ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -97 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

அறம் பாவம் என்று இரண்டும் ஆவான் என்று
அவனையே பாவனத்வமாகச் சொன்னீர்
புறம்பேயும் கங்கை உள்ளிட்டவை பாவனம் அன்றோ
என்னில்
அதினுடைய பாவனத்வம் தத் சம்பந் தாயத்தம்
என்கிறார் –

பிடிசேர்
கீழில் பாட்டின் உடைய வியாக்யானம் இப்பாட்டு  –

——————————————–

பிடி சேர் களிறளித்த பேராளா உந்தன்
அடி சேர்ந்தருள் பெற்றாள் அன்றே பொடி சேர்
அனற்கு அங்கை ஏற்றான் அவிர்சடை  மேல் பாய்ந்த
புனல் கங்கை என்னும் பேர்ப் பொன் –97–

பதவுரை

பிடிசேர் களிறு–பேடையோடு சேர்ந்து விஷய போக பரனான (கஜேந்த்ராழ்வானாகிற) ஆண் யானையை
அளித்த–காத்தருளின
பேராளா–மஹாநுபாவனே!
பொடி சேர்–(தான் பண்னின பாபத்துக்கு ப்ராயச்சித்தமாக) பஸ்மத்திலே சாயுமவனாகி
அனற்கு அம் கை ஏற்றான்–அக்நிக்கு(த் தனது) அழகிய கையை ஏற்ற பாதகியான ருத்ரனுடைய
அவிர் சடை மேல்–ஒளி பொருந்திய ஜடையின் மேலே
பாய்ந்த–(அவனுடைய சுத்தியின் பொருட்டு) வந்து குதித்த
புனல்–ஜலமயமான
கங்கை என்னும் பேர்–கங்கை யென்னும் பெயர் பூண்டுள்ள
பொன்–சிறந்த பெண்
உன்தன் அடிசேர்ந்து–உன்னுடைய திருவடிகளைக் கிட்டி
அருள் பெற்றாள் அன்றே–(பாபிகளைப் பரிசுத்தமாக்கும் படி) உனது திருவருளைப் பெற்றாளன்றோ

———————————–

வியாக்யானம் –

பிடிசேர் களிறளித்த பேராளா –
பிடியோடு சேர்ந்த களிறு ஆயிற்று

அதாகிறது
அத்தோடு சேரத் திரியுமதுக்கு மேல் பட
ஸ்வ ஹிதத்தில் ஒரு சிந்தை பண்ணி அறியாதாய்த்து –
சாந்தோ தாந்த உபரத ஸ்திதி ஷூ -என்னுமவன் இறே மோஷத்துக்கு அதிகாரி

அன்றிக்கே
தன் பக்கல் பிரவணம் ஆகாதே
விஷய ப்ரவணமாகை இறே பாபம் ஆவது –

பிடியின் பக்கலிலே ப்ரவணமாய் –
தன் பக்கலிலே இன்றிக்கே இருந்த களிற்றை ரஷிக்கும் போது
தான் இட்ட வழக்காக வேண்டாவோ

அவன் பிடியை நினைக்க நீ அவனை நினைத்து இருந்திலையோ  –
ஒருக்கால் நினைத்தானே என்னில் முன்புத்தை ஸ்வரூபம் இது வன்றோ என்கிறது
இத்தால் ஜன்ம வ்ருத்தங்கள் பிரயோஜகம் அன்று -என்கிறார்

அளித்த பேராளா –
அத்தை நோக்கின பெரியோனே
இப்படி அதிகாரி சம்பத்தி இல்லாதவனையே ரஷித்தான் என்றால்
அவன் செய்தானாகில் கூடும் என்று இருக்கை-

பேராளா  –
அவ்வளவேயோ உன் கிருபை
எல்லா வுலகும் தொழும் ஆதி மூர்த்தி என்றால் அளவாகுமோ -திருவாய்மொழி -3-3-3-

உந்தன் அடி சேர்ந்தருள் பெற்றாள் அன்றே –
உன் திருவடிகளை கிட்டி அன்றோ
அவள் அந்த பிரசாதம் பெற்றது

இத்தால்
தர்மம் அவன் இட்ட வழக்காம் என்னும் இடம் சொல்லுகிறது

க்ருஹீத்வா தர்மபா நீயம் -என்று
கங்கை தனக்கே தர்மத்வம் சொல்லா நின்றது இறே என்னில்

அதினுடைய பாவனத்வத்துக்கும் அடி அவன் என்கிறது –
பிறரையும் சுத்தமாக்கும்படி பார்த்து அருளினான் –

பொடி சேர் –
பஸ்மத்தை தரித்து இருக்கும் என்னுதல்
அதிலே போய்ச் சாயும் என்னுதல்-

அனற்கு அங்கை ஏற்றான் –
அக்னிக்கு அழகிய கையை ஏற்றான்
பஸ்மத் சந்தன் இறே
இது ஒழிந்த பிராயச் சிந்தங்களால்  பாபம் போகாது ஒழிந்த படி
இவனுடைய ஈஸ்வர அபிமானத்தை வந்தேறி யன்றே என்று இருந்தான் –

ஸ்வா பாவிக சம்பந்தத்தையே நினைத்து ரஷித்தான்-

அவனுடைய
அவிர்சடை  மேல் பாய்ந்த-
ஒளியை யுடைய சிவந்த சடையின் மேலே வந்து குதித்த நீரை
உடையளாய் கங்கை என்னும் பேரையும் உடையளாய்
ஸ்லாக்யையான ஸ்த்ரீயானவளும் –

உந்தன் அடி சேர்ந்து அருள் பெற்றாள் அன்றே -புனல் கங்கை என்னும் பேர்ப் பொன் –
பிராயச் சித்தம் பண்ணியதால் சுத்தன் இன்றிக்கே இருக்கிறவனையும் சுத்தன் ஆக்கிற்று
திருவடிகளின் ஸ்பர்சத்தாலே-என்கிறது

நலம் திகழ் சடையான் முடிக் கொன்றை மலரும் நாரணன் பாதத் துழாயும்-பெரியாழ்வார் திருமொழி -4-7-2-
பாதோதகேன ச சிவா
உன் திருவடிகளோடு சம்பந்தம் இல்லாதது புண்யம் இல்லை
உன் கிருபையை விலக்க வல்ல பாபம் இல்லை
யத் த்வத் ப்ரியம் ததி ஹ புண்யம் அபுண்ய மன்யத் -அதிமாநுஷ ஸ்தவம் -53-

————————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading