ்வரூப ஐக்யே விநியோகே ப்ருதக்த்வ
பலார்த்தம் க்ரியமாணே அபி நித்யம் பவதி தந்தரத -என்றும்
அநுஜ்ஞா மாத்ர சித்தேஷூ கைங்கர்யேஷூ விசஷணை
அக்ருதௌ தத் பல அலாப ந து தோஷ இதி ஈரிதம் -என்றும் சொல்லக் கடவது இறே
நின்ற நம் அன்புடை வானோர் நிலையில் நிலமளந்தான்
நன்றிது தீயது இது என்று நடத்திய நான் மறையால்
இன்று நமக்கு இரவாதலில் இம் மதியின் நிலவே
அன்றி அடிக்கடி ஆரிருள் தீர்க்க அடி யுளதே –
சுருதி ஸ்ம்ருதி ஆஸாரை ஸ்வ மதி பதிபி சுத்த மனசாம்
ஸூ சங்கல்பை தர்ம்யை குல சரண தேசாதி சமயை
நியோகை யோக்யாநாம் நியமயிது ஆதே அபிமதம்
நிமித்த ச்வப்னாத்யை நிபுணம் அந்திச்சதி புத —
—————————————————————————
அதிகாரம் -18-அபராத பரிஹார அதிகாரம் –
ஸ்வச்ச ஸ்வாது சதா அவதாத ஸூ பகாம் தைவாதயம் தேஹப்ருத்
மாலின்ய ப்ரசமாய மாதவ தயா மந்தாகிநீம் விந்ததி
யத்யப்யேவமசாவசார விஷய ஸ்ரோத ப்ர ஸூதை புன
பங்கை ரேவ கலங்கயன் ப்ராஜ்ஞைர்ந சம்லிஷ்யதே-
இப்படி பகவத் சேஷதைக ஸ்வ பாவன் ஆகையாலே –
சாஸ்திர நியத -தத் கைங்கர்யைக ரசனான இவ்வதிகாரிக்கு பின்பு அநாபத்தில் புத்தி பூர்வகமான அபராதம் வருகை
பற்றின கைங்கர்யைக நிஷ்டைக்கு விருத்தம் ஆகையாலே ப்ராயேண சம்பாவிதம் அன்று –
பிராரப்த கர்ம விசேஷ வசத்தாலே தேச கால அவஸ்தா வைகுண்ய ஹேதுகமாகவும்
ப்ராமாதிகமாகவும் ஸூ ஷூப்த்யாதி அவஸ்தைகளிலும்
வரும் அபராத லேசங்கள் உள்ளவை அஸ்லேஷ விஷயமாய்க் கழிந்து போம் –
புத்தி பூர்வக பாபாரம்பக பாபங்களுக்கு அஞ்சி அவையும் கழிய வேணும் என்று பிரபத்தி பண்ணாதே –
பாம்போடு ஒரே கூரையிலே பயின்றால் போலே –
பிரக்ருதியோடே கூட இருக்கிற இவனுக்கு ஆத்ம குண பூர்த்தி இல்லாமையாலே
மந்ததைர்யரான ரிஷிகளுக்குப் போலே புத்தி பூர்வகமாகவும்
சில ஸ்வ நிஷ்டா விபரீதங்கள் வந்தாலும் -நிசர்க்க ஸூ ஹ்ருதான ஸ்ரீ யபதி ரஷண உன்முகனாய் நிற்கையாலே
இவ்விபநீத அனுஷ்டானங்கள் மின்னொளி மாத்ரமாய் நிலை நிற்குமவை அன்றிக்கே
அக் காலத்தில் பிறந்த ஸ்வ நிஷ்டாவைப்ரீத்யம் ஆகிற இழவை கடுக அனுசந்தித்து யதோசிதமாக லஜ்ஜா அனுதாபங்கள் பிறந்து
அபாய சம்ப்லவே சத்ய பிராயச்சித்தம் சமாசரேத்
பிராயச் சித்திரியம் சாத்ர யுத் புன சரணம் வ்ரஜேத்
உபாயா நாமுபாயத்வ ச்வீகாரேப்யததேவ ஹி -என்றும்
அஜ்ஞாநாத தவா ஜ்ஞாநாத் அபராதேஷூ சத்ஸ்வபி
பிராயச் சித்தம் ஷமச்வேதி ப்ரார்த்த நைகைவ கேவலம் -என்றும்
விதித ச ஹி தர்மஜ்ஞ சரணாகத வத்சல
தேன மைத்ரீ பவது தே யதி ஜீவிதுமிச்சஸி
பிரசாத யஸ்வ த்வம் சைனம் சரணாகத வத்சலம்
மாம் சாஸ்மை பிரயதோ பூத்வா நிர்யாத யிது மர்ஹசி -என்றும்
சொல்லுகிறபடி யதாதிகாரம் ப்ராயச்சித்தா வலம்பனம் உண்டாம் –
பிராரப்த கர்ம விசேஷ வசத்தாலே கடின ப்ரக்ருதியாய் ஷமை கொள்ளுகையும் கை தப்பின போது
ஸ்வ புருஷம் அபிவீஷ்ய பாச ஹஸ்தாம் வததி யம கில தஸ்ய கர்ண மூலே
பரிஹர மது ஸூ தன பிரபன்னான் பிரபு ரஹம் அந்ய ந்ருணாம் ந வைஷ்ணவா நாம் –என்றும்
கமல நயன வா ஸூ தேவ விஷ்ணோ தரணி தராச்யுத சங்க சக்ர பாணே
பவ சரணமிதீரயந்தி யே வை த்யஜ பட தூர தரேண தான பாபான்-என்றும்
தேவ சார்ங்க தரம் விஷ்ணும் பிரபன்னா பராயணம்
ந தேஷாம் யமஸா லோக்யம் நச தே நரகௌ கச –என்றும்
வைஷ்ணவ வாமனாதி புராணங்களில் பாசுரங்களுக்கு மூலமான ஸ்ருதிகளில் சொல்லுகிறபடியே
யம விஷய கமனம் இன்றிக்கே
வேலிட்டுப் பாய வேண்டுமது முள்ளிட்டுப் பாய்ந்து கழியும்-என்கிற கணக்கிலே
காணான் கஞ்சன் என்று முதலாக ஓதுகிற இங்குத்தை உபக்லேச முகத்தாலே
சிகை யறுக்கும் விரகுகளை முன்னிட்டு சர்வேஸ்வரன்
ஷமா
பிரேமா
தயா
வாத்சல்யங்களாலே-தணிந்த பிரதாபத்தை யுடையனாய் –
மிகவும் தண்டிக்க வேண்டும் அபராதத்துக்கு சேவ்யனான சார்வ பௌமன்
அடையாளககாரர்-அந்தபுர பரிஜனம்-கூனர் குறளர்-குமாரர்கள் விஷயத்தில் அபராதங்களுக்கு ஈடாகவும்
அந்தரங்கத்வாதி தாரத்ம்யத்துக்கு ஈடாகவும்
சம்பந்த ஆன்ரு சம்ச்யாதிகளாலே ப்ரீதி நடக்கச் செய்தே அவர்கள் தப்பிதனதுக்கு ஷமை கொள்ளுகைக்காகவும்
மேலைக்கும் சிஷை யாகைக்காகவும்
முகம் கொடாதே இருத்தல்
சம்மட்டி இட்டு அடித்தல்
தள்ளுவித்தல்
வாசலிலே தகைவித்தல்
சிறிது நாள் சேவையை விலக்கி விடுதல்
செய்யுமா போலே காக ந்யாயத்தாலே ஒரு கண் அழிவாலே இவ் வாஸ்ரிதரை ரஷித்து விடும் –
இப்படி ம்ருது பிரக்ருதிகளை ஷமை கொள்ளப் பண்ணுவித்தல்
கடின பிரக்ருதிகளுக்கு சிஷா ரூபமான தண்ட விசேஷம் பண்ணுதல் செய்கிற இடமும்
பூர்வ பிரபத்தி பலமான ஷமையின் பிரகார பேதம் என்று சிஷகனான சேஷி பக்கலிலே க்ருதஜ்ஞதை நடக்கைக்காக
புத்தி பூர்வக உத்தராகத்தையும் ஷமிக்கும் என்று சிலர் சொன்னார்கள் –
பிராரப்த கர்மத்தில் பாபாம்சம் போலே புத்தி பூர்வக உத்தராகம் ப்ராயாச் சித்தம் பண்ணாத போது சபலமானாலும்
பண்ணின பிரபத்தி மோஷம் கொடாது ஒழியுமோ என்று சங்கிக்க ஒண்ணாது
பெருங்காயம் வைத்த மரங்களுக்கு ஸ்தலாதி விசேஷங்களால் வாட்டத்துக்கு கால தாரதம்யம் உள்ள மாத்ரம்
இங்கும் இவர்கள் சம்சாரத்தினுடைய நிச்சேஷ நிவ்ருத்தி பிறக்கைக்காக விலம்பாவிலம்ப வைஷம்யமே உள்ளது
இத் தேக அநந்தரம் மோஷம் பெற வேணும் என்று அபேஷித்தாலும்
அநியதாயுஸ் ஸூக்களாய் விலம்ப ஷமராய் இருப்பாருக்கு ஆயுர் வ்ருத்தியாலே விலம்பம் வரும் –
நியதாயுஸ் ஸூக்களுக்கு உள்ள ஆயுஸ் ஸூக்குள்ளே பலித்து விடும் –
பவேயம் சரணம் ஹி வ -என்ற பின்பும் உண்டான ராஷசிகளுடைய புத்தி பூர்வ அபசாரங்கள்
மர்ஷயாமீஹ துர்பலா பாபா நாம் வா சாபா நாம் வா வதார் ஹாணாம் ப்லவங்கம் -என்கிறபடியே
பிராட்டிக்கு ஷமா விஷயம் ஆயிற்று இல்லையோ என்னில்
அவ் விடத்திலும் அவர்களுக்கு திருவடி நலியப் புகுகிறார் என்கிற பயம் விளைந்து நலிவுக்கு விலக்கு உண்டான படியாலே
வாளாலே ஓங்கி விடுமா போலே தண்ட லேசமும் ஷமையும் –சித்தம் –
ஆகையால் பிரபன்னனுக்கு புத்தி பூர்வக உத்தராகம் லேபியாது என்று விசேஷித்து சொல்லுவது ஒரு பிரமாணம் இன்றிக்கே இருக்க
இவனுக்கு பின்பு புத்தி பூர்வக உத்தராகம் பிறந்தாலும் ஷமை கொள்ள வேண்டாம் என்றும்
ஷமை கொள்ளா விடிலும் சிஷா ரூப தண்ட விசேஷம் இல்லை என்றும்
விலம்ப ஷமருக்கும் பரம பலத்துக்கு விலம்பம் வாராது என்றும்
பிராரப்த ஸூக்ருத விசேஷாதிகளாலே வரும் இங்குத்தை கைங்கர்யத்துக்கு விச்சேத சங்கோ சங்கள் வாராது என்றும்
சொல்லுகிற பஷங்கள் சரண்யனுடைய குணங்களையும் சரணா கதியினுடைய பிரபாவத்தையும் சொல்லுகைக்காக அத்தனை –
இப்படி அல்லாத போது பிரபன்னரான பூர்வர்களுடைய அனுஷ்டான பரம்பரைக்கும் –
பிரபன்னரைப் பற்றவே பிராயச் சித்தம் விதிக்கிற சாஸ்த்ரத்துக்கும்-
மோஷம் பெறுகைக்கு காலம் குறித்து பிரபத்தி பண்ணாதே அனுவ்ருத்த புத்தி பூர்வக அபராதருமாய் –
விலம்பாஷாமருமாய் இருப்பார்க்கு விலம்பம் சொல்லுகிற பிரமாணங்களுக்கும் சேராது –
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்று சாமான்யேன சொல்லச் செய்தேயும் –
பிராயச் சித்திரியம் சா அத்ர யத் புன சரணம் வ்ரஜேத் -என்று விசேஷிக்கையாலே
புத்தி பூர்வக உத்தராகத்துக்கு ப்ரபத்ய அநந்தரம் பிராயச் சித்தமாக ப்ராப்யம் ஆயிற்று –
புன சரணாகதியை விதிக்கிற வசனத்தை அடியிலே புத்தி பூர்வக உத்தராகத்துக்கும் பரிகாரமாக
பிரபத்தி பண்ணாதார் விஷயத்திலே நியமித்தாலோ என்ன ஒண்ணாது –
புத்தி பூர்வக உத்தராகத்தையும் பற்ற பிரபத்தி பண்ணலாம் என்று விசேஷித்து கண்டோக்தி
பண்ணுவதொரு வசனம் உண்டாகில் இறே இப்படி நியமிக்கலாவது –
இப் பிரபத்தி பூர்வ உத்தராகத்துக்கும் பரிஹாரம் என்று அறிந்தால்
இச்செட்டை விடுவாரையும் கிடையாமையாலே புன பிரபத்தி வசனம் நீர் விஷயமாம் –
சாமான்ய வசனத்து அளவைப் பற்றி விசேஷ வசனத்தை பாதிக்க ஒண்ணாது –
இப்படி விசேஷ வசனத்தைப் பாதிக்கில் உபாச நிஷ்டனுக்கும் பூர்வ உத்தராகத்துக்கும் தோஷம் இல்லையாம் –
பூர்வ உத்தராகத்திலும் பரமை காந்திகளான இவர்கள் இருவருக்கும் யம வச்யாதிகள் இல்லை என்னும் இடம்
யஸ்மின் கஸ்மின் குலே ஜாதா யத்ர குத்ர நிவாசின –வாஸூ தேவ ரதா நித்யம் யமலோகம்
ந யாந்தி தே –இத்யாதி வசன பலத்தாலே சித்தம் –
ஒரு பாபம் தானே ஜாதி குணாதி அதிகாரி பேதத்தாலே குரு லகு பல பேதவத்தாய் இருக்கும்
என்னும் இடம் சர்வ சம் ப்ரதி பன்னம் –
இவ் வர்த்தம் ராஜ புத்ர அபராதிகளில் போலே லோக மரியாதையாலும் உப பன்னம் –
ந ப்ராக்வத் புத்திம் பூர்வாதே ந சாத்யந்தம நுக்ரஹ –லகுர் தண்ட பிரபன்னச்ய ராஜ புத்ர அபராதவத் —
ஆகையாலே அதிகார அனுரூபமாக லகுபலமும் வாராமைக்காக புன பிரபதனம் விதிக்கப் படுகிறது –
சிஷ்டதயா வ்யபதேச்யரான சமர்த்தருக்கு லோக சங்க்ரஹத்துக்காகவும் பிரசித்த நிமித்தங்களில்
யதா சக்தி பிரசித்த பிராயச் சித்தம் உசிதம் –
அது தவிருகையும் முன் சொன்ன ஆஜ்ஞாதி லங்கனமாம்
சைரந்திக்கு சேவை தப்பின போது ததாத்விகமான பரிமளாதிகளையும் இழந்து
பய அனுபவம் உண்டாமா போலே ஆஜ்ஞாதி லங்கநம் இரண்டு படி அநர்த்தம்-
ஸ்வ இச்சா மாத்ரத்தாலே புத்தி பூர்வக உத்தராகத்தையும் அடியிலே பிரபதனம் பண்ணினாலோ என்னில்
இது உபாசனத்தையும் புத்தி பூர்வக உத்தராகத்துக்கும் பரிஹாரமாகப் பண்ணினாலோ –
அங்கப் பிரபத்தியும் அதுக்குச் சேர பண்ணினாலோ என்கிற பிரதிபந்தியாலே நிரச்தம்-
இருவருக்கும் இப்படி யாயிடுக என்கை பாஷ்யாதி விருத்தம் ஆகையாலே அபசித்தாந்தம் –
உஷச்தி பிரவ்ருத்திகளான ப்ரஹ்ம நிஷ்டர்களுடைய அனுஷ்டானத்துக்கும் விருத்தம் –
ஆகையாலே விசேஷ வசனம் இல்லாமையாலே க்ருதே பாபே அனுதாபோ வை -இத்யாதிகள் கணக்கிலே
நிமித்தம் உதித்தால் அல்லது நைமித்திகம் பிராப்தம் அன்று என்கிற ஞாயம் புத்தி பூர்வக உத்தராகத்தில் பதிதம் ஆகாது –
ஆனபின்பு ஆகாமி புத்தி பூர்வ பாவத்துக்கு அஞ்சினான் ஆகில்
அதுக்கு காரணமான பிராரப்த பாபத்துக்கு பிரபதன ரூப பிராயச் சித்தம் பண்ணப் ப்ராப்தம் —
ராத்ய பக்திஸ்து சா ஹந்த்ரீ ப்ராரப்தஸ் யாபி பூய ஸீ-என்றார்கள் இறே
ஜன்மாந்தர க்ருதே பாபம் வியாதி ரூபேண பாததே–தத் சாந்தி ஔஷதை தாநை ஜப ஹோமர்ச நாதிபி -இத்யாதிகளில்
தான ஜபாதிகளிலும் அகப்படாத பிராரப்த பாப நாசம் சொல்லப் பட்டது இறே –
ஆகையால் பாபாரம்பக பாபத்துக்கு அஞ்சி பிரபத்தி பண்ணினான் ஆகில் அப்போது புத்தி பூர்வக பாபமும் உதியாது-
தாஸ சஹா வாஹனம் ஆசனம் த்வஜ -இத்யாதிகளில் படியே
அத்யந்த பகவத் அந்தரங்கர்க்கும் சாத்விக அபராத லேசமும் பிரத்யவாயகரம் என்னும் இடம்
சாண்டிலீ விருத்தாந்தகளிலே பிரசித்தம் –
சர்வேஸ்வரனைப் போலே ஸூரிகளும் அவதரித்தால்
கர்ம வச்யத்ய அபி நயம் பண்ணி லோக ஹித பிரவர்த்தன அர்த்தமாக அபசார பரிஹாராதிகளை நடத்திப் போருவார்கள் –
ஆகையால் பகவத் ப்ரீதி இழவாமைக்கும்-அதுக்காக புன பிரபத்தி யாதல் -லகு தண்டமாதல் -பிரசங்கியாமைக்கும்
மேல் வரும் அபராதங்கள் வேர் அறுக்கும் விரகு பார்க்க வேணும் –
அபராதங்கள் எல்லாவற்றுக்கும் அடி அவிவேகம் –
அதில் பிரதானமான அவிவேகம் அசித் ஸ்வ பாவமான ஜடத்வ விகாராதிகளை சுமைக்கையும்
ஈஸ்வர ஸ்வ பாவமான ஸ்வ நிஷ்டத்வ ஸ்வ தந்த்ர்ய அனந்யார்த்த வாதிகளைச் சுமைக்கையும் –
இவ் அவிவேகத்தை அறுக்கைக்கு தெளிவாளாய் இருப்பது ஏற்றச் சுருக்கமறத் தன்னளவில் உண்டான தெளிவு –
அவிவேக ப்ரபுத்வாதேர் நிதா நஸ்ய நிவர்த்த நாத்
அர்த்த காமாபசாராணாமயத் நோன்மூல நம் பவேத் –
இவை எல்லா வற்றுக்கும் அடி பலப்ரதான உன்முகமாய் இருப்பதொரு பூர்வாகம் ஆகையாலே
அதினுடைய நிவ்ருத்திக்குமாக அடியிலே பிரபத்தி பண்ணுதல் –
இதுக்கு என்று பின்பு ஒரு பிரபத்தி பண்ணுதல் செய்தார்க்கு இவை எல்லாம் பரிஹ்ருதங்களாம்-
இப்படி இவனுக்கு பரிஹரணீயங்கள் ஆன வற்றில் ராஜதார அபராதம் போலே பாகவத அபசாரம் பிரதானம் என்னும் இடத்தை
ஏவம் முக்தி பலா நியம தத்வஸ்தா வத்ருதே தத்வஸ்தா வத்ருதே -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் -3-4-51-என்றதிலே
ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்தார் –
ஆன பின்பு ஜாதி குண வ்ருத்தாதிகளாலே உத்க்ருஷ்டரான பராசர வியாச சுக சௌநக நாதமுனி ப்ரப்ருதிகளுக்கும் தனக்கும்
பாகவதத் வாதிகளும் பரம புருஷார்த்த லாபமும் துல்யமாய் இருந்தாலும் –
பகவத் பரிக்ரஹமான-கோ கோப ஜாதிகளுடையவும் -துளசி சம்பகாதிகளுடையவும்
கோமய ம்ருகமதாதிகளுடையவும் வைஷம்யம் போலே
பகவத் சங்கல்ப விசேஷ பிரயுக்தமான தத்ததுபாதி ஸ்வ பாவத்தாலே சித்தங்களான உத்கர்ஷ அபகர்ஷங்களை
அஸூயா ப்ராதுர்பாவ பிரகரணத்தில் ஆப் நாதமான படியே திரஸ்கரிக்க நினையாது ஒழியவும்
ஜாத்யாத் உபாதிகளாலே பாகவதர் திறத்தில்
அநுஜ்ஞா பரிஹாரௌ தேக சம்பந்தாஜ் ஜ்யோதிராதிவத் -ப்ரஹ்ம ஸூ த்ரம் -2-3-47–என்கிற நியாயத்தாலே
பிரவ்ருத்தி நிவ்ருத்தி விசேஷங்களுக்கு யதா சாஸ்திரம் நியமம் உண்டானாலும் –
சாதுரேவ ச மந்தவ்ய -என்றும் –
ஸ்ம்ருத சம்பாஷிதோ வா அபி -என்றும் –
ய சூத்ரம் பகவத் பக்தம் நிஷாதம் ச்வபசம் ததா வீஷதே ஜாதி சாமான்யாத் ச யாதி நரகம் நர -என்றும்
தஸ்மாத் விஷ்ணு பிரசாதாய வைஷ்ணவான் பரிதோஷயேத் பிரசாத ஸூமுகோ விஷ்ணு தே நைவ ச்யாந்த சம்சய -என்றும்
பயிலும் சுடரொளி –
நெடுமாற்கு அடிமைகளிலும் -விசேஷித்த படி பிரதிபத்தியில் குறை அற்று இருக்கவும்
இப் பிரதிபத்தி மாத்ரத்தாலும் தச்யேதமித தீ ஹேது ரப்யபகாரீ -என்கிறபடியே
பரிபூர்ண விஷயத்தில் சேஷத்வ உசித கிஞ்சித் காரமான கைங்கர்யம் சித்தம் என்று இருக்கவும்
இந் நிலைகளிலே ஓன்று கோணின போது –
சர்வம் ஜிஹ்யம் ம்ருத்யுபத மார்ஜவம் -ப்ரஹ்மண பதம் என்கிறபடியே
ம்ருத்யுவின் கடை வாயிலிலே அகப்பட்டால் போலே நடுங்கி
க்ருதாபராச்ய ஹி தே நாந்யத் பச்யாம் சமம் அந்தரேணாஞ்ஜலீம் பத்த்வா லஷ்மணச்ய பிரசாதநாத் -என்றும்
யதி கிஞ்சித்த தீக்ராந்தம் விச்வாசாத் ப்ரணயேனவா ப்ரேஷ்யச்ய ஷமிதவ்யம் மே ந கச்சித் அபராத்யதி -என்றும்
யாச்ச சோகாபி பூதச்ய ஸ்ருத்வாத் ராமஸ்ய பாஷிதம் மயா த்வம் புருஷாண் யுக்தஸ் தச்ச த்வம் ஷந்து மர்ஹசி -என்றும்
மகா ராஜருடையவும் இளைய பெருமாளுடையவும் அந்யோந்ய பிரசாதன பிரகாரம் சொல்லுகிற ஸ்லோகங்களை பராமர்சித்து
அப்படியே ஈர்த்தவாய் தெரியாமல் வஜ்ரா லேப கடிதம் ஆனால் போலே பொருந்திப் போரவும் ப்ராப்தம் –
ஜ்ஞானா வானவன் ப்ராதி கூல்யத்தில் புத்தி பூர்வகமாக பிரவ்ருத்தன் ஆனாலும்
புன பிரபத்தியாலே சர்வேஸ்வரன் ஷமிக்கும் என்னும் இடம்
ஸ்ரீ பத்ரிகாஸ்ரமத்திலே க்ரோதாந்தனாய் தர்மாத்மஜனான பகவானோடு எதிர் அம்பு கோத்த ருத்ரனை
ப்ரஹ்மா தெளிவித்து விலக்க-அவனும்
பிரசாதயாமாச பவோ தேவம் நாராயணம் ப்ரபும்
சரணம் ச ஜகா மாத்யம் வரேண்ய வரதம் ஹரிம் -என்கிறபடியே பிரசாதமான சரணாகதியைப் பண்ண
ததோ அத வரதோ தேவோ ஜிதக்ரோதோ ஜிதேந்த்ரிய
ப்ரீதி மா நபவத் தத்ர ருத்ரேண சஹ சங்கத -என்கிறபடியே
சர்வேஸ்வரன் பிரசன்னனாய் ருத்ரனை அங்கீ கரித்தான் என்கையாலே சித்தம் –
தான் குற்றவாளன் ஆகவுமாம்-
தான் இப்போது குற்றம் செய்யாதே இருக்க -ஜன்மாந்தர துஷ்க்ருதத்தாலே ஆகவுமாம்
சில பாகவதர் தன்னை வெறுக்கில் ஏதேனும் ஒரு விரகாலே அவர்களை ஷமை கொள்ளுகிற முகத்தாலே
ஈஸ்வரனை ஷமை கொள்ள வேணும் என்னும் இடம்
ருஷாஷராணி ஸ்ருண்வந் வை ததா பாகவதேரிதான்
ப்ரணாம பூர்வகம் ஷாந்த்யா யோ வதேத் வைஷ்ணவோ ஹி ச -என்று
ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் சொல்லுகிற பிரமாணத்திலே பிரசித்தம்
இங்கனம் செய்யாத போது
யே ப்ரஹ்மாணச்தே அஹமசம்சயம் ந்ருப -தேஷ்வர்ச்சி தேஷ்வர்ச்சிதோ அஹம் யதாவத்
தேஷ்வேவ துஷ்டேஷ்வஹமேவ துஷ்டோ வைரம் ச தைர்யச்ய மமாபி வைரம் -என்றும்
க்நந்தம் சபந்தம் புருஷம் வதந்தம் யோ ப்ரஹ்மணம் ண் ப்ரண மேத்யதா அஹம்
ச பாபக்ருத் ப்ரஹ்ம தவாக்நிதக்தோ வக்யச்ச தண்டயச்ச ந சாஸ்மதீய -என்றும் சொல்லுகிறபடியே
பகவத் அபிமான பாஹ்யனுமாய் வைஷ்ணவ ப்ரக்ருதியாய் இருக்கிற தனக்கு ஸ்வரூபம் என்னலாம் படி
அந்தரங்கமான பாகவத சேஷத்வத்தையும்
ஸ்வ பாவமாய் நிற்கிற சம தம தாதிகளையும் இழந்தானாம்-
இவற்றை இழைக்கை தானே இவனுக்கு வதமும் தண்டமும் –
பகவத அபிமான பாஹ்யதையின் கொடுமையை -அளியன் நம் பையல் என்னார் அம்மவோ கொடியவாறே -என்று
பாகவத சேஷத்வமே தமக்கு நிரூபகமாக ருசித்த தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் அருளிச் செய்தார் –
இஸ் ஸ்லோகங்களில்
ப்ராஹ்மண சப்தம் -விஷ்ணும் க்ராந்தம் வாஸூ தேவம் விஜானன் விப்ரோ விப்ரத்வம் கச்சதே தத்தவ தர்சீ என்கிற
பிரக்ரியையாலே விசேஷ விஷயம்
சாமான விஷயம் ஆனாலும் பாகவத விஷயத்திலே அபராதம் கைமுதிக நியாயத்தாலே சித்தம் –
அனுதா பாதுபரமாத் பிராயச்சித்த உன்முகத்வத
தத் பூரணாசாபராதா சர்வம் நச்யந்தி பாரச-
பூர்வஸ்மின் வா பரஸ்மின் வா கல்பே நிர்விண்ண சேதஸாம்
நிவர்த்ய தாரதம்யே அபி ப்ரபத்திர்ந விசிஷ்யதே
ஏவமேவ லகூநாம் வா குருணாமபி வா ஆகசாம்
சக்ருத் பிரபத்திரே கைவ சத்ய பரசம காரணம்
உளதான வல்வினைக்கு உள்ளம் வெருவி உலகளந்த
வளர் தாமரையிணை வன்சரணாக வரித்தவர் தம்
களைதான் என எழும் கன்மம் துறப்பர் துறந்திடிலும்
இளைதா நிலை செக எங்கள் பிரான் அருள் தேன் எழுமே –
ப்ராரப்தே தர பூர்வ பாபமகிலம் ப்ராமதிகம் சோத்தரம்
ந்யாசேன ஷபயன் நநப்யுபகத பிராரப்த கண்டம் ச ந
தீ பூர்வோத்தர பாப்மா நாமஜந நாஜ் ஜாதே அபி தன்நிஷ்க்ருதே
கௌடில்யே சந்திம் சிஷயா அப்ய நதயநம் க்ரோடீகரோதிம் ப்ரபு –
———————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply