அவதாரிகை –
தன்னை ஆஸ்ரயித்தவர்கள் உடைய
விரோதிகளைப் போக்குமவன்
என்கிறார் –
நம்முடைய பிரதிபந்தகங்களைப் போக்கி
சம்சார நிவ்ருத்தியைப் பண்ணித்
தருவான் எம்பெருமான்
என்றபடி –
———————————————————————————
இமம் சூழ் மலையும் இருவிசும்பும் காற்றும்
அமஞ்சூழ்ந்தற விளங்கித் தோன்றும் -நமஞ்சூழ்
நரகத்து நம்மை நணுகாமல் காப்பான்
துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு —–98-
பதவுரை
இமம் சூழ் மலையும்–பனியாலே சூழப்பட்டிருகிற இமய மலையையும்
இரு விசும்பும்–பெரிய ஆகாயத்தையும்
காற்றும்–வாயுவையும்
அமம் சூழ்ந்து–(பருமனாலும் உயர்த்தியாலும் வேகத்தாலும்) திரஸ்கரித்து
அற விளங்கி தோன்றும்–மிகவும் விளங்கிக் கண்ணெதிரே வந்து தோன்றின
துரகத்தை–குதிரை வடிவு கொண்டு வந்த கேசியென்னுமசுரனை
தொட்டு–திருக் கையால் பற்றி
வாய் பிளந்தான்–(அவனது) வாயைக் கிழிந்துப் போட்ட பெருமான்
நம்மை–நம்மை
நமன் சூழ் நரகத்து நணுகாமல் கரப்பான்–யமனைத் தலைவனாகக் கொண்ட நரகத்திலே புகவொட்டாமல் ரக்ஷித்தருள்வன்
———————————————————————————-
வியாக்யானம் –
இமம் சூழ் மலையும் –
பனி சூழ்ந்த பர்வதமும்
இருவிசும்பும் –
அவகாச பிரதானம் பண்ணுகிற
பெரிய வாகாசமும் –
காற்றும் –
வாயுவின் பக்கலிலும் –
அமஞ்சூழ்ந்து –
பரந்து வியாபித்து –
தற விளங்கித் தோன்றும் –
இவற்றிலே வ்யாப்பிப்பதும் செய்து
அவதாரா திகளாலே மிகவும் உஜ்ஜ்வலனாய் யுள்ளவன் –
ஒளி வரும் முழு நிலம் -திருவாய் மொழி -1-3-2-என்னக் கடவது இறே –
ஜகதாகாரதையைச் சொல்லுகிறது
அன்றிக்கே
இவை குதிரைக்கு விசேஷணமான போது
இப்படி பிரகாசித்து தோற்றுகிற
துரகத்தை-
வாய் பிளந்தான் தொட்டு —-
ஆஸ்ரித விரோதி என்று
கை தொட்டுப் பிளந்து
பொகட்டான் -என்றபடி-
அவன் –
நமஞ்சூழ் நரகத்து –
நமனாலே சூழப் பட்ட நரகத்திலே –
நம்மாலே சூழ்த்துக் கொள்ளப் பட்ட நரகத்திலே
என்றுமாம் –
யம வச்யமான சம்சாரம் -என்றுமாம் –
நம்மை நணுகாமல் காப்பான்-
நம்மைக் கிட்டாத படி
நோக்குமவன் –
பிரவேசியாதபடி பண்ணுமவன்-
துரகம் பட்டது நரகம் படும் இத்தனை –
இமம் சூழ் மலையும்
இருவிசும்பும்
காற்றும்
சூழ்ந்து அற விளங்கித் தோற்றுவதும் செய்து
நம்மை நமம் சூழ் நரகத்து நணுகாமல்
காப்பானும் அவன்
தொட்டுத் துரகத்தை வாய் பிளந்தான் –
என்று அந்வயம் –
——————————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply