ஸ்ரீ விஷ்ணு லோக மார்க்கம் காட்டி அருளும் உத்தாரக ஆச்சார்யர் -இவர் வைபவம்
உய்ய ஒரே வழி உடையவர் திருவடியே -அனைவரும் சிஷ்யர்களுக்கு இதே உபதேசம் –
ஒன்பது பாசுரங்களால் சரம பர்வ நிஷ்டர் வைபவம் -இரண்டாம் பேடிகை விஷயம் –
முதலில் ஸ்ரீ ஆண்டாள் வைபவம் -உபய நிஷ்டையில் சேரும் இவர் நிலைப்பாடு –
ஸ்ரீ கிருஷ்ண காமம் ஆழ்வார்கள் கோஷ்ட்டி -ஸ்ரீ பெரியாழ்வார் மூலமே-பேறு என்றும் இருப்பதால் –
அடுத்து ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் –
அடுத்து ஸ்ரீ உடையவர் வைபவம் –
கீழே அஞ்சு பாட்டாலும்-(16-20)-இவர் திரு நஷத்ர வைபவ கதன முகத்தாலே
இவர் வைபவங்கள் எல்லாவற்றையும் அருளிச் செய்தாராய் நின்றவர் –
இப் பிரபந்த ஆதியிலே –
அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த ஆழ்வார்கள் -(5)-என்று தொடங்கி-
வந்துதித்த மாதங்கள் நாள்கள் தம்மை மண்ணுலகோர்
தாமறிய ஈதென்று சொல்லுவோம் யாம் –என்று உத்தேசித்த க்ரமத்தாலே
ஸ்ரீ ஆழ்வார்களுடைய அவதரண மாஸாதி க்ரமங்களை அதி ஸ்புடமாக அருளிச் செய்த அநந்தரம்
ஸ்ரீ ஆண்டாள் உடையவும்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் ஸ்ரீ எதிராசராம் இவர்கள் உடையவும்–
அவதரண மாஸாதி க்ரமங்கள் இன்னது என்று
சொல்லக் கடவோம் என்று பிரதிஞ்ஞை பண்ணி யருளுகிறார் –
(ஆதி நக்ஷத்திரங்கள்
உம்மைத் தொகை -ஆண்டாளை ஒரு கோஷ்ட்டி -இவர்கள் ஒரு கோஷ்ட்டி
பரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குவனோடு மைதிலியும் -போல் –
கூடப் போகாத -கூடப் போன கோஷ்ட்டி போல் )
இவர்கள் மூவரும் ஆச்சார்ய அபிமான நிஷ்டர் ஆகையாலும்
ஸ்ரீ பிராட்டி ஸ்ரீ திருவடி ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் உடைய அவதாரம் ஆகையாலும்
வருவதொரு சேர்த்தியும் உண்டு இறே –
விஷ்ணு சித்தர் தங்கள் தேவரை-(10-10-) -என்றும்
தேவு மற்று அறியேன் (2)-என்றும் -இறே
(பா மன்னு மாறன் )அடி பணிந்து உய்ந்த வது –
(திரிபுரா தேவியார் -உடையவர் கை காட்டும் தேவதையைப் போற்றுவோம் போல் –
விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே
மூக்கு அரிந்திட்ட குமாரனார் சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே –10-4-
ஸத்ய வாக்யன் அது பலிக்கா விட்டாலும் இது பலிக்குமே -இந்த சங்கையும் விலகி –
ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -என்று அருளிச் செய்கிறார் அன்றோ -)
அநந்த பிரதம நாம -இத்யாதியாலும் (அநந்த பிரதம ரூபம் -பாட பேதம் )
அஹீ நாம் ஈஸ்வரஸ் ஸ்ரீமான் ஆசீத் ராமானுஜோ முநி-என்றும் இவர் வைபவம் சொல்லிற்று இறே
மற்றை இவருடைய வைபவமும் குரு பரம்பரா பிரபாவத்தில் ஸூ ஸ்பஷ்டம் –
ஆகையால் இவர்கள் மூவருடைய அவதரணத்தையும் அருளிச் செய்து அருளுகிறார் –
ஆழ்வார் திரு மகளார் ஆண்டாள் மதுரகவி
வாழ்வார் எதிராசராம் இவர்கள் -வாழ்வாக
வந்துதித்த மாதங்கள் நாள்கள் தம்மின் வாசியையும்
இந்த வுலகோர்க்கு உரைப்போம் யாம் -21-
வாசி-வேறு பாடு -வைலக்ஷண்யம் -தனி சிறப்பு –
வாழ்வாக-அனைவரும் -(அவனுக்கும் )உஜ்ஜீவிக்க –
பாகவத சேஷத்வம் பாரதந்தர்யம் ஞானம் பிறந்து ததீய கைங்கர்யமே யாத்திரை –
பாட்டு கேட்க்கும் இடம் இத்யாதி எல்லாம் இவன் -வகுத்த இடம் -ஆச்சார்யர் திருவடிகளே அனைத்தும்
ஆண்டாளுக்கு மட்டும் ஆழ்வார் திருமகளார் அடை மொழி
நந்த கோபன் குமரன் -தாசாரதி -சக்ரவர்த்தி திருமகன் -என்பதே இவர்கள் உய்க்கும் பாசுரம் –
சூடிக் கொடுத்த பெருமை பிரதானம் -ஆகவே பதவுரையில் சூடிக் கொடுத்த நாச்சியார் –
இது கொண்டே கட்டி வைத்து
பாடலையும் மாலையையும் சூடிக் கொடுத்தாள் அன்றோ –
ஸ்ரீ விஷ்ணு சித்த துரித
ஜெகதாம் ஜநநீ
ப்ரத்யாஹ்வய மதுர கவி பூர்வக
ராமாநுஜஸ்யர்
கருமாண்புக வாரி ராஸே
மாசேனை சாஹம் அவதார தினம் பிரவீன்
ஆழ்வார் திரு மகளார் ஆண்டாள் –
ஸ்ரீ பூமிப் பிராட்டியாரான ஸ்ரீ ஆண்டாள்- ஸ்ரீ ஆழ்வார் திரு மகளாக அவதரித்து அருளின படி –
ஸ்ரீ பிராட்டி ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளாய் அவதரித்தால் போலே –
இவர்கள் தான்
வேந்தர் குலத்திலும்-வேயர் குலத்திலும் -அயோ நிஜராய் இறே திரு வவதரித்துப் போந்தது –
(கோதை -கூந்தல் -என்றும் மாலை -என்றும்
கோதை நறு மலர் நங்கை மார்பன் –பெரிய 9-5-
கோதை வேல் ஐவர்க்காய் –
தீர்க்க தர்சி -இவர் பேர் வைத்ததால் நடந்தது என்றுமாம் -வைதிகர் வார்த்தையை பின்னால் செல்லுமே )
மதுரகவி ஆழ்வார்-
தென் குருகூர் நம்பிக்கு அன்பனாய மதுர கவிகள் –
படைத்தான் கவியைப் போலே -(3-9-10)-வாய் வந்தபடி சொல்லுகை அன்றிக்கே
குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிகிற வாங் மாதுர்யம் உண்டு இறே இவர்க்கு –
நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -என்னக் கடவது இறே –
(வாய் முதல் அப்பன் வாயில் பகவான் அமர்ந்து பாடு பாடு என்ன வாய்க்கு வந்தபடி ஆழ்வார் பாட
இவர் ஆழ்வார் நிற்கப் பாடி -நெஞ்சில் தரித்து -பாவின் இன்னிசை-பாடினார் அன்றோ
எம்பெருமானாரை பாடியவர் பேய் பூதம் கோபன் காலன் ஆவார்கள்
ஆச்சார்யரை பாடியவர் அமுதனார் மதுரகவி )
எதிராசராம் இவர்கள் –
எதிகளுக்கு நாதரான எம்பெருமானார் –
இப்படி ஏற்றத்தை உடையரான இவர்கள் மூவரும் –
வாழ்வாக வந்துதித்த –
ஜகத்துக்கு எல்லாம் சம்பத்தாய் தோற்றின ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு சம்பத்தாய் இருப்பாரும் –
சாத்விக ஜன சம்பத்தாய் இருப்பாருமாய இறே இவர்கள் இருப்பது –
(செல்வ நாரணனுக்கும் செல்வம் அன்றோ இவர்கள் –
உலகம் மதிக்கும் -எதையும் – ஆபத்துக்கு உதவும் -)
வகுளா பரணாங்கிரி யுக்மம் -என்றும்
மேவினேன் அவன் பொன்னடி -என்றும்
மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -என்றும்
இவர்கள் தான் ஸ்ரீ ஆழ்வாருக்கு சரண பூதராய் இருப்பார்கள் இறே –
(மஹிஷி ஆகாரம் –
ஆழ்வார்கள் -அங்கம் -நம்மாழ்வார் அவயவி
இரண்டு ஆகாரமும் உண்டே ஆண்டாளுக்கு
இருவரை மட்டுமே சொன்னது ஆகவுமாம் )
அவ்வளவும் அன்றிக்கே –
பொன்னடியை மேவி ஏந்தினிய பாதுகமாய் இருக்கிற இவர்களை
பாத ரேகா சமராகவும் -(-பொன்னடியை மேவி-மதுர கவி )
பாத ரஷா சமராகவும் -(ஏந்தினிய பாதுகமாய் -எந்தை ராமானுஜன் -ஆர்த்தி பிரபந்தம் )
பரிவர் சொல்லிப் போருவது –
ஆகையாலே
(திருக்கோளூரில் மாயன் பால் போம் மாறன் )பொன்னடியே நந்தமக்குப் பொன் -(திருவாய் மொழி நூற்று அந்தாதி 57)-
என்று அருளிச் செய்தார் –
பொன்னடியாக விறே வாழ்வு உண்டாவது –
இப்படி மூவரும் ஸ்ரீ வைஷ்ணவ சம்பத்தாய்-
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை வர்திப்பிக்கைக்கு வாய்த்து திரு வவதரித்தது —
(திருக்கோளூர் -பதிகம் –கண்ணீர் மல்கி மண்ணுலகில் மன்னு திருக்கோளூர் மாயன் பக்கல்
போகும் மாறன் -பாசுரம் நினைவில் எடுத்து அழகான வியாக்யானம்
மாறன் பொன்னடி தானே மதுரகவி ஆழ்வார் என்பதை திரு உள்ளதாக கொண்டே மா முனிகள் அருளிச் செய்கிறார்
மேவினேன் பொன்னடி -அதில் ஆவாஹனம் ஆனார் -ஸ்ரீ சடாரி பிரதிஷ்டைகளிலும் ஆவாஹனம் உண்டே
பொன் காரணமாக வாழ்வு என்றும் பொன்னடியே வாழ்வு என்று சாடு )
ஏவம் விதரான இவர்கள் மூவருடைய மாதங்கள் நாள்கள் தம்மின் வாசியையும் –
இப்படி ஜகத்துக்கு எல்லாம் வாழ்வு ஆகிற சத்தை உண்டாம்படி
திரு வவதரித்த இவர்கள் உடைய
மாசங்களின் உடையவும் நஷத்ரங்களின் உடையவும் வை லஷண்யத்தை-
இந்த வுலகோர்க்கு உரைப்போம் யாம் –
இந்த ஜகத்தில் உண்டான மந்த மதிகளும்-மதியாரும்
ஸ்ரீ ஆண்டாள் தொடக்கமானார் திரு வவதரித்து அருளின இந் நாள்களின் ஏற்றத்தை அறியும் படி –
இதன் வாசி அறிந்த யாம்-
அவர்கள் அபேஷா நிரபேஷமாக சொல்லக் கடவோம் –
சேதனருடைய விதேயதையைக் கண்டு இடைவிடாமல் அறியாதன அறிவிக்கை -ஸ்ரீ ஆச்சார்ய க்ருத்யம் இறே –
(ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயா –அறியாதது அறிவித்த அத்தா –
ஸ்தோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் சித்தம் சத் சம்ப்ரதாயம் -தேசிகன் -)
——————————————————————
கர்க்கடே பூர்வ பல்குந் யாம் துளஸீ காந நோத் பவாம்
பாண்ட் யே விஸ்வம் பராம் கோதாம் வந்தே ஸ்ரீ ரெங்க நாயகீம்
கலி –98-நள வருஷம் -ஆடி -சுக்ல பக்ஷம் -சதுர்த்தசி -செவ்வாய் -பூர நக்ஷத்ரம்
கீழ்ச் சொன்ன மூவரிலும் வைத்துக் கொண்டு
அவர்களிலும் அதிகையான ஸ்ரீ ஆண்டாள் உடைய வைபவத்தை
மூன்று பாட்டாலே ( 22-23-24-)அருளிச் செய்வாராக ஆரம்பித்து
அதில் இப்பாட்டில்
ஸ்வ அனுபவத்தை நெகிழ்ந்து-
அஸ்மத் உஜ்ஜீவன அர்த்தமாக ஆண்டாள் திருவவதரித்து அருளின
ஸ்ரீ திருவாடிப் பூரம் இன்றோ என்று அதிசயத்து அதில் ஈடுபட்டு அருளுகிறார் –
(உலகோர்க்கு உரைப்போம் ப்ரதிஜ்ஜை கீழே
இங்கு தாமே ஆழங்கால் பட்டி நெகிழ்ந்து –
எமக்காக -தமக்காகவும் என்றும் கொள்ளலாம்
ஜீயருக்காக -நீராட்டம் உத்சவம் -அவரையே நோக்கி திருமஞ்சனம் அன்று மட்டும்
வாயினால் பாடி -மனத்தினால் சிந்தித்து தூ மலர் தூவித் தொழுது -ஸ்ரீ வராஹ நாயனார்
இடம் கேட்டு நமக்காக சாரம் அருளிச் செய்து உஜ்ஜீவிக்கப் பண்ணி அருளினார் )
(முன்பு எல்லாம் திருத்தேர் பல வாரங்கள் ஆகுமே –
நிலைக்கு வந்த அன்று இன்றோ திருவாடிப்பூரம் -பாசுரம் சேவிப்பார்களாம் )
இன்றோ திருவாடிப் பூரம் எமக்காக
வன்றோ ஆண்டாள் அவதரித்தாள் -குன்றாத
வாழ்வாக வைகுந்த வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய்—-22-
வாழ்வாக-வாழ்வான -பாட பேதங்கள் –
வாழ்வாக-வாழ்வு உண்டாகும் படி –
வாழ்வான-வாழ்வு உடைய வைகுந்தம் விட்டு வந்தமை –
மாஸே
ஸூசவ் பிரதம பல்குநீ
கோதா
அத்ர
ஸூ ரஷிதாம்
போகாம் ஸ பாராம பதம்
அவமஸ்ய
நித்யான்
பட்டேஸ்ரஸ்ய
மஹிதா ஸூகிதா
பவந்தி
இன்றோ திருவாடிப் பூரம் –
திருவாடிப் பூரம் என்று பிரசித்தமான திரு நஷத்ரம் அன்றோ –
இப்படி இருப்பதொரு நாள் நமக்கு லப்யம் ஆயிற்றது அன்றோ –
அலப்யமானது லபித்தால் அது தான் ஈடுபாட்டுக்கு ஹேதுவாய் இறே இருப்பது –
இதுக்கு ஹேது இன்னது என்கிறது மேல் –
எமக்காக வன்றோ ஆண்டாள் அவதரித்தாள் –
பிரஜை கிணற்றில் விழுந்தால்-ஒக்கக் குதித்து எடுக்கும் தாயைப் போலே
சம்சார மக்நரான நம்மை எடுக்கைக்காக அன்றோ –
சர்வ லோக ஜனனியான தான் இவ் விபூதியிலே வந்து திரு வவதரித்து அருளிற்று –
கூபத்தில் வீழும் குழவியுடன் குதித்து அவ் வாபத்தை நீக்கும் அந்த அன்னையைப் போல் -என்றும்
(ஆர்த்தி பிரபந்தம் -எம்பெருமானார் விஷயமாக அதில் )
கூபாந்தர் முக்த புத்ரம் பதித மநுபதன் மாத்ருவத் -என்றும் சொல்லுகிறபடியே –
ஜ்ஞாநாதிகரான இவரும் இவ் வவதாரத்தை ஸ்வார்த்தமாக அனுசந்தித்து அருளுகிறார் –
இனி இப்படி திரு வவதரிக்கையில் உண்டான அருமையைச் சொல்லுகிறது –
குன்றாத வாழ்வாக வைகுந்த வான் போகம் தன்னை இகழ்ந்து
அல்லாதார் உடைய போகங்களைப் போலே ஷயிக்கை அன்றிக்கே –
அகுண்ட வைபவத்தை உடைத்தான ஸ்ரீ வைகுண்டத்தில்
நிரவதிக பகவத் அனுபவம் ஆகிற மகா போகத்தை உபேஷித்து –
இங்கும்-போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை-(8-10) -என்னும்படி –
ஆழ்வார் திருமகளாராய் –
யாய்த்து திரு வவதரித்தது –
ராஜ மகிஷி யானவள் ராஜாவினுடைய பூம் படுக்கையை காற் கடைக் கொண்டு
பிரஜையினுடைய தொட்டிலை கட்டிக் கொண்டு கிடந்தது நோக்குமா போலே யாய்த்து
இவளும் நித்ய விபூதியில் நிரதிசய ஆனந்தத்தை நெகிழ்ந்து – இங்கே திரு வவதரித்துப் போந்தது –
இது இறே இவர் திரு உள்ளத்தை இப்படி வருத்தப் பண்ணுகிறது –
——————————–
கர்க்கடே பூர்வ பல்குந் யாம் துளஸீ காந நோத் பவாம்
பாண்ட்யே விஸ்வம் பராம் கோதாம் வந்தே ஸ்ரீ ரெங்க நாயகீம்
கலி –98-நள வருஷம் -ஆடி -சுக்ல பக்ஷம் -சதுர்த்தி -செவ்வாய் -பூர நக்ஷத்ரம்
கோதா -மாலை கட்டி தொழுதவரது மாலை -அன்றோ இவள் –
மாலைக் கட்டிய மாலை அன்றோ இவள்
ஸ்ரீ வராஹ நாயனார் இடது திருமுடியில் அமர்ந்து -நடுக்கம் தீரப் பெற்று- –
சரம சாரமான திரு நாம சங்கீர்த்தனம் – காட்டி அருளிய உபகாரம் –
இனி இப்படி இவள் திருவவதரித்து அருளின
இந்த திரு நஷத்ரத்தின் உடைய அசத்ருசத்வத்தால்
வந்த வைபவத்தை அருளிச் செய்கிறார் –
பெரியாழ்வார் பெண் பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த
திருவாடிப் பூரத்தின் சீர்மை -ஒரு நாளைக்கு
உண்டோ மனமே யுணர்ந்து பார் ஆண்டாளுக்கு
உண்டாகில் ஒப்பு இதற்கும் உண்டு—23-
ஸ்ரீ விஷ்ணு சித்த
துஹிதா வரேண்ய கோதா
திவ்ய உதயேன மஹிதா
ஸூஸி பல்குனி யம்
தத் துல்யம் அஸ்தி கிம் சிந்தயந்
தாரம்
சித்த கோத உபமான யதி பவேத்
தத் இதம் ததாஹ்யாத்
பெரியாழ்வார் பெண் பிள்ளையாய் –
இவள் பிறக்கைக்கு அடியான அவருடைய பெருமை இருக்கிற படி –
திரு மாலை கட்டுகையே தொழிலாக இருக்கிற இவர்
திருத் துழாய் அடியிலே திரு வவதரித்த இவளை எடுத்துக் கொண்டு போய்
தம் தேவிகள் கையிலே காட்டிக் கொடுக்க
வந்த்யை யாகையாலே அவளும் பிறர் பெண்டாய் இருக்கிற இப்பெண் பிள்ளையை
அதி ப்ரீதி உடன் எடுத்துக் கொள்ள அப்போது
வனமுலைகள் சோர்ந்து பாய (பெரியாழ்வார் -2-2-1)-என்னும் படி இறே ஸ்தன்யம் ப்ரவஹித்தது –
ஈன்ற தாய் மார்க்கு இறே ஸ்வ ஸூதாதிகள் சந்நிதானத்தில் இரக்கம் பிறந்து இப்படி ஆவது –
ஆகையால் பெண் பிள்ளையாய் திரு வவதரித்த மெய்ப்பாடு இருக்கிற படி –
(பிள்ளை -குழந்தை -பிரஜை என்றே அர்த்தம் -பிள்ளை பிறந்ததா பெண் பிறந்ததா வழக்கச்சொல் –
ஆண் பிள்ளை -பெண் பிள்ளை என்று விசேஷிக்க வேண்டுமே
அழுது பால் குடித்து வளர்ந்த இடம் தானே பிறந்த இடம் –தாயார் இடத்தில் பிரசவம் –
திருமலை நம்பி இருந்த இடத்தில் தானே எம்பெருமானார் எம்பார் –
இருந்தாலும் ஸ்ரீ பெரும் புதூர் மதுர மங்களம் என்கிறோம்
அவதார ஸ்தலம் ஆழ்வார் திரு நகரியா சிக்கில் கடாரம் -பெரிய திரு முடி அடைவு சொல்லும் –
சாதாரண வருஷம் -தப்பாக விஜய வருஷம் என்று அதிலும் தப்பாக உண்டே
எறும்பி அப்பா சாதாரண வருஷம் காட்டி உள்ளாரே -தாயார் இடம் தான் சிக்கில் )
(திருத் தேரில் இருந்து இறங்கி -திரு அவதார உத்சவம் -இன்றும் நந்தவனத்தில் கொண்டாடி அருளுகிறாள்
காணுமாறில் இனி உண்டு எனில் அருளே -பிரார்த்தித்து தெய்வ தேவகி பெற்று பால் கொடுத்தாளே –
தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ சங்கிக்க வேண்டாத படி இங்கு – )
ஆண்டாள் பிறந்த –
பிறந்தவளுடைய பெருமை இதுவாவதே –
உலகுடைய ஸ்ரீ நாய்ச்சியார் இறே
உலகத்திலே வந்து திரு வவதரித்தது –
(பூமா தேவி -உலகத்தையே ஆண்டவள் )
பிறந்த –
நானும் பிறந்தமை பொய்யன்றே என்று இறே-(10-4-) இவள் பேச்சு இருப்பது –
பெற்றவர்களும் பிறந்தவர்களும்
மே பிதா
மே ஸூதா -என்னுமா போலே –
ஒரு மகள் தன்னை உடையேன் –
பட்டர் பிரான் கோதை -என்று இறே–இருவரும் பணிப்பது –
(அத்ரி அநசூயா ஆஸ்ரமத்தில் சீதா பிராட்டி மே பிதா -கவலைக் கடலில் ஆழ்ந்தது –
இயம் ஸீதா -மம ஸூதா –
மமகாராம் விட்டவர்களுடைய மமகாராம்
ஆத்மாநாம் மானுஷம் மன்யே -பெருமாளும் சக்ரவர்த்தி திருமகன் என்று சொல்லி உகப்பான்
தயரதற்கு மகன் அன்றி மற்ற தஞ்சம் இல்லையே
நந்த கோபன் குமரன் -யசோதை இளம் சிங்கம்
பிதாமஹம் நாத முனிம் விலோக்ய -ஆளவந்தாரும் )
பிறந்த திருவாடிப் பூரத்தின் சீர்மை -ஒரு நாளைக்கு உண்டோ மனமே
இவள் பிறக்கைக்கு அடி இறே–சீர்மை உண்டாய்த்து இதுக்கு –
இப்படியான இதன் சீர்மை கீழ்ச் சொன்ன நாள்களில் ஒரு நாளைக்குத் தான் உண்டோ –
ஏன் இப்படி யாவது ஏன் -இல்லையோ என்னில் –
யுணர்ந்து பார் –
இவற்றின் வாசி அறிகைக்கு பரிகரமான மனசே-
மேல் எழ அன்றிக்கே உள்ளூற உணர்ந்து உணர்ந்து பார் –
(உணர்ந்து உணர்ந்து உணரிலும் உயிர் நிலை உணர்வு அரிது -ஜீவாத்மாவே –
அதுக்கு மேல் பரமாத்மா -அவனையும் ஆண்டவள் )
ஆண்டாளுக்கு உண்டாகில் ஒப்பு இதற்கும் உண்டு –
சர்வ லோக நிர்வாஹிஹையான ஸ்ரீ ஆண்டாளுக்கு சாம்யம் உண்டாகில் இதற்கும் சாம்யம் உண்டு என்கை –
அவர்களிலும் காட்டில் விஞ்சின ஷமா தயாதி குணங்களையும்
நாவால் தொகைக்க ஒண்ணாத அழகையும் உடையளாய் -என்று இறே அருளிச் செய்தது –
ஆகையால்-அவளுக்கு ஒப்பு இல்லாதாப் போலே இதற்கும் ஒப்பு இல்லை -என்று கருத்து –
(சமுத்திர இவ காம்பீரம் -ஸ்தைர்யே ஹிமவான் -தனம் குபேரன் -ஷமயா பிருத்வி சமயா-
விஷ்ணு சித்த குல நந்தன கல்ப வல்லி சாஷாத் ஷமா கருணயா கமலா இவாயாம் )
———————————————————————————
ஸ்ரீ ஆழ்வார்களைக் காட்டிலும் அதிசய வைபவத்தை உடையளான ஸ்ரீ ஆண்டாளை
ஹர்ஷத்துடனே ஸ்துதி என்று
தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –
அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தஞ்செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளைப் பத்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து –24-
அஞ்சு குடி -முதல் ஆழ்வார்கள் -திரு மழிசைப் பிரான் -நம்மாழ்வார் -குல சேகர பெருமாள் -பெரியாழ்வார் –
அஞ்சும் குடி
செயலை -ஞான பக்தி வைராக்யங்களை சொன்னவாறு
நிற்கும்-நிலை பெற்று இருக்கும் –
ப்ரணயதோ பகவத் யஜஸ்ரம்
அஸ்தாநே ரக்ஷண பயாகுல வம்சம் ஜாதாம்
பக்தாம் நிஜ குண அநு வர்த்த மானம்
பால்யேத் பக்வ சரிதாம்
பஜ சித்த கோதாம்
அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் –
சந்தான பீஜம் குரு பாண்டவா நாம் -என்று
பாண்டவர்கள் ஐவர்க்கும் பரிஷித்து ஒருவனும் சந்தான பீஜம் ஆனால் போலே
இவளும் பிரபன்ன குலரான ஆழ்வார்கள் பதின்மருக்கும் திரு மகளாம் படியான ஒரு மகளாய் இருக்கை –
இவள் தான் ஜ்ஞான சந்தான பிர ஸூதை யாகையாலே
குலமகள் கோதை -என்று இறே கூறி வைத்தார்கள்-
(ஒரு மகள் தன்னை உடையேன் -என்று அனைவருக்குமாகவே அருளிச் செய்தார் அன்றோ )
(முதல் நால்வர் சமகாலம் – திரு மழிசைப் பிரானும் முதல் ஆழ்வாரும்
நடு ஆழ்வார் பெரியாழ்வார் நம்மாழ்வார் குலசேகர பெருமாள் ஆண்டாள் மதுரகவி ஆழ்வார் சமகாலம்
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பாண் ஆழ்வார் திருமங்கை ஆழ்வார் -சமகாலம் –
மதிள் -அருள் மாரி -அருமாரி இன்றும் வெட்ட
சந்திக்கா விட்டாலும் சமகாலம்
இப்படி மூன்று முதல் -நடு -இறுதி -ஆண்டாள் -மதுரகவி -இப்படி ஐந்தும் என்றுமாம்
இப்படி ஆழ்வார்கள் அனைவரையும் அஞ்சு கூதிக்குள் சொல்லலாமே )
அன்றிக்கே –
அதீத காலங்களில் அபதானங்களுக்கு மங்களா சாசனம் பண்ணும் படி
அஸ்தாநே பய சங்கிகளான பட்ட நாத குலத்துக்கு அத்விதீயமான சந்ததியாய் இருக்கை –
பகவத் யஜஸ் அஸ்தாநே ரஷண பயாகுல வம்ச ஜாதா -என்று இறே ஸ்ரீ ஆசார்ய பௌத்ரருடைய திவ்ய ஸூக்தியும்-
இவளும் –
அன்று இவ் வுலகம் அளந்தாய் அடி போற்றி -என்று தொடங்கி
அதீத காலங்களில் அபதானங்களுக்கு மங்களா சாசனம் பண்ணினாள் இறே –
இவளுக்கு மங்களா சாசனம் பண்ணுகைக்கு அடி குடி பிறப்பு இறே
இக் குடிக்கு அஞ்சு குடி என்று ஆய்த்து நிரூபகம்-
(அன்று இவ் வுலகம் அளந்தாய் யடி போற்றி-இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி-இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி- இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி- இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்
குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி- இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல்- போற்றி இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்
என்று என்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் -இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்)
ஆழ்வார்கள் தஞ்செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் —
அதாவது-
மங்களா சாசனத்தில் வந்தால் தமப்பனாரோடே ஒத்து –
ஜ்ஞான பக்தியாதிகளில் வந்தால் ஸ்ரீ ஆழ்வார்கள் பதின்மரிலும் விஞ்சி யாய்த்து இவள் இருப்பது –
இவள் தனக்கு பதின்மருடைய பக்தியும் ஸ்த்ரீ தனமாய் வருகையாலும்
இன்னமும் ஸ்ரீ ஆழ்வார்களைப் போலே பக்த்ய அவஸ்தையான ஸ்த்ரீத்வத்தை பாவிக்க வேண்டாதே
தானான தன்மையை உடையவள் ஆகையாலும்
அவர்களில் அதிசயிதமான பக்த்யாதி ஸ்வ பாவங்களை யுடையவளாய்த்து இவள் இருப்பது –
அதாவது —
ஸ்ரீ ஆழ்வார்களைப் போல ப்ராப்ய த்வரை அதிசயத்தாலே
நோன்பு நோற்கை-
மடலூருகை –
தொடக்கமான (அநு கரிக்கை ஊடுதல் போன்றவையும் )
அநந்ய உபாயத்வ பஞ்சகமான வ்யாபாராதிகளால் அன்றிக்கே
(அவர்கள் கூட போக அஞ்சிய செயலை ) காமனைக் குறித்து-
பேசுவது ஓன்று உண்டு இங்கு எம்பெருமான் –என்றும் –
உன்னையும் உம்பியையும் தொழுதேன் -என்றும்
தொழுது முப்போதும் உன்னடி வணங்கி -என்றும் –
அவனைப் பர தேவதையாக எண்ணி –
அவன் காலிலே விழுந்த இந்த அநந்ய தைவத்ய பஞ்சகமான இந்த அதி பிரவ்ருத்தி
அவர்களில் காட்டி விஞ்சி இருக்கிற நிலை நின்ற ஸ்வபாவம் -என்கை –
(அநு காரத்திலும் பாகவதர்களையே அநு கருத்து தரித்து இருந்த ஏற்றமும் உண்டே )
(தெய்வங்காள் என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழியாய்
மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்
தை வந்த தண் தென்றல் வெம் சுடரில் தான் அடுமே.–5-4-8-
நம்மாழ்வாரும் தெய்வங்களை தஞ்சமாக பற்றிய ஓர் இடம் உண்டே –
உறங்காமல் இருப்பதையே காரணமாக தஞ்சமாகப் பற்றுகிறார்
நாச்சியார் திருமொழி வியாக்யானத்தில் இத்தை ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை காட்டி அருளுகிறார் )
(சீதா -தோற்றிற்று ஒரு குரங்கைக் கேட்டாள் –
ஆண்டாள் -சங்கரய்யா -வாய் அமுதம் அனுபவஸ்தரை கேட்ட ஏற்றம் உண்டே
சார்ங்க வில் நாண் ஒலி மட்டும் சீதா
திரு முகத்து மடுத்தூதிய சங்கு ஒலி -ருக்மிணி பிராட்டி –
இவளுக்கு இரண்டும் வேண்டுமே
சீதா த்ரிஜடை கனவு கண்டு தரித்து இருக்க
இவளோ தானே ஆயனுக்காக தானே கண்ட கனவு
இப்படி பெரிய பிராட்டியாரையும் விஞ்சி அன்றோ ஆண்டாள் வைபவம் )
பிஞ்சாய்ப் பழுத்தாளை –
அதாவது -லோகத்தில் ஓன்று பலிக்கும் போது
பலச்ய காரணம் புஷ்பம் -என்னும்படி பல காரணமான புஷ்பமாய்
பின்பு பிஞ்சாய்
அநந்தரம் காயாய்
இப்படி சில நாள் சென்றால் யாய்த்து பக்வ பலமாவது –
அங்கன் இன்றிக்கே –
அபக்வமான பிஞ்சு தானே பக்வ பலமாமால் போலே யாய்த்து இவளுடைய பரிமாற்றம் –
அதாவது –
பரபக்தி
பர ஜ்ஞான
பரம பக்திகளாய் க்ரமத்திலே
பரிணதையாம் படியான -ஞானம் கனிந்த நலம் -(ராமானுஜ 66-)ஆன பரம பக்தியானது
அறிவு நடை ஆடாத பர்வதத்திலே யாய்த்து பரி பக்வை யானது –
அதாவது-சஹஜ பக்தியானது அப்போது ஆய்த்து ஸ்புரித்தது -என்கை –
(ஞான தர்சன பிராப்தி மூன்று கிரமங்கள் உண்டே -ஞானம் கனிந்து நலமான பக்தி ஆகி பின்பு தானே பிராப்தி
ஷோடச கலா -இத்யாதி -நம்மாழ்வாருக்கே –16 திரு நக்ஷத்ரம் )
அறிவுக்கு அளவில்லாத அஞ்சு பிராயத்திலே யாய்த்து
திருப்பாவை இவளுக்கு முகம் செய்தது –
அஞ்சு பிராயத்திலே பெண் பிள்ளை ஜல்பித்தது பொருள் உண்டோ என்ன –
ஸ்ரீ நம் ஆழ்வார் -முலையோ முழு முற்றம் போந்தில (திருவிருத்தம் -60-)இத்யாதி –
முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே –ஸ்ரீ திரு விருத்தம்- 60- வாசிகம் –
முள் எயிற்று ஏய்ந்திலக் கூழை முடி கொடா
தெள்ளியள் என்பதோர் தேசிலள் என் செய்கேன்
கள்ளவிழ் சோலைக் கணபுரம் கை தொழும்
பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே -பெரிய திருமொழி —8-2-9-இங்கு காயிகம் –
அன்றிக்கே –
ஸ்ரீ ஆழ்வார்களுக்கு ததீய விஷயத்தில் உண்டான சரம ஜ்ஞானம் இவளுக்கு பிரதமத்தில் உண்டாகி –
அதாவது -நெடுமாற்கு அடிமையிலே (8-10 )அவர்கள் உடைய போக்யதையை
கனிமாக் கல்வி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே-என்றும்
தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே -என்றும்
பாகவத சமாஜ தர்சனம் இனிதாம்படியையும் –
ஸ்ரீ ஆழ்வாரும்
அப்படியே
கண் சோர வெங்குருதி யிலும்-(7-4)
தண் சேறை எம்பெருமானுக்கு அடியார் தம்மைக் கண்டு
எனக்கு இது காணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே -என்றும்
தண் சேறை எம்பெருமானை தாளை நாளும் சிந்திப்பாருக்கு
என் உள்ளம் தேனூறி
எப்பொழுதும் தித்திக்குமே -என்றும்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்தார் இறே –
அத்தனை நெடும் தூரம் போகாமல் –
போதுவீர் போதுமினோ -1–என்றும்
எல்லாரும் போந்தாரோ-15- -என்னும்–இது இவளுக்கு அடியிலே உண்டாய்த்து -என்கை –
(பெரிய பெருமாளை தொண்டர் அடிப்பொடி திருப்பள்ளி எழுச்சி
பெரியாழ்வார் கண்ணனை
இவளோ பாகவதர்களை )
ஆண்டாளைப் –
இப்படி பரிபக்குவ ஸ்வ பாவையுமாய்
கீழ் உக்த குணங்களுக்கு எல்லாம் ஒக்கும்படியான ஏற்றத்தை உடையவளை –
பத்தியுடன் நாளும் வழுத்தாய் மனமே மகிழ்ந்து –
அவள் பகவத் விஷயத்தில் கண் அழிவற்ற பக்த்யாதிகளை உடையளாய் இருக்குமா போலே
தத் விஷயத்தில் நீயும் பக்தி உடனே
கோதா தஸ்யை நம இதமிதம் பூயயே வாஸ்து பூய -(தனியன் )-என்றும்
நித்யமாக ஸ்துதி ரூபமான மங்களா சாசனத்தை
மங்கையும் பல்லாண்டு -என்று ப்ரீதி உடன் பண்ணிப் போரு –
உற்றேன் உகந்து பணி செய்தேன் -(திருவாய் -10-8-10)-என்னக் கடவது இறே –
உகந்து –மகிழ்ந்து
பணி செய்தேன்–பத்தியுடன் நாளும் வழுத்தாய் மனமே
————————————————
மேஷே சித்ரா ஸமுத்பூதம் பாண்ட்ய தேசே கணாம் ஸ கம்
ஸ்ரீ பராங்குச சத்பக்தம் மதுரகவிம் ஆஸ்ரயே
சித்திரை -மாதம் -சித்திரை நக்ஷத்ரம் -நடு நக்ஷத்ரம் -நமஸ் பதார்த்தம்
த்வாபர யுகத்தில் 863779 ஈஸ்வர ஆண்டு -குமுதர் அம்சம் கருடன் அம்சம் –
மது மாசமும் மதுர கவி ஆழ்வாருக்கும் -எம்பெருமானாருக்கும் வாய்த்ததே –
கீழ்ச் சொன்ன மூவரிலும் வைத்துக் கொண்டு மத்யஸ்தரான ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திரு வவதரித்த
மது மாசத்தில் சித்ர நஷத்ரம் ஆனது அல்லாத திரு நஷத்ரங்களில் காட்டில்
ஸ்வரூப ப்ராப்தமாய் இருக்கும் என்றத்தை தமக்கு ஆப்தமான திரு உள்ளத்தைக் குறித்து
ஆராயும் படி அருளிச் செய்கிறார் –
ஏரார் மதுரகவி இவ் வுலகில் வந்துதித்த
சீராரும் சித்திரையில் சித்திரை நாள் -பாருலகில்
மற்றுள்ள ஆழ்வார்கள் வந்துத்தித்த நாள்களிலும்
உற்றது நமக்கு என்று நெஞ்சே ஓர் —25-
தாம் அத்விதீய விபவாம்
மது மாத சித்ராம்
யுக்தாம் அன்யா பக்த நிகபோதாய வாசராம் தா
ஷேமங்கரீம் அநு தினம்
மது வாசராம்
ஹ்ருதயா அவதியே
ஏரார் மதுரகவி –
அவர் ஆகிறார் -அவர்களைச் சிரித்து இருப்பார் ஒருவர் -என்னும்படியான
ஆச்சார்ய அபிமான நிஷ்டை உடையராய் இருக்குமவர் –
(உண்டபோது ஒருவார்த்தையும் –உண்ணாத போது ஒரு வார்த்தையும் –
சொல்லுவார் பத்து பேர் உண்டு இறே –
அவர்கள் பாசுரம் கொண்டு அன்று இவ்வர்த்தம் அறுதி இடுவது -ஸ்ரீ வசன பூஷணம்—சூரணை -408-
மயர்வற மதி நலம் அருளப் பெற்று -பகவத் அனுபவ ஏக தாரகராய் இருக்கும் ஆழ்வார்களுக்கு –( உண்ணும் சோறு -எல்லாம் கண்ணன் )
உண்ட போதும் உண்ணாத போதும் ஆவன -பகவத் அனுபவ தத் லாப அலாபங்கள் –
அதில் பகவத் அனுபவம் பண்ணி ஹ்ருஷ்டரான போது -தத் தாஸ்ய விருத்தி காம தயா -ததீய தாஸ்யத்தில் ஊன்றி –
பயிலும் பிறப்பிடை தோறும் எம்மை ஆளும் பரமர் –3-7-1-
நாளும் பிறப்பிடை தோறும் எம்மை ஆளுடை நாதர் –3-7-2-
வருமையும் இம்மையும் நம்மை ஆளும் பிராக்கள் –3-7-5-
சலிப்பின்று ஆண்டு எம்மை சன்ம சன்மம் தோறும் காப்பர் –3-7-6-
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பர் –3-7-7-
எம் பல் பிறப்பிடை தோறும் எம் தொழு குலம் தாங்கள் –
அவன் அடியார் சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரியவே -செந்தாமரை கண் திருக் குறளன்
நறு மா விரை நாண் மலரடிக் கீழ் புகுதல் உறுமோ பாவியேனுக்கு-என்றும் –
ஆர் எண்ணும் நெஞ்சுடையார் அவர் எம்மை ஆள்வாரே –2-6-
ஞானத்தின் ஒளி உருவை நினைவார் என் நாயகரே-
நச்சித் தொழுவாரை நச்சு என்றன் நன்நெஞ்சே-
பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே –7-4-
கண்ணாரக் கண்டு உருகி கையாரத் தொழுவாரை கருதும் கால் உண்ணாது வெம் கூற்றம் ஓவாத பாவங்கள் சேராவே -என்றும் –
ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயனாவதே -பெருமாள் –2-1-
தொண்டர் அடிப் பொடி ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என்னாவதே –
இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே -என்றும்
இத்யாதிகளாலே தத் விஷயத்திலும் காட்டில் ததீயரே நமக்கு சேஷிகளும்-உபாய உபேய பூதரும்
என்று அத்ய ஆதரத்தை பண்ணிப் பேசுவது –
பகவத் அனுபவ அலாப க்லிஷ்டர் ஆன போது –
அப்படி பரம சேஷிகளும் பரம பிராப்ய பிராபக பூதருமான ததீயர் சந்நிஹிதருமாய் இருந்தாலும்-
( திருமங்கை ஆழ்வாரும் -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் கூட இருந்து இருப்பாரே அருள் மாரி பெயர் –
திரு மழிசை ஆழ்வாரும் முதல் ஆழ்வாரும் ஒரே காலம் ) -அவர்கள் பக்கல் நெஞ்சு செல்லாமல் –
பகவத் விஷயமே பிராப்யமும் பிராபகமுமாய் நினைத்து-
காண வாராய் –
காணுமாறு அருளாய் –
வரிகொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் என் செய்கேன் -( பெரிய திருமொழி -8–5-அழுகை -திருவாயமொழி -8-5-போலவே )
வெஞ்சமத்து அடு சரம் துரந்த வெம்மடிகளும் வாரானால் –
வாஸூதேவா உன் வரவு பார்த்து –வார் மணல் குன்றில் புலர நின்றேன்-( இது ஊடல் -மற்றவை அலற்றுவது )
என்று இத்யாதிகளால் -ஆர்த்தி பரவசராய் –
அலற்றுவது
ஊடுவது –
வெஞ்சிறைப் புள் – (வெறுப்பது )
உங்களோடு எங்கள் இடை இல்லை -(உதறுவது)
இத்யாதிகளாலே –
வெறுப்பது
உதறுவது
ஆகையாலே -உண்டபோது ஒருவார்த்தையும் –
உண்ணாத போது ஒரு வார்த்தையும் -சொல்லுவார் என்கிறார் –
ஆழ்வார்கள் எல்லாரும் ஏக பிரக்ருதிகளாய்-ஏக கண்டராய் இருக்கையாலே –
பத்துப் பேர் உண்டு இறே -என்கிறார் –
அவர்கள் பாசுரம் கொண்டு அன்று இவ்வர்த்தம் அறுதி இடுவது -என்றது –
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர்கள் ஆகையாலே பிரதம பர்வத்தில் காட்டில்
சரம பர்வத்துக்கு உள்ள தன்னேற்றம் அடையத் தெளியக் கண்டு பேசினார்களே ஆகிலும் –
சரம பர்வ ஏக நிஷ்டர் அன்றியே -பிரதம பர்வதத்திலே மண்டி –
தத் அனுபவ ஹ்ருஷ்டரான போது ஒன்றைச் சொல்லுவது –
தத் அலாப க்லிஷ்டரான போது ஒன்றைச் சொல்லுவதாய்-
ஒருபடி பாடர் அல்லாதவர்கள் பாசுரம் கொண்டு அன்று –
ஆச்சார்யனே உபாயம் என்று இவ் அர்த்த நிச்சயம் பண்ணுவது -என்கை –)
அவர்களை சிரித்து இருப்பார் ஒருவர் உண்டு இறே –
அவர் பாசுரம் கொண்டு – இவ்வர்த்தம் அறுதி இடக் கடவோம் –சூரணை -409-
பின்னை யார் பாசுரம் கொண்டு அறுதி இடுவது என்ன – அருளிச் செய்கிறார் –
அதாவது –
மேவினேன் அவன் பொன்னடி -தேவு மற்று அறியேன் -என்று –
ஸ்வ ஆசார்யாரான ஆழ்வார் திருவடிகளைப் பிராப்யமும் பிராபகமுமாய்
புரை அறப்பற்றி -அவிதித அந்ய தேவதராய் –
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -என்று தத் சங்கீர்த்த ஆநந்த நிர்பரராய்-
அடியேன் சதிர்த்தேன் -என்று உறுவது அறிந்து பற்றின சதுரராய் -இருக்கையாலே –
சரமபர்வத்தில் ஏற்றம் அறிந்து பேசா நிற்கச் செய்தே -தத் ஏக நிஷ்டர் அன்றியே –
பிரதம பர்வத்தில் மண்டி -தத் வைலஷண பரவசராய் -உண்டபோது ஒருவார்த்தையும் –
உண்ணாத போது ஒருவார்த்தையும் -சொல்லுகிற ஆழ்வார்கள் பதின்மரையும் –
அடியிலே ஒரு ஆசார்யன் திருவடிகளைப் பற்றி அநவரத ஸூகிகளாய் இருக்கப் பெறாதே –
ஸ்வ வை லஷண்யத்தாலே பிச்சேற்றும் பகவத் விஷயத்திலே முந்துற முன்னம் இழிந்து –
தத் அனுபவ தசையில் ஒன்றைச் சொல்லுவது –
தத் அலாப தசையில் ஒன்றைச் சொல்லுவதாய் –
இவர்கள் படுகிற பாடு என் என்று -பரிஹசித்து இருக்கும் ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் ஒருவர்
உண்டு இறே –
சரம பர்வ நிஷ்டராய் -சதைக ரூப வசனரான இவருடைய பாசுரமான –
கண்ணி நுண் சிறுத்தாம்பை கொண்டு -இவ்வர்த்தத்தை சம்சய விபர்யய கந்தம் அற
நிச்சயிக்கக் கடவோம் -என்கை –
அதவா –
உண்டபோது -இத்யாதிக்கு பகவத் அனுபவம் பண்ணின போது –
உண்டு களித்தேற்க்கு உம்பர் என் குறை –
யாவர் நிகர் அகல் வானத்தே –
மாறுளதோ இம்மண்ணின் மிசை -என்று
இப்படி பகவத் அனுபவ ஜனித ஹர்ஷ ப்ரகர்ஷ கர்விதமான ஒரு வார்த்தையும் –
தத் அனுபவம் பெறாத போது –
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால்-
சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் நான் –
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து –
தீயோடு உடன் சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ -என்று இப்படி
சோக வேக ஜனிதமான ஒருவார்த்தையும்
சொல்லுவார் ஒருவர் இருவர் அன்றிக்கே-பத்து பேர் உண்டு இறே –
ததீயரே சேஷிகளும் -உபாய உபேய பூதரும் என்று அறிந்து இருக்கச் செய்தே –
தத் அநு குணமாக நிற்க மாட்டாமல் -பகவத் விஷய வைலக்ஷண்ய பரவசராய் -இப்படி
உண்ட போது ஒரு வார்த்தை
சொல்லுகிறவர்கள் உக்தி கொண்டு அன்று –
ஸ்வ ஆச்சார்ய சரண யுகளமே உபாயம் என்கிற இப் பரமார்த்த நிர்ணயம் பண்ணுமது
அவர் திருவடிகளையே தனக்கு தஞ்சமாகப் பற்றி -தேவு மற்று அறியேன் -என்று இருக்கையாலே –
பிரதம பர்வதத்திலே மண்டி ஹர்ஷ சோக பரவசராய் பேசுகிறவர்களை
பரிஹசித்து இருப்பார் ஒருவர் உண்டு இறே -அப்படி இருந்துள்ள
ஸ்ரீ மதுரகவிகள் திவ்ய ஸூக்தியை கொண்டு இவ்வர்த்தம் நிச்சயம் பண்ணக் கடவோம்
என்று இங்கனே யோஜிக்கவுமாம்-)
(வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையர் என்பர் —சூரணை -411-
இவ் அர்த்த விஷயமாக ஓர் ஐதிஹ்யத்தை அருளிச் செய்கிறார் மேல் –
தத் உபய விபரீத பிரபாகந்தர பரிக்ரகம் -பகவானை பற்றி பகவானை அடைவது -சரம நிஷ்டருக்கு அநபிமதம் –
திருப் பவித்ரமான கூரத் தாழ்வானையும் -திரி தண்டமான ஆண்டானையும் –
மதுரகவி நிலையே இருப்பாகப் பெற்றோம் -மாறன் கலையே உணவாகப் பெற்றோம் -இது உணவு –
அவர் நிலை ஸ்திதி அதாவது ஆழ்வார் திருவடிகளில் ஸ்ரீ மதுரகவிகள் இருந்தால் போலே
பிராப்ய பிராபகங்கள் இரண்டும் எம்பெருமானார் திருவடிகளே என்று பிரதிபத்தி பண்ணி –
தேவு மற்று அறியேன் -என்று இருக்கும் வடுக நம்பி -( உம்மை ஒழிய மற்று ஒரு தெய்வம் அறியா வடுக நம்பி )
எம்பெருமானாருக்கு நிழலும் அடி தாறும் போலே அவிநா பூதராய்-
ராமானுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –
ராமாநுஜார்ய வசக பரிவர்த்திஷீய (பரிசரணம் -பரிகைங்கர்யம் என்றபடி- அழகர் இடம் பிரார்த்தனை ) -என்று
உபாய உபேயங்கள் அவர் திருவடிகளும் -அத் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யம் என்று இருக்கும் கூரத் ஆழ்வானையும் –
தாத்ருசரான முதலி ஆண்டானையும் –
சம்சாரத்தில் இருப்பில் அடிக் கொதிப்பால் வந்த ஆர்த்தியின் மிகுதியாலே கலங்கி –
காதாசித்கமாக பெருமாள் பக்கலிலும் சென்று பல் காட்டுவது –
தத் வை லஷண்யம் கண்ட வாறே பிரவணராய்ப் போருவதாம் இவ்வளவைக் கொண்டு –
(ஆழ்வார்கள் போலே பிரசுரம் இல்லை -எப்போதும் இல்லை எப்போதோ என்றபடி -வடுக நம்பி நிஷ்டைக்கு உயர்த்தி சொல்ல வந்தது )
எம்பெருமானார் திருவடிகளே பிராப்யமும் பிராபகமும் ஆனால் -தேவுமற்று அறியேன் -என்று இருக்க வேண்டாவோ –
அங்கன் இன்றிகே -சரம அவதியிலும் பிரதம அவதியிலும் கை வைத்து நிற்கிறவர்கள் -இரு கரையர் என்று அருளிச் செய்வர் -என்றபடி —)
(அவர்களைப் போல் கதறாமல் பேறு சித்தித்தை இறந்த காலத்தில் இவரும் அமுதனாரும் அருளிச் செய்வார்களே –
மதுரகவி நிலையே இருப்பாகப் பெற்றோம் -மாறன் கலையே உணவாகப் பெற்றோம் -இது உணவு -அவர் நிலை ஸ்திதி )
அவருக்கு ஏர்மை யாவது –
ஆசார்யவான் -என்னும்படி ஜகத்துக்கு எல்லாம் ஆபரண ஸ்தாநீயராய் இருக்கை –
அன்பர் அடிக்கு அன்பர் -இறே
திலதம் எனத் திரிவார் –
இவர் தாம் ஜகதாபரணரான நம்பிக்கு அன்பர் இறே –
ஏரார்ந்து இருக்கை யாவது –
எல்லாரும் தம்முடைய நிஷ்டையை யுடையராம் படி பண்ண வல்ல
ஆச்சார்ய பரதந்திர பூர்த்தியை யுடையராய் இருக்கை –
இவ் வுலகில் வந்துதித்த –
ஏவம் பூதரானவர் இந்த ஜகத்திலே ஆதித்ய உதயத்துக்கு அருணோதயம் போலே
வகுள பூஷண பாஸ்கர உதயத்துக்கு முன்னே வந்து திரு வவதரித்த –
(16000 வருஷங்கள் முன்பே இவர் அவதாரம் )
சீராரும் சித்திரையில் சித்திரை நாள் –
ஏரார்ந்து இருக்கும் அவர் வந்து திரு வவதரிக்கையாலே-இதுவும் சீரார்ந்தது –
அவர் தாம் ஸ்ரீ மான்களான அதிகாரிகளாய் இருக்கையாலே
சைத்ர ஸ்ரீ மான் அயம் மாஸ -என்று மாசமும் நேர் பட்டது –
(ஸ்ரீ ராமர் திரு அவதாரம் -பட்டாபிஷேகம் பெற்ற சீர்மை )
சீராரும் –
என்கிற இது சித்திரைகள் இரண்டுக்கும் விசேஷணமாகக் கொள்வது –
சித்ரா நஷத்ரம் பவதி -என்று ஸ்ருதி பிரசித்தமான திவசம் இறே –
இது தான் திரு ஊறல் கொண்டு அருளும் படி பெரிய திரு நாளுமாய் இருக்கும் –
(சித்ரா பவ்ர்ணமிக்கு அம்மா மண்டபம் எழுந்து அருளி ஸ்ரீ கஜேந்திர மோக்ஷம் உத்சவம் கண்டு அருளுவது )
இவர் தாம் -பெரியவர் சீரை -(ராமானுஜ 18)-என்னும் படியான மகாத்மா விறே –
இப்படி வைலஷ்ண்யத்தை உடைத்தான இத் திரு நஷத்ரத்தை –
பாருலகில் மற்றுள்ள ஆழ்வார்கள் வந்துதித்த நாள்களிலும் –
இந்த பூ லோகத்தில் –
உண்ட போது ஒரு வார்த்தையும் உண்ணாத போது ஒரு வார்த்தையும்
சொல்லுவார் பத்துப் பேர் -என்னும் படியான ஸ்ரீ ஆழ்வார்கள் பதின்மரும்
இந்த யுலகில் இருள் நீங்க வந்து உதித்த மாதங்கள் நாள்கள் -ஆன இந்த திரு நஷத்ரங்களிலும் –
உற்றது நமக்கு என்று நெஞ்சே ஓர் –
மதுரகவி சொற் படியே நிலையாகப் பெற்றோம் -(ஆர்த்தி பிரபந்தம்- 55 )-என்று இருக்கிற ஸ்வரூபத்துக்கு சேர்ந்தது என்று
மனசே புத்தி பண்ணு
உற்றதும் உன்னடியார்க்கு அடிமை -என்னக் கடவது இறே –
(தானே வைகுந்தம் தரும் -காலைப் பிடித்து கார்யம் கொள்ளுமோ பாதி -)
மற்றுமோர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும்
கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே –ஸ்ரீ பெரிய திருமொழி—8-10-3-
———————————————
இனி அருளிச் செயல்களுக்கு அர்த்த நிரூபணம் பண்ணும் ஸ்ரீ ஆசார்யர்கள் –
இவருடைய திவ்ய பிரபந்தத்தின் உடைய அர்த்த கௌரவத்தை ஆராய்ந்து –
அருளிச் செயலின் இடையிலே இத்தை ஸ்தாபித்த படியை
ச த்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் –
வாய்த்த திரு மந்த்ரத்தின் மத்திமமாம் பதம் போல்
சீர்த்த மதுரகவி செய் கலையை -ஆர்த்த புகழ்
ஆரியர்கள் தாங்கள் அருளிச் செயல் நடுவே
சேர்வித்தார் தாற்பர்யம் தேர்ந்து –26-
ஆர்த்த-ஆர்ந்த -நிறைந்த –
மஹதி மந்த்ராதிபர்
மத்யம பதம்
யதாபி
ஏவம் ஹி பூர்வ குரவ்
திராவிட ஆகாமம்
ஆபூத
மதுர பூர்வ கவி பிரபந்தம் மத்யே
வாய்த்த திரு மந்த்ரத்தின் மத்திமமாம் பதம் போல் –
இது வாய்க்கை யாவது –
சப்த பூர்த்தியையும்-அர்த்த பூர்த்தியையும் -உடைத்தாகையாலே –
ஸ்வரூபத்துக்கு அனுரூபமாய் இருக்கை –
(ஆத்ம ஸ்வரூபத்துக்கு வாய்த்த திரு மந்த்ரம் )
சர்வம் அஷ்டாந்த ராந்தச்தம்-என்று இறே பெரிய திரு மந்த்ரத்தின் பெருமை –
மந்த்ராரம் த்ராயத இதி மந்திர -என்கிறபடியே -( த்யானிப்பவரை ரக்ஷிக்கும் )
தன்னை அனுசந்திப்பாரை சம்சாரத்தில் நின்றும் உத்தரிப்பிக்குமதாய் இருக்கை –
சம்சார நிவர்த்தகமான பெரிய திரு மந்த்ரம்-( முமுஷுப்படி ) -என்று இறே அருளிச் செய்து அருளிற்று-
சத்யஸ் சம்சார நாசனம்-(சடக்கென சம்சாரம் நிரசிக்கும் ) -என்னக் கடவது இறே –
மத்திமமாம் பதம் போல் —
அதில் மத்யம பதம் உண்டு -நமஸ்ஸூ -அந்தப் பதம் போலே-
அது தான் –
1-ஸ்வரூப உபாய புருஷார்த்த விரோதி நிவர்தகமுமாய்-
2-ஸ்வரூப உபாய புருஷார்த்த பிரதிபாதகமுமாய் -இருக்கும் –
(ஓம் நம -நமோ நம -நாராயணாய நம
யானே நீ என் உடைமையும் நீ -ஸ்வரூப விரோதி கழிதல்
களைவாய் நீ களை கண் மற்றிலேன் -உபாய விரோதி கழிதல்
மற்றை நம் காமங்கள் மாற்று -புருஷார்த்த விரோதி கழிதல் )
சித்தே ததீய சேஷத்வே சர்வார்த்தாஸ் சம்பவந்திஹி -என்னும்படியான
ததீய பாரதந்த்ர்யத்தையும் உடைத்தாய் இருக்கும் –
அந்தப் பதத்தில் அர்த்தம் இறே ஸ்வரூபத்துக்கு மிகவும் அநு ரூபமாய் இருப்பது –
அந்தப் பதம் போலே யாய்த்து இதுவும் –
அப்படியே இவர் தாமும் -ததிய்யாநா மக்ரேசா-என்று
ததியாநாம் அக்ர கண்யரான ஸ்ரீ ஆழ்வார் உடைய விஷயத்திலே
சேஷித்வ சரண்யத்வ ப்ராப்யத்வாதிகளை இறே
ஸ்வ பிரபந்தமான கண்ணி நுண் சிறுத் தாம்பிலே அருளிச் செய்தது –
சீர்த்த மதுரகவி செய் கலையை –
ஸ்லாக்கியமாய்-
மதுரகவி சொன்ன சொல் -என்னும்படி இவராலே சொல்லப் பட்டதான
கண்ணி நுண் சிறுத் தாம்பாகிற பிரபந்தத்தை -சேர்வித்தார் -என்று மேலே கிரியை –
கலையைத்-தண் தமிழ் நூலோடே- சேர்வித்தார்கள் –
ஒண் தமிழ் நூலடியாக யுண்டான கலை இறே –
சீர்த்த மதுர கவி என்று
தேவு மற்று அறியாத கௌரவத்தை உடையவர் -என்னவுமாம் –
சீர்த்த செய் கலையை –
பிரதம பர்வ விஷயமான பிரபந்தங்களைக் காட்டிலும்-
சரம பர்வ விஷயமான பிரபந்தம்-அத்யந்தம் சீரியதாய் இறே இருப்பது –
மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருளைப் பொதிந்து கொண்டு இருக்கிற பெருமை யுண்டே இதுக்கு –
அவர் பாசுரம் கொண்டு இவ் வர்த்தம் அறுதி இடக் கடவோம் -என்னும் படி இறே இதன் ஏற்றம் இருப்பது —
(வேதியர் பொருள் -மற்ற பிரபந்தங்கள்
மிக்க வேதியர் உட் பொருள் -இரண்டாலும் இதுக்கு ஏற்றம்-இதற்கு தாத்பர்யம் என்கிறார் இதில் )
அன்றிக்கே
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளில் ஸ்ரீ பெரிய முதலியார் இத்தை பன்னீராயிரம் உரு அனுசந்திக்க
அதடியாக ஸ்ரீ ஆழ்வார் திரு உள்ளம் பிரசன்னமாய்
அத்தாலே அருளிச் செயல்கள் எல்லாம் அப்போது பிரகாசம் ஆய்த்து இறே –
அத்தைப் பற்றி வந்த கௌரவத்தை யாகவுமாம் –
(ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் 16000 வருஷம் முன் அருணோதயம் போல் திரு அவதரித்து நம்மாழ்வாரை பற்றினால் போல்
ஸ்ரீ பராங்குச தாசர் 6000 வருஷம் யோக மகிமையால் இருந்து ஸ்ரீ நாத முனிக்கு கண்ணி நுண் சிறுத்தாம்பு சாதிக்க
அதனாலே ஸ்ரீ நம்மாழ்வார் முன் 12000 தடவை உரு சொல்லி பெற்றார் )
இப்படி சாரார்த்த பிரதிபாதக தயா வந்த கௌரவத்தை யுடைத்தாய்
ஸ்ரீ மதுர கவிகளாலே நிர்மிதமான கண்ணி நுண் சிறுத் தம்பாகிற கலையை
செய்ய கலையான அருளிச் செயலின் இடையிலே சேர்வித்தார்கள் –
ஆர்த்த புகழ் ஆரியர்கள் தாங்கள் –
ஸ்ரீ மதுரகவிகளின் உடைய அடிப்பாட்டிலே நடப்பாராய்
அருளிச் செயல்களுக்கு அர்த்த நிரூபணம் பண்ணுகையால் வந்த
சம்ருதமான யசஸ்சை யுடையராய்
அத்தாலே பெரு மதிப்பராய் இருக்கிற ஆசார்யர்கள் தாங்கள் –
ஆர்த்த புகழ் -என்றது ஆர்ந்த புகழ் -என்றபடி –
ஆர்த்த புகழ் அச்சுதனை-(3-5-11) என்றால் போலே
இது தான் –
பயிலும் சுடர் ஒளி -( 3-7-)
நெடுமாற்கு அடிமை -(8-10-)
தொடக்க மானவற்றின் அர்த்தத்தை பிரதிபாதிக்கையாலே
இதன் அர்த்த கௌரவத்தை விசாரித்து–நன்றாய் இருப்பதொரு ஹாரத்தை சமைத்து
அது ஒளி பெரும் படி ஸ்லாக்கியமாய் இருப்பதொரு நாயகக் கல்லை–அதன் நடுவே பதித்தால் போலே
அருளிச் செயல்கள் தான் நிறம் பெரும் படி அவற்றின் நடுவே இத்தை சேர்வித்தார்கள் –
சேர்ந்த சேர்க்கையின் சாதுர்யத்தாலே இறே முது மாலை தொடக்கமான ஆபரணாதிகள் நிறம் பெறுவது –
அது போலே யாய்த்து இதுவும்
அருளிச் செயல்களுக்கு அதிசயத்து இருக்கும் படி இது தான்
ஆந்தராளிக வைஷ்ணவ பதமான நமஸ்ஸோ பாதி
நடுவில் நாயகமாய்-எல்லாவற்றையும் பிரகாசித்துக் கொண்டு ஆய்த்து இருப்பது –
இவர் திரு வவதரித்த சித்திரையில் சித்திரை-அல்லாத மாச நஷத்ரங்களுக்கு மத்யேயாய்
அல்லாத வற்றுக்கும் அதிசயித்து இருக்குமா போல-
இவர் பிரபந்தம் –
அருளிச் செயல்களின் இடையேயாய்-
அவற்றுக்கும் அதிசயத்தை ஆபாதிக்குமதாய் இருக்கும் –
இத்தை மத்யம பதமாக யோஜிக்கும் க்ரமத்தால் தான்
இத்தை ஒழியக் கீழ் மேல் உண்டான பிரபந்தங்கள் பிரணவத்தின் யுடையவும்-
நாராயண பதத்தின் யுடையவும் ஸ்தானே யோஜிக்கவும் குறை இல்லை –
அது எங்கனே என்னில்
வேதத்துக்கு ஓம் என்னுமது போலே -யான திருப் பல்லாண்டு தொடங்கி
கண்ணி நுண் சிறுத் தாம்பு அடியாக யுண்டான பிரபந்தங்கள் பிரணவ அர்த்தமாகவும்
கண்ணி நுண் சிறுத் தாம்பு -நமஸ் -னுடைய அர்த்தமாகவும்
மேலே -நாராயணா என்னும் நாமம் தொடங்கி உப பாதிக்கிற பெரிய திரு மொழி தொடங்கி
நாராயணா ஒ மணி வண்ணா நாகணையாய்
வாராய் என் ஆர் இடரை நீக்காய் -என்கிற திரு மடல்கள் ஈறாக யுண்டான பிரபந்தங்கள்-
நாராயண சப்த அர்த்தமாயும்
கைங்கர்யத்வ ஸூசகமான சதுர்த்யர்த்தமாகவும்
அனுசந்திக்கலாமாய் இறே இருப்பது
(இயற்பா -அனுசந்தான கிராமத்தில் இறுதியாக பல இடங்களில் –
திருமலையில் இயற்பா முதலில் -உண்டே )
ஆசார்ய பரதந்தரான ஸ்ரீ அனந்த ஆழ்வானுக்கு சித்திரையில் சித்திரை இறே திரு நஷத்ரம் –
ஆகையால் அவருக்கு ஸ்ரீ மதுரகவி தாசர் என்று தாஸ்ய திரு நாமம்-
(திருமலையில் -வழி எம்பெருமானார் சந்நிதி -திருவேங்கடமுடையான் நேரில் வந்து –
உப்பு மாங்காய் பிரசாதம் சமர்ப்பித்து-அனந்தாழ்வான் தனியன் சாதித்த பெருமை -உண்டே –
ஸ்ரீ வைஷ்ணவ தாசன் -பிரதிவாதி பயங்கர அண்ணன் தாஸ்ய வம்சங்கள்
ஸ்ரீ நிவாஸ தாசன் -தொட்டாச்சார்யா தாஸ்ய வம்சங்கள் -)
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply