ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த-ஸ்ரீ பரந்த ரஹஸ்யம் -அவதாரிகை – –

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூலபஸ்  ஸ்ரீ தரஸ் சதா —

நிர்ஹேதுக பகவத் பிரசாதம் அடியாக -வேத பாஹ்யமான -ஸாங்க்யாதி தர்சனங்களில் -விமுகனாய் –
நிர்தோஷ பிரமாணமான வேதத்திலே புகுந்து –
அதில் பந்தகமான ஸ்வர்க்காதி ஷூத்ர புருஷார்த்தங்களையும் தத் சாதனங்களையும்
பிரதிபாதிக்கிற பூர்வ காண்டத்தில் பிரயோஜனம் இல்லாமையாலே ஜ்ஞான பாகத்திலே புகுந்து –
அதிலும் ஐஸ்வர்யத்தில் காட்டிலும்  நித்யத்வாதிகளாலே  சிறிது அதிகமான கைவல்யத்தையும்  தத் சாதனத்தையும் விட்டு
அவ் வைஸ்வர்ய கைவல்யங்களைப் போல் அன்றியிலே ஸ்வரூப அனுரூபமான
பரம புருஷார்த்த லஷண மோஷத்திலே ருசி யுடையவனாய்-
தத் சாதனமான கர்ம ஜ்ஞானாதிகள் யுடைய துஷ்கரத்வாத்ய அனுசந்தானத்தாலே  க்லிஷ்டனாய்
ஸ்வரூப அனுரூபமான உபாயத்திலே ருசி யுடையனாய் இருக்கும்  அதிகாரிக்கு
அபிமதமாய்-அனுரூபமாய் இருந்துள்ள அந்த உபாய உபேயங்களைத் தனித் தனியே
ஜ்ஞாபிக்கிற ரஹஸ்ய த்ரயமும் ஜ்ஞாதவ்யமாகக் கடவது –

தனித் தனியே  உபாய உபேயங்களைச் சொல்லுகிறது ஆகில் –
அவற்றில் ஓன்று ஜ்ஞான கோசரமாக அமைந்து இருக்க
மூன்றும் ஜ்ஞாதவ்யமாக வேண்டுகிறது என் என்னில் –
புபுத்ஸூ –ஓர் அர்த்தத்தில் நிஷ்டனாகைக்கு அனுரூபமான பிரமாணங்கள் அநேகங்கள் அபேஷிதங்கள் ஆகையாலே
அவ்வோ ப்ரமாண்ய பேதத்தாலே மூன்றும் ஜ்ஞாதவ்யமாகக் கடவது –

அதில் –திருமந்தரம் –
ரூசோ யஜூம்ஷி சாமானி ததை வாதர்வணா நி ச -சர்வம் அஷ்டாஷாராந்தஸ்தம் யச் சாந்யதபி வாங்மயம் -என்று
சகல சாஸ்திர சங்க்ரஹம் ஆகையாலே -சாஸ்திர முகத்தாலே பிரமாணம் ஆகக் கடவது –
இம் மந்த்ரம் சாஸ்த்ர த்வாரா பிரமாணம் ஆகிறதாகில்-
சாஸ்த்ரங்களாலே இந்த உபாய உபேயங்களை பிரதிபாதிக்கிற சில வாக்யங்கள் பிரமாணமாக அமைந்து இருக்க –
இம் மந்த்ரத்தையே நிர்பந்திக்கைக்கு ஹேது என் என்னில் –
அவ் வாக்யங்களைக் கொண்டு  அர்த்த நிர்ணயம் பண்ணப் பார்க்கில்
அவை பூர்வ பாகத்திலே யாகில் –
சகல சாகா ப்ரத்யய நியாய சஞ்சாரத்தாலே  சஞ்சரித்து அர்த்த நிர்ணயம் பண்ண வேணும் –
உத்தர பாகத்திலே யாகில்-
சகல வேதாந்த ப்ரத்யய ந்யாயம் சஞ்சரித்து  அர்த்த நிர்ணயம் பண்ண வேண்டும் –

அதில் சகல சாகா ப்ரத்யய நியாயமாகிறது –
ஒரு வாக்யத்திலே ஓர் அர்த்தத்தைச் சொன்னால் அதினுடைய அங்க உபாங்காதிகளை நேராக அறிக்கைக்காக –
சாகாந்தரங்கள் எல்லா வற்றிலும் சஞ்சரித்து -அவற்றில் சொல்லுகிற அர்த்தங்களிலும் ஜ்ஞானம் பிறந்து
அவ் வர்த்தங்களுக்கு அன்யோன்யம் பிறக்கும் விரோதங்களையும் சமிப்பித்து –
தனக்கு அபிமதமான அங்கியோடு சேருமவற்றைச் சேர்க்கை இறே-
அது எலி எலும்பனாய் இருப்பான் ஒருவனால் செய்து தலைக் கட்டுவது ஓன்று அன்று –

அப்படியே சகல வேதாந்த  ப்ரத்யயம் ஆகிறதும் –
ஒரு வேதாந்ததிலே ஒரு வாக்கியம் ஓர் அர்த்தத்தைச் சொன்னால் அல்லாத
வேதாந்தங்களிலும் சஞ்சரித்து அவற்றில் சொல்லுகிற அர்த்தங்களுக்கு அந்யோந்யம் விரோதம் பிறவாதபடி
விஷய விபாகம்  பண்ணி தனக்கு அபிமதங்களான அர்த்தங்களோடு சேருமவற்றை சேர்க்கை இறே –

ஆக இந் நியாயத் த்வயம் அபேஷிதம் ஆகில் –
அது துஷ்கரமாய் -ஒரு வாக்யம் மாத்ரம் கொண்டு அர்த்த நிர்ணயம் பண்ணுகை அசக்யம் ஆகையாலும்
ரூசோ யஜூம்ஷி சாமானி -இத்யாதியாலே சொல்லுகிறபடியே
சகல சாஸ்திர சார தயா பிரமாண சித்தமாய் –
சர்வராலும் அவிகீதமாக இம் மந்த்ரத்திலே உக்தமான அர்த்தத்துக்கு அப்படி க்லேச சாத்யதை  இல்லாமையாலும்
இம் மந்த்ரமே பிரமாணமாகக் கடவது –

இப்படி ஸூத்ருடமாக ஸ்ருதி சித்தமே யாகிலும் -அது ஒருவனுக்கு உபாதேயமாம் போது
சிஷ்டாசார கோசரமாக வேணும் என்னும் இடம் –
யதா தே தேஷு வர்த்தேரன் ததா தேஷு வர்த்தேதா யதா தே தத்ர வர்த்தேரன் -ததா தத்ர வர்த்தேதா -இத்யாதிகளாலே
சிஷ்யனுக்கு கர்த்தவ்யங்களை விதிக்கிற பிரதேசத்திலே
அவர்கள் யாதொரு படி அவற்றிலே வர்த்திப்பார்கள் நீயும் அப்படியே அவற்றிலே வர்த்தி என்றும் உக்தம் ஆகையாலும்
அஷ்டைகையில் பசு விசனம் சிஷ்ட பரிக்ரஹம் இல்லாமையாலே அனுஷ்டிக்கில் ஸ்வரூப ஹானி யாம்படி யாகையாலும்
சிஷ்டாசாரம் பிரமாணம் -என்று சிஷ்டாசாரத்தையே பிரதான பிரமாணமாக மீமாம்சகர் சொல்லுகையாலும் –
சகல சாஸ்திர சங்க்ரஹமான திரு மந்த்ரத்திலே உக்தமான அர்த்தத்துக்கு சிஷ்டாசாரம் அபேஷிதம் ஆகையாலே
இவ்வர்த்தத்துக்கு சிஷ்டாசாரா த்வாரா பிரமாணம் ஆகிறது த்வயம் –

ஆசார்ய ருசி பரிக்ருஹீதமான அர்த்தத்துக்கு சரண்யாபிமதத்வ ப்ரகாசகமான சரம ஸ்லோகம் –
சரண்ய அனுமதி த்வாரா பிரமாணம் ஆகிறது –

சாஸ்திர சித்தமுமாய் -சிஷ்டாசார சித்தமுமான அர்த்தம் சரண்ய அபிமதமாய் அன்றோ இருப்பது —
ஆனால் தத் அபிமதமாகைக்கு தனியே ஒரு பிரமாண அபேஷை யுண்டோ என்னில் –
ஜ்யோதிஷ்டோமேந ஸ்வர்க்காமோ யஜேத-என்று விஹிதமுமாய் –
ஸ்வர்க்கார்த்தமாக ஜ்யோதிஷ்டோ மாதிகளை அனுஷ்டிப்பாரும் யுண்டாய்
தத்தத் கர்ம சமாராதிதனாய் அவ்வோருக்கு பல ப்ரதனாய் போரா நிற்கச் செய்தேயும்
யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்தி விபச்சித்த வேத வாத ரதா பார்த்த நான்யத ஸ்தீதி வாதின –
காமாத்மா நஸ் ஸ்வர்க்க பரா -என்று ஷேபிக்காக  காண்கையாலே-அப்படியே அநபிமதமாய் இருப்பதொன்று  என்று
என்கைக்காக சரண்ய அனுமதி அபேஷிதம் இறே –

ஆக இப்படி
அர்த்த தார்ட்ய ஹேது பூதமான பிரமாண்யம் இவை மூன்றுக்கும் தனித்தனியே உண்டாகையாலே
இம் மூன்றும் ஜ்ஞாதவ்யமாகக் கடவது –

கிஞ்ச
திரு மந்த்ரம் -ஸ்வரூப யாதாம்ய பிரதிபாதன பரமாகையாலும்
த்வயம் உபேய யாதாத்ம்ய பிரதிபாதன பரமாகையாலும்
சரம ஸ்லோகம் உபாய யாதாம்ய பிரதிபாதனம் ஆகையாலும் -இம் மூன்றும் ஜ்ஞாதவ்யமாகக் கடவது –

இவ்வர்த்தத்தை சாஸ்திர சித்தம் ஆக்குகிறது -திரு மந்த்ரம் –
உப ப்ரும்ஹண சித்தம் ஆக்குகிறது சரம ஸ்லோகம் –
ஸ்வ அனுஷ்டானம் ஆக்கித் தருகிறது த்வயம் –

பிரணவத்துக்கு மந்திர சேஷம் விவரணமானாப் போலே
மந்திர சேஷத்தை த்வயம் விவரிக்கையாலும் –
த்வயார்த்தத்தை சரம ஸ்லோகம் விவரிக்கையாலும்
இம்மூன்றும் ஜ்ஞாதவ்யமாகக் கடவது-

இவற்றில் வைத்துக் கொண்டு பிரதம அனுசந்தேயமான மந்திர ரஹஸ்யம் –
சர்வம் அஷ்டாஷராந்தஸ்ஸ் தம் –என்கிறபடியே சகல அர்த்த ப்ரதிபாத்யமான சாஸ்த்ரங்களோடே-
அவ்வோ சாஸ்திர ப்ரதிபாத்யமான அர்த்தங்களோடு வாசி அறத் தனக்குள்ளே உடைத்தாயாகையாலும்
சகல  பல ப்ரதோ ஹி விஷ்ணு -என்கிற பிரமேய வஸ்துவைப் போலே
ஐஹ லௌகிகம் ஐஸ்வர்யம் ஸ்வர்க்காத்யம் பார லௌகிகம் -கைவல்யம் பகவந்தஞ்ச மந்த்ரோயம் சாதயிஷ்யதி -என்கிறபடியே –
சகல புருஷார்த்தங்களுக்கும் ஏக சாதனம் ஆகையாலும்
நாராயணாய வித்மஹே வாஸூ தேவாயா தீமஹி தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் -என்று முமுஷூக்களுக்கு
உபாதேய  தமமாக ஸ்ரீ விஷ்ணு காயத்ரியிலே ஓதுகிற வ்யாபக மந்த்ரங்களிலே பிரதமோபாத்தம் ஆகையாலும்
ஈஸ்வரனுடைய ஒரோ குணங்களுக்கு பிரதிபாதகமாயும்
பந்தக  பலார்த்திகளுக்கு ஒதுக்கி உபதிஷ்டமாயும் போருகிற
அநந்தா வை பகவன் மந்த்ரா -என்கிற பகவன் மந்த்ரங்களில் காட்டில் நெடு வாசி யுண்டு –

அதுக்கு மேலே வ்யாபகாந்தரங்களில் காட்டிலும் அர்த்த பௌஷ்கல்யத்தாலே  நெடு வாசி யுண்டு –
அவற்றில் காட்டில் இதுக்கு அர்த்த பூர்த்தியால் உண்டான வாசி எது என்னில் –

ஷடஷரி -வ்யாப்ய பதார்த்தங்களையும் -வ்யாபத பிரகாரத்தையும் -வ்யாப்தி பலத்தையும் -வ்யாபகனுடைய குணங்களையும்
சொல்லாதே வ்யாப்தி மாத்ர பிரகாசகம் ஆகையாலே அபூர்ணம் –

வ்யாபன பிரகாரத்தை சொல்லா நிற்கச் செய்தேயும் -வ்யாப்ய பதார்த்தங்களுக்கு வாசக சப்தம் இல்லாமையாலும் –
சர்வம் வசதி என்று அர்த்த பலத்தாலே சர்வ சப்தம் புகுந்தாலும் அதில் குணம் அன்வயியாமையாலும்
இதில் குண சித்திக்காக பகவத் சப்தத்தைக் கூட்டிக் கொள்ள வேண்டுகையாலும் –
வ்யாப்தி பலத்தைச் சொல்லாமையாலும் –
திரு த்வாதச அஷரியும் அபூர்ணம் –

இம்மந்த்ரம் அவை போல் அன்றியே
வ்யாப்ய பதார்த்தங்களோடு -வ்யாபன பிரகாரத்தோடு-வ்யாப்தி பலத்தோடு –
வ்யாபகனுடைய குணங்களோடு வாசி அற சாப்தமாகக் காட்டுகையாலே
அல்லாத வ்யாபக மந்த்ரங்களைக் காட்டில்
இதுக்கு அர்த்த பௌஷ்கல்ய நிபந்தனமான ஆதிக்யம் யுண்டு

இவ்வாதிக்யம் இல்லையானாலும் –
ஆச்சார்யவான் புருஷோவேத -என்றும் –
ஆசார்யாத் தைவ வித்யா விதிதா சாதிஷ்டம் ப்ராபத் -என்றும்
ஆச்சார்ய உபதிஷ்டமாய்ப் போரும் அர்த்தமே ஒருவனுக்கு உஜ்ஜீவன ஹேதுவாய் அறுவது –
அதில் இவ்வாசார்யர்கள் இம் மந்த்ரத்திலே நிஷ்டராய் இத்தையே தஞ்சமாக உபதேசித்துப் போருகையாலே
கீழ்ச் சொன்ன ஆதிக்யம் இல்லையே யாகிலும் ஆதரிக்க வேண்டும்படியாய் இருப்பதோர் ஏற்றம் யுண்டு –

சர்வஜ்ஞரான ஆசார்யர்கள் தாங்கள் இம் மந்த்ரத்திலே நிஷ்டராய்ப் போருகைக்கு ஹேது என் என்னில்-
கரதலாமலகம் போலே பகவத் ப்ரசாதத்தாலே தத்வ சாஷாத்காரம் பண்ணின ஆழ்வார்கள்
ஒரு மிடறாக இம் மந்த்ரத்தையே
ஆதரித்துப் போருகையாலே இவர்களும் தன் நிஷ்டராய்ப் போந்தார்கள்

ஸ்ரீ ஆழ்வார்கள் ஆதரித்துப் போந்தபடி என் என்னில்
வண் புகழ் நாரணன் –செல்வ நாரணன் -என்று தொடங்கி -வாழ் புகழ் நாரணன் -என்றும் முடிவாக
ஆதி மத்ய அவசானமாக இம்மந்த்ரத்தையே ஸ்ரீ நம்மாழ்வார் ஆதரித்துப் போந்தார் –
நாடும் நகரமும்  நன்கறிய நமோ நாராயணாய -என்று தொடங்கி -ஓவாதே நமோ நாரணா -என்று ஸ்ரீ பெரியாழ்வாரும்
நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று தொடங்கி -என்னை நலம் கொண்ட நாரணற்கு -என்று ஸ்ரீ நாச்சியாரும் –
நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -என்று உபக்கிரம தசையிலே
ஒருகால் சொன்னால் போலே ஒன்பதின் கால் சொல்லி
நாராயணா ஒ மணி வண்ணா நாகணையாய் வாராய் -என்று ஸ்ரீ திரு மங்கை ஆழ்வாரும்
நாத் தழும்பு  எழ நாரணா -என்று தொடங்கி -நலம் திகழ் நாரணன் -என்று ஸ்ரீ பெருமாளும் –
நான் முகனை நாராயணன் படைத்தான் -என்று தொடங்கி –
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே -என்று ஸ்ரீ திரு மழிசைப் பிரானும்
நன் மாலை பல கொண்டு நமோ நாரணா -என்று தொடங்கி -நாமம் பல சொல்லி நாராயணா -என்று ஸ்ரீ முதல் ஆழ்வார்களும் –
உபக்ரமத்தோடு உப சம்ஹாரத்தோடு வாசி அற ஆதரித்துப் போந்தார்கள் –

ஸ்ரீ ஆழ்வார்கள் ஆதரிக்கைக்கு அடி தத்வ பிரதிபாதகமான வேதாந்தங்கள் ஆதரிக்கை-
அவை ஆதரித்தபடி என் என்னில் –
விச்வம் நாராயணம் -என்று தொடங்கி –
நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண பர -நாராயணோ பரோ ஜ்யோதி -ஆத்மா நாராயண பர –
யாச்ச கிஞ்சிஜ் ஜகத்  யஸ்மின் த்ருஸ்யதே ஸ்ரூயதே அபிவா -அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்திதி  -என்று
சகல வேதாந்த நிகமன பூதமான நாராயண அநு வாகத்திலும்  –
ஏகோ ஹ வை நாராயண  ஆஸீத் -ந ப்ரஹ்மா நே சாந -நேமே த்யாவாப்ருதிவீ -என்று மஹா உபநிஷத்திலும் –
சஷூஸ் ச த்ரஷ்டவ்யஞ்ச  நாராயண ஸ்ரோத்ரஞ்ச ஸ்ரோதவ் யஞ்ச நாராயண -என்று தொடங்கி
திசஸ்ஸ பிரதிசஸ்ஸ சர்வம் நாராயண -என்று முடிவாக நடுவடைய ஸூபால உபநிஷத்திலும்
யஸ்யாத்மா சரீரம் யஸ்ய ப்ருதிவீ சரீரம் என்று தொடங்கி
யஸ்ய ம்ருத்யு சரீரம் என்கிறது ஈறாக நடுவுள்ள பர்யாயங்கள் தோறும்
ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹதபாப்மா திவ்யா தேவ ஏகோ நாராயணா –என்று
அந்தர்யாமி ப்ரஹ்மணத்திலும் ஏக கண்டமாக ஆதரித்துப் போந்தது –

ஆசார்யவான் புருஷோ வேத -உபதேஷ்யந்தி தே ஜ்ஞானம் ஜ்ஞானி நஸ் தத்வ தர்சின -என்று
சாஷாத் க்ருததத்வராய் இருக்கும்
ஆழ்வார்களுடைய ஆதர விஷயம் இம் மந்த்ரம் என்று சொன்ன பின்பு
இவர்களுக்கு சம்வாதமாக வேதாந்தங்களை எடுக்கக் கடவதோ -ஆயிருக்க -இவர்களுக்கு சம்வாதமாக
வேதாந்தங்களை பிரமாணமாக எடுப்பான் என் என்னில் –
ஸ்ம்ருத்ய நவகாசதோஷா பிரசங்க  இதி சேந்நான்ய ஸ்ம்ருத்ய நவகாச தோஷ பிரசங்காத்-என்றும்
இதரேஷாம் சாநு பலப்தே -என்கிற அதிகரணத்திலே பிரதான காரணவாத  நிராகரணம் பண்ணில்
ருஷிம் பிரஸூ தம் கபிலம் -இத்யாதிகளிலே
ஆப்த தயா ஸ்ருதனாய் -ஸ்வ யோக பலத்தாலே சாஷாத் க்ருதவனான கபிலனுடைய வேதார்த்த உப ப்ருஹ்மண அர்த்தமாக
பிரவ்ருத்தையான ஸ்ம்ருதியை அநாதரிக்க வேண்டும் –
அத்தாலே ஸ்ம்ருத்ய நவகச தோஷம் வரும் -என்கிற சாங்க்யரைக் குறித்து கபில ஸ்ம்ருதியை ஆதரிக்கில்
யாதவை கிஞ்சம் அநு ரவதத் தத் பேஷஜம் -என்று ஆப்தராக ஸ்ருதி சித்தராய்
ஸ்வ யோக மஹிம சாஷாத் க்ருததத்வரான  மன்வாதிகளுடைய ப்ரஹ்ம காரணத்வ வாதிகளான ஸ்ம்ருதிகளை
அநாதரிக்க வேண்டி வருமாகையாலே
வேதார்த்த அநு சாரம்  பண்ணிப் போருகிற மந்வாதி ஸ்ம்ருதிகள் உபாதேயமாகக் கடவது –
ஸ்ருதி விருத்தையான கபில ஸ்ம்ருதி பிராந்தி மூலம் ஆகையாலே கழியுண்ணக் கடவது என்று அங்கு நிர்ணயித்த படியே
தத்வ சாஷாத்காரம் பண்ணி
ஆப்த தமரான ஆழ்வார்களாலே ஆதரிக்கப் பட்டதே யாகிலும்  இம்மந்த்ரம்
வேதாந்த விருத்தமாகில்  அநாதரணீ யமாகக் கடவது –
அங்கன் அன்றிக்கே வேதாந்தங்களாலே ஏக கண்டமாக ஆதரிக்கப் படுகையாலே இவர்கள் ஆதரித்ததே அர்த்தம்
என்னும் இடத்துக்கு சம்வாதமாக வேதாந்தங்களை எடுக்க வேணும் –

வேதாந்தத்திலே உக்தமே யாகிலும் –
இதிஹாச புராணாப்யாம் வேதம் சமுப் ப்ரும்ஹயேத் பிபேத் யாழ்ப் ஸ்ருதாத்  வேதோ மாமயம் பிரதரிஷ்யதி -என்று
இதிஹாச புராண த்வாரத்தாலே வேத உப ப்ரும்ஹணம் பண்ணின ரிஷிகளும் –
கிம் தத்ர பஹூபிர்  மந்தரை கிம் தத்ர பஹூபிர் வ்ரதை நமோ நாராயணாயேதி மந்த்ரஸ்  சர்வார்த்த சாதக -என்றும்
ஆஸீநா வா சயாநா வா திஷ்டந்தோ யத்ர குத்ர வா நமோ நாராயணாயேதி மந்த்ரைக சரணா  வயம்  -என்றும்
நாராயணேதி சப்தோஸ்தி வாகஸ்தி வசவர்த்தி நீ ததாபி நரகே கோரே பதந்தீதி கிமத்புதம் -என்றும்
ஆர்த்தா விஷண்ணா ஸிதி லாச்ச பீதா கோரேஷூ ச வியாதி ஷூ வர்த்தமா நா –என்றும்
சங்கீர் த்ய நாராயண சப்த மாத்ரம் விமுக்த துக்காஸ் ஸூகிநோ பவந்தி -என்று
ஏவ மாதிகளாலே ஆதரித்துப் போந்தார்கள் –

ஆக ஸோபப் ப்ரும்ஹணங்களான வேதாந்தங்கள் ஆதரிக்கையாலே
அந்த வேதாந்த சாஷாத்காரம் பண்ணின ஆழ்வார்கள் ஆதரித்தார்கள் –
ஆழ்வார்கள் ஆதரிக்கையாலே ஆசார்யர்கள் ஆதரித்தார்கள் –
ஆசார்யர்கள் ஆதரித்த படியாலே நமக்கு இம் மந்திர விசேஷமே ஆதரணீயமாகக் கடவது –

கிஞ்ச –
மந்த்ரஸ் சர்வார்த்தாக சாதக -என்கிறபடியே –
சூத்திர பலத்தோடு அதிக பலத்தோடு வாசி அறத் தானே சாதித்துக் கொடுக்கும் வைபவத்துக்கும் மேலே
அவ்வோ பல சாதன கர்மங்களும் ஜப ஹோமாதி முகத்தாலே சஹகாரியாப் போருமதுவும் ஓர் ஏற்றம் யுண்டு –
அதில் சூத்திர பல சாதனமான ஜ்யோதிஷ்டோ மாதிகளுக்கு –
யதேவ வித்யயா கரோதி  ததேவ வீர்ய வத்திரம் -என்கிற உத்கீத உபாசன  ந்யாயத்தாலே
தத்  தத் சாதன சாத்தியமான புண்யத்தினுடைய பல உத்பத்தி பிரதிபந்தகமான பிரபல கர்மங்களை
தலை சாயப் பண்ணிக் கொடுக்கும் அப் புண்யாதிசயத்தைப் பண்ணிக் கொடுத்தான் சஹகாரியாக கடவது-

அப்படி விலஷண புருஷார்த்த சாதனமான கர்ம ஜ்ஞானாதிகளுக்கும் சஹகரித்துப் போரும்
அதில் கர்ம யோகத்தில் இழியுமவனுக்கு கர்ம யோக ஆரம்ப விரோதி பாப ஷய ஹேதுவாயும்-
அந்தக் கர்மத்தினுடைய அவிச்சேதா பாதகமாய் -கர்ம சாத்தியமான ஜ்ஞானத்தைச் சடக்கென பலித்தும்-
பிரதமத்திலே ஜ்ஞான யோகத்தில் இழிய நினைக்கும் அவனுக்கு கர்ம சாத்தியமான ஜ்ஞான ஆரம்ப விரோதி
பாப ஷயத்தைப் பண்ணிக் கொடுத்தும்
ஜ்ஞான பலமான பக்தியை சடக்கென பலிப்பித்தும் –
பக்தி யோகத்தில் இழியுமவனுக்கு பக்தி யோக ஆரம்ப விரோதி பாப ஷயத்தை பண்ணிக் கொடுத்தும்
பக்தி வ்ருத்த ஹேதுவாயும்  பக்தி விபாகமான பரஜ்ஞானாதிகளைப் பண்ணிக் கொடுத்தும் -மூன்றுக்கும் சஹகரிக்கும் –

இதுக்கு இந்த வைபவங்கள் எல்லாம் யுண்டாகைக்கு அடி சப்த வை லஷண்யமோ-அர்த்த வை லஷண்யமோ -என்னில்
சகல சப்த காரண தயா வந்த சப்த வை லஷண்யம் அடியாக வைபவமும் யுண்டு –
சகலார்த்த ப்ரதிபாதகதயா வந்த அர்த்த வை லஷன்யமும் யுண்டு –
அங்கன் அன்றியிலே புழுகு சட்டம் போலே இம் மந்த்ரத்துக்கு  வைபவம் உள் வாயிலே  கிடக்கிற
அர்த்தத்தினுடைய வை லஷ்ண்யம் என்றுமாம் –

இப்படி ஸ்லாக்கியமான இம் மந்த்ரத்தில் நிஷ்டராய்ப் போருவார்கள் நம் ஆசார்யர்கள் -அதுக்கடி என் என்னில்
அவர்கள் தங்கள் இஷ்ட  அநிஷ்ட ப்ராப்தி பரிஹாரங்களுக்கு சஹகாரி சஹம் அன்றியிலே  இருப்பதொரு
சாதன விசேஷத்தைப் பரிஹரிக்கையாலே
ஜ்ஞாதவ்ய அர்த்த மாத்ரா ஜ்ஞானமே அமைகையாலும் –
அதுக்கு மேலே -பிரதம ஆசார்ய பூதரான -நம்மாழ்வார் –
எண் பெருக்கு அன்னலத்து ஒண் பொருள் ஈறில வண்  புகழ் நாரணன் -என்றும்
நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதன் -என்றும்
இந்த நாராயண சப்தத்தைச் சொல்லும் போது
பூர்வ உத்தரங்களிலே இதில் அர்த்தத்தைச் சொல்லிப் போருவதொரு வ்யவஸ்தை யுண்டாகையாலும்-
இதிலே அர்த்தாம்சத்திலே நிஷ்டராய்ப் போருவர்கள் –
இவ்வர்த்தத்தைப் பொதிந்து கொண்டு கிடக்கையாலே கிழிச் சீரையோபாதி சப்தத்தையும் ஆதரித்துப் போருவர்கள் –

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாம் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading