மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -100-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

எம்பெருமான் புகலிடமாவது
பெரிய பிராட்டியார் திருவடிகளை
என்றும் புகலிடமாகப்
பற்றினாருக்கு
என்கிறார் –

———————————————————————————

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்
தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் -காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்
தேனமரும் பூ மேல் திரு ——100-

பதவுரை

சக்கரத்தான்–திருவாழியைக் கையிலே உடையவனும்
தண் துழாய் தார் வாழ்–குளிர்ந்த திருத்துழாய் மாலை விளங்கப்பெற்ற
வரை மார்பன் தான்–மலை போன்ற திருமார்பை யுடையனுமான எம்பெருமானால்
முயங்கும்–ஸம்ச்லேஷிக்கப்படுகின்றவளாய்
கார் ஆர்ந்த வான்–மேகங்கள் செறிந்த ஆகாசத்திலே
அமரும்–நிலைத்து நிற்கக் கூடியதான
மின்–மின்னல் போல
இமைக்கும்–விளங்குகின்றவளாய்
வண் தாமரை–அழகிய தாமரைப் பூப் போன்ற
நெடு–நீண்ட
கண்–திருக்கண்களை யுடையளாய்
தேன் அமரும் பூமேல்–தேன் நிறைந்த தாமரைப் பூவில் வஸிப்பவளான
திரு–பெரிய பிராட்டியார்
நமக்கு என்றும் சார்வு–நமக்கு எப்போதும் சரணம்.

———————————————————————————

வியாக்யானம் –

சார்வு நமக்கென்றும் –
ஆபத்துக்கு சர்வேஸ்வரன் சார்வு –
ஆபத்து உள்ள போதும்
அல்லாத போதும்
என்றைக்கும் நமக்கு அபாஸ்ரயம் பெரிய பிராட்டியார் –

ஆத்மை வரிபுராத்மன -கீதை -6-5-என்று
நாம் தஞ்சம் அல்லாத போது எம்பெருமான் உளன் –

அவன் ஸ்வா தந்த்ர்யத்தாலே
அழன்ற போதைக்கு
பெரிய பிராட்டியார் உண்டு –

நமக்கும் அவனுக்கும் உள்ள வாசி போரும்
அவனுக்கும் பிராட்டிக்கும்
நாம் அநர்த்தம் சிந்திக்கும் இத்தனை-

அவன் சீறுபவன்-
ராகவத்தி பயம் கோரம் -சுந்தர -27-45-

ஸ்வ தந்த்ரன் சீறினால்
அவள் சார்வாகை யாவது பிரணயினி ஆகையாலே –
அவள் பிரியம் செய்து அல்லது
நிற்க ஒண்ணாது –

சக்கரத்தான் –
திரு வாழியை யுடைய

சர்வேஸ்வரன் –
ரஷணத்துக்கு பரிகரமான
திரு ஆழியைக் கையிலே யுடையவன்
எப்பொழுதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் -பெரிய திருவந்தாதி -87-

தண்டுழாய்த் தார் வாழ் வரை மார்வன் –
திருத்துழாய் மாலையைத்
தோளிலே யுடையனானவன் –

தண்டுழாய்த் தார் வாழ் வரை மார்வன் -தான் –
சர்வ ஐஸ்வர்ய ஸூசகமான
திருத்துழாய் மாலையை யுடைத்தாய் –
மலை போலே இருக்கிற திரு மார்வை யுடையவனான தானே –

தானே முயங்கும் –
போக உபகரணமான திருத்துழாயை யுடையவன் தானே முயங்கும் –
முயங்குகை -தழுவுகை –
அபி நிவேசித்து சம்ச்லேஷிக்கும் -என்றபடி
அவள் உடம்பு கொடுத்திடும் -அத்தனை –

தான் முயங்கும் –
இப்படி இருக்கிற தான் –
அவளை -அகலகில்லேன் -என்னப் பண்ணும் தான் –
அவளை -அகலகில்லேன் -என்னும் –
தாயுடைய பர்த்ரு வால்லப்யம் அடைய பிரஜைக்கு உடல் இறே –
இதுக்கு உபமானம் மேல் –

காரார்ந்த வானமரு மின்னிமைக்கும் –
மேகங்கள் செறிந்து  இருந்துள்ள ஆகாசத்திலே
மின்னினாப் போலே
கருப்புக்குப் பகைத் தொடையாக
பிரகாசியா நிற்பதும் செய்யும் –

வண்டாமரை நெடுங்கண்-
ஆஸ்ரிதரை சஹ்ருதயமாகக்
குளிர நோக்கா நின்ற
உதாரமான
தாமரை போலே இருக்கிற
ஒழுகு நீண்ட கண்ணை யுடையவள் –

பஸ்யதாம் சர்வதேவானாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-105-
அநாதரே ஷஷ்டி –
தயா விலோகிதா தேவா ஹரி வஷச்தலஸ் தயா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-106-
மார்விலே இருந்து அவர்கள் புறங்கால் வீக்கம் தீரக்
குளிர நோக்கினாள்-

தேனமரும் பூ மேல் திரு –
தேன் செறிந்து இருந்துள்ள
பூவின் மேலே இருக்கிற
பெரிய பிராட்டியார் நமக்கு எல்லாக் காலத்துக்கும்
அபாஸ்ரயம் –

தேனமரும் பூ மேல் திரு —
நிரதிசய போக்யையான பெரிய பிராட்டியார் –

—————————————————————————————–

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று ———1-

திருக்கண்டேன் –
அவனையே உபாயமாகப் பற்றுகையாலே
சாஷாத் கரிக்கிறார் –

திருக்கண்டேன் –
அபாஸ்ரயமான தாயைக் காணப் பெற்றேன் –

பொன் மேனி கண்டேன் –
அவளுடைய
சிம்ஹாசனம் கண்டேன்

திகழும் அருக்கன் -இத்யாதி
கூட்டரவால் உள்ள புகர்ப்பு –

செரு -இத்யாதி –
தனியே குமிழி நீர் உண்ணாமே
கூட்டுப் பெற்றேன்

என்னாழி வண்ணன் பால் இன்று –
முழுகுவாரைப் போலே நான் முழுகும் கடலிலே

இன்று –
பெரிய பிராட்டியார் கடாஷம் பெற்ற இன்று
ப்ராப்யத்ருஷ்ணை  உடையவனுக்கு ப்ராபகம் வேண்டுவது –
அவனே ப்ராபகம் என்று நிலை யிட்டாருக்குத் திருஷ்ணை  மிக வேண்டாவோ  –
ஆறி இருக்குமவனுக்கு ஸ்வீகாரம் இல்லை —

—————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading