உபதேச ரத்னமாலை –பாசுரம் -6/7/8/9/10-ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

கீழ் பண்ணின பிரதிஞ்ஞ அனுரூபமாக அடைவே உபபாதிக்கக்   கோலி
அதில் முதல் ஆழ்வார்கள் உடைய அவதார க்ரமத்தை
முந்துற அருளிச் செய்கிறார் -ஐப்பசியில் ஓணம் -என்று தொடங்கி –

ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை
ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் -எப்புவியும்
பேசு புகழ் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்
தேசுடனே   தோன்று பிறப்பால் —-6-சிறப்பால் -பாட பேதம்

கர்ப்ப சம்பந்தம் இல்லா அயோநிஜர்கள் –

ஸர்வத்ர கீத
யஸஸ
சர ஆஹ்வஸ்ய
பூதாபிராம
மதாஹ்வயோஸ்ய
குருவோ
திவ்ய
துலா
சித்ர கிராமனே
ஸ்ரவணாதி தாரா –

ஐப்பசியில் ஓணம்  அவிட்டம் சதயம் இவை ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் -அதாவது
ஆஸ்வயுஜ மாசத்திலே விஷ்ணு நஷத்ரமான ஸ்ரவணாதி  நஷத்ர த்ரயமும் அஸத்ருசமாய் இருக்கும்
வைதிக மரியாதையை அறியாமல் லோக யாத்ரையில் கண் வைத்து இருக்கிறவர்களே –
நான் சொல்லுகிற ஒப்பிலா நாள்களை உபலாலித்து உஜ்ஜீவியுங்கோள்-
அப்படி உபமான ராஹித்யத்துக்கு அடி யேது என்ன –

எப் புவியும் பேசு புகழ்-
சர்வ லோகத்தில் உண்டானவர்களும் -அது அது -என்று வாய் புலத்தும் படியான
1-புஷ்ப யோநி ஜத்வத்தாலே வந்த ஜன்ம வைபவத்தையும் –
2-ஜ்ஞான தீப பிரகாசத்தாலே பகவத் சாஷாத் காரம் பண்ணின ஜ்ஞான வைபவத்தையும் –
3-நாட்டாரோடு இயல் ஒழிந்து-க்ராமைக ராத்ரராய் வ்யாபரித்துத் திரிந்த வ்ருத்த வைபவத்தையும்   –
அதுக்கு மேலே –
4-துவடிவில் பார்மகள் பூ மங்கையோடு–(பெரிய திருமொழி -2-10-9-) -இத்யாதிப் படியே
ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன்-இவர்களுடைய அங்க சங்கத்தை அபேஷித்து-
புலவர் நெருக்கு உகந்த பெருமாள் – என்னும்படி
தங்கள் உடைய சம்மர்த்தத்தாலே அவனை உகப்பிக்கும் படி பண்ண வல்லராய்
இருக்கிற உத்கர்ஷத்தையும் உலகத்தார் புகழும் படியாய் இறே இருப்பது –
(கரும்பு சாறு போல் மூன்று திருவந்தாதி -தேசிகன் -)

அவர்கள் ஆர் என்னில் –
பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்-
சரோ பூத மஹதாஹ் வயர்கள் –

துலாயாம் ஸ்ரவனே ஜாதம் காஞ்ச்யாம் காஞ்ச நவாரிஜாத்
த்வாபர பாஞ்ச ஜன்யாம்சம் சரோ யோகிநாம் ஆஸ்ரயே

காஞ்ச்யாம் ஸரஸி ஹேமாப்ஜே ஜாதம் காஸார யோகிநம்
கலயே ய: ஶ்ரிய:பதி ரவிம் தீபம் அகல்பயத்–த்வாபர பாஞ்ச ஜன்யம் அம்சம்

துலா த நிஷ்டா ஸம்பூதம் பூதம் கல்லால மாலிந
தீரே புல்லோத் பலே மல்லா புர்யா மீடே கதாம் சகம்

மல்லாபுர வராதீஶம் மாதவீ குஸுமோத்பவம்
பூதம் நமாமி யோ விஷ்ணோர் ஜ்ஞானதீபம் அகல்பயத்–கதாம் அம்சம்

துலா சதபிஷக் ஜாதம் மயூர பூரி கைரவாத்
மஹாந்தம் மஹத்தாக் யாதம் வந்தே ஸ்ரீ நந்தகாம் ஸகம்

த்ருஷ்ட்வா ஹ்ருஷ்டம் ததா விஷ்ணும் ரமயா மயிலாதிபம்
கூபே ரக்தோத்பலே ஜாதம் மஹதாஹ்வயம் ஆச்ரயே-நந்தக அம்சம்

(சக்ர அம்சம் -திரு மழிசை ஆழ்வார்
ஒண் சங்கு -கதை -வாள் -சக்கரம் -நம்மாழ்வார் வரிசைப்படுத்தி அருளி )

இவர்கள் –
தேசுடனே  தோன்றுகை -யாவது –
பகவத் பிரசாதத்தினாலே சஹஜ தாஸ்யத்தால் வந்த ஒஜ்ஜ்வல்யத்தோடே யாய்த்து வந்து அவதரித்தது –
அதடியாக வந்த சம்பத்தைத்தை யுடைத்தாகையாலே – ஒப்பிலா நாள்களாக இருக்கும் –
ஆழி யங்கைப் பேராயர்க்கு ஆளாம் பிறப்பு -விண்ணாட்டுத் தேசு இறே –
கருவரங்கத்துத் கிடந்தது கை தொழுதேன் கண்டேன் -(முதல் -6-)-என்றும் –
கருக் கோட்டியுட்  கிடந்து கை தொழுதேன் கண்டேன்-( இரண்டாம் 87)–என்றும் –
கருவிறந்த நாள் முதலாக் காப்பு-( நான்முகன் ) -என்றும்
சொல்லுகிறபடியே சஹஜ தாஸ்யத்தை யுடையராய் இறே இருப்பது –
ஆகையால் அத்யந்த விலஷணரானவர்கள் திரு நஷத்ரங்களை நன்றாக ஆதரித்து
அவர்கள் அபிமான அந்தர்பூதர் ஆகையாலே வந்த அதிசயத்தை யுடையராய் ஆகுங்கோள்   –

அதுக்கு மேலே
ஆச்யுவஜ மாசத்தில் அந்த ஸரவண நஷத்ரம் தான் ஸ்ரீ விஷ்ணு நஷத்ரமாய்
வைஷ்ணவோத்தமரான ஸ்ரீ கிருஷ்ண பாத ஸூநு வான ஸ்ரீ லோகாசார்யர் உடைய அவதாரமும் ஆகையாலே
இத்தை ஸ்ரீ வரவர முநிவர்யான ஜீயரும் அத்யந்த ஆதாரம் பண்ணி
பரிபாலித்துக் கொண்டு போந்து அருளுவர் என்று பிரசித்தம் இறே –
இந்த திரு நஷத்ரமும் முப்புரி யூட்டினதாய் இருக்கும் –

க்ரியாதிகாரே அஷ்டா தசா த்யாயே -(பாஞ்சராத்ரம் )-என்றும் –

ஸ்ரவணம் சாஸ்வ யுஜ மாஸ் சர்வ பாப ஹரம்பரம்
மத்ஸ்ய கூர்ம வராஹாணாம்  ஆவிர்பாவாதி  நம் ஸ்ம்ருதம் -என்றும்

ஹாரித மாஸே பாத்ரபதே சுக்லே த்வாதச்யாம்  விஷ்ணு தேவதே
ஆதித்யாம் உதயாத் விஸ்ணுர் உபேந்த்ரோ வாமநோவ்யய-என்னக் கடவது இறே –

(திருவோணத்தான் உலகாளும் என்பர் அன்றோ )

——————————————-

இவர்களுக்கு முதல் ஆழ்வார்கள் என்று திரு நாமம் ஆகைக்கு ஹேதுவை அருளிச் செய்கிறார் –
மற்றுள்ள ஆழ்வார்கள் -என்று தொடங்கி –

மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து
நற்றமிழால் நூல் செய்து  நாட்டை யுய்த்த -பெற்றிமையோர்
என்று முதல் ஆழ்வார்கள் என்னும் பெயர் இவர்க்கு
நின்றது உலகத்தே நிகழ்ந்து —7-

மூவரும் சேர்ந்தே சந்நிதி -சேர்ந்தே உத்சவம் –

பஃதேஷூ
தஸ ஸூ
பிரதமம்
பத்தே ஏதேத் த்ரய
த்ராவிட சம்ஹிதை
யஸ்மாத் ஜெயந்தி
சகலான் உப ஜீவந்தி
பக்த
தத
பிரதம இத் அபி நாமம்
உப ஜீவந்தி

ஆழ்வார்கள் பதின்மரில் வைத்துக் கொண்டு-தாங்கள் மூவரும்
மற்றை எழுவருக்கும் முன்னே யாய்த்து ஆவிர்ப்பவித்தது –
இவர்கள் மூவரும் பிரணவம் போலே யாய்த்து பிரதானரராய் இறே இருப்பது –
(ஓம் ஏக அக்ஷரம் மூன்று எழுத்துக்கள் போல் மூவரும் பிரதானர் )

இவர்கள் தான் த்வாபராந்ததத்துக்கும் -கலியுக ஆதிக்கும் நடு வுண்டான சந்தியிலே யாய்த்து  அவதீர்ணர் ஆய்த்து –
அத்தைப் பற்றி முன்னே என்று பிரதமஜராகப் பேசுகிறது –
ஸ்ரீ திரு மழிசைப் பிரானும் அவர்களுக்குத் தோள் தீண்டியான காலத்திலே யாய்த்து அவதரித்து அருளினது –
மற்றுண்டானவர்கள் கலி யுகாதியே தொடங்கி அடைவிலே அவதரித்தார்கள் –

(தேவ மானம் வருஷம் படி -1200-2400-3600-4800-
1000–2000-3000-4000-நான்கு யுகங்கள்
சந்தி-100-முன்னும் பின்னும் கலிக்கு
200-/300/400
862901 வருஷம் நால்வரும் அவதாரம் -சந்தியில் இவர்கள் -கடைசி 1100 வருஷம் தான் -அப்புறம் கலி யுக உத்தர சந்தி –
நம்மாழ்வார் கலி யுகம் -36000 வருஷம் இடைவெளி இவருக்கும் முதல் ஆழ்வாருக்கும்
883888-வருஷம்- மதுரகவி -சந்தியில் 16000 வருஷமாக காத்து இருந்து நம்மாழ்வாரை பெறுகிறார் இவர் )

இனி
நற்றமிழால் நூல் செய்கை -யாவது
விலஷணமான திராவிட பாஷையால் மற்று உண்டான பிரபந்தங்களுக்கும் விலஷணமாம் படி
திராவிட சாஸ்திர ரூபமான திவ்ய பிரபந்தங்களை நிர்மித்தது –

அவை தான்
வையம் தகளி -என்றும்
அன்பே தகளி -என்றும்
திருக் கண்டேன் -என்றும் தொடங்கும் –திருவந்தாதிகள் -என்றபடி –

செஞ்சொற்  கவிகாள்-(திருவாய் -10-7-1-) -என்றும்
செந் தமிழ் பாடுவார் -(பெரிய திருமொழி -2-8-)என்றும்
இன் கவி பாடும் பரம கவிகளால் (திருவாய் -7-9-)-என்றும்
(பாலேய் தமிழர் இசைகாரர் -என்றும்
தமிழ் தலைவர் -என்றும் )
கொண்டாடும் படி இறே இதன்   நன்மை இருப்பது –
பெரும் தமிழன் அல்லன் பெரிது -(பூதம்)-என்று தாங்களும் இத்தை ஆதரித்தார்கள் இறே –
இப்படி ஸ்வ பர விபாகம் அற கொண்டாடும் படி யாய்த்து இவர்கள் ஸ்ரீ ஸூக்திகள் ஏற்றம் இருப்பது –

இப்படி அதிசய அவஹமான ஸ்ரீ ஸூக்தி விசேஷங்களாலே
ஜகத்தில் உண்டான அஞ்ஞான அந்தகாரத்தைப் போக்கி
உஜ்ஜீவிப்பித்த பிரபாவத்தை யுடையவர்கள் என்னுமத்தாலே
ஸ்ரீ முதல் ஆழ்வார்கள் என்கிற திரு நாமம் ஆனது லோகத்திலே வர்த்தியா நின்றது –
பெற்றிமை -பெருமை

இத்தால்
இவர்கள் உடைய ஜன்மனா வித்யயா ச -என்கிறதான ப்ராதம்யமானது பிரகாசிக்கப் பட்டது ஆய்த்து –

—————————————

கலி -397 ஆண்டுகள் நள நாம வியாழன் பவ்ர்ணமி கிருத்திகா
சார்ங்கம் கார்முகம் வில் அம்சம்

விருச்சிக்கே கிருத்திகா ஜாதம் சதுஷ்கவி சாகா மணிம்
ஷட் பிரபந்த க்ருதம் சாரங்க மூர்த்திக்கு கவிஹமர் ஸரயே

சமஜாயா –நீல நாமம் -புருஷோத்தம கார்முகம் சாபம் அம்சம்

கீழே மூன்று பேரும் விளக்கு ஏற்றியதை அருளிச் செய்து
கார்த்திகை தீபம் பவ்ர்ணமி
திவாகரன் -கலி கோலாகலம் முடித்து

அனந்தரம்
திருமங்கை ஆழ்வார் அவதரித்து அருளின திருக் கார்த்திகை திரு நஷத்ரத்தின் உடைய வைபவத்தை
தம் திரு உள்ளத்தைக் குறித்து-ப்ரசன உத்தர ரூபேண அருளிச் செய்கிறார் –
பேதை நெஞ்சே -என்று தொடங்கி-

கீழே
ஈது இவர் தோற்றத்து அடைவாம் -என்று அருளிச் செய்த அடைவு அன்றிக்கே
இனி மேல் மாசங்களின் உடைய சேர்த்திக்காக வந்த க்ரமத்திலே அருளிச் செய்கிறார்    –
சேதனருக்கு இதுவும் புத்யாரோஹண க்ரமம் இருக்கும் படி –
மாசங்களை அடைவே சொல்லிக் கொண்டு போகலாம் ஒரு சௌகர்யம் உண்டு இறே-

பேதை நெஞ்சே இன்றைப் பெருமை யறிந்திலையோ
ஏது பெருமை   இன்றைக்கு என்று என்னில் -ஓதுகின்றேன்
வாய்த்த புகழ் மங்கையர் கோன் மா நிலத்தில் வந்துதித்த
கார்த்திகையில் கார்த்திகை நாள் காண் –8-

என்றியேல் -பாட பேதம் –

நாவைஷி வைபவம்
அமுஷ்ய தினஸ்ய முக்த சேதஸ
கிமேததி
பஸ்யத்வம்
அஸ்ய
பரகால கவி
ப்ரதீப்தா
திவ்ய தின
கார்த்திகை கிருத்திகா

பேதை நெஞ்சே இன்றைப் பெருமை யறிந்திலையோ   –
அல்லாத நஷத்ரங்களோடு இத்தையும் ஒன்றாக எண்ணுகிற அறிவிலியான நெஞ்சே –
உஜ்ஜீவிக்கைக்கு  ஹேதுவான இற்றைத் திவசத்தின் மஹத்தையும்
மனனம் பண்ணுகைக்கு பரிகரமான நீ
அப்படி அறிய மாட்டிற்று இலையோ –
(உம் அடியாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை -4-9-6–என்று இறே அருளிச் செய்தது )

ஏது பெருமை  இன்றைக்கு என்றியேல் –
அல்லாத திவசங்களைக் காட்டில் இத் திவசத்துக்கு உண்டான பெருமை தான் ஏது என்னில்
அத்தை அறிந்த  நீர் அருளிச் செய்யலாகாதோ என்று நீ சொன்னாயாகில் –

ஓதுகின்றேன் –
அப்படியே அறிந்த நான்-அறியாத உனக்கு உபதேசிக்கிறேன் –

வாய்த்த புகழ் –
மன்றில் மலி புகழ் மங்கை மன்னன் -11-2-10-என்கிறபடியே
தன் ஸ்வரூபத்துக்கு  அனுரூபமாக சேர்ந்து இருப்பதான புகழை யுடையராய் –
ஸ்ரீ திருமங்கைக்கு மன்னரான இவர் மகா ப்ருதிவியிலே வந்து அவதரித்தது
திருக் கார்த்திகை மாசத்தில் திருக் கார்த்திகை நஷத்ரம் காண் -என்று ஓதுகின்றேன் –

இவருக்கு புகழ் வாய்க்கை யாவது –
மாயோனை வாள் வழியால் மந்த்ரம் கொண்ட -இது வாய்த்து –
மந்திரம் கொள் மங்கையர் கோன் -என்னக் கடவது இறே –
திருமந்திர லாபம் இறே இவருடைய யசஸ்ஸூக்கு அடி –
வாய்க்கை -கிட்டுகை-
அது தானும் -வாய்த்த திரு மந்த்ரம் – இறே –
அன்றிக்கே
இவர் அவதாரத்தாலே வாய்த்த புகழை யுடைய மங்கை -என்னவுமாம் –

(நான்கு அரசே -ஆலி நாட்டு அரசர் -அரச மரம் -மந்திர அரசை தெய்வத்துக்கு அரசரால் பெற்றார்
வாய்த்த -அடை மொழி திருமங்கைக்கும் ஆழ்வாருக்கும்
ஸ்வரூப அனுரூப மந்த்ரம் பெற்றார் அன்றோ
வாள் வலியால் பெற்றாலும் ஸ்வரூப அனுரூபம் என்றது அனைத்தும்
அவன் சங்கல்பம் அடியாகவே என்பதால் )

மங்கையர் கோன் மா நிலத்தில் வந்துதித்த கார்த்திகையில் கார்த்திகை நாள் காண் –
இப்படியான ஸ்ரீ திரு மங்கைக்கு நிர்வாஹகரான ஸ்ரீ ஆழ்வார்
இருள் தருமா  ஞாலத்தில் அவித்யையான தமஸ்சைப் போக்கும்படி அவதரித்து அருளினது
திருக் கார்த்திகை மாசத்திலே திருக் கிருத்திகா நஷத்ரத்திலே காண் –

கலயாமி கலித்வம்சம் கவிம்  லோக திவாகரம் -என்றும்
இவரை ஆதித்யனாக சொல்லுகையாலே-வந்துதித்த -என்கிறார் –
இப்படி இவர் ஆவிர்பவித்த வைபவத்தை அறிந்து நான் ஓதுவிக்க
அறியாத நீ-இத்தை அதிகரித்து ஆதரிப்பாயாக –

(லோக திவாகரன் -பவ்ர்ணமி அன்று அவதரித்து குளிர்ந்து அவித்யை தமஸ்ஸை போக்கி அருளினார்
இறைவனைக் காணும் இதயத்து இருள் கூடும் படி )

இவர் தான்
நெஞ்சுக்கு இருள் கடி தீபமான
தெய்வ நன்மாலை யாகிற-( 1-1-10-) திவ்ய பிரபந்தத்தை யுண்டாக்கும் படி அவதரித்து அருளினவர் ஆகையாலே
அது தான் தீபாராதன திவசமுமாய் வந்து நேர் பட்டது இறே –

குர்வாண கார்த்திகே  மாஸி  விஷ்ணோர் தீபம் ஹி மந்திரே -என்றும்
(ஸ்ரீ விஷ்ணு தர்மம் -காசி ராஜா தர்ம பத்நி -லலிதா சரித்திரம் -அறிவோமே -எலி த்ரி தூண்ட பட -)
விஷ்ண வால யேது கார்த்திக்யாம் தீபதானம் கரோதியே -என்றும் சொல்லக் கடவது இறே –

இது தான்-இன்றைப் பெருமை -என்கிற
மஹத்தைக்கு ஈடாக மஹா நஷத்ரமுமாய் இறே இருப்பது –

—————————————————

ஸ்ரீ சடகோப வாங்மயமான( தனியன் ) சதுர் வேதத்துக்கும் ஷட் அங்கங்களை அருளிச் செய்யும் படி
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் அவதரித்து அருளின
திருக் கார்த்திகை திரு நஷத்ரத்தை பல காலும் (மாசம் தோறும் ) ஆதரிக்குமவர்களை
மங்களா சாசனம் பண்ணு என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர் கோன்
ஆறங்கம் கூற அவதரித்த –  வீறுடைய
கார்த்திகையில்  கார்த்திகை  நாள் இன்று என்று காதலிப்பார்
வாய்த்த மலர்த் தாள்கள் நெஞ்சே வாழ்த்து —-9-

அங்காநி
ஷட் த்ரவிட வேத சதுஷ்டஸ்ய கர்த்தும்
சடாரி கலி தத்த
யத் ஆவிர்பூத புவி
கார்த்திகை கிருத்திகாஸூ
தத் வைபவ பத பத்மம் உபைதி
சேதச

மாறன் பணித்த தமிழ் மறைக்கு-
சமஸ்க்ருத வேதம் போலே-தான் தோன்றியாய் -அடி யற்று இருக்கை அன்றிக்கே
ஸ்ரீ ஆழ்வார் இடத்திலே அவதரித்த ஏற்றம் உண்டு இறே-திருவாய் மொழிக்கு –
வேத ப்ராசாதேசாதா சீத -என்னுமா போலே  –
(ஸ்வ மஹிமையால் தானே தன்னை ப்ரதிஷ்டை செய்தாலும் தாய் தந்தை தேர்ந்து எடுத்து
தொல்லை இன்பம் அருளுவான் இங்கேயே –
ம்ருத் கடம் வேதம் – போல் அன்றே -பொன் கடம் இவர் வாயனவாறே
எம்பெருமான் -பெருமாள் சக்ரவர்த்தி திருமகனாக அவதரிக்க வந்தால் போல் –
வேத புருஷன் -வால்மீகி க்கு பிள்ளை என்று பின் வந்தான் )

தமிழ் மறை -என்கையாலே
திராவிட ரூபமான வேதம் -என்கை –
ததும்  ஹ த்ரீன் கிரி ரூபா ந விஜ்ஞாதா ந சதர்சயாம் சகாயா தேஷாங்ம் ஹேயாகை கஸ்மான்
முஷ்டிநா ஆததே சஹோவாச பரத்வாஜே த்ர்யா மந்த்ர்ய வேதா வா  ஏதே
அநந்தா வை வேதோ -( காடகம் )-என்றும்
நமோ வாசே யசோதிதா யாசா நுதிதா தஸ்யை வாசே –
ஸ்வ சம்ஸ்க்ருத திராவிட வேத ஸூக்தி  -என்றும்
த்ராவிடீம்  ப்ரஹ்ம சம்ஹிதாம் ( பராங்குச அஷ்டகம் ) -என்றும்
அருளிச் செய்தார் இறே பட்டர் –
ஸ்ரீ ஆழ்வாரைக் கொண்டு ஈஸ்வரன் பிரவர்த்திப்பித்ததே ஹேதுவாக கொண்டு
இவராலே ப்ரநீதமானதாகச் சொல்லக் கடவது –

(எம்பெருமானார் தர்சனம் என்று பெயர் இட்டு -வளர்த்த செயலுக்காக போல்
இவர் நாவில் அமர்ந்து பாடுவித்தான் –
அநாதி -இவையும் வேதம் போல் -)

மங்கையர் கோன் ஆறங்கம் கூற அவதரித்த –
இப்படி இவராலே உண்டான திராவிட வேத சதுஷ்ட்யத்துக்கும்
ஸ்வ ஸூக்திகளான ஷட் பிரபந்தங்களை அருளிச் செய்யும் படி அவதரித்து அருளினார் இறே ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் –
திரு விருத்தம் முதலான நம் ஆழ்வார் பிரபந்தங்கள் நாலுக்கும்
பெரிய திரு மொழி முதலான திருமங்கை ஆழ்வார் பிரபந்தங்கள் ஆறும் அங்கங்களாக இறே இருப்பது
அது திராவிட வேதம் ஆனால்
இதுவும் திராவிட ரூபமான அங்கங்கள் என்னக் குறை இல்லை இறே –
திருவாய் மொழியினுடைய வேதத்வத்தையும்
இதனுடைய அங்கத்வத்தையும் ஆச்சார்ய ஹிருதயத்தில் பரக்க உபபாதித்து அருளினார் இறே –

(வேத சதுஷ்ட (த்தயத்துக்கு-இங்கும் லுப்தம் )
அங்க உபாங்கங்கள் போலே
இந் நாலுக்கும்
இரும் தமிழ் நூல் புலவர் பனுவல் ஆறும்
மற்றை எண்மர் நன் மாலைகளும்-ஆச்சார்ய ஹிருதயம்-43-
இதுக்கு 17 வகைகளில் நம்மாழ்வார் திருமங்கை ஆழ்வார் பாசுர ஒற்றுமைகள்
காட்டி அருளுகிறார் மா முனிகள்
மாசறு சோதி -இரண்டு பாசுரங்களில் நம்மாழ்வார் –
இவர் இரண்டு பிரபந்தங்கள் –
ஓ ஓ உலகின் இயல்பே ஈன்றோள் இருக்க மணை நீர் ஆட்டி -நம்மாழ்வார்
மை நின்ற -பெற்ற தாய் இருக்க -பத்து பிபாசுரம் விரித்து காட்டி
இப்படி அங்கி அங்கம் பாவம் – )

வீறுடைய கார்த்திகையில் கார்த்திகை நாள் –
இப்படியான ஏற்றத்தை யுடைத்தான-வேத வேதாங்க தத்வ ஜ்ஞானரான இவர் அவதரிக்கையாலே
அல்லாத திரு நஷத்ரங்களில் காட்டிலும் வீறு உடையதாய் யாய்த்து
கார்த்திகையில் கார்த்திகை தான் இருப்பது –
(அனைத்து ஆழ்வார்கள் திருவடி நிலை இவரே -அவரது அருளிச் செயல்கள் அனைத்தும் அறிந்தவர் இவரே )

இவர் தாம் ஸ்ரீ பராங்குச பரகாலாதிகள் என்னும் படி இறே பிரசித்தராய்ப் போருகிறது –
(கிருத்திகா பிரதமம் விசாகே உத்தமம் -வேதமும் இவர்களைச் சேர்த்தே சொல்லும் )
தாமும் -உம் அடியாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை-4-9-6 -என்று இறே அருளிச் செய்தது –
அது போலே யாய்த்து திரு நஷத்ரம் –
அதுக்கு மேலே
தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடும் -தன்னேற்றம் உண்டே இவருக்கு –

இப்படி இவர் அடியாக யுண்டான அதிசயத்தை யுடைய
கார்த்திகையில் கார்த்திகை நாள் இன்று என்று காதலிப்பார்-
இந் நாள்கள் இடையில்-இதுவும் ஒரு மதி நிறைந்த நந்நாள்-(திருப்பாவை -1-)உண்டாவதே என்று
இதன் வைபவத்தை   இடைவிடாமல்  அனுசந்தித்து
இதிலே அத்ய அபி நிவேசத்தைப் பண்ணி போந்து அருளுவார்கள் –
அவர்கள் ஆகிறார் -குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத அன்பன் ராமானுசன்- (ராமானுச 2 )-போல்வார்   –

அவர்கள் உடைய –
வாய்த்த மலர்த் தாள்கள் நெஞ்சே வாழ்த்து –
அவர்கள் நமக்கு சேஷிகள் ஆகையால்
ஸ்வரூப பிராப்தமாய் -நிரதிசய போக்யமான திருவடிகளை –
போந்தது என்நெஞ்சு (ராமானுச -100)-என்னும் படி அதிலே அதி ப்ரவணமாய் போருகிற மனஸே
அச் செவ்வி மாறாமல் நித்யமாய்ச் செல்ல வேண்டும் என்று
மங்களா சாசனம் பண்ணி உன் ஸ்வரூபம் பெறப் பார்
இன்புறும் தொண்டர் செவ்வடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே( பெருமாள் 2-4-சேவடி -பாட பேதம் )-என்னக் கடவது இறே
வாய்க்கை -பொருந்துகை –

மலர்த் தாள்கள் –
மலர் போன்ற திருவடிகள் –
இத்தால் –
ஆச்சர்ய பாரதந்த்ரத்துக்கு அனுகூல வ்ருத்தி  செய்து போருகை ஸ்வரூபம் என்றது ஆயத்து –

இந்த ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திரு நஷத்ரத்தை
ஸ்ரீ திருக் கலிகன்றி தாசர் என்று திரு நாமத்தை யுடையராய்
சதிருடைய தமிழ் விரகராய்-
அருளிச் செயல் நாலாயிரம் பாட்டுக்கும் அர்த்த உபதேசம் பண்ணுமவராய்
போருகிற லோகாச்சார்யரான ஸ்ரீ நம் பிள்ளையும்
தத் வம்ச்யரும் மிகவும் பரிபாலித்து போருவர்கள் என்று பெரியோர்கள் அருளிச் செய்து போருவர்கள் –

ஸ்ரீ பிள்ளை ஆதரிக்கிறது ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளில் பிராவண்யத்தாலே   –
தத் வம்ச்யர் ஆதரிக்கிறது ஸ்ரீ பிள்ளையினுடைய திரு நஷத்ரமும் அது என்றாக வேணும் –

(அனந்தாழ்வான் சிஷ்யர் மதுரகவி தாசர் –
மாத பெயரும் நக்ஷத்ரமும் சேர்ந்தே இருப்பது கார்த்திகையில் கார்த்திகையும் -சித்திரையில் சித்ரையும் தானே )

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை வல்லராய் யுரைப்பார் மதி யந்தவழ்
விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்மை சொல்லில் வெண் சங்கம் ஓன்று ஏந்திய
கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே –7-10-10-

——————————————————

கலி 342-வருஷம் -திருமங்கை ஆழ்வாருக்கு முன்பே அவதரித்தவர் இவர் –
துர்மதி வருஷம்-ஸ்ரீ வத்ஸ அம்சம்
புதன் கிழமை கிருஷ்ண பக்ஷம் த்விதீய திதி

விருச்சிகே ரோஹிணீ ஜாதம் ஸ்ரீ பாணம் நிகழா புரே
ஸ்ரீ வத் ஸாம்சம் காய கேந்த்ரம் முனி வாஹனம் ஆஸ்ரயே

இனி கார்த்திகை நஷத்ரத்துக்கு அநந்தரம் ரோஹிணி நஷத்ரம் ஆகையாலும் –
மாசமும் அதுவாகையாலும்
அந்தச் சேர்திக்காக-கார்த்திகையில் ரோஹிணி  நாளானது ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் திரு அவதரிக்கையாலே
ஆஸ்திகராலே ஆதரணீயமாய் உபலாலிக்கப் படுமதான நாள்-என்கிறார்   –

கார்த்திகையில் ரோஹிணி நாள் காண்மின் இன்று காசினியீர்
வாய்த்த புகழ்ப் பாணர் வந்துதிப்பால் –ஆத்தியர்கள்
அன்புடனே தான் அமலனாதி பிரான் கற்றதற்பின்
நன்குடனே கொண்டாடும் நாள் —10-

ஆத்தியர்கள்-ஆஸ்திகர் -ஆர்த்தி உள்ளவர் என்றுமாம் –
காசினியீர்-பூமியில் உள்ளவர்களே
காய்ச்சின வேந்தன் காசினி வேந்தன் பூமி பாலகன்

அத
தத்ர குலே அந்திமே
ரமா ரமண
உரஸ்த்தித லாஞ்சனம் –
சம ஜாயத பாண
சம்யக
ஸூ கவி

அத்யோர்ஜித்த
நனு
யஸ்யாம்
அவாதரத்
அசவ் முனி வாஹநார்ய
ஏதத் க்ருதா அமலானாதி பிரான் பிரபந்தே
அத்ய தினம்
லாலனனம்
ரோகிணி தாரா

கார்த்திகையில் ரோஹிணி நாள் காண்மின் என்று காசினியீர் –
கீழில் பாட்டில் தம் திரு உள்ளத்தைக் குறித்து உபதேசித்தவர்
மீளவும்-இப்பாட்டில் லௌகிகரைக் குறித்து உபதேசிக்கிறார்-
தம்மோடு அவர்கள் ஏகமாவார்கள் வேணும் என்னும் திரு உள்ளக் கருத்தாலே –

ரோஹிணி நாள் –
என்கிற இது தான் -ஸ்ரீ கிருஷ்ணன் திரு அவதரித்த திரு நஷத்ரமாய் இருக்கும் –
இவருக்கு -கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை -என்று இறே
அவ் விஷயத்தில் பாவ பந்தம் இருப்பது –
(ஆழ்வார் உள்ளம் வெண்ணெய் போலவே அன்றோ இவனுக்கு
மதுர கவி ஆழ்வார் சித்திரை மாசம் சித்திரை நக்ஷத்ரம் -நமஸ் பதார்த்தம் சொல்ல
வந்தவருக்கு அமைந்தது போலவே இங்கும் )
அவ்வளவும் அன்றிக்கே
சரம ஸ்லோகார்த்த பிரகாசகரான ஸ்ரீ திருக் கோட்டியூர்  நம்பியும் வைகாசி ரோஹிணி நாள்
உறியில் வெண்ணெயோடு  இயல் உண்ட ஒருவனைப் போலே -திரு வவதரித்தார்
என்கையாலே இது முப்புரி யூட்டி இருப்பது –
(ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் ஸ்ரீ திருப்பாண் ஆழ்வாருக்கும் ஸ்ரீ திருக் கோஷ்டியூர் நம்பிக்கும்
உள்ள ஸத்ருசம் காட்டி அருளுகிறார்
திரு மந்த்ரம் உபதேசித்தாரா சரம ஸ்லோகம் உபைத்ஜ்சித்தாரா -சர்ச்சை -இரண்டுமே சரி
இங்கு சரம ஸ்லோக அர்த்த பிரகாசகர் )

இப்படி மும்மடங்கான ஏற்றத்தை யுடைத்தான இது தான் என்று என்ன –
இன்று காண்மின் –
அது இன்று காணுங்கோள்-
காலாந்தரே அன்றிக்கே -அயம் மாச -என்கிறபடியே அது இன்றாவதே –
இவர்க்கு அதில் ஆதராதிசயம் அதீத காலமாய் இருக்கச் செய்தே-சம காலமாய் இருக்கிறபடி –

நிதி காட்டுவாரைப் போலே காணுங்கோள் என்று பிரத்யஷிப்பிக்கிறார் –
காசினியீர் –
என்று -ஒருவர் இருவர் அன்றிக்கே-
யதி கச்சின் முமுஷூஸ் யாத் -என்கிறபடியே
தம் நசையாலே ஒரு  நாடாக உபதேசிக்கிறார் –

இதன் ஏற்றம் தான் இன்னத்தால் என்று எங்களுக்கு அறிவித்தால் ஆகாதோ என்ன –
வாய்த்த புகழ்ப் பாணர் வந்துதிப்பால் –என்கிறார் –
வாய்த்த புகழாவது –
தன் ஸ்வரூபத்துக்கு சேர்ந்த புகழ் -அதாவது
சஹஜ தாஸ்யத்துக்கு அனுகுணமாக-நைச்யத்தை ஜன்ம சித்தமாக யுடையவர் ஆகையாலே
ஸ்ரீ லோக சாரங்க முனிகள் உடைய சிரசாவாஹ்யராம் படி பண்ணி அங்கீகரித்து அருளின புகழ் –
பாரியலும் புகழ்ப்  பாண் பெருமாள் -(ராமாநுச -11)-என்னக் கடவது இறே –

பாணர் வந்துதிப்பால் –
ஏதத் சாம காயான் ஆஸ்தே -என்கிற முக்தர் வ்ருத்தியை
இங்கே
ஸ்ரீ பெரிய பெருமாள் விஷயத்தில்
வாக் வ்ருத்தியான அடிமை செய்து போருகையாலே
அதுவே தமக்கு நிரூபகமாய் இருக்குமவர் –
(பாட்டினால் கண்டு வாழும் பாணர் -காட்டவே கண்டு பாட
கௌசிக ஏகாதசி புராணம் பொழுது திருப்பாண் ஆழ்வாரையும் எழுந்து அருளிப் பண்ணியே
திருவல்லிக்கேணியில் சேவை -நம் பாடுவான் – )

வந்துதிப்பால் –
அண்டர் கோன் அணி யரங்கன் -ஆகையாலே
அவரைப் பாடுகைக்காக
அங்கு உள்ளாரில் ஒருவர் இங்கே அவதரித்தார் என்னும்படி அவதரிக்கையாலே –

ஆத்தியர்கள் கொண்டாடும் நாள் –
என்கிறது -அவர்கள் ஆகிறார்
லோக சாரங்க முனிகள் போல்வார்
பிரமேய பூதரான அர்ச்சா ரூபமான பெரிய பெருமாள் விஷயத்திலும்
தத் பிரதிபாதக தயா  வந்த பிரமாண ஸ்ரேஷ்டமான
அமலனாதி பிரான் -என்கிற செந்தமிழான இவர் பிரபந்தத்தின் இடத்திலும் –
தத் பிரமாதாக்களாய் நிகர்ஷத்வ  அனுசந்தான யுக்தரான இவ் வாழ்வார் விஷயத்திலும்
மேல் எழுந்த ஆகாரங்களைப் பாராதே-நிரவதிக விஸ்ரம்ப யுக்தராய்
பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவுமவராய் -இருக்குமவர்கள் –
(விக்ரகம் தமிழ் -பாணர் குலம் என்றவற்றைப் பார்க்காமல்
அஸ்தி-இவற்றின் உண்மையை அறிந்தவர்கள்)

அன்புடனே தான் அமலனாதி பிரான் கற்றதற்பின்-
சீரிய நான் மறைச் செம் பொருளை செந்தமிழால் அளித்த -என்கிறபடியே
சகல வேத சங்க ரஹமாய்
அஷர த்ரயாத்மகமான பிரணவத்தை
அகார உகார மகார ரங்களாலே  முதலிட்டு மூன்று பாட்டினுடைய அடியிலே அருளிச் செய்த படியையும்
(அமலன் உவந்த மந்தி -ஓங்கார அர்த்தம்
மார்கழி வையத்து ஓங்கி போல் முதல் பதங்கள் அர்த்தம் காட்டுமே )

அந்த பிரணவ ப்ரதிபாத்யமான வஸ்துவை-
பிரணவ ஆகாரமான விமான மத்யத்திலே
அடியே தொடங்கி முடி அளவும் அனுபவித்த பிரபந்தம் என்கிற ஆதாரத்துடன்
ஆச்சார்ய உச்சாராண அநு உச்சாராண க்ரமத்தாலே  அப்யசித்த பின்பு –

நன்குடனே கொண்டாடும் நாள் –
தத் பலமான பிரமாணாதிகள் விஷயத்திலே விஸ்வாசத்தை யுடையராய் ஆஸ்திகராய் இருக்குமவர்கள்
விதி ப்ரேரிதராய்-இத்தை தங்களுக்கு ஸ்ரேயஸ்சாக எண்ணி உபலாலிக்கப் படுமதான நாள் -என்கை-

ஆகையாலே
நீங்களும் ஆஸ்திகராய்
நான் சொல்லுகிற இத்தை விஸ்வசித்து
புத்தி பண்ணுங்கோள் என்று கருத்து  –

————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading