மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -97-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

கீழில் படியாய்
ஸ்ரீ யபதியாய்
அயர்வறும் அமரரர்கள் அதிபதி யாகையாலே
அவனை ஆஸ்ரயித்துப் பெறில்
பெரும் அத்தனை -அல்லது
ஸ்வ யத்னத்தாலே ப்ரஹ்மாதிகளுக்கும்
அறிய முடியாது -என்கிறார் –

அயர்வறும் அமரரர்கள் பரிமாறும் நிலம்
ப்ரஹ்மாதிகளுக்கு நிலம் அன்று
என்கிறார் –

————————————————————————————–

அலரெடுத்த  வுந்தியான் ஆங்கு எழிலாய
மலரெடுத்த மா மேனி மாயன் –அலரெடுத்த
வண்ணத்தான் மா மலரான் வார் சடையான் என்று இவர்கட்கு
எண்ணத்தான்   ஆமோ இமை ——-97-

பதவுரை

அலர் எடுத்த உத்தியான்–தாமரைப்பூ ஓங்கி யிருக்கப் பெற்ற திருநாபியை யுடையவனும்
எழிலாய மலர் எடுத்த–அழகிய காயம் பூப்போன்ற
மா மேனி–பெரிய திருமேனியை உடையனுமான
மாயன்– எம்பெருமான்
அவர் எடுத்த வண்ணத் தான்–காஞ்சிமலர்போன்ற நிறத்தை யுடையனான இந்திரனென்ன
மா மலரான்–தாமரைப்பூவிற் பிறந்த பிரமனென்ன
வார் சடையான்–நீண்ட ஜடையை யுடையனான சிவனென்ன
என்ற இவர்கட்கு-ஆகிய இத்தேவர்கட்கு
இமை–சற்றேனும்
எண்ணத்தான் ஆமோ–நெஞ்சால் நினைக்கவுங் கூடியவனோ

——————————————————————————————

வியாக்யானம் –

அலரெடுத்த  வுந்தியான் –
அலரைக் காட்டா நின்ற்றுள்ள
திரு நாபியை யுடையவன் –
ஜகத் உத்பத்தி ஹேதுவான தாமரைப் பூவை உடையவன் –
சிருஷ்டிக்கு உத்பத்தியான தாமரை இறே-

ஆங்கு –
அவனிடை யாட்டத்திலே –

எழிலாய மலரெடுத்த மா மேனி மாயன் —
எழிலை யுடைத்தாய் இருந்துள்ள
மலரைக் காட்டா நின்றுள்ள
திருமேனியை   யுடைய
ஆச்சர்ய பூதன் –

அழகிய புஷ்பம் போலே இருக்கிற
கருத்த நிறத்தை யுடையவன் –
புஷ்ப ஹாச ஸூ குமாரமான திருமேனி -என்றபடி
மா மேனி மாயன் இடையாட்டத்திலே –

அலரெடுத்த வண்ணத்தான் –
நல்ல நிறத்தை யுடைய இந்த்ரன் –

மா மலரான் –
திரு நாபி கமலத்திலே பிறந்த சதுர்முகன் –

வார் சடையான் –
தாழ்ந்த ஜடை யாகிற
சாதக வேஷத்தை  உடையனான ருத்ரன் –

என்று இவர்கட்கு எண்ணத்தான்   ஆமோ -இமை –
என்கிற இவர்களுக்கு
சிந்திக்கத் தான் போமோ –
இவ்வர்த்த ஸ்திதியை இவர்களால்
மநோ ரதிக்கவும் முடியாது –
என்றபடி –

இமை –
விசாரி -சற்றுப் போது
என்றுமாம் –

————————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading