ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த-ஸ்ரீ பரந்த ரஹஸ்யம்-திரு மந்திர பிரகரணம் –

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லபஸ்  ஸ்ரீ தரஸ் சதா —

அவதாரிகை –
ஆக  -சகல சாஸ்திர சங்க்ரஹமாய்-ஜ்ஞாதவ்யங்கள்  அடையத் தனக்கு புஷ்கலமாக யுடைத்தாய் –
அந்ய நிரபேஷமாக சகல அர்த்தங்களையும் சாதித்துத் தரும் வைபவத்தை யுடைத்தாய் —
சாதநாந்தரங்களுக்கும்-ஸ்வ சம்பந்தத்தாலே உந்மேஷ கரமாய்  -சர்வ மந்த்ராந்தரங்களில் காட்டிலும் அதிகமாய் –
ஆசார்யர்களோடு ஆழ்வார்களோடு வேதாந்தங்களோடு ருஷிகளோடு வாசி யற எல்லாராலும்
ஏக கண்டமாக ஆதரிக்கப் படுகிற இம்மந்த்ரம் தான்

ஒமித்யேகாஷரம் நம இதி த்வே அஷரே  நாராயணாயேதி பஞ்சாஷராணி சந்தசா காயத்ரீ சேதி -என்று
எட்டுத் திரு அஷரமாய் மூன்று பதமாய் காயத்ரீ என்ற சந்தசை யுடைத்தாய் இருக்கும் –
ஒமித்யேகாஷரம் -என்று பிரணவத்தை மந்திர சரீரத்துக்கு அவயவம் ஆக்குகையாலே
இம்மந்திர சரீரம் சகல மந்திர சாதாரணமாய் இருக்கிற பிரணவத்தை ஒழியவே
அஷ்டாஷராத் மகமாய இருக்கும் என்கிறவர்களை வ்யாவர்த்திக்கிறது –
நாராயானாயேதி பஞ்சாஷராணி -என்று அஞ்சு அஷரமாகச் சொல்லுகையாலே
நார -என்கிற இடத்தில் அகாரத்தை ஓர் அஷரமாக்கி இத்தை ஆறு அஷரமாகச் சொல்லுமவர்களை
வ்யாவர்த்திக்கிறது  –

ஆக -இப்படி அஷ்டாஷராத்மகமாய் -பத த்ரயாத்மகமான இத் திரு மந்த்ரம் –
ஆத்ம ஸ்வரூப யாதாம்யத்தை பிரகாசிப்பிகிறது –
ப்ரஹ்மண பிரணவம்  குர்யா தாதா வந்தே ச சர்வதா  ஸ்ரவத்ய  நோங்க்ருதம் பூர்வம் பரஸ்தாச்ச விசீர்யதே-என்று
கீழ் ஒழுகிப் போகாமைக்கும் -மேல் சிதறிப்  போகாமைக்கும் கீழும் மேலும் செப்புப் போலே
மூடிக் கொண்டு கிடக்கக் கடவதாய்
சகல மந்த்ரங்களுக்கும் ஸ்வ சம்பந்தத்தாலே உன்மேஷகரமாய் இருக்கும்  –

இம்மந்த்ரத்திலே பிரதம பதமான பிரணவம் -மந்திர சேஷத்துக்கு சங்க்ரஹமாய்-
ஏக அஷரமுமாய்- அஷ்ர த்ரயாத்மகமுமாய்  -பத த்ரயாத்மகமுமாய் -வாக்யாத்மகமுமாய் இருக்கும் –
ஒமித்யேகாஷாரம் -என்றும் -ஓமி த்யேகாஷரம் ப்ரஹ்ம – என்றும்
மூலமாகிய ஒற்றை எழுத்தை -என்கையாலே ஏக அஷரமாய் இருக்கும் –
அகார உகார மகார இதி தானேகதா சமபரத் ததேததோமிதி-என்றும் –
அகராஞ்சாப் யுகாராஞ்ச மகாராஞ்ச பிரஜாபதி வேத த்ரயான் நிரப்ருஹத்  -என்றும்
அகார உகார மகார ரூபமாய் இருக்கையாலே மூன்று அஷரமாய் இருக்கும் –
இவை ஓரோர் அஷரங்களே ஒரோ அர்த்தங்களுக்கு வாசகம் ஆகையாலே மூன்று பதமுமாய் இருக்கும் –
இம் மூன்று பதமும் கூடி ஓர் அர்த்த விசேஷததோடே தலைக் கட்டி விடுகையாலே வாக்யாத்மகமாய் இருக்கும் –

இப்பிரணவத்தில் பிரதம பதமான அகாரம் –
நாம ரூபஞ்ச பூதா நாம் க்ருதா நாஞ்ச ப்ரபஞ்சனம் வேத சப்தேப்ய  ஏவாதௌ தேவாதி நாம் சகாரா ஸ-என்று
வேதம் லௌகிக சப்தங்களுக்கு எல்லாம் காரணமாய் இருக்கிறாப் போலேயும் –
அவ்வேதங்கள் தனக்கு –
ரூசோ யஜூம்ஷி சாமானி ததை வாதர்வணா நி ஸ -சர்வம் அஷ்டாஷராந்தஸ் ஸ்தம் யச்சான்ய தபி வாங்மயம்-என்று
இம்மந்திர விசேஷம் காரணமாமாப் போலே
இம்மந்த்ரத்துக்கு சங்க்ரஹமான பிரணவம் காரணமாமாப் போலேயும்
தஸ்ய பிரகிருதி லீ நஸய -என்று பிரகிருதி சப்தத்தாலே சொல்லுகையாலே –
பிரணவத்துக்கு அகாரம்  காரணமாய் இருக்கும் ஆகையாலே
அகாரோ  வை சர்வா வாக் -என்று சர்வ சப்தமும்  அகாராந்தர் கதமாய் இருக்கும் –
அர்த்தாபி தாயியான சகல சப்தங்களையும் கற்பித்துக் கொண்டு இருக்கையாலே
அவ்வோ சப்த வாச்யமான அர்த்தங்களுக்கு எல்லாம் வாசகமாய் இருக்கும் –

———————————–

அகாரார்த்தம் –
இது சர்வ அர்த்தங்களுக்கும் வாசகமாய்  இருக்கிற படி எங்கனே என்னில்
இந்த அகாரம் -அவ ரஷணே -என்கிற தாதுவிலே ரஷண வாசியாய் -அந்த ரஷணம் ஆகிற தர்மம் தான் –
நிராஸ்ரயமாகவும் நிர்விஷயமாகவும் நில்லாமையாலே ரஷணைக  நிரூபணீயமான ரஷக வஸ்துவையும் காட்டி
ரஷணம் தனக்கு ரஷ்ய வஸ்து அபேஷிதம் ஆகையாலும் ரஷ்ய வஸ்துவையும் காட்டுகிறது –
அதில் ஒரு ராஜ்ஜியம் -ஒரு லோகம் -ஒரு த்ரைலோக்யம் என்றாப் போலே ரஷ்ய விசேஷத்தை ஒதுக்கிச் சொல்லாமையாலே
சிதசிதாத் மகமான சர்வமும் ரஷ்யமாய் அறும்-
சர்வமும் ரஷ்ய கோடியிலே புகுருகையாலே ஆஸ்ரய அபேஷயா புகுந்த ரஷகன் சர்வ ரஷகனாய் அறும் –
ரஷணம் தனக்கு பிரகாரா பேஷை யுண்டாகையாலே சர்வ பிரகார ரஷகத்வமும் சொல்லிற்று ஆயிற்று –
ஆக –
ரஷ்ய ரஷகாத்மகமான  சகல பதார்த்தங்களையும் வசிக்கையாலே அவ்வோ சப்தங்களுக்கு வாச்யமான அர்த்தங்களுக்கும் 
இந்த அகாரமே வாசகம் என்னும் இடம்  சம்ப்ரதிபன்னம்-

அ இதி ப்ரஹ்ம -என்றும் –
அகாரோ வை விஷ்ணு -என்றும் –
அஷராணாம் அகாரோஸ்மி-என்றும் –
யத் வேதா தௌ ஸ்வர -என்றும் –
அ இதி பகவதோ நாராயணஸ்ய பிரதமாபித நமபி தத்தா கிம் நாம மங்களம் ந கருத்தும் -என்கிற
பிரமாணங்களாலே சர்வ ரஷகனாகச் சொல்லுகிறதும் சர்வேஸ்வரனை என்னும் இடம் சம்ப்ரதிபன்னம் ஆகிறது –

ந ஹி பாலன சாமர்த்யம் ருதே சர்வேஸ்வரம் ஹரிம் -என்று ரஷண தர்மம் பகவத் வ்யதிரேகண
ஆஸ்ரயாந்தரத்தில் கிடவாது என்கையாலும்-
அகார வாச்யனான சர்வேஸ்வரனை ரஷகனாக சொல்லுகிறது –
பத்த  முக்த நித்யாத்மகமான உபய விபூதியையும் ரஷ்யமாக சொல்லுகிறது –
அதில் பத்த வர்க்கத்தில் அஜ்ஞ கோடியை கர்ம அநு குணமாக ரஷிக்கும் –
முமுஷூக்களை ஸ்வரூப அநு குணமாக ரஷிக்கும்
முக்தரையும் நித்யரையும் போக அநு குணமாக ரஷிக்கும்-

இனி -சர்வ ரஷகன் என்று சொல்லுகிறது -இன்னானை —
ரஷ்ய வஸ்துக்கள் -இன்னவை —
ரஷண பிரகாரம் -இன்னது  என்னும் இடத்தை மேலே விவரணத்தில் விசதமாக்கக்  கடவது  –
ஆக –
அகாரத்தாலே ஸ்வ இதர சமஸ்த பதார்த்தங்களுக்கும் சர்வ பிரகார ரஷகன் சர்வேஸ்வரன் -என்றது ஆயிற்று –

யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே -யேன ஜாதாநி ஜீவந்தி -என்று
யாவன் ஒருவன் பக்கல் நின்றும் இந்த ஜகத்து உண்டாகா நின்றது –
உண்டான ஜகத்து யாவன் ஒருவனாலே ரஷிக்கப் படுகிறது -என்று
சர்வ காரண வஸ்துவுக்கே சர்வ ரஷகத்வத்தைச் சொல்லுகையாலே –
இந்த பதத்தில் சொன்ன சர்வ ரஷகத்வம்  சர்வ காரணத்வத்தையும் காட்டுகிறது –

இந்த ரஷண ஸ்ருஷ்ட்யாதி களுக்கு ஜ்ஞான சக்த்யாதிகள் அபேஷிதம் ஆகையாலே 
சமஸ்த கல்யாண குணாத் மகத்வத்தையும் சொல்லுகிறது –

இந்தக் காரணத்வத்தாலே உபாஸ்யத்வமும் சரண்யத்வமும் சொல்லிற்று ஆயிற்று –
காரணந்து த்யேய-என்றும்
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ஸ்ஸ ப்ரஹிணோதி தஸ்மை —
முமுஷூர் வை சரணமஹம் ப்ரபத்யே -என்றும்
காரண வஸ்துவையே முமுஷூவுக்கு உபாஸ்யமாகவும் சரண்யமாகவும் சொல்லிற்று இறே-

தத்க்ரது ந்யாயத்தாலே உபாஸ்யமாயும் சரண்யமாயும் இருக்கிற வஸ்துவே  இறே முமுஷூவுக்கு பிராப்யமாய் அறுவது –
ஆகையாலே ப்ராப்யத்வமும் சொல்லிற்று ஆயிற்று –

ப்ராப்யத்வ பிரயுக்தமான விலஷண  விக்ரஹ யோகாதிகளும் சொல்லிற்று ஆயிற்று –

அநந்ய சாத்தியமான அவ்வஸ்துவே இறே ஆஸ்ரிதனுக்கு விரோதி நிவ்ருத்த பூர்வகமாக அபிமதத்தை சாதித்து கொடுப்பது –
ஆகையாலே உபாய பாவமும் சொல்லிற்று ஆயிற்று –

ஸ்ரீ யபதி -என்கிறபடியே பகவத் ஸ்வரூப நிரூபகை யாகையாலே
யத்யபி சச்சித்தோ ந நிர்புக்ண  தைவதம் குண கணம்  மனசா நுதாவேத் ததாப்யந்தர் குணாமேவ தேவதாம் 
பஜதே தத்ராபிஸ குணைவ  தேவதா ப்ராப்யதே –
என்கிற குண சித்தி ந்யாயத்தாலே ஸ்ரீ லஷ்மீ சம்பந்தமும் ஆர்த்தமாக இவ்விடத்திலே சொல்லிற்று ஆயிற்று

அணு ரேஷ ஆத்மா என்று ஆத்ம சாமான்ய பிரயுக்தமாய்  இவளுக்கு வரும் அணுத்வமும்-
யதா சர்வகதோ விஷ்ணுஸ் ததைவேயம்  த்விஜோத்தம -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே ஈஸ்வரனோபாதி
இவளுக்கும் யுண்டான சர்வ வ்யாபகத்வமும் தன்னில் தான் விருத்தமாய்
ஏக ஆஸ்ரச்தமமாகக் கூடாமையாலே இரண்டும் கூடுகைக்காக –
அநு பபத்யமா நாரத்த தர்சனாத் உபபத்யமா நார்த்தாந்திர -கல்பனமர்த்தா பத்தி
என்கிற அர்த்தா பத்தியின் படியே
அபரிச்சேத்யமான   ஸ்வரூப வைபவத்தை யுடையனான ஈஸ்வரன்  அத்யந்த ஸூசமமான பதார்த்தங்களிலே பண்ணும்
சமாப்ய வ்யாப்திக்கு ஒரு சக்தி விசேஷத்தை கொள்ளுமோ பாதி
இவளும் ஒரு சக்தி விசேஷத்தாலே வ்யாக்த்ய ஆஸ்ரயமான ஜாதி போலே ஈஸ்வரன் வியாபித்த இடம்
எல்லாம் வியாபிக்க கடவளாகையாலே-
ஈஸ்வரன் ஸ்வரூப நிரூபகை என்னும் இடம் சம்ப்ரதிபன்னம் –

வ்யக்திக்கும் ஜாதிக்கும் யுண்டான சம்பந்தம் போலே இறே ஈஸ்வரனுக்கும் பிராட்டிக்கும் யுண்டான சம்பந்தம் –
அதில் ஜாதியாகிறது –
வ்யக்தி ஸ்வரூபத்தை பற்றிக் கிடக்கக் கடவதாய் -அது இல்லாத வன்று தான் இல்லை என்னலாம் படியாய் –
வ்யக்தி உள்ள இடம் எங்கும் வ்யாபிக்கவும் கடவதாய் -ஸ்வ ஆஸ்ரயத்துக்கு இதர வ்யவச்சேதகமுமாய்-சேஷமுமாய் இருக்கும் –
வ்யக்தி யாகிறது –
ஜாதிக்கு ஆஸ்ரயமாய்-ஜாதியோடே வ்யாப்தமுமாய் -ஜாதி வ்யவச்சேத்யமுமாய்-ஜாதிக்கு சேஷியுமாய் இருக்கும் –

அதில் ஜாதி போலே பிராட்டியும் -அனந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண பிரபா யதா -என்றும்
அனந்யா ஹி மயா சீதா பாஸ்கரேண  பிரபா யதா -என்றும்
நித்யை வேஷா  ஜகன்மாதா விஷ்ணோஸ் ஸ்ரீ ரீர் அநபாயின-என்றும் -சொல்லுகிறபடியே 
ஆதித்யனுடைய பிரபை போலே பிரியில் ஸ்திதி இல்லாதபடி ஈஸ்வர ஸ்வரூபத்தை ஆஸ்ரயமாக யுடையளாய்
யதா சர்வகதோ விஷ்ணுஸ் ததைவேயம்  த்விஜோத்தம -என்றும் –
த்வயா ஸ விஷ்ணு நா சாம்ப ஜகத் வ்யாப்தம் சராசரம் -என்றும் ஈஸ்வரன்  உள்ள இடம் எங்கும் வ்யாப்தையுமாய்
ஸ்ரீ யபதி -என்றும் நித்ய ஸ்ரீ -என்றும் சொல்லுகிறபடியே பகவத் ஸ்வரூபத்தின் யுடைய
இதர வ்யவச்சேத புத்தி ஹேது பூதையுமாய் -விஷ்ணு பத்நீ -என்கிறபடியே பகவச் சேஷபூதையுமாய் இருக்கும் –
அவனும் வ்யக்தி போலே அவளுக்கு ஆஸ்ரயமுமாய்-இவளோடு வ்யாப்தனுமாய்
இவளைக் கொண்டு அறிய வேண்டும் படியாய் -இவளுக்கு சேஷியுமாய் இருக்கும் –

இனி ஜாதி நிரூப்யமான கட வ்யக்தியைச் சொன்ன போதே நிரூபகமான ஜாதியும் தன்னடையே அன்விதமாம் போலே
இப்பதமும் நிரூப்யனான ஈஸ்வரனைச் சொன்ன போதே நிரூபக பூதையான பிராட்டியையும் சொல்லிற்று ஆயிற்று –
ஆக –
இப்பதத்திலே –
சர்வ ரஷகத்வமும் –
சர்வ காரணத்வமும்-
சமஸ்த கல்யாண  குணாத் மகத்வமும் –
உபய விபூதி நாயகத்வமும் –
சர்வ ஸ்மாத் பரத்வமும் –
உபாஸ்யதையும்-
சரண்யதையும் –
உபாயத்வமும் –
உபேயத்வமும் –
விலஷண விக்ரஹ யோகமும் –
ஸ்ரீ யபதித்வமும்
சொல்லிற்று ஆயிற்று –

——————————————————————-

லுப்த சதுர்த்தியின் அர்த்தம் —
இந்த அகாரத்தில் சதுர்த்தி ஏறி  ஸூ பாம் ஸூ லுக் -என்று லுப்தமாய்க் கிடக்கிறது –
இந்த அகாரத்தில் சதுர்த்தி ஏறும் என்னும் இடத்தில் பிரமாணம் என் என்னில் –
இதினுடைய விவரணமான நாராயண பதம் சதுர்த் யந்தம் ஆகையாலே  –
சங்க்ரஹமான இதுவும் சதுர்த் யந்தமாக வேண்டும் –
சதுர்த் யந்தம் யாகாதே ப்ரத மாந்தமாய் -தத்வமஸி- போலே ஆத்ம பரமாத்மாக்களுடைய ஐக்ய பரமாகிறது
என்னும் அர்த்தம் விவரணத்தோடே விரோதிக்கும் –

அஹமபி ந மம பகவத ஏவாஹா மஸ்மி -என்று ஸ்வ ஸ்வாதந்த்ர்யா நிவ்ருத்தி பூர்வகமாக
பகவத் ஏக பாரதந்த்ர்யத்தை சொல்லுகிற நமஸ் சப்தத்தோடும் விரோதிக்கும்

பதிம் விச்வச்ய என்றும்
பதிம் பதீநாம் -என்றும் –
பிரதான ஷேத்ரரஜ்ஞ  பதிர் குணேஸ -என்றும்
ஜ்ஞாஜ்ஜௌ தவாவ ஜாவீச நீ சௌ-என்றும் –
கரணாதி பாதிப -என்றும் –
ஷராத் மாநா வீசதே தேவ ஏக -என்றும்
யஸ் யாஸ்மி  -என்றும்
பரவா நஸ்மி -என்றும் –
தாஸ பூதாஸ் ஸ்வ ஸ்வ தஸ் சர்வே  ஹயாத் மான பரமாத்மன -என்றும்
ஆத்ம தாஸ்யம் ஹரேஸ் ஸ்வாம்யம் ஸ்வ பாவஞ்ச சதாச்மர-என்றும்
தாசோஹம் வாஸூ தேவஸ்ய -என்றும்
உத்தம புருஷஸ் த்வன்ய பரமாத் மேத்யுதா ஹ்ருத -யோ லோகத்ரய மா விச்ய பிபாத்யவ்யய ஈஸ்வர -என்றும்
ஈஸ்வரனுடைய சேஷித்வத்தையும் சேதனனுடைய சேஷத்வத்தையும் சொல்லுகிற ஸ்ருதி ஸ்ம்ருதிகளோடே விரோதிக்கும் –

ஆகையால் -இது சதுர்த் யந்தமாகக் கடவது –
இச் சதுர்த்தி தான் தாதர்த்யே சதுர்தியாய்
ஈஸ்வரனுக்கு இஷ்ட   விநியோக அர்ஹமாம்படி  சேஷமாய் இருக்கும் என்கிறது –

——————————————————————————————————-

உகாரார்த்தம்
அனந்தரம் -இச் சேஷத்வத்துக்கு களையான அனந்யார்ஹதையைக் கழிக்கிறது-
அவதாரணார்த்தமான உகாரம்   –
அதாவது -ஷேத்ர புத்ர தார தேக குணாதிகள் யுடைய சேஷத்வத்தில் காட்டில் வ்யாவ்ருத்தமாய் இருக்கை-
ஷேத்ராதிகள் -க்ரய விக்ரய அர்ஹம் ஆகையாலே அனந்யார்ஹ சேஷம் அன்று –
புத்திரன் அவை போலே க்ரய விக்ரய அர்ஹன் அன்றே ஆகிலும் மாத்ரு பித்ரு ப்ரப்ருதிகளோடு அசங்க்யாதரான
தேவதைகளோடு  வாசி அற எல்லார்க்கும் ஒக்க ஏக காலத்திலே சாதாரண சேஷம் ஆகையாலே
அவனுக்கும் அனந்யார்ஹா சேஷத்வம்  இல்லை –
அக்னி சாஷிகமாக பாணிக் க்ருஹீதையான ஸ்திரீயும் கர்மோபாதிக சம்பந்தம் ஆகையாலே காலாந்தரத்திலே
அனந்யார்ஹை யாகைக்கு யோக்யதை யுண்டு -ஆகையாலே இவளுக்கும்  நிருபாதிகமான அனந்யார்ஹ சேஷத்வம் இல்லை –

அந்த ஷேத்ர புத்ராதிகளைப் போலே ப்ருதக் சித்தமாகை அன்றியிலே
அப்ருதக் சித்தமாய்  சேஷமாய் இருந்ததே யாகிலும் தேஹத்துக்கும் அனந்யார்ஹ சேஷத்வம் இல்லை –
பார்யா சரீரம் பர்த்தாவுக்கு சேஷமாய் இருக்கும் -பர்த்ரு சரீரம் தேவாதிகளுக்கு  சேஷமாய் இருக்கும் -அதுக்கு மேலே
கூழா வணமாக எழுதிக் கொடுக்கும் -ஆகையாலே தேஹத்துக்கும் அனந்யார்ஹ சேஷத்வம் இல்லை –

குணம் -யஸ்யை தே தஸ்ய தத்தனம் -என்கிற ந்யாயத்தாலே குணி சேஷமான இடத்துக்கு தான் சேஷமாய் இருக்கையாலே
அனந்யார்ஹ சேஷத்வம் இல்லை -அப்ருதக் சித்தியே உள்ளது –

ஈஸ்வரனுக்கு இவ்வாத்ம வஸ்து சேஷமாய் இருக்கும் இடத்தில் ஷேத்ராதிகளைப் போல் அன்றியிலே
க்ரய விக்ரய அநர்ஹமாய் இருக்கும்
புத்ராதிகளைப் போல சர்வ சாதாரணம் அன்றியிலே அநந்ய சாதாரணமாய் இருக்கும் –
பார்யைப் போலே ஔபாதிக சம்பந்தம் அன்றியிலே ஸ்வ பாவிக சம்பந்தத்தை யுடைத்தாய் இருக்கும் –
தேஹத்தோ பாதி பிறர்க்கு ஆக்கலாய் இருக்கை அன்றியிலே ஒழிக்க ஒழியாத சம்பந்தத்தை யுடைத்தாய் இருக்கும் –
குணங்கள் போல் அன்றியிலே குணியாய் அனந்யார்ஹ சேஷமாய் இருக்கும் –

ந ததஸ்தி விநா யத்ச்யான்மயா பூதம் சராசரம் -என்றும்
கோ ஹ்யேவான்யாத் க ப்ராண்யாத்யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத்-என்றும்
பகவத் சம்பந்தம் அறில் ஆஸ்ரய விதுரமான குணம் போலே சத்தையே பிடித்து இல்லை என்கையாலே
க்ரம விக்ரய அனர்ஹம் என்னும் இடம் சம்ப்ரதிபன்னம்

ஆத்மைவேதம் சர்வம் -என்றும் –
ப்ரஹ்மை வேதம் சர்வம் -என்றும்
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம -என்றும்
யச்யாத்மா சரீரம் -யஸ்ய ப்ருதிவீ   சரீரம் -என்றும்
தத் சர்வம் வை ஹரேச்தனு -என்றும் –
தானி சர்வாணி தத் வபு -என்றும்
ஸ்வ இதர சகல பதார்த்தங்களுக்கும் ஈஸ்வரன் சரீரியாய் -வ்யதிரிக்தங்கள் அடைய அவனுக்கு சரீரங்கள் ஆகையாலே
ஓர்  ஆத்மாவால் அதிஷ்டிதமான சரீர அவயவங்களில் அன்யோன்ய சேஷ சேஷி பாவம் இல்லாதவோ பாதி அயுக்தம் ஆகையாலும்
அந்த சேஷத்வம் யுண்டானாலும் ஔபாதிகம் ஆகையாலும்
தேவர்ஷி பூதாத்ம ந்ருணாம் பித்ருணாம் ந கிங்கரோ நாயம்ரூணீ ச -என்று
அந்ய சேஷத்வத்தைக் கழிக்கையாலும் –
அநந்ய சாதாரணம் இந்த சேஷத்வம் என்னும் இடம் சம் ப்ரதிபன்னம் –

தாஸ பூதாஸ் ஸ்வத-என்றும்
ஆத்ம தாஸ்யம் ஹரேஸ் ஸ்வாம்யம் ஸ்வ  பாவம் -என்றும்
ஆத்ம பரமாத்மாக்கள் யுடைய சேஷ சேஷி பாவத்தை ஸ்வா பாவிகமாகச் சொல்லுகையாலும்
சேஷ சேஷி பாவத்துக்கு ஹேது பூதமான சரீராத்மா பாவம் நித்யமாகையாலும்
சோம ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித இத்தர த்ருதீயோ அக்நிஷ்டே பத்தி துரீ யாச்தெ மனுஷ்யஜா -என்று
பாணி க்ரஹண அநந்தரம் சோமாதிகளுக்கு சாதாரணையாக ஸ்ருதையுமாய் —
பாணி க்ரஹண பூர்வ காலத்தில் மாதா பிதாக்களுக்கு சேஷ பூதையுமாய்
சரீர அவதியான   சம்பந்தத்தை உடையளுமாய் சரீரத்தோடு இருக்கச் செய்தேயும்
சந்ந்யச்தம் மயா-என்ற போது சம்பந்தம் குலையும் படியுமாய் இருக்கையாலே 
பார்யைக் காட்டில் அத்யந்த வ்யாவ்ருத்தம் என்னும் இடம் சம்ப்ரதிபன்னம் –

யச்யாத்மா சரீரம்   யஸ்ய ப்ருதிவீ சரீரம் -என்று சரீரதவம் யுண்டாகா நிற்கச் செய்தேயும்
க்ரய விக்ரய அனர்ஹமாகவும் அநந்ய சாதாரணமாகவும் ஸ்வா பாவிகமாகவும்
கீழ்ச் சொல்லுகையாலே கர்மோபாதிகமான தேஹத்தில் காட்டில் வ்யாவ்ருத்தம் என்னும் இடம் சம்ப்ரதிபன்னம் –

இந்த  ஹேதுக்களாலும் ந த்ருஷ்டேர் த்ரஷ்டாரம் பச்யே ந மதர் மந்தாரம் மன்வீதா -என்று
குணியாக ஸ்ருதம் ஆகையாலும் குணத்தில் காட்டில் வ்யாவ்ருத்தம் என்னும் இடம் சம் ப்ரதிபன்னம் –

ஆகையாலே ஷேத்ராதி கதமான உபாதி விசேஷங்கள் இன்றியிலே நித்ய அநபாயினியாய் இருந்துள்ள பிராட்டியோபாதி
ஈஸ்வரனுக்கு இந்த ஆத்மவஸ்து அனந்யார்ஹ சேஷம் என்றது ஆயிற்று  –

உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -என்று இஸ் சம்பந்தம் உன்னாலும் ஒழிக்கப் போகாது –
என்னாலும் ஒழிக்கப் போகாது-எந்நாளும் ஒழிக்கப் போகாது –
இருவரையும் சங்கே தித்தாலும் ஒழிக்கப் போகாது -என்று உகாரார்தமான அனந்யார்ஹ சேஷத்வத்தை
நாச்சியாரும் அனுசந்தித்து அருளினார் –
ததேவ பூதம் தாது பவ்யமா இதம் -என்று ஏவகாரம் கிடக்கும் ஸ்தானத்திலே உகாரம் கிடக்கக் காண்கையாலே
அந்த பிரமாணம் அடியாக இந்த உகாரமும் அவதாராண அர்த்தம் ஆகிறது-

ஆக
அகாரத்தாலும் -சதுர்த்தியிலும்-உகாரத்திலும் –
ஈஸ்வரனுடைய ரஷகத்வமும் –
சேதனனுடைய ரஷ்யத்வமும் –
ஈஸ்வரனுடைய சேஷித்வமும் –
சேதனனுடைய சேஷத்வ அனந்யார்ஹதையும் சொல்லிற்று ஆயிற்று –

———————————————————————————

மகாரார்த்தம் –
அநந்தரம் – சர்வ ரஷகனாய் -சர்வ சேஷியாய்-சமாதிக தரித்ரனான சர்வேஸ்வரனை
பிரதி சம்பந்தியாக யுடைத்தான அனந்யார்ஹ சேஷத்வத்துக்கு
ஆஸ்ரயம் இன்னது என்கிறது -மகாரம் –
ஒரு சம்பந்தம் ஆகில் சம்பந்தி த்வய அபேஷிதமாய் இறே இருப்பது –
அதில் சம்பந்தத்தையும் பிரதி சம்பந்தியையும் இறே கீழ்ச் சொல்லி நின்றது
அதில் பிரதி சம்பந்தியை ஒழிய இஸ் சம்பந்தத்துக்கு உதயம் இல்லாதவோ பாதி ஆஸ்ரய விதுரமாயும் ஸ்திதி இல்லை இறே
ஆகையாலே ஆஸ்ரய விசேஷத்தை மகாரம் சொல்லுகிறது –

இம்மகாரம் – மன ஜ்ஞாநே -என்கிற தாதுவிலே ஜ்ஞான வாசியாய் –
விஜ்ஞானம் யஜ்ஞம் தநுதே-என்கிற இடத்தில் விஜ்ஞான சப்தம் போலே
தத் குணா சாரத்வாத் தத்வயபதேச ப்ராஜ்ஞவத் -என்கிற ந்யாயத்தாலே
ஜ்ஞான குண சாரமான ஆத்ம ஸ்வரூபத்துக்கு வாசகம் ஆகிறது –
ஆக ஜ்ஞான குணகனான ஆத்மாவைச் சொல்லிற்று ஆயிற்று –

ஜ்ஞாத்ருத்வம் ஆகிற குணம் குணாந்தரங்களுக்கும்  உப லஷணமாய்-
நித்யத்வம் -ஏக ரூபத்வம் -அணுத்வம் -வ்யாபகத்வம் -உள்ளிட்ட ஆத்ம தர்மங்களுக்கும் இப்பதத்திலே அனுசந்தேயம் –
அதவா –
ககாராதி மகாராந்தமான இருபத்தைந்து அஷரத்தையும் இருபத்தைந்து தத்வத்துக்கும் வாசகம் ஆக்கின
மாந்த்ரிக பிரக்ரியையாலே
பஞ்ச விம்சோயம் புருஷ -பஞ்ச விம்ச ஆத்மா பவதி -என்கிறபடியே இருபத்தைந்தாம் தத்வமான
ஆத்மாவுக்கு இருபத்தைந்தாம் அஷரமான இம்மகாரம் வாசகம் ஆகிறது என்னவுமாம் –

இப்பதத்தில் ஏக வசனம் ஜாத்யேக வசனமாய் -பத்த முக்த நித்ய ரூபமான த்ரிவித ஆத்ம வர்க்கத்தையும் சொல்லுகிறது –
பிரதானரான சேதனரைச் சொன்ன போதே -அவர்களுக்கு போகய போக உபகரண போக ஸ்தான ரூபேண சேஷமான
அசித் வர்க்கமும் பகவச் சேஷதயா இப்பதத்திலே அனுசந்தேயம் –

சிச் அசித்துக்கள் இரண்டும் சேஷமாய் இருக்குமாகில் சித் அசித்துக்கள் இரண்டையும் உபாதானம் பண்ணாதே
சேதன த்வாரா அசித்தை உப லஷிக்க வேண்டும்படி சேதன வாசியான பதத்தை எடுக்கைக்கு ஹேது –
அந்த அசித்தில் காட்டில் சேதனனுடைய ப்ரதான்யம் தோற்றுகைக்காக –
சேஷத்வ ஜ்ஞானம் பிறப்பது சேதன வஸ்துவுக்கே ஆகையாலும் –
இனி சேஷத்வ ஜ்ஞான நிவர்த்யமான ஸ்வா தந்த்ர்யா நுவ்ருத்தியும் ஜ்ஞான ஆஸ்ரய வஸ்துவுக்கே ஆகையாலும்
சேஷத்வ ஜ்ஞான கார்யமான சேஷ வ்ருத்தியில் ருசி உள்ளதும் அந்த வஸ்துவுக்கே ஆகையாலும்
சேஷத்வ வ்ருத்தி பிரதி சம்பந்தி பக்கல் விரோதி நிவ்ருத்தி  பூர்வகமாக அந்த வ்ருத்தி சித்திக்கும்
உபாய ச்வீகாரம் பண்ணுவானும் சேதனன் ஆகையாலும்
அஹம் அன்னம் -என்கிறபடியே ஈஸ்வரனுக்கு கௌஸ்துபம் போலேயும் ஸ்ரீ ஸ்தனம் போலேயும் ஸ்ப்ருஹாவிஷயமாய் இருப்பதும்
நிரஸ்த சமஸ்த ஹேயமான இந்த சேதன வஸ்துவே யாகையாலும்
அவனுக்கு கர்ம அனுபவ உபகரணமாயும்-கைங்கர்ய உபகரண மாயும் இருக்கிற ஜடவஸ்துவில் காட்டில் 
சித் வஸ்து விலஷணம் ஆகையாலே அந்த ப்ரதான்யம் தோற்ற அவனுக்கு வாசகமான பதத்தை இடுகிறது –
ஆக –
மகாரத்தாலே பகவத அனந்யர்ஹ சேஷத்வத்துக்கு  ஆச்ரயம் சொல்லிற்று ஆயிற்று –

பிரதானமான ஆஸ்ரயத்தை பிரதமத்திலே சொல்லி -ஆஸ்ரயியான ஸ்வ பாவத்தை அனந்தரம் சொல்ல பிராப்தமாய் இருக்க
ஆஸ்ரயியான சேஷத்வத்தை பிரதமத்திலே சொல்லி ஆஸ்ரயமான ஜ்ஞானானந்த வஸ்துவை  சொல்லுகைக்கு ஹேது என் என்னில் –
அஹமர்த்தோ ந சேதாத்மா பிரத்யக்த்வம் நாத்மநோ பவேத் அஹம் புத்த்யா பராகர்த்தாத் பிரத்யகர்த்தோஹி பித்யதே -என்கிறபடியே
பராகர்த்த வ்யாவ்ருத்தமான அஹமர்த்தத்துக்கு ஜ்ஞானானந்தாதிகளில் காட்டில் பிரதான நிரூபகம்
சேஷத்வமே என்னும் இடம் தோற்றுகைக்காகவும்
நெருப்பிலே புக்குவேவார் சிலருண்டால் அவர்களை இன்னார் என்று பாராதே பற்றி எரிகிற அந்நெருப்பை
அவிக்கையிலே யத்னம் பண்ணுவாரோ பாதி
அதாஹ்யமான ஆத்மவஸ்துவை அனாதிகாலம் பற்றி தஹித்துப் போருகிற ஸ்வ ஸ்வா தந்த்ர்யத்தை
ஆற்றுகையிலே தாத்பர்யம் ஆகையாலும்
புஷ்பத்துக்கு  ஸ்லாக்யதை பரிமளத்தாலே யாகிறவோபாதி ஸ்வரூபத்துக்கும் உபாதேயத்வம்
இந்த ஸ்வ பாவ விசேஷத்தாலே யாகையாலும்
இந்த பிரதான்யத்தாலே சேஷத்வத்தை பிரதமத்திலே உபாதானம் பண்ணுகிறது –

இனி -அந்த சேஷத்வம் தான் சித் அசித்துக்கள் இரண்டுக்கும் பொதுவாகையாலே ஒரு ஆஸ்ரய விஷயத்திலே ஒதுக்க வேண்டுகையாலும்
அந்த ஆஸ்ரயம் தான் அசித்தோ பாதி அன்னலும் துன்னலுமாய் இராது  வடிவு பட்டு இருக்கும் என்று
கிழிச் சீரையை ஸ்லாகிப்பாரோபாதி இறே-மகாரத்திலே ஜ்ஞானானந்த வஸ்துவைச் சொல்லுகிறது –
உத்கர்ஷ அபகர்ஷ ஹேது ஆஸ்ரய ஆஸ்ரயி பாவம் அல்லாமை இறே –
சோஸ் நுதே சர்வான்  காமான் சஹ ப்ரஹ்மணா விபஸ் சித்தி -என்கிற இடத்தில் ஆஸ்ரயி களான குணங்களை
போக்யதையாலே பிரதானமாகச் சொல்லி-சஹ சப்தத்தாலே ஆஸ்ரயமான ஸ்வரூபத்தை அப்ரதானமாகச் சொல்லிற்று –

சேஷத்வத்தின் யுடைய பிரதான்யத்தைப் பற்றி இறே ஆளவந்தாரும் -வபுராதி ஷூ யோபி கோபிவா-என்றும் –
தவ சேஷத்வ விபவாத் பஹிர்பூதம் ஆத்மா நமபி சஹே -என்று
ஆத்மவஸ்து தேக இந்த்ரிய மன ப்ராணாதிகளிலே ஏதேனும் ஒன்றாக அமையும் –
எனக்கு இதினுடைய ஸ்வரூப நிர்ணயமும் வேண்டா –
ஸ்வ பாவ நிர்ணயமும் வேண்டா –
ஏதேனுமாக  தேவரீருக்கு சேஷமாம் இத்தனையே வேண்டுவது —
சேஷம் அன்றாகில் வி லஷணமான இந்த ஆத்மவஸ்து தன்னையும் வேண்டேன் -என்று அருளிச் செய்ததும் –
ஸ்ருதிகளும் யோஹமஸ்மி ச சந் யஜே-என்றும் –
யஸ் யாஸ்மி ந தமந்தரேமி-என்றதுவும் –
பிரணாவார்த்தம் சொல்ல இழிந்த திரு மங்கை ஆழ்வாரும் –
கண்ணபுரம் ஓன்று யுடையானுக்கு -என்று அகாரத்துக்கும் சதுர்த்திக்கும் பொருள் சொல்லி –
ஒருவர்க்கு யுரியேனோ-என்று உகாரத்துக்குப் பொருள் சொல்லி –
மகாரத்துக்குப் பொருளாக அடியேன் -என்றதும் –
ஆக
பத த்ரயாத்மகமான பிரணவத்தில் பிரதம சரம பதங்கள் சம்பந்தி த்வய விசேஷத்தைச் சொல்லிற்று –
மத்யம பதம் அவற்றினுடைய சம்பந்த விசேஷத்தைச் சொல்லிற்று –

இப் பிரணவம் தான் -ஒமித்யாத்மானம் யுஞ்ஜீத-என்கையாலே ஜீவ வாசகமுமாய் –
ஒமித்யேகாஷரம் ப்ரஹ்ம வ்யாஹரன் மாமநுச்மரன் -என்று ஏவமாதிகளில் சொல்லுகிறபடியே ஈஸ்வர வாசகமுமாய்க் கிடக்கிறது –
இது உபயார்த்தத்துக்கும் வாசகம் ஆகிற படி என் என்னில்
ராஜ புருஷ -என்கிற வாக்யம் சேஷ சேஷிகளான ராஜாவையும் புருஷனையும் வசிக்கிறாப் போலே  வாசகமாகக் கடவது-
அங்கன் அன்றியிலே
ஜீவ ஸ்வரூப சோத நத்தையும் ஈஸ்வர ஸ்வரூப சோத நத்தையும் பண்ணுகையாலே உபயார்த்தத்துக்கும் வாசகம் ஆகிறது என்னவுமாம் –
எங்கனே என்னில் –
மகாரத்தாலே -தேக இந்த்ரிய மன பிராண தீப்யோ அந்ய அநந்ய சாதனா -நித்யோ வ்யாபீ பிரதி ஷேத்ர மாத்மா
பின்நஸ்  ஸ்வ தஸ் ஸூகீ -என்கிறபடியே
ப்ரக்ருதே பரனாய்-ஸ்வயம் பிரகாசனாய் -நித்யனாய் -வ்யாபகனாய் -பிரதி சரீரம் பின்னனாய் –
ஸ்வா பாவிக ஸூ கத்தை யுடையனாய் இருக்கும்  என்றும் சொல்லி –
அவன் தான் பர தந்த்ரனாய் இருக்கும் –
அந்த பார தந்த்ர்யம் தான் அனந்யார்ஹமாய் இருக்கும்  என்று சதுர்த்தியாலும் உகாரத்தாலும் சொல்லி
அந்த பாரதந்த்ர்யத்துக்கு பிரதி சம்பந்தியும்  சர்வ ரஷகனான சர்வேஸ்வரன் என்று சொல்லி
ஆக -இப்படி ஜீவ ஸ்வரூப சோதனம் பண்ணுகையாலே ஜீவ வாசகம் என்னவுமாம் –

அங்கன் அன்றியிலே –
ச விபக்திகமான அகாரத்தில் ஈஸ்வரனுடைய சர்வ சேஷித்வத்தைச் சொல்லி
அவற்றுக்கு சேஷியாம் இடத்தில் -அவை அனந்யார்ஹமாம்படி சேஷமாய் இருக்கும் என்னும் இடத்தை உகாரத்திலே சொல்லி –
அந்த சேஷித்வத்துக்கு பிரதி சம்பந்தி அபேஷிதம் ஆகையாலே அசித் பிரகாரமான சேதன வர்க்கத்தை மகாரத்திலே சொல்லி
ஆக வ்யாவர்த்தாக விசேஷமான ஈஸ்வரனுடைய சேஷித்வத்தை சோதிக்கையாலே ஈஸ்வர வாசகம் என்னவுமாம் –
சேஷித்வத்திலே பிரதானமான போதைக்கும்-
க்ருஷ்ணச்ய ஹி க்ருதே பூதமிதம் விச்வம் சராசரம் -என்றால் போலே சதுரத் யந்தமாகவும் தட்டில்லை –

சேதனனுடைய சேஷத்வ சோதனத்திலே இப் பிரணவத்துக்கு   தாத்பர்யமான போது-
அகாரம் -ஈஸ்வரனான பிரதி சம்பந்தியைச் சொல்லுகிறதாய்-
மகாரம் -ஆஸ்ரயத்தைச் சொல்லுகிறதாய் –
உகாரம் அந்த சேஷத்வத்தினுடைய அனந்யார்ஹதையைச் சொல்லுகிறதாகக் கடவது-

ஈஸ்வரனுடைய சேஷித்வத்திலே தாத்பர்யமான போது –
மகாரம் பிரதி சம்பந்தியைச் சொல்லுகிறதாய்
அகாரம் ஆஸ்ரயத்தைச் சொல்லுகிறதாய் –
உகாரம் அந்த சேஷித்வத்தினுடைய அசாதாரணதையைச் சொல்லுகிறதாகக் கடவது –

அங்கன் அன்றியிலே –
தஸ்ய பிரகிருதி லீ நஸ்ய ய பரஸ் ச மகேஸ்வர -என்கிறபடியே
ப்ரக்ருத்ய வஸ்தமான பிரணவம் ஈஸ்வர வாசியாய்
விக்ருத்ய வஸ்தமான பிரணவம் ஜீவ வாசி யாகிறது என்னவுமாம்-

ஆக –
பிரணவத்தில் ஆர்த்தமாகவும் -சாப்தமாகவும் -சித் ஸ்வரூபத்தோடு -ஈஸ்வர ஸ்வரூபத்தோடு
தத் சம்பந்த விசேஷத்தோடு -பிராப்யத்தோடு -ப்ராபகத்தோடு-விரோதியோடு  வாசி அறச் சொல்லுகையாலே
சகல சாஸ்திர சங்க்ரஹமான மந்திர சேஷத்துக்கு சங்க்ரஹம் என்னும் இடம் சம்ப்ரதிபன்னம் –

—————————————————————————–

நமஸ் சப்தார்த்தம் –
பிரணவத்திலே உக்தமான பகவத்  அனன்யார்ஹ சேஷத்வத்தை யுடையனான இச் சேதனனுக்கு
ஸ்வரூப அநுரூபமான உபாய விசேஷத்தைச் சொல்லுகிறது -உகார விவரணமான நமஸ் சப்தம் –
பத க்ரமத்திலே விவரணம் பண்ணாதே இங்கனே வ்யுக்த க்ரமாகைக்கு அடி என் என்னில்
சப்த க்ரமத்தில் காட்டிலும் அர்த்த க்ரமம் பிரபலம் என்கிற மீமாம்ச கருடைய ந்யாயத்தாலே
கீழ் பிரணவத்தில் உக்தமான அனன்யார்ஹ சேஷத்வத்தில் வ்யாவ்ருத்தரான அன்யரிலே அந்ய தமனான தன்னை
வ்யாவர்த்திக்கை -அனந்தரம்  ப்ராப்தம் ஆகையாலும்
ஸ்வரூப அநு ரூபமான புருஷார்த்த ஜ்ஞானம் பிறக்கும் போதைக்கு ஸ்வரூப யாதாத்ம்ய ரூபமான
ததீய சேஷத்வ ஜ்ஞானம் பிறக்க வேண்டுகையாலும்
கைங்கர்ய பிரதி சம்பந்தியைச் சொல்லும் இடத்தே இரண்டொரு காரயமாக பிரதம பதமான
அகார விவரணம் பண்ணலாய் அறுகையாலும்
அஹமபி ந மம பகவத  ஏவாஹமஸ்மி -என்று  பிரணவோக்தமான ஸ்வரூபத்தில் கிடக்கிற மமதையையும்
யா காஸ்ஸந க்ருதயோ மம பவந்தி தா ஸூ மம மமதா நாஸ்தி பகவத ஏவ தா -என்று மேலே வஷ்யமாணமான புருஷார்த்தத்தில் 
வரும் மமதையையும் காகாஷி ந்யாயத்தாலே கழிக்குமிது-நடுவே கிடக்க வேண்டுகையாலும்
பிரணவ அனந்தரம் உகார விவரணமான நமஸ் சப்தமாகக் கடவது-

இந்த நமஸ் சப்தம் –
ந-என்றும் -ம -என்றும் இரண்டு பதமாய் இருக்கும் –
இதில் மகாரம் -மன -ஜ்ஞாநே -என்கிற தாதுவிலே ஷஷ்ட்யந்தமாய்–எனக்கு நான் உரியேன் -என்கிறது –
நகாரம் இத்தை நிஷேதித்து
யானே நீ என்னுடைமையும் நீயே -என்கிறபடியே தன்னுடைய மமதா நிவ்ருத்தியையும் –
மமதைக் கூற்றான அஹங்கார நிவ்ருத்தியையும் அனுசந்திக்கிறது –
த்வயஷரஸ்து பவேன் ம்ருத்யுஸ் த்ர்யஷரம் ப்ரஹ்மண பதம்  மமேதி த்வ்யஷரோ ம்ருத்யுர் நமமேதி ச சாஸ்வதம் -என்கிறபடியே
அஹங்கார மமகாரங்கள் இறே இவ்வாத்மாவுக்கு நாசகங்கள் -தந் நிவ்ருத்தி இறே உஜ்ஜீவனமும் –
ஆக –
தொடர் நாழி போலே கிடக்கிற அஹங்கார மமகாரங்களினுடைய நிவ்ருத்தியைச் சொல்லிற்று ஆயிற்று –

கீழே சதுர்த்தியில் சொல்லுகிற பாரதந்த்ர்யத்தாலே ஸ்வாதந்த்ர்யம்  கழி யுண்டிருக்க  இங்கு நிவ்ருத்தமாகிற
அஹங்கார மமகாரம் ஆகிறது என் என்னில்
அங்கு பகவத் பாரதந்த்ர்ய விரோதியான ஸ்வ ஸ்வா தந்த்ர்யத்தைக் கழித்தது –
பகவத் ஏக ரஷ்யதைக்கு விரோதியான ஸ்வ ஸ்வாதந்த்ர்யத்தைக் கழிக்கிறது இங்கு –
ஸ்வ ரஷணத்தில் தான் இழிகை இறே அதுக்கு விரோதியாய் அறுவது -அதாகிறது –
ஸ்வ ரஷணமாக சாதன அனுஷ்டானம் பண்ணுகை-அது ஸ்வரூப ஹானியாய் இறே இருப்பது –
பர்த்தாவுக்கு சேஷமான சரீரத்தை அவகாதா திவ்யா பாரங்களாலே பதிவ்ரதை ரஷிக்கை யாகிறது –
பர்தாவுக்கு ஸ்வரூப ஹானியாய் -தனக்கும் ஸ்வரூப ஹானியாய் இறே இருப்பது –
விசேஷண பிரதானமான விசிஷ்ட அம்சமே இறே பர்த்தாவுக்கு சேஷமாய் இருப்பது
அங்கன் அன்றியிலே ஸ்வரூபமும் சேஷமாய் இருக்குமாகில்  நாம் இங்கு சொல்லுகிற பகவத் அனன்யார்ஹ சேஷத்வத்துக்கு 
அவகாசம் இன்றிக்கே ஒழியும்
ஆகையாலே ஆத்ம ரஷணத்துக்கு உறுப்பாக பண்ணுகிற பாதி வ்ரத்ய  தர்ம அனுஷ்டானத்தாலே பர்த்தாவுக்கு
அனன்யார்ஹ சேஷ பூதையாய் இருக்கும் இருப்புக்கு வைகல்யம் வாராது இறே-
ஆகையாலே நவ த்வார புரமான லங்கா புரத்திலே  நிருத்தையான பிராட்டி -தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று
சக்கரவர்த்தி திருமகன் பக்கலிலே ந்யஸ்த பரையாய் இருந்தாப் போலே இருக்கை -இவனுக்கு ஸ்வரூபம்   –

ஆக
இத்தால் ஸ்வ ரஷணத்தில் இழிகை ஸ்வரூப ஹானியாம்படி ஈஸ்வரனுக்கு அத்யந்த பரதந்த்ர்யம்
இந்த ஆத்ம வஸ்து என்றது ஆயிற்று –
ஸ்வ ரஷண ஷமனான பர்த்தா இருக்க -ஸ்வ ரஷணத்தில் நின்றும் பதி வ்ரதை கை வாங்கினால் 
பர்த்தாவே  ரஷகனாய் அறுமோ பாதி
இவனும் அத்யந்த பரதந்த்ரனாய் அற்றால் ஈஸ்வரனே இறே ரஷகனாய் அறுவான் -ஆகையாலே
ஈஸ்வரனுடைய உபாய பாவமும் ஆர்த்தமாகச் சொல்லிற்று ஆயிற்று –

ஈஸ்வரனே ரஷகனாம் படி இவன் அத்யந்த பரதந்த்ரன் ஆனால் -இந்தப் பாரதந்த்ர்ய பூர்த்தி பிறந்ததாவது –
அவனுக்கு இஷ்ட விநியோக அர்ஹமாகில் இறே-
அவனுக்கு இஷ்டர் ஆகிறார் -ஜ்ஞாநீ த்வாத்மைவ -என்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் இறே –
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்கிறபடியே தனக்கு அபிமதமான ஸ்ரீ  வைஷ்ணவர்களுக்கு சேஷம் ஆக்கினால் –
அவர்களுக்கு சேஷமாய் இருக்கில் இறே இவனுக்கு பகவத் அனன்யார்ஹ சேஷத்வ பூர்த்தி பிறந்ததாவது –
ஆகையாலே நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்று
திரு மங்கை ஆழ்வார் அனுசந்தித்து அருளினால் போலே
இப் பதத்திலே-பாரதந்த்ர்ய காஷ்டை யான ததீய சேஷத்வமும் அனுசந்திக்கும் படி சொல்லிற்று ஆயிற்று –

பகவச் சேஷத்வம் பூரணமாவது ததீய சேஷத்வம் யுண்டானாலாகில் -ததீய சேஷத்வம் பிரணவத்தில் சொன்ன
அனன்யார்ஹ சேஷத்வத்தோடு விரோதியாதோ என்னில் –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆகிறார் -ஜங்கம ஸ்ரீ விமா நாநி -என்கிறபடியே ஈஸ்வரனுக்கு திவ்ய மங்கள விக்ரஹத்தோ பாதி
சரீர பூதராய் அறுகையாலே
பர்த்ரு சரீரத்திலே மேல் விழுகிற ஸ்திரீக்குப் பாதிவ்ரத்ய பங்கம் இல்லாதவோபாதி
அனன்யார்ஹ சேஷத்வத்துக்கும் பங்கம் வாராது  –

அனன்யார்ஹ சேஷத்வத்தின் யுடைய அப்ரச்யுதிக்கு சரீரத்வம் பிரயோஜகம் ஆகில் –
யச்யாத்மா சரீரம் யஸ்ய ப்ருதிவீ சரீரம் -என்று சேதன அசேதன விபாகம் அற சர்வமும்  சரீரமாய் யன்றோ இருப்பது –
ஆனால் சர்வருக்கும் சேஷபூதனாக வேண்டி வந்ததீ -என்னில் –
சர்வருக்கும் சரீரத்வ நிபந்தனமான சம்பந்தம் யுண்டே யாகிலும் நாம் சரீரத்வேந சேஷ பூதர் -சரீரியான ஈஸ்வரன் சேஷி –
என்கிற ஜ்ஞானம் இன்றியிலே
அஹங்கார மமகார தூஷிதராய் -நிருபாதிக பந்துவான ஈஸ்வரனையும் நாஸ்தி  என்னப் பண்ணும் அளவன்றியிலே –
ஷிபாமி -ந ஷமாமி -என்று கடல் கொதித்தால் போலே கொதிக்கும் படி பண்ணும் தன்மை யுடையாராகையாலே
இந்த தோஷங்கள் ஒன்றும் இன்றியிலே
ஜ்ஞாநீ த்வாத்மைவ -என்றும் –
பத்தராவியை -என்றும்
சர்வ ஆதார பூதனான ஈஸ்வரன் தான் தனக்கு தாரகமாக நினைத்து இருக்கும் படி
அவனுக்கு பிரசாத பாத்ரரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சேஷமாய் இருக்கும் இருப்பு சரீரத்வ சாமான்யத்தாலே வ்யபிசாரியாது –
பர்த்தாவோடு பார்யைக்கு அவ்யவதா நேந சம்பந்தம் யுண்டாகா நிற்கச் செய்தேயும்
ஆர்த்த வாதி தோஷ தூஷிதையான வன்று பர்த்தாவோடு பிரஜைகளோடு வாசி அற எல்லாருக்கும் அசப்ருஸ்யையாய்
குளித்த வாறே சம்ஸ்லேஷிக்கலாம் படி இருக்கிறாப் போலே –
அஹங்கார மமகாராதிகள் யுண்டான வன்று த்யாஜ்யமாய்
அவை போன வன்று இவை தானே உபாதேயமாகக் கடவது -ஆக -பிரயோஜனமாய் அற்றது –
ஈஸ்வரனுக்கு பிரசாத பாத்ரமான சரீரம் உத்தேச்யமாகக் கடவது -நிக்ரஹ பாத்ரமான சரீரம் த்யாஜ்யமாகக் கடவது –

இப் பதத்தில் நாலர்த்தம் சொல்லா நிற்க -அநந்ய சரணத்வத்திலே இத்தை ஒதுக்குகிற படி என் என்னில் –
கச்சத்வமே நம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா -என்று சரணம் புகுருங்கோள்  என்று உபதேசிக்க –
த்ரௌபத்யா சஹிதாஸ் சர்வே நமஸ் சக்ருர் ஜநார்த்தனம்-என்று
அனுஷ்டான வேளையிலே நமஸ்காரத்தைப் பண்ணினார்கள் என்கிற
ஸ்தான பிரமாணத்தாலே நமஸ் சப்தம் சாப்தமாகவே உபாய வாசகமாகக் கடவது

ஆக –
பூர்வோக்த க்ரமத்தாலே ஆர்த்தமாகவும் -ஸ்தான பிரமாணத்தாலே சாப்தமாகவும் உபாய வாசகமாய் அறுகையாலே
அநந்ய சரணத்வத்திலே நோக்காய்க் கிடக்கிறது –
ஆக –
பிரணவத்தாலும்-நமஸ் சப்தத்தாலும் -ஸ்வரூபமும் -ஸ்வரூப அநு ரூபமான உபாயமும் சொல்லிற்றாய் ஆயிற்று –

——————————————————————————

நாராயண -சப்தார்த்தம் –
அனந்தரம் -உபாய பலமான கைங்கர்யத்தைச் சொல்லக் கடவதாகக் கொண்டு –
தத் பிரதி சம்பந்தியைச் சொல்லுகிறது -அகார விவரணமான நாராயண பதம்-
ரஷ்ய அம்சமும் ரஷண பிரகாரமும் இறே அகாரத்தில் விவரணீயமான அம்சம்  –
அதில் -நார -சப்தத்தாலே ரஷ்ய அம்சத்தை விவரிக்கிறது –
நாராயணன் -என்கிற சமஸ்த பதத்தாலே ரஷண பிரகாரத்தை விவரிக்கிறது –

அதில் ரஷ்ய விவரணம் பண்ணுகிற நார  பதம் –நர -என்றும் -நார -என்றும் -நாரா -என்றுமாய்
ஸ்வரூபேணவும்-பிரவாஹ ரூபேணவும் நித்தியமான பதார்த்தங்களைச் சொல்லுகிறது
ஸ்வரூபேண-நித்யதை யாவது -சத்தான பதார்த்தத்தின் யுடைய உத்பத்தி விநாசாத் யந்தா பாவம்
ப்ரவாஹ ரூபேண நித்யதை யாவது –
உத்பத்தி விநாச யோகியாகா  நிற்கச்  செய்தேயும் பூர்வ காலத்தில் யுண்டான நாம ரூப லிங்கா திகள்  யுடைய அனந்யதா பாவம் –
சூர்யா சந்த்ரமசௌ தாதா யதா பூர்வமகல்பயத் -என்றும் –
யதார்த்துஷ் வ்ருது-லிங்காநி  நாநா ரூபாணி  பர்யயே  -த்ருச்யந்தே தானி தான்யேவ ததா பாவா யுகாதிஷூ -என்கிறபடியே
அவ்வோ ருதுக்களில் முன்பு கழிந்த ருதுக்களில் யுண்டாம் புஷ்ப பலாதிகளையும்
சீதோஷ்ணாதி களையும் நாமத்தையும் யுடைத்தாய்க் கொண்டு ததாகாரமாய் வந்து தோற்றுமா போலே
ஸ்ருஷ்டமாம் போது முன்பு ஸ்வ சம்ஹ்ருதமான சமஸ்தானத்தையும் நாமாதிகளையும் யுடைத்தாய்க் கொண்டு பிறந்து போருகை-

அதிலே ரேபம்-ரிங் – ஷயே -என்கிற தாதுவிலே ஷயிஷ்ணு பதார்த்த வாசகமாய்க் கிடக்கிறது –
நகாரம் -அத்தை நிஷேதித்து -நர -என்று நித்ய பதார்த்தத்தைச் சொல்லுகிறது –
இங்கனே ஷயத்தை பிரசங்கித்து பிரதி ஷேதிக்கிறது -ஷயிஷ்ணுக்களான நஹதாதிகளையும் ஒரு முகத்தாலே
நித்ய பதார்த்தங்களிலே முதலிடுகைக்காக சொல்லுகிறது –
நார -என்கிற இடத்தில் -அண் ப்ரத்யயம் -சமூஹார்த்தத்திலே யாய் -நித்ய பதார்த்த சமூஹத்தைச் சொல்லுகிறது –
நாரா -என்கிற பஹூ வசனம் அந்த சமூஹத்தின் யுடைய பாஹூள்யத்தைச் சொல்லுகிறது –

ஆக –
நாரா -என்று நித்ய பதார்த்தங்களின் யுடைய சமூஹங்களைச் சொல்லிற்று ஆயிற்று —
அவை யாவன -ஜ்ஞான சக்த்யாதி திவ்யாத்ம குணங்களும் –
குண பிரகாசகமான திவ்ய மங்கள விக்ரஹங்களும் –
விக்ரஹ குணமான சௌந்த்ர்யாதிகளும் –
அந்த சௌந்த்ர்யாதிகளோ பாதி பூத்தாப் போலே சாத்தின கிரீட  மகுடாதி திவ்ய ஆபரணங்களும் –
அவ் வாபரணங்களோடு விகல்பிக்கலாம் படியான சங்க சக்ராதி திவ்யாயுதங்களும்
இத்தனையும் காட்டில் எரித்த நிலா வாகாதபடி அருகே இருந்து அனுபவிக்கிற லஷ்மீ ப்ரப்ருதி மஹிஷீ வர்க்கங்களும்
அச் சேர்த்தியிலே அடிமை செய்கிற அநந்த கருட விஷ்வக்சேன பிரமுகரான ஸூரி சங்கமும் –
அவர்களோ பாதிபோய் அடிமை செய்கிற முக்தரும் –
அவர்களுக்கு அடிமை செய்கைக்கு பரிகரமான சத்ர சாமராதி பரிச் சதங்களும்-
அவ்வடிமைக்கு வர்த்தகமாய் பஞ்சோபநிஷண் மயமான பரமபதமும்

குணத்ரயாத்மிகையான மூலப்ரக்ருதியும் –
புருஷ சமஷ்டியும் –
அஹோராத்ராதி விபாக யுக்தமான கால தத்வமும்
ப்ரவாஹ ரூபேண நித்யமான மகாதாதிகளும்-
தத் கார்யமான அண்டங்களும் –
அண்டாந்தர் வர்த்திகளான சதுர்வித பூதங்களும் —

பஞ்சோபநிஷாண் மயமாகையாலே பரம பதமும் சமூஹாத்மகமாய் இருக்கும் –
குணத்ரயாத்மிகை  யாகையாலே மூல பிரக்ருதியும் சமூஹாத்மிகையாய் இருக்கும்
அஹோராத்ராதி விபாகங்கள் அநேகம் ஆகையாலே காலமும் சமூஹாத் மகமாய இருக்கும் –

ஆக -நார – சப்தத்தாலே
வ்யாப்ய பதார்த்தத்தைச் சொல்லி –
அனந்தரம் -வ்யாப்தியையும்   –
வ்யாப்தி பிரகாரத்தையும் சொல்லுகிறது –

அயன -சப்தம்
ஆவாஸ வாசியாய் -நாராணாம் அயனம் ய -என்றும் -ஸ நாராயண -என்றும் –
நாரா அயனம் யஸ்ய ஸ நாராயண -என்கிற
தத் புருஷ பஹூவ்ரீஹி ரூபமான சமாச த்வயத்தாலே –
அந்தர் பஹிஸ்ஸ தத்  சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித -என்கிறபடியே
உக்தமான நித்ய பதார்த்தங்களுக்குத் தான் ஆவாஸ பூமியாய் இருக்கும் என்றும்
அவற்றைத் தனக்கு ஆவாசம் யுடையனாய் இருக்கும் என்றும் சொல்லுகிறது –

அவற்றுக்குத் தான் ஆவாசமாய் இருக்கை  யாவது –
ஸ்வ இதர சகல பதார்த்தங்களையும் –
மேரோரிவாணு-என்றும்
யஸ்யா யுதாயுதாம் சாம்சே  விஸ்வ சக்தியும் ஸ்திதா -என்கிறபடியே தன் ஸ்வரூப ஏக தேசத்திலே தரிக்கை-

அவற்றைத்தான் ஆவாசமாக யுடையனாய் இருக்கை யாவது –
ஸ்வ இதர சகல பதார்த்தங்களையும் சித் அசித் விபாகம் அற
தனித் தனியே உள் வாயிலே புக்கு ஆகாசம் கடாதிகளிலே வ்யாபிக்குமா போலே
தன் ஸ்வரூப ஏக தேசங்களாலே வ்யாபிக்கை அன்றியிலே
ஜாதி வ்யக்தி தோறும் வ்யாபிக்குமோ பாதி சமாப்ய ஆத்மதயா வியாபித்து தரிக்கை –
இந்த அந்தர்வ்யாப்தியையும் பஹிர்வ்யாப்தியையும் நினைத்து இறே ஸ்ருதி-அணோரணீயான் மஹதோ  மஹீயான் -என்றது –

ஸ்வ வ்யதிரிக் தங்களுக்கு ஆவசமாய் இருக்கும் என்னும் இடத்தில் நார சப்தத்தில் பிரதமோபாத்த மான குணங்களும்
ஸ்வரூப ஆஸ்ரயம் ஆகையாலே அனுசந்திக்க கடவோம் –
ஸ்வ வ்யதிரிக்தங்களை  ஆவாசமாக உடையனாய் இருக்கும் என்னும் இடத்திலே குணங்களுக்கு வ்யாப்யத்வம்
அநு பபன்னம் ஆகையாலே அவற்றை ஒழிந்தவை வ்யாப்திக்கு கர்மீபவிக்கக் கடவன –
தன் குணங்களிலே ஈஸ்வரன் வியாபிக்கும் போது குண விசிஷ்டனாகவே வியாபிக்க வேணும் –
நிர்குணமாய் வஸ்து இராமையாலே –
அப்போது வ்யாப்ய குணங்களே வ்யாபகங்களாய்-வ்யாபக குணங்களே வ்யாப்யங்களாய் அறுகையாலே
ஆத்மாஸ்ரய தோஷம் யுண்டாம் –
அதுக்கு மேலே தன் குணங்களிலே குணி வியாபிக்க வேணும் என்று புக்கால்
தத் ஆஸ்ரயமான குணங்களையும் குணி வியாபிக்க வேண்டும் –
அந்த வ்யாபகனுடைய குணங்களையும் குணி வியாபிக்க வேண்டும் -ஆகையாலே அனவஸ்தா துஸ்தமாம்-

ஆக
சமஸ்த கல்யாண குணாத் மகத்வம் –உபய விபூதி நாதத்வம் –சர்வ ஸ்மாத் பரத்வம் —
சர்வ சரீரதவம் -உள்ளிட்டவை உக்தமாய் நின்றது –

நராஜ்ஜாதாநி தத்வாநி  நாராணீதி ததோ விது-தான்யேவ சாயநம் தஸ்ய தேந நாராயண ஸ்ம்ருத-என்று
நரனுண்டு -நித்யனான சர்வேஸ்வரன் -அவன் பக்கல் நின்றும் ஜாதமான பதார்த்தங்கள் நாரங்கள் ஆகின்றன –
தன் பக்கலில் உத்பன்னமான அந்த நாரங்களையே தனக்கு இருப்பிடமாக யுடையவன் -என்கையாலே
சர்வ காரணத்வத்தையும் சொல்லிற்றாய் ஆயிற்று –

இனி -நார சப்தேன ஜீவாநாம் சமூஹ-ப்ரோச்யதே புதை கதிரா லம்பனம்  தசி தேந நாராயணஸ் ஸ்ம்ருத -என்கிறபடியே
நார சப்தம் நித்யமான ஜீவ சமஷ்டிக்கு வாசகமாய்
அயன -சப்தம் -இண கதௌ-என்கிற தாதுவிலே ப்ராப்ய வாசியாய் –
ஆக நாராயணன் என்று சேதன வர்க்கத்துக்கு ப்ராப்ய பூதன் என்றதாயிற்று

பந்து லாபமும் ப்ராப்யம் ஆகையாலே –
மாதா பிதா ப்ராதா நிவாச சரணம் ஸூ ஹ்ருத் கதிர் நாராயண -என்றும்
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாணாள்-என்றும் சொல்லுகிறபடியே
சர்வ வித பந்துவும் சர்வேஸ்வரன் என்றும் சொல்லிற்று ஆயிற்று –

விஷ்ணு போதம் விநா நாந்யத்  கிஞ்சிதஸ்தி பராயணம் -என்கிறபடியே அயன சப்தம் பிராபக வாசியாய்
சேதனருக்கு பிராபகன் என்றும் சொல்லிற்று ஆயிற்று

பிராட்டி நார சப்த கோடி கடிதை யாகையாலே இப்பதத்தில்  லஷ்மீ சம்பந்தமும் அனுசந்தேயம் –

ஆக –
இந்த நாராயண பதத்தாலே கைங்கர்ய பிரதி சம்பந்தியைச் சொல்லிற்று ஆயிற்று –

—————————————————————————–

ஆய -சப்தார்த்தம்
மகார விவரணமான ஆய -என்கிற சதுர்த்தியாலே
அவன் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யத்தை அபேஷிக்கிறது –
சதுர்த்தி மகார விவரணம் ஆனபடி என் என்னில் –
சேஷத்வத்துக்கு ஆஸ்ரயமாக இறே மகார வாச்யனைச் சொல்லிற்று –
அகிஞ்சித் கரஸ்ய சேஷத்வா நுப பத்தி -என்கிறபடியே -அந்த சேஷத்வ சித்தி தான்  கிஞ்சித் காரத்தாலே யாகையாலே
கிஞ்சித் காரம் இல்லாத வன்று சேஷத்வம் இல்லை –
சேஷத்வம் இல்லாத வன்று ஸ்வரூபம் -அசந்நேவ-ஆய்விடும் –

ஆக –
இம்மூன்று பதத்தாலும் ஈஸ்வரனுடைய ஸ்வரூபமும்
ஆத்மாவினுடைய ஸ்வரூபமும்
த்யாஜ்யதயா விரோதி ஸ்வரூபமும் சொல்லிற்று ஆயிற்று

ஈஸ்வரன் சர்வ சேஷியாய் இருக்கும் —
சேதன வஸ்து அவனுக்கு அனன்யார்ஹ சேஷமாய் இருக்கும் –
ஸ்வ ஸ்வா தந்த்ர்யமும் -அந்ய சேஷத்வமும்-ஸ்வரூப விரோதியாகக் கடவது -என்று சொல்லுகிறது –பிரணவத்திலே-
நமஸ் சப்தத்திலே -ஈஸ்வரனுடைய நிரபாயோபாய த்வமும்-சேதனனுடைய அநந்ய சரணத்வமும் –
ஸ்வ ரஷண ப்ரவ்ருத்தி ஸ்வரூப ஹானி -என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று –
ஈஸ்வர  கிஞ்சித் காரத்தின் யுடைய பரம ப்ராப்யத்வமும் -இவனுடைய அநந்ய போகத்வமும் –
ப்ராப்யாந்தர சம்பந்தம் அப்ராப்தம் என்னும் இடமும் சரம பதத்தாலே சொல்லிற்று  ஆயிற்று –

ஆக
இத்தால் -சேதனனுடைய ப்ரக்ருதே பரத்வமும் –
ப்ரக்ருதே பரனுடைய சேஷத்வமும் –
சேஷத்வத்தின் யுடைய அனந்யார்ஹதையும்-
அனன்யார்ஹ சேஷத்வ பிரதிசம்பந்தியையும் –
அனன்யார்ஹ சேஷ பூதனுடைய அஹங்கார மமகார நிவ்ருத்தியையும் –
தந் நிவ்ருத்தமான ஸ்வரூபத்தின் யுடைய அத்யந்த பாரதந்த்ர்யத்தையும் –
பாரதந்த்ர்ய காஷ்டையான ததீய சேஷத்வத்தையும்-
பரதந்த்ரனுக்கு அநு ரூபமான உபாயத்தையும் –
உபாய பலமான கைங்கர்யத்தையும் –
கைங்கர்ய பிரதி சம்பந்தியையும் -சொல்லுகிறது –

ரஷகாந்தர பிரதிபத்தி யுண்டான போது-அகார்த்தம்  நெஞ்சில் பட்டது இல்லையாகக் கடவது –
ஸ்வ ஸ்வா தந்த்ர்யம் நடையாடிற்று ஆகில் சதுர்த்யர்த்தம் நெஞ்சில் பட்டது இல்லையாகக் கடவது –
சேஷ்யந்தர பிரதிபத்தி உண்டாயிற்றாகில் உகார்த்தம் நெஞ்சில் பட்டது இல்லையாகக் கடவது –
தேஹாத்மாபிமானம் நடையாடிற்று ஆகில் மகார்த்தம் நெஞ்சில் பட்டது இல்லையாகக் கடவது –
சாதநாந்தர ருசியும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கல் சஜாதீயத்வ பிரதிபத்தியும் நடையாடிற்று ஆகில்
நமஸ் சப்தார்த்தம் நெஞ்சில் பட்டது இல்லையாகக் கடவது –
அபந்துக்கள் பக்கல் பந்துத்வ பிரதிபத்தி யுண்டாயிற்றாகில் அயன சப்தார்த்தம் நெஞ்சில் பட்டது இல்லையாகக் கடவது –
பிரயோஜனாந்தர ருசி யுண்டாயிற்றாகில் சதுர்த்யர்த்தம் நெஞ்சில் பட்டது இல்லையாகக் கடவது –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாம் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading