ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த-ஸ்ரீ பரந்த ரஹஸ்யம்-த்வய பிரகரணம் -உத்தர கண்ட விவரணம் /நிகமனம் –

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லபஸ்  ஸ்ரீ தரஸ் சதா —

அனந்தரம் -இதில் ஸ்வீக்ருதமான சித்தோபாயம்-
தாவதார்த்திஸ் ததா வாஞ்சா தாவன் மோஹஸ் ததஸ் ஸூகம் யாவன் ந யாதி சரணம் த்வாம சேஷாக நாச நம் -என்று –
ஆர்த்தாதிகளான சதுர்வித  அதிகாரிகளுக்கும் சாதாரணம் ஆகையாலே இவர்களில்
கீழ் உபாய ஸ்வீகரணம் பண்ணி நிற்கிறவன் எந்த அதிகாரி என்கிற அபேஷையிலே-
முமுஷூர் வை சரணமஹம் ப்ரபத்யே -ப்ரஹ்மணோ  மஹிமா நமாப் நோதி -என்கிறபடியே
பல விசேஷ பிரார்த்தனா ரூபத்யா வசாயத்தாலே இவனை விசேஷிக்கிறது உத்தரார்த்தம் –

ஆக –
பூர்வார்த்தத்தாலே உபாய ப்ரார்த்தனம் பண்ணிற்றாய் –
உத்தரார்த்தத்தாலே தத் பலமான உபேயத்தை பிரார்த்திக்கிறது என்றது ஆயிற்று  –

நநு –
உபாய ப்ரார்த்தனம் ஆவது –
ஸ்வ இஷ்ட அநிஷ்ட  ப்ராப்தி பரிஹாரங்களுக்கு நீயே சாதனமாக வேணும் என்கிற அபேஷை இறே –
ஸ்வர்க்க காமனாய் -ஜ்யோதிஷ்டோமத்தில் இழியுமோ பாதி -நமக்கு ப்ராப்யமான இஷ்டம் இன்னது –
பரிஹார்யமான அநிஷ்டம் இன்னது -என்று பிறந்த நிர்ணயத்துக்கு அனந்தரம் இறே
தத் அநு குணமான உபாய ஸ்வீகாரத்தில் இழிவது –

இனி பிராப்ய அபேஷை-  பண்ணுகிறது
தர்மார்த்தாதிகளான ப்ராப்யாந்தரங்களில் காட்டில் வ்யாவ்ருத்தி சொல்லுகைக்காகவோ –
அங்கன் அன்றியிலே உபாயதயா ஸ்வீக்ருதனானவனுக்கு ப்ராப்ய விசேஷ ஜ்ஞானம் பிறக்கைக்காகவோ-
ப்ராப்ய விசேஷத்தை பிரார்த்தித்தால் அன்றி  அத்தைத் தாரான் என்றோ -என்னில் –
உபாய ஸ்வீகார பூர்வ பாவியான முமுஷூத்வத்தாலே-தர்ம காமாதிகளில் காட்டில் வ்யாவ்ருத்தி சித்திக்கையாலும்
ஸ்வீக்ருத உபாயம் சர்வஜ்ஞமாகையாலும் -ஸ்வீக்ருதனுமாய் சர்வஜ்ஞனுமாய்  வைத்து ப்ராப்யபேஷா ப்ரதீஷனாய்
இருக்கைக்கு ஒரு பிராப்ய அபேஷை பண்ண வேண்டா –
இனி பிராப்யத்தை தர வேணும் என்கிற அபேஷிக்கை ப்ராப்ய அபேஷை ஆகில் உபாய ஸ்வீகார ரூபமான
பூர்வார்த்தத்துக்கு பிரயோஜனம் இல்லை –

ஆகையாலே –
பூர்வார்த்த அனுசந்தானம் பண்ணுதல் –
உத்தரார்த்த அநு சந்தானம் பண்ணுதல் ஒழிய
உபய அநு சந்தானம் பண்ணுகை புனருக்தமாய்த் தலைக் கட்டுமே என்னில் –
பூர்வார்த்த அநு சந்தான மாத்ரத்தாலே உபேய லாபம் ஆர்த்தமாய் வருமே யாகிலும் –
அத்யாத்ம யோகாதி கமேன தேவம் மத்வா தீரோ ஹர்ஷா சோகௌ ஜகாதி -என்றும் –
தரதி சோகமாத்மவித்-என்றும்
முமுஷூவுக்கு பலம் சொல்லுகிற இடத்தில்
1-சோக நிவ்ருத்தி மாத்ரத்தைப் புருஷார்த்தம் ஆக்குவது  –
2-தத் ஸூக்ருத துஷ்க்ருதே தூ ந தே-என்று புண்ய பாப ரூப கர்ம  விமோசன மாத்ரத்தைப் புருஷார்த்தம் ஆக்குவது –
3-தஸ்ய தாவதேவ சிரம் யாவன்ன விமோஷ்யே அத சம்பத்ச்யே-என்று தேக விமோசனத்தைப் புருஷார்த்தம் ஆக்குவது
4-விஜ்ஞான சாரதிர் யஸ்து மன ப்ரக்ரஹவான் நர -சோத் வன  பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்று
ஒரு தேச விசேஷ ப்ராப்தியைப் புருஷார்த்தம் ஆக்குவது –
5-ஏஷ சம்ப்ரசாதோஸ் மாச்ச ரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதி ரூப சம்பாத்திய ஸ்வேன ரூபேணாபி நிஷ்பத்யதே -என்கிறபடியே
ஸ்வ ஸ்வரூப பிராப்தியை புருஷார்த்தம் ஆக்குவது –
6-நிரஞ்சன பரமம் சாம்யமுபைதி -என்று பரம சாம்யாபத்தியைப் புருஷார்த்தம் ஆக்குவது –
7-ஏதமா நந்த மயமாத்மான முபசங்க்ரா மதி -என்று பகவத் சாமீப்யத்தைப் புருஷார்த்தம் ஆக்குவது
8-சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபச்சிதா -என்று பகவத் குண அநு பவத்தைப் புருஷார்த்தம் ஆக்குவது –
9–விஜ்ஞானா தா நந்தோ ப்ரஹ்ம யோநி -என்றும் –
ரசம் ஹ்யேவாயம் லப்த்வா நந்தி  பவதி -என்று
பகவத் அநு பவ ஜனிதமான பரமானந்தத்தைப் புருஷார்த்தம் ஆக்குவது –
10-யேன யேன தாதா கச்சதி தேன தேன சஹ கச்சதி -என்று பகவத் அநு வ்ருத்தியான கைகர்யத்தைப் புருஷார்த்தம் ஆக்குவதாய்-

ஆக இப்படி சோக நிவ்ருத்தி யாதிகளைப் புருஷார்த்தமாகச் சொல்லுகிற தத் தத் வாக்ய விசேஷங்களிலே
சரம புருஷார்த்த நிஷ்கர்ஷம் பிறவாமையாலே-
அந்த புருஷார்த்த விசேஷத்தை பிரகாசிப்பிக்கைக்காக உத்தரார்த்தம் உதிக்கையாலும் –
உபாய ஸ்வரூப விசேஷ பிரத்யாயகமாக பூர்வார்த்தம் உதிக்கையாலும் பௌநக்ருத்யம் இல்லை  –

உபேயதயா வர்ணமும் உபாயதயா வரணுமும் இறே இரண்டுக்கும் க்ருத்யம்-
உபேயத்வேன வரித்த போது உபாய அபேஷை யுண்டு –
உபாயத்வேன வரித்த போது உபேய அபேஷை யுண்டு –
ஆகையால் உபயமும் அபேஷிதமாகக் கடவது –

உபேயத்வ வரணம் ஆவது –
ஈஸ்வரன் திருவடிகளிலே கைங்கர்யத்தை உபேயமாக அத்யவசிக்கை –
அத்யாவசாய த்வயமும் இவ்வதிகாரிக்கு அபேஷிதம்-
அநந்ய சாதனத்வ சித்திக்கு  உபாயத்யவசாயம் வேணும் –
அநந்ய போகயத்வ சித்திக்கு உபேயயாத்யவசாயம் வேணும்
உபாய விசேஷாத்யாவசாயம்  பிரயோஜனாந்தர பரனுக்கும் யுண்டாகையாலே   தத் வ்யாவ்ருத்தி சித்திக்கு
உபேயாத்யவசாயம் வேணும் –
சாதகனுக்கும் உபேயாத்யவ சாயம் யுண்டாகையாலே  தத் வ்யாவ்ருத்தி சித்திக்கு உபாயாத்யவசாயம் வேணும்
சாதகன் தானே இஷ்டம் மநிஷாண  அமும் மநிஷாண சர்வம் மநிஷாண-என்று உபாய விசேஷத்தை அபேஷியா நின்றானே –
தைத்ய சைன்ய பராஜிதா -சரணம் த்வாம நுப்ராப்தா -என்று பிரயோஜனாந்தர பரனுக்கும் உபாயத்யவசாயம் யுண்டே –
தத் வ்யாவ்ருத்தி சித்திக்கும் அந்தரிஷக தஸ் ஸ்ரீ மான் -என்றும் –
ச து நாக வரஸ் ஸ்ரீ மான் -என்றும் சொல்லுகிறபடியே
உபாய உபேயாத்யவசாயங்கள் ஆகிற மகதைஸ்வர்யம் இவ்வதிகாரிக்கு அபேஷிதம் ஆகையாலே
அவை இரண்டையும் இரண்டு வாக்யத்தாலும் சொல்லுகிறது –
அத்தைப் பற்றி இறே -முமுஷூர் வை சரணமஹம் ப்ரபத்யே -என்று ஸ்ருதம் ஆயிற்றதும் –

—————————————————————————————–

ஸ்ரீ மதே -சப்தார்த்தம் –
கீழ் பிரபத்யே -என்று
ஸ்வீக்ருதமான உபாயத்தினுடைய பலமான கைங்கர்யத்தை அபேஷிக்கக் கடவதாகக் கொண்டு –
அதுக்கு பிரதி சம்பந்தி விசேஷாதீநத்வம்  யுண்டாகையாலே –
அந்த பிரதி சம்பந்தியினுடைய பூர்த்தி பூரண பூர்வகமாக அநு சந்திக்கிறது –

அதில் -ஸ்ரீ மதே -என்கிற பதம் -கைங்கர்ய பிரதிசம்பந்தியைப் பூரிக்கிறது –
சேஷத்வ பிரதி சம்பந்தி ஒரு மிதுனமானவோபாதி -கைங்கர்ய பிரதிசம்பந்தியும் ஒரு மிதுனமாய் இறே இருப்பது –
ஆகையாலே -பெரிய பிராட்டியாரோடு நித்ய சம்யுக்தனானவனுக்கு -என்கிறது –

வைகுண்டே து பரே லோகே ஸ்ரீ ரியா ஸார்த்தம் ஜகத்பதி -ஆஸ்தே விஷ்ணுர சிந்த்யாத்மா பக்திர் பாகவதைஸ் சஹ -என்கிறபடியே
ஒரு விபூதியாக மிதுன போக பரராய் இறே இருப்பது –
ஆகை இறே -அத்திரளின் நின்றும் பிரிகதிர் பட்டுத் தொடர்ந்து அடிமை செய்ய வந்தவர்களும் –
பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா கிரிசா நுஷூ ரம்ச்யதே அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்றதும் –
அந்த இளைய பெருமாளோபாதி அடிமை செய்ய ஆசையுடையாரும் –
கோலத் திரு மா மகளோடு கூடின உன்னைக் கூட வேணும் -என்றதும் –

யுவாஸ் குமார -ஏஷ வாமனி -ஏஷ பாமனி-என்றால் போலே ஓதுகிற
பும்ஸாம் திருஷ்டி சித்தாபஹாரியான அவனுடைய வடிவு அழகையும்
சீலாதி குண விசேஷங்களையும் தலை நீர்ப் பாட்டிலே அநுபவிப்பது -அநு பவித்தவள் உன்மத்தை யாவது –
அவள் தன்னுடைய ஒரோ அவயவங்களிலே ஆழம்  கால் பட்டு –
அல்லி மலர் மகள் போக மயக்குகளாய்-அவன் தானும் உன்மத்தனாவதாய்
பராந்த மிதுனமாய் துவண்டு செல்லும் போது சிசிரோபசாரம் பண்ணுவது -வ்யஜனாதிகளைப் பரிமாறுவது –
படிக்கம் இடுவதாய்ப் போலே காணும் மிதுனத்துக்குச் செய்யும் கிஞ்சித் காரமாய் அறுவது –
ஆகையாலே ஒரு மிதுனமே ப்ராப்யம் –

இவற்றிலே அந்ய தமத்தை ப்ராப்யமாக நினைக்கை யாவது -விநாசத்தோடே தலைக் கட்டுகை-
பிரிக்கை இறே தங்கை மூக்கறுப் புண்டதும்-தமையன் தலை அறுப் புண்டதும்  –
பரிமளம் பூவை ஸ்லாக்கியம் ஆக்குமாப் போலேயும் -பிரபை மாணிக்கத்தை ஸ்லாக்கியம் ஆக்குமா போலேயும் –
இவளாலே இறே அவனுக்கு போக்யத்வம் –
ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ்நுதே -என்னக் கடவது இறே –
சேஷிக்கு அதிசயத்தைப் பண்ணுகை இறே சேஷ வஸ்துவுக்கு க்ருத்யம் –
இவளாலே அவனுக்கு நிறம் யுண்டாகை யாவது  –
விஷ்ணு பத்னீ -விஷ்ணோஸ் ஸ்ரீரீ -என்கிறபடியே இத்தலையில் சேஷத்வம் பிரகாசிக்கை-
இந்த ஸ்ரீ -சப்தத்தாலே
கைங்கர்ய பிரதி சம்பந்தி தயா முக்த நித்யாதிகளாலே சேவிக்கப் படா நின்றாள் என்கிற ஆகாரமும்
ஸ்வ போக சௌக்யத்தாலே அவனை சேவிக்கும் என்கிற ஆகாரமும் தோற்றுகிறது –
ஆக –
இப்பதத்தாலே -பிராட்டியும் சர்வேஸ்வரனும் சேர விருந்த சேர்த்தியிலே
அடிமை செய்யக் கடவன் என்னும் அர்த்த விசேஷம் சொல்லிற்று ஆயிற்று –

—————————————————————————————-

நாராயண -சப்தார்த்தம் –
அவ்வடிமை தான் அநுபவ ஜனித ப்ரீதி யூற்றாக விளையுமதாகையாலும் –
அநுபவ ஜனித ப்ரீதி தான்  அநுபாவ்ய விஷயாதீனம் ஆகையாலும்  –
அந்த கைங்கர்யத்துக்கு அடியான ப்ரீதிக்கு நாற்றங்காலான ஸ்வரூப ரூப குண விபூதி பூர்த்தியைச் சொல்லுகிறது –
நாராயண பதம் –

அஸ்நுதே காமான் –லப்த்வா நந்தி பவதி –இமான் லோகன் -அநு சஞ்சரன்-சதா பஸ்யந்தி-என்கிறபடியே
ஸ்வரூப ரூப குணாத்யனுபவம் ப்ரீதிக்கு ஹேதுவாகக் கடவது –
ப்ரீதி கைங்கர்ய ஹேதுவாகக் கடவது -இல்லையாகில் -ஸ்ரீ மதே -என்கிற இடத்தில் சதுர்த்தியே அமையும் –
கைங்கர்ய பிரகாசகமாகைக்கு நாராயண பதம் வேண்டாவே –
ஸ்வரூப ரூப குண விபூதிகள் நாலுக்கும் வாசகம் ஆகையாலே
அநு பாவ்ய விஷய பூர்த்தியைக் காட்டக் கடவது நாராயண பதம் –

நார சப்தம் –
ரூப குண விபூதிகளுக்கு வாசகம் ஆகிறது –
அயன பதம் -இவை மூன்றுக்கும் கொள்கலமான ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது –
அந்த ஸ்வரூபத்தைப் பார்த்தால் -சத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -என்கிறபடியே
அசித்தில் காட்டில் அத்யந்த வ்யாவ்ருத்தமான த்ரிவித ஆத்ம ஸ்வரூபத்திலும் அத்யந்த வ்யாவ்ருத்தமாய் இருக்கும் –
ரூபத்தைப் பார்த்தால் -ந பூத சங்க சம்ஸ்தா நோ தேஹோச்ய  பரமாத்மன –என்று அப்ராக்ருதமாய் இருக்கையாலும் –
அஸ்த்ர பூஷணாத் யாயத்தில் சொல்லுகிறபடியே சகல ஜகதா தாரமாகையாலும்
ப்ராக்ருதமுமாய் ஆதேயமுமான சர்வ சேதன சரீரங்களிலும் அதிகமாய் இருக்கும் –

அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யுர் விசோகா விஜிகத்சோ அபிபாசஸ்  சத்யகாமஸ் சத்யசங்கல்ப –
யஸ் சர்வஜ்ஞஸ் சர்வவித் –
ஜ்ஞான சக்தி பலைச்வர்ய வீர்ய  தேஜாம்ச்ய சேஷத-பகவச் சப்த வாச்யானி விநா ஹேயைர் குணாதிபி-
ஸூ வீர்ய சக்த்யாதி குணைக ராசி பர  பராணாம் சகலா ந யாத்ரா க்லேசாத யஸ் சந்தி-என்கிறபடியே
ஹேய குணா சம்ஸ்ருஷ்டமாய்
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்கிறபடியே நிஸ் சீமமுமாய் –
நேதி நேதி என்கிறபடியே அபரிச்சின்னமுமான கல்யாண குணங்களும் ஹேய குண சம்ஸ்ருஷ்டமுமாய்
பரிச்சின்னமுமான சர்வ சேதன குணங்களிலும் அதிகமாய் இருக்கும் –
யஸ் யச்சாயாம்ருதம் –யஸ்ய ம்ருத்யு –பாதோச்ய விஸ்வா பூதானி த்ரிபாத் ச்யாம்ருதம் திவி -என்கிறபடியே
உபய விபூதியும் விபூதி கோடி கடிதையா கையாலே பரிச்சின்ன விபூதிகளில் அதிகையாய் இருக்கும் –

ஆக –
இப்படி சர்வ பிரகாரத்தாலும் சர்வாதிகனாய் –
பதிம் விச்வச்ய-பதிம் பதீ நாம் -இத்யாதிகளான சுருதி சதங்களில் சொல்லுகிறபடியே
சர்வ ஸ்வாமியான சர்வேஸ்வரன் நாராயண சப்தத்திலே கைங்கர்ய பிரதி சம்பந்தி தயா சொல்லப் படுகையாலே
சர்வம் பரவசம் துக்கம் -சேவா ஸ்வ வருத்திற் வ்யாக்யாதா –அபார ப்ரேஷ்ய பாவாத் -என்கிற  வாக்யங்களில்
சொல்லுகிற சேவா நிஷேதம்  அசேவ்ய சேவா விஷயம் –
இல்லையாகில் -ததுபாசி தவ்யம் -ததன்வேஷ்டவ்யம் -தத் வாவவிஜி ஜ்ஞாசி தவ்யம் -சோன்வேஷ்டவ்ய-
ஆத்மா நாமேவ லோகமுபாசீத-காரணந்து  த்யேய-
ச வை  வேதி தவ்ய -த்யேயஸ் சதா -த்யேயோ நாராயணஸ்  சதா -வா ஸூ தேவ தருச்சாயா நாதி சீதா ந கர்மதா-
நரகாங்கா ரசமநீ சா கிமர்த்தம் ந சேவ்யதே-என்று பகவத் சேவா விதாயகமான வாக்யங்களோடு விரோதிக்கும்
பதி வ்ரதைக்குப் புருஷாந்தர ஸ்பர்சம் அன்றோ த்யாஜ்யமாய் அறுவது -ஸ்வ பர்த்ரு ஸ்பர்சம் அன்றே –

——————————————————————————-

ஆய சப்தார்த்தம் –
அனந்தரம் -பகவத் ஸ்வரூப ரூப குண விபூத்யாதிகளை அநுபவித்து-
அந்த பகவத் அநுபவ ஜனித ப்ரீதி பிரகர்ஷம் பிரேரிக்க
ஹாவு ஹாவு ஹாவு -அஹமன்ன மஹமன்ன மஹமன்னம் – -என்றும்
யேன யேன ததா கச்சதி தேன தேன சஹ கச்சதி -என்றும்
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த -என்றும் –
சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
விரோதி நிவ்ருத்தி பூர்வகமாக ஒரு தேச விசேஷத்திலே போய் வாசிகமாகவும் காயிகமாகவும் பண்ணும்
கிஞ்சித் காரங்களை பிரார்த்திக்கிறது –
ஆய -என்கிற சதுர்த்தியாலே –

அபிமத லாபம் விரோதி நிவ்ருத்தி பூர்வகமாக வன்றி உதியமாகையாலே இங்குப் பண்ணுகிற
கைங்கர்ய அபேஷையாலே விரோதி நிவ்ருத்தியும் ப்ரர்த்திக்கையாக கடவது –
இரண்டும் அபேஷிதம் ஆகில் இரண்டையும் பிரார்த்தியாதே கைங்கர்யத்தையே பிரார்த்திப்பான் என் என்னில் –
கைங்கர்ய சித்தியே பரம பிரயோஜனம் –
அதுக்கு பிரதி பந்தகம் ஆகையாலே விரோதியினுடைய நிவ்ருத்தி அபேஷிதம்  ஆகிறது இத்தனை போக்கி
ஜரா மரண மோஷார்த்தமாக இழிந்த கேவலனைப் போலே ஸ்வயம் உத்தேச்யம் அல்லாமையாலே வந்த
அப்ராதான்யம் தோற்ற அத்தை எடாது ஒழிகிறது-
விரோதி நிவ்ருத்தியை அவன் ஸ்வயம் பிரயோஜனமாக நினைத்து இருக்கும் –
இவன் கைங்கர்ய விரோதிதயா த்யாஜ்யம் என்று நினைத்து இருக்கும் –
சம்சார பயம் இறே அவனுக்கு உள்ளது –
பகவத் ப்ராவண்யம் உள்ளது இவனுக்கே இறே
சரம ஸ்லோகத்தில் விரோதி நிவ்ருத்தியை பிரதானமாகச் சொல்லிற்று -ஸ்வயம் உத்தேச்யமாய் அன்று –
ஆத்மாவுக்கு ஸ்வா பாவிக தர்மமான கைகர்யம் பிரகாசிக்கைக்கு நடுவில் இடைச் சுவர் போக வேண்டுவது
என்னும் நினைவாலே –

இச் சதுர்த்தி -தாதர்த்யே சதுர்த்தியாய் -சேஷத்வ வாசியாய் அற்றதே யாகிலும்
கீழ் பண்ணின ப்ரபத்திக்கு சேஷத்வ மாத்ரம் பலம் அல்லாமையாலே
அகிஞ்சித் கரஸ்ய சேஷத்வ அநு பபத்தி -என்கிறபடியே சேஷத்வ பலமான சேஷ வ்ருத்தியைச் சொல்லுகிறது
ஜ்ஞானம் இல்லாத வன்று ஸ்வரூபம் -அசந்நேவ-ஆமோபாதியும்-
சேஷ வ்ருத்தி இல்லாத போது அந்த ஜ்ஞானம் தான் அசந்நேவ -ஆமோபாதியும்
சேஷ வ்ருத்தி இல்லாத போது சேஷத்வமும் அசத் கல்பமாகக் கடவது
ஆக விறே மகாரத்துக்கு மேலில் சதுர்த்தி விவரணம் ஆயிற்று –
சேஷத்வம் இங்கே சித்தியா நிற்கச் செய்தேயும் ஒரு தேச விசேஷம் தேடித் போக வேண்டுகிறது —
சேஷ வ்ருத்தி சித்திக்காக இறே –
உபாய ச்வீகாரத்துக்கு முன்னே உண்டே சேஷத்வ ஜ்ஞானம் -ஆகை யன்றோ திரு மந்த்ரத்துக்கு பின்பு த்வயம் ஆக வேண்டிற்று –
ஆகையாலே சேஷத்வ ஜ்ஞானம் முற்படக் கடவது -அனந்தரம் -உபாய ஸ்வீகாரமாகக் கடவது
அனந்தரம் கைங்கர்ய ரூபமான ப்ராப்யத்தின் யுடைய ப்ரார்த்தனமாகக் கடவது –

ப்ராப்ய அபேஷைக்கு அனந்தரம்  அன்றோ தல்லாப ஹேதுவான உபாய ச்வீகாரம் பண்ணுவது –
ஆனால் -அர்த்தார்த்தீ ராஜ குலம் கச்சத் -மந்தாக்னிர் நாம்பு பிபேத்-ஜ்யோதிஷ்டோ மேன ஸ்வர்க்க காமோ யஜேத-
என்கிறாப் போலே உபேய அபேஷை யுடையவனுக்கு உபாய அபேஷை யாகையாலே
உத்தரார்த்தம் முற்பட்டு பூர்வார்த்தம் பிற்பட வேண்டாவோ -என்னில்
வ்யுத்பத்தித்த தசையில் அது வேண்டுவது –
அனுஷ்டான தசையில் மாறாடி இருக்கும் -ஜ்யோதிஷ்டோமாநுஷ்டான அனந்தரம் அன்றோ ஸ்வர்க்க சித்தி –

ஆக –
இச் சதுர்த்தியாலே சேஷத்வத்தைப் பூரித்து தரும் சேஷ வ்ருத்தியை பிரார்த்திக்கிறது –
இது பிரார்த்தனா ரூபம் என்னும் இடத்தில் பிரமாணம் என் என்னில்
கீழ் உபாய ஸ்வீகாரம் பண்ணினவன் லாபத அபிமதனாய் இருக்குமவன் அல்லாமையாலும் –
அபிமத பல லாப தசை இல்லாமையாலும்
இவ்வர்த்த விவரணம் பண்ணின பாஷ்யகாரர் -பவானி -என்று பிரார்திக்கையாலும்
பிரதம ஆச்சார்யரான நம் ஆழ்வார் -அடிமை செய்ய வேண்டும் -என்று பிரார்த்திக்கையாலும்
பிரார்தனா ரூபமாகக் கடவது –

ஆகையாலே கைங்கர்ய ப்ரார்த்தனம் பண்ணுகிறதாய் இப்பதம்
ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்று
கைங்கர்ய விசேஷணமாகச் சொல்லுகிற சர்வ காலாதி சப்தங்களாலே அந்த கைங்கர்ய பிரகாரத்தைச் சொல்லுகிறது –

சர்வ கால சப்தத்தாலே –
ந ச புனராவர்த்ததே ந ச புனராவர்த்ததே -அனாவ்ருதிஸ் சப்தாத் அனாவ்ருதிஸ் சப்தாத் -என்கிறபடியே
யாவதாத்மபாவி அனுபாவ்யமான போகத்தை பிரார்த்திக்கிறது –
இத்தாலே -கதாகதம் காமகாமா லபந்தே –கதவா கதவா நிவர்த்தந்தே சந்திர ஸூ ர்யாதயோ க்ரஹா -என்கிறபடியே
தேசாந்தரத்திலே த்ரவ்யத்தை ஆர்ஜித்து -தேசாந்தரத்திலே அறவிற்றிட்டு ஜீவித்து -மாண்டவாறே தேசாந்தரம் போவாரோபாதி
இங்கே ஆர்ஜிதமான புண்யத்தை அனுபவித்து போகாவசானத்திலே -யதேதமாகாசம்  ஆகாசாத் வாயும் வாயுர் பூத்வா தூமா பவதி –
தூமா பூத்வா அப்ரம் பவதி அப்ரம் பூத்வா மேகோ பவதி மேகோ பூத்வா ப்ரவர்ஷதி -என்று
சொல்லுகிற க்ரமத்திலே புனராவ்ருத்தி லஷணமான ஸ்வர்க்காத்யை ஸ்வர்யா போகத்தில் காட்டில் வ்யாவ்ருத்தி சொல்லிற்று –

சர்வ தேச சப்தத்தாலே –
திவ்ய வேச்மம் -திரு மா மணி மண்டபம் -திவ்யோத்யானம் தொடக்கமான பரம பதத்தில் போக ஸ்தானங்களோடு-
ஆமோத பிரமோத சம்மோத ரூபமான வ்யூஹ ஸ்தானங்க ளோடு –
லீலா விபூதியில் வ்யூஹ  விபவ அர்ச்சாவதாராதி ஸ்தானங்களோடு வாசி அற
தஸ்ய சர்வேஷூ லோகேஷூ காமசாரோ பவதி –இமான் லோகன் காமான் நீ காம ரூப்ய நு சஞ்சரன் -என்கிறபடியே
தேச பரிச்சேதம் இல்லாதபடி அடிமை செய்யப் பெறுவேனாக வேண்டும் என்கிறது –
இத்தால் தேச பரிச்சின்னமான கேவலனுடைய போகத்தை வ்யாவர்த்திக்கிறது –
அதாவது -சாம்சாரிகமான சப்தாதி விஷயங்களின் யுடைய அனுபவம் –
கர்ம ஜனித சம்சார வாச வர்த்திகளான ப்ரஹ்மாதிகளுக்கே போக்யமாய் இருக்கையாலும் –
ஆத்மானுபவ ஸூகத்தைப் பற்ற அதி ஷூத்ரமாய் இருக்கையாலும் சப்தாதி விஷயங்களில் அன்வயம் இல்லை –
ஏகாந்தி நஸ் சதா  ப்ரஹ்மன் யாயி நோ யோகி நோ ஹி தேஷாம் தத் பரமம் ஸ்தானம் யத் வை பஸ்யந்தி ஸூ ரய-என்று
அநந்ய பிரயோஜனரான பரமை காந்திகளாலே அநு பாவ்யமான அபரிச்சின்ன பகவத் அனுபவத்தில் அன்வயம் இல்லாமையாலும்
அணு பரிமாணமான ஆத்மாவே போக்யமாய் இருக்குமே -ஆகையாலே அவ்வாத்மா னுபவம் தேச பரிச்சின்னம் –

சர்வ அவஸ்தா சப்தத்தாலே –
கீழ்ச் சொன்ன ஐஸ்வர்யம் போலே நஸ்வரம் இன்றிக்கே யாவதாத்மா பாவியாய்
கைவல்யம் போலே சங்குசிதம் அன்றியிலே -சர்வ தேச அநுவ்ருத்தமாய் இருந்ததே யாகிலும்
நித்ய அக்னி ஹோத்ரம் போலே போகோபரதி கர்ப்பமாய் இருப்பன சில கால விசேஷங்களும் இடைவிடலாம் –
அங்கன் அன்றியிலே அந்தரங்க தசையோடு  பஹிரங்க  தசையோடு வாசி அற ஒரு கால கலையும் வந்த்யை யாகாதபடி
அடிமை செய்யப் பெறுவேனாக வேணும் -என்கிறது –
அழகு ஓலக்கம் கொடுக்கும் போதோடு நாச்சிமாரும் தேவருமாய் –
தென்றலும் பிற்காலிக்க வேண்டும்படியான தசையோடு வாசி அறத்-
திரு அநந்த ஆழ்வானோபாதி அடிமை செய்ய வேணும்   –
ஓலக்கம் கொடுக்கும் போது சத்ர சாமராதி பாணியாயும்-
அந்தரங்க தசையில் படுக்கை படிக்கம் ஓட்டுப் பெட்டில் காளாஞ்சி
லீலா ஸூகம் தொடக்க மானவையும் இடை விடாமல்  அடிமை செய்யக் கடவனாய் இறே இருப்பது முக்தன் –

இத்தால் ஒருகால்  ஆத்மா நம் வா ஸூ தேவாக்யம் சிந்தயன்-என்கிறபடியே -ஸ்வ அனுபவ வைபவத்தாலும் –
ஸ்ரீ ஸ்தன சம்ச்லேஷ அநுபவத்தாலும் –
அஹம் அன்னம் என்கிறபடியே பரம போக்ய பூதமான நித்ய முக்தருடைய ஸ்வரூப அனுபவத்தாலும்
பரமானந்தியாகா நிற்கச் செய்தேயும் –
ச ஏகாகீ ந ரமேத -ப்ருசம் பவதி  துக்கித -குரோத மாஹாரயத்தீவ்டம் –கோபச்ய வசமேயிவான் -என்கிறபடியே
ஸூரிகளோபாதி தன்னோடு அவர்ஜ நீய சம்பந்தம் யுடையார் 
சில சேதனர் கரண களேபர விதுரராய்க் கிடக்கிற படியைக் கண்டு உண்டது உருக்காட்டாது ஒழிவது-
கரண களேபரங்களைக் கொடுத்தாலும் தாபத்ரய தப்தராய் நோவுபடுகிற படியைக் கண்டு அவர்கள் தாம் வந்து
சாந்த்வனம் பண்ண வேண்டும்படி வெறுப்பது –
அவை பண்ணுகிற  பகவதபசாராதி களைக் கண்டு இரக்கத்துக்கு உறுப்பான ஹ்ருதயத்தை க்ரோதத்துக்கு இடமாக்குவதாய்
லீலா விபூதி சம்பந்தத்தால் ஒரு தலை -தோதவத்தியும் -பெரியாழ்வார் -4-8-1-ஒரு தலை விழுப்புமான ஈஸ்வரனுடைய 
போகத்தில் காட்டில் -போக மாத்ர   சாம்ய யுக்தனான முக்தனுடைய போகத்துக்கு வ்யாவ்ருத்தி சொல்லிற்று ஆயிற்று –

சர்வ வித சப்தத்தாலே –
நிவாஸ சய்யா ஆசனம் பாதுகாம் ஸூ கோபதா நவர்ஷாத பவாரணாதிபி–
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காதனமாம் நின்றால் மரவடியாம் –என்கிறபடியே ஆதர அநு ரூபமாக –
ச ஏகதா பவதி த்விதா பவதி த்ரிதா பவதி சத்தா பவதி சஹச்ரதா பவதி -என்கிறபடியே அநேக விக்ரஹ பரிக்ரஹம் பண்ணி –
அஹம்  சர்வம் கரிஷ்யாமி -என்று இளைய பெருமாள் சத்திர சாமர பாணிகள் ஆவது –
கநித்ரபிடகாதரராவது  -பலாஹரணாதிகளைப் பண்ணுவது -சாலா சந்நிவேசாதிகளைப் பண்ணுவது –
குஸூம சயநாதிகளைப் பண்ணுவது -கையும் வில்லுமாய் நோக்குவதாய் –
படை வீட்டில் பெருமாள் பரிகார வர்க்கம் செய்தது அடையத் தாமே செய்தாப் போலே
-நானும் எல்லா வகைப் பட்ட அடிமைகளையும் செய்யப் பெறுவேனாக வேணும் என்று பிரார்த்திக்கிறது –

இத்தாலே வெறும் முலையாலே அடிமை செய்யும் நித்ய அநபாயினி யான பிராட்டியுடைய போகத்தில் காட்டில்
வ்யாவ்ருத்தி சொல்லிற்று ஆயிற்று –
சேதனனுடைய ஸ்வரூபத்தோடு போகத்தோடு கிஞ்சித் காரத்தோடு வாசி அற அத்யந்த வ்யாவ்ருத்தமாய் இருக்கும் –
பகவச் சேஷத்வம் அவளுக்கு ஸ்வரூபம் -மிதுன சேஷத்வம் இவனுக்கு ஸ்வரூபம்
பகவத் போகமே அவளுக்கு உள்ளது -அவளும் அவனுமான சேர்த்தி இவனுக்கு போக்யம்-
ஸ்தனதடாதிகளாலே பண்ணும் கிஞ்சித் காரம் அவளுக்கு உள்ளது –
இவனுக்கு மிதுன விஷயமான சர்வவித கிஞ்சித் காரமும் உண்டு   –

உசித சப்தத்தாலே –
சர்வ காலங்களிலும் சர்வ தேசங்களிலும் சர்வ அவஸ்தைகளிலும்-சர்வ வித கிஞ்சித்காரமும் பண்ணக் கடவேன்
என்கிற சங்கல்பமே இவனுக்கு உள்ளது –
அனுஷ்டிக்கும் இடத்தில் -க்ரியதாம் -என்கிறபடியே -அவன் திரு உள்ளத்துக்கு யாதொன்று அநு கூலமானது –
அது அனுஷ்டேயம்-என்று  ஸ்வ இச்சா வ்யாவ்ருத்தமான கைங்கர்யத்தைச் சொல்லுகிறது –
அதாவது மரவடிகளோ பாதி திருவடிகளிலே கிடக்க்கவுமாய் –
மாலையோபாதி திரு முடியில் ஏறவுமாய்-
இளைய பெருமாளோ பாதி கூடப் போகவுமாய்-
ஸ்ரீ பரத ஆழ்வானோ பாதி தலையிலே முடி வைக்க்கவுமாய் இருக்கை –
இது இறே பாரதந்த்ர்யத்துக்கு எல்லை நிலம் —
யாதொன்று திரு முக மலர்த்திக்கு உறுப்பாய் அறுவது -அது இறே கைங்கர்யம் ஆவது –

ஆக -இத்தால் -நெடுநாள் போக விரோதியான ஷய ரோகத்தாலே நொந்தவன்
ஒரு சித்த ஔஷதத்தைப் பெற்று நோய் விட்டுக் குளிக்குமோ பாதி
பகவத் பிரசாதம் ஆகிற பரம பேஷஜ வைபவத்தாலே –
சாம்சாரிகமான தடை யறக் கழிந்து -அழுக்குக் கழற்றின மாணிக்கம் போலே அத்யுஜ்ஜ்வலனாய்
அர்ச்சிராதி கதியாலே பரமபதம் ஆகிற திவ்ய தேசத்திலே புக்கு –
நிரந்தர பகவத் அனுபவ ஏக யாத்ரியான நித்ய ஸூரி சங்கத்திலே அந்ய தமனாய்
கடல் உடைந்தால் போலே கண்ட இடம் எங்கும் திறந்து பாய்கிற பரமபக்தி ரூபா பன்ன ஜ்ஞானத்தாலே
ஈஸ்வரனுடைய ஸ்வரூபத்தோடு ரூபத்தோடு குணத்தோடு விபூதியோடு வாசியற விளாக்குலை கொண்டு அனுபவித்து –
அந்த அனுபவ ஜனித ப்ரீதி பிரகர்ஷத்தாலே  மதுபான மத்தரைப் போலே அக்ரமமாக ஸ்தோத்ர முகனாய்க் களித்து ஆடுவது –
அது தான் போய்த் தலை மண்டி இட்டு கிஞ்சித் காரங்களில் குதூஹலத்தைப் பிறப்பித்து அடிமையிலே மூட்டுவது —
அந்த கிஞ்சித் காரம் தான் நிரவத்ய பர ப்ராப்தே -என்கிறபடியே
அநு பூத அம்சம் அல்பமாய் அநு பாவ்ய அம்சமே விஞ்சும்படியான விஷய வைலஷண்ய வைபவமும் –
அது தன்னையும் விளாக்குலை கொள்ள வற்றான அபி நிவேசாதிசயமும் கை தொட்டு வளர்க்க –
அத்தால் கொள் கொம்பு மூடப் படர்ந்து
ஒரு கால பரிச்சேதத்தை யாதல் –
தேச பரிச்சேதத்தை யாதல் —
அவஸ்தா பரிச்சேதத்தை யாதல் —
க்ரியா பரிச்சேதத்தை யாதல் -சஹியாமையாலே 
சர்வ காலங்களிலும் -சர்வ தேசங்களிலும் -சர்வ அவஸ்தைகளிலும்-பண்ணும் -சர்வவித கைங்கர்யங்களையும்
ப்ரார்த்தித்தாய் நின்றது -ப்ரார்த்த நாயம் சதுர்த்தீ-என்கிற சதுர்த்தியால் –

——————————————————————————————

நம–ஸப்தார்த்தம் –
அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யு –நிர்குணம் நிரஞ்சனம் -என்கிறபடியே ஹேய  நிஷேத்தையும் –
யஸ் சர்வஜ்ஞஸ் சர்வவித் -இத்யாதிகளில் படியே
விலஷண குண யோகத்தையும் சொல்லி –
இப்படி விலஷண குண யுக்தமாய் ஹேய குண ரஹிதமான வஸ்துவே உபாஸ்யம் என்று  
உபாய வஸ்து நிர்ணயம் பண்ணினவோ பாதி
ப்ராப்யமாய் அறுவதும்  வை லஷ்ணய பூரணமாய் ஹேயகந்த ரஹிதமாய் இருக்க வேண்டுகையாலே –
அதில் வைலஷண்ய பூர்த்தியைக் கீழ் அடையச் சொல்லிற்று ஆகையாலே –

அனந்தரமான இந்த நமஸ் சப்தம்
ஹேய கந்த ராஹித்யத்தைச் சொல்லுகிறது –
அதில் போகத்துக்கு ஹேய அந்வயம் யுண்டாவது-
போகய வஸ்துவின் குறையாலே யாதல் –
போக்தாவின் பக்கல் குறையாலே யாதல் இறே-
அதில் இங்குச் சொன்ன போக்யம் சர்வ மங்களாயதநபூதையானே பிராட்டிக்கும் மாங்கள்யகரமாய் –
தான் மங்களா நாம் ச மங்களம்-என்கிறபடியே ஸ்வரூப ரூபாதிகளாலே சர்வ மங்களங்களுக்கும்
அவ்வருகு பட்டு இருக்கையாலே குறை வற்று இருந்தது
இனி போக்த்ருத்வ தோஷமே யுள்ளது -அத்தைக் கழிக்கிறது-அதாவது -அஹங்கார மமகாரங்கள் –

ஸ்வரூப யாதாம்ய ஜ்ஞான ஜனகமான திரு மந்த்ரத்தில் அஹங்கார மமகாரங்கள் நிவ்ருத்தமாய் இருக்க 
இப்போது நிவர்த்யம் ஆகிற அஹங்கார மமகாரங்கள் எவை என்னில் –
இவ்வஹங்கார மமகாரங்கள் மூவகைப் பட்டு இருக்கும் – –

அனாத்மன்யாத்ம பயத்திற் யா அஸ்வே ஸ்வமுடி யா மதி -என்கிறபடியே -அநாத்மாவான தேஹத்தில் ஆத்மபுத்தியும் —
தேக அனுபந்தியான பதார்த்தங்களில் ஸ்வத்வ புத்தியும் -அஹங்கார மாமாகாரமாகக் கடவது

அதுக்கு மேலே -ஸ்வ தந்த்ரோஹம் -என்று தேஹாத் பரமாக ஆத்மாவைப் பிரதிபத்தி பண்ணிப் போரா நிற்கச் செய்தேயும் –
ஸ்வ தந்தரமாக பிரதிபத்தி பண்ணிப் போருவது ஓன்று யுண்டு –
அதுவும் ஒரு அஹங்காரம் -விஷயம் யுண்டாகில் மமதையும் அனுவர்த்திக்கும் இறே

அதுக்கு மேலே கர்ம ஜ்ஞானாதிகளை அனுஷ்டிக்க்கவுமாம் –
ஒரு சாதன விசேஷ ஸ்வீகாரம் பண்ணவுமாம்-அவற்றுக்கு அனுஷ்டாதா நான் -என்னுடைய அனுஷ்டானம் இவை -என்று
பிறப்பான சில அஹங்கார மமகாரங்களும் உள-

இப்படி மூன்று வகைப்பட்ட அஹங்கார மமகாரங்களும்  பிரதம அஷரத்திலே
சரம பதத்தாலும் –
அதில் விபக்தி விசேஷத்தாலும்-
அனந்தர பதத்தாலும் வ்யாவ்ருத்தம் ஆயிற்று –

இனி இவை மூன்றுக்கும் மேலே -காகாஷி ந்யாயத்தாலே ஒரு பத விசேஷத்தாலே வ்யாவ்ருத்தமாய்
போகதச அனுவ்ருத்திக்கும் யோக்யதை யுண்டாய் இருப்பதொரு அஹங்கார மமகாரம் யுண்டு –
அத்தை  வ்யாவர்த்திக்கிறது -இங்கு -அதாகிறது -நான் போக்தா -என்னுடைய போகம் -என்று இருக்கை-

அஹம் அந்நாத-சோஸ்நுதே சர்வான் காமான் -சதா பஸ்யந்தி-போக  மாத்ர சாம்ய லிங்காச்ச-
அதர பிரம்மா சமஸ்நுதே-என்று சொல்லுகிறபடியே –
நேரே குணாதிகளுக்கு அடைய போக்தாவாய் இருக்க -அதுக்கு மேலே குணாத் யனுபவம் ரசித்து ப்ரீதன் ஆனால் 
அந்த ப்ரீதி ப்ரேரிதமாய் வருமதாய் இருக்கும் கைங்கர்யம் -போக்த்ருத்வம் எனக்கு இல்லை -என்று இருக்கை யாவது என்-
போக்த்ருத்வம் இல்லை யாகில் -லப்த்வா நந்தி பவதி -என்கிற ஆனந்தித்வம் இன்றியிலே ஒழியும்-
ஆனந்தித்வம் இல்லாமையாலே அபுருஷார்த்தமுமாம் –

கர்ம அனுஷ்டான தசையில் அகர்த்ருத்வ அனுசந்தானம் –
அதிஷ்டானாம்  ததா கர்த்தா கரணஞ்ச ப்ருதக்விதம் -விவிதா ச ப்ருதக் சேஷ்டா தைவஞ்ச்சைவ வாத்ர பஞ்சமம் -என்கிறபடியே –
ஆத்மாவுக்கு சைதன்ய பிரயுக்தமான பிரயத்ன மாத்ரமேயாய் அதிஷ்டானாதிகளுக்கே கர்த்ருத்வம் ஆகையாலே அங்கு உபபன்னம் –

முக்தன் ஆனால் கர்த்ருத்வாரோபண விஷயமான அதிஷ்டானாதிகள் இல்லாமையாலும் –
சர்வத பாணி பாதம் தத் சர்வ தோஷி சிரோமுகம் சர்வதச சுருதி மல்லோகே சர்வமாவ்ருத்ய திஷ்டதி -என்கிறபடியே –
அதிஷ்டானாதிகளால் கொள்ளும் கார்யத்தை ஸ்வரூபேண  கொள்ள வல்லனாய் –
பிரஜ்ஞயா ஹி விபஸ்யதி-என்றும் –
மனசை வைதான் காமான் பஸ்யன் ரமதே -என்கிறபடியே
அனுபவத்துக்கு வேண்டுவது ஆத்ம தர்ம பூதமான ஜ்ஞான மாத்ரமாகச் சொல்லுகையாலும் அநுபபன்னம் என் என்னில் –
இப்போது அது அன்று நினைக்கிறது –
பதி வ்ரதையான ஸ்திரீக்கு பர்த்ரு சம்ச்லேஷ ஜனித சாரஸ்ய அனுபவம் உண்டாகா நிற்கச் செய்தேயும் –
பர்த்தாவினுடைய முக விகாசமாய் பிரயோஜனம் -அவ்விகாச ஹேது -என்று சம்ச்லேஷாதிகளிலே சங்கம் பிறக்குமோ பாதி
பகவத் குண அனுபவாதிகளிலே –
நான் போக்தா -எனக்கு ரசித்தது -என்று புருஷ போகத்தோ பாதி ஸ்வ தந்த்ரமாய் இருத்தல் –
சாதாரணமாய் இருத்தல் -செய்கை அன்றியிலே –
ஈஸ்வரன் முக மலர்த்தி எனக்கு ஹேது -என்று அவற்றில் சங்கமாய் -முக மலர்த்தியே தனக்கு போக்யமாய் நினைத்து இருக்கை –
அத்தைப் பற்றி இறே -அஹம் அன்னம் -என்று சொல்லி அஹம் அந்நாத -என்றதும் –

————————————————————————————-

நிகமனம் –
ஆக -இவ்வாக்ய த்வயத்தாலும்
ஸ்வரூப  ஜ்ஞானானந்தர பாவியாய் -பத த்வ யோக்தமான உபாய உபேயங்களை ப்ரார்த்தித்தாய் நின்றது –
அதில் பூர்வ வாக்யத்தில் ப்ரபத்யே என்கிற க்ரியா பதம் -அத்யாவசாயத்தைச் சொல்லுகிறது –
அதுக்கு உபேயாத்யவசாய வ்யாவ்ருத்தியைப் பண்ணித் தருகிறது  -உபாய வாசகமான சரண சப்தம் –
அந்த உபாயத்துக்கு சாத்திய உபாய வ்ருத்தியைப் பண்ணித் தருகிறது நாராயண சரனௌ -என்று
அந்த சித்த சாதனத்தில் இழியும் துறையைச் சொல்லுகிறது ஸ்ரீ மத் பதம்
ப்ராப்ய தசா நுவ்ருத்தி விரோதியினுடைய நிவ்ருத்தியைச் சொல்லுகிறது நமஸ் சப்தம்
அவனுக்கு பிராப்யமான கைங்கர்யத்தைச் சொல்லுகிறது சதுர்த்தி –
அந்த கைங்கர்ய பிரதி சம்பந்தியைச் சொல்லுகிறது -நாராயண பதம் –
பிரதி சம்பந்தியைப் பூரித்து தருகிறது ஸ்ரீ மத் பதம் –

ஆக
கைங்கர்ய விரோதி நிவ்ருத்தியையும்
கைங்கர்யத்தையும்
கைங்கர்ய பிரதி சம்பந்தியையும்
பிரதி சம்பந்தி  பூர்த்தியையும்
அத்தைப் பெறுகிற அதிகாரி விசேஷணமான அத்யாவ சாயத்தையும்
அது உபாயாத்வசாயம் என்னும் இடத்தையும்
அந்த உபாயத்தின் யுடைய சித்தத்வத்தையும்
அந்த சித்த உபாயத்திலே மூட்டும் புருஷகாரத் வத்தையும் சொல்லிற்று ஆயிற்று –

பிராட்டியுடைய புருஷகாரத்வத்தையும்
புருஷகார பூதையான அவளுடைய நித்ய யோகத்தையும்
நித்ய யுக்தையான அவளாலே உதிக்கப் பட்ட சீலாதி குண விசேஷங்களையும்
அந்த குண ப்ரகாசகமான விலஷண விக்ரஹ யோகத்தையும்
குண விக்ரஹ விசிஷ்டனுடைய உபாய பாவத்தையும்
அந்த உபாய அவலம்பியான சேதனனுடைய அத்யவசாயத்தையும்
அத்யவசாய விசிஷ்டனுக்கு ப்ராப்யம் ஒரு மிதுனம் என்னும் இடத்தையும்
அந்த ப்ராப்யத்தைப் பூண் கட்டித் தரும் சர்வ ஸ்வாமித்வத்தையும்
சர்வ ஸ்வாமி திருவடிகளிலே கைங்கர்யமே புருஷார்த்தம் என்னும் இடத்தையும்
அதுக்கு விரோதி அஹங்கார மமகாரம் என்னும் இடத்தையும் சொல்லிற்று ஆயிற்று –

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாம் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading