ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் தனியன் –
லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-
———————————————————————————————————————————————————————————————————–
துன்பக் கடலாய் -நாச் திருமொழி -12-10-
இருள் தரும் மா ஞாலமான-திருவாய் -10-6-1- சம்சாரத்துக்கு உள்வாயிலே பஞ்ச பூதங்களாலே சமைந்து
நவத்வாரே புரே -ஸ்ரீ கீதை -5-13-என்கிறபடியே -ஒன்பது வாசலான -பெரிய திரு -1-6-9-படை வீட்டுக்கு உள்வாயிலே
கொடுவினைத் தூறு –திருவாய் -3-2-9–யென்பதொரு தூறாய்
புக வழி தெரியும் அத்தனை ஒழியப் புறப்பட வழி தெரியாது இருப்பதொரு காட்டினுள்ளே
அநந்த க்லேச பாஜனமான மரத்தையிட்டு
அவித்யை என்கிற தேரைச் சமைத்து
அவஸ்தா சப்தகங்கள் என்கிற உருளைகளைச் சேர்த்து
ராகத் வேஷாதிகளாகிற குதிரைகளை அணைத்து
குண த்ரயங்கள் என்கிற திருக் குரும்பை ஊஞ்சலின் மேல்
கர்மம் என்கிற சிம்ஹாசனத்தையிட்டு
ருசி என்கிற மேல் விரிரை விரித்து
அவஸ்யம் அநு போக்தவ்யம் க்ருதம் கர்ம ஸூப அஸூபம்
நா புக்தம் ஷீயதே கர்ம கல்ப கோடி சதைரபி -ப்ரஹ்ம விவர்த்தம் -பிரகிருதி கண்டம் -26-70-என்கிறபடியே
அனுபவித்து அன்றி மீள ஒட்டாது இருக்கிற உறு பிணிகள் -பெரியாழ்வார் -5-2-6-ஆகிற பார்யாவர்க்கம் பக்கத்தில் இருக்க
அந்தகாரம் ஆகிற விளக்கை ஏற்றி
அவசதுக்கள்ஆகிற தாஸ வர்க்கம் பரதோஷம் பர ஹிம்சை பர அனுவர்த்தனம் தொடக்கமான போகங்களை புஜிப்பிக்க புசித்து
அப்ரகாசித ஸ்வரூப ஸ்வ பாவனான தன்னை வாசனை என்கிற வீரத்தை இட்டுப் பார்த்து
தாபத் த்ரயங்கள் என்கிற விடாய்க் குடையின் கீழே பஞ்சவ்ருத்தி பிராணன்கள் ஆகிற புரோஹிதர்
சம்சாரத்துக்கு மூர்த்த அபிஷிக்தனாக்கி
க்யாதி லாப பூஜைகள் கொண்டாட
புண்ய பாபங்கள் ஆகிற சாமரமிரட்ட
அநேக வித துக்க பரம்பரைகள் அடுக்கொலியல் பணிமாற்ற
அஹங்கார மமகாரங்கள் ஆகிற ஆலவட்டம் பணிமாற
சதா துக்க வர்ஷிணி சுழற்றிப் பணிமாற
அச்ம்ருதி-ஒட்டிவட்டில் எடுக்க
அபி நிவேசம் காளாஞ்சி எடுக்க
விஷயாந்தர ருசி அடைப்பை எடுக்க
பூர்வ உத்தர ராகங்கள் ஆகிற ஆனை குதிரையோடே
வாத பித்த ச்லேஷ்மங்கள் ஆகிற மந்த்ரிகள் சேவிக்க
காம குரோத லோப மோஹ மத மாத்சர்யம் தொடக்கமான பிரபுக்கள் சேவிக்க
பகவத் அபசார பாகவத் அபசார அசஹ்யா அபசார நாநா வித அபசாரம் ஆகிற காலாள்கள் சேவிக்க
நித்ரா தேவி ஜ்யேஷ்டை தொடக்கமான பெண் பிள்ளைகள் சேவிக்க
ஆசை யாகிற பாசக் கயிற்றால் பிணைத்து
இந்த்ரியங்கள் ஆகிற மத களிறுகள் வலிக்க
காலம் ஆகிற சாரதி நடத்த
தேஹாத்மா அபிமானி வந்தான் –ஸ்வதந்த்ரன் வந்தான் -அந்ய சேஷ பூதன் வந்தான் -என்று காளங்கள் சிஹ்னங்கள் கலந்து பணிமாற-
மெல்லியல் யாக்கை கிருமி குருவில் மிளிர்ந்தந்தாங்கே செல்லிய செல்கை துலகை என் காணும் -திருவிருத்தம் -48-என்கிறபடி
தானும்தன் பரிகார பூதருமாய் ஸூகா னுபவம் பண்ணி –
யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பவிழ்ந்தும் மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே -திரு விருத்தம் -95-என்கிறபடியே
புக்க புக்க சரீரங்கள் தோறும் அஹங்கார மமகாரங்களைப் பண்ணி -சத்தா தாரகனான சர்வேஸ்வரனை மறந்து
மொய்த்த வல் வினையுள் நின்று -திருமாலை -4-
த்ரிவித காரணங்களாலும் -பாதகம் மஹா பாதகம் தொடக்க மானவற்றாலே பொது போக்கிக் கொண்டு போருகிற காலத்திலே-
ஈஸ்வரனுடைய நிர்ஹேதுக விஷயீ காரத்தாலே -இவனுக்கு அத்வேஷம் பிறக்க —
அத்தாலே ரஷணத்துக்கு வழி கண்டு -களை எடுக்கக் கொடுத்த கோலைக் கொண்டு கண்ணைக் கலக்கிக் கொள்ளுவாரைப் போலே
நம் பக்கல் சேரக் கொடுத்த உடம்பைக் கொண்டு அகலுகைக்கு உறுப்பாக்கினான்-
பல் பிறவி நோற்றேன் -பெரிய திரு -1-9-8-என்று ஒரு ஜன்மத்திலே அநேக ஜென்மத்துக்கு வேண்டும் பாபங்களை ஆர்ஜித்துக் கொள்ளுகிற
இவனை நம் பக்கலிலே சேர்த்துக் கொள்ளும் விரகேதோ -என்று திரு உள்ளம் பற்றி -வல வட்டத்திலே –
தூது செய் கண்கள் -திருவாய் -9-9-9- கொண்டு ஓன்று பேசி
ஆழ்வானும்-கருதுமிடம் பொருதுமவன் -திருவாய் -10-6-8-ஆகையாலே -தன பரிகார பூதரை ஏவிவிட
நின்று இவ்வுலகில் கடிவான் நேமிப்பிரான் தமர் போந்து -திருவாய் -5-2-6-என்றும்
அருள் என்னும் ஒள் வாளுருவி -இராமானுச-93-என்றும் –
அடைந்த அருவினையோடு அல்லல் நோய் பாவம்
மிடைந்தவை மீண்டு ஒழிய வேண்டில் நுடங்கிடையை
முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய முன்னொரு நாள்
தன் விலங்கை வைத்தான் சரண் -முதல் திரு -59- என்கிறபடியே
விரோதி வர்க்கத்தை அடைய அழிவு செய்து ஜ்ஞானத்தைக் கொடுக்க
இவனும் சைதன்யம் குடி புகுந்து –
தெரிந்து உணர்வு ஓன்று இன்மையால் தீ வினையேன் வாளா விருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம்
கரந்து உருவில் அம்மானை அந்நான்று பின் தொடர்ந்த ஆழி யங்கை யம்மானை ஏத்தாது அயர்த்து -பெரிய திருவந்தாதி -82-என்கிறபடியே
இழந்த நாளைக்கு அனுதபித்து
பிராப்யத்தை உள்ளபடி அறிவித்த ஆச்சார்யன் பக்கலில் கிருதஜ்ஞனாய் –
விரோதி வர்க்கத்தில் உபேஷை பிறந்து -ஸ்ரீ யப்பதியை கிட்டி அல்லது தரிக்க ஒண்ணாது இருக்கிற ப்ரேமம் விளைந்து
இவ்வளவும் குலையும் காட்டில் கைக் கொண்டு அருள வேணும் –என்று பிராட்டி புருஷகாரம் செய்ய
அவ்வளவும் பொறுக்க மாட்டாத படியான வாத்சல்யாதி குண விசிஷ்ட வஸ்து வாகையாலே
கீழ்ச் செய்த அம்சத்தைத் திரு உள்ளம் பற்றி
மேற்செய்ய வேண்டும் அம்சத்தை ப்ராப்ய பர்யந்தமாக தலைக் கட்டிக் கொடுத்து அருளும் —
ஸ்ரீ சம்சார சாம்ராஜ்யம் முற்றிற்று –
———————————————————————————————————————————————————————————————————————————————————–
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply