மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -95-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

தம்முடைய பக்கல் அவன்
ஸூ லபனான படியைக் கண்டு
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூ லபனான படியைச்
சொல்லுகிறார் –

நெஞ்சே
இப்படி உபகாரகனான எம்பெருமான்
திருவடிகளிலே வணங்கி
அவனை வாழ்த்து
என்று திரு உள்ளத்தைக் குறித்து
அருளிச் செய்கிறார் –

——————————————————————————————–

புகுந்திலங்கும் அந்திப் பொழுதத்து அரியாய்
இகழ்ந்த இரணியனதாகம் -சுகிர்ந்தெங்கும்
சிந்தப் பிளந்த திருமால் திருவடியே
வந்தித்தென் நெஞ்சமே வாழ்த்து  ——95-

பதவுரை

அந்தி புகுந்து–ஸாயங்காலமானது வந்து சேர்ந்து
இலங்கும் பொழுதத்து–விளங்கும் ஸமயத்திலே
அரி ஆய்–நரஸிம்ஹ மூர்த்தியாய்த் திருவவதரித்து,
இகழ்ந்த இரணியனது ஆகம்–நிந்தித்துக் கொண்டிருந்த ஹிரண்யாஸுரனது சரீரத்தை
சுகிர்ந்து–பல கூறாக வகிர்ந்து
எங்கும் சிந்த–(ரத்தம்) எங்கும் சிந்தும்படியாக
பிளந்த–பிளந்தொழித்த
திருமால்–எம்பெருமானுடைய
திருஅடியே–திருவடிகளையே
என் நெஞ்சமே–எனது மனமே!
வந்தித்து வாழ்த்து–தலையார வணங்கி வாயாக வாழ்த்து

——————————————————————————————–

வியாக்யானம் –

புகுந்திலங்கும் அந்திப் பொழுதத்து –
சந்தையினுடைய பிரவேசத்தைச் சொல்லுகிறார்
அதனுடைய பிரவேச மயமான
சந்த்யாராகத்தாலே
ஒளியை யுடைத்தான-

அந்திப் பொழுதத்து –
அசூரர்களுக்கு பலம் வர்த்திக்கக் கடவதான
சந்த்யா காலத்திலே
ஆவது இவன் வரம் கொள்ளாத சந்தையையில் -என்றபடி –

அரியாய் –
அதுவும் அவன் வரம் கொள்ளப் பாத்தம் போராது என்று
கழிந்த நரசிம்ஹமாய்
அந்திப் பொழுதத்து புகுந்திலங்கும் அரியாய் -என்னவுமாம் –
ஆவது சந்த்யா காலத்திலே
ஒளியை யுடைத்தான நரசிம்ஹமாய்ப் புகுந்து
என்றபடி –

இகழ்ந்த இரணியனதாகம் –
நிர்நிபந்தனமாக தன்னையும்
பிரஹ்லாதனையும்
நிந்தித்து
அசஹ்யாபசாரத்தைப்
பண்ணின பையலு டைய
தேவர்கள் உடைய வர பலத்தாலே
வளர்ந்த உடம்பை –

சுகிர்ந்தெங்கும் சிந்தப் பிளந்த-
ஆஸ்ரித விரோதி யாகையாலே
கொன்றது என்ற மாதரம் இன்றிக்கே
சீற்றத்தின் உடைய மிகுத்து இருக்கிறபடி –

சுகிர்ந்து –
வகிர்ந்து

எங்கும் சிந்தப் பிளந்த –
பல கூறு செய்து
எங்கும் சிந்தும்படிக்கு ஈடாக
பிளப்பதும் செய்தான் –
சின்னம் பின்னமாக பிளந்த –

திருமால் –
இப்படி ஆஸ்ரித அபேஷிதம் செய்கைக்கு அடி யான
ஸ்ரீ யபதி யானவன் –

ஆஸ்ரிதன் பக்கல் ஓரத்துக்கு அடி
பிராட்டி அருகே இருக்கை -என்கிறது –

அவனை பஜிக்கும் போது
அவளுக்கும் பிரியம் செய்து
பஜிக்க வேண்டுகையைச்   சுட்டி –

திருவடியே –
ஸ்ரீ யபதி யானவனுடைய
திருவடிகளை –

வந்தித்தென் நெஞ்சமே வாழ்த்து  –
வணங்கி –
அவன் என்றால் உகக்கும் நெஞ்சமே –
ஸ்தோத்ரம் பண்ணு –

வந்திக்கைக்கும்
வாழ்த்துக்கைக்கும்
விஷயம்
அவளோடு கூடினவன் போலே –
ஆசைப் பட்டாருடைய விரோதிகள்
ஹிரண்யன் பட்டது படும் அத்தனை –

————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading