மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -99-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

ஆஸ்ரித விரோதிகளைப் போக்கும்
ஸ்வ பாவனான எம்பெருமான் திருவடிகளே
நமக்கு பரம பிராப்யம்
என்கிறார் –

————————————————————————-

தொட்ட படை யெட்டும் தோலாத வென்றியான்
அட்ட புயகரத்தான்  அந்நான்று-குட்டத்துக்
கோள் முதலை  துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்
தாள் முதலே நங்கட்குச் சார்வு ——99-

பதவுரை

தொட்ட–ஏந்தின
படை எட்டும்–எட்டு திவ்யாயுதங்களாலும்
தோலாத–தோல்வி யடையாத
வென்றியான்–ஜய சீலனும்
அட்டபுய காத்தான்–கச்சித் திருவட்டபுயகரத் திருப்பதியிலுள்ளவனும்
அந்நான்று–முன்பொரு காலத்தில்
குட்டத்து–நீர்ப் பொய்கையிலே
கோள் முதலை துஞ்ச–மிடுக்குடைய முதலை முடியும்படியாக
குறித்து எறிந்த சக்கரத்தான்–இலக்குத் தப்பாமல் பிரயோகிக்கப்பட்ட திருவாழியையுடைய பெருமானது
தாள் முதலே–பாதமூலமே
நங்கட்கு–எங்களுக்கு
சார்வு–பரம ப்ராப்யம்

————————————————————————–

வியாக்யானம் –

தொட்ட படை யெட்டும் தோலாத வென்றியான் –
கையிலே திவ்யாயுதங்களைப் பிடித்தால்
ஓரிடத்தில் தோலக் கடவது அன்றிக்கே
வெல்லும் ஸ்வ பாவன் ஆனவன்

எடுத்த திவ்யாயுதங்கள் எட்டாலும்
புக்க போரில்
எதிரிகளுக்குத் தோலாதே
வெற்றியை யுடையவன் –
ஆண் பிள்ளை -என்றபடி –
சர்வ சக்தியைப் பற்ற வேண்டாவோ -பயம் கெடும் போது –

அட்ட புயகரத்தான்  –
திரு அட்டபுயகரத்திலே எழுந்து அருளி இருக்கின்றவன் –
எட்டுத் திருத் தோள்களிலும்
எட்டுத் திவ்யாயுதம் உண்டு –
அம்மிடுக்கோடே சந்நிஹிதன் ஆனான் –

அந்நான்று-குட்டத்துக் கோள் முதலை  துஞ்சக் குறித்தெறிந்த –
அனுஷ்டானமும் உண்டு –

அந்நான்று-
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய
ஆபத் தசையிலே

குட்டத்துக் கோள் முதலை  துஞ்சக் –
மடுவிலே கிடந்தது
முடிக்கக் கடவதான
முதலை சிதிலமாம் படி –

குறித்தெறிந்த –
ஸ்ரீ கஜேந்த ஆழ்வான் திருவடிகளிலே படாமல்
முதலை பிளப்புண்ணும்   படி

எறிந்த –
அப்பதற்றத்தாலே கலங்காதே
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பக்கலிலே பரிவாலே
இலக்குத் தப்பாமே
எறிந்த –

சக்கரத்தான் –
திரு வாழியை யுடையவன் –

தாள் முதலே நங்கட்குச் சார்வு –
பிரதானமான திருவடிகளே நமக்குப் புகலிடம் –
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே –ஸ்தோத்ர ரத்னம் -22-என்னும்படியே
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு -உதவினவன் திருவடிகளே நமக்கு ஸூ பாஸ்ரயம்-

முதலே  –
நம்முடைய சஹாயம் வேண்டா
உண்டானவன்று -பலியாமையே யன்று விரோதியேயாம் அத்தனை –

ஒன்றினுடைய விநாசம் ஒன்றுக்கு உத்பத்தி
ஸ்வாதந்த்ர்ய பார தந்த்ர்யங்களுக்கு
சஹாவ ஸ்தானம் இல்லை இறே –
ஈரரசு உண்டோ

நங்கட்கு –
ஸ்வ பலம் அற்றார்க்கு –

—————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading