உபதேச ரத்னமாலை –பாசுரம் -30/31/32/33- ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

(53-59-ஸ்ரீ வசன பூஷண ஏற்றங்கள்
60-70 -ஸ்ரீ வசன பூஷண சாரார்த்தங்கள்
இவை அருளிச் செய்ய வந்தவர் அன்றோ
இந்த நான்கு பாசுரங்களால்-30-31-32-33- மாச க்ரமத்தில் ஆழ்வார்கள் அவதரித்த திவ்ய தேசங்கள்
ஐப்பசி தொடங்கி அருளிச் செய்கிறார் -ஓர் இடத்தில் மட்டும் மாறுதல் இருக்கும்
மார்கழி -மாசி -சேர்த்து தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரையும் குலசேகரப் பெருமாளையும் -சேர்த்து –
திருமழிசைப் பிரானை பின்பு நம்மாழ்வார் உடன் சேர்த்து அருளிச் செய்கிறார் -)

அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்து உரைத்த ஆழ்வார்கள் (5)-என்று தொடங்கி
இவ்வளவாக ஸ்ரீ ஆழ்வார்கள் திரு அவதரித்த நாள் ஊர் திங்கள் அடைவு திரு நாமங்களும்
அவர்கள் செய்த வாழ்வான திரு மொழிகள் -என்கிறபடியே
ஸ்ரீ ஆழ்வார்கள் தொடக்கமானார் வைபவங்கள் எல்லா வற்றையும்
எல்லாரும் அறியும் படி அதி ஸ்புடமாக அருளிச் செய்தவர்

அவ்வோபாதி அவர்கள் திரு வவதரித்த தேசமும்
ஸ்ரீ அயோத்யா ஸ்ரீ மதுராதிகளோபாதி ஆதரணீயங்கள் ஆகையாலே அத்தை அருளிச் செய்ய வேணும் என்று
திரு உள்ளம் பற்றி அவற்றை அடைவே நாலு பாட்டாலே அருளிச் செய்வாராய்
அதில் இப்பாட்டில் ஸ்ரீ பொய்கையார் தொடங்கி அஞ்சு பேருடைய அவதாரண ஸ்தலங்களை அருளிச் செய்கிறார்-

எண்ணரும் சீர் பொய்கை முன்னோர் இவ் உலகில் தோன்றிய ஊர்
வண்மை மிகு கச்சி மலை மா மயிலை –மண்ணியில் நீர்
தேங்கும் குறையலூர் சீர்க் கலியன் தோன்றிய ஊர்
ஓங்கும் உறையூர் பாணனூர்—-30-

வண்மை-வளப்பம் -உதார குணம் என்றுமாம் –
மண்ணி-ஆற்றின் பெயர்
அப்பன் கோயிலில் அவதாரம் -நம்மாழ்வார் -திருக்குருகூர் சேவை
கலியன் திருக்குறையலூர் -அவதாரம் -திருநகரியில் சேவை –

ஏதாக் சர பிரமுக
ஜென்ம பூவோகி
காஞ்சி மல்லா மயூர நகரி
கலி வைரணி
ஜென்ம குறையலூர்
உத்பத்தி பூமி உறையூர்
முனி வாஹநஸ்ய

எண்ணரும் சீர் பொய்கை முன்னோர் இவ் உலகில் தோன்றிய ஊர்-
பரிகண நத்துக்கு முடியாத படியான கல்யாண குணங்களை யுடையரான ஸ்ரீ முதல் ஆழ்வார்கள் மூவரும்
எண்ணில் தொல் புகழ் -போலே-
பத்மபவோப்ய கண்யங்களாய் இறே இவர்கள் குணங்கள் இருப்பது –
(அஸங்க்யேய அபரிமித நிரவதிக நிரதிசய -எண்ணவும் நினைக்கவும் முடியாதவை
பத்மபவோப்ய-நாபி கமலத்தில் உத்பவித்த நான்முகனுக்கும் -நாபி பத்ம பவனத்தில் உள்ளவன் என்றுமாம் )
அப்படி அகண்ய குண கண மகா வைபவத்தை யுடையரான இவர்கள் இந்த ஜகத்திலே வந்து
திரு வவதரித்தது அருளின ஊர்கள் இன்னது என்கிறார்-

வண்மை மிகு கச்சி மலை மா மயிலை —
அதாவது மகா நகரங்களான காஞ்சியாதி நகரத் த்ரயமும்-கீழ் உக்தரான மூவர் யுடையவும்
அவதாரண ஸ்தலங்கள் -என்கை –

கச்சிக்கு மிக வண்மை யாவது –
நிறைந்த சீர்மை நீள் கச்சி –என்னும் படி திருப்பதிகளால் நிறைந்த சீரை யுடைத்தாய்
அழகாய கச்சி -2-9–என்கிறபடியே நகர அலங்காரங்களையும் உடைத்தாய் இருக்கை –
நகரேஷு காஞ்சி –
நிறைந்த கச்சி ஊரகத்தாய்
நின்றான் இருந்தான் கிடந்தான் இது வன்றோ-(2-4-1-ஊரகம் பாடகம் வெக்கா )
மன்றார் பொழில் கச்சி மாண்பு -என்றும் சொல்லக் கடவது இறே –

அன்றிக்கே
கச்சி வெக்காவில் கிடந்த ஸ்ரீ சர்வேஸ்வரனையும்
கச்சி நகர் வந்து உதித்த ஸ்ரீ ஆழ்வாரையும்
சம்சாரிகளும் கண்டு வாழும்படி உபகரித்துக் கொண்டு இருக்கிற ஔதார்யம் ஆகவுமாம் –

மலை கச்சி கிடந்தவனூர்-(2-6-5 )-என்ற அநந்தரம்
கடல் மல்லைத் தல சயனம்-(2-6-6-) -என்றார் இறே –
தத் சமமான கடல் மலை-
வங்கத்தால் மா மணி வந்து உந்து முந்நீர் மல்லையாய் -என்னக் கடவது இறே-
விலை இல்லாத ஜீவ ஈஸ்வர்யங்களை இறே உட் கொண்டு இருக்கிறது –
அதாவது –
சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல் மல்லை பூதத்தாரையும் -(தனியன் )
கடல் மல்லைத் தலை சயனத்து உறைவாரையும் -இறே இங்கு -கொழிக்கிறது -உரைக்கிறது –
தாமும் மா மல்லை -(இரண்டாம் -70 )என்றார் இறே

மா மயிலை –
நீளோதம் வந்து அலைக்கும் மா மயிலை மா வல்லிக்கேணியான் -என்னும் படி
மஹதாஹ்வயர் (பேயாழ்வார் ) அவதாரணத்துக்கு தகுதியான மஹா நகரமான மயிலை –
வந்துதைத்த வெண்டிரைகள் -(பேயாழ்வார் -16 )-இத்யாதி
அதுவும் அப்படியேயாய் இருக்கை –

சீர்க் கலியன் தோன்றிய ஊர்-மண்ணியில் நீர் தேங்கும் குறையலூர்-
அதாவது
கொண்ட சீர்த் தொண்டன் கலியன் (8-10-10)-என்கிறபடியே
ஜ்ஞான பக்த்யாதி கல்யாண குணங்களையும் –
அரும் பெறல் அன்பு புக்கிட்டு அடிமை பூண்டு உய்ந்து (திரு நெடும் தாண்டகம் ) -என்னும்படி
அத்தாலே உண்டான வாசிக காயிக ரூபமான கைங்கர்ய சம்பத்தையும் யுடையரான ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் என்கை –

அன்றிக்கே –
சீர் கலியன் -என்கிறதுக்கு
கலியன் என்னும் படி அருகாழி முதலாக அங்குளியாதி ஆபரணங்களையும் அபஹரித்து –
அநந்தரம் –
அவனுடைய சர்வ ஸ்வம்மான பெரிய திரு மந்தரத்தையும் பெற்ற சீராக்கவுமாம் –
அவளுக்கு திருவடிகள் கொடுத்த திருவாழி மோதிரத்தோபாதி
இவனுக்கு ஆச்சார்யன் பிரசாதித்த திரு மந்த்ரமும் -என்னக் கடவது இறே-
(ஆச்சார்யன் கை புக -திருமந்திரம் -கை புகும் —–மற்றையது கையதுவே )

இப்படியான அத்ருஷ்ட சம்பத்தை யுடையரான இவர் திரு வவதரித்த ஊரானது –
தேங்கும் பொருநல் திரு நகரியைப் –(4-10-1-)போலே பொங்கு புனல் மண்ணி -என்னும்படியான
மண்ணி யாற்றின் ஜல சம்ருத்தியை யுடைத்தான திருக் குறையலூர் -என்கை –
அந்த ஜல சம்ருதியால் இறே –
கலி மிக்க செந்நெல் கழனி யையும் யுடைத்தாய் இருக்கிறது –
இதுவும் -கலி வயல் தென்னன் குருகூரைப் -( 5-2-11 )போலே யாய்த்து –
அந்த திருக் குறையலூர் தான்
திருவாலி திரு நகரியோடே சேர்ந்து அதில் ஏகதேசம் என்னலாம் படியாய் இருக்கும் –

குறையலூர் சீர் கலியன் தோன்றிய ஊர்
ஓங்கும் உறையூர் பாணனூர்-
இவை இரண்டுக்கும் உண்டான மாச சேர்த்தியும் திரு நஷத்ர சேர்த்தியும் உண்டு இறே –

பாணனூர்-ஓங்கும் உறையூர் –
இதுக்கு ஒக்கம் ஆவது –
சேஷத்வத்துக்கு அநு குணமான உயர்ந்த குணத்தை யுடையவர்
திரு வவதரிக்கையால் வந்த உயர்த்தி -என்கை –

அன்றிக்கே –
கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவலூர் -( 9-2-) என்னும் படி –
ஸ்ரீ சர்வேஸ்வரன் உகந்து வர்த்திக்கும் திருப்பதியுமாய்
திரு வாழ் உறைந்த -என்றும்
உறையூர் வல்லியார் -என்றும் -நிரூபகமாம் படி
(உறையூர் நந்த சோழன் -கிளி சோழன் -உடன் இருந்தவன் )
ஸ்ரீ பிராட்டிக்கு உத்பத்தி ஸ்தானம் ஆகையாலும் உண்டான உச்சாராயம் ஆகவுமாம் –
இப்படி அதிசயத்தை உடைத்தான ஊர் ஆய்த்து இவருடைய அவதாரண ஸ்தலம் என்கை –

இது தான் திரு முகத் துறைக்கு எதிர் துறையாய் இருப்பது
எதிர் விழி கொடுக்கைக்கு பாங்கான தேசம் ஆயத்து —
(திருக்காவேரிக்கு ஆடிப்பெருக்கு சித்ரா பவ்ர்ணமி நம்பெருமாள் எழுந்து அருளும் துறைக்கு
எதிர் விழி -இது மூன்றாம் காரணம் )
(ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர்-ஸ்ரீமதி பொன்னாச்சி நாச்சியார் -வாசம் செய்த தேசமும் ஸ்ரீ உறையூர் )

(1951-வை மு கோபால ஸ்வாமி -திருவல்லிக்கேணி பேயாழ்வார் திரு அவதார ஸ்தலம்
சயன திருக்கோலம் கச்சி -திரு மயிலை -திரு வல்லிக்கேணி
வேத வல்லி -ஒரு வல்லி கேள்வன் ஒன்றிய மார்பன்
பேயாழ்வார் கோயில் -தனி நிர்வாகமாக இருந்ததாம் –
இங்கு உள்ள கிணறு தான் அவதாரம் என்பர்
அல்லி மலரில் அவதாரம் குரு பரம்பரை
திரு அல்லிக் கேணி –
பூதம் சரஸ்ய -தனியன் வியாக்யானத்திலும் மா வல்லிக் கேணியில் இவர் அவதாரம்
ராமாநுஜாய திவ்ய சரிதா -தம்முடைய அவதாரத்துக்கு யத்தன ஸ்தலமுமாய்
பேயாழ்வார் திரு அவதார ஸ்தலம் -என்று பிள்ளை லோகம் ஜீயர்
ப்ரபந்ந அம்ருதம் -கிரந்தம் -நாதமுனிகள் திக் விஜய யாத்திரை -இங்கு வந்து ஐவரையும் மங்களா சாசனம் –
இங்கு அவதரித்த பேயாழ்வாரையும் மங்களா சாசனம்
ஆறாயிரப்படி குரு பரம்பரை -கிணறு -மாதவ பெருமாள் அருகில் -அருண்டேல் தெருவில் –
காலை வரை இவர் மாலைக்கு அவர் என்று தீர்ப்பு வந்ததாம் –
மயிலைக்கு உட்பட்ட திருவல்லிக்கேணி –
கேசவ பெருமாள் திருக்கோயிலில் அவதாரம் பல ஸம்ப்ரதாயத்தார் சொல்வர்
மாதவ பெருமாள் திருக்கோயிலில் நின்ற திருக்கோலம்
காஞ்சி -திரு மல்லையிலும் அந்த அந்த ஆழ்வார்கள் நின்ற திருக்கோலம்
நாம் மூன்று பேரையும் சேவித்து மகிழலாம் )

(திரு மடலில் -என்னை மனம் கவர்ந்த ஈசனை வானவர் தம் முன்னவனை –
பர்த்தா பெயரைச் சொல்லாமல் அவ்யக்தமாக – திருமங்கை ஆழ்வார் )

—————————————————————–

இதில் தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் யுடையவும்
குலசேகரப் பெருமாள் யுடையவும்
அவதரண ஸ்தலங்களை இன்னது என்று
அருளிச் செய்கிறார் –

தொண்டர் அடிப் பொடியார் தோன்றிய ஊர் தொல் புகழ் சேர்
மண்டங்குடி என்பர் மண்ணுலகில் -எண்டிசையும்
ஏத்தும் குலசேகரனூர் என உரைப்பர்
வாய்த்த திரு வஞ்சிக் களம் —–31-

ப்ருதிவ்யாம் ஹி
பக்த பத ரேணு பாவதாரா பூமி
மண்டங்குடி இதை நகரி
நகரீ ப்ரதீதம்
விச்சாத கீர்த்தி குலசேகர ஜென்ம தேச
பிரச்சாத
மிதுளா நகரம்

தொண்டர் அடிப் பொடியார் தோன்றிய ஊர் தொல் புகழ் சேர் மண்டங்குடி என்பர் மண்ணுலகில் –
இந்த பூமியிலே தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திரு வவதரித்த ஊரானது –

தொல் புகழ் சேர் மண்டங்குடி என்பர்-
துன்னு புகழ் மா மறையோரான இவர் திரு வவதரிக்கைக்கு அநு குணமாம் படி
ஸ்வாபாவிகமான புகழை யுடைத்தான ஸ்ரீ திரு மண்டங்குடி என்பர்கள் –
அந்த அவதார வைபவத்தை அறிந்து போரும் பரம வைதிகரானவர்கள்
மண்டங்குடி என்பர் மா மறையோர் மன்னிய சீர் தொண்டர் அடிப் பொடி தொன்னகரம் -என்னக் கடவது இறே
தொன்னகரம் ஆகையாலே தொல் புகழை யுடைத்தாய்த்து –
அது தான்
ஸ்ரீ திருப் புள்ளம் பூதங்குடிக்கு அத்யா சன்னமாய் இறே இருப்பது –

எண்டிசையும் ஏத்தும் குலசேகரனூர் என உரைப்பர் வாய்த்த திரு வஞ்சிக் களம் —
இவருடைய பகவத் பாகவத ப்ராவண்யாதிகளை சர்வோதிக்கமாக ஸ்துதிக்கும் படியாய் இருக்கிற
முடி வேந்தர் சிகாமணியான -ஸ்ரீ குலசேகரப் பெருமாள் உடைய திரு வவதார ஸ்தலமாகச் சொல்லுவார்கள் –
அதுக்கு அநு ரூபமான ஸ்ரீ திரு வஞ்சிக் களம் –

வாய்க்கை -சேருகை –
அது தான் கேரள தேசத்திலே -நிசுளை -என்று பெயரை யுடைத்தான மகா நகரமாய் இருக்கும் –
இது தான் திரு வித்துவக் கோட்டுக்கு ஆசன்னமாய் இருக்கும் –

(தொண்டர் அடிப்பொடி யாட நாம் பெறில் கங்கை நீர் குடைந்தாடும் வேட்க்கை என்னாவதே -2-2–
குலசேகர பெருமாள் -சேர்த்தியும் உண்டே )

———————————————————————————

இதில்-
ஸ்ரீ திரு மழிசைப் பிரான் யுடையவும்
ஸ்ரீ திருக் குருகூர் ஸ்ரீ காரி மாறனான
ஸ்ரீ நம் ஆழ்வார் யுடையவும்
ஸ்ரீ வில்லி புத்தூர் ஸ்ரீ பட்டர் பிரான் ஆன ஸ்ரீ பெரியாழ்வார் யுடையவும்
திரு வவதார ஸ்தலங்களை இன்னது இன்னது என்று அருளிச் செய்து அருளுகிறார் –

(திரு மண்டங்குடிக்கு அனந்தரம் திரு மழிசை அருளிச் செய்திலர் ஆகிலும் –
அந்த அளவிலேயே ஆகவேண்டும் என்று கண்டு கொள்வது
அர்த்த க்ரமம் கொண்டு பாட க்ரமம் கொள்ள லாமே
அன்றிக்கே
நடந்ததுக்கு அனுகுணமாக -அவதார க்ரமம் படி இங்கு அருளிச் செய்கிறார் என்றுமாம் –
ஈது அவர் தோற்றது அடைவு -புகழ் மழிசை ஐயன் அருள் மாறன் -என்று கீழே உண்டே )

மன்னு திருமழிசை மாடத் திருக் குருகூர்
மின்னு புகழ் வில்லி புத்தூர் மேதினியில் -நன்னெறியோர்
ஏய்ந்த பத்தி சாரர் எழில் மாறன் பட்டர் பிரான்
வாய்ந்து உதித்த ஊர்கள் இவை—-32-

நன்னெறி-சரம பர்வ நிஷ்டர் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் –

மான்யா
மஹீ ரஸ பூரி ச அபிதான
ரம்யா பிருத்வி ஜனஸ்ய குருகாபி
ச வில்லி புத்தூர்
ஸ்ரீ பக்தி சாரார்
சட ஜித் -சாதன
விஷ்ணு சித்தர்
ஜென்ம ஸ்தலானி
புவன ப்ரத்ய சாநி

மன்னு திரு மழிசை –
இது தான் ஸ்ரீ ஜகந்நாதார் யுடையவும்–
ஸ்ரீ ஆழ்வார் யுடையவும் சம்பந்தம் மாறாதே நித்யமாய்ச் செல்லுகையாலே
ஸ்ரீ மஹீ ஸார ஷேத்ரம் என்னும்படி பூமியை நொய்தாகப் பண்ணும் படி இருப்பதான ஸ்ரீ திரு மழிசை –
அது தான்
ஸ்ரீ திரு நின்ற ஊருக்குத் தெற்காய் அதுக்கு அத்யா சன்னமாய் இருக்கும் –
(திருக்குறையலூர் -திருவாலி திரு நகரி அருகில் என்றும்
மண்டங்குடி -புள்ளம் பூதங்குடி அருகில் -என்றும் காட்டி அருளியபடியே இங்கும் )

மாடத் திருக் குருகூர் –
மாட மாளிகை சூழ்ந்து அழகாய திருக் குருகூர் -என்னும்படி
நகர அலங்காரங்களை யுடைத்தான-ஸ்ரீ திரு நகரி –

மின்னு புகழ் வில்லி புத்தூர் –
அதாவது -பாரார் தொல் புகழான் பட்டர் பிரான் -வந்து திரு வவதரித்து அருளுகையாலே
திக்குகளிலே பிரகாசகமான யசஸ்சை யுடைத்தாய் இறே ஸ்ரீ வில்லி புத்தூர் இருப்பது –
(அகார உகார மகார -சேர்ந்து சேவை -உண்டே
ராஜ கோபுரம் -அரசு சின்னம் -திருத்தேர் -புகழ் மலிந்த )

மேதினியில் —
பூமியினிலே –
இந்த பூமியில் உண்டான ஸ்ரீ நகர்யாதி ஸ்தலங்களிலே யாய்த்து
ஸ்ரீ மான்களான இவர்கள் திரு வவதரித்தது –

அவர்கள் ஆர் என்னில் –
நன்னெறியோர் ஏய்ந்த பத்தி சாரர் –
அதாவது–நன்னெறி உண்டு
ஆச்சார்ய அபிமானம் -அந்த மார்க்கத்திலே நிஷ்டராய் பழுதாகாத வழியை அறிந்து –
வேறாக ஏத்தி இருக்குமவர்களை பற்றி இருக்குமவர்கள் –
ஸ்ரீ கணி கண்ணர்–ஸ்ரீ பெரும் புலியூர் அடிகள் போல்வார் –
இப்படி அனந்ய பிரயோஜனர் ஆனவர்களாலே பொருந்தி நின்று சேவிக்கப் படுகிற
ஸ்ரீ பக்தி சாரர் ஆகிற ஸ்ரீ திரு மழிசைப் பிரான் –
(ஓர் இரவு இருக்கை -கணி கண்ணன் -ஆழ்வார் அகார வாச்யன் கடைசியில் –
பெருமாள் சீதா இளைய பெருமாள் அங்கு -சொன்ன வண்ணம் யதோத்தகாரி )

அன்றிக்கே –
நன்னெறியோர் -என்கிறத்தை–
மற்றை ஆழ்வார்களோடும் கூட்டி அநு சந்திக்க்கவுமாம் –
அப்போது
ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் போல்வார் ஆகிறது –
அவர்கள் இறே அங்குத்தைக்கு அநு ரூபமாக வந்தே வாசிகளாய் நின்று சேவித்துப் போந்தவர்கள் –

எழில் மாறன்-
ஜகதா பரணரான ஸ்ரீ வகுளா பரணர்-
எழில் -அழகு –

பட்டர் பிரான் –
ஸ்ரீ பட்ட நாதரான ஸ்ரீ பெரியாழ்வார் –

இவர்கள் மூவரும் பூமியிலே பெறுதற்கு அரிது என்னலாம் படி சேதனர் உடைய ரஷணத்துக்கு அநு குணமாக
திரு வவதரித்த ஊர்களின் உடைய வகை இவை யாய்த்து –

(பர தெய்வம் நிஷ்டை -பக்தி ரசம் -பல்லாண்டு பாடுதல் -மூன்றும் அனுஷ்ட்டித்து அருளிச் செய்து )

வாய்ந்து உதித்த ஊர்கள் இவை-
இவை தான் பூர்வ பச்சிம உத்தர தஷிண தேச ஸ்தலங்களாய் இறே இருப்பது –

( பூர்வ -கிழக்கு பஸ்ஸிம மேற்கு – -ஸ்ரீ வில்லி புத்தூர்
உத்தர திருமழிசை
தக்ஷிண -திருக்குருகூர் )

——————————————————

இனி ஆழ்வார் திரு மகளார் ஆண்டாள் என்று தொடங்கி
கீழே அருளிச் செய்யப் பட்டவர்கள் உடைய அவதரண ஸ்தலங்களையும் அடைவே இப்பாட்டாலே
அருளிச் செய்கிறார் –
இவர்கள் தான் வாழ்வாக வந்துதித்தவர்கள் ஆகையாலே ஊர்களும் சீரும் செல்வமும்
எங்கும் தழைத்து இருக்கும் படி –
(ஸ்ரீ வில்லிபுத்தூர் மீண்டும் இங்கு ஆண்டாளுக்காக
ஆழ்வார் திருமகளார் -21-பாசுரம் மூவரையும் கீழே பார்த்தோம் )

சீராரும் வில்லிபுத்தூர் செல்வத் திருக் கோளூர்
ஏரார் பெரும் பூதூர் என்னும் இவை –பாரில்
மதி யாரும் ஆண்டாள் மதுர கவி யாழ்வார்
எதிராசர் தோன்றிய ஊர் இங்கு —-33-

கோதா ஸமுத்பவ புரம்
புவி வில்லி புத்தூர்
கோளூர்
பூர்வ
மதுர கவே ப்ரஸூதி
ராமாநுஜஸ்ய
கருணா வருணாலஸ்ய
மான்யே மஹோ பத
பூத பூரி அவதாரஸ்ய

சீராரும் வில்லிபுத்தூர் –
சம்பத் சம்ருதியை உடைய ஸ்ரீ வில்லி புத்தூர்
அதாவது
பொன்னும் மணியும் முத்தும் சேர்ந்தாப் போலே
1-பொன்னடியை உடைய வில்லிபுத்தூர் உறைவானையும் –
2-மணி வல்லி என்னும் படி ஸ்திரீ ரத்னமான நாச்சியாரையும் (பார் என்னும் மடந்தையை மால் செய்யும் மால் )
3-முக்தாகரமான சேர்த்தியிலே திரு வவதரித்து –
இக் கரை ஏறி இளைத்து இருந்தேன் –என்னும்படி –
ஒரு கரை சேர்ந்து இருக்கிற முக்த ப்ராயரான ஸ்ரீ ஆழ்வாரையும் உடைத்தாய் இருக்கையாலே
நிரவதிக நித்ய ஸ்ரீயை யுடைத்தாய் இருக்கை –

(கோமள வல்லியை மால் செய்கிற -மால் -மணி வல்லி -அனைத்து ஜீவர்களுக்கும் ஸ்த்ரீத்வம் ஸ்வாபாவிகம் –
மணி வல்லிப் பேச்சு வந்தேறி அன்று -கடி மா மலர்ப் பாவையோடு பாவையோடு உள்ள சாம்ய ஷட்கம்
மழை நீர் உயர்ந்த சிப்பியில் விழுந்து முத்து ஆகும் -முத்து ஆகாரம் )

அன்றிக்கே –
கோவலர் தம் பொற்கொடியான ஸ்ரீ நாய்ச்சியாரையும்
மணியை வானவர் கண்ணனை -என்னும் படியான ஸ்ரீ சர்வேஸ்வரனையும் சொல்லுகிறது ஆகவுமாம் –

அன்றிக்கே –
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வத்தை போலே
ஸ்ரீ ஆழ்வாரும்
ஸ்ரீ திரு மகளாரும்
ஸ்ரீ கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணி
குணானுபவ ஏக யாத்ரையாய்ப் போருகையாலே
மலி புகழ் வண் குருகூர் -என்கிற படியே
ஸ்ரீ கிருஷ்ண குணங்களாலே பூரணமாய் இருக்கையைப் பற்றிச் சொல்லவுமாம் –

செல்வத் திருக் கோளூர் –
செல்வம் மல்கி யவன் கிடந்த திருக் கோளூர் -என்கையாலே
ஸ்ரீ வைத்த மா நிதியை யுடைத்தாய் இருக்கை –

ஏரார் பெரும் பூதூர் –
அதாவது
ஏரார் ஸ்ரீ எதிராசர் திரு வவதரிக்கையாலே அழகு மிக்கு இருந்துள்ள ஸ்ரீ பெரும் புதூர் என்கை –

அன்றிக்கே –
செங்கயல் வாவிகள் சூழ் வயல் நாளும் செறிந்த ஸ்ரீ பெரும் பூதூர் (ஆர்த்தி பிரபந்தம் )-என்கிறபடியே
ஊர் வளப்பத்தைச் சொல்லவுமாம் –

என்னும் இவை —
என்று -பிரசித்தமாகச் சொல்லப் படுகிற இந்த ஸ்தலங்கள் –

பாரில் மதி யாரும் ஆண்டாள் மதுர கவி யாழ்வார் எதிராசர் தோன்றிய ஊர் இங்கு –
அதாவது
பகவத் ஜ்ஞான பரிபூர்ணையாய–(மதி யாரும்–மதி ஆர்ந்த )
அது தான் ததீய பர்யந்தமாய்–இருக்கும் படியான தரத்தை உடைய ஸ்ரீ ஆண்டாள்
பூமியிலே திரு வவதரித்தது –

சீராரும் வில்லி புத்தூர் –
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு போலே யாய்த்து
வேயர் பயந்த விளக்கும் -இங்கு தோன்றிற்று –
(வேதியர் குலமே வேயர் குலம் என்பர் )

தத் துல்ய ஜ்ஞானராய்–
தேவு மற்று அறியா-ஸ்ரீ மதுரகவிகள்–
எதிகளுக்கு நாதரான ஸ்ரீ எம்பெருமானார்
இவர்கள் ஆவிர்பவித்த ஸ்தலங்கள் –
செல்வத் திருக் கோளூர் -ஏரார் பெரும் பூதூர் – என்னும் இவை யாய்த்து –

இங்கு -என்கையாலே –
அங்கு உள்ளார்கள் இங்கே வந்து ஆவிர்பவித்தார்கள் என்னுமது தோற்றுகிறது –

யத அவதாரான் மதுரா முராரே ராமஸ்ய சாகேத புரீச யத்வத் ததா யதீந்த்ரஸ்ய சதாம்
உபாஸ்யா புண்யா மகா பூத புரீ பபூவ -(ப்ரபந்ந அம்ருத ஸ்லோகம் )-என்னக் கடவது இறே –

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading