அவதாரிகை –
இது தன்னை நாம் இன்னாதாகிறது என் –
அவன் தான் சிலரால் அறிய ஒண்ணாத படியாய் இருப்பான் ஒருவனுமாய்
நிரதிசய போக்யனுமான பின்பு
இனியவனை நாம் கிட்டிக் கண்டோமாய்த்
தலை கட்ட விரகு உண்டோ
என்கிறார் –
————————————————————————————
உணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து
புணரிலும் காண்பரியன் உண்மை -இணரணையக்
கொங்கணைந்து வண்டறையும் தண் துழாய்க் கோமானை
எங்கணைந்து காண்டும் இனி ——–82-
பதவுரை
உணரில்–(அப்பெருமானை நாமாக) அறியப் பார்த்தாலும்
உணர்வு அரியன்–(அவன்) அறியக் கூடாதவன் (அவன்தானே)
உள்ளம் புகுந்து புணரிலும்–நெஞ்சிலே வந்து புகுந்து சேர்ந்தாலும்
உண்மை காண்பு அரியன்–உள்ளபடி அறியக் கூடாதவன்
இனி–இப்படியான பின்பு
இணர் அணைய–பூங்கொத்துகள் தாழும்படியாக
கொங்கு–தேனிலே
வண்டு–வண்டுகள்
அணைந்து–வந்துகிட்டி (மதுவைப்பருகி)
அறையும்–ரீங்காரம் செய்யப்பெற்ற
தண்–குளிர்ந்த
துழாய்–திருத்துழாய் மாலையை அணிந்துள்ளவனான
கோமானை–அப்பெருமானை
எங்கு–எவ்விடத்தில்
அணைந்து–கிட்டி
காண்டும்–காணக் கடவோம்.
————————————————————————————–
வியாக்யானம் –
உணரில் உணர்வரியன் –
முதல் தன்னிலே இதில் இழியாதாது நன்று –
அதாகிறது
அறிவதாக இழிந்து
அறியாது ஒழிவதில் காட்டில் முதல் தன்னிலே
அறிவதாக இழியாதது நன்று இறே –
ஆரேனும் ஒருத்தருக்கும் ஸ்வ யத்னத்தாலே அறிவோம் என்னும் அன்று
அறிய அரியனாய் இருப்பான் ஒருவன் –
தன்னாலும் அறியப் போகாது –
இவனாலும் அறியப் போகாது
தனக்கும் தன் தன்மை அறிவரியான் -திருவாய்மொழி -8-4-6-
உள்ளம் புகுந்து புணரிலும் காண்பரியன் உண்மை –
அவ்வருமை தீர அவன் தான் ஹ்ருதயத்திலே சந்நிதி
பண்ணி கலக்கும் அன்று
ஒரு குறை இல்லையே என்னில் –
அப்போதும் அவனை உள்ளபடி யறிந்து பரிச்சேதிக்கப் போகாது –
அவனுடைய உண்மை யறியப் போகாது –
காண்பரியன் உண்மை –
என் எனபது –
வை லஷண்யத்தை பரிச்சேதிக்கப் போகாது
என்கிறது –
இணரணையக் கொங்கணைந்து வண்டறையும் தண் துழாய்க் கோமானை –
ஏதேனும் அறிய ஒண்ணாத விஷயம் என்று
கை வாங்கப் போகாது -என்கிறது
இவன் தான் காணும் அன்று காண வரிதாய்
அவன் தானே காட்டும் அன்றும் காண வரிதானாலும்
இழந்து ஆறி இருக்க ஒண்ணாது
போக்யதையும் ஸ்வாமித்வமும் –
இணரணையக் கொங்கணைந்து வண்டறையும் தண் துழாய்க் கோமானை –
பூங்கொத்துக்கள் ஆனவை தாழும்படிக்கு ஈடாகத்
தேனிலே வண்டுகள் வந்து கிட்டி
அத்தை புஜித்து மது பானத்தாலே வந்த ஹர்ஷத்தாலே
சப்தியா நின்றுள்ள குளிர்ந்த
திருத் துழாயை உடைய சர்வேஸ்வரனை –
எங்கணைந்து காண்டும் இனி –
இனி நான் எங்கே கிட்டிக் காணக் கடவேனோ
லௌகிகர் படியிலும் காண விரகற்று
அவன் தானே காட்டும் வைதிகர் படியாலும்
காண விரகற்ற பின்பு
இனி நான் காண்கை என்று ஒரு பொருள் உண்டோ
கிட்டாது ஒழிய மாட்டேன்
கிட்ட மாட்டேன் –
———————————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply