ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த — ஸ்ரீ நவரத்ன மாலை —

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர்  தனியன்  –

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-

—————————————————————————————————————————————————————————————————————

சரணாகதன் ஆனவன் –
1-தன்னையும் –
2-தனக்கு விரோதியான தேஹத்தையும் –
3- தேஹத்தைப் பற்றி வரும் பந்துக்களையும் –
4-சம்சாரிகளையும் –
5- தேவதாந்தரங்களையும் –
6-ஸ்ரீ வைஷ்ணவர்களையும் –
7- ஆச்சார்களையும் –
8- பிராட்டியையும் –
9-ஈஸ்வரனையும் –
நினைத்து இருக்கும் படி எங்கனே என்னில் –

1- உடம்பில் வேறுபட்டு நித்யனாய் –
ஒருபடிப் பட்டு அணுவாய் –
ஞானத்தையும் ஆனந்தத்தையும் வடிவாக  யுடையனாய் –
ஜ்ஞானத்துக்கும் ஆனந்தத்துக்கும் இருப்பிடமாய் –
எம்பெருமானை ஒழிய வேறு ஓன்று நினைத்தால் சொல்லுதல் செய்ய மாட்டாதே -எம்பெருமானுக்கே உரியனாய் –
தன் கார்யத்துக்கு தான் கடவன் அன்றிக்கே -அவனையே பலமாக யுடையனாய் இருக்கும் என்று
தன்னை நினைப்பான் –

2- தன்னை உள்ளபடி அறிய ஒட்டாதே விபரீத ஜ்ஞானத்தை ஜனிப்பித்து
இருபத்து நாலு தத்துவங்களினுடைய திரளாய்
அநித்யமாய்-
எப்போதும் ஒக்க பரிணமிக்கக்   கடவதாய்-
ஒரு நாளும் ஜ்ஞானத்துக்கு இருப்பிடம் அன்றிக்கே அநந்த துக்கங்களை   விளைப்பிக்கக் கடவதாய் –
சப்தாதி விஷயங்களிலே மூட்டி நசிப்பிக்கும் என்று
தன் தேஹத்தை நினைப்பான் –

3-ஆத்ம ஜ்ஞானத்தையும்
பகவத் ஜ்ஞானத்தையும்
பகவத் விஷயத்தில் ருசியையும் த்வரையையும் குலைத்து
தேஹாத்மா அபிமானத்தையும்
அஹங்கார மமகாரங்களையும்
காம க்ரோதாதிகளையும் விளைப்பித்து
பலபடியாலும் -அனர்த்தத்தை பண்ணுவார்கள் என்று
தேஹத்தைப்   பற்றி வரும் பந்துக்களை நினைப்பான் —

4-பகவத் அனுபவத்துக்கும்
பகவத் கைங்கர்யத்துக்கும் விரோதிகளாய்
சம்சார வர்த்தகராய் இருப்பார்கள் என்று சம்சாரிகளை நினைப்பான் –

5-அஜ்ஞராய் அசக்தராய்
எம்பெருமான் பக்கலிலே பிறந்து
அவன் கொடுத்த பதங்களை யுடையராய்
எதிரிட்டு துர்மாநிகளாய் தங்களைப் போர பொலிய நினைத்து
நாட்டாரை பிரமிப்பித்து
அனர்த்தத்தைப் பண்ணுவார் சிலர் என்று தேவதாந்தரங்களை நினைப்பான் —

6-பகவத் ஜ்ஞானத்துக்கும்
இடற விஷய வைராக்யத்துக்கும்
பகவத் பக்திக்கும் வர்த்தகராய் –
-உசாத் துணையாய் –
பிராப்யத்துக்குஎல்லை நிலமாய் -இருப்பார்கள் என்று ஸ்ரீ வைஷ்ணவர்களை நினைப்பான் –

7- தன் கடாஷத்தாலே என்னைத் திருத்தி
சர்வேஸ்வரன் கைக் கொள்ளுகைக்கு யோக்யனாம் படி பண்ணி
அவன் திருவடிகளிலே சேர்த்து –
அறியாதன அறிவித்து-திருவாய் -2-3-2-
ஸ்வாமியாய்  –
என்றும் ஒக்க அடிமை கொள்ளும் ம ஹோபகாரகன் -என்று ஆசார்யனை நினைப்பான்-

8- நம்முடைய சர்வ அபராதத்தையும் போருப்பித்து
ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யத்தையும் குலைத்து
அவனுடைய காருண்ய வாத்சல்யாதி குணங்களைக் கிளப்பி –
நமக்கு புருஷகார பூதையாய்
மாதாவாய்
ஸ்வாமி நியாய்
ப்ராப்யையாய்—இருக்கும என்று பிராட்டியை நினைப்பான் –

9- சிருஷ்டி காலத்திலேயே சரீரத்தையும் இந்த்ரீயங்களையும் தந்து
அந்தர்யாமியாய் நின்று
சத்தையை நோக்கி –
அத்வேஷத்தையும்
ஆபிமுக்யதையும்
சத் சங்கதி தொடக்கமான ஆத்ம குணங்களையும் பிறப்பித்து
சதாசார்யனோடே சேர்த்து
நம்முடைய சர்வ அபராதங்களையும் பொறுத்து –
சம்சார சம்பந்தத்தையும்  கழித்து
அர்ச்சிராதி மார்க்கத்தையும் -பரமபதத்தையும் -குண அனுபவத்தையும் தந்து –
யாவதாத்மா பாவி நித்ய கைங்கர்யம் கொள்ளும் ஸ்வாமி என்று சர்வேஸ்வரனை நினைப்பான் –

நவார்த்த ரத்ன மாலேயம் சத் பிர்தார்யா சதா ஹ்ருதி
பாத்தா யோ நா அதியசசா  தம் ஜகத் குரும் ஆஸ்ரயே —

ஸ்ரீ நவ ரத்ன மாலை  முற்றிற்று-

—————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading