ஸ்ரீ சைலேச தயா பாத்ரம் தீ பக்தியாதி குணார்ணவம்
யதீந்த்ரப் பிரவணம் வந்தே ரம்யஜா மாதரம் முநிம்-
——–
சரம த்வய அர்த்தம்
இரண்டு -ஆர்த்தி பிரபந்தமும் -யதிராஜ விம்சதியும்
ஆழ்வார் பெருமை திருவாய் மொழி நூற்று அந்தாதி
இதில் -73 -பாசுரங்கள்
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன்-வரத நாராயண குரு – தனியன் அருளிச் செய்து –
ஸ்ரீ எறும்பி அப்பா -இறுதி பாசுரம்-மன்னுயிர்காள்–தீண்டல் கடன் – அருளிச் செய்து
தலைக்கட்டி அருளி உள்ளார்
இரண்டும் ரக்ஷை இதுக்கு -ஓம் தொடங்கி ஓம் முடிப்பது போல் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் தனியன்
ஸ்ரீ சடாரி குரோர் திவ்ய ஸ்ரீ பாதாப்ய மது விரதம்
ஸ்ரீ மத் யதீந்த்ர பிரவணம் ஸ்ரீ லோகார்ய முனிம் பஜே –
ஸ்ரீ சடாரி குரோர்-இவர் திருத் தந்தையாயும் குருவும் ஆனவர் –
1371-1443-மா முனிகள் -யதி ராஜர் புனர் அவதாரம் –
மாறன் -மாறன் அடி பணிந்து உய்ந்தவர் -யதீந்த்ர பிரவணர்-மூவரும் ஆழ்வார் திரு நகரி
இவர்கள் சம காலத்தவர் இல்லை என்றாலும் பிரவணராக
கோவிந்தப்ப தாதர் தாசர் -ஆச்ரயம ஸ்வீகாரம் பின்பு -பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்
இவர் பூர்வ ஆஸ்ரம புத்திரர் -அழகிய மணவாளன் -இவர் குமாரர்-சடகோபாச்சார்யர் –
இவர் குமாரர் வரதாச்சார்யர் -இவரே ஆச்ரயம ஸ்வீகாரம் பின்பு பிள்ளை லோகம் ஜீயர் ஆனார்
1614-இவரைப் பற்றி செப்புப் பட்டயம்
1550-1650 வரை இருந்து இருக்கலாம்
திருக்கடல் மல்லை -தல சயன -விஜய நகர அரசர் ஸ்ரீ வீர நரசிம்ம ராயர் உதவியில் புதிப்பித்து
சித்திரை பூசம் த்வஜ ஆரோகணம் -விசாகம் தீர்த்தவாரி -இன்றும் நடக்கும் –
ராமானுஜர்ய திவ்ய சரிதை
பிரபன்ன அம்ருதம்
யதிராஜ வைபவம்
பெரிய திருமுடி அடைவு
சரம உபாய நிர்ணயம் –
யதீந்த்ர ப்ரவண பிரபாவம்
குரு பரம்பரா பிரபாவம் நம்பிள்ளை வரை பின் அழகிய பெருமாள் ஜீயர்
அதுவே இவருக்கு அடை மொழியாகி யதீந்த்ர ப்ரவண பிள்ளை லோகம் ஜீயர் ஆனது
பிள்ளை லோகாச்சார்யார் திரு ஆராதன பெருமாள் அழகிய மணவாளன் இவர் பெற்றார் என்பர்
பல வியாக்கியானங்கள்
ஸ்ரீ பராங்குச திவ்ய சரித்திரம்
ஸ்ரீ பரகால திவ்ய சரித்திரம்
ஸ்ரீ வைஷ்ணவ சமாச்சார நிஷ்கர்ஷம்
மா முனிகள் திருக்குமாரர் ராமாநுஜாச்சார்யார்-அவர் திருக்குமாரர் அபி ராம வரர்-இவரே ஜீயர் நாயனார்
சம்ஸ்க்ருதம் -பத்தியமாக உபதேச ரத்ன மாலை –
இவர்கள் எல்லாரும் -கௌண்டின்ய கோத்ரம் -கோமடத்தார் -பரம்பரை –
இவர் மேல் கோட்டை அருகில் நித்யவாஸம்
ஹஸ்தி கிரி நாத அண்ணர் இடம் கால ஷேபம்
ஸ்ரீ வரத நாராயண குருவிடம் அருளிச் செயல் கால ஷேபம் செய்தார்
நாக மங்களம் -அண்ணன் திருமேனி பிரதிஷ்டை உண்டே
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -சொல்ல வந்த பிரபந்தம் இது
ஸ்ரீ வசன பூஷண ஸ்ரேஷ்டத்தை சொல்ல வந்தது –
அதற்காக பிள்ளை லோகாச்சார்யார் திரு அவதாரம்
நம்பிள்ளை -முதல் லோகாச்சார்யார்
வியாக்கியானங்கள்
அருளிச் செயல்
ஆழ்வார் அவதாரம் -திவ்ய தேசம்
எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால்-உபக்ரமம் -உபகார ஆச்சார்யர்
எதிராசர் இன்னருளுக்கு இலக்காகி உப சம்ஹாரம் -உத்தாரகம்
உபதேச ரத்ன மாலை -பிரபந்த திருப்பெயரை மா முனிகளே இட்டு அருளி உள்ளார் –
———–
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் அருளிச் செய்த தனியன் –
முன்னம் திருவாய்மொழிப் பிள்ளை தாம் உபதேசித்த நேர்
தன்னின்படியை தணவாத சொல் மணவாள மா முனி
தன்னன்புடனே செய்த உபதேச ரத்ன மாலை தன்னைத்
தன் நெஞ்சு தன்னில் தரிப்பவர் தாள்கள் சரண் நமக்கே –
முன்னம் -பூர்வத்தில்
திருவாய்மொழிப் பிள்ளை தாம் உபதேசித்த -திருமலை ஆழ்வார் -ஸ்ரீ சைலேசர் –
புனர் நிர்மாண கைங்கர்யம் -இவரும் வைகாசி விசாகம்
நேர் தன்னின்படியை -தத்வ அர்த்தங்கள் முறைகளை
தணவாத -விட்டு விலகாத –
சொல் மணவாள மா முனி- ஞானம் அனுஷ்டானம் உள்ள நம் ஸ்வாமி
தன்னன்புடனே செய்த -லோக உஜ்ஜீவன அர்த்தமான ப்ரீதி உடன் அருளிச் செய்த
உபதேச ரத்ன மாலை தன்னைத்-அர்த்த விசேஷங்களை
தன் நெஞ்சு தன்னில் தரிப்பவர் -நெஞ்சில் நிலைக்க வைத்துள்ள மஹான்கள்
தாள்கள் சரண் நமக்கே – அவர்களுடைய திருவடிகளே அடைக்கல ஸ்தானம் ஆகும்
ஜீயர் நாயனார் விஷயமான தனியன்
அஸ்மாத் வத்சலா தயா கிருபையா ச பூய
ஸும்ய வர முனி -அவரே பேரனாக அவதாரம் -ஆச்சார்ய பவுத்ரம் -ராமானுஜாச்சார்யார் திருக்குமாரர்
அபிராம வரர் -பஜாமி
அஸ்மத் குரும் பரம காருணிகம் பஜாமி
இவர் தனியனை மொழி பெயர்த்து சமஸ்க்ருதம்
ப்ராக் ஸ்ரீ க்ரீந்த்ர குரு ராட்
உபதிஷ்ட மார்க்கே
கார்ஸ்த்யேன -முழுவதும் –
சந்நிஹிததா -அனுசந்தானம் விடாமல்
ருசிரோபா யந்த்ர -அழகிய மணவாள முனிகள்
ஸூப்ரீமே ஸூகலிதாம்
வஹந்தி ஹ்ருதி -இருதயத்தில் தரிப்பவர் –
யே -அவர்கள் –
மம தே சரண்ய
———————————————
அவதாரிகை –
ஸ்ரீ பெரிய ஜீயர் ஆகிறார் –
பின்னானார் வணங்கும் சோதிதிரு நெடும் தாண்டகம் -என்கிறபடியே
பின்புள்ளாரும் ஆஸ்ரயிக்கும் படி –
அக்கரையராய்-அஹ்ருத சஹஜ தாஸ்யர் -(நீதி வானவர் )
(அஹ்ருத சஹஜ-பூர்வ சதகம் -33- பட்டர் )
(நாம் தாஸ்யராய் -இருந்தாலும் அபகரிக்கப்பட்டு இங்கு உள்ளோம் -அது போல் இல்லையே ஆதி சேஷன் போல்வார் )
நித்ய ஸூரிகளில் ஒருவர் வந்து அவதரித்தார் என்னும்படியான தரத்தை யுடையராய்
(சட கோப ஜீயர் சம காலம் இருந்ததால் -வ்யாவ்ருத்தமாக பெரிய ஜீயர்
பெரிய பெருமாளுக்கு ஆச்சார்யர் என்பதாலும் பெரிய ஜீயர்
அவனியில் இரு நூறு ஆண்டு இரு நீர் என்ன -உபய வேதாந்த நிர்வாகத்துக்கு –வேத நூல் பிராயம் நூறு-
தனித் துலா மூலம் வந்தார் நிலவை-மீதி உள்ளவற்றை முடிக்க அன்றோ இவரது அவதாரம் -)
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை திருவடிகளில் ஆஸ்ரயித்து
தேவு மற்று அறியேன் -என்னும்படி ததேக நிஷ்டராய்
அவர் உபதேசத்தாலே
திருவாய்மொழி தொடக்கமான அசேஷ திவ்யப் பிரபந்தங்களின் உடையவும் –
அதின் தாத்பர்யமான அசேஷ ரஹஸ்யங்களின் உடையவும்
அர்த்தத்தை அதிகரித்து
க்ருதார்த்தராய் இருப்பாராய்-
அந்த பிள்ளை தாமே
குரு பரம்பரையாகிற ஹாரத்துக்கு நடுவே நாயக ரத்னம் என்னும்படி –
ஔஜ்வல்யத்தை யுண்டாக்கும்படியான ஸ்ரீ உடையவர் திருவடிகளையே உமக்கு
ஒரு துணையாகப் பெற்றிரும் என்று உகப்பின் மிகுதியாலே காட்டிக் கொடுக்க –
அத்தாலே
அவர் திருவடிகளிலே அதி ப்ராவண்யத்தை யுடையராய் –
(உபகார ஆச்சார்யர் உத்தார ஆச்சார்யரைக் காட்டிக் கொடுக்க -அத்தாலேயே பிராவண்யம் இவருக்கு விளைந்தது
ஸ்ரீமந்! யதீந்தர! தவ திவ்ய பதாப்ஜ ஸேவாம்
ஸ்ரீஸைலநாத கருணா பரிணாம தத்தாம்
தாமந்வஹம் மம விவர்தய நாத!
தஸ்யா: காமம் விருத்த மகிலம் ச நிவர்தய த்வம்-ஸ்ரீ யதிராஜ விம்சதி –பவிஷ்யத் ஆச்சார்யர் விஷயமாவே அருளிச் செய்த பிரபந்தம்
ஸ்ரீ பெரிய நம்பி ஸ்ரீ ஆளவந்தார் மாதா பிதா -ஸ்லோகம் கொண்டு
ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ மாறன் அடி பணிந்து உய்ந்தது போல் )
(1370-மா முனிகள் அவதாரம் முன்பே தேசிகன் 1369-ஆச்சார்யர் திருவடி அடைந்தாலும் –
நாயக ரத்னம் என்று உடையவரை -தீர்க்க தர்சி -வருவதை அறிவாரே
ஒன்பது பேர் -முன்
10 எம்பெருமானார்
பின்பு ஒன்பது பேர் -)
ஆழ்வார்கள் உடையவும்
ஆச்சார்யர்கள் உடையவும் அருளே தமக்கு விளை நீராகும்படியாக வர்த்தித்து போருமவராய்
அத ஏவ
பராங்குச பரகால பட்டநாதாதிகள் உடையவும்
நாத யாமுன யதிவராதிகள் யுடையவும்
பாவத்தை தமக்கு ஓர் ஆகாரத்தாலே உடையராம்படி இருப்பாராய் –
(பராங்குச பரகால பட்டநாதாதிகள் உடையவும்
ஆற்றில் கரைத்த புளி ஆகாமல் -திவ்ய தேச ப்ராவண்யம் –
வாழி எதிராசர்-ஆழ்வார்கள் வாழி -தேவ ராஜ மங்களம் -பல்லாண்டு பாடும் பான்மை
நாத யாமுன யதிவராதிகள் யுடையவும்-இவரும் வர வர முனி –
ஆளவந்தார் போல் சரம பர்வ நிஷ்டர்
வியாக்கியான சைலி -உடையவர் போல்)
சகல ஜீவ லோக சமுஜ்ஜீவந ஏக தத் பரராய் –
தம்முடைய பர சம்ருத்யைக பிரயோஜனதையாலே
பரம ரஹஸ்யார்த்தங்களை எல்லாம்
ஸ்வ பிரபந்தங்களிலே பிரகாசிப்பித்தது அருளின பெருமையை யுடையராய்
ஸ்ரீ மணவாள மாமுனியை இனி ஒப்பார்கள் இல்லை
உலகு ஏழிலும் உம்பரூரிலும் -(பிராமண ஆகாரம் அறியோம் )-என்னும்படி
உபய விபூதியிலும் தம்முடைய சேஷத்வாதி குணங்களுக்கு உபமானம் இன்றியிலே இருக்கிற
உச்சராயத்தை யுடையாராய் இருப்பாராய்
ஸ்ரீ ரங்க மங்கள சம்பத்தாய்க் கொண்டு
ஸ்ரீ திருவரங்கம் திருப்பதியே இருப்பாக-( ஆர்த்தி பிரபந்தம் ) -எழுந்து அருளி இருப்பாராய்
அத்தாலே
ஸ்ரீ கோயில் மணவாள மா முனி -என்று நிரூபகமாம்படி இருப்பார் ஒருவர் இறே-
ஏவம் வித மகாத்ம்யத்தை யுடையவராய் இருக்கும் ஸ்ரீ வரவர முனிவர்யான ஜீயர்
(இத்தால் வக்த்ரு வைலஷ்ண்யம்
இனி விஷய வை லக்ஷண்யம்
வர வர முனி -அழகிய மணவாள மா முனி -வட மொழி -வர – -ஸ்ரேஷ்டர் -என்றும்
மணவாளப் பிள்ளை -வரன் -வது –
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர்
அழகிய மணவாள நாயனார் -நாயனார் ஆச்சான் பிள்ளை
பலருக்கும் அழகிய மணவாளன் திருப்பெயர் உண்டே -)
தம்முடைய பரம கிருபையாலே
ஆழ்வார்கள் யுடையவும் ஆச்சார்யர்கள் யுடையவும்
அவதாரங்கள் அதீத காலம் ஆகையாலே
தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவார் ஆர்
அருளிச் செயலை அறிவார் ஆர் -உபதேச ரத்ன மாலை-36–என்னும்படி
அவர்கள் உடைய அவதார வைபவமும்
உக்த்ய அனுஷ்டானங்களையும்
ஒருவருக்கும் தெரியாதபடி சங்குசிதமாயும் வருகிறபடியும்
தத் காலத்திலே சேதனருடைய ஜ்ஞான மாந்த்யத்தையும்-தர்சித்து அருளி
இனி இவர்கள் விஷயமாக
ஸ்ரீ ஆழ்வார்கள் உடைய அவதார ரஹஸ்யாதிகள் என்ன –
தத் ஸூக்திகள் என்ன-
தத் உபய அபிஜ்ஞ்ஞரான ஸ்ரீ ஆச்சார்யர்கள் உடைய உக்தி அனுஷ்டானங்கள் என்ன-
( உக்தி அனுஷ்டானங்கள் வாக்கும் வாழ்வும் )
இவை தொடக்கமான அர்த்த விசேஷங்களை எல்லாம் பிரகாசம் ஆக்கி
தத் அந்வய முகத்தாலே இவர்களை உஜ்ஜீவிப்போம் என்று அறுதி இட்டு
இவ் வர்த்த விசேஷங்களை கேவலம் உபதேச மார்க்கத்தால் பிரகாசிப்பித்தால்
தத் காலத்தில் அவர்களுக்கு ஒழிய
பிற்காலத்தி லவர்களுக்கும் உப ஜீவ்யமாகை யரிது என்று
தத் காலத்தில் அவர்களோடு பிற்காலத்தில் அவர்களோடு வாசி அற
எல்லாரும் அறிந்து உஜ்ஜீவிக்கும் படி பிரபந்தமாம் படி பண்ண வேணும் என்று
திரு உள்ளம் பற்றி அதன் பின்பு
ஆச்சார்யர்கள் உடைய உபதேச பரம்பரா ப்ராப்தமான அர்த்தங்களை
ஸ்ரீ உபதேச ரத்ன மாலை யாகிற இப் பிரபந்த முகேன-பிரதி பாதித்து அருளுகிறார் –
ஆகை இறே
இதற்கு ஸ்ரீ உபதேச ரத்ன மாலை -என்று திரு நாமம் ஆயிற்று –
இது தான்
1-ஸ்ரீ ஆழ்வார்கள் உடையவும்
2-ஸ்ரீ ஆச்சார்யர்கள் உடையவும்
3-தத் ஸூக்திகளின் உடையவும் வைபவத்தை பிரதிபாதிக்குமதாகையாலே
சகல பிரபந்த விலஷணமாயும் இருக்கும் –
இதில் பிரதிபாதிக்கிற அர்த்தம் தான்
திரு மந்த்ரத்தில் பிரதிபாதிக்கிற-அனன்யார்ஹ சேஷத்வாத்வாதி-
ஆகார த்ரய யுக்தர்களுடைய வைபவத்தை
பிரகாசிப்பித்து அருளுவதால் -இதுக்கடி திரு மந்த்ரமாய் இருக்கும் –
திரு மந்த்ரார்த்த நிஷ்டருடைய படியை இறே
பயிலும் சுடர் ஒளி-(3-7-)-நெடுமாற்கு அடிமையிலே-(8-10-) பரக்கவும் உபபாதித்தது –
அத்தை அடி ஒற்றி இறே –
ஸ்ரீ கண்ணி நுண் சிறுத் தாம்பு -இருப்பது
அதன் படி இறே ஸ்ரீ ( ராமானுஜ )நூற்றந்தாதி –
அவை இரண்டின் படியையும் பிரதிபாதித்த பிரபந்தம் ஆயிற்று இது –
(வேதத்தின் உட்பொருள் நெஞ்சில் நிற்கப்பாடி
வேதத்தின் பொருள் திருவாயமொழி
வேதத்தின் உட்பொருள்-பயிலும் சுடர் ஒளி- நெடுமாற்கு அடிமை
மாறனில் மிக்குமோர் தேவும் உளதோ -ஏறனை -கீழே உள்ளதால்-மால் தனில் என்பதே மாறனில் ஆனதே )
ஸ்ரீ ஆழ்வார்கள் வைபவத்தையும்
ஸ்ரீ எம்பெருமானார் வைபவத்தையும் உபபாதிக்கையாலே –
ஆகையால் இது சரமத்தில் சரமமாய் இருக்கும் –
(மூவர் அனுபவம் -நம் ஆழ்வார்- மதுரகவி ஆழ்வார்-அமுதனார்
மதுரகவி ஆழ்வார் -அமுதனார் -மா முனிகள் -என்றுமாம் )
இனி
இப் பிரபந்த்த உக்தர் ஆனவர்களில் பிரதானரான ஸ்ரீ ஆழ்வார்கள்
திரு நஷத்ராதிகளை ஆதரிக்கைக்கு அடி என் -என்னில் –
ஆச்சார்யத்வத்தை ஆசைப் பட்டு ஸ்ரீ கீதையும் அபயப் பிரதானமும் அருளிச் செய்த
பிரதம குருவான ஸ்ரீ சர்வேஸ்வரன் (ஸம்ஸாரிகள் ஸம்ரக்ஷண அர்த்தமாக )
இதர சஜாதீயனாய் வந்து அவதரித்த
ரோஹிணீ புனர்வசு ஸ்வாதி நஷத்ரங்கள் என்ன
(வடக்கே திதி பிரதானம் -தெற்கே நக்ஷத்ரம் பிரதானம் -ஆகவே
நவமி அஷ்டமி புனர்வசு ரோஹிணி -அனைத்தும் கொண்டாடுகிறோம் )
சைத்ர ப்ரோஷ்டபதாதி மாசங்கள் -என்ன –
யமுனா சரயூ தீரங்களான ஸ்ரீ மதுரா ஸ்ரீ அயோத்யாதி நகரங்கள் -என்ன
இவை தொடக்கமான உக்தி அனுஷ்டயங்களாலே உபதேசித்து உஜ்ஜீவிப்பைக்காக வந்து
ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய ஆகஸ்மிக கிருபையாலே –
அவதரித்த இவர்கள் உடைய திரு நஷத்ர மாசங்களில்
ஸ்ரவணாதி நஷத்ரங்கள் -என்ன –
ஆச்வயுஜாதி மாசங்கள் என்ன
ஸ்ரீ அயோத்யா ஸ்ரீ மதுராதிகளோடே-சஹபடிதமான
ஸ்ரீ காஞ்ச்யாதி நகரங்கள் என்ன
(ஸ்ரீ பொய்கை ஆழ்வார் தொடக்கம் -திருவோணம் -ஐப்பசி -காஞ்சி-அருளிச் செய்து ஆதி )
அவற்றோடு சேர்ந்த ஸ்ரீ காவேரியாதி நதிகள் -என்ன
இவை எல்லா வற்றையும் அந்த இதிஹாசாதிகளிலேநான்கு நதிகள்நான்கு நதிகள்
கலௌ கலு பவிஷ்யந்தி -(ஸ்ரீ பாகவதம் -11-5-38-) என்றும்
க்வசித் க்வசித் -என்றும்
இப்படி ஸூசிப்பிக்கையாலும்
(க்ருʼதாதி³ஷு ப்ரஜா ராஜன் கலாவிச்ச²ந்தி ஸம்ப⁴வம் .
கலௌ க²லு ப⁴விஷ்யந்தி நாராயண பராயணா꞉ .. 38..
க்வசித் க்வசின் மஹாராஜ த்³ரவிடே³ஷு ச பூ⁴ரிஶ꞉ .
தாம்ரபர்ணீ நதீ³ யத்ர க்ருʼதமாலா பயஸ்வினீ .. 39..
காவேரீ ச மஹாபுண்யா ப்ரதீசீ ச மஹாநதீ³ .
யே பிப³ந்தி ஜலம்ʼ தாஸாம்ʼ மனுஜா மனுஜேஶ்வர .
ப்ராயோ ப⁴க்தா ப⁴க³வதி வாஸுதே³வே(அ)மலாஶயா꞉ .. 40..)
(நான்கு நதிகள்
தாமிரபரணி முதலில் -நம்மாழ்வார் அவயவி -அங்கி -மதுரகவி ஆழ்வார்
க்ருதமாலா வைகை -பெரியாழ்வார் ஆண்டாள்
பயஸ்வினி பாலாறு -முதல் ஆழ்வார் -திரு மழிசை ஆழ்வார்
காவேரி -தொண்டர் அடிப் பொடி -திருப்பாண் -திருமங்கை
ப்ரதீஸீ -மற்ற ஆறுகள் கிழக்கு -இது மேற்கு சமுத்திரம் கலக்கும் மஹா நதி -பெரிய ஆறு -குல சேகர ஆழ்வார் )
அதுக்கு மேலே –
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற மகாத்ம்யத்தாலே
பக்தி பாரவச்ய பிரபன்னர் என்று பேர் பெற்று இருக்கையாலும்
அவனுடைய பற்றினால் தோற்றும் பதின்மராய்
பகவத் அவதார விசேஷமாக பக்தாத்மனா அவதரித்தவர்கள் ஆகையாலும்
அவன் உகந்து வர்த்திக்கிற அர்ச்சா ஸ்தலங்களான அகில திவ்ய தேசங்களிலும்
தாங்களும் அதுக்கு அனுரூபமான அர்ச்சா ரூபங்களை பரிக்ரஹித்து சேவித்துக் கொண்டு
அல்லாதார்க்குத் சேவ்யராய் தங்களோட்டை சம்பந்தத்தால் சர்வாத்மாக்களையும்
உஜ்ஜீவிப்பிக்க வல்லராய் இருக்கையாலும்
இவர்கள் திரு நஷத்ராதிகளும் அவற்றோபாதி ஆதரித்து உபலாலிக்கக் குறை இல்லை –
(பக்தி யோக நிஷ்டர்கள் வால்மீகி பராசராதிகள்
மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் தானே விக்ரஹங்களில் ஆவிர்பவிக்க முடியும் )
இனி ஸ்ரீ ஆழ்வார் திருமகளார் ஸ்ரீ ஆண்டாள் -தொடக்கமான மற்றை மூவரும்
இவர்களுக்குப் பரதந்த்ரராய்ப் போருகையாலும்
அவர்களில் அதிசயிதமான வைபவத்தை உடையார் ஆகையாலும்
அவர்கள் அவதார கணநையில் இவர்கள் அவதாராதி க்ரமங்களும் சஹபடிதமாய்த்து –
இவர்களுடையவும் ஏற்றத்தையும் அறிந்து
ஆதரித்து போருமவர்கள் ஆகையாலே
ஆச்சார்யர்களும் ஆதரணீயர் ஆனார்கள் –
இனி
1-வேறாக ஏத்தி இருப்பாரான- பிரதம பர்வ நிஷ்டர் உடைய வைபவத்தையும் -(1-20-)
2-மற்றவரைச் சாற்றி யிருப்பாரான-சரம பர்வ நிஷ்டர் உடைய வைபவத்தையும் -(21-29-)
(மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்– நான்முகன்-18-)
3-தத் ஸூக்திகளின் உடைய வைபவத்தையும் -( ஸ்ரீ வசனம் )
4-தத் உபய சாரார்த்த சங்க்ரஹமான ரஹஸ்யத்தின் உடைய க்ருத்யத்தையும்-ரஸ்யதையும் ( ஸ்ரீ வசன பூஷண ரஸம் ) (53-59-)
5-தத் பிரதிபாத்ய அனுஷ்டான சரம பர்வ நிஷ்டா க்ரமங்களையுமே
தத் பிரபந்த அந்வயம் உடையவர்களுக்கு-(60-70-ஸ்ரீ வசன பூஷண சுருக்கம் -சாரம் -)
6-ப்ரபன்ன ஜன கூடஸ்த பிரசாதம் அடியாக
ப்ராப்ய சித்தி உண்டாம்படியையும் சொல்லித்
தலைக் கட்டுவதான அர்த்த விசேஷங்களை
ஸ்வ நிஷ்டா கதன ரூபேணவும்
பரோபதேச ரூபேணவும்
அருளிச் செய்யா நின்று கொண்டு
இந்த குரு பரம்பரா வைபவ கதன முகத்தாலே
குருகுல துர்யரான தாம் (இவர் தானே குரு பரம்பரையில் தலைவர் )
சர்வர்க்கும் குருபரம்பர அந்வயம் உண்டாய்
உஜ்ஜீவிக்கும் படி பண்ணி உபகரித்து அருளுகிறார் –
பேடிகா விபாகம்
1-20-ஆழ்வார் -பிரதம நிஷ்டை
21-24-ஆண்டாள் வைபவம் -உபய நிஷ்டை
25–29-மதுரகவி-எம்பெருமானார் – நேராக சரம பர்வ நிஷ்டை
(25-26-மதுரகவி
27-28-29-எம்பெருமானார்)
30-33-ஆழ்வார்கள் எம்பருமானார் அவதரித்த திவ்ய தேசங்கள்
34-49-ஆச்சார்யர்கள் வியாக்கியானங்கள் வைபவம் –
(34-38-ஆச்சார்யர்கள் வைபவம்
39-49- வியாக்கியானங்கள் வைபவம்)
50-52-ஈடு சாதித்த நம்பிள்ளை -பிள்ளை லோகாச்சார்யார் இவர் அனுக்ரஹத்தால் அவதரித்தார்
53-59-ஸ்ரீ வசன பூஷண மஹிமை -(ஸப்த காதை போல் ஏழு பாசுரங்கள் )
60-70-ஸ்ரீ வசன பூஷண சுருக்கம் -சாரம் –
71-73-ஆழ்வார் ஆச்சார்யர் அனுக்ரஹம் நமக்கு கிட்டி சரம பர்வ நிஷ்டர் ஆக பலம்
———————————————————–
(தம்முடைய தாதை -சுருங்கி -தந்தை –
உபதேசங்கள் -விபவம் போல் –பிரபந்தம் -கிரந்தங்கள் -அர்ச்சாவதார போல்
திருமலை -இயற் பெயர் -திருமலை ஆழ்வார் கௌரவ வார்த்தை -திருவாய் மொழிப்பிள்ளை —
சம்பிரதாய விஷயங்கள் சிதறிப் போக சேர்த்து மா முனிகளுக்கு அளித்து அருளி –மஹா உபகாரம் –
ராஜ கார்யம் செய்து கொண்டு இருக்க
கூர குலோத்தம தாசர் -காரி உமிழ்ந்து -சந்திக்க -வழி -பிள்ளை லோகாச்சார்யார் அனுப்ப —
திருப்புட் குழி ஜீயர் இடம் கால ஷேபம் -அங்கு போக -திரு நாட்டுக்கு எழுந்து அருள
காஞ்சிக்கு போக -நாலூர் பிள்ளை நாலூர் ஆச்சான் பிள்ளை -இருவரையும் -அர்ச்சக முகேன –
திருவடி உபூன்றிய தேவ பிரான் -பிள்ளை இடம் கேட்டு அருள
ஸ்ரீ ரெங்க ராஜ வீதியில் கால ஷேபம்
ஆயி ஸ்வாமிகள் வந்து கூட்டிப் போக
இவரும் சென்று ஈடு கால ஷேபம் -கேட்டுப் பெற்றார் அன்றோ –
ஸ்ரீ வசன பூஷணம் -விளாஞ்சோலைப்பிள்ளை இடம் கேட்டு -திருவந ந்த புரம் சென்று சேகரித்து –
ஆகவே இன்னருள் என்கிறார் -)
தமக்கு ஆச்சார்யரான ஸ்ரீ பிள்ளையுடைய பிரசாதத்தாலே க்ரமாகதமாய் வந்த அர்த்த விசேஷங்களை
பின்புள்ளாரும் அறிந்து உஜ்ஜீவிக்கும் படி பிரபந்த ரூபேண உபதேசித்து பிரகாசிப்பிக்கிறோம் என்று
ஸ்ரோத்ரு புத்தி சமாதானார்த்தமாக பிரதிஞ்ஞை பண்ணி அருளுகிறார் –
உபகார ஆச்சார்யர் இன்னருளில் தொடங்கி எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால்-
உத்தாரக ஆச்சார்யர் இன்னருள் பெற்று -எதிராசர் இன்னருளுக்கு இலக்காகி-
பரம புருஷார்த்தம் பெறுவதை அருளிச் செய்து நிகமிக்கிறார்
எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால்
வந்த உபதேச மார்க்கத்தைச் -சிந்தை செய்து
பின்னவரும் கற்க உபதேசமாய்ப் பேசுகின்றேன்
மன்னிய சீர் வெண்பாவில் வைத்து —1-
(எந்தை -இன்னருளால் -ஞான பிதா -ஞான பந்த கிருபா பூர்த்திகளைச் சொன்னவாறு )
(மத் தேசிக த்ரவிட வேத குரோ ப்ரஸாதாத்
லப்தம்
விசிந்த்ய
ஸரஸா உபதேச மார்க்கம்
பஸ்யாரத்தார்தாம்
உபதேச
வ்ருத்தே வசந்த திலகம் )
எந்தை திருவாய் மொழிப் பிள்ளை –
அதாவது -ஸ்ரீ திருமலை ஆழ்வார் என்று திரு நாமமான இவர்க்கு
திருவாய்மொழியில் உண்டான அத்யந்த அபி நிவேசம் அடியாக
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை என்று தேசம் திகழும் படியான திரு நாமம் ஆய்த்து -என்கை –
அது தோன்ற திருமலை யாழ்வார் திருவாய்மொழிப் பிள்ளை -(ஆர்த்தி பிரபந்தம் )-என்று தாமே
திரு உள்ளம் பற்றி அருளினார் இறே –
இவர் அருளிச் செய்யும் அர்த்தங்களுக்கு எல்லாம் ஆப்தி இருக்கிறபடி –
இன்னருளால் –
என்னுடைய உஜ்ஜீவனத்துக்கு கிருஷி பண்ணிக் கொண்டு
போரும்படியான பந்த விசேஷத்தை யுடையரான ஸ்ரீ பிள்ளை –
தம்முடைய நிர்ஹேதுக கிருபையாலே –
(கிருபா மாத்ர ப்ரசன்னாச்சார்யர்கள் தானே இவர்கள்
ஞான ஜன்மம் கொடுத்த பந்த விசேஷம்
அருள் கிருபை
இன்னருள் நிர்ஹேதுக கிருபை )
வந்த உபதேச மார்க்கத்தைச் –
உபதேசிக்க வந்த அந்த உபதேசத்தின் உடைய வரலாற்றை –
உபதேசமாய்ப் பேசுகின்றேன்- -என்று மேலே கிரியை –
(வரவாற்றை -குரு பரம்பரா வழியாக வந்தது அன்று )
இத்தால்
தன் நெஞ்சில் தோற்றினதையே சொல்லி-(71 பாசுரம் )
இது சுத்த உபதேச வார்த்தை என்பர் -என்றதுக்கு
எதிர்தட்டான சுத்த சம்ப்ரதாயம் இருக்கிறபடி –
ஆக
கீழ்ச் சொன்ன பதத் த்ரயத்தாலும்
தம்மை விஷயீ கரிக்கைக்கு அடியான சம்பந்தமும் -(எந்தை)
ஜ்ஞான பூர்த்தியும் -(திருவாய் மொழிப் பிள்ளை)
தயா பூர்த்தியும்-(இன்னருளால்)
தமக்குத் தஞ்சமாய் இருக்கிறபடி –
எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால் வந்த –
தாயாய் தந்தையாய் அன்னையாய் அத்தனாய்-(திருவாய் -2-3-2-) என்னுமா போலே
எனக்கு அன்னையும் அத்தனுமாய் -(கண்ணி நுண் சிறுத்தாம்பு )இருக்கிறவர் –
எந்தையான முறையாலே
முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுவாரைப் போலே
எனக்கு இன்னருள் பிறந்தது –
எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப்பகல் ஓதுவித்து என்னை -(பெரியாழ்வார் )-என்னுமா போலே
இப்படி தமக்கு நிருபாதிக பிதாவான பிள்ளை யுடைய பிரசாதத்தாலே
க்ரமாகதமாய் வந்த வழியை
பிரதிபத்தி பண்ணி யாய்த்து
இவர் உபதேசித்து அருளுவது –
(ஞானப்பிரான் அல்லால் இல்லை நல்லதுவே -நம்மாழ்வார்
பன்றியாய் அன்று –ஆழியான் அருளே -கலியன் )
அதாவது
விவஸ்வான் மனவே ப்ராஹ மானூர் இஷ்வாஹே பிரவீத் ஏவம் பரம்பரா ப்ராப்தா -என்கிறபடியே
பரம்பரையாய் வந்த அந்த பரிசுத்த ஜ்ஞான மார்க்கத்தை மனனம் பண்ணி -என்கை –
மார்க்கத்தைச் -சிந்தை செய்து-
மார்க்கத்தைச் -சிந்தை பண்ணி -என்றபடி –
பின்னவரும் கற்க –
தன் வழியைப் பின் சென்று பிழைக்க இருக்கும் பின்னவர்களும்
சந் மார்க்க வர்த்திகளாம் படி அப்யசிக்க –
முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு பின்னோர்ந்து
பின்னவரும் கற்க யுபதேசமாகப் பேசுகிறபடி –
(பின்னோர்ந்து-பின்பு சிந்தனை செய்து -ஆச்சார்யரை நினைந்து சிந்திக்கவே அர்த்தங்கள் ஸ்புரிக்குமே
சாயை போல பாட வல்லார் -எம்பார் -நிர்வாகம் அறிவோம் –
பாட வல்லார் சாயை போலே அணுக்கர்கள் ஆவார் -சொன்னவரும் ராமானுஜ பாத்தாச்சாயா -நாம் தங்கும் நிழல் -)
அதாவது -நெறி யுள்ளி உரைத்த -(திருவாய்-1-3-5-)-என்னுமா போலே
சர்வஞ்ஞரான தாம் அருளிச் செய்தது எல்லாம்
சொல்லுமது விடு சுருதியாம் (ஞான சாரம் 40)-என்கிறபடியே பிரமாண தமமாய் இருக்க
(அவிடு -வாய் உளறல் )பின்புள்ளவர்க்கு பிரதிபத்தி ஹேதுவாய்
அப்யசிக்கைக்கு உடலாக
(யுள்ளி )ஆராய்ந்து அருளிச் செய்த படி -என்கை –
உபதேசமாய்ப் பேசுகின்றேன்-
இவ் வர்த்தத்தின் சீர்மை இருக்கிறபடி –
இது தான்
பிரபத்தி நிஷ்டர் வைபவம் தொடங்கி
ஆச்சார்ய அபிமான நிஷ்டர் வைபவம் இறுதியாக
உண்டான அர்த்த விசேஷங்களை இறே உபதேசமாகப் பேசுகிறது –
இப்படி கௌரவமான அர்த்த விசேஷங்களை பின்னவரும் கற்க
உபதேசமாகப் பேசுகிறேன் என்று யுபதேசிக்கும் இடத்தில்
தமக்கு ஸ்ரீ பிள்ளை ரஹஸ்யமாக ஓராண் வழியாக உபதேசித்தால் போல் அன்றிக்கே
அகில சேதனரும் அப்யசித்து அறிந்து
உஜ்ஜீவிக்கும் படி பிரபந்த முகேன பிரகாசிப்பிக்கிறோம்-என்கிறார் –
சிந்தை செய்து பேசுகின்றேன் –
இவருடைய
யத்தி மனசா த்யாயாதி தத் வாசா வததி (தைத்ரியம் )-இது வாய்த்து –
(மனசால் நினைத்தத்தையே வாயால் பேசி அத்தையே செய்து -ஆர்ஜவம் )
பேசுகின்றேன் -மன்னிய சீர் வெண்பாவில் வைத்து-
அது செய்யும் இடத்து வெண்பாவில் வைத்து யாய்த்து இவர் அருளிச் செய்தது
அதாவது தமிழுக்கு வெண்பா கலித்துறை என்னுமா போலே அநேகம் பாக்கள் உண்டே –
அதிலே கலித் துறையாலே ப்ரவர்த்தம் ஆய்த்து சரம பிரபந்தமான நூற்றந்தாதி
அதிலும், அப்யசிக்க எளிதாய் இருக்கிற வெண்பா என்கிற சந்தஸ் சிலே வைத்தாய்த்து
சதிருடைய தமிழ் விரகரான -தாம் அருளிச் செய்தது
கற்க இறே தாம் உபதேசிப்பது
வெண்பா இரு காலில் கல்லானை -என்று இறே இதன் எளிமை இருப்பது –
(இரண்டு தடவை வாசிக்க வேண்டாம் ஒரு கால் சொன்னாலே மனசில் பதியுமே )
அதுக்கு சீர் மன்னுகையாவது
முச்சீர் நாற்சீர் என்று சொல்லப் படுகிற சீரோடு பொருந்தி இருக்கை –
அன்றிக்கே
புகழ் மலிந்த பா -(இராமானுச )-என்னுமா போலே
இதுவும் சீர் மன்னி இருக்கிறது -என்னவுமாம் –
எண்ணரும் சீர்ப் பொய்கை முன்னோர் உடைய சீர் இறே இதில் பொருந்தி இருக்கிறது –
அதுக்கு அனுகுணமாக மன்னிய சீர் வெண்பாவில் வைத்து யோஜிக்கக் கடவது –
பேசுகின்றேன் –
பேசும் அளவன்று இது (பெரிய திருமொழி -2-4-9)-என்னும் அர்த்தத்தை
எல்லாருடையவும் துர்கதியை கண்டு பொறுக்க மாட்டாமல்
ஸூ வ்யக்தமாம் படி -முக்த கண்டமாகச் சொல்லா நின்றேன் –
நீங்கள் கேட்கிலுமாம் தவிரலுமாம் – நான் சொல்லி அல்லது தவிரேன் –
உபசன்னரானவர்களுக்கு –
ப்ரோவாசதாம் தத்த்வதோ ப்ரஹ்ம வித்யாம் -(முண்டகம் )-என்று சொல்லக் கடவ அர்த்தத்தை
பேசுகிறேன் என்று அபேஷா நிரபேஷமாக உபதேசிக்கை க்ருபாதிக்யம் இறே-
இத்தால்
ஸ்ரீ ஆழ்வார் ஒருவருக்கு ஸ்ரீ சர்வேஸ்வரன் மயர்வற மதி நலம் அருள
தாம் ஊரும் நாடும் உலகமும் தம்மைப் போல்வார் ஆகும்படி
மயர்வற மதி நலம் அருளி வாழ்வித்தால் போலே
இவரும் –
தமக்கு ஸ்ரீ பிள்ளை அருளால் வந்த அர்த்தத்தை அடைய
உபதேசித்து அருளி
வாழ்வித்து அருளுகிறார் -ஆய்த்து –
——————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply