ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —
சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –
————————————————————————–
அதிகாரம் -19 – ஸ்தான விசேஷ அதிகாரம்–
யத்ர ஏகா க்ரக்யம் பவதி பகவத் பாத சேவா அர்ச்ச நாதே
யத்ர ஏகாந்த்ய வ்யவஸ்தித தியோ யஸ்ய கஸ்யாபி லாப
வாஸ ஸ்தாநம் ததிஹ க்ருதி நாம் பாதி வைகுண்ட கல்யம்
ப்ராயோ தேசா முனி பிருதிதா ப்ராயிக ஔசித்ய வந்த —
இருந்த நாள் இப்படி ஸ்வயம் பிரயோஜனமாக நிரபராத அனுகூல வ்ருத்தியிலே ருசியும் த்வரையும் யுடையவனாய்
ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்யோ நைவ க்ராம குலாதிபி
விஷ்ணு நா வ்யபதேஷ்டவ்ய தஸ்ய சர்வம் ச ஏவ ஹி –என்னும்படியாய் இருக்கிற பரமை காந்திக்கு
வ்ருத்திக்கு அனுகுணமாக வாஸஸ்தான விசேஷம் ஏது என்னில்
ஆர்யாவர்த்தாதி புண்ய தேசங்கள்
யுக ஸ்வ பாவத்தாலே இப்போது வ்யாகூலங்கள் ஆன படியாலே சாதுர் வர்ண்ய தர்மம் பிரதிஷ்டிதமான இடத்திலே
வசிப்பான் என்கிற இதுவே இப்போதைக்கு உபாதேயம்
அவ்விடங்கள் தம்மிலும் –
கரும் தட முகில் வண்ணனைக் கடைக் கொண்டு கை தொழும் பத்தர்கள் இருந்த ஊரில் இருக்கும்
மாநிடர் எத்தவங்கள் செய்தார் கொலோ-என்கிறபடியே பாகவதோத்தரமான தேசம் முமுஷூவுக்கு ப்ரிக்ராஹ்யம்
கலௌ ஜகத் பதிம் விஷ்ணும் சர்வ சந்த்ரஷ்டார மீச்வரம்
நார்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷண்டோ பக்தா ஜநா –என்னச் செய்தே
கலௌ கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா–க்வசித் க்வசித் மகா பாகா த்ரமிடேஷூ ச பூரிச
தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயச்விநீ காவேரி ச மகா பாகா ப்ரதீசீ ச மகா நதீ யே பிபந்தி ஜாலம் தாசாம்
மனுஜா மனுஜேச்வர ப்ராயோ பக்தா பகவதி வா ஸூ தேவ அமலாசயா -இத்யாதிகளிலே
கலியுகத்திலே பாகவதர்கள் வசிக்கும் தேச விசேஷம் சொல்லுகையாலே
இந்த யுகத்தில் இப் பிரதேசங்களில் பாகவத பரிக்ருஹீதமான ஸ்தலங்களே பரிக்ராஹ்யங்கள் –
திரு நாராயணீயத்தில்
ஏகபாத ஸ்திதே தரமே யத்ர க்வசன காமினி கதம் வஸ்தவ்யம் அஸ்மாபி பகவம்ஸ் தத்வ தஸ்வ ந-என்று –
தேவர்களும் ருஷிகளும் விண்ணப்பம் செய்ய
குரவோ யத்ர பூஜ்யந்தே சாதுவ்ருத்தா சாமந்திதா -வஸ்தவ்யம் தத்ர யுஷ்மாபி –
யத்ர தர்மோ ந ஹீயதே யத்ர தேவாச்ச யஜ்ஞாச்ச தப சத்யம் தமஸ் ததா ஹிம்சா ச தர்ம சம்யுக்தா பிரசரேயு
ஸூ ரோத்தமா ச வை தேசோ ஹி வ சேவ்யோ மா வ அதர்ம பதா ஸ்ப்ருசேத்-என்று பகவான் அருளிச் செய்தான்
அவ்விடங்கள் தம்மில் உகந்து அருளின திவ்ய தேசங்களிலே
தனக்கு கைங்கர்யத்துக்கு சௌகர்யம் உள்ள இடத்திலே நிரந்த வாசம் பண்ண உசிதம் –
இத்தை -யாவச் சரீர பாதம் அத்ரைவ ஸ்ரீ ரங்கே ஸூ கமாஸ்வ -என்று
சத்த்வோத்தரங்களான பகவத் ஷேத்ரங்களுக்கு பிரதர்சநார்த்தமாக அருளிச் செய்தார் –
பகவத் ஷேத்ரங்களே விவேகிக்கு வாசஸ்தானம் என்னும் இடத்தை
யத்ர நாராயணோ தேவ பரமாத்மா சநாதன–தத்ர புண்யம் தத்பரம் ப்ரஹ்மா தத்தீர்த்தம் தத்போவனம் —
தத்ர தேவர்ஷய சித்தா சர்வே சைவ தபோதனா -என்று -ஆரண்ய பர்வத்தில் தீர்த்த யாத்ரையிலும்
கோமந்த பர்வதோ ராஜன் ஸூ மஹான் சர்வதாதுமான் -வசதே பகவான் யத்ர ஸ்ரீமான் கமல லோசன -மோஷிபி
சம்ஸ்துதோ நித்யம் ப்ரபுர் நாராயணோ ஹரி – என்று ப்ரேதேசாந்தரத்திலும் மஹர்ஷி அருளிச் செய்தான் –
ஸ்ரீ வால்மீகி பகவானாலும் -ஸூ பகச் சித்திரகூடோ அசௌ கிரிராஜோ பமோகிரி-யஸ்மின் வசதி காகுத்ஸ்த குபேர இவ நந்தன –
என்கிற இடத்திலும் பகவத் அதிஷ்டித ஷேத்ரத்தினுடைய அபிகந்தவ்யதையை -ஸூ பக சப்தத்தாலே ஸூசிக்கப் பட்டது –
ஸ்ரீ சாத்த்வதாதிகளிலும் ஸ்வயம் வ்யக்த சைத்ய வைஷ்ணவங்கள் என்கிற ஷேத்திர விசேஷங்களையும் –
அவற்றின் எல்லைகளில் ஏற்றச் சுருக்கங்களையும் பிரியச் சொல்லி
த்ருஷ்டேந்த்ரிய வசச்சித்தம் ந்ருணாம் யத் கல்மஷைர்வ்ருதம் ததந்த காலே சம்சுத்திம் யாதி நாராயண ஆலயே-என்று
அவ்வோ ஷேத்ரங்களில் எல்லைக்கு உள்ளே வசித்தவனுக்கு தேஹந்யாச காலத்திலேயே வரும் விசேஷமும் சொல்லப் பட்டது –
ஆகையால் யத் கிஞ்சிதபி குர்வாணோ விஷ்ணோர் ஆயதனே வசேத் ந கிஞ்சிதபி
குர்வாணோ விஷ்ணோர் ஆயதனே வசேத் -என்கிறபடியே
பிரவ்ருத்தி நிவ்ருத்திகளாலே வல்ல கைங்கர்யத்தைப் பண்ணிக் கொண்டு
பகவத் பாகவத அபிமான விஷயமான சத்த்வோத்தர ஷேத்ரத்திலே வசிக்கை உசிதம் –
நிக்ருஹீதேந்த்ரிய க்ராமோ யத்ர யத்ர வசேன் நர
தத்ர தத்ர குருஷேத்ரம் நைமிசம் புஷ்கரம் ததா -என்று சொல்லுகிற இது
கத்யந்தரம் இல்லாத போது ஏதேனும் ஒரு தேசத்திலே வசித்தாலும் இவன் வாசத்தாலே அத் தேசமும் பிரசஸ்தமாம் என்கைக்காக –
இதுக்கு சாண்டிலீ வ்ருத்தாந்தம் உதாஹரணமாகக் கண்டு கொள்வது-
ஆகையால்
ஞான சம கால முக்த்வா கைவல்யம் யாதி கதசோக
தீர்த்தே ச்வபச க்ருஹே வா நஷ்ட ஸ்ம்ருதி ரபி பரித்யஜன் தேஹம் -என்று
சரீர பாதத்துக்கு ஒரு தேச விசேஷ நியமம் இல்லை என்றதுவும் எப்படிக்கும் பலத்தில் இழவு இல்லை என்கைக்காக –
ஆராத அருளமுதம் பொதிந்த கோயில்
அம்புயத்தோன் அயோத்தி மன்னருக்கு அளித்த கோயில்
தோலாத தனி வீரன் தொழுத கோயில்
துணையான விபீடணற்கு துணையாம் கோயில்
சேராத பயன் எல்லாம் சேர்க்கும் கோயில்
செழு மறையின் முதல் எழுத்து சேர்ந்த கோயில்
தீராத வினையனைத்தும் தீர்க்கும் கோயில்
திருவரங்கம் எனத் திகழும் கோயில் தானே —
கண்ணன் அடியிணை எமக்குக் காட்டும் வெற்புக்
கடு வினையர் இரு வினையும் கடியும் வெற்புத்
திண்ணம் இது வீடு எனத் திகழும் வெற்புத்
தெளிந்த பெரும் தீர்த்தங்கள் செறித்த வெற்புப்
புண்ணியத்தின் புகல் இது எனப் புகழும் வெற்புப்
பொன்னுலகில் போகம் எல்லாம் புணர்க்கும் வெற்பு
விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு
வேங்கட வெற்பு என விளங்கும் வேத வெற்பே –
உத்தம வமர்த் தலமமைத்ததோர் எழில் தனுவின் உய்த்த கணையால்
அத்தி வரக்கன் முடி பத்தும் ஒரு கோத்தென உதிர்த்த திறலோன்
மத்தறு மிகுத்த தயிர் மொய்த்த வெணெய் வைத்ததுணும் அத்தனிடமாம்
அத்திகிரி பத்தர் வினை தொத்தற வறுக்கும் அணி யத்திகிரியே —
தேனார் கமலத் திருமகள் நாதன் திகழ்ந்து உறையும்
வானாடுகந்தவர் வையத்திருப்பிடம் வன்தருமக்
கானாரிமயமும் கங்கையும் காவிரியும் கடலும்
நானா நகரமும் நாகமும் கூடிய நன்னிலமே –
சா காசீதி ந சாகசீதி புவி ச அயோத்யேதி
ச அவந்தீதி ந கல்மஷாதவதி ச காஞ்சீதீ நோதஞ்சதி
தத்தே சா மதுரேதி நோத்தமதுரம் நான்யாபி மான்யா பூரி
யா வைகுண்ட கதா ஸூ தா ரச புஜாம் ரேசேத நி சேதசே —
———————————————————————
அதிகாரம் -20 நிர்ணய அதிகாரம் –
மனஸி கரண க்ராமம் பிராணே புன புருஷே ச தம்
ஜடிதி கடயன் பூதேஷ்வேநம் பரே ச தமாத்மநி
ஸ்வவித் அவிதுஷோ இத்தம் சாதாரணே சரணேர்முகை
நயதி பரதோ நாடீபேதை யதோசிதம் ஈஸ்வர –
இப்படி லோக விக்ராந்த சரனௌ சரணம் தே அவ்ரஜம் விபோ -என்று இவன் கால் பிடிக்க
ஹஸ்தா வலம்ப நோ ஹி ஏகோ பக்தி கரீதோ ஜனார்த்தன -என்கிறபடியே இவனைக் கை பிடித்து
ராஜாதி ராஜ சர்வேஷாம் -என்கிறபடியே உபய விபூதி நாதனான சர்வேஸ்வரன் -தான் உகந்ததொரு நிலத்திலே வைக்க –
அபிஷிக்தையான மகிஷியைப் போலே பஹூ மதனாய் தன் பரமைகாந்தித்வத்துக்கு அனுரூபமான் வ்ருத்தியோடே போகும் இவ்வதிகாரி-
இப்படிப்பட்ட அதிகாரிகளிலே பிராரப்த துஷ்க்ருத விசேஷ வைசித்ரியாலே வரும் அஹங்கார மமகாரங்கள் என்ன –
அவை யடியாக அதடியாக அபசாரங்கள் என்ன -பிரயோஜநாந்தர ருசி என்ன -அதடியாக சம்பாவிதமான தேவதாந்திர ஸ்பர்சம் என்ன
புத்தி தௌர்பல்யம் என்ன -அதடியாக வரும் உபாயாந்தர பிரத்யாசை என்ன –
இவ் வைபரீத்யம் பிறந்தவர்களுக்கும் இவை பிறவாதே
பிராரப்த ஸூக்ருத விசேஷத்தாலும்-பூர்வ பிரபத்தியில் பல சங்கல்ப விசேஷத்தாலும்
சித்ரமில்லாத கைங்கர்யத்தில் பிரதிஷ்டிதராய்ப் போந்தவர்களும்
சம்சாரத்தின் நின்றும் நிர்யணத்துக்கு விலம்ப அவிலம்பங்களிலே நிலை இருக்கும் படி எங்கனே என்னில்
இவ் விடத்தில் இவர்களுக்கு சார்வாதிகளுக்கு போலே நிலை நின்ற அஹங்கார மமகாரங்கள் புகா –
அவஹிதராய் நடப்பார் இடறுமா போலே என்றேனும் ஒரு கால் வரும் அஹங்கார மமகாரங்கள்
விவேகாவதிகளாய் பின்பற்ற தெளிவாலே கழிந்து போம் –
அபராதங்கள் பிறந்தால் ஷாமணாவதியாயும் சிஷாவதியாயும் கோரின காலத்துக்கு உள்ளே
அபராத நிஸ்தாரம் பிறக்கும் படி அபராத பரிஹார அதிகாரத்திலே சொன்னோம் –
மோஷம் பெறுகைக்கு கால விசேஷம் குறியாதே பிரபன்னரானாரைப் பற்ற –
அபாயா விரத சச்வன்மாம் சைவ சரணம் கத -தநூக்ருத் யாச்விலம் பாபம் மாமாப் நோதி நர சனை–என்று சொல்லுகிறது –
முமுஷூவாய் இழிந்தவன் ஆகையாலே பிரயோஜ நாந்தர ருசி நிலை நிற்க உண்டாகாது –
உபய பாவனருக்கு போலே மோஷ ருசியோடு கூட பிரயோஜ நாந்தர ருசியும் கலந்து வந்தால் இவனுக்கு ஹித பரனான ஈஸ்வரன்
யாசிதோ அபி பக்தைர் நாஹிதம் கார யேத்தரி யஸ்ய அனுக்ரஹம் இச்சாமி தனம் தஸ்ய ஹராம்யஹம் -இத்யாதிகளிலும்
குண்டதாரோபாக்ய நாதிகளிலும் சொல்லுகிறபடியே
சில பிரயோஜ நாந்தரங்களை கொடாதே கண் அழித்தும்-
சிலவற்றிலே அல்ப அஸ்திரத்வ துக்க மிஸ்ரத்வாதி விவேகத்தாலே இவன் தனக்கு அருசியை விளைவித்தும் –
சௌபரி குசேலாதிகளுக்கு போலே சில போகங்களைக் கொடுத்து தானே அலமந்து விடப் பண்ணியும் விடுகையாலே
மோஷ காலம் குறித்து பிரபத்தி பண்ணியவனுக்கு அக் காலத்துக்குள்ளே ப்ரயோஜ நாந்தர வைமுக்யம் பிறந்து விடும் –
மற்றையவனுக்கும் -அதோபாயோ பிரசக்தோ அபி புக்த்வா போகாநநா மயான் –
அந்தே விரக்தி மா சாத்ய விசதே வைஷ்ணவம் பதம் -என்கிறபடியே வைராக்ய அவதியே விலம்பமாய் இருக்கும்
தேவதாந்திர ஸ்பர்சம் உண்டாயிற்று ஆகிலும் சர்வேஸ்வரன் ஏதேனும் ஒரு நாளிலே ஸ்ருத்யுக்தமான படியே
பரமை காந்திகளோடே சேர்த்து லஜ்ஜாவதியாகத் திருத்தி இவனுடைய வியபிசாரத்தைத் தீர்க்கும் –
சிலருக்கு தேவதாந்திர ஸ்பர்சம் நிலை நிற்குமாகில் பின்பு உபாய ஸ்பர்சம் இல்லை –
மேல் நரகாதிகளும் உண்டு என்று அறியலாம் –
இவனுக்கு பகவத் விஷயத்தில் க்ருதாம்சம் என்றேனும் ஒரு நாள் உபாய நிஷ்பத்தியைப் பண்ணி கார்யகரமாம் –
மஹா விஸ்வாசம் பூரணமாக பிறந்து பிரபத்தி பண்ணினார்க்கு புத்தி தௌர்பல்யமும்-உபாயாந்தர பிரத்யாசையும் பிறவா –
இவை பிறந்தவர்களுக்கு முன்பு பிறந்த விஸ்வாசம் மந்தமாய் இருக்கும் –
இவர்களையும் சர்வேஸ்வரன் மஹா விஸ்வாச அவதியாகத் திருத்தி பூர்ண பிரபத்தி நிஷ்டர் ஆக்கும் –
இவ்வைபரீத்யங்களுள் ஒன்றும் பிறவாதே நடந்தவர்களுக்கு விலம்பாதி சங்கையும் கூட இல்லை –
இவர்களுக்கு இச்சாவதி விலம்பம்-இவர்கள் கோலின எல்லையிலே மோஷம் அவினாபூதம் –
இந் நிஷ்டையைப் பெற்ற இவ்வதிகாரி -கடைத்தலையில் இருந்து வாழும் சோம்பரை உகத்தி -என்கிறபடியே
ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரனுக்கு சர்வதா அபிமதனாய் இருக்கும் –
1-இவன் திறத்தில் நிருபாதிக சர்வ சேஷியாய்-நிருபாதிக ஸ்வ தந்த்ரனாய் -சத்ய சங்கல்பனுமான சர்வேஸ்வரன்
சர்வ பயங்களுக்கும் காரணமான நிக்ரஹ சங்கல்பத்தை –
தததிகம உத்தர பூர்வாக யோரச்லேஷ விநாசௌ தத்த்வ்யபதேசாத்- ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -4-1-13- -என்கிறபடியே
சத்வாரக பிரபத்தி நிஷ்டனுக்கு உபாசன ப்ராரம்பத்தில் போலே பிரபத்தி வாக்ய உச்சாரணத்தில் பிரதம ஷணத்திலே விலக்கி
2- இவனையும் இவனுடைய அனுபந்திகளையும் நித்ய ஸூரிகள் கோவையிலே கோத்தாலும் ஆவல் கெடாதே
ஆஸ்ரித அபராத ராசிகளில் உண்டது உருக்கட்டாதே வயிறு தாரியாய்
அனுபந்திகளுடைய புத்தி பூர்வ அபராதங்களுக்கும் அனுதாபாதிகளாலே
நிஸ்தாரம் பண்ணுவிக்கும் படிக்கு ஈடான அனுக்ரஹ சங்கல்ப்பத்தை பண்ணி –
3- விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் என்கிறபடியே இவன் இசைந்த விலம்பத்துக்கு தான் சாநுசயனாய்த் த்வரித்து –
4-இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன் -என்றும் –
மாயம் செய்யேல் என்னை -என்றும் -சொல்லுகிறபடி இவனுக்கு இசைவை உண்டாக்கி –
5-உன் திரு மார்வத்து மாலை நங்கை வாசம் செய்யும் பூம் குழலாள் திருவாணை நின்னாணை -என்று
இவன் தான் த்வரித்து வளைக்கும் படி பண்ணி
6-சரணமாகும் தனதாள் அடைந்தார்க்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -என்கிறபடியே
இவன் கோருதலுக்கு ஈடாக பிராரப்த சரீர அவசானத்திலே பரம பத ப்ராப்தி உண்டாக்குவதாக கோரி –
7-பொன்னும் இரும்புமான விலங்குகள் போலே பந்தங்களான பூர்வ உத்தர புண்ய பாபங்களையும் பிராரப்த கார்யமான கர்மத்தில்
இவன் இசைந்த அம்சம் ஒழிய மேலுள்ள கூற்றையும் போய பிழையும் புகு தருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் -என்கிறபடியே
முன்பே இவனோடு துவக்கு அறுத்து வைக்கையாலே சரீர பாதத்துக்கு நினைப்பிட்ட சமயம் வந்தவாறே
ப்ரியேஷூ சர்வேஷூ ஸூக்ருதம்
அப்ரியேஷூ ச துஷ்க்ருதம்-விஸ்ருஜ்ய த்யான யோகேன ப்ரஹ்மாப் யேதி சநாதநம் -என்றும்
நம்மன் போலே வீழ்த்தமுக்கும் நாட்டில் உள்ள பாவம் எல்லாம் சும்மெனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே –என்றும்
ஸ்மர்த்தாக்கள் சொன்ன உபநிஷத் அர்த்தத்தின் படியே இவனுக்கு அனுகூல பிரதிகூலராய் இருந்துள்ள இரண்டு சிறகிலும்
இவன் பக்கல் ஆநுகூல்ய ப்ராதிகூல்யங்களுக்கு பலமாக அசல் பிளந்து ஏறி ஓடுகிறது என்னும் படி பண்ணி
8-திவா ச சுக்ல பஷச்ச உத்தராயண மேவ ச முமூர்ஷதாம் பிரசாச்தானி என்று
ஸ்ம்ருதியிலும் ஜ்யோதி சாஸ்த்ரத்தில் நிர்யாண பிரகரணத்திலும்
பலாந்தர பிரசக்தரையும் மோஷ உபாய பூர்த்தி இல்லாதாரையும் பற்றிச் சொல்லும் கால நியமம் இன்றிக்கே
நிசி நேதி சேன்ன சம்பந்தச்ய யாவத் தேஹபாவித்வாத்-ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -4-3-8–என்றும் –
அதச் சாயேன அபி தஷிணே-ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -4-2-19–என்றும் சொல்லுகிறபடியே –
மனுஷ்ய பித்ரு தேவர்களுடைய பகல்களிலே யாதல் -ராத்ரிகளிலே யாதல் –
தான் சங்கல்ப்பித்த சமயத்திலே அப்ரச்யுத பூர்வ சம்ஸ்கார மநோ ரதனாம்படி பண்ணி —
9-சிறை கிடந்த ராஜ குமாரன் திறத்தில் பிரசன்னனான ராஜா விலங்கை வெட்டி சிறைக் கூடத்தின் நின்றும் கொண்டு புறப்படுமா போலே
பிரசச்த அப்ரசச்த நியமம் அற தத் கால உபச்திதமாய் இருப்பது ஏதேனும் ஒரு சரீர விஸ்லேஷ நிமித்தத்தை உண்டாக்கி –
10- வாக்காதிகளான பாஹ்ய இந்த்ரியங்கள் பத்தையும் மனசிலே சேர்த்து
11-இப்படி கர்ம ஞான இந்த்ரியங்கள் எல்லாவற்றோடும் கூடின மனசை பிராண வாயுவோடே சேர்த்து
12-இப்படி பதினோர் இந்த்ரியங்களோடும் கூடின பிராண வாயுவை ஜீவனோடு சேர்த்து
13-பிராண இந்த்ரிய சம்யுக்தனான த்ரி ஸ்தூண ஷோப தசையிலே ஸ்தூல தேகத்தின் நின்றும்
கடைந்து எடுத்த பஞ்ச பூத சூஷ்மங்களோடே சேர்த்து –
14-இப்படி இந்த்ரிய பிராண பூத சூஷ்ம சம்யுக்தனான ஜீவனை நிசர்க்க சௌஹார்த்தம் உடைய ஹார்த்தனான தன் பக்கலிலே இளைப்பாற்றி
இப்படி ஸ்தூல சரீரத்தின் நின்றும் வித்வதவித்வத் சாதாரணமான உத்க்ராந்தி க்ரமத்தை நடத்தி –
15-அநந்தா ரச்மயஸ் தஸ்ய தீபவத்ய ஸ்திதோ ஹ்ருதே
ஸிதாஸிதா கந்தரு லீலா கபிலா பீதலோஹிதா
ஊர்த்தமேவ ஸ்திதஸ் தேஷாம் யோ பித்தவா ஸூர்ய மண்டலம்
ப்ரஹ்ம லோக அதிக்ரம்ய தேன யதி பராம் கதிம்
யதஸ் யான்யந்த்ரச்மி சதமூர்த்வமேவ வ்யவஸ்திதம்
தேன தேவ சரீராணி ச தாமானி ப்ரபத்யதே
ஏனைக ரூபாச் சாதஸ் தாந்த்ரச்மய அஸ்ய ம்ருதுப்ரபா
இஹ கர்மோபபோகாயா தை சம்சரதி ச அவச –என்கிறபடியே
கள்ளர் கொண்டு போம் வழிகள் போலே -ஆத்மாபஹாரிகள் ஸ்வர்க்க நரகங்களுக்கு போம் மார்க்காந்தரங்களுக்கு
முகங்களான நாடி விசேஷங்களில் போகாத படி வழி விலக்கி
16-அர்ச்சிராதி மார்க்கத்துக்கு முகமான சதாதிகையான ப்ரஹ்ம நாடியிலே பிரவேசிப்பித்து
ஸூர்ய கரா வலம்பியாய்க் கொண்டு புறப்படும்படி பண்ணும்
ஆழ்வான் அந்திம தசையில் விடாயிலே நாக்கொட்டி எம்பெருமானார் திருவடிகளைப் பிடிக்க
இவர் அப்போது ஆழ்வான் செவியிலே த்வயத்தை அருளிச் செய்ய
இப்பேறு நமக்கு வருகை அரிது -நாம் என்ன செய்யக் கடவோம் -என்று அப்போது சேவித்து இருந்த முதலிகள் கலங்க
இவர்கள் அபிராயத்தை திரு உள்ளம் பற்றி -ஆழ்வான் பிரகிருதி அறியீர்களோ –
இவ் வவஸ்தையிலே இவருக்கு இது கர்பூரத்தையும் கண்ட சக்கரையும் இட்ட மாத்ரம் அன்றோ –
நாம் இது உபாயத்துக்கு பரிகரமாகச் செய்தோம் அல்லோம் –
என்று அருளிச் செய்ய முதலிகள் தெளிந்து நிர்பரர் ஆனார்கள்
ஆகையால் –
நஷ்ட ஸ்ம்ருதி ரபி பரித்யஜன் தேஹம் -என்றும்
ஸ்திதே மனஸி ஸூஸ் வஸதே-என்கிற ஸ்லோக த்வயத்திலும்
துப்புடையாரை அடைவது எல்லாம் என்கிற பாட்டிலும் சொல்லுகிறபடியே
பிரபன்னனுக்கு அந்திம ஸ்ம்ருதியாதிகளில் நிர்பந்தம் இல்லை –
சரீரபாத சமே து கேவலம் மதீயைவ தயயா அதிப்ரபுத்தோ மாமேவா வலோகயன்
அப்ரச்யுத பூர்வ சம்ஸ்கார மனோரத -என்று ஸ்ரீ சரணா கத்யம் -21- அருளிச் செய்ததும்
இவ் வசனங்களுக்கு அவிருத்தமாக ஒரு பிரகாரத்தாலே நிர்வாஹம் -எங்கனே என்னில்
கத்யத்தில் அருளிச் செய்கிற அந்திம ஸ்ம்ருதி இவ் வந்திம ஸ்ம்ருதியையும் உபாய பலமாகக் கோரி
பிரபன்ன ரானவர்களுக்கு வரக் கடவது என்று சில ஆசார்யர்கள் நிர்வகிப்பார்கள் –
இப்படியாகில் ஒரு சரீரத்திலும் அந்திமமான ப்ரத்யயம் நிர்விஷயமாய் இராமையாலே இது பகவத் வியதிரிக்த விஷயத்தில் போமாகில்
யம் யம் வாபி ஸ்மரன் பாவம் -என்கிற கணக்கிலே விபரீத பலமாம் –
ஆன பின்பு கத்யத்திலே அருளிச் செய்த படியே ஸ்வதந்திர பிரபத்தி நிஷ்டனுக்கு பகவத் விஷயத்திலே அந்திம ஸ்ம்ருதி அவசியம் வரும்
நஷ்ச ஸ்ம்ருதி ரபி இத்யாதிகள் ஸ்ரீ கீதையில் அஷ்டம அத்யாயத்திலும்
யம் யோகின பிராணவியோக காலே யத் நேன விநிவேசயந்தி இத்யாதிகளிலும்
ஸ்வ யத்ன சாத்யமாக விதித்த கட்டளையிலே உபாயமாக அந்திம ஸ்ம்ருதி வேண்டா என்கின்றன என்று சில ஆசார்யர்கள் அனுசந்திப்பார்கள்
கேவலம் மதீயயைவ தயா -என்றே இங்கே அருளிச் செய்தது –
அந்திம ஸ்ம்ருதி யாவது வாகாதிகள் உபசாந்தமானால் மனஸூ உப சாந்தமாவதற்கு முன்பே பிறப்பதொரு ஸ்ம்ருதி –
இது அருகில் இருந்தார்க்கு தெரியாது –
த்ருஸ்யதே ஹி வாகிந்த்ரிய உபரதே அபி மன ப்ரவ்ருத்தி -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -4-2-1- –
இவனுக்கு உண்டு என்று அறிகிற அளவைச் சொல்லுகிறது –
தனக்கு சில வ்யாத்யாத்யவஸ்தைகளிலே கண்டபடியைச் சொல்லுகிறது ஆகவுமாம் –
ஆன பின்பு பகவத் விஷயத்தில் அந்திம ஸ்ம்ருதி முக்தர் ஆகிறவர்க்கும் மோஷம் கொடுக்கிறவர்க்கும் தெரியும் அத்தனை –
இதுக்கு அநந்தரம் யோகிகளோடும் அயோகிகளோடும் வாசியற
ஹார்த்தனான பரமாத்மாவின் பக்கலிலே விஸ்ரமிக்கும் அளவும் ஸூ ஷுப்தி துல்யமாய் இருக்கும் –
இவ் வவஸ்தையைப் பற்ற காஷ்ட பாஷாண சந்நிபம் -என்றும் நஷ்ட ஸ்ம்ருதரபி -என்றும் நினைக்க மாட்டேன் -என்றும்
சொல்லுகிறது என்றால் பிரபன்ன அதிகாரிக்கு விசேஷித்து ஓர் அதிசயம் சொல்லிற்று ஆகாது
இதுக்கு மேல் மத்த ஸ்ம்ருதிர் ஞான மபோஹனம் ச என்கிற ப்ராஜ்ஞன் உணர்த்த
தத் பிரகாசி தத்வாரானாய்க் கொண்டு ப்ரஹ்ம நாடியிலே பிரவேசித்தால் பின்பு
கால தத்வம் உள்ளது அனைத்தும் ஒரு பகலாய் உணர்த்தியே யாம்
—————-
நன்னிலமாமது நற்பகலாமது நன்னிமித்தம்
என்னலாமாமது யாதானுமாம் ஆங்கு அடியவர்க்கு
மின்னிலை மேனி விடும் பயணத்து விலக்கிலதோர்
நன்னிலையா நடுநாடி வழிக்கு நடை பெறவே –
தஹர குஹரே தேவஸ் திஷ்டன் நிஷ்த்வர தீர்க்கிகா
நிபதித நிஜாபத்யாதித் சாவதீர்ண பித்ருக்ரமாத்
தம நிமஹ நச்தஸ்மின் காலே ச ஏவ சதாதிகாம்
அக்ருதக புர ப்ரஸ்தா நாரத்தம் பிரவேசயிதி ப்ரபு
——————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply