அவதாரிகை –
நித்ய ஸூரிகள் உடைய
பரிமாற்றமும் பொறாதே
ஸூகுமார்யத்தை உடையவன் -என்கிறது –
அன்றிக்கே –
அளவுடையாரான ப்ரஹ்மாதிகளும்
அவன் திருவடிகளிலே வணங்கித்
தங்கள் அபேஷிதம் பெறுவது -என்கிறார்
மா மலரான் வார் சடையான் வல்லரே அல்லரே வாழ்த்து -நான் முகன் திருவந்தாதி -11
என்னக் கடவது இறே –
————————————————————————————-
வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே -கேழ்ந்த
அடித்தாமரை மலர்மேல் மங்கை மணாளன்
அடித்தாமரை யாமலர் –96-
பதவுரை
கேழ்த்த அடி–பெருத்த தாளையுடைய
தாமரை மலர் மேல்–தாமரைப்பூவிற் பிறந்த
மங்கை–பெரிய பிராட்டிக்கு
மணாளன்–வல்லபனான எம்பெருமானுடைய
அடி ஆம் தாமரை அலர்–திருவடிகளாகிற தாமரைப் பூக்களை
வானோர்–தேவர்
வாழ்த்திய வாயர் ஆய்–வாயால் வாழ்த்துகின்ற வராய்க் கொண்டு
மணி மகுடம்–மணிகளழுத்தின மகுடத்தை
தாழ்த்தி–தாழ விட்டு
வணங்க–வணங்குவதனால்
தழும்பு ஆமே–(அத்திருவடிகள்) தழும்பேறிக் கிடக்கின்றனவே.
—————————————————————–
வியாக்யானம் –
வாழ்த்திய வாயராய் –
வாழ்துகையே ஸ்வரூபமான
வாயை யுடையரான
நித்ய ஸூரிகள்
ஸ்தோத்ரம் பண்ணப் பட்ட வாயை யுடையராய் –
வாழ்த்திய வாய் -தழும்பேறிக் கிடக்கும் –
வானோர் மணி மகுடம் தாழ்த்தி வணங்கத் தழும்பாமே –
இவர்கள் மகுடம் தாழ்த்தி
வணங்குவது பொறாமல்
தழும்பாம்
ப்ரஹ்மாதிகள் ஐஸ்வர்ய ஸூசகமான அபிஷேக யுக்தமான
தலைகளைத் தாழ்த்தி
ஆஸ்ரயிக்கத் தழும்பாய் இருக்கும் –
கேழ்ந்த அடித்தாமரை மலர்மேல் –
கிளர்ந்த வடித் தாமரை –
பருத்த தாளை யுடைய தாமரை
இத்தால்
பெரிய பிராட்டியார் எழுந்து அருளி இருக்கத் தாமரை பொறுக்கை –
எழுச்சியையும் அழகையும் யுடைத்தான தாமரை -என்றுமாம் –
ஸ்ரமஹரமாய்ச் சிவந்த நிறத்தை யுடைத்தான தாமரை–என்றுமாம் –
தாமரை மலர் மேல் மங்கை –
இப்படிப் பட்ட தாமரைப் பூவிலே
எழுந்து அருளி இருப்பதும் செய்து
நித்ய யௌவனத்தை யுடையளான
பெரிய பிராட்டியாருக்கு –
மணாளன் –
அவளுக்கு போக்தாவானவன் –
மணாளன் அடித்தாமரை –
அவளுடைய திருக் கைகளாலே தொடும் போதும்
கூசித் தொடும் படியான
ஸ்ரீ யபதியினுடைய திருவடிகளை
இத்தால்
நித்ய ஸூரிகளுக்கும்
ப்ரஹ்மாதிகளுக்கும்
உபாஸ்யம் ஒரு மிதுனம் -என்றபடி –
அடித் தாமரை யாமலர் –
திருவடித் தாமரை யாகிற
அலர் தழும்பாம்
பூத் தழும்பு ஆகாதோ –
கேழ்த்த வடித் தாமரை மேல் மங்கை மணாளன்
அடித் தாமரையா மலர்
வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்
தாழ்த்தி வாங்கத் தழும்பாமே
என்று அந்வயம் –
—————————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply