பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -11-8-மாற்றமுள வாகிலும் சொல்லுவன் மக்கள்-

இத் திரு மொழியில் தனது தேக சம்பந்தத்தை அடியேனுக்கு போக்கி அருள வேணும் என்று
அவன் திருவடிகளிலே விழுந்து வேண்டுகிறார் –
பயிர் செய்பவன் பயிர் தலையிலே குடிசை கட்டிக் கொண்டு அதிலே இருந்து அப் பயிரைப் பாது காப்பது போலே
இந்நில யுலகத்திலே நித்ய சந்நிதி பண்ணி அருளி யுள்ள திவ்ய தேசங்களில்
தலைமை பெற்ற திருவரங்கமும் திருவாலியும் இத் திருமொழியிலே   எடுத்து ஆள்கிறார் –

————————————-

மாற்றமுள வாகிலும் சொல்லுவன் மக்கள்
தோற்றக் குழி தோற்றுவிப்பாய்  கொல் என்று இன்னம்
ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன்
நாற்றச் சுவை யூறொலியாகிய நம்பீ—11-8-1-

ஜீவாத்மாவுக்கும்  பரமாத்மாவுக்கும் சம்வாதம்
ஜீவாத்மா -அநேக ஜீவகோடிகள் உம்மை இழந்து பிரபஞ்சத்தில் இழிவடைய வேண்டுவது எதனால்
பரமாத்மா -விஷயங்களில் இழிந்து புண்ய பாப கர்மங்களால் மாறி மாறி பல பிறப்பும் பிறந்து வருந்தும் இடத்தும்
அவற்றுக்கு அஞ்சி என்னை சரண் அடையவில்லையே -இதில் என் குற்றம் ஒன்றும் இல்லையே
ஜீவாத்மா -மனமே உனது ஆதீனம் -புண்ய பாபங்கள் உனது அனுஹ்ரஹ நிக்ரஹம் அடியாகத் தானே
நிரந்குச ஸ்வாதந்த்ரன் நீ பொறுத்து அருளினால் கேட்பார் யுண்டோ -சொத்தை காப்பது ஸ்வாமி கடமை அன்றோ
பரமாத்மா -ஞானம் சக்த்யாதிகளை கொடுத்து சேதனராக ஆக்கி அருளினேனே -வீணாக என் மேல் பழி சொல்வான் என்
வாத பிரதிவாதங்களுக்கு எல்லை இல்லையே –
மாற்றம் உளவாகிலும் சொல்லுவேன் -என்கிறார்
ஆற்றங்கரை மரம் விலகி நிற்கவோ -பிறரைக் கூப்பிடவோ -எப்போதும் அபாயத்துக்கு இடமாகுமே
ஆற்றம் கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே
மரத்துக்கு அபாயம் உள்ளது என்றாலும் அஞ்சுவதற்கு சேதனம் இல்லையே
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்
சப்தாதி விஷயங்கள் உனது ஆதீனம் ஆனபின்பு புலன் வழியே சென்றேன் என்று குறை சொல்லக் காரணம் இல்லையே
பயக்ருத் பய நாசன -பயத்துக்கு காரணமும் பரிகாரமும் நீயே
சப்தாதி விஷயங்களுக்கு நீயே நியாமகன் –

————————————–

சீற்றமுள வாகிலும் செப்புவன் மக்கள்
தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் என்று அஞ்சி
காற்றைத் திடைப் பட்ட கலவர் மனம் போல்
ஆற்றத் துளங்கா நிற்பன் ஆழி வலவா -11-8-2-

சீற்றம்  கொள்ளும்படி அநேக பகவத் பாகவத அபசாரங்கள் யுண்டே
ஆத்மாபஹாரம் -அவதாரங்கள் கர்ம வச்யதையால் பிறக்கும் பிறப்புடன் ஒக்கும் என்ற எண்ணம்
அர்ச்சாவதாரங்களில் -கல் பொன் வெள்ளி செம்பு –  உபாதான புத்தியும்
சாஸ்த்ரங்களில் சொல்லும் செயல்களை செய்யாமையும் நிஷித்த செயல்களை செய்தும்
அன்றிக்கே
மக்கள் தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் -என்று உன் மேல் நான் சொல்லும் குறையினாலும் -கோபம் உண்டாகுமே
ஆனாலும் செப்புவன் –
உன்னுடைய கிருபையும்
சம்சாரம் ஆர்த்தியையும்
வேறு புகல் இல்லாத அநந்ய கதித்வத்தையும் -கொண்டு விண்ணப்பம் செய்கிறேன்
ஆக -கீழ்ப் பண்ணின அபதாரங்களாலே சீற்றம் யுண்டானாலும்
இப்போது அடியேன் சொல்லப் புகுகிற வார்த்தைகளால் சீற்றம் யுண்டானாலும்
சீற்றம் உள-என்ற அனந்தரத்திலே இவ்வர்த்தத்தைத் தாமே அருளிச் செய்தார் இறே-
சீற்றம் உள என்று அறிந்தால் சொல்லும்  படி என் என்னில்
அருளும் ஆர்த்தியும் அநந்ய கதித்வமும் சொல்லப் பண்ணும்
சீறினாலும் காலைக் கட்டிக் கொள்ளலாம்படி இருப்பான் ஒருவனைப் பெற்றால் எல்லாம் சொல்லலாம் இறே -ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூக்திகள்-

தடுத்து என்னை மீட்காமல் அனுமதி பண்ணி உதாசீனர் போலே இருந்து விடுகிறாயோ –
விலக்காமையே தோற்றுவிப்பதாக கூறப்படுகிறது
கிணற்றில் விழும் குழந்தையை தாய் எடாது இருந்தால் தாயே தள்ளினாள் என்கைக்குத்  தட்டில்லை
மரக்கலத்தில் யுள்ளாருக்கு அச்சம் வரும் –தீர்க்க சக்தி இல்லையே
பலருக்கும் யுண்டான அச்சம் இவர் ஒருவருக்கும் யுண்டானதே-தோன்ற -கலவர் -என்று பன்மையில் கூறுகிறார்
அவர்கள்  கவலை யுடம்பு அழிதல்-இவருக்கு
கலவர் மனத்திலும் மிக்கதே இவருக்கு
ஆழி வலவா -கலக்கம் தீர்க்க பரிகரம் உள்ளவனே -ஆற்றலும் யுள்ளவனே
வலவன்-வல்லவன் -வலது திருக்கையில் யுள்ளவன் என்றுமாம்-

———————————————-

தூங்கார் பிறவிக்கள் இன்னம் புகப் பெய்து
வாங்காய் என்று சிந்தித்து நான் அதற்கு அஞ்சிப்
பாம்போடு ஒரு கூரையிலே  பயின்றாப் போலே
தாங்காது உள்ளம் தள்ளும் என் தாமரைக் கண்ணா —11-8-3-

உள்ளம் தள்ளும் என் தாமரைக் கண்ணா -என் உள்ளம் தடுமாறாதபடி கடாஷித்து அருள வேணும்
தூங்கார் பிறவிகள் -தூங்குதல் அசைத்தல் சலித்தல் -மனம் சஞ்சலப்  படுவதற்கு ஹேதுவான சம்சாரம்
அன்றிக்கே தூங்குதல் -உறங்குதல் -தமோ குண வசத்தால் அஞ்ஞானம் மிக்க பிறப்புக்கள் என்னவுமாம்
பிறவிக்கண்-பழைமையான பாடம்-

—————————————

உருவார் பிறவிக்குள் இன்னம் புகப் பெய்து
திரிவாய் என்று சிந்தித்து என்றதற்கு அஞ்சி
இருபாடு எரி கொள்ளியினுள் எறும்பே போல்
உருகா நிற்கும் என் உள்ளம் ஊழி முதல்வா –11-8-4-

பிரளய ஆபத்தில் ரஷித்து அருளியவனே தம்மை சம்சார பிரளயத்தில் நின்றும் ரஷிக்க தக்கவன் என்பதால் –ஊழி முதல்வா -என்கிறார்
உரு ஆர் பிறவி -உடம்பும் உயிரும் கூடினதாயினும் உடம்பின் குணமான பேதமையே மிக்கு உயிரின் குணமான உணர்வு குன்றி
தேஹாத்மா அபிமானமே மிகுந்து ஆத்ம உஜ்ஜீவன வகையில் புகாத பிறப்பு -அச்சத்துக்கு காரணமாய் அமைந்த பிறப்பு
திரிதல் -மாறி மாறி பல பிறப்பும் பிறந்து இறந்து உழல்தல் -ஜன்ம மரணங்களுக்கும் நடுவே அகப்பட்டு நோவு பட்டு
எங்கும் புகலிடம் இன்றி பொறுக்கவும் மாட்டாதே படுகிற பாட்டுக்கு -இரு  பாடு எரி கொள்ளியினுள் எறும்பே போலே -என்கிறார்
இரு தலை மின்னுகின்ற கொள்ளி மேல் எறும்பு என்னுள்ளம் -திரு நாவுக்கரசு நாயனார்-

—————————————-

கொள்ளக் குறையாத விடும்பைக் குழியில்
தள்ளிப் புகப்பெய்தி கொல் என்றதற்கு அஞ்சி
வெள்ளத்திடைப் பட்ட நரியினம் போலே
உள்ளம் துளங்கா நிற்பன் ஊழி  முதல்வா -11-8-5-

பெரு நீரில் அகப்பட்ட நரியினம் போலே ஒன்றும் தோன்றாது நிலை தளும்பிக் கிடக்கின்றேன்
பிறப்பதிலே புகுவதற்கு காரணம் ஊழ்  வினையே யாயினும் -அதனை எம்பெருமான் ஒழித்திட சமர்த்தனாய் இருந்தும்
ஒழித்திடாது இருத்தலே காரணமாக -தள்ளிப் புகப்பெய்தி   கொல் -அவன் மேல் ஏறிட்டுக் கூறுகின்றார் –
தள்ளிப் புகப்பெய்தி-எல்லாவற்றுக்கும் அவனை இன்னாதாகலாம் படி இறே பிராப்தி இருப்பது
கிணற்றிலே விழுகிற பிரஜையை வாங்காத தாயை தானே தள்ளினாள்-என்னக் கடவது இறே –
அடியிலே நீ பரிஹரியாமை அன்றோ இது அகல வேண்டிற்று –
தள்ளிப் புகப்பெய்தி   கொல் –நெருப்பிலே அகப்பட்டு-எரிகிறவனை-திரிய அதுக்குள்ளே தள்ளி ஒன்றை இட்டு அமுக்குவாரைப் போலே
நரிகள் பலவற்றுக்கும் யுண்டான பயம் இவர் ஒருவருக்கே யுண்டாயிற்றே -நரியினம் போலே உள்ளம் துளங்கா நிற்பன் –
ஊழி முதல்வா – நீ முன்பு  பரிஹரித்த பிரளயத்தின் அளவு அல்ல சம்சாரத்தின் பிரளயம் –
அங்கு ஒருவரும் அபேஷியாது இருக்கப் பரிஹரித்தாய் –
இங்கே நான் அபேஷிக்கச் செய்தேயும் பராமுகமாய் இருக்கிறாயே –

—————————————–

படை நின்ற பைம்தாமரையோடு அணி நீலம்
மடை நின்று அலரும் வயலாலி மணாளா
இடையன் எறிந்த மரமே ஒத்து இராமே
அடைய வருளாய் எனக்கு உன் தன் அருளே  -11-8-6-

அதி சமீபஸ்தனான வயலாலி மணவாளனை
அடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை வற்றா நீர் வயல் சூழ் வயலாலி யம்மானைப் பெற்றேன்
பெற்றதுவும் பிறவாமைப் பெற்றேனே -என்றும்
அணியாலி கை தொழுது முன்னம் சேர் வல்வினைகள் போக முகில் வண்ணம் பொன்னம் சேர்
சேவடி மேல் போதணியப் பெற்றோமே -என்றும்
ஈடுபட்டுக் கூறினவர் ஆகையாலே -எனக்கு உன் தன் அருள் அருளாய் -என்கிறார்
கலப்பை கொண்டு உழும் பொழுது இரு புறத்தும் உழு  படி செல்ல அதற்கு அறாமல்
இடை இடையே கிடக்கும் இடமும் படை எனப்படும்
தாமரைக் கொடிகள்  நீலோத்பல கொடிகள் கலைகள் -நீர் நில வளம் சொல்லும்
வற்றா நீர் வயல் சூழ் வயலாலி -அன்றோ
மணி கெழு நீர் மருங்கு அலரும் வயலாலி -வம்பார் பூ வயலாலி –
மணாளன் -மணவாளன் -மணம் ஆளன்-அமிருத கடவல்லி நாச்சியார் -வயலாலி எம்பெருமான் –
வலிய ஆட்கொண்டு மந்திர உபதேசம் செய்து அருளினான்
ஒரு சார் பசுமையாய் ஒரு சார் உலர்ந்து இருப்பது போலே ஞான லாபம் -பேறு கிடையாமையாலே பெறப் பெற்ற வாட்டமும் யுண்டே
வேர் பறிந்த கொடியின் மலர்களும் போட்ட இடத்திலே செவ்வி பெரும்படியான தேச விசேஷத்தில் இருந்தும்
நீ அடியேனுக்கு பூர்ண அனுபவம் அருளத் தட்டிலையே
இருள் தரும் மா ஞாலத்திலே இருந்து தொண்டு செய்த அடியேனுக்கு நித்ய விபூதியில்  நித்ய கைங்கர்ய செல்வம் அருளாய் –

——————————————

வேம்பின் புழு வேம்பன்று உண்ணாது அடியேன்
நான் பின்னும் உன் சேவடி யன்றி நயவேன்
தேம்பல் இளம் திங்கள் சிறை விடுத்து ஐ வாய்ப்
பாம்பின் அணைப் பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ –11-8-7-

நான் என்ற மாத்ரம் சொன்னால் அகங்காரம்  என்பதால் அடியேன் நான் -என்கிறார்
இயற்கையாக கரும்பாய் உள்ள  நீ வேம்பாய் ஆனாலும் விட மாட்டேன் என்றால் போலே
இயற்கையான அடியேன் அடிமை மாறப் பெற்றாலும் உன்னை விடேன் என்பதாக
பின்னும் என்ற சொல்லுக்கு கருத்து உரைப்பர்
தேம்பல் இளம் திங்கள் சிறை விடுத்து ஐ வாய்ப் பாம்பின் அணைப் பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ  என்ற தொடர்
அடுத்த பாசுரத்தில் வருகிற அரங்க நகர் அப்பனைக் குறித்ததாம்
துண்ட வெண் பிறையன்-பிறையின் -துயர் தீர்த்தவன் அஞ்சிறைய வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன் –
சந்திரனது உட்குறையைப்  போக்கி அருளின நீ என் மனக் குறையும் போக்கி அருள்வாய் -என்றவாறு
ஐ வாய்ப்பாம்பின் அணைப் பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ  -என்றது உன்னை எப்பொழுதும் சேர்ந்து இருக்க விரும்பும்
அடியவர்க்கு நிரந்தர சம்ச்லேஷத்தைத் தந்து அருள்வாய்
திரு வநந்த ஆழ்வானைப் போலே என்னையும் -அடைய அருளாய் எனக்கு உன் தன அருளே –
அவனுடைய திவ்ய தேஜஸ் ஸிலே ஈடுபட்டு பரஞ்சோதி என்கிறார் –
சூர்யன் சந்தரன் அக்னி -முச் சுடர்களிலும் மேபட்ட ஒளி என்றவாறு –

————————————————–

அணியார் பொழில் சூழ் அரங்க நரகரப்பா
துணியேன் இனி நின்னருளால் அல்லது யெனக்கு
மணியே மணி மாணிக்கமே மது சூதா
பணியாய் யெனக்கு உய்யும் வகை பரஞ்சோதி –11-8-8-

அரங்க நகர் அப்பா உனது அருள் அல்லது வேறு ஒன்றைப் பற்றுக் கோட்டாகக் கொள்ளேன்
அப்பன் -சேதனர்களுக்கு ஹிதம் சொல்லும் தந்தை அன்றோ நீ
மணியே -காண்பவர் இளைப்பைத் தீர்க்கும் வடிவு
மணி மாணிக்கமே -இயற்கையிலே மேன்மை உள்ளவனே
மது சூதா -விரோதி நிரசன சீலன்
நீ பின்பே பேறு தந்து அருளுவாய் என்றாலும் -தருவேன் -மாஸூச -என்றாவது வார்த்தை
சொல்லி அருளாய் -எனக்கு உய்யும் வகை பணியாய்-
பிரார்த்தனைக்கு இரங்கி அவன் சோதி வாய் திறந்து அருளும் பொழுது திரு முக மண்டலத்திலும் திரு மேனியிலும்
அருளுவதால் யுண்டான புகர் தோன்ற  பரஞ்சோதி -என்கிறார்
பரஞ்சோதி  —
பூ வலரும் போதை விகாசம் போலே
வார்த்தை அருளிச் செய்யும் போது-திருமேனியில் பிறக்கும் செவ்வி காண வாயிற்று ஆசைப் படுகிறது –

—————————————

நந்தா நரகத்து அழுந்தா வகை நாளும்
எந்தாய் தொண்டர் ஆனவருக்கு இன்னருள் செய்வாய்
சந்தோகா தலைவனே தாமரைக் கண்ணா
அந்தோ அடியேற்கு அருளாய் யுன்னருளே —————————–11-8-9-

அவித்யாதிகளுக்கு ஒழிவு இல்லாமையாலே பிறவித் துயரம் மாறாமல் இருப்பது பற்றி நந்தா நரகம் -சம்சாரம்
இதற்கு அழிவு செய்வது எம்பெருமான் அருள் தவிர வேறு இல்லையே அழுந்தா வகை நாளும் இன்னருள் செய்வாய்
அவன் அருளைப் பெற்று வீடு பெற வேண்டுவார்க்கு அவன் திருவடிகளில் வழிபாடு அவசியம் -என்பது
தோன்ற தொண்டர் ஆனவருக்கு -என்கிறார்
கருணை மழை பொழிய மலர விழித்த திருக் கண்களில் ஈடுபட்டு -தாமரைக் கண்ணா
எந்தாய் -தந்தையாய் நீ இருக்க தரித்ரனாய் நான் இங்கே இருக்கவோ
சந்தோகன் -சந்தஸ் -வேதம் அத்தால் கானம் பண்ணப் படுபவன் -சாந்தோக்ய  உபநிஷத்துக்கு விஷயமானவன்-

—————————–

குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன் தன்னை
மன்றில் புகழ் மங்கை மன் கலி கன்றி சொல்
ஓன்று நின்ற ஒன்பதும் வல்லவர் தம் மேல்
ஒன்றும் வினையாயின சார கில்லவே-11-8-10-

எல்லா வினையும் நீங்கப் பெற்று இன்புறுவர்
மன்றில் புகழ்-பழைமையான சரியான பாடம்
மன்றில் மலி புகழ் -சேராது
ஓன்று நின்ற ஒன்பது -ஒன்றோடு கூடி நின்ற ஒன்பது -ஒன்றும் நின்ற ஒன்பதும் என்னவுமாம்
மங்கை மன்னன் கலி கன்றி சொல் ஓன்று நின்ற ஒன்பதும்
அரசாண்ட செருக்கு அற்று தமது குற்றம் குறைகளையும் உலகோர் கலி தோஷத்தையும் கடியுமாறு  
அருளிச் செய்த திரு மொழி
நல்வினையும் பிறப்புக்குக் காரணம் என்பதால் -வினையாயின சார கில்லா –
இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு
எம்பெருமான் பேர் அருளால் பரம பதம் அடைவார்கள் -வல்லவர் தம் மேல் என்றும்
வினையாயின சார  கில்லா என்று எதிர் மறையாக அருளுகிறார்
விளக்கின் முன் இருள் போலே
காட்டுத் தீயின் முன் பஞ்சுத்துப் போலேயும்
இத் திருமொழி ஒதுகையாகிய ஞானத்துக்கு முன் வினைகள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும் —

குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன் தன்னை –
ரஷ்ய வர்க்கம் ஏதேனும் ஒரு படி நின்றாலும் ரஷணம் தான் மிறுக்கு உடைத்தான் ஆகையாலும்
ஒரு குறைகள் வாராது காணும் -என்று 
அதுக்கு உடலாகத் தான் கோவர்த்தன உத்தாரணம் பண்ணின படியைக் காட்டி அருளினான்

ஒன்பது பாட்டிலும் இவருக்கு ஓடின வ்யசனமும்  வாசனையோடு  கழியும் படி 
அஹம் -என்று  ரஷகனான தன்னைக் காட்டி அருளினான் –

—————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading