உபதேச ரத்னமாலை –பாசுரம் -14/15/16/17/18/19/20 -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

வ்ருஷ பேது விஸாகாயாம் குருகா புரி காரி ஜம்
பாண்ட்ய தேச கலோர் ஆதவ் சடாரிம் ஸைன்யபம் பஜே

வைகாசி விசாகம்
அவயவி -அங்கி -ப்ரபந்ந ஜன கூடஸ்தர் -மாதா பிதா –இத்யாதி -க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -பக்திக்கடல் –
பூதம் சிரஸா -ஹரத மஹாதவையார் அஷி -பட்டார்யா திரு முகம்
அத பார்க்கவ ஆசிய கரண -பாஹு வதந்தி குலசேகர முனி வாஹனர்-நாபி கலியன் –
திருவடிகள் எம்பெருமானார் மதுர கவி ஆழ்வார்
1323-படை எடுப்பு –2-3 ஆண்டுகள் ஜ்யோதிஷ்குடி
கோழிக்கோடு -திருக் கணாம்பி –
ரெங்க மண்டபம்
1371 -ஸ்வ ஸ்தானம்
நம் பெருமாளே நம் ஆழ்வார் என்று அபிமானத்தால்
கீழ் மேல் ஏழு ஏழு பிறப்பும் -மா சதிர் பெற்று வாழும் படி பெரும் காதல் -அஸீமா பூமா
சடாரி -சம்பந்தம் -அனைவருக்கும் பெற்று உஜ்ஜீவிக்க —
மது -சித்திரை மாதம்
மாதவ -வைகாசி மாதம் –
மா முனிகள் சாற்று முறை -பால் புடலங்காய் அமுது செய்வார் –
நம்மாழ்வார் அவதாரம் -பால் மாங்காய் அமுது செய்வார் —

அல்லாத ஸ்ரீ ஆழ்வார்களை எல்லாம் அவயவ பூதராய் யுடையராய் –
வேதாந்த அர்த்தங்களை எல்லாம் திருவாய் மொழி முகேன பிரகாசிப்பித்தது அருளி
ஸ்ரீ திரு நகரிக்கு நாதராய் இருந்துள்ள ஸ்ரீ நம்மாழ்வார்
திருவவதரித்து அருளின திரு விசாக திரு நஷத்ரத்தின்  வைபவத்தை
பூமியில் உண்டானவர்கள் எல்லாரும் அறியும்படி பிரசித்தமாக அருளிச் செய்கிறோம் -என்கிறார் –

ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தைப்
பாரோர் அறியப் பகர்கின்றேன் –சீராரும்
வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை
நாதன் அவதரித்த நாள்  —14-

ஆழ்வார் ஆதி நாதன் தேவஸ்தானம் உபயமாக இருந்தாலும் இவருக்கே-
பெரியவருக்கே – விட்டுக் கொடுத்து அருளினான் –
ஏரார்ந்து -விசாகம் -வைகாசி -விசேஷணமாகக் கொண்டு வியாக்யானம் –

ஆஸ் யாமி
சாரு தர மாதவ மாச
விசாக நக்ஷத்ரம் -ராதா -அடுத்து அனு ராதா அனுஷம்
ஆவநி ஜன போதனாய
த்ருஷ்டும் த்ரயம் திராவிட
குருகேஸ்வரஸ் யஸ்ய
திவ்ய அவதார
சத்ய வாச

ஏரார் இத்யாதியால் –
கீழ் அடங்கலும் மாசங்கள் விச்சேதியாமல் அடைவே அருளிச் செய்து போந்தவர்
இப்போது பங்குனி மாசத்தில் ஆழ்வார்கள் அவதரணம் இல்லாமையாலும்
சித்திரை மாசத்திலே ஸ்ரீ மதுரகவிகள் ஆழ்வார் யுடையவும் ஸ்ரீ எம்பெருமானாருடையவும்
அவதாரம் உண்டே யாகிலும் ஸ்ரீ ஆழ்வார் பதின்மர் உடைய அவதார க்ரமத்தை அருளிச் செய்யப்
புகுமவர் ஆகையாலும் அவற்றை விட்டு வைத்து –
ஏரார் வைகாசி -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –

(முதல் -20- பாசுரங்கள் பிரதம பர்வ ஆழ்வார் -20-29 -சரம பர்வத்தில் உள்ள
ஆண்டாள் -மதுரகவி ஆழ்வார் -எம்பெருமானார் -என்று முன்பே பேடிகா விபாகம் பார்த்தோம் )

(ராமானுஜ நூற்று அந்தாதியிலும் பேர் ஊர் சொல்லாத ஆழ்வார்கள் சொன்னபின்பு
ஆழ்வார்கள் -ரீதி மாற்றம் -அங்கும் உண்டே திருப்பாண் ஆழ்வார் திரு மழிசை ஆழ்வாருக்கு முன்னே
ஆச்சார்ய ஹ்ருதயம் -குணங்கள் -கோயில்-வ்யூஹ ஸுஹார்த்தம் பிரதானம் –
திரு மலை -வாத்சல்யம் -நிகரில் பாசம் வைத்த வாத்சல்யம் உஜ்வலம் –
உபய பிரதானம் பரே சப்தம் பொலியும்
பர வ்யூஹ விபவ
வ்யூஹம் -கோயில்
திருமலை -அந்தர்யாமி
விபவம்-திருக்குறுங்குடி விபவ லாவண்யம் -வைஷ்ணவ வாமனத்திலே பூர்ணம்
பின்பு வான மா மலை தொடங்கி அர்ச்சை இந்த க்ரமம் – )

ஏரார் வைகாசி –
வைகாசி ஏரார்ந்து இருக்கை யாவது-மாதவ மாசம் ஆகையாலே புஷ்ப சமயமான அழகை யுடைத்தாகை –
திருவவதரித்து அருளின தேசம்  -கொத்தலர் பொழிலையும் குயில் நின்றார் பொழிலையும்
யுடைத்தாய் இருக்குமா போலே யாய்த்து –

ஏரார் வைகாசி விசாகம் –
என்று ஏராருகை விசாகத்துக்கு விசேஷணமாய்  ஆக்கவுமாம் –
அப்போது திரு விசாகத் திருநாள் என்னும் படி இறே இதன் அலங்கார அதிசயம் இருப்பது –
உகந்து அருளின நிலங்கள் எல்லா வற்றிலும் பாலும் பழமுமாக அமுது செய்து
பரிபாலநீயமான திவசமாய் இருக்கை –
அதாவது -பால் மாங்காய் அமுது செய்யப் பண்ணுகை –
(பால் மாங்காய் உத்சவம் கார்ப்பங்காடில் இன்றும் விசேஷம்
இல்லத்தில் விசாகம் தோறும் -செய்து அருள வேணும் )

இப்படியான இதனுடைய ஏற்றத்தை –
பாரோர் அறியப் பகர்கின்றேன் —
இருந்ததே குடியாக எல்லாரும் இவருடைய ஜன்மமான வைகாசி விசாகத்தை அறிந்து
உஜ்ஜீவிக்கும் படி சொல்லா நின்றேன் –
இத்தை ஒருவர் அபேஷித்து இருப்பார் இல்லாது இருக்கவும்
இவருடைய அபி நிவேச அதிசயம் பேசுவிக்கப் பேசுகிறபடி –

இனி இதுக்கு எல்லாம் அடி இன்னது என்கிறது –
சீராரும் வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை நாதன் அவதரித்த நாள்  —
சீராரும் வேதம்-
வேதத்துக்கு சீரார்ந்து இருக்கை யாவது
அபௌருஷேயத்வாதிகளால்  வந்த பிராமண்ய ஸ்ரீயை யுடைத்தாகை-
சுடர் மிகு சுருதி -என்று இறே ஆழ்வார் அருளிச் செய்தது –

அன்றிக்கே –
ஸ்ரீ யபதியாய்-பர ப்ரஹ்ம வாச்யனான ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய ஸ்வரூப ரூப குணங்களை
உபபாதிப்பதான உத்தர பாகத்தை யாகவுமாம் –
யஸ்ருதே ருத்தரம் பாகம் சக்ரே திராவிட பாஷயா -( பராங்குச அஷ்டகம் )-என்னக் கடவது இறே –

வேதம் தமிழ் செய்த –
வேதம் தமிழ் செய்கை யாவது –
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபனை -(ராமானுஜ -18)-என்கிறபடியே
வேதமானால் அதிக்ருதாதி காரமாய் இருக்கும் ஆகையால்
அகில சேதனர்க்கும் அப்யசித்து உஜ்ஜீவிக்கை அரிது என்று
சர்வாதிகாரமாய்-சர்வ உபஜீவ்யமாய் இருக்கும் படி -திராவிட பாஷா ரூப சந்தர்ப்பத்தாலே
வேதார்த்தத்தை விசதீ கரித்து அருளிச் செய்தார் -என்கை –

(மேகம் பெருகின சமுத்ராம்பு போல் நூல் கடல் -பருகி சர்வருக்கு உப ஜீவ்யம் )
வேறு ஒன்றும் நான் அறியேன் வேதம் தமிழ் செய்த  மாறன் சடகோபன்-(கண்ணி நுண் தனியன் ) -என்றும்
அருமறைகள் அந்தாதி செய்தான் -(திருவாய் தனியன் )-என்றும் சொல்லக் கடவது இறே –

மெய்யன் –
அருளிச் செய்தது எல்லாம் வேதார்த்தம் என்கைக்கு அடியான ஆப்தி இருக்கும் படி

எழில் குருகை நாதன் –
குருகூர்ச் சடகோபன் -என்னுமா போலே-இதுக்கு எல்லாம் அடி அவ் ஊரில் பிறப்பாய்த்து –
அவ் ஊரில் ஆதிப் பிரானான ஸ்ரீ ஆதி நாதனும் உண்டாய் இருக்கவும்
இவருடைய நாதத்வம் ஆய்த்து நடந்து செல்கிறது –
உபய பிரதானமான ஆகாரம் உண்டாய் இருக்கவும் இவருடைய நாதத்வத்தை யாய்த்து அவன் நடத்தின படி –
(ராஸக்ரீடையில் கண்ணனுக்கும் கோபிகளுக்கும் ஏற்றம் போல் இங்கும் உபயமாக இருந்தாலும் அவன் சங்கல்பம் இப்படியே )
நலனிடை யூர்தி பண்ணி வீடும் பெறுத்தித் தன் மூவுலகும் தரும் ஒரு நாயகம்-( 3-10-11) -என்று தாமே அருளிச் செய்தார் இறே –

எழில் குருகை –
நகர அலங்காரங்களை யுடைத்தாய் இருக்கை –
அதாவது
குன்றம் போல் மணி மாடங்களையும்-4-1-10
மாடலர் பொழில் களையும்  -3-4-
சேரத் தடங்களையும் -1-2-11
ஏர் வளங்களையும் –
யுடைத்தாய் இருக்கும் -என்கை –
கட்டெழில் தென் குருகூர்-6-6-11 என்னக் கடவது இறே –

அன்றிக்கே –
ஜகதாபரணரான வகுளாபரணர் திரு வவதரிக்கையாலே வந்த அழகாகவுமாம் –

அன்றிக்கே –
எழில் -ஸ்ரீ ஆழ்வாருக்கு விசேஷணமாய்
ஜ்ஞான பக்திகள் ஆகிற ஸ்ரீ வைஷ்ணவ அலங்காரங்களால் வந்த அழகைச் சொல்லிற்றாகவுமாம் –
(ஸ்ரீ வைஷ்ணவ அலங்காரம் -ஆத்ம பூஷணங்கள் -சூடகமே இத்யாதிகள் )

எழில் குருகை நாதன் அவதரித்த நாள்  —
ஊரும் நாடும் உலகமும் தம்மைப் போலே ஆக்க வல்லவர் திருவவதரித்த நாள் –
(ஸ்வேத தீப வாசிகளும் -அன்றோ -பொலிக பொலிக பொலிக -அவர்கள் ஸம்ருதியைக் கண்டு -)
சம்சாரத்தின் இடையில் தத் உத்தாரகரான ஸ்ரீ ஆழ்வார் அவதரித்தால் போலே யாய்த்து
இந் நாள்களின் இடையில்-இந்நாள் நமக்கு நேர்பட்டதும்-

(திருவாய் மொழிப் பிள்ளையும் வைகாசி விசாகம் -ஆகவே இத்தாலும் சீர்மை உண்டே )

ஆகையால் இந்த பரம ரஹஸ்யத்தை-பாரோர் அறியப் பகர்கின்றேன் -என்று
தம்முடைய பரம கிருபையினாலே வெளியிட்டு அருளினார் ஆய்த்து –

——————————————–

திரு வழுதி வள நாடன் -சிற்று அரசர் -அகஸ்தியர் போல்வாரை சந்தித்து –
துந்து மாறன் அரக்கனை வென்று அந்த அரசை ஆண்டவர்
இவர் திருக்குமாரர் -சக்ர பாணி
இவர் திருக்குமாரர்-அச்சுதர்
இவர் திருக்குமாரர்-பொற்காரியார்
இவர் திருக்குமாரர்-காரி
உடைய நங்கை -திரு வாழ் மார்பன் திருக்குமாரி
திருக்குறுங்குடி நம்பி -பிரார்த்தித்து -நம்மைப் போல் பிரதிமை இல்லை -நாமே வந்து பிறப்போம்
ப்ரமாதி வருஷம் -43 நாள் வெள்ளிக்கிழமை -கடக லக்கினம் திரு அவதாரம்
மாறி இருந்ததால் காரி மாறன்
சட வாயுவை கோபித்து -காலால் உதைத்து சடகோபர் சிறப்புப் பெயர்
புத்தி தூஷகம் -சடஜித்

கீழே பிரஸ்துதமான
1-ஸ்ரீ ஆழ்வார் யுடையவும்-
2-அவதரித்த தேச
3-காலங்களுடையவும்
4-அவர் அருளிச் செய்த திவ்ய பிரபந்தங்கள் யுடையவும்
அப்ரதிம வைபவத்தை ஸ்வ கதமாகப் பேசி அனுபவிக்கிறார் –

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு ஒரு நாள்
உண்டோ சடகோபர்க்கு  ஒப்பு ஒருவர் -உண்டோ
திருவாய்மொழிக்கு ஒப்பு தென் குருகைக்கு உண்டோ
ஒரு பார் தனில் ஒக்கும் ஊர் –15-

தாரம் கிம் அஸ்தி வத
மாதவ மாதம்
ராதா துல்யம் கிம் அஸ்தி
கிம் அஸ்தி சடகோப சமண ஏக
கிம் திராவிட பிரபந்த சம
கிம் பட்டணம் குருகையா சமம் அஸ்தி லோகே

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு ஒரு நாள்-
ஸ்ரீ சர்வேஸ்வரனும் அவன் விபூதியும் ஸ்ம்ருதமாம் படி
மங்களா சாசனம் பண்ணப் பிறந்த திரு விசாகத் திரு நாளுக்கு ஒப்பாவது ஒரு நாள் உண்டோ –
(பொலிக பொலிக பொலிக–கண்டோம் கண்டோம் கண்டோம் )

நீ பிறந்த திரு நந்நாள் -(பெரியாழ்வார் )-என்னும் படியான அந்நாளும்
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வ ஜன்மமான இவர் அவதரித்த-இந்நாளுக்கு ஒப்பாக வற்றோ –
அங்கு அவன் பிறவியில் அக்ரூராதிகளான நால்வர் இருவர் இறே அனுகூலராய்த் திருந்தினது –
(விதுரர் மாலாகாரர் இத்யாதிகள் தானே பரம பாகவதர்கள் அங்கு
கிருஷ்ணா த்ருஷ்ணா -ஈடுபாடு -அவனுடைய என்றும் அவன் இடத்தில் என்றும் -)
இங்கு -தா நஹம் த்விஷத க்ரூரான் -என்று தொடங்கி-
ஷிபாமி -என்று அவன் கை விட்ட வர்களையும்
நின் கண் வேட்கை எழுவிப்பனே -என்னும்படி
இவர்களுக்கு அபி நிவேசத்தை யுண்டாக்கும் படி திரு வவதரித்த திவசம் இறே இது –
(நன்மையால் மிக்க நான் மறையார்கள் கை விட்டதே காரணமாக் கைக் கொண்டு அருளுபவர் அன்றோ இவர் )

உண்டோ சடகோபர்க்கு ஒப்பு ஒருவர் –
அவதாரமே தொடங்கி –
சடா நாம் புத்தி தூஷகராய் – ஸூ ஜ்ஞான கன பூரணராய் –
இருக்கிற இவருடைய ஜ்ஞான வைபவத்துக்கு சத்ருசம் ஆவர்களை சர்வ லோகத்திலும் தேடிப் பார்த்தாலும்
ஓர் ஒருவரைக் கேட்டோமோ –
(சேமம் குருகையோ இத்யாதி
அஞ்ஞர்-ஞானாதிகர் பக்தி பரவசர் -கரை ஏற்றும் அவனுக்கும் நாலு ஆறு அறிவிப்பவர் அன்றோ )

அன்ன பாநாதிகள் என்ன -(சம்சாரிகள்)
பக்வ -பலாதிகள் என்ன -(ரிஷிகள் முமுஷுக்கள் )
அப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுது -என்ன (நித்ய முக்தர்கள் )
இவற்றாலே தாரகாதிகளாம் படி இருக்கிற சம்சாரிகள் -தொடக்கமானார்
நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நண்ணி –என்றும்
எல்லாம் கண்ணன் -என்றும் –
விண்ணுளாரிலும் சீரியராய் இருக்கிற இவருக்கு ஒப்பாக மாட்டார்கள் இறே –

நித்ய ஸூரிகள் ஒழிந்த மற்றையார்க்கு பல சாதன தேவதாந்தரங்களில்
இவர்கள் நினைவு பேச்சிலே தோன்றும் படியாக இருக்கும் –
ஆச்சார்ய ஹிருதயத்திலே நாயனார் அருளிச் செய்தார் இறே –

அங்கன் இன்றிக்கே –
நித்ய ஸூரிகளுக்கு தெளி விசும்பு திரு நாடு என்னும் படி பகவத் அனுபவத்துக்கு பாங்காய் இறே அத்தேசம் இருப்பது –
இது -விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம்புலன் இவை -என்னும்படி –
(இங்கே கலங்குவாரும் கலங்கச் செய்வாரும் உண்டே
சுமுகன் -இத்யாதி விருத்தாந்தங்கள்
ஈட்டில் -சிவிகனைப் போல் வார்த்தை செய்த வினதை சிறுவன் -ஜெட்கா வண்டி காரன் -auto ஓட்டுவேன்
வார்த்தை இந்தக்காலம் போல் சொன்ன வார்த்தை -சிவிகை -எழுந்து அருள பண்ணும் வாஹனம் அன்று )
இருள் தரும் மா ஞாலம் ஆகையால் பகவத் அனுபவத்துக்கு மேட்டு மடையாய் இறே இருப்பது –
இப்படி இருக்கிற இஸ் சம்சாரத்தில் பகவத் அனுபவமே யாத்ரையாய் இருப்பார் இவர் ஒருவருமே இறே உள்ளது –
ஆகை இறே ஸூ துர்லபமும் ஆய்த்து-
(வாஸூ தேவ ஸர்வம் இதி மஹாத்மா ஸூ துர்லபம் )

மாறுளதோ இம் மண்ணின் மிசை-6-4- என்றும்
இனி யாவர் நிகர் அகல் வானத்தே-4-5- -என்றும் –
உபய விபூதியிலும் தமக்கு ஒப்பாவார் இல்லாமையை தம் திரு வாக்காலே அருளிச் செய்தார் இறே
இப்படி ஸ்ரீ சடகோபன் என்றால் எல்லார்க்கும் தலை மேலாராய்-
நாடடங்க கை அடங்கும்படி

மஹாத்மாவான இவர் அவதரித்த இம் மகா நஷத்ரத்துக்கும்
இவர்க்கு ஒப்பு இல்லா விட்டால்
இவருடைய வாங்மயமான திருவாய் மொழிக்கும்
இவர் திருவவதரித்த தேசத்துக்கும் ஒப்புத் தான் உண்டோ என்ன –
அதுவும் இல்லை -என்கிறார் –

உண்டோ திருவாய்மொழிக்கு ஒப்பு தென் குருகைக்கு உண்டோ ஒரு பார் தனில் ஒக்கும் ஊர்-
உண்டோ திருவாய்மொழிக்கு ஒப்பு-
திருமாலால் அருளப் பெற்றவராய்- ( 8-8-11)
திருமாலவன் கவி -(8-4-8-)யான இவர் –
சுழி பட்டோடும்-(8-10-5-) -என்னும்படியான அனுபவ பரிவாஹத்தாலே
அவாவில் அந்தாதிகளால் இவை யாயிரமும் -என்ன வேண்டும்படி
இவருடைய பக்தி பலாத்காரத்தாலே அவதரித்த திருவாய் மொழிக்கு –
தர்ம வீர்ய ஜ்ஞாநாதிகள் அடியாக யுண்டான ஹர்ஷ வசனங்களில்
அருளிச் செயலில் சாரமாய் இருக்கிற இதுக்கு ஒப்பாக வற்றோ –
(அவா உபாத்யாயர் -இவருடைய ஸ்ரீ – மைத்ரேய பகவான் அவா -பாவின் இன்னிசை பாடித் திரிவேனே )

இத்தை ஒழிந்தவை எல்லாம் கடலோசையோபாதி என்னக் கடவது இறே –
ஆகையாலே -அருள் கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான் (கண்ணி நுண் )-என்னும்படி
இவர் அருளாலே திருவவதரித்த இது அ சத்ருசமாய் இருக்கும் என்றபடி —

தென் குருகைக்கு உண்டோ ஒரு பார் தனில் ஒக்கும் ஊர்-
ஆழ்வாருக்கு ஒப்பு ஒருவரும் உபய விபூதியிலும் இல்லாதாப் போலே
இவ் ஊருக்கு ஒப்பாவது ஓர் ஊரும் இல்லை என்கை –
(இங்கு எச்சிலை வாரி உண்ட நாய்க்கும் அன்றோ பேறு கிட்டியது —
அவனை மகுடம் சாய்க்கும் வல்ல ஞானக் கடலே இந்த பேய்க்கும் அளிக்கலாகாதோ )
பதினெண் பூமியிலும் தேடித் பார்த்தாலும் திருக் குருகை வளம்பதிக்கு ஒப்பாவது ஒரு ஊர் உண்டோ –
உண்டாகில்-திருநாடு வாழி தென் குருகை வாழி -(இயல் சாத்து )-என்று அவன் நாட்டை ஒப்புச் சொல்லும் இத்தனை –
திரு நகரிக்கு ஒப்பாவது யுண்டோ வுலகில் –என்னக் கடவது இறே –
ஆற்றில் துறையில் ஊரில் உள்ள வைஷம்யம் வாசா மகோசரம் -என்று இறே அருளிச் செய்தது –
(கண்ணன் வியாசர் ஆழ்வார் -ஆறு -ஊர் -துறை -ஒன்பது விஷயங்கள் -நாயனார் )

தென் குருகை –
சம்சாரத்துக்கு ஆபரணமான ஊர் –
நல்லார் பலர் வாழும் குருகூர் (8-2-11)-என்றும் –
சயப் புகழார் பலர் வாழும் தடம் குருகூர் (3-1-11)-என்றும் -சொல்லும்படி –
பெரிய வண் குருக்கூரான ஸ்ரீ நகரி இறே –
அன்றிக்கே
தெற்குத் திக்கிலே யுண்டானது என்னவுமாம் –

இத்தால் –
திரு நஷத்த்ரத்தினுடையவும் –
திருவவதரித்த ஆழ்வார் யுடையவும் –
திருவாய் மொழியினுடையவும் –
திரு நகரியினுடையவும் –
உபமான ராஹித்யத்தால் வந்த ஆதிக்யத்தை உபபாதித்து அருளினார் ஆய்த்து –

இந்த விசாக நஷத்ரம் தான்
ராஜர்ஷிகளான இஷ்வாகுகளுடைய ருஷம் என்று இஷ்வாகு வம்ச பிரபாவஞ்ஞாராலே விவஷிதம் ஆகையாலும்
ருஷீம் ஜுஷாமஹே -என்னும் படி இவ் வாழ்வாருக்கும் அதுவே ஜன்ம நஷத்ரம் ஆய்த்து –

(சக்ரவர்த்தி திரு மகனே அருளிச் செய்தது -யுத்த காண்டம்
உத்தர பல்குணி -கிளம்பி -ஐந்து நாள் பிரயாணம் -பின்பு விசாகம் வருமே
யுத்த 4-49-/50–ராஜ ரிஷி திரிசங்கு ராஜ ரிஷி -இவர் வம்சம் -மஹாத்மநாம் நக்ஷத்ரம் விசாகே
உபத்திரம் இல்லாத விசாகம் நம் குலத்துக்கு -தொடங்குவோம் வெல்வோம் என்று அருளிச் செய்கிறார் –
திருவாய் மொழிப்பிள்ளையும் விசாகம் திரு அவதாரம்
பங்குனி விசாகம் -காஞ்சி விசாகம்
தை விசாகம் -வேளுக்குடி வரதாச்சார்யர் )

(திசை நிலைக் கட கரி செருக்குச் சிந்தின;
அசைவு இல வேலைகள், ஆர்க்க அஞ்சின;
விசை கொடு விசாகத்தை நெருக்கி ஏறினன்
குசன்; நெடு மேருவும் குலுக்கம் உற்றதே. –9784.-
ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/36–இராவணன் வதைப் படலம்–81-

குசன்- அங்காரகன்; விசைகொடு – வேகமாய்; விசாகத்தை
நெருக்கி ஏறினன்- விசாக நட்சத்திரத்தில் நெருக்கிப் புகுந்தான்;
(என்று), திசை நிலை கடகரி- திசைகளில் நிற்கும் மதம் பொழி
திக்கு யானைகள் (எட்டும்) செருக்குச் சிந்தின- தம் மதச்
செருக்கு அற்றுப் போயின; வேலைகள்அசைவு இல- கடல்கள்
இயக்கமற்றன; ஆர்க்க அஞ்சின- ஒலிக்கப் பயந்தன; நெடு
மேருவும் – உயர்ந்த மேரு மலையும்; குலுக்கம் உற்றது –
நடுக்கம் கொண்டது.
போர்க்கோளாகிய அங்காரகன் இட்சுவாகு வமிசத்தாரின்
பிறப்பு நட்சத்திரமான விசாகத்தை நெருங்கினன் என்பது
கெட்ட அறிகுறியாகும்.)

————————————————

மிதுநே ஸ்வா திஜம் விஷ்ணோ ரதாம் ஸம் தன்வின புரே
ப்ரபத்யேஸ்வ ஸூரம் விஷ்ணோ விஷ்ணு சித்தம் புரஸ் ஸிகம்

ஜ்யேஷ்டே அத மாஸே தவ மான தாரே ஸ்ரேஷ்டே அஜனி பட்ட நாத
குணங்களால் ஸ்ரேஷ்டர்–மங்களா சாசனம் பண்ணியதால் -ஸ்ரேஷ்டர் ஆகவே பெரியாழ்வார்
பட்ட நாத தத்ர த்ரயீ (வேத ரூபா) கருத்தாத்மா கடாக்ஷ லஷ்யம் -கமலா பதே
மேல் இருந்த வேத விளைக்கை விரிக்கவே -வேதப்பிரான் இவரே

கலி –47-க்ரோதந வருஷம்
ஜ்யேஷ்டே-ஆனி மாசம் சுக்ல பக்ஷம் ஏகாதசி -ஞாயிற்றுக்கிழமை
ஸ்வாதி நக்ஷத்ரம் கருட அம்சம் -அந்தணர் வேயர் குலத்தில்
போதாயன ஸூத்ரம்-யஜுஸ் சாகை -புதுமையாருக்கும் முகுந்தாசார்யருக்கும் திருக்குமாரர் –

இனி மேல் ஆழ்வார்கள் எல்லாரையும் போலல்லர்- ஸ்ரீ பெரியாழ்வார் என்னும்படியான
பிரபாவத்தை யுடையரான
ஸ்ரீ பெரியாழ்வார் வைபவத்தை பரக்க அஞ்சு பாட்டாலே அருளிச் செய்வதாகக் கோலி-

அதில் -இப் பாட்டிலே –
திருப் பல்லாண்டு முகத்தாலே ஜகத்தை உஜ்ஜீவிப்பித்து அருளின இவர்
திருவவதரித்து அருளின ஆனி தனில் சோதியினுடைய அதிசயத்தை
தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்

இன்றைப் பெருமை அறிந்திலையோ ஏழை நெஞ்சே
இன்றைக்கு என்னேற்றம் எனில் உரைக்கேன் -நன்றி புனை
பல்லாண்டு பாடிய நம் பட்டர் பிரான் வந்துதித்த
நல்லானியில் சோதி நாள் —–16-

நன்றி புனை-நன்மையாலேயே தொடுக்கப் பட்ட
விஷ்ணு சித்தர் -இயல் பெயர்
பட்டர் பிரான் -சிறப்புப் பெயர் -வித்வான்களுக்கு எல்லாம் பரத்வம் -காட்டி உபகரித்தவர் –
விஷ்ணு சித்தர்-பட்டர் பிரான்-பெரியாழ்வார் -மேலே மேலே வந்த சிறப்பைக் காட்டுமே இம் மூன்றுமே
நமக்கும் பிரான் -பல்லாண்டு அருளி உஜ்ஜீவிப்பித்த உபகாரம் –

அத்ய பிரபாவம் அபி
மானஸ கின்ந வேதி
கோஸ்ய ப்ரபாவ
ப்ரதிபாதயாமி
பல்லாண்டு காந பர
பட்ட நாத
ஸ்வாதி திலாக்கிய அஸ்ய
மிதுனம் ப்ரபந்நே

இன்றைப் பெருமை அறிந்திலையோ ஏழை நெஞ்சே –
கீழ்ச் சொன்ன திரு நஷத்ரங்களுக்கும் இந்தத் திரு நஷத்ரத்துக்கும் வாசி அறியாமல்
அவற்றிலே சாபல்யம் பண்ணுகிற மனசே – அவர்களில் இவர்க்கு –
பர்வத பரமாணு வோட்டை வாசி -யுண்டானால்
நாளின் பெருமையும் அவ்வோபாதி வாசி யுண்டு என்று அறிய வேண்டாவோ –
அறியாமைக்கு ஹேது உன் ஏழைத் தனம் இறே –

(நுண் உணர்வு இன்மை வறுமை -இருப்பது பண்ணைப் படைத்த செல்வம்
தேகாத்ம அபிமானிகள் நமக்கும் ஆத்ம ஞானம் கை வந்த ரிஷிகள் –
காய் கனிகள் தாரகம் இவர்களுக்கும் -எல்லாம் கண்ணனாக இருக்கும் ஆழ்வார்கள் –
தங்கள் ஸம்ருத்தி பிராத்தித்த அவர்களுக்குள் அவனது ஸூவ்குமார்யம் பெரியாழ்வாரும் ஏற்றம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை –வியாக்கியான ஸ்ரீ ஸூ க்திகள் )

இன்றைக்கு என்னேற்றம் எனில் உரைக்கேன் –
ஆகில்-இன்றைக்கே ஏற்றம் என் என்பாய் ஆகில் – இதன் நெடு வாசி அறிந்து இருக்கிற
நான் சொல்லக் கேள் –

நன்றி புனை பல்லாண்டு பாடிய நம் பட்டர் பிரான் வந்துதித்த நல்லானியில் சோதி நாள் –
அதாவது –
1-அகால்ய காலமான தேசத்திலே-
2-அஸ்த்தான பய சங்கிகளான-
3-அயர்வறும் அமரர்களாலே
4-அநவரத மங்களா சாசனம் பண்ணப் படுகிற
வஸ்து
1-கலி சாம்ராஜ்யம் பண்ணுகிற சம்சாரத்திலே
2-எதிரம்பு கோப்பாராய் இருக்கிற பிரதி கூலர் நடுவே
3-அதி ஸூ குமாரமான திவ்ய மங்கள விக்ரஹத்துடனே-
4-சஷூர் விஷயமாக தோன்றி யருளுவதே
என்று வயிறு பிடித்து –
(காலத்துக்கு ஆணை இல்லை அங்கு -காலம் இருந்தாலும் –
கடிகாரம் பார்த்து வேலை செய்ய வேண்டாமே -பகவத் ஏக போகராய் இருப்பார்களே
இடங்கை வலம்புரி -ஈட்டு வியாக்யானம் ஆங்கு இத்யாதி பாசுரம் –
இடமோ ஆங்கு -ஆரவாரமோ அது -அழல் உமிழுமவதோ பூங்காரவு -ப்ரக்ருஷ்ட விஞ்ஞான பல –
இங்கே இவர் இது படச் சொல்ல வேணுமோ )

ஆனை மேலே கிடந்த மணிகளைத் தாளமாகக் கொண்டு அத்தலைக்கு அதிசயமாம் படி –
திருப் பல்லாண்டு பாடின
நம்முடைய நாதரான ஸ்ரீ பட்டர் பிரான் வந்து அவதரித்த
விலஷணமான ஜ்யேஷ்டா மாசத்திலே ஸ்வாதி நஷத்ரம் ஆய்த்து –
ஆகையால் சர்வ அதிசயமான இதன் வைபவத்தை அறிந்து ஆதரிப்பாயாக –

நன்றி புனை –
என்று நன்றியைப் புனைந்து இருக்கிற பல்லாண்டு -என்னுதல் –
நன்றியும் அவனுக்குப் புனைகிற பல்லாண்டு -என்னுதல் –
தான் மங்கல மாதல் -என்றும் –
பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன்-(ராமாநுச -15) -என்றும் சொல்லக் கடவது இறே –
அந்திக் காப்பு -ரக்ஷை –
புனைதல் பந்தித்தல் -நன்றியால் புனைந்த –

பட்டர் பிரான் -என்கையாலே
பர ஸ்வரூபத்தை இதர நிரசன பூர்வகமாக ஸ்தாபித்த படி -சொல்லிற்று –

பல்லாண்டு பாடிய -என்கையாலே
திவ்ய மங்கள விக்ரஹத்தைப் பரிந்து நோக்கின படி சொல்லிற்று –
(இத்தாலே -பொங்கும் பரிவாலே பெரியாழ்வார் என்ற திரு நாமம் )

(நம் பட்டர் பிரான் என்கையாலே –
அனைவரையும் அழைத்து கூடி –நமக்காக திருப்பல்லாண்டு சாதித்த உபகாரத்வம் )

இத்தால்
ஈஸ்வரனுடைய ஸ்வரூபாதிகள் எல்லாம் ஆழ்வார் அதீனம் என்றதாயிற்று —
(ஆதி -திவ்ய மங்கள விக்ரஹம் குணம் விபூதி இத்யாதிகள் )

(தன்னைப் பாராமல் அவனைப் பார்ப்பவர் அடியோமோடும் -என்பது —
தாமும் நித்தியமாக இருந்தால் தானே அவனுடைய நித்யத்வத்துக்கு மங்களா சாசனம்
ஆகவே ஆழ்வார் அதீனம் –விஜிதாத்மா வெல்லப்பட்டவர் விதேயாத்மா -பட்டர் —
சொன்ன வண்ணம் -சேனையோர் மத்யே இத்யாதிகள் )

——————————————————-

இனி இத் திரு நஷத்ரம் என்றால் இதன் ஏற்றம் அறிந்து ஆதரிக்கும் ஜ்ஞாதாக்களின் உடைய
அந்த உபமான ராஹித்ய முகத்தாலே இதன் வைபவத்தை அருளிச் செய்கிறார் –

மா நிலத்தில் முன்னம் பெரியாழ்வார் வந்துதித்த
ஆனி தன்னில் சோதி என்றால் ஆதரிக்கும் -ஞானியர்க்கு
ஒப்பு ஒருவர் இல்லை இவ் வுலகு தனில் என்று நெஞ்சே
எப்பொழுதும் சிந்தித்து இரு —17-

முன் நம் -முன்னம் என்றுமே -முற்காலத்தில் நம்முடைய சத்தாதிகள் ஹேது –

ஒப்பு ஒருவர் இல்லை -ஒப்போர் இல்லை -பாட பேதம்
அங்கு காலமே இல்லை
5121 கலி தொடங்கி இப்பொழுது -இவர் 47 வருஷம் அவதாரம் –
சிந்தனம் -இடை விடாமல் -இரு-மனனம்

பட்டாதி போதய
இஹே தத்தி ஸூக்ர மாசம்
ஸ்வாதி
ஆர்த்ர ஹ்ருதய
முஹுர் ஆதரியந் தே
தேஷாம் ஸத்ருச
ஜெகதீச
சிந் தாம் இமாம் அநு கலம்
பரி ப்ரஹ்ம

மா நிலத்தில் முன்னம் பெரியாழ்வார் வந்துதித்த –
இம் மகா பிருதிவியிலே-நம்முடைய சத்தாதிகளுக்கு காரணமாம் படி பூர்வஜராய் வந்து திருவவதரித்த –
திரு வவதரிக்குமவருடைய பெருமைக்கு ஈடாம்படி யாய்த்து –
(நமது சத்தாதிகளுக்கு-சத்தை ஸ்திதி ப்ரவ்ருத்தி இவற்றுக்கு காரணமே மங்களா சாசனம் தானே )

நம் பெரியாழ்வார் -என்றும் –
நம் பட்டர் பிரான் -என்றும் –
இவருக்கு இவ்விஷயத்தில் உண்டான பாவ பந்தம் இருக்கிறபடி –
(கீழே பட்டர் பிரான் -இதில் பெரியாழ்வார் -மாலா காரராகி இருந்து –
விஷ்ணு சித்தர் ஆகி – தானே பட்டர் பிரானாகி பெரியாழ்வார் ஆனார் )

வந்துதித்த –
தம்முடைய சத்தாதிகளே அன்றிக்கே-நம்முடைய சத்தாதக்ளும் மங்களா சாசனத்தாலே யாம்படி
அத்தை திருப் பல்லாண்டு முகேன வெளியிட்டு
தம்முடைய யாத்ரையே நமக்கு எல்லாம் யாத்ரையாம் படி யாக்கி நடத்திப் போருமவர் வந்து திருவவதரித்த-
(சத்தை -இருப்பு -existence )

ஆனி தன்னில் சோதி என்றால் ஆதரிக்கும் –
இப்படி மங்களா சாசன பரரான இவர் திரு வவதரிக்கை யாய்த்து இத்தை ஆதரிக்கைக்கு அடி –
அல்லாத திரு நஷத்ரங்களில் வைத்துக் கொண்டு ஸ்ரேஷ்டரான இவர் வந்து திருவவதரித்த
ஜ்யேஷ்டா மாசத்தில்,ஸ்வாதி யாகிற திரு நஷத்ரம் என்றால் மேல் விழுந்து
ஆதரிக்கும் ஜ்ஞாதாக்களுக்கு சத்ருசர் ஆவார் இல்லை –

ஆதரிக்கும் -ஞானியர்க்கு –
ஆதரியாத அஞ்ஞர் ஒப்பாக வல்லார்களோ –
ஜ்ஞாதாக்கள் வைபவம் அறிந்து ஆதரிக்கை இறே ஜ்ஞான பலம் –

ஒப்பு ஒருவர் இல்லை இவ் வுலகு தனில்-
பரந்த உலகமான இஜ் ஜகத் எல்லாம்
தேடித் பார்த்தாலும் மங்களா சாசன பரர் மகாத்மியம் அறிந்து ஆதரித்துப் போரும்
மகாத்மாக்களுக்கு உபமானம் ஆவார் ஒருவரும் இல்லை –

உண்டாகில் அவ் வுலகிலே யாய்த்து உள்ளது –
அவர்கள் தான் திவ்யஞ்ஞாநோபபன்னராய் இறே இருப்பது -ஆகையால்
மங்களா சாசன பரர் வாசி அறியுமவர்களை அறிந்து ஆதரித்து போருவார் அவர்கள் இறே
இப்படி யாகையில் இங்கு இவர்களுக்கு சமானர் இல்லை –

ததீய வைபவம் அறிந்த -அபிஞ்ஞமான நெஞ்சே -எப்போதும் நான் சொன்ன அர்த்தம் கேட்டு
இது ஒன்றே என்று சர்வ காலத்திலும் புத்தி பண்ணிப் போ
கிட்டாத ஓன்று கிட்டுமோ என்று மயங்காதே
இத்தால் ஆழ்வாருக்கு ஒப்பு இல்லாத மாதிரி இவருக்கும் ஒப்பு இல்லை

இவ்வாழ்வார் தான்
பல்லாயிரவர் இவ்வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார்
எல்லாம் உன் மேல் அன்றிப் போகாது எம்பிரான் இங்கே வாராய்
நல்லார்கள் வெள்ளறை நின்றாய் ஞானச் சுடரே உன் மேனி
சொல்லார வாழ்த்தி நின்று ஏத்தி சொப்படக் காப்பிட வாராய் -பெரியாழ்வார் -2-8-5-

ஞானச் சுடர் விஷயத்தில் –காப்பு இட்டவர் –நீராட்டி -பூச்சூட்டி -காப்பிட்டவர்
ஸ்வாதி ஜ்யோதி -ஒளி –
ஸ்ரீ பெரிய திருமலை நம்பியும் (வைகாசி ஸ்வாதி )-ஸ்ரீ உடையவருக்கு தாய் மாமா இவர்
பிதா மஹாஸ்யபி -ப்ரஹ்மாவுக்கும் பிதாமஹர் -அவனுக்கே தந்தை என்பதால் –
ஸ்ரீ ராமாயணம் ஒரு சம்வத்சரம் கால ஷேபம் செய்து அருளினார் அன்றோ

ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே–3-3-1-

சுமந்து மாமலர் நீர் சுடர் தூபம் கொண்டு.
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று எழும் திருவேங்கடம் நங்கட்குச்
சமன் கொள் வீடு தரும் தடங் குன்றமே–3-3-7-

சுமந்து மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு-3-3–என்னும் படி –
ஒழிவில் காலம் எல்லாம் – உடனாய் மன்னி –எழில் கொள் சோதி எந்தை -3-3-1-
(புள்ளின் வாய் -தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் -பாசுர வியாக்யானம் –
ஸ்ரீ பெரிய கேள்வி அப்பன் ஜீயர் ஸ்வாமி -முத்திரை மோதிரம் -கொடுத்து -நிர்வாகம் –சங்கு -சலாகா -சாவி -)
இன்றும் பொட்டு பூ குடலை எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு –
சாது ராமானுஜ ஜீயர் -இப்பாசுரம் நம்மையே சொன்னது என்பாராம்
தோ மாலை -புஷ்ப மண்டபம் பிரசித்தம் –
நீராட்டத்துக்கும் தீர்த்தம் எடுத்துக் கொடுக்கும் கைங்கர்யம் உண்டே
அவர் ஜோதியும் -ஸ்வாதி பொருந்தும் -அடிமை செய்து போந்ததால் –
தாத -அவனே பின்பு வந்து தீர்த்தம் கொண்ட கைங்கர்யம்
ஆகாச கங்கை -முன்பு -பங்காரு பாவி இப்பொழுது

அவ்வளவும் அன்றிக்கே
தூணாய தனூடு அரியாய் வந்து தோன்றி
பேணா வவுணனுடலம் பிளந்திட்டாய்
சேணார் திருவேங்கட மா மலை மேய
கோணா கணையாய் குறிக்கொள் எனை நீயே—1-10-5-

ஜ்வலந்தம் என்னும் படி
உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம்-ஸ்ரீ பெரிய திருமலை நம்பி உடைய -திரு ஆராதனமாய் –
அனைத்து ஆச்சார்யர்களுக்கும் இவரே திரு ஆராதன பெருமாள் –
சேராமல் திரியும் நம்மை சேர்த்து அருள
கடக ஸ்ருதி கொண்டு முரண் பட்ட பேத அபேத ஸ்ருதிகளைச் சேர விட்டு அருளும் –

ஸ்வாதி நக்ஷத்ரம் தான் தேவ கணமாய்-ஜ்யோதி ரூபமாய் இறே இருப்பது –

த்ரேதாயாம் ஆதி கல்பே கில கமலயுகே மாதவே மாசி பஷே சுக்ல சாத்யேச
யோகே வணிஜ ஸூகரனே பூததித்யாம் மருத்பே மந்தே வாரே ப்ரதோஷே
கநக கசிபு சம்ஹார ஹேதோர் ஜனித்வா -என்னக் கடவது இறே

மந்தே வாரே-சனிக்கிழமை பிரதோஷம் காலம் -ஸ்வாதி
கநக கசிபு-ஹிரண்யன்
க்ருத யுகம் முதல் ஐந்து அவதாரம்
இது வேறே கல்பத்தில்
மாதவ -வைகாசி ( மது சித்திரை )
சுக்ல பக்ஷம் திரு அவதாரம்

இதுவும் முப்புரி யூட்டின திரு நஷத்ரமாய் இருக்கும் –

————————————————–

பல்லாண்டு எப்பொழுதும் –
விஷ்ணு சித்தன் மனமே பட்டணம் -ஸூ ரக்ஷகமாக இருக்கலாமே
ஞானம் முற்றி ப்ரேமம் மிக்கு -பொங்கும் பிரிவால் -தட்டு மாறி –
இன்றும் நித்யம் பல்லாண்டு ஸ்ரீ வில்லு புத்தூரில் சேவிக்கிறோம் –
பட்டர் பிரான் -ஞான தசை
பெரியாழ்வார் -பிரேம தசை –

மங்களா சாசனத்தில் மற்றுண்டான ஆழ்வார்களுக்கும்
இவருக்கும் உண்டான நெடு வாசியாலே
பெரியாழ்வார் என்னும் திரு நாமம்
இவர்க்கு உண்டாய்த்து என்று
தந் முகேன உண்டான வைபவத்தை அருளிச் செய்கிறார் –

மங்களா சாசனத்தில் மற்று உள்ள ஆழ்வார்கள்
தங்கள் ஆர்வத்து அளவு தானன்றி -பொங்கும்
பரிவாலே வில்லி புத்தூர் பட்டர் பிரான் பெற்றான்
பெரியாழ்வார் என்னும் பெயர் —18-

பஃதேஷு
மது சாசன மங்களாநாம்
ஆஸாசனே அநவதிகா ப்ரியதா
யஸ் அஸ்ய
பட்டேஸ் வரஸ்ய
பெரிய உப பதம் ப்ரதீதம்
ஆழ்வார் இதி
தத ஏவ நாம

மங்களா சாசனத்தில் மற்று உள்ள ஆழ்வார்கள் –
மங்களா சாசனத்தில் வந்தால்
இவரை ஒழிந்த மற்றைய ஆழ்வார்கள் தங்கள் பக்தியின் அளவன்றிக்கே
சம்ருத்தமான பகவத் ஸ்நேஹத்தாலே
ஸ்ரீ வில்லிபுத்தூரை தமக்கு நிரூபகமாக உடைய ஸ்ரீ பட்ட நாதரான இவர்
(வில்லி புத்தூர் பட்டர் பிரான் என்றே இவர் திரு நாமம் )
ஸ்ரீ பெரியாழ்வார் என்னும் திரு நாமத்தை லபித்தார் என்கை –
இப்படி இறே இவர் பெற்றது –
(அத்தத்தின் பத்தாம் நாள் –
நாள்களோர் நால் ஐந்து திங்கள் அளவில் -போன்ற ஸ்ரீ ஸூக்திகள் இவரது )

மங்களா சாசனம் ஆவது –
அத்தலையில் சௌகுமார்யம் அடியாக
தன்னை அழிய மாறியும் அங்குத்தைக்கு அதிசயங்களை ஆசாசிக்கை –
பரகத அதிசய ஆதாயகத்வம் இறே ஸ்வரூபம் –
(சேஷத்வ லக்ஷணம்
பரகத அதிசய ஆதான இச்சையா உபாதே யத்வம் யஸ்ய ஸ்வரூபம் யஸ் சேஷ பர சேஷி )
சேஷிக்கு அதிசயத்தை விளைக்கை சேஷ பூதனுக்கு ஸ்வரூப லாபமும் பிராப்யமும் -இறே அருளிச் செய்தது –

(ந அகிஞ்சித் குர்வத -கைங்கர்யம் செய்யா விட்டால் ஸ்வரூபம் போகும்
சேஷிக்கு அதிசயம் விளைவிப்பதே ஸ்வரூபம்
அவனது முக உல்லாசத்துக்கு ஹேதுவாக இருப்பதால் ப்ராப்யமாகவும் இருக்கும்
ஆகையால் இதுவே நித்ய பிரார்த்த நீயமாய் இருக்கும்

சேஷிக்கு அதிசயத்தை விளைக்க சேஷ பூதனுக்கு ஸ்வரூப லாபமும் ப்ராப்யமும்-ஸ்ரீ முமுஷுப்படி –சூரணை -177

இது நித்ய பிரார்த்தனை அநீயமாக்கைக்கு நிதானத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது
ந கிஞ்சித் குர்வதச் சேஷத்வம் -என்கிறபடியே
சேஷிக்கு அதிசயகரம் இல்லாத வஸ்துக்கு சேஷத்வம் இல்லாமையாலே –
சேஷியான ஈஸ்வரனுக்கு தன்னுடைய வ்ருத்தி விசேஷங்களாலே
ப்ரீதி ரூபமான அதிசயத்தை விளைக்க சேஷ பூதனானவனுக்கு தன் ஸ்வரூப லாபமாய்
அவனுடைய முகோல்லாசானுபவதுக்கு உறுப்பாய் இருக்கையாலே ப்ராப்யமுமாயுமாய் இருக்கும் -என்கை
ஆகையால்-நித்ய ப்ராதனநீயமாய் இருக்கும் என்று கருத்து– )

மயர்வற மதி நலம் அருளப் பெற்றது முதலான ஆகாரங்கள் ஒத்து இருந்தாலும்
ஸ்வரூப அனுரூபமான மங்களா சாசனம் பண்ணுகையில் வந்தால்
இவர் அதிசயத்து இறே இருப்பது-

ஆழ்வார்கள் தங்கள் ஆர்வத்து அளவு தானன்றி –
அதனில் பெரிய என் அவா -என்று-தத்வ த்ரயத்தையும் விழாக்குலை கொள்ளும்படி
ஆசை பெரிதாய் இறே இருப்பது –
(விழாக்குலை -குலை விழாமல் முழுவதும் -பூர்ண அனுபவம்
திமி என்னும் மீனை விட பெரியது -திமிங்கிலம் -திமிங்கிலததி -திமிங்கிலகில -அத்தை சாப்பிடும் –
பெரியது கில கில சொல்லி -தத்வ த்ரயங்களையும் மூழ்கடிக்கும் படி அவா )
ஆகையால் அவர்களுக்கு அது காதா சித்தகமாய் இறே இருப்பது –
இப்படி ஸ்வ சம்ருத்தியை அபேஷித்துப் போருகிறவர்கள் பக்தியின் அளவன்றிக்கே
இவை எல்லாம் இவருக்கு மங்களா சாசனத்திலே என்னும்படி
பர சம்ருத்தி ஏக பரமாய் இறே இவருடைய பக்தி பிரகர்ஷம் இருக்கிற படி –

அந்த அவா அறும் படி -(அறுத்து சூழும் படி -அனுபவம் கொடுக்க ) இவர்கள் அபேக்ஷிதம்
அபி நிவேசம் போவது அனுபவத்தால் -அதுக்குத் தக்க தீனி வேண்டுமே –

ஆழ்வார்கள் எல்லோரையும் போல் அல்லர் பெரிய ஆழ்வார்–ஸ்ரீ வசன பூஷணம்-சூரணை-250-
அவர்களுக்கு இது காதா சித்தம் – இவர்க்கு இது நித்யம் –251-
அவர்களுடைய ஆழம் கால் தானே இவருக்கு மேடாய் இருக்கும் –252

1-பய நிவர்தகங்களுக்கு பயப்படுவது –
2-பிரதி கூலரையும் அநு கூலர் ஆக்கிக் கொள்ளுவது –
3-அதீத காலங்களில் அபதானங்களுக்கு உத்தர காலத்திலேயே வயிறு எரிவது
4-பிராப்தி பலமும் இதுவே என்பது –
5-அநிமிஷரை பார்த்து -உறகல் உறகல் – என்பதாய் கொண்டு -இது தானே -யாத்ரையாய் நடக்கும் —254

அல்லாதார்க்கு சத்தா சம்ருத்திகள் பகவத் தர்சன அனுபவ கைங்கர்யங்களாலே
இவர்க்கு மங்களா சாசனத்தாலே –256)

(சத்தை யாவது -தாங்கள் உளராகை-
இது பகவத் தர்சன அனுபவ கைங்கர்ய பரரான-காமரான- மற்றை ஆழ்வார்களுக்கு அவனைக் காணாத போது தரிக்க மாட்டாதே –
காண வாராய் -என்று கூப்பிடுகையாலே -தத் தர்சனத்தாலே யாய் இருக்கும் –
அவராவி துவராமுன் -அவர் வீதி ஒருநாள் -அருளாழி புள் கடவீர் -என்று எங்கள் சத்தை கிடைக்கைக்கு
ஜால கரந்தரத்திலே ஆகிலும் ஒருக்கால் காணும்படி எங்கள் தெருவே
ஒருநாள் போக அமையும் என்று -சொல்-என்கையாலே
தர்சனமே சத்தா ஹேது என்னும் இடம் சித்தம் இறே–

சம்ருத்தியாவது -உளராய் இருக்கிற மாத்ரம் அன்றிக்கே -மேலுண்டாய் செல்லும் தழைப்பு அது அவர்களுக்கு
அந்தாமத்து அன்பு –
முடிச்சோதி-துடக்கமானவற்றில் போலுண்டான அனுபவத்தாலும் –
ஒழிவில் காலத்தில் படியே செய்யும் கைங்கர்யத்தாலுமாய் இருக்கும்-

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற அன்று முதல் பகவத் ஸௌகுமார்யாதிகளைக் கண்டு
இவற்றுக்கு என் வருகிறதோ என்று -வயிறு எரிந்து
மங்களா சாசன அபிநிவிஷ்டரான இவர்க்கு -மங்களா சாசன விச்சேதம் வரில்
தாமுளராக மாட்டாமையாலும் –
அப்படி அவிச்சின்னமாக செல்லுகை தானே தழைப்புக்கு உடலாய் இருக்கையாலும் –
சத்தையும் சம்ருத்தியும் இரண்டும் மங்களா சாசனத்தாலே யாய் இருக்கும் –
ஆகையால் இவர்க்கு மங்களாசாசனம் நித்யமாக செல்லத் தட்டில்லை -என்று கருத்து –)

(அங்கும் இங்கும் -8-3–ஆழியும் சங்கும் சுமப்பார் யார் -மற்று இல்லை —
இங்கு ஓர் பரிவர் இல்லை என்று அஞ்ச
கலக்கம் இல்லா நல் தவ முனிவர் கரை கண்டோர் துளக்கும் இல்லா வானவர் உண்டே –
நித்ய பிராயர் -ஸநத்குமாராதிகள் -ஸ்வேத தீபம் -பாற் கடலுக்கு முன் உள்ளது –
சொன்ன உடன் சமாதானம் அடைந்தார் -பரிவர் உளர் என்னப் பயம் தீர்ந்த மாறன் -)

பொங்கும் பரிவாலே –
மேல் மேல் எனப் பெருகி வருகிற ஸ்நேஹத்தாலே –
அதாவது –
அன்பே பெருகும்–(பெரிய திருவந்தாதி – 8)-என்றும் –
என்றன் அளவன்றால் யானுடைய அன்பு -(இரண்டாம் -100_-என்றும் –
ஸ்நேஹோ மே பரமம் -என்று சொல்லுகிற படியே (பரம ஸ்நேஹம் -பொங்கும் பரிவு )
ஆஸ்ரயத்துக்கு அளவன்றிக்கே கரை புரண்டு ஆய்த்து இவருடைய காதல் தான் இருக்கும் படி –

சோராத காதல் பெரும் சுழிப்பால் தொல்லை மாலை யொன்றும் பாராதவனைப்
பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையான் தாள் -(ராமாநுச-15 )-என்னக் கடவது இறே –
மாலுக்கு நேரான மால் இறே இவரது -ஸ்ரீ சர்வாதிகனுக்கு சத்ருசமான ப்ரேமாதிக்யம் -என்றபடி –

இனி ப்ரேமாதிக்யத்தால் வந்த நாமாதிக்யத்தைச் சொல்லுகிறது –
வில்லி புத்தூர் பட்டர் பிரான் பெற்றான் பெரியாழ்வார் என்னும் பெயர் –
இவருக்கு இவ் வபிதான வ்யபதேசத்துக்கு எல்லாம் அடி இவ் ஊரில் பிறப்பாய்த்து-
ஆராத காதல் குருகூர் சடகோபன் -என்னுமா போலே –
வில்லி புத்தூர் பட்டர் பிரான் –
இவருடைய க்ராம குலாதிகள் இருக்கிற படி –
வில்லிபுத்தூர் உடையான் என்று இறே இவருக்கு நிரூபகம் –
(வடபத்ர சாயிக்கும் இதே நிரூபகம் )
விஷ்ணு சித்தன் -என்றும்
கோயிலிலே வாழும் வைட்டணவன் -(பெரியாழ்வார் -5-1-)-என்றும் சொல்லுகிறபடியான இவருக்கு
விஷ்ணு நாய்ப தேஷ்டவ்ய -என்கிறபடியே எல்லாம் அதுவேயாய் இருக்கை –
(விஷ்ணு சம்பந்தத்தால் கிராம குலம் )

பட்டர் பிரான் பெற்றான் பெரியாழ்வார் என்னும் பெயர் –
ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய சர்வ ஸ்மாத் பரத்வத்தை சாதித்து-(பட்டர் பிரான்) பேர் பெற்றதுக்கு மேல் –
அவனுடைய சௌகுமார்யத்துக்கு கலங்கி –
மங்களா சாசனம் பண்ணுகையாலே பேர் பெற்றது இதுவே யாய்த்து -(பெரியாழ்வார்)

இவருக்கு மங்களா சாசனம் நித்யம் ஆகையாலே நிலை நிற்கும் திரு நாமம் இது வாய்த்து இறே-

——————————————————

இனி இவருடைய திவ்ய ஸூக்தியான ஸ்ரீ திருப் பல்லாண்டினுடைய
சகல திவ்ய பிரபந்த ப்ராதாம்ய நிதான கதன முகத்தாலே
இதனுடைய வைபவத்தை
ச த்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் —

கோதிலவாம் ஆழ்வார்கள் கூறு கலைக்கு எல்லாம்
ஆதி திருப் பல்லாண்டு ஆனதுவும் -வேதத்துக்கு
ஓம் என்னுமது போலே உள்ளத்துக்கு எல்லாம் சுருக்காய்த்
தான் மங்கலம் ஆதலால் —19-

மூன்று காரணங்கள்
1-முதலில் சொல்வது -2-அனைத்துக்கும் சுருக்கம் -3-மங்களம் கொடுப்பது –

அந் யஸ்ய பக்த நிவஹஸ்ய
நிபந்தனானாம்
ஏதத் க்ருத ஆதிந
நிபந்தனம் ஆதி ராஸீத்
சத் சார ஸங்க்ரஹ தயா அபி ச
மங்கலானாம் ஆபாதனம்
ப்ரணவத்
நிகிலாத மாநாம்

கோதிலவாம் ஆழ்வார்கள் கூறு கலைக்கு எல்லாம் –
கலைக்கு கோதாவது- கதாந்தர பிரஸ்தாபம் –
அது இல்லை யாய்த்து –
தீதில் அந்தாதி யான இவர்கள் திவ்ய ஸூக்திகளுக்கு

ராமாயணம் நாராயண கதை என்று தொடங்கி-
அவற்றின் உடைய தோஷ சாஹித்யத்தையும்
இவற்றின் உடைய தோஷ ராஹித்யத்வத்தையும்
ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்திலே உப பாதித்து அருளினார் இறே –

அன்றிக்கே –
கோது இல்லாமை ஆழ்வார்களுக்கு விசேஷணம் ஆன போது
அவனுடைய கிருபைக்கு தண்ணீர் துரும்பான ஸ்வ யத்ன ரூப உபாயாந்தர கந்தமாதல்
ப்ராப்ய தவரையில் கண் அழிவாதல் இல்லாதவர்கள் -என்றபடி –
கண் அழிவு உண்டானால் காண மாட்டார்கள் இறே –
கோதிலாத காதலை உடையவர்கள் இறே இவர்கள் தான் –

ஆழ்வார்கள் கூறு கலைக்கு எல்லாம் –
இப்படி நிர்தோஷ பிரமாணமாய்-
பேசிற்றே பேசும் ஏக கண்டரான ஆழ்வார்கள் அருளிச் செய்த
ஞானக் கலைகள் -(திருவாய் -1-9-8-)-என்றும்
அத்யாத்ம வித்யை -என்றும் – சொல்லும் படியான திவ்ய பிரபந்தங்களுக்கு எல்லாம் –

ஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும் –
அல்லாத திவ்ய பிரபந்தகளில் காட்டில் இது ஆதி யானதுவும் என் போலே என்னில் –

வேதத்துக்கு ஓம் என்னுமது போலே உள்ளத்துக்கு எல்லாம் சுருக்காய்த் தான் மங்கலம் ஆதலால் –
பிரணவாத்யா சததா வேதா –
ஓங்கார பிரபவா வேதா –
வாங்மயம் பிரணவம் சர்வம் -என்றும் சொல்லுகிறபடியே
பிரணவம் சர்வ வேத சங்க்ரஹமாய்-
ஓங்காரச் சாத சப்தச்ச -என்று தொடங்கி–தஸ்மாத் மாங்களிகாவுபௌ-என்றும்
ஆதி பகவதோ நாராணஸ்ய பிரதமாபிதாநம் கின்நாம மங்களம் ந க்ருதம் -என்று
ஆதியிலே சொல்லப் படுகிற மங்களா சரணத்தையும் உடைத்தாய் இருக்கையாலும் –
(ஓங்காரமும் அத சப்தமும் மங்கள கரம் -அததோ ப்ரஹ்ம உண்டே )

யத் வேதாதௌ ஸ்வர ப்ரோக்த -என்று வேதத்துக்கு பிரணவம் ஆதியாய் இருக்குமா போலே
இதுவும் பிராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் -இத்யாதி யில் பிரதிபாதிக்கிற
அகில பிரபந்த தாத்பர்யமான அர்த்த பஞ்சகத்தை இப் பிரபந்தத்திலே அருளிச் செய்கையாலும் –

பல்லாண்டு பல்லாண்டு என்று தொடங்கி
சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே என்று எங்கும்
மங்களா சாசனமாய் இருக்கையாலும்

இப்படி
1-சங்க்ரஹத்வ
2-மங்களத்வங்களாலே இதுவும்
3-அருளிச் செயல்களுக்கு எல்லாம் ஆதியாய் இருக்கக் குறை இல்லை –

இன்னமும் பிரணவ ஆதியான திருமந்தரம்
ப்ராப்ய பிரதானமாய் இருக்குமா போலே
தத் விவரணமான இதுவும் ப்ராப்ய பிரதானமாய் இருக்கும் –

அவ்வளவும் அன்றிக்கே –
தத் வைபவ பிரதிபாதகமான அருளிச் செயல்களுக்கும்
ஆத்யந்த அநு சந்தான க்ரமத்தாலே- ரஷகமாயும் இருக்கும் –
ப்ரஹ்மண பிரணவம் குர்யாத் ஆத வஸ்தேச சர்வதா
ஸ்ரவந்த்ய நோங்க்ருதம் பூர்வம் பரஸ்தாச்ச விசிஷ்யதே -என்னுமா போலே –

இத்தால்
இவர் ஆழ்வார்களில் பிரதானராய் இருக்குமா போலே –
இவர் பிரபந்தமும் அருளிச் செயலில் பிரதானமாய் இருக்கும் என்றது ஆய்த்து –

—————————————————

இன்னமும் இவருடைய பிரபந்ததுக்கும்
இவர்க்கும்
அப்ரதிமத்வத்தால் வந்த ஆதிக்யத்தை
அருளிச் செய்கிறார் –

உண்டோ திருப் பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலை தான்
உண்டோ பெரியாழ்வாருக்கு ஒப்பு ஒருவர் -தண் தமிழ் நூல்
செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில் அவர் செய் கலையில்
பைதல் நெஞ்சே நீ உணர்ந்து பார் –20-

அவர் செய் கலையில் உண்டோ திருப் பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலை தான்
தண் தமிழ் நூல் செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில் உண்டோ பெரியாழ்வாருக்கு ஒப்பு ஒருவர்
பைதல் நெஞ்சே நீ உணர்ந்து பார்-என்று அந்வயம்

ஸ்ரீ பட்ட நாத
தத் உபஜ்ஜ த நிபந்தனா
சத்ருசம் பவேதாம்
தரஷ்டு
நிகில த்ராவிட
சேத ஏதத்

உண்டோ திருப் பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலை தான் –
மங்களா சாசன ஏக பரமான ஸ்ரீ திருப்பல்லாண்டுக்கு
அனுபவ ஏக பரதையாலே ஆழங்கால் படுத்த வற்றான
அல்லாத திவ்ய பிரபந்தங்களில் உபமானமாய் இருப்பதொரு பிரபந்தம் உண்டோ –

பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே -என்றும்
ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் ஊற்றின் கண் நுண் மணல் போல்
உருகா நிற்பார் நீராயே -(6-8-11 )-என்றும்
ஒன்பதோடு ஒன்றுக்கும் மூவுலகம் உருகுமே (9-5-11)-என்றும்
சொல்லுகிற படி இறே இவற்றின் வாசி இருப்பது –

உண்டோ பெரியாழ்வாருக்கு ஒப்பு ஒருவர் –
பகவத் சௌந்தர்யாதிகளுக்கு மங்களா சாசனம் பண்ணி-அத்தாலே
தரித்து இருக்கிற மகத்தை உடையரான இவர்க்கு
பகவத் சௌந்தர்யாதிகளிலே மக்நராய் இருக்குமவர்களில் சத்ருசர் ஆவார் ஒருவர் உண்டோ –
(சத்தையும் ஸம்ருத்தியும் இவருக்கு மங்களா சாணமே கீழேயே பார்த்தோம் )

அடியோமோடும் -என்று தொடங்கி
அப்பாஞ்ச சன்னியமும் -பல்லாண்டு -என்னுமவருக்கு
அடியேன் இன்னும் தளர்வேனோ-
சிந்தை கலங்கித் திருமால் என்று அழைப்பன்-(9-8-10)
சக்கரத் தண்ணலே –என்று தாழ்ந்த கண்ணீர் ததும்ப -(4-7-10)-என்றும்
புக்க புக்க துறைகள் எல்லா வற்றிலும்
அழுந்தும்படியான இவர்கள் ஒப்பாக மாட்டார்கள்   –
இது மற்றை ஆழ்வாருக்கும் ஒக்கும் –

தண் தமிழ் நூல் செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில் உண்டோ பெரியாழ்வாருக்கு ஒப்பு ஒருவர் –
அழகிதான திராவிட சாஸ்திர ரூப திவ்ய பிரபந்தத்தை –
ஸ்ரீ சர்வேஸ்வரன் கிருபையால் செய்தார்கள் என்றும் –
இவ்வாழ்வார்களில்
மங்களா சாசனம் பண்ணி அல்லது தரியாத தன்மையை உடையராய் இருக்கிற இவர்க்கு
அவர்கள் சத்ருசாக வல்லார்களோ –

அவர் செய் கலையில் திருப் பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலை தான் உண்டோ –
அத் தலையாலே ஸ்வ சத்தா சம்ருதிகளை அபேஷித்தவர்கள் பிரபந்தங்களில்
பர சம்ருதியை ஆசாசிக்கும் திருப் பல்லாண்டுக்கு சத்ருசமாய் இருப்பதொரு பிரபந்தம் உண்டோ

கலை யாவது
திராவிட வேத வித்யை —
இவர்கள் கலை திராவிட ப்ரஹ்ம வித்யை இறே-

இப்படியான அவற்றில் இதன் ஆதிக்யத்தை
பைதல் நெஞ்சே நீ உணர்ந்து பார் —–
உன் மௌக்த்யத்தை விட்டு
விவேக பரிகரமான உன் ஸ்வ பாவத்தாலே இதன் வாசியை விவேகித்துப் பார் –

மயர்வற மதி நலம் அருளப் பெற்றமையும் – அத்தாலே –
பிரபந்த-(பிரமாண) நிர்மாணம் பண்ணி அருளினமையும் –
சர்வ சமமாகையாலே -அத்தை இட்டு –
அவர்களோடும் அவர்கள் பிரபந்தங்களோடும்-
இதர விலஷணரான இவரையும் இவர் பிரபந்தத்தையும்
சமான புத்தி பண்ணி இருக்கிற அறிவிலியான நெஞ்சே –
இனி யாகிலும் இவற்றின் நெடு வாசியை அறிகைக்கு பரிகரமான நீ அப்படியே
புத்தி பண்ணி விவேகித்துப் பார் –
அப்போது ஆயிற்று இவற்றின் நெடு வாசி அறியலாவது –

(விஷ்ணு சித்தன் மனத்தே கோயில் கொண்ட –
நம்மாழ்வார் க்ருஷ்ண த்ருஷ்ண தத்வமாக இருந்தாலும் -இவர் நெஞ்சுள் புகுந்து –
திவ்ய தேச வாசம் சாதனம் -ஆழ்வார் நெஞ்சுக்குள் புகுவது சாத்தியம் -திருக்கடித்தானதுடன் –
கோயில் கொண்டான் அதனொடும் -வைகுந்தம் கோயில் கொண்ட குடக்கூத்து அம்மான் –
இளம் கோயில் கைவிடேல் என்று பிரார்த்திக்கும் படி -பனிக்கடலில் பள்ளி கோளை பழக விட்டு -பயிற்சி எடுத்துக் கொண்டு –
வாசனையோடு விட்டு -இகழ்ந்திட்டு என் பால் இடவகை கொண்டான் இவர் திரு உள்ளத்தில் -ஆகவே மனத்தே -ஏவகாரம் –
இவர் திரு உள்ளமே -கவலைப்பட வேண்டாத படி இருக்குமே
அந்தணர் தமது அமுதம் -இவரே அந்தணர் -இப்பாசுரத்துடன் நிகமித்தார்
பர்வத பரமாணு வாசி என்றார் இதனாலே -)

———

ஸூ சிரம் -மிதுன ஸ்வாதி ஜாம் -விஷ்ணோர் -தன்வினைப்புரி -ரதாம்சம் -கருட அம்சம் –
பரத்வம் ஸ்தாபிக்க -தாதாத்விக பிரதிபலத் -வேண்டிய வேதங்கள் ஓதி -அப்பொழுது ஒரு சிந்தை செய்து –
பெரிய -அடை மொழி -இவருக்கும் –
ஸ்ரீ பெரிய திரு மலை நம்பிக்கும் –
பெரிய பெரிய பெருமாளாக ஸ்ரீ நரசிம்மருக்கும் –
ஸ்ரீ பெரிய திருவடிக்கும் –
அமைந்ததே ஸ்வாதி நக்ஷத்ரம் -இவர்கள் அனைவரும் –

—————

இத்தால் பிரதம பர்வ நிஷ்டர் பிரபாவம் முற்றிற்று
இனி -21-29- வரை இரண்டாம் பேடிகை விஷயம் -சரம பர்வ நிஷ்டர் பிரபாவம் –

——————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading